Daily Archives: ஓகஸ்ட் 23, 2006

Anbumani does a Volte-face on Coke Pesticide Issue

Dinamani.com – Headlines Page

பெப்சி, கோக-கோலாவுக்கு நான் நற்சான்று தரவில்லை: அமைச்சர் அன்புமணி

புது தில்லி, ஆக. 24: “பெப்சி, கோக-கோலா மென்பான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நான் நற்சான்று வழங்கவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் நானும் கூட்டு சேர்ந்து, சான்று வழங்கியதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது மான நஷ்ட வழக்கு போடப் போகிறேன்’ என்று தில்லியில் புதன்கிழமை இரவு எச்சரித்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 214 மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தோம். மேலும் 500 மாதிரிகளை எடுக்கச் சொல்லியிருக்கிறோம்.

பூச்சிமருந்துக் கழிவு இருப்பதாகக் கூறிய அறிவியல்-சுற்றுச்சூழலுக்கான மையத்தின் இயக்குநர் சுனிதா நாராயணனையும், மத்திய சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனைக்கு அழைத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புள்ள பிற செய்திகள்:
1. TODAY’S EDITORIAL: Karma cola- The Times of India

2. No clean chit to cola giants: Ramadoss- The Times of India

3. Financial Express – CSE report on colas wrong: Health Ministry

News Stories & Op-Eds

செய்தித் தொகுப்பு

  • இந்திய-ஆஸ்திரேலிய சமையற்கலை புத்தக எழுத்தாளர் பிரோமிளா குப்தாவுக்கு (53) ஆஸ்திரேலிய நாட்டின் ‘பெருமைக்குரியவர்’ என்ற விருது

  • இந்திய விடுதலைப் போரில் முன்னணித் தலைவர்கள் ஆற்றிய தொண்டு வெளியில் தெரிகின்றது; முகவரியே தெரியாத இன்னும் இருட்டில் கிடக்கும் சிலர் ஆற்றிய தொண்டுகளை தி. இராசகோபாலன் நினைவு கூர்கிறார் – தினமணி

  • என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில் திலகரை பயங்கரவாதி என குறிப்பிடுவதா? மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கண்டனம் – தினமணி

  • ஊனமுற்றோர், மனநலம் குன்றியோர் பற்றிய குறும்படங்கள், ஆவணப் படங்கள் உருவாக்கும் எஸ். அலெக்ஸ் பரிமளம் – சென்னை லயோலா கல்லூரி காட்சி ஊடகவியல் துறை விரிவுரையாளர் – தினமணியில் சந்திப்பு & பேட்டி

  • மும்பையில் ஹிட்லர் கிராஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் – பிபிசி
  • மீளுமா இந்திய வேளாண்மை? :: எஸ். ஜானகிராமன் – தினமணி

    உணவுப்பொருள், உரம், மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான அரசின் மானியம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து தற்பொழுது ரூ. 80,000 கோடியினை அடைந்துள்ளது. 1:4 ஆகக் காணப்படும் பொதுமுதலீட்டிற்கும், மானியத்திற்கும் இடையேயான விகித அளவினை 4:1 என அரசு மாற்றியமைக்கும்பட்சத்தில், இந்திய வேளாண்மையில் காணப்படும் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு ஏற்படலாம்.

    வர்த்தக ரீதியாக மதிப்புடைய பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள் மற்றும் மீன்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியில் 45 சதவிகிதமாகக் காணப்படினும், இவற்றின் சந்தையாக்கல், அதிக அளவு சந்தை சார் ஆபத்துகளைப் பன்னாட்டு அளவில் எதிர்கொள்கின்றன. ஆனால் அரசின் வேளாண் தொடர்பான கொள்கைகள் அனைத்தும் அடிப்படை உணவு தானியங்களைச் சுற்றியே செயல்படுவது வேதனைக்குரியது.

  • பழமொழி சொல்வது எளிது – மின்னஞ்சலில் வந்த ஆங்கிலப் பதிவு

    இது சாம்பிள்: Actions speak louder than words./The pen is mightier than the sword.

  • ஜீவா – வாழ்க்கை சித்திரம் :: இரா. நாறும்பூநாதன் – தினமணி

  • வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைத்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என அப்போதைய அமைச்சரவை சகாக்கள் எதிர்த்தனர் :: ராஜீவ் நினைவாஞ்சலி – தினமணி
  • பிகாருக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்கள், மண்ணெண்ணெயில் 80% வெளிநாட்டுக்கு கடத்தல்தினமணி

  • 4 இன் 1 “ரிவர்சிபிள்” பட்டுச் சேலை : விலை 64,650 ரூபாய் – தினமணி
  • வசந்தா கந்தசாமி : சுருக்கமான நேர்காணல் – தினமணி
  • சுற்றுப்புறத் தூய்மை – மேலான வாழ்க்கை :: யோ. கில்பட் அந்தோனி : உணவுக் கழிவுகள், மருத்துவ நிலையக் கழிவுகள், சந்தைக் கழிவுகள், காகிதக் கழிவுகள், விறகுக் கழிவுகள், மண் மற்றும் கட்டட இடிபாடுகள் என்று பிரித்து அலசுகிறார்


    | |