Daily Archives: ஓகஸ்ட் 12, 2006

Agri Krishnamurthy Suspended from Tamilnadu Assembly

Dinamani.com – TamilNadu Page

பெண் எம்எல்ஏக்கள் புகார்: அதிமுக எம்எல்ஏ சஸ்பெண்ட்

சென்னை, ஆக. 13: சட்டப் பேரவையில் பெண் உறுப்பினர்கள் புகார் கூறியதை அடுத்து அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, நடப்பு கூட்டத் தொடர் முழுவதற்கும் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் கலசப்பாக்கம் தொகுதி உறுப்பினராக உள்ளார்.

பேரவையில் சனிக்கிழமை அமளி ஏற்பட்டு அதிமுகவினர் வெளியேறிய பிறகு நடந்த விவாதம்:

வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): பேரவைக் கூட்டம் சுமுகமாக நடக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதி விடுத்த அழைப்பையும் ஏற்காமல் அதிமுகவினர் வெளியேறியுள்ளனர். முதல்வர் பேசும் போது அதிமுகவினர் கேலி, கிண்டல் செய்ததால் ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொன்முடியை பார்த்து ஒருமையில் பேசுகிறார். சகிக்க முடியாத, தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இந்நிலை தொடர்ந்தால் பேரவையின் மாண்பு, மரபு குழிதோண்டி புதைக்கப்படும்.

உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் அமைச்சர்கள் பதில் சொல்கின்றனர். எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துகளைக் கூறுகின்றனர்.

ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்): ஆரம்ப நாளில் இருந்தே பொன்முடியை ஒருமையில் பேசி வருகிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பெண்கள் காதில் கேட்க முடியாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதுபற்றி காங்கிரஸ் கொறடாவிடமும், பேரவை காங். தலைவரிடமும் கூறினேன். பொறுத்துக் கொள்ளுமாறு கூறினர்.

பேரவைத் தலைவரிடம் சொன்னேன். எழுதித் தருமாறு கூறினார். போனால் போகட்டும் என விட்டுவிட்டேன். இதே நிலை இன்னும் தொடர்கிறது. பெண் உறுப்பினர்கள் பேரவைக்கு வர வேண்டுமா? வேண்டாமா?

பத்மாவதி (இந்திய கம்யூனிஸ்ட்): காதில் வாங்க முடியாத வார்த்தைகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி பேசுகிறார். அவரிடம் நாங்கள் 2 பெண் எம்எல்ஏக்களும் இப்படிப் பேச வேண்டாம் என அடிக்கடி எச்சரித்துள்ளோம்.

பேரவையில் பெண் உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் முன்பு பிரச்சினை எழுப்பினர். பெண்கள் இங்கு உட்காரவே வழி இல்லாத நிலையை அவர்கள் உருவாக்குகின்றனர் என்றார் அவர்.

இந்த 2 பெண் உறுப்பினர்களும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இருக்கையின் அதே வரிசையில் இடதுபுறம் அமர்ந்திருப்பவர்கள்.

தொடர்ந்து நன்மாறன் (மார்க்சிஸ்ட்) பேசியது:

அதிமுக உறுப்பினர் சின்னசாமி கூறிய அதே புகார் முந்தைய காலத்தில் எழுப்பப்பட்டபோது, அப்போதைய முதல்வர் என்ன பதில் சொன்னார் என்பதை பாலபாரதி சுட்டிக்காட்டினார்.

ஜி.கே. மணி (பாமக): திட்டமிட்டு கலவரம் செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் செயல்படுகின்றனர். பொன்முடியை பார்த்து மோசமாகப் பேசினார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

முன்னாள் அமைச்சர்கள் உள்பட அதிமுகவினர் முன்வரிசை நோக்கி ஓடி வருகின்றனர். பேரவைத் தலைவரைப் பற்றி தரக் குறைவான வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்.

இதெல்லாம் வேதனையாக இருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

“”பேரவையில் தினமும் ஆளும் கட்சி மற்றும் தோழமைக் கட்சியினர் பற்றி தவறான வார்த்தைகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசி வருவதால், நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் அவரை தாற்காலிக நீக்கம் செய்ய வேண்டும்”

என்ற தீர்மானத்தை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கொண்டு வந்தார்.

குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.

இதைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடப்புக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாள்களுக்குத் தாற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் அறிவித்தார்.

Al-Queda’s Support for Kashmiri Militants in Pakistan

Dinamani.com – Headlines Page

காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு அல்-காய்தாவுடன் தொடர்பு: பின் லேடன் சிடிக்கள் சிக்கின

ஜம்மு, ஆக. 13: காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தில் குர்சியா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை நடந்த மோதலின்போது லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் அபு கத்தால் கொல்லப்பட்டார். அவர் வைத்திருந்த 10 சிடிக்கள் சிக்கின. அதில் ஒசாமா பின் லேடனின் பிரசாரங்கள் அடங்கிய 2 சிடிக்களும் அடங்கும் என்று ராணுவ அதிகாரிகள் ஜம்முவில் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதன் மூலம் காஷ்மீர் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் அல்-காய்தாவுக்கும் இடையிலான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அல்-காய்தா பயங்கரவாதிகள் இல்லை. ஆனால், சிடிக்கள் மூலம் பின் லேடனை ஹீரோவாகச் சித்தரித்து, இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுக்கும் நோக்கில் சிடி தயாரிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் படைகளுக்குப் பயங்கரவாதிகளைத் தயார் செய்வதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிடிக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 சிடிக்கள் தவிர மற்ற 8 சிடிக்களில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் மறுபெயரில் உருவாகியுள்ள ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளன.

காஷ்மீரில் 1989 முதல் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது தொடர்பான சிடிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாகூர் அருகே முரித்கே என்ற இடத்தில் உள்ள தங்களது தலைமையகத்தில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இதுபோன்று 100 சிடிக்களைத் தயாரித்து, காஷ்மீருக்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சிடிக்கள் தோடா, ரஜெüரி, பூஞ்ச் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் கூறினர்.

Rape Allegations on Surjith Singh Barnala’s MLA Son

Dinamani.com – Headlines Page

வேலைக்காரியை கற்பழித்ததாக தமிழக ஆளுநர் பர்னாலாவின் மகன் ககன்ஜித் சிங் கைது

சண்டீகர், ஆக. 13: வீட்டு வேலைக்காரியைக் கற்பழித்ததாக தமிழக ஆளுநர் சுர்ஜீத் சிங் பர்னாலாவின் மகனும் பஞ்சாப் மாநிலம் தூரி சட்டப்பேரவைத் தொகுதி (சிரோன்மணி அகாலி தளம் கட்சி) எம்.எல்.ஏ.வுமான ககன்ஜித் சிங் பர்னாலா கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை முற்பகலில் ககன்ஜித் சிங்குக்கு, 40 வயதாகும் வேலைக்காரப் பெண் மசாஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது ககன்ஜித் சிங் தம்மைக் கற்பழித்ததாக வேலைக்காரப் பெண் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து, ககன்ஜித் சிங்கைப் போலீஸôர் கைது செய்துள்ளனர். வேலைக்காரப் பெண்ணுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ககன்ஜித் சிங்கும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

Obeisance of Pakistan to Super Powers?

நான் நன்றி சொல்வதால் பாதுகாப்பு அமைச்சகம் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. காசா… பணமா… மறுமலர்ச்சி நன்றிப் பாடல்

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பெரிய மனுசங்களுக்கு உதவுகிற மாதிரி, பிரணா முகர்ஜி வேண்டுகோள்களுக்கும் முஷாரஃப் செவி சாய்த்தால் நல்லதா / கெட்டதா என்பதற்கு நம்ம பேரன் வந்தாலும் பதில் தெரியாது.

இன்னும் படம் பார்க்க: Flickr: Photos tagged with pakistan

சமீபத்தில் தடுக்கிய கட்டுரை: The Indian Army has a war-winning doctrine against Pakistan

தொடர்புள்ள பதிவுகள்:
1. பாக்’கிஸ்’தானுக்கு நன்றி

2. காலம்: இஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா ?

3. உறவுக்குக் கைகொடுப்போம்! – எஸ்கே

4. பாகிஸ்தானுக்கு நன்றி – சிவபாலன்


| |