Daily Archives: ஓகஸ்ட் 10, 2006

Bojinka

Guardian Unlimited | Special reports | Timeline: Aircraft terror plot

இந்தியா கோக்கில் நச்சுப்பொருள் இருப்பது போல் லண்டனில் இருந்து கிளம்பும் விமானங்களில் அனேக நீராகாரங்களுக்கு தடை. திரவங்களில் வெடிப்பொருள் கலந்து நியு யார்க், வாஷிங்டன் (டிசி), லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் மேல் பறக்கும் விமானங்களை வெடிக்க வைப்பது திட்டம். இருபத்தி நால்வரை கைது செய்திருக்கிறார்கள்.

தாய்ப்பாலை சுவைத்துக் காட்டி எடுத்து செல்ல வேண்டும். பிறிதொருவருக்கு நஞ்சு கொண்டு சென்றாலும், நாம் மருந்தை உட்கொண்டால் மட்டுமே உள்ளே அனுமதி.

  • அரங்கேறியிருந்தால், 9/11 போல் அலங்காரமாக 8/11 என்று நாமகரணமிட்டு மலர்க்கொத்து இட்டிருக்கலாம்.
  • சென்ற மாதமாக இருந்தால் ‘தேன்கூடு – தமிழோவியம்’ போட்டிக்கு ‘மரணம்’ என்று தலைப்பிட்டு செய்திக் கட்டுரை இட்டிருக்கலாம்.
  • பிரிட்டிஷ் ஏர்வேஸில் பயணிக்கும்போது உணவுக்கு முன்பும், உணவருந்தும் போதும், உண்டு களைத்த பின்பும், அனுசரணையாக ‘என்ன சரக்கு அடிக்கறீங்க’ என்று எத்தனை தர்மபத்தினிகளையும் அப்பிராணி அசமஞ்சங்களையும் படுத்தினார்களோ? அவர்களின் சாபம்தான் ஏவுகணையாக திருப்பி அடித்திருக்கிறது. (BBC NEWS | Science/Nature | Q&A: Liquid explosives)
  • உட்கொண்டாலும் எந்தவித உபாதையும் செய்யாமல்; ஆனால் வெடிக்கத் தகுந்த திரவங்களை இன்னும் ‘குழந்தை உணவாக’ ஃபார்முலா கண்டுபிடிக்காத ‘அறிவியலாளர்கள் முட்டாள்கள்’ என்று அல்-க்வெய்தா அறிவித்திருக்காது. (CNN.com – No lotion, long lines in U.S. airports – Aug 10, 2006)
  • இஸ்ரேல், வளைகுடா பக்கம் எண்ணெய் இருப்பதால் பிரச்சினை. அந்த எண்ணெய் கபளீகரம் செய்ய பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா போட்டி போடுவதால் அங்கும் ஆபத்து. அவ்வப்போது தோன்றும் பஞ்சாப், காஷ்மீரை கணக்கில் எடுக்காவிட்டால் இந்தியாதான் சுகநிவாஸ்.
  • நவம்பர் தேர்தல், புஷ்ஷின் கட்டுக்கதை சூழ்ச்சி, ஈரானுக்கு எதிரான ஆயத்தம், ஹிஸ்பொல்லாவை தவிடு பொடியாக்க, லமாண்ட்டை மட்டம்தட்ட (படிக்க: அமெரிக்க செனட் தேர்தல் – சிறு குறிப்பு – சுந்தரவடிவேல்) என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப நிலைமையின் தீவிரத்தை வாதம் புரிந்து நீர்க்க வைக்க ஆரம்பித்துவிடலாம். War Room – Salon.com
  • இந்த பதிவின் தலைப்பை தேடுபவர்களுக்காக: The plot, codenamed Bojinka — a play on the Serbo-Croatian word for explosion — by its Pakistani planners (TIME.com: Was the Airline Plot a Rerun? — Page 1)
  • விமானங்களில் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல், அமெரிக்க/லண்டன் நகரங்களில் வசிக்காமல், நிறைய நேரம் இருந்து, மேலும் விதவிதமான எண்ணப்பகிர்வுகளைப் படிக்க விரும்பினால்: Slashdot | BBC Reports UK-U.S. Terror Plot Foiled


    | |

  • Madhani should be released – Human rights activists

    Dinamani.com – TamilNadu Page

    மதானியை விடுதலை செய்ய மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    சென்னை, ஆக. 11: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி 1998-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (புதுவை) தலைவர் கே. சுகுமாரன், கவிஞர்கள் அப்துல் ரகுமான், குட்டி ரேவதி உள்ளிட்ட 42 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி சர்க்கரை நோய், மூட்டுவலி, முதுகுத் தண்டு பாதிப்பு போன்ற நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது 108 கிலோவாக இருந்த அவரது எடை தற்போது 54 கிலோ ஆகக் குறைந்துவிட்டது.

    அவரது தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி கேரளத்தில் மக்கள் செல்வாக்குடன் தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். வன்முறையைத் தூண்டும் கட்சி அல்ல.

    சிறையில் கூட அவருக்குச் சிகிச்சை அளிக்க இயலவில்லை என்று கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும் கூறிவிட்டது. இந்நிலையில் அவருக்கு சிறைக்கு வெளியே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.

    மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தமிழக அரசுக்கு கடந்த ஆட்சியின்போது எழுதியுள்ளார். கேரள முதல்வர் அச்சுதானந்தனனும் மதானியை விடுவிக்கும்படி முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். கேரளத்தில் உள்ள கட்சிகள் அவருக்கு ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    எனவே, மதானியைத் தமிழக அரசு ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Withdrawl of the lawsuits against Ponmudi, Stalin

    Dinamani.com – TamilNadu Page

    ஸ்டாலின், பொன்முடி மீதான வழக்கு வாபஸ்

    சென்னை, ஆக. 11: போலீஸôரைத் தாக்க முயன்றதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்பட 16 பேர் மீது அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

    சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது அக்கல்லூரிக்குச் சென்று மாணவிகளிடம் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    மாணவிகளைப் போராடத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்காக அவரைக் கைது செய்ய வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸôர் சென்றனர். அப்போது அவர்களை தாக்க முயன்றதாக ஸ்டாலின், பொன்முடி உள்பட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இவ்வழக்கை வாபஸ் பெறுவதாக அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஏற்ற நீதிபதி வேலு, வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தார்.

    Kanyakumari Fishermen Quarrels

    Dinamani.com – TamilNadu Page

    விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் மோதலில் 26 மீனவர்கள் கைது

    கன்னியாகுமரி, ஆக. 11: கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் மோதல் தொடர்பாக, 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளை சிறைப் பிடித்ததாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சொர்ணபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், ரெஜிஸ், கிரேசியான், சந்தியாதி ராயா, சந்திரகுமார், பிரதபாத் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மோதல் தொடர்பாக சேரியா முட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 26 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    Dinamani.com – TamilNadu Page

    சின்னமுட்டம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

    கன்னியாகுமரி, ஆக. 11: கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம், (சேரியா) முட்டம் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக மீனவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, கோவளம் பகுதிகளைச் சேர்ந்த 2 விசைப் படகுகளை சேரியாமுட்டம் மீனவர்கள் செவ்வாய்கிழமை கடலில் மூழ்கடித்தனராம்.

    இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, புதன்கிழமை சின்னமுட்டம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால், சின்னமுட்டம் மீனவர்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை புதன்கிழமை தொடர்ந்து 3 மணி நேரம் சிறைப்பிடித்தனர்.

    இதனால், அங்கு ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    மேலும், அங்கு பிரச்சினை ஏற்படாமலிருக்க நெல்லை சரக டி.ஐ.ஜி மாகாளி கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளார். குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி ஜெயராமன் தலைமையில் 250-திற்கும் மேற்பட்ட போலீஸôர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், வியாழக்கிழமையும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் துறைமுத்தில் 350 விசைப் படகுகளும் படகுத் துறை தங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை கேட்ட போது, இருதரப்பு மீனவர்களையும் அழைத்து, விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்படும் என்றார் அவர்.

    விசைப்படகு சங்க அவசரக் கூட்டம்: கன்னியாகுமரி விசைப் படகுகள் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • சேரியா முட்டம் கடல் பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட விசைப் படகுகளில் ஒன்று முற்றிலும் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு காணாமல் போயுள்ளது. இந்த இரு விசைப் படகுகளுக்கும் அரசு உடனடியாக முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
  • நிரந்தரமாக சுமுகமான முறையில் மீன்பிடித் தொழில் செய்யும் வகையில், ரோந்துப் படகுகள் முழு நேர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
  • செயல்பாடற்ற நிலையில் உள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநர் அலுவலகத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி, 3 “நாட்டிக்கல் மைல்’ (கடல்மைல்) தொலைவில் மீன்பிடிக்க, போயா போட்டு எல்லை வரையறுக்கப்பட்டு செயல் வடிவம் பெறவேண்டும்.
  • இரு விசைப் படகுகளுக்குமான நஷ்ட ஈட்டை பெற்றுத் தருவதோடு, இயல்பு நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த தீர்மானங்களின் நகலை உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலய வளாகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பங்குத் தந்தை லியோன் கென்சன் தலைமை வகித்தார்.

  • Laloo speaks out on Reservation issue – Reply to Ramadoss

    Dinamani.com – Headlines Page

    யாருடைய சான்றிதழும் தேவையில்லை: ராமதாஸýக்கு லாலு பதில்

    புது தில்லி, ஆக. 11: “யாருடைய சான்றிதழும் எனக்குத் தேவையில்லை’ என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார் ரயில்வே அமைச்சரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ்.

    லாலு பிரசாதை செவ்வாய்க்கிழமை சந்தித்தார் ராமதாஸ். அப்போது, இட ஒதுக்கீடு பிரச்சினையில் அவசரப்படக்கூடாது என்றும், படிப்படியாக அமல்படுத்த அரசு முடிவெடுத்தால் அதற்கு ஆதரவு கொடுப்போம் என்றும் லாலு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

    இதுதொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “இட ஒதுக்கீடு விவகாரத்தில் லாலு பின்வாங்கப் பார்க்கிறார்’ என்று கடுமையாகச் சாடினார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய லாலு,

    “யாருடைய சான்றிதழும் எனக்குத் தேவையில்லை. எந்த ஒரு இயக்கத்துக்காகவும் தியாகி பட்டம் வாங்க வேண்டும் என்ற போட்டியில் நான் இல்லை’

    “இட ஒதுக்கீடு தேவை என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் அதில் சில பிரச்சினைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அது கல்விக்குப் பொருந்துமா என்று எனக்குத் தெரியாது’ என்றார். “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டு பிரச்சினையை விரைவில் சுமுகமாக முடிப்போம். ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிகளுடனும் பேசி வருகிறோம்’ என்றார் அவர்.

    TK-TO Contest: #32 – #44 : Snap Reviews

    1. மழை: தாய் – உறவுகள்பிரதீப்

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 1 / 4

      நாலு வரியில் நறுக்குன்னு முடியுமே அதுவா
      வார்த்தைக்கோலங்களில் சமூக அவலம் வைத்திருக்குமே அதுவா
      வரிக்கு மேலே வரி போர்த்தியிருக்குமே அதுவா
      சீர்திருத்தமாக நினைத்து சிந்தனை தெளிக்குமே அதுவா
      ஒரு நிமிடம் படித்துவிட்டு ஓசி பதிவு போடுமே அதுவா
      பட்டியல் போட்டு ப்ளஸ் வாக்கு கோருமே அதுவா
      தன்னோட கவிதைக்கு மட்டும் நாலு போடுமே அதுவா

      யாருடைய கவிதைங்க இது?

      எளிமைக்காக +1.

    2. எண்ணம்: அன்புள்ள எரியும் திரிக்கு…அபுல் கலாம் ஆசாத்

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 2 / 4

      நீ
      மோர்ப் பானை போர்த்திய முதுமக்கள் தாழி

      செந்தில் குமரன் (குமரன் எண்ணம்): விட்டிலுக்கும் மெழுகு வெளிச்சத்திற்கும் உள்ள உறவா? மனிதர் புரிந்து கொள்ள இது மனித உறவு இல்லை என்று நினைக்கிறேன்.

    3. உறவுகள்ராசுக்குட்டி

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 3.25 / 4

      கவிதைக்கான எல்லா பயத்துடனும் படிக்க ஆரம்பிக்கிறேன். மகளின் சொல்லாடல் ‘அட…’ சொல்லும் எதுகை மோனை + நிகழ்வுகளின் எண்ண அணிவகுப்பு. முடிவில் டச்சோ டச். தலை மூன்றில் இடம்பிடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    4. பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சிசுரேஷ்

      (சிறுகதை) மதிப்பெண் – 3.25 / 4

      ஒருவனாவது என்னை அடையாளம் கண்டுகொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவனை எனக்குத் தெரியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும்.

      “எங்கே இருந்தாலும் நல்லா இரு. காசை செலவழிக்காதே. நல்லா சிக்கனமா சேத்து வையி. அப்போதான் நாளைக்கு என் நிலைமை வராது. புள்ளைங்கள நம்பாம இருக்கலாம்”

      நான் மௌனம் காத்தேன். என்ன விஷயம் என்று சரிவரத் தெரியாத வெளியாள் வேறென்ன செய்ய முடியும்?

      பாந்தமான உரையாடல்கள். போட்டியென்று வந்துவிட்டால் பெனாத்தலார் சிங்கம். மே 2006 என வெற்றி மேல் வெற்றி கண்டவர். அழகாய் இருக்கிறது. பயமாய் உள்ளது.

    5. எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்குமதுரா

      (சிறுகதை) மதிப்பெண் – 3 / 4

      எப்படிக் கசக்கிப் பிழிந்து அடித்துத் துவைத்து பார்த்தாலும் ஒரு சாயமும் கரையவில்லையே நம் உறவைப் பற்றிய நினைவுகளில்! மனம் அவ்வளவு பெரிய புளுகு மூட்டையா?

      “நான் என் பையனை நன்றாகத் தானே வளர்த்தேன்; எதில் விட்டு விட்டேன்; வீட்டு வேலைகள் எல்லாம் அவன் அக்காக்களைப் போல செய்ய வைத்து தானே வளர்த்தேன்”

      நான் என் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசியது போல், உங்கள் மகன் உங்களிடம் தனியாகப் பேசுவதே இல்லை என்பதை கவனித்த போது வருத்தமாக இருந்தது!

      சில உறவுகள் ஒதுங்கி இருப்பதே பிற உறவுகளுக்கு மரியாதை.

      தடாலடியான ஆரம்பம் உள்ளிழுக்கிறது. அதே உணர்ச்சி வேகம் பிசிறு தட்டாமல் தொடர்கிறார். நல்ல சிறுகதையின் அடையாளம் ‘சொந்தக் கதையா?’ கேள்வியை மிரட்சியுடன் தொண்டைகுழியில் ஊசலாட வைப்பது. ‘ஆச்சரியமான உறவின் உன்னத உணர்வுகளை’ உணரவும் வைக்கிறார்.

    6. உறவுகள் ஒடிந்த பறவைகள் !!!demigod

      (சிறுகதை) மதிப்பெண் – 2 / 4

      கோயிலும் குளமும் இருந்தா போதுமா? மொபைல் போன் வேலை செய்ய ஒரு டவர் போடக்கூடாது?

      அலட்டல் இல்லை. என் இளவயது குமுதம் கதை போன்ற நடை. எப்படி முடியப் போகிறது என்று அனுமாணிக்க விட்டே ஆரம்பிக்கிறார். கிராமத்துடன் ஆன உறவை இன்னும் கொஞ்சம் ஊடாட விட்டிருக்கலாம்.

    7. இன்றும்கப்பி பய

      (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

      கப்பி பய மீது இருந்த எதிர்பார்ப்பா? அல்லது ‘பிரா’வை உள்ளிழுத்து கற்பு காக்கும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ வகை ஸ்பரிசக் காதல் காட்சிகளா? பெரும் ஏமாற்றம்.

    8. பேசலாம்: செக்ஸ் இல்லாத கதைவா மணிகண்டன்

      (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

      ஜெஸிலா: ஜனரஞ்சக புத்தகத்தில் வரும் கதைப் போல் இருக்கிறது.

      அத்தைப் பாட்டி சொல்வாங்களே… அது போன்ற விவரணை + மதிப்பீடு. கிசுகிசு நெடி. உறவுகளில் உணர்வுகளைக் காணவில்லை.

    9. பொருனைக்கரையிலே: அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும்மானு (yezhisai)

      (சொந்தக்கதை) மதிப்பெண் – 1.5 / 4

      எனக்கு இரண்டு மாமியார்கள்.
      அடடா நீங்கள் நினைப்பது போலில்லை..
      இது என் உண்மையான ,என் வீட்டுக்காரரைப் பெற்றவர். இன்னொருவர் என் மாமனாரைப் பெற்றவர்.

      எப்போது நான் ஏதாவது உளறினாலும் (எப்போது என்று கேட்க வேண்டாம்.that was a full time occupation for me.)இப்போதும் அந்தப் பழக்கம் தொடருவதால்தான் ப்ளொக்கிங் ஆரம்பித்தது!!!)

      உள்ளொன்று மறைக்காத எழுத்து.

    10. பொருனைக்கரையிலே: மென்மைப் பூக்கள்மானு (yezhisai)

      (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

      ஏதோ எனக்கு தெரியாத கேரக்டருங்களை (ஃபீமேல் கைண்ட் குறித்து) சொல்றாங்க.

      கவிதையாக எழுதவில்லை என்பதால் +1. நிஜ சம்பவம் என்பதால் +1. நகாசு இடவில்லை என்பதால் +1.

      மினுக்கிடவில்லை என்பதால் -1. இது போன்ற தெரிந்த நிகழ்வுகளை வித்தியாசமாக சொல்லவில்லை என்பதால் -1.

    11. சென்னைக் கச்சேரி: தீவுகள்தேவ்

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 0.5 / 4

      சில சந்தேகங்கள்:

      • கூட்டமாய் தான் (அல்லது) கூட்டமாகத்தான் ?
      • தனித் தனித் தீவுகளாய் (அல்லது) தனித் தனி தீவுகளாய்
      • கரையேரி
      • எங்கேங்கோ
      • நம் உறவுகள்… என்று முடிகிறது. எந்த உறவு என்றே சொல்லவில்லையே :ஓ!

    12. நிகழ்வுகள்: உறவு என்பதால்சிவமுருகன் நீலமேகம்

      (புதுக்கவிதை) மதிப்பெண் – 0.5 / 4

      ஸ்டீரியோடைப்களை் தொடுக்கிறார். எழுத்துப்பிழைகள் உண்டு (சிலிர்பதில்லை, பெணென்பதால், பெணென்று, ஏற்கமாட்டரே, தவிற்பதில்லை).

    13. பனி விழுதுகள்… 2தொட்டராய ஸ்வாமி

      (புதுக்கவிதை)கள்

      மூன்று எழுதியிருக்கிறார்:

      1. தன்னலதாயின் உறவுகளில்…. :: கருத்துக்காக – 0 / 4
      2. தாய்மடி வாசம் :: நான்கடிக் கவிதையில் பிழைகள் மலிந்திருப்பதால்: 0.5 / 4
      3. அப்பா.. :: 1.5 / 4

    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


    | |