Daily Archives: ஓகஸ்ட் 3, 2006

Budget Analysis in Kalki

Thalayangam – Kalki

சமுதாய நல(?) பட்ஜெட்!

தமிழக பட்ஜெட்டில் பற்றாக்குறை 2.93 சதவிகிதம் என்பது பாராட்டுக்குரிய விஷயம். இதே முன்னேற்றம் தொடர்ந்து, இன்னும் இரண்டாண்டுகளில் பற்றாக்குறையே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆனால், இந்த நற்செய்திக்கு இன்றைய தி.மு.க. அரசு முற்றிலும் பொறுப்பாகி பாராட்டுபெற முடியாது.

முந்தைய ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, தாம் முதல்வரானதுமே ஏகப்பட்ட வரிகளை விதித்து, அரசு வருவாயைக் கூட்டும் முயற்சியில் இறங்கினார். இதனால் மக்கள் திணறிப் போனாலும் அரசின் நிதி நிலைமை சீரடைந்தது. அந்தப் பயனைத்தான் இன்றைய தி.மு.க. அரசு அனுபவிக்கிறது.

நடப்பு ஆண்டின் வருவாய் இலக்குகளை எட்டி, பட்ஜெட்டை தி.மு.க. எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதுதான் கேள்வி. இவ்வாண்டு நிதி நிலைமை சீராக இருப்பதால் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. பருப்பு வகைகள் மீதான விற்பனை வரி மற்றும் வேறு சில வரிகள் நீக்கப்பட்டும் உள்ளன.

சமுதாய நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மொத்த செலவில் 35 சதவிகிதம் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது! கடந்த ஆண்டு ரூபாய் 11,942.49 கோடி நலத்திட்டங்களுக்கென செலவிடப்பட்டிருக்க, இவ்வாண்டு அது வரலாறு காணாத வகையில் ரூ.13,983 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் இரண்டாயிரம் கோடிக்கும் மேலாக கூடுதல் ஒதுக்கீடு!

நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை. அதிலும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிப்பது மிக நியாயமே. ஆனால் பிற ஒதுக்கீடுகள் ஒரு வரையறைக்குட்பட்டு இருப்பதுதான் நல்லது என்பதுடன், தனி நபர் வருமானமும் மாநில பொருளாதாரமும் பெருகப் பெருக, இந்த ஒதுக்கீடுகள் குறைந்துவர வேண்டும். ஆனால், அவ்வாறு நடப்பதேயில்லை.

இரண்டாயிரம் கோடி ரூபாயை சமுதாய நலத் திட்டங்களில் கூடுதலாகச் செலவிடும்போது, அது தொழிற்பெருக்கத்துக்கோ, வேலைவாய்ப்புப் பெருக்கத்துக்கோ, உற்பத்திப் பெருக்கத்துக்கோ, வருவாய்ப் பெருக்கத்துக்கோ வகை செய்யாது! அவ்வளவு பெரிய தொகை பலவாறாகப் பங்கு பிரிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஆனால், இறுதிப் பயனீட்டாளரைச் சென்றடையும் தொகை, பட்ஜெட் ஒதுக்கீடைக் காட்டிலும் மிகக் குறைவாகவே இருக்கும். போதாக்குறைக்கு, தேர்தல் வாக்குறுதியாக அள்ளித் தந்த சலுகைகளும் இலவசங்களும் ஏராளமான செலவுக்கு வழிவகுக்கும்.

நலத்திட்டங்களுக்கான நிர்வாகச் செலவும் கணிசமாக இருக்கும் என்பதோடு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிலவும் லஞ்ச – ஊழல் கலாசாரம் ஏராளமான தொகையைக் காவு கொள்ளும்!

இவ்வாறு நிகழாமல் தடுப்பதிலும் மேற்பார்வை செய்வதிலும் இன்றைய அரசு வெற்றி காணுமென்றால், அது உலகமகா அதிசயமாகவே இருக்கும்.

பயனற்ற செலவுகளைக் குறைத்து, வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, மக்களுடைய வருமானத்துக்கு வழிசெய்யும் முகமாக இந்த பட்ஜெட்டில் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், பிரமாதமாக ஏதுமில்லை. இதைச் செய்யாதவரையில் தமிழகத்தில் உற்பத்தி பெருகாது; விலைவாசி குறையாது. விலைவாசி அதிகமாயிருக்கிறது என்பதற்காக அரசு மீண்டும் ஏழை – எளியவர்களுக்கான சமுதாய நலத்திட்ட ஒதுக்கீடுகளைத்தான் அதிகரிக்க வேண்டிவரும். இந்த விஷ வட்டத்திலிருந்து விடுபட துணிவும் தீர்க்கதரிசனமும் தேவை. அடுத்த பட்ஜெட் தயாரிக்கும்போதாவது தி.மு.க. அரசும் நிதி அமைச்சரும் அவற்றைக் கைகொள்ளட்டும். சமுதாய நலன் என்பது ஏழைகளை ஏழைகளாகவே நீடிக்கச் செய்வதல்ல; அவர்களை உழைப்பாளிகளாகவும் அதன்மூலம் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாற்றுவதுதான் உண்மையான சமுதாய நலன்.

Contest : Aug 3 – Quick Takes

#6 சந்திப்பு: உறவுகளின் வேர்!செல்வபெருமாள்

(கட்டுரை) மதிப்பெண் – 2 / 4

எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது.
………..
இந்த போலி உறவுக்கு முடிவு கட்டுவது என்பது இந்த நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவதோடு பிணைக்கப்பட்டுள்ளது.

‘குடும்ப உறவுகள் எதை அடிப்படையாக வைத்து அமைகிறது’ என்பது அடிநாதம் என்கிறார். முன்வைக்கும் அடிக்கோளுக்கேற்ப, இந்தப் பதிவு போதுமான அளவு உதாரணங்களையும் வாதங்களையும் முன் வைக்கவில்லை. நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்காமல் axiom-கள் மட்டுமே சொல்லிப் போகிறார்.

#7 எண்ணம்: உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) – போட்டிக்காகஅபுல் கலாம் ஆசாத்

(மரபுக்கவிதை) மதிப்பெண் – 2.5 / 4

பத்து தடவை கண் இமைப்பதற்குள் என்னால் நூறு மீட்டர் ஓட முடியாது; நீச்சல் தெரியாது; 72 மணி நேரத்தில் தொடர்ந்து 33 திரைப்படங்கள் பார்க்க இயலாது; முயன்றால் ஒருக்கால் நடக்கலாம். தளை தட்டுதா என்று பார்ப்பதற்குக் கூட தெரியாத கட்டளைக் கலித்துறையும் இந்தப் பட்டியலில் சேரும். ஆசாத்திடம் இருந்து மற்றொரு வித்தியாசமான முயற்சி. புதுமையான கருத்துக்கள் இல்லாதது முதல் வருத்தம். மரபுக்கே உரித்தான ரசமான உவமைகள் பேணாதது மற்றொரு வருத்தம்.

இரண்டு கையையும் சேர்த்து வைத்து ஆடினாலும், போட்டுக் கொடுத்த பந்தைக் கூட வலையில் படாமல் எதிராளியின் பக்கம் அடிக்கும் டென்னிஸ் ஆட்டத்தை, ஆடிப் பார்த்து, அதன் கஷ்டத்தை உணர்ந்தவுடன், பின்னன்ங்கையால் அநாயசமாக வீசுபவரைப் பார்த்து பொறாமைப்படுவதைப் போல் இந்தப் பதிவுக்கு வாக்களிக்க விரும்புகிறேன்.

போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


| |

Madurai, Coimbatore mayor posts to be reserved for Women

Madurai, Coimbatore mayor posts to be reserved for Women

மதுரை, கோவைக்கு பெண் மேயர்கள்

மதுரை, கோவை அகிய மாநகராட்சிகளின் மேயர்கள் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.

மாநகராட்சிகள் – 6

  • சென்னை,
  • மதுரை,
  • சேலம்,
  • கோவை,
  • திருச்சி,
  • நெல்லை

  • 102 நகராட்சிகள்,
  • 385 யூனியன்கள்,
  • 561டவுன் பஞ்சாயத்துக்கள்,
  • 12,800 பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு
  • 1,31,684 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநகராட்சி, நகர சபைகளில் கவுன்சிலர்களே மேயர் மற்றும் நகரசபை தலைவர்களை தேர்வு செய்ய புதிய சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் மேயர் பதவிக்கு தனியாக தேர்தல் நடக்காது.

    மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கவும் திட்டமிட்டுள்ளது அரசு.

    அதன்படி தற்போது பொது பிரிவில் இருக்கும் பதவிகள் தாழ்த்தப்பட்டோர் அல்லது பெண்களுக்கு ஒதுக்கப்படும். தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பெண்கள் மற்றும் பொது பிரிவுக்கு மாற்றப்படும்.

    மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 2 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது. கடந்த முறை நெல்லை, திருச்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.

    இப்போது சுழற்சி முறையில் மதுரை, கோவைக்கு பெண் மேயர் பதவி வழங்கப்படவுள்ளது. நெல்லை, திருச்சி ஆகிய மேயர் பதவிகள் பொது பிரிவுக்கு மாற்றப்படும். அதே போல சென்னை, சேலம் மாநகராட்சிகளும் பொது பிரிவில் இடம் பெறவுள்ளது.

    மேலும் நகாரட்சிகள், யூனியன்கள், டவுன் பஞ்சாயத்து, பஞ்சாய்துக்களிலும் சுழற்சி முறை மாற்றத்துக்கு பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி வார்டுகளிலும் சுழற்சி முறை மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

  • Karunanidhi attacks Kalimuthu

    Karunanidhi attacks Kalimuthu

    ஒரு சபாநாயகர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் காளிமுத்து: கருணாநிதிஆகஸ்ட் 03,

    தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அதன் மீது ஓட்டெடுப்பு நடக்கும் முன்பாகவே அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

    இதையடுத்து அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

    ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதா, முதல்வர் மீது கொண்டு வருவதா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து, எதற்கு வம்பு, தாற்காலிகமாக சபாநாயகர் மீதே கொண்டு வந்துவிடலாம் என்று இன்று இந்த தீர்மானத்தை கொண்டு வந்து சோதித்துப் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

    இதுவரையிலேயே அவர்கள் மைனாரிட்டி அரசு என்று சொன்ழது நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கவும் முடியாது என்ற காரணத்தால் அவர்களாகவே இன்றைக்கு வெளியேறி தங்களுடைய தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் இந்த ஐந்தாண்டு காலத்துக்கும் எங்களுக்குப் பேரவைத் தலைவர் தான். ஆனால், பேரவைத் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் சொல்லலாம்.

    ஏறத்தாழ 57ம் ஆண்டிலிருந்து நான் இந்த அவையிலேயே இருந்தவன் என்ற காரணத்தால் எங்களைக் கூட கடிந்து கொண்ட பேரவைத் தலைவர்கள் உண்டு. நாங்கள் அவர்களை திருப்பி கடிந்ததில்லை.

    எப்படி ஒரு சபாநாயகர் இருக்கக் கூடாது என்பதற்கு ஒன்றைச் சொல்ல நான் விரும்புகிறேன்.

    உணவு விடுதிகள் காலம் காலமாக பலராலும் ஏலம் எடுக்கப்பட்டோ, அல்லது ஒப்பந்தம் போடப்பட்டோ தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில் அண்ணா பெயரால் அமைந்த அசைவ உணவு விடுதி ஒன்றும் இருந்தது.

    அந்த அண்ணா உணவகத்தை நடத்தி வரும் கே.வி.ஆர். மணி என்பவர் அந்த உணவகம் நடத்த வழங்கப்பட்ட காலம் 03.02.2002 உடன் முடிவுற்றதால், அந்த உணவகத்தை உடனடியாகக் காலி செய்து ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

    அதற்கு அந்த கே.வி.ஆர்.மணி என்ற உணவக உரிமையாளர், அந்த உணவகத்தை ஒப்பந்த அடிப்படையில் வருடத்துக்கு ரூ. 2.6 லட்சம் வாடகைக்கு தொடர்ந்து நடத்த அனுமதி தருமாறு கேட்டு கடிதம் எழுதுகிறார். வருடத்துக்கு ரூ.2.6 லட்சம் வாடகை தந்துவிடுவதாகக் கூறுகிறார்.

    இதற்கான கோப்பில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 16.02.02 அன்று தனது கைப்பட பிறப்பித்த ஆணையில், கே.வி.ஆர். மணிக்கே ஓராண்டு காலத்துக்கு அந்த உணவகத்தை நடத்த அனுமதிக்கலாம் என்றும், அதற்கு மாத வாடகையாக ரூ. 2,750யை நிர்ணயிக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.

    மணி தர முன் வந்த தொகை வருடத்துக்கு ரூ.2.6 லட்சம். ஆனால், காளிமுத்து (12 மாதத்துக்கு ரூ. 2,750 என்ற வகையில்) ரூ. 33,000 மட்டும் போதும் என்று ஆணை பிறப்பித்தார். மீதி பணம் எங்கே போனது?.

    Talkative & Unspeakable

    பாடுபொருளும் பேசாப்பொருளும்

    நண்பர்களுடன் தேநீர் விருந்து; வலைவாசிகளுடன் மறுமொழி அரட்டை; உறவினர்களுடன் மணமண்டபத்தில் வட்ட்மேஜை; அலுவலில் மதிய உணவு விவாதம்.

    உரையாடுவதற்கு ஏற்ற தலைப்புகள்:

    1. வானிலை
    2. போக்குவரத்து
    3. தொழில் நுட்பம்
    4. அரசியல் கலக்காத மனமகிழ் சினிமா
    5. விளையாட்டு
    6. தகவல் செய்தி
    7. பொழுதுபோக்கு கேளிக்கை
    8. மேலோட்டமான சொந்தக்கதை விசாரிப்பு
    9. வீடு/கார்/கணினி ஆலோசனை
    10. சமையற்குறிப்பு

    நெருங்கியவர்கள் இல்லாத பொதுவில், பேசுவதற்கும் எழுதுவதற்கும் முன், எந்த எழுவாய்களை எழாமல் தவிர்க்கிறேன் என்று யோசித்த பட்டியல்:

    1. காமம் – Trailing Technology: Sex Work in a Traditional City (வழி)
    2. மாதவிடாய் – தோழி.காம் – கனிமொழி :: ஆணியப் பழமைவாதிகளுக்குக் கூடுதல் ஆயுதம்: மாதவிடாய் – வேண்டும் இன்னொரு ஆலயப் பிரவேசம்
    3. பொருளாதாரம் – கடன், சம்பளம், பங்கு வருவாய், முதலீட்டு சாதனம்
    4. சொந்தக் கதை – மனங்குன்றிய தருணம், வெட்கி தலைகுனிந்தவை, நாணும் நிகழ்வு,
    5. சுடுசொல்
    6. எதிர்மறை விமர்சனம் – தனிப்பட்ட நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவது, பாதிப்பினால் உருவான கருத்துக்களை விவாதிப்பது, சர்ச்சைக்குரியவர்களை சர்ச்சைக்குள்ளாமல் விட்டுத்தள்ளுவது.
    7. மருத்துவ நோய் – சுகவீனம்
    8. குறை சுட்டல் – குற்றம் பார்க்கின் உறவுகள் இல்லை ;-))
    9. இதற்கு மேல் சொல்ல கூச்சமாக இருக்கிறது. பேசாப்பொருள் எப்படி எழுத வரும்?

    | |