Daily Archives: ஏப்ரல் 19, 2006

Susindram Visit by MK Stalin’s Spouse

கருணாநிதிக்காக அர்ச்சனை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவருடைய மனைவி துர்கா, சகோதரி செல்வி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, “மாவட்ட தி.மு.க. செயலாளரும் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனின் மனைவியுடன் துர்காவும் செல்வியும் சுசீந்திரம் தாணுமாலயப்பெருமாள் கோயிலுக்கு சென்று கருணாநிதி பெயரில் விசேஷ அர்ச்சனை நடத்தி, தி.மு.க. கூட்டணி வெற்றிபெற சிறப்பு பூஜையும் செய்தார்கள்” என்று மாவட்டம் முழுக்கவே பரபரப்பாகியுள்ளது.

“இதுவே வேற யாராவது கட்சிக்காரன் செஞ்சிருந்தா, தலைவர் கடிதம் எழுதக் கத்தியை எடுத்திருப்பார். ஆனா, இதைச் செய்தது சொந்தங்கள் ஆச்சே!” என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

செய்தி: ஜூ.வி.

Free Full Meals! – Dinamani

இரண்டு வேளை சமைத்து போடலாமே?ஆர். சோமசுந்தரம்

சில ஆண்டுகளுக்கு முன் “ரீடர்ஸ் டைஜஸ்ட்” பத்திரிகையில் “லைப் ஈஸ் லைக் தட்” என்ற பகுதியில் இடம் பெற்ற துணுக்கு இது:

ஒரு உர வியாபாரி ஒரு கிராமத்தில் தனது கம்பெனியின் உரத்தை விவசாயிகளிடம் விற்பதற்காக ஒரு கூட்டம் நடத்துகிறார். தனது பொருளை வாங்குவதால் விவசாயிக்கு கிடைக்கும் லாபம் குறித்து விளக்குகிறார்.

-எங்கள் உரத்தை நீங்கள் 10 மூட்டை வாங்கினால் 2 மூட்டை இலவசம்.

விவசாயிகளிடம் சலசலப்பு. ஆர்வம். ஆனால் வியாபாரம் நடக்கவில்லை.

-நீங்கள் 20 மூட்டை வாங்கினால் 6 மூட்டை இலவசம்

மீண்டும் சலசலப்பு. ஆனால் விவசாயிகள் மெüனம் சாதித்தனர்.

-நீங்கள் 100 மூட்டை வாங்கினால் 50 மூட்டை இலவசம் இப்போதும் யாரும் வாங்க முன்வரவில்லை.

இதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் வியாபாரி வருத்ததுடன் நின்றுகொண்டிருந்தபோது, ஒரு வயோதிகர் எழுந்து நின்றார். இவர் 100 மூட்டை வாங்கப் போகிறார் என்று நம்பிக்கை பிறந்தது.

அவர் கேட்டார்.

“”எவ்வளவு மூட்டைகள் வாங்கினா மொத்தமும் இலவசமா கொடுப்பீங்க”

இந்த அப்பாவி விவசாயியைப் போல, இன்று அரசியல் தலைவர்களைக் கேள்வி கேட்க அப்பாவி வாக்காளர்கள் இல்லை. அல்லது அப்படி இருந்தாலும் அவர்கள் குரல்கள் ஒலிக்க ஊடகங்களில் இடமில்லை என்பதுதான் இன்றைய “இலவச’ துன்பத்துக்குக் காரணம்.

இலவச டிவி சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கை பொதுவாக பரவியதும் அதைத் தொடர்ந்து “இலவச டிவி கிடைக்கலன்னாலும், ரூ.2-க்கு அரிசி கிடைத்தால் அது போதும்‘.

இப்படியாக எல்லா ஊர்களிலும் எல்லா டீக்கடை, ஓட்டல் வாசல்களிலும் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியான வசனம் பரவிக் கொண்டிருப்பதை உளவுத் துறை முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்ல, இத்தனை நாட்களாய் அதை விமர்சனம் செய்தவர் வேறு வழியின்றி 10 கிலோ இலவசம் என்று அறிவிப்பு செய்தார்.

உடனே திமுக தலைவர் கருணாநிதியும், அரிசி விஷயத்தில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று “அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்று ஆழ்வார்கள் பாணியில் இறங்கிவிட்டார். மானியம் என்பதற்கும் இலவசம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

மானியம் ஒருவருடைய சுமைக்கு கொஞ்சம் தோள் கொடுப்பது. இலவசம் என்பது இன்னொருவர் பாரத்தை நாமே சுமப்பது.

தரமான அரிசி வெளிச்சந்தையில் கிலோ ரூ.20 க்கு விற்கப்படுகிறது. இதை வாங்குவதற்கு வசதி இல்லாத ஏழைகளுக்காகத்தான் ரேஷன் அரசி மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையைக்கூட கொடுக்க முடியாத ஏழைகள் இருக்கிறார்கள் என்பதால் தமிழக அரசு தன் சொந்தப் பொறுப்பில் குறிப்பிட்ட தொகையை மானியமாக ஈடுசெய்து கிலோ ரூ.3.50 க்கு விற்பனை செய்கிறது.

இப்போதைய அறிவிப்புகளின்படி 20 கிலோ அரிசியை ரூ.40க்கு திமுக கொடுப்பதாக வாக்குறுதி சொல்கிறது.

அதிமுகவோ ரூ.35-க்கு 20 கிலோ அரிசி கொடுப்பதாகச் சொல்கிறது. (அதாவது 10 கிலோ இலவசம்).

அடுத்து திமுக தலைவர் இன்னும் சலுகை அறிவிக்கப்படும் என்று பொடி வைத்துள்ளார்.

நண்பர் கேலியாக சொன்னார்:

“அரிசியை மட்டும் குறைந்த விலையில் தருவதோ அல்லது 10 கிலோ இலவசமாகத் தருவதோ பயன்தராது. இதை வாங்கி சமைக்க விறகு அல்லது மண்ணெண்ணெய் தேவை. ஏழை அதற்கு எங்கு போவான். தமிழ்நாட்டு வரலாற்றில் அன்னதானம், அன்னதான சத்திரம் புதிய விஷயமல்ல. காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை, எம்ஜிஆர் மேலும் விரிவாக சத்துணவுத் திட்டமாக மாற்றினார். அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை குடும்ப உணவுத் திட்டமாக மாற்றி, ஒரு குடும்பத்துக்கு இரண்டு வேளை சோறு அரசாங்கமே சமைத்து போடலாம்…”

வெளியே இதையெல்லாம் பேசாதீங்க என்று அவர் வாயைப் பொத்தி இழுத்து வரவேண்டியதாயிற்று.

Alliance Victory == Alliance Ministry – Dinamani

கூட்டணி ஆட்சி கூடாதா?உதயை மு. வீரையன்

13-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கிவிட்டது.

எப்படியாவது வெற்றியை அடைந்து விட வேண்டும்; வழிகளைப் பற்றிக் கவலையில்லை, வெற்றிக் கொண்டாட்டத்தின் பேரோசையில் எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் அடங்கிவிடும். குறுக்கு வழிகள் எல்லாம் இராஜதந்திரமாகி விடும்.

“”ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு; அது மெய்யாகி விடும்” என்ற கோயபல்சின் கூற்றே இன்றைய அரசியல்வாதிகளின் வேதவாக்கு; வாக்குறுதிகளே மக்கள் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது. இதனால்தான் அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் கால வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்க வேண்டுமா? எப்படியாவது ஏழைப் பாமர மக்களைக் கவர வேண்டும்; எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். ஆட்சியைப் பிடித்துவிட்டால் 5 ஆண்டுகள் அவகாசம் கிடைக்கிறது. அதிகாரமும் கிடைக்கிறது. யார் எதிர்த்துக் கேட்க முடியும்?

  • மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள்;
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு;
  • தமிழக நதிகளை இணைப்பது பற்றி ஆய்வு;
  • கிராமங்களில் கூட்டுப்பண்ணை;
  • பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புக் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்;
  • ரேஷனில் 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம்
    – இவை ஆளும் கட்சியின் வாக்குறுதி.

    எதிர்க்கட்சிகள் விட்டு விடுமா?

  • நிலமற்றவர்களுக்கு நிலம்,
  • ரூ. 2-க்கு ஒரு கிலோ தரமான அரிசி,
  • ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,
  • பெண்களுக்கு இலவசமாக சமையல் கேஸ் அடுப்பு,
  • விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

    – இவ்வாறு ஏராளமான அறிவிப்புகள்.

    “ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” என்பதை வைத்து இடதுசாரிகள் எழுப்பும் அரசியல் முழக்கம்.

    அரசியல் கட்சிகளின் அறிவிப்புகளில் இலவசங்களே பெரிதும் இடம்பெற்றுள்ளன. நிரந்தரமான நீண்டகாலத் திட்டங்கள் இடம்பெறவில்லை.

    “ஒருவருக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கும் தொழிலைக் கற்றுக் கொடுப்பதே மேல்” என்பது அயல்நாட்டுப் பழமொழி. தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படும் தலைவர்களுக்குத்தான் இது பொருந்துமே தவிர, அடுத்த தேர்தலைப் பற்றியே கவலைப்படும் அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தாது.

    ……

    நாடு விடுதலையடைந்த பிறகு தேசிய கட்சிகளே கோலோச்சின. மாநிலக் கட்சிகள் முளைத்த பிறகு தேசிய கட்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. அதுவரை தனித்துப் போட்டியிட்ட கட்சிகள் “கூட்டணி” காணத் தலைப்பட்டன. தற்போது கூட்டணியில்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலை.

    எனவே கூட்டணி தவிர்க்க முடியாத தேவை. இந்நிலையில் கூட்டணி ஆட்சியும் காலத்தின் கட்டாயமாகி விட்டது என்பதை ஏற்றுக்கொள்ளத் தயக்கமென்ன? கூட்டணியை விரும்பும் கட்சிகள் “கூட்டணி ஆட்சி” என்றால் முகம் சுளிப்பானேன்?

    இதுவரை தமிழகம் காணாதது கூட்டணி ஆட்சியே! அதையும் பார்த்து விட்டுப் போகட்டுமே! “கூட்டுயர்வே நாட்டுயர்வு’ என்று கூறுகிறோம். கூட்டணி ஆட்சி மட்டும் கூடாதா?

  • Chennai Election Observer Contact Numbers – Dinamalar

    நன்றி: தினமலர்

    Free Color TV for Rs.1000 – Dinamalar

    நன்றி: தினமலர்

    Kanimozhi – Thiruvodu Ilavasam

    அரசும் தலைவர்களும் மக்களைத் திருவோடு ஏந்தவைக்கின்றனர் : தோழி.காம்1/Jan/2006

    தினமும் காரில் நீண்ட வரிசைகளில் மக்களை நிற்கச் செய்து பல் விளக்கி விட்டு, காபி, சிற்றுண்டி ஆகியவற்றை இலவசமாக வழங்கலாம். மதியம் வரை அவர்களை உலக அரசியல், தமிழ் சினிமா இவற்றில் திளைக்கச் செய்து மதிய உணவு வழங்கலாம். பிறகு இரவு வரை தொலைக்காட்சியில் வரும் குடும்ப மதிப்பீடுகள் கொண்ட தொடர்களைக் காட்டித் தாலாட்டித் தூங்கவைக்கலாம். வருடத்திற்கு இரண்டு முறை இலவச உடைகள் தந்து, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வாக்களிக்கச் செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்றலாம்.

    மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, மருத்துவ வசதிகள், சாலைகள், இவையே கேள்விக்குறியாக, எட்டாத கனவாக இருக்கும்போது, ஒவ்வொரு அரசாங்கமும் அரசாங்க கஜானாவைத் தங்களுக்கு பிடித்த எதாவது ஒரு இலவசத்தில் செலவழித்துக்கொண்டிருப்பது தமிழகத்தை முன்னேற்றப் பாதையிலிருந்து வெகு தொலைவிற்குத் தடம் மாறி இட்டுச் செல்கிறது. அது மட்டுமின்றி மக்களின் சுயமரியாதையையும் ஆணிவேரோடு அழிக்கவும் செய்கிறது.

    வழி: ullal – aathirai

    Context insensitive Cartoons

    கேலிச் சித்திரம் அல்ல…

    வெளியான இதழ்: டி.என்.ஏ

    வலைஞருக்கு பதிவெழுதியபின் உண்டாவது…

    நன்றி: Off the Mark

    சினிமா விமர்சனம் எழுத வாங்க…

    நன்றி: Six Chix

    தேர்தலுக்குப் பின் தமிழக வாக்காளப் பெருமக்கள்

    நன்றி: Close to Home


    | |