படங்காட்டுகிறேன்


துக்ளக்:

சந்திரமுகி:

17 responses to “படங்காட்டுகிறேன்

  1. என்னக் கூற வருகிறீர்கள் என்பது விளங்கவில்லையே!
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  2. Balaji

    Enna irunthaalum neenga ippadi kevalamaana, keezhththaramaana, mattamaana oru rasigaraga iruppeergal ena naan kanavilum ninaika villai. Thughlak cartoonai ellam eduththup podubavarai veru eppadi solluvathu? Athu ungalin mana noi mutriya adayalathaik kaattugirathu. Ungal rasippuththanmaiyin keezhmaiyin uchaththai kaanbikirathu. Thuklakkin Abathak caartoongalai oru naalam thara rasaigan kooda virumba maattan ena sollik kolgiren.

    aduthta muraiyaavathu oru nalla arivu jeeviththanamaana cartoonai rasaikkap paarungal. enraikkuththaan ungalaip ponravargal thirunthap pogireergalao pongal.

    kavalaiyudan
    S.Thirumalai

  3. தனது அசட்டு பின்னூட்டம் மூலம் எனது வாதங்களுக்கு இன்னும் வலு சேர்த்த திருமலைக்கு மிகவும் நன்றி!

  4. தனது அசட்டு பின்னூட்டம் மூலம் எனது வாதங்களுக்கு இன்னும் வலு சேர்த்த திருமலைக்கு மிகவும் நன்றி!

  5. அறிவுஜீவித்தனமானக் கார்டூனை நிர்ணயம் செய்வது யார்? கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பத்துதான் அறிவுஜீவித்தனமா? எந்த விதத்தில் இங்கு கொடுக்கப்பட்ட துக்ளக் கார்டூன் குறைந்து விட்டது? கருணாநிதியின் ஆஷாடபூதித்தனத்தைத் துகிலுரித்ததில் ஏன் இவ்வளவு கோபம்?

    இன்னும் ஒன்று. தமிழை தமிழ் எழுத்துக்களிலெயே எழுதுங்கள். இல்லாவிடில் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதி விடுங்கள். சுரதாவின் எழுத்துறு மாற்றியை உபயோகிக்க எவ்வளவு நேரம் ஆகி விடப் போகிறது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  6. திருமலையின் ‘விமர்சனத்தை’ சரியாய் புரிந்துகொண்ட டோண்டுவிற்கும் நன்றி! இனியும் யாராவது எழுதுவார்களெனில் அவர்களுக்கும் எனது நன்றி!

    இன்றய பாடல்:
    “நன்றி சொல்லவே என் மன்னவா வார்த்தையில்லையே!”

  7. 1996ல் தா.ம.கா – திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்ற போது மூப்பனார் தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி வேண்டுமென்று கோரினாரா.இந்த கூட்டணி உருவாக உதவிய சோ கூட்டணி ஆட்சி வேண்டும் என்று அன்று எழுதினாரா. மேலும் 2001ல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆட்சியில் பங்கேற்ப்போம் என்று நிபந்தனை விதித்தனவா.சோ இதுவரை எத்தனை முறை கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார் என்பதை டோண்டுவுன்,திருமலையும் எடுத்து கூறுவார்களா.பாஜக தலைமையிலுள்ள தேசிய ஜனநாயக முண்ணனி மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி என்ற நிலைப்பாடுடனா செயல்படுகிறது. சோ துக்ளக்கில் எதை எழுதினாலும் பாராட்டும் ரசிக சிகாமணிக்களுக்கு அரசியல் அறிவு,பகுத்தறிவு மிகவும் குறைவு என்பதை எத்தனை முறைதான் நிரூபிப்பார்களோ
    ravi srinivas

  8. “சோ இதுவரை எத்தனை முறை கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார் என்பதை டோண்டுவுன்,திருமலையும் எடுத்து கூறுவார்களா”
    பாவம் திருமலை. ஐயா ரவிசிறீனிவாஸ் அவர்களே, நான் சோவின் ஆதரவாளன் என்பது சரிதான். ஆனால் திருமலை? அவர் ஆங்கில எழுத்துக்களை உபயோகித்துத் தமிழில் எழுதியதைப் பொறுமையாகப் படியும்.
    கூட்டணி வேண்டும் என்றுக் கூறியது இள்ங்கோவனே. அதுவும் வரப்போகும் தேர்தலுக்கே. அதற்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. அதற்குள் கருணாநிதி குதிப்பது நகைப்புக்குரியது. கார்ட்டுன் அந்த நகைப்பையே செய்கிறது. கருணாநிதி, ஜெ ஆகியோர் இருக்கும் வரை காமெடிக்குக் குறைவு கிடையாது. துக்ளக்கின் கார்டூன்களுக்கும் முடிவு இருக்காது. ஹைய்யா ஜாலிதான்.
    “தனது அசட்டு பின்னூட்டம் மூலம் எனது வாதங்களுக்கு இன்னும் வலு சேர்த்த திருமலைக்கு மிகவும் நன்றி!”
    உங்கள் கருத்துக்கு ஆதரவாக எழுதுவது அசட்டுத்தனம், அதை நீங்கள் கூறுவது அறிவுஜீவித்தனம்!
    “சோ துக்ளக்கில் எதை எழுதினாலும் பாராட்டும் ரசிக சிகாமணிக்களுக்கு அரசியல் அறிவு,பகுத்தறிவு மிகவும் குறைவு என்பதை எத்தனை முறைதான் நிரூபிப்பார்களோ”
    சோ என்ன எழுதினாலும் எதிர்ப்பது சுத்தமாக கண்மூடித்தனம் என்று நான் கூறுகிறேன்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  9. திருமலை… சோ மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்களே! 😉

    ரோசா/ரவி… கருணாநிதி கிண்டலுக்கு அப்பாற்பட்ட செயலா செய்திருக்கிறார்? பக்கத்து பெஞ்சிப் பையன் அடித்தவுடன், அழுதுகொண்டே சோனியா டீச்சரிடம் கோள்மூட்டிவிட்டு, அவனை வகுப்பை விட்டு வெளியேற்று என்கிறார் — என்று சொல்வதற்கு ‘தடா’வா?

    தங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி டோண்டு. துக்ளக் இங்கு கிடைக்கிறது: Thuklaq

  10. Dear Dondu Sir

    Sorry for irritating you with my Taminglish. I did not expect that both Balaji and Dondu could not understand the sarcasm intended in my post. I thought being a long time Thughlak reader Raghavan sir would have understood the pun intended in my post. Balaji, you too?

    Regards
    Asadan
    S.Thirumalai

  11. திருமலை… உங்களின் நக்கல் நன்றாகவே முதல் முறையே புரிந்தது.

    உங்க ஸ்டைலிலேயே எழுத முயற்சித்தேன்; கொஞ்சம் backfired போல?

  12. Balaji

    Sorry, it was my mistake on mistaking you.

    Regards
    S.Thirumalai

  13. “I thought being a long time Thughlak reader Raghavan sir would have understood the pun intended in my post.”
    Pun? Don’t you by chance mean irony? Sorry that it was lost on me. Fact is, it seemed to be such a typical Cho-bashing, that I saw red. Sorry.
    Regards,
    Dondu Raghavan

  14. பாலாஜி,

    நான் கருணாநிதி கூட்டணி etc குறித்து எந்த கருத்தும் சொல்லவில்லையே! என்னிடமும் எதற்காக கேள்வி கேட்கிறீர்கள்? ரவிதான் ஏதோ கருத்து சொல்லியிருக்கிறார். அதற்கும் எனக்கும் எந்த பந்தமோ தொடர்போ எதுவும் கிடையாது.

    நான் ‘சோ’த்தனமான அசட்டு நையாண்டி என்பது குறித்து சில கருத்துக்களை சொல்லியிருந்தேன். அதை கிண்டல் செய்வதாக நினைத்து, உலகில் சோ வாசகரை தவிர வேறு யாருக்கும் சாத்தியப் படாத அசட்டுத்தனத்துடன் திருமலை பின்னூட்டம் அளித்திருந்தார். (அதை அவரே ‘sarcasm’ என்று பெருமையாய் வேறு சொல்லி இன்னும் அசடு வழிகிறார். ரத்தம் வர முட்டி கொள்ள தோன்றினாலும்) என் கருத்துக்களை அப்படியே நிருபிக்கும் வகையில் உதாரணத்தன்மையுடன் அவர் எழுதியதால் மிகுந்த சந்தோஷத்துடன் எனது நன்றியை மட்டும் கூறினேன்.

    டோண்டு இன்னோரு படி மேலே போனார். திருமலையின் அசட்டு கிண்டலை (இப்படித்தான் முப்பது வருஷமாய் துக்ளக் வாசிக்கிறார் போலும்!) கூட புரிந்து கொள்ளாமல் அதற்கு சீரியஸாய் பதில் தர, எனக்கு பரவசத்தில் என்ன பதில் கூறுவது, யாருக்கு எப்படி நன்றி கூறுவது என்று ஒன்றும் புரியவில்லை. நன்றி சொல்லவே வார்த்தை இல்லை!

    உங்களுக்கு திருமலையின் அசட்டுத்தனம் நக்கலாகவும், ரசிக்க கூடியதாகவும், இமிடேட் செய்ய தகுந்ததாகவும் இருப்பதை கண்டு, உங்கள் மீது பொறாமை படுவதா அல்லது பரிதாபம் கொள்வதா என்று ரொம்பவே குழப்பமாக இருக்கிறது. ஏதோ நல்லா இருந்தா சரி!

    இடையில் ரவி வந்து தர்க்க பூர்வமாய் ஏதோ சொல்லி குட்டையை கலக்கியது மட்டும் பிடிக்கவில்லை. ஏன் தான் அவருக்கு இந்த கெட்ட எண்ணமோ! எத்தனை முறை சொன்னலும் புரிவதில்லை.

    Anyway I enjoyed it, my sincere thanks to you also!

    anbuLLa vasanth

  15. //. I thought being a long time Thughlak reader Raghavan sir would have understood the pun intended in my post.//

    பொன் எழுத்துகளில் பொறிக்க வேண்டிய வரி! இந்த நூற்றாண்டின் பஞ்ச் லைன் இதுதான்.

  16. வசந்த்… என்னுடைய சாரி! அடுத்தமுறை பின்னுட்டமிடும்போது கவனமாக இடுகிறேன் 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.