Monthly Archives: திசெம்பர் 2004

மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் – ஞாநி

thatstamil.com: ராஜீவ் ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் உள்துறை இணை அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்டது என்று கருதப்பட்ட ஆயுத சரக்குப் பெட்டகம் டெல்லி விமான நிலையத்திற்கு ஆப்கானிஸ்தனிலிருந்து வந்தது. விமான நிலைய காவல் துறை இதை சோதனை போட்டுக் கொண்டிருந்தபோதே அதை ‘ரா’ உளவுத்துறை அதிகாரிகள் வந்து தங்களுக்கானது என்று எடுத்துச் சென்று விட்டார்கள். அந்த பெட்டகத்தில் இருந்த ராக்கெட் லாஞ்சர் போன்ற சில ஆயுதங்கள் அடுத்த சில வாரங்களில் பஞ்சாபில் ஒரு தீவிரவாத குழுவால் பயன்படுத்தப்பட்டன.

அவை வெடித்த சமயம்தான் நடாளுமன்றத்தில் பஞ்சாப் மாநில நெருக்கடி நிலை நீடிப்புக்கு ஒப்புதல் தீர்மானம் நிறைவேற வேண்டிய நாள். ஒப்புதல் தரப்பட்டுவிட்டது. இந்த ஒப்புதலுக்காக உளவுத்துறை ஏற்பாடு செய்த வேலை இது என்று அப்போது பத்திரிகையாளர் திரேன் பகத் அம்பலப்படுத்தினார். (பின்னால் அவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.) அது பற்றி அவையில் கேள்வி எழுந்ததும், ப.சிதம்பரம் ஓர் அரசு தேசப் பாதுகாப்புக்காக சில விஷயங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். அவற்றைப் பற்றி அவையில் விவாதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக சொன்னார். அத்துடன் நம் பிரதிநிதிகள் அதை விட்டுவிட்டார்கள். எதெல்லாம் அரசு ரகசியம் பார்த்தீர்களா? தீவிரவாதிகளுக்கு எதிரி நாடுகள் மட்டும் அல்ல நம் அரசே கூட உதவி செய்யும் என்ற விசித்திரங்கள் அரசு ரகசியம்தானே.

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அறிவுத்திறன் குறைந்தவர்களுக்குத்தான் நினைவாற்றலும் குறைவாக இருக்கும். உரையாடல் சொற்பொழிவு, தகவல்கள், காதில் கேட்பது, படிப்பதை நீண்டநாள் நினைவில் வைத்திருக்கும் திறன் எனக்கு உண்டு. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் நடந்த உரையாடல் விவரங்களை நான் எனது நினைவாற்றல் மூலம் மீண்டும் வெளியிட்டேன்.

ஆங்கிலம் இந்தியர்களை உயர்த்தியதா?

இதுவரை வெளிவராத Thanks to Dinamani Kathirபாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு என்னும் சுரேஷ் கண்ணனின் பதிவைப் படித்தேன். இந்த வார தினமணிக்கதிரில், 22 பிப்ரவரி 1910-இல் விஜயாவில் எழுதிய கட்டுரையின் சாம்பிள் கொடுத்திருக்கிறார்கள்.

கதிரில் இருந்து:

பாரதி ஆசிரியராக இருந்த ஒரே நாளிதழான “விஜயா’வில் வெளிவந்த, இதுவரை நூல் வடிவம் பெறாத கட்டுரை இது. டிசம்பர் 5 காலை, கோவை பாரதி வித்யா பவனில் வெளியிடப்படும் “பாரதி – விஜயா கட்டுரைகள்’ என்னும் நூலிலிருந்து “கதிர்’ வாசகர்களுக்காக முன்னோட்டமாக இங்கு வெளியிடப்படுகிறது. நூலின் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி. நூலின் 25 பக்க அளவிலான விரிவான முன்னுரையில் தன் தேடல் முயற்சியையும் தொகுத்தெடுத்த முறையினையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் அவர். “காலச்சுவடு’ வெளியிட்டுள்ள இந்நூலின் மொத்தப் பக்கங்கள் 440; விலை ரூ. 225.

நன்றி: Dinamani.com – Kadhir

அரை குறை சிந்தனைகள்

‘வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது’ என்றார் முன்னாள் ரஜினி. தமிழக Commando ‘மனிதன்’ திரைப்பட வெள்ளி விழாவின் போது அவ்வாறு சொற்பொழிவாற்றவில்லை.

ஆபாசத்தை வளர்க்க வேண்டாம் என்கிறார் ஜெயலலிதா. ‘ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி‘ நடித்தவுடன் ஜெயலலிதா சொல்லியிருந்தால் — கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையே இருக்கும் லஷ்மண் ரேகாவை விளக்கியிருப்பார்.

‘உள்ளே வெளியே’, ‘அண்ணாமலை’ என்று அரை நிர்வாண காட்சிகள் வந்தாலும், இன்னும் lesser known mortals படமெடுத்தால் மட்டுமே பிரச்சினை கிளம்புகிறது.

காதல் அரங்கம் படம் என்பது காமத்தை பற்றி மக்கள் புரிந்துகொண்டு அதன் பிடியிலிருந்து வெளிவர வேண்டும் என்ற ஒரு கல்வியை வெளிப் படுத்தும் விதத்தில் உருவாகி இருக்கிறது என்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன்.

இது போன்ற பேட்டிகள் படத்தை விநியோகிப்பதற்கு உபயோகப்படும். கமல் நடித்திருந்தால் முத்த காட்சி எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் ஆத்மதிருப்தி படம் என்றால் இன்னும் வளைவு சுளிவுகள் காட்டவேண்டியிருக்கும். ஆபாசம் எட்டிப்பார்க்காவிட்டாலும், கமல் படங்களுக்கு கண்டனங்கள் கிளம்பும்.

விகடனில், ‘‘என்ன சார் இது? கமல்ஹாசன்னா டிபனுக்கு கொஞ்சம் செக்ஸ், மத்தியான உணவுக்கு அப்புறம் கொஞ்சம் செக்ஸ், சாயங்காலம் ஜலக்கிரீடை, அப்புறம் தூங்கப் போறதுக்கு முன்னால இன்னும் நெறைய செக்ஸ்… அப்பிடினு நெனச்சுண்டு கிட்ட வந்து பாத்தா, ரொம்ப ஏமாற்றமா இருக்கு!” என்றாராம் பாலகுமாரன்.

ஐம்பதிலும் ஆசை வரும் என்பது போல் மனவொற்றுமையைத் தேடித் தேடி அலைந்து கடைசியில் ஆதர்ச துணையை (கௌதமி?) கண்டுபிடித்திருக்கிறார். நிம்மதியான மனநிலை படைப்பாளிக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது வழக்காடுமன்ற தலைப்புக்குரிய மேட்டர். அங்கு செல்லாமல், மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நாம் காண்பது ரசிக்கத்தக்க ஆபாசமா அல்லது அருவருக்கத்தக்க கவர்ச்சியா என்றே தொடர்ந்து யோசிக்கலாம்.

திரைப்படங்களாவது பரவாயில்லை. வீடியோவிலோ, விசிடியிலோ பார்க்கும்போது குறிப்பிட்ட இடங்களை ஓட்டி சுய தணிக்கை செய்துவிடலாம். ஆனால், சினிமாச் செய்திகளைக் காண விழையும் வலைவாசகனின் இடைமுகம் எவ்வாறு இருக்க்கிறது என்று பார்த்திருப்பீர்கள். தட்ஸ்தமிழ், வெப்-உலகம் போன்ற தளங்களில் soft-porn படங்கள் தூவப்பட்டிருக்கும். இலக்கிய பக்கம், அரசியல் செய்திகள் என்று எங்கு சென்றாலும், ‘என் இடையைப் பார்; என் தொடையைப் பார்’ என்று இடது பக்கங்களிலும், பேனர்களிலும் கதாநாயகிகள் க்ளிக்க கூவுகிறார்கள்.

எப்பொழுதாவது எட்டிப் பார்க்கும் மேனேஜரும், நமுட்டுச் சிரிப்போடு ‘வேலையை முடிச்சா சரி’ என்று சென்று விடுகிறார். வீட்டில் நிலைமை இன்னும் மோசம். ‘ராத்திரி முழிச்சிருந்து இது என்ன வேடிக்கை?’ என்று வினா. நான் இலக்கியம்தான் படிக்கிறேன் என்பதை நம்ப மறுக்கும் பக்க அமைப்புகள். நானறிந்த இணையத்தளங்களில் சென்னைஆன்லைன்.காம் மட்டும் தேவலாம்.

செக்ஸ் வாசகர்களைக் கூட்டி வருகிறது.

சில ஆங்கில சினிமாச் செய்திகள் வழங்கும் தளங்களின் வலைமுகங்களையும் பாருங்கள்:

  • E!

  • IMDB

  • Hollywood

  • AOL

    ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லாருமே கவர்ச்சிப் படுத்துவதில்தான் பிழைக்கிறார்கள். ஹாலிவுட் அந்தரங்க செய்திகளை பரபரப்பாக்கினாலும், நடிகைகளின் எசகிபிசகான போஸ்டருடன் வலையிடுவதில்லை. தமிழ் வலைத்தளங்கள் பெரும்பாலும், கவர்ச்சிப் படம் இல்லாமல் செய்திகளே வெளியிடுவதில்லை. ஆர்.எஸ்.எஸ். புண்ணியத்தால் இது மட்டுப்படலாம்.

    (கொங்கு-ராசா சொன்னதின் மூலம்) கிருபாவின் வலைப்பதிவிற்கு திடீரென்று நூற்றுக்கணக்கில் பின்னூட்டங்கள் வருவது தெரிந்து கொள்ளலாம்.

    Sex sells.

    த்ரிஷாவின் குளியலை கண்டனம் செய்யவும் அந்த ஹோட்டலில் தங்கிய பிற நடிகைகளின் வீடியோக்கள் கிடைக்குமிடத்தைத் தெரிந்து கொள்ளவும் குடும்பத்தை வம்புக்கிழுக்கவும் நிறைய வாய்ப்புகள். வாய்ப்பு கிடைத்தால் பார்க்காமல் இருப்பாயா, உன் குலப்பெண்ணாக இருந்தால் இதே காமத்துடன் டவுன்லோட் செய்வாயா என்று கேள்விகள்.

    மேல்தட்டு மக்களிடையே மட்டும் புகழ்பெற்றிருந்த மாடல் ‘பாரிஸ் ஹில்டன்‘ இவ்வாறு புகழ் பெற்றார். காதலுடன் எடுத்த முதலிரவு ஒளிப்பதிவை இணையத்தில் வழங்கியதன் மூலம் இமேஜ் அடிபட்டாலும், அப்பாவி பெண் அடைமொழி கிடைத்தது. தொலைக்காட்சித் தொடர் தொடர்ந்தது. பட்டி தொட்டியெங்கும் அறிமுகமாகி வாசனாதி திரவியம், ஆடை வகைகள் என்று அறிமுகம் நடக்கிறது.

    குளியலைறையில் படம் பிடிக்க த்ரிஷாவும், தமிழ்சினிமா.காமில் தொடர் எழுத சிம்ரனும் ஆணையிட்டிருக்கமாட்டார்கள். ஆனால், சிம்ரன் தன்னை ஒரு தலையாகக் காதலித்ததாக கமல் பீற்றிக் கொள்வது போல் அலட்டிக்கவும் மாட்டார்கள்.

    நடிகைகள் பகவத் கீதையின் படி பற்றற்ற நிலையில் தங்கள் நடிப்பைத் தொடர வேண்டும். கொஞ்ச காலம் கழித்து சன் டிவியில் ‘உறவுக்காக’ நடிக்கும்போது கிளிசரின் தேவைப்படாமல், தங்களின் explotation-ஐ நினைத்தே எளிதில் கண்ணீர் அருவிகள் கொட்ட வைக்கலாம்.

  • சொன்னதைச் செய்வோம்!

    லாலூ பிரசாத் யாதவ்:

    பிஹாரில் காட்டாட்சி நடப்பதாக சித்தரித்த ஒரு கார்ட்டூனில் என்னை புலியாக வரைந்திருந்தார்கள். ஆனாலும் அது எனக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால் அதில் நிதிஷ் குமார், எல்.கே.அத்வானி மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானை குரங்குகளாக சித்தரித்திருந்தார்கள்.

    கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி சாங்கிலியானா ‘தினகரனில்’:

    வீரப்பனைக் கொன்றதற்காக அதிரடிப்படை வீரர்களுக்கு பரிசு வழங்குவது சரியல்ல. அவர்கள் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள்.

    ராமதாஸ் ‘தினத்தந்தியில்’:

    சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் மதுப்பெட்டிகள் அதிகமாக விற்பனை செய்ததுதான் தமிழக அரசின் சாதனை.

    வைகோ ‘தினகரனில்’:

    பொடா சட்டத்தைத் திரும்பப் பெற்றதில் எனது வழக்கைப் பொறுத்தவரை எந்தப் பலனும் இல்லை. இதை முன் தேதியிட்டு அமல்படுத்தியிருந்தால் எங்களுக்கு மட்டுமல்ல, சிறையில் வாடுகிற பலருக்கும் பயனளிப்பதாக இருக்கும்.

    காங்கிரஸ் எம்.பி. கே.வி. தங்கபாலு ‘தினமலரில்’:

    காமராஜர் ஆட்சியும் கருணாநிதி ஆட்சியும் ஒன்றுதான். இருவரும் பச்சைத் தமிழர்கள்.

    விஜயகாந்த் ‘தினத்தந்தியில்’:

    என் அரசியல் பிரவேசம் பற்றி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14ந் தேதி அறிவிப்பேன். அதுவரை ஊறுகாயை தொடுவது போல் என் படங்களில் அரசியல் பற்றிய வசனங்கள் தவறாமல் இடம்பெறும்.

    பாரதிராஜா ‘குமுதத்தில்’:

    பாடப்புத்தகங்கள், தையல் மெஷின்கள் வழங்குபவரெல்லாம் தலைவர்கள் ஆகிவிட முடியாது.

    கமல்ஹாசன் ‘தினகரனில்’:

    பஸ், கிஸ், பிளைட் போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைக்கு தமிழாகி விட்டது. எனது அடுத்த படத்துக்கு பாதி இங்கிலிஸ், பாதி தமிழில் பெயர் வைக்கலாம் என்று எண்ணி உள்ளேன்.

    அஜீத் ‘குங்குமத்தில்’:

    நம்பர் ஒன் இடத்தை பிடிச்சே தீருவேன். அதை யாரும் தாண்டக் கூடாது. மீறி தாண்டிப் போறதா இருந்தா என்னோட பிணத்தைத் தாண்டித்தான் போகணும்.

    16வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் நடந்திருப்பதைப் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ‘தினகரனில்:

    போகிற போக்கை பார்த்தால் வரும் மாதங்களில் அதிமுக அமைச்சரவை மாற்றம் வெள்ளி விழா கொண்டாடும் போல தெரிகிறது.

    இந்துத்துவமும் தேசியவாதமும் ஒன்றே என்று பாஜக கூறியதற்கு சி.பி.ஐ. தலைவர் ஏ.பி. பரதன் பதில்:

    தேசியவாதம் என்ற பெயரில்தான் ஹிட்லர் உலகம் முழுவதும் நாசம் விளைவித்தார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி:

    மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை வேறு விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நான் மக்களின் எதிர்பார்ப்புகளின்படி நடந்தால் பைத்தியமாகி விடுவேன்.

    பா.விஜய் ‘ஆனந்த விகடனில்’:

    வைரமுத்துவை ஜெயிக்க வேண்டும் என்பதைவிட, அவருடைய சாதனையை மிஞ்ச வேண்டும் என்ற வேகம் எனக்குள் இருக்கிறது. அனால் வைரமுத்துவைவிட என்னை ஆச்சரியப்படுத்துவது வாலிதான். அவர் எம்.ஜி.ஆரிலிருந்து தனுஷ் வரைக்கும் ஈடு கொடுக்கிறார்.

    சத்யராஜ் ‘ஆனந்த விகடனில்’:

    எல்லா சாமியார்களும் காமெடியன்கள்தான். அதில் குட்டிச்சாமி பெரிய காமெடியன்.

    தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் ‘தினமணியில்’:

    முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதை தற்போது எதிர்க்கும் முதல்வர், அந்த கோரிக்கையை வலியுறுத்தி நடந்த வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்றது ஏன்?

    ப்ரீத்தி ஜிந்தா:

    என்னை சக நடிகர்களுடன் இணைத்துப் பேசுகிறவர்களை அடிக்க வேண்டும். இதை மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன் – என்னுடன் நடிப்பவர்களை யாருடனும் நெருங்கிப் பழகமாட்டேன்.

    நமீதா ‘குமுதத்தில்’:

    நாடு முழுக்க வேலையில்லாத் திண்டாட்டம். அதைப் பத்தி யோசிக்காமல் என்னப் பத்தி யோசிச்சா என்ன பிரயோஜனம்?

    லாலூ பிரசாத யாதவ்:

    இந்திய ரயில்வே கடவுள் விஸ்வகர்மாவின் பொறுப்பில் இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பும் அவர் கையில்தான். பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவர்தான். நானில்லை.

    நன்றி: இந்தியா டுடே

    மகள் பிறந்தநாள்

    வீட்டின் நட்சத்திரத்துக்குப் பிறந்தநாள்.

    cindrella girl

    Happy Birthday in Barbie

    4th Birthday @ Home

    Cindrellaa Paavaadai – Imported from Chennai :> 

    Cindrellaa Paavaadai – Imported from Chennai :> Posted by Hello

    2004 – 4 Years – Barbie 

    2004 – 4 Years – Barbie Posted by Hello

    Happy Birthday Sanjitha 

    Happy Birthday Sanjitha Posted by Hello

    அன்பாதவன்

    என் நிறத்தைப் பார்த்த மாத்திரத்தில்

    அசூயைக் கொள்கிறாய்

    சாதியை வெளிச் சொல்லாமல்

    கருப்பு எனக் கேலி பேசுகிறாய்

    மூச்சுக் காற்றின் தீட்டும் படாமல்

    இருக்கிறாய் கவனமாய் நகர்ந்து

    என் நிழலையும்

    அருவருப்போடு பார்க்கிற

    உனக்கு நான் சொல்ல விரும்புவது

    இதுதான்

    முகம் கைகால் முதுகென

    புறப்பாகங்களைக் கொண்டு

    எடை போடாதே என் நிறத்தை

    நீண்டு விரைத்த என் குறியைப் பார்

    ஒருமுறை பார்த்தால்

    மாறக்கூடும் உன் முடிவுகள்

    குறியின் முனையைப் பிதுக்கத் தெரியும்

    உனக்குப் பிடித்த சிவப்பழகு

    காலங்காலமாய்

    சாதிப் பெருமை பீற்றுமுன்

    நாவால் வருடிப் பார்

    பொங்குமெனது ரவுத்திரம்

    வெண்மையாய்

    சுகிர்தாராணி

    நான் திகைக்க நினைக்கையில்

    அந்தரங்கம் அச்சிடப்பட்ட

    புத்தகத்தையே படித்து முடித்திருந்தேன்

    என் கண்களின் ஒளிக்கற்றைகள்

    முன்னறையில் உறங்குபவனின்

    ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன

    கோப்பை நிறைய வழியும் மதுவோடு

    என் உடல் மூழ்கி மிதந்தது

    கூசும் வார்த்தைப் பிரயோகங்களை

    சன்னமாய்ச் சொல்லியவாறு

    சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை

    பறவைகளின் சிறகோசை கேட்டதும்

    என்னை… என்னிடத்தில் போட்டுவிட்டு

    ஓடிவிட்டது இரவு மிருகம்