Monthly Archives: நவம்பர் 2004

Young Arafath 

Young Arafath Posted by Hello

Broken Forehead thoughts 

Broken Forehead thoughts Posted by Hello

மறுமலர்ச்சி நன்றிப் பாடல்

முதல்வருக்கு தமிழ் திரைப்பட பிரமுகர்கள் எடுத்த விழாவின் எதிரொலியாக…

ந்னறி: Music India OnLine – Marumalarchi

பெண்:

நன்றி சொல்ல உனக்கு

வார்த்தை இல்லை எனக்கு

நான்தான் மயங்குறேன்

காலமுள்ள வரைக்கும்

காலடியில் கிடக்க

நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச

தவத்தால நீ கிடைச்சே

பசும்பொன்ன பித்தளையா

தவறாக நான் நெனச்சேன்

நேரில் வந்த ஆண்டவனே….

ஆண்:

ஊரறிய உனக்கு

மாலையிட்ட பிறகு

ஏன்மா சஞ்சலம்

உன்னுடைய மனசும்

என்னுடைய மனசும்

ஒன்றாய் சங்கமம்

—————————-

பெண்:

செவ்விளநி நான் குடிக்க

சீவியதை நீ கொடுக்க

சிந்தியது ரத்தமல்ல

எந்தன் உயிர்தான்

ஆண்:

கள்ளிருக்கும் தாமரைய

கையணைக்கும் வான்பிறைய

உள்ளிருக்கும் நாடியெங்கும்

உந்தன் உயிர்தான்

பெண்:

இனிவரும் எந்தப் பிறவியிலும்

உனைச் சேர காத்திருப்பேன்

ஆண்:

விழிமூடும் இமை போல

விலகாமல் வாழ்ந்திருப்பேன்

பெண்:

உன்னப் போல தெய்வமில்ல

உள்ளம் போல கோவில் இல்ல

தினந்தோறும் அர்ச்சனைதான்

எனக்கு வேற வேலை இல்ல

—————————-

ஆண்:

வங்கக் கடல் ஆழமென்ன

வல்லவர்கள் கண்டதுண்டு

அன்புக்கடல் ஆழம்

யாரும் கண்டதில்லையே!?

பெண்:

என்னுடைய நாயகனே

ஊர் வணங்கும் நல்லவனே

உன்னுடைய அன்புக்கு

அந்த வானம் எல்லையே!

ஆண்:

எனக்கென வந்த தேவதையே

சரிபாதி நீயல்லவா

பெண்:

நடக்கையில் உந்தன் கூடவரும்

நிழல் போலே நானல்லவா

ஆண்:

கண்ணன் கொண்ட ராதையென

ராம்ன் கொண்ட சீதையேன

மடி சேர்ந்த பூரதமே

மனதில் வீசும் மாருதமே

தீபாவளி மலர்கள்

என்னுடைய கதை ‘உங்கள் ஓட்டு ரகசியமானது’ மற்றும் மனைவி வித்யாவின் ‘நிலையை உடைத்துச் செய்த ஏணி’ – இரண்டும் அட்டகாசமான (அஜீத்தின் படம் அல்ல 😉 தமிழோவியம் தீபாவளி மலரில் இடம் பெற்றுள்ளது.

வித்யாவின் ‘என்ன வேண்டும் இவர்களுக்கு’ இ-சங்கமம் தீபாவளி ஸ்பெஷலில் வந்துள்ளது.

என்னுடைய ‘ஆயிரம் வாசல் உலகம்’ விமர்சனமும் இ-சங்கமத்தில் படிக்கலாம்.

படிச்சுட்டு சொல்லுங்க 🙂

ஒரு வதமும், அதன்பின்னும் – என் சொக்கன்

© தினம் ஒரு கவிதை

வீரப்பன் கொல்லப்பட்ட மறுதினம், நான் கோட்டயத்தில் இருந்தேன்.

விடுதி அறையில், செல்ஃபோனில் அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகிக் கீழே வந்தால், வரவேற்புப் பகுதியில் ஏழெட்டு மலையாளச் செய்தித் தாள்கள் அழகாக மடித்துவைக்கப்பட்டிருந்தன.

எனக்கு சத்தியமாய் மலையாளம் படிக்கத் தெரியாது. என்றாலும், அன்றைக்கு எல்லா செய்தித் தாள்களின் முதல் பக்கமும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாய்த் தோன்றியதால், ஆர்வமாய் எடுத்துப் பார்த்தேன்.

ஆச்சரியம். எல்லா ‘முதல் பக்க’ங்களிலும், வீரப்பனின் வண்ணப் புகைப்படம் இருந்தது. பக்கத்தில் ஜாங்கிரி ஜாங்கிரியாய் பெரிய மலையாள எழுத்துகள் – ஏதேனும் பெரிதாய் நடந்திருக்கவேண்டும்.

கர்நாடகாவில் இத்தனை வருடங்களாய் வாழ்ந்துவிட்டதால், சட்டென்று எனக்குத் தோன்றியது, வீரப்பன் இன்னொரு பிரமுகரைக் கடத்திவிட்டான் என்பதுதான். முன்பு ராஜ்குமார், பின்னே நாகப்பா, இப்போது யாரப்பா ?

ஆனால், அந்தச் செய்திகள் எவற்றிலும், வீரப்பனைத்தவிர வேறு யாருடைய புகைப்படமும் இல்லை. ஆகவே, இது கடத்தல் விவகாரம் இல்லை என்று லேசாய்ப் பிடிபட்டது. ஒருவேளை வீரப்பனைப் பிடித்துவிட்டார்களோ ?

இந்த எண்ணம் தோன்றியதுமே, சட்டென்று ‘சாமி’ திரைப்படத்தில் வரும் விவேக் அய்யர்தான் நினைவுக்கு வந்தார். ‘அவரை எப்போ பிடிக்கப்போறேள் ?’, என்றபடி வீரப்பன்போன்ற பாவனை மீசையை அவர் வருடிக்காட்டும் கிண்டல் காட்சியை நினைத்துக்கொண்டபடி, வரவேற்பறையிலிருந்த நண்பரிடம், ‘இது என்ன நியூஸ் ?’, என்று ஆவலோடு கேட்டேன்.

அவர் முகத்தில் ஏனோ சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது, ‘வீரப்பன் வெடிவச்சுக் கொல’ என்று ராகத்தோடு படித்துக் காண்பித்துவிட்டு, ‘வீரப்பனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்’, என்று ஆங்கிலத்தில் விளக்கினார்.

என்னால் அந்தச் செய்தியைச் சட்டென்று நம்பவேமுடியவில்லை, ‘நிச்சயமாய்த் தெரியுமா ? அல்லது, எப்போதும்போல் இன்னொரு வதந்தியா ?’, என்று விசாரித்தேன்.

‘உறுதியான செய்திதான்’, என்றார் அவர், ‘டிவியில் வீரப்பனின் பிணத்தைக்கூட காட்டிவிட்டார்கள்’

நான் மெதுவாகத் தலையாட்டிவிட்டு, என்னுடைய பணி அலுவலகத்தை நோக்கி நடந்தேன். வழியெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள், குழப்பங்கள். வீரப்பனை யார் சுட்டார்கள் ? தமிழக அதிரடிப் படையா, அல்லது கர்நாடகமா ? எங்கே சுட்டார்கள் ? எப்படி ? இந்த மரணத்தால், வீரப்பன் விவகாரத்தில் இதுவரை பதில் தெரியாமலே இருக்கும் கேள்விகள், குழப்பங்களுக்கெல்லாம், விடை கிடைக்காமலேபோய்விடுமா ?

அலுவலகம் வந்தடைந்ததும், அவசரமாக சில ஆங்கிலத் தளங்களுக்குச் சென்று, இதுபற்றிய தகவல்களை வாசித்து அறிந்துகொண்டேன். என்றாலும், அந்தக் கடைசி கேள்விமட்டும் மனதுள் தொக்கி நின்றது.

சிறிது நேரத்தில், நண்பர் பா. ராகவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு, ‘உடனடியாக வீரப்பன்பற்றிய ஒரு முழுமையான நூலைக் கொண்டுவரவேண்டும்’, என்றார். வாழ்க்கை வரலாறுபோல இல்லாமல், அறிமுகம், முக்கிய சம்பவங்கள், கேள்விகள், அலசல் என்பதாக அவருடைய திட்டம்.

உடனடியாக என்றால், மிக உடனடியாக. ஒரு வாரத்துக்குள் எழுதி முடித்து, பத்து நாள்களுக்குள் பிரசுரித்துவிடவேண்டும். வெளிநாடுகளில் இதுபோன்ற ‘லேட்டஸ்ட்’ விஷயங்களை அலசும் நூல்கள் அதிகம். பொதுவாக ஆங்கிலத்தில்மட்டும் செய்யப்படும் இதுபோன்ற முயற்சிகளை, கிழக்கு பதிப்பகத்தின்மூலம், தமிழிலும் செய்துபார்க்கவேண்டும் என்று ராகவனும், பத்ரி சேஷாத்ரியும் விரும்பினார்கள்.

Veerappan Book

என்னதான் தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள் இருப்பினும், அவர்கள் சமீபத்திய செய்திகளில்தான் கவனம் செலுத்துவார்கள், ஆங்காங்கே முந்தைய சம்பவங்கள் அலசப்பட்டாலும், அவற்றில் ஒரு முழுமையான பார்வை இருக்காது. ஆகவே, வீரப்பன் விவகாரத்தைப்பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களின்மத்தியில், இதுபோன்ற நூல்களுக்குத் தேவை இருக்கும் என்று பத்ரி உறுதியாய் நம்பினார்.

அடுத்த இரண்டு நாள்களுக்குள் தேவையான செய்திக் குறிப்புகள், நூல்களைத் திரட்டி, தகவல்களைத் தொகுத்தோம். நான்கு நாள்கள் தூக்கமில்லாமல் உட்கார்ந்து எழுதினேன், ஒரு வாரத்துக்குள் கிட்டத்தட்ட 140 பக்க அளவில் முழுமையான ஒரு நூலை உருவாக்கிவிட்டோ ம்.

குறுகிய அவகாசத்தில் அவசரமாய் எழுதியதுதான். என்றாலும், நூலைக் கூர்மையாகக் கட்டமைத்து, எந்தத் தகவல் பிழையும் ஏற்பட்டுவிடாமலும், சுவாரஸ்யம் குறைந்துவிடாமலும் ராகவனும், பத்ரியும் கச்சிதமாய் எடிட் செய்து செம்மைப்படுத்தினார்கள்.

நாங்கள் எதிர்பார்த்தபடி நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. மின் ஊடகங்கள் நம் வாழ்வை முழுமையாய் ஆக்கிரமித்திருக்கும் இந்தச் சூழலிலும், அச்சுப் புத்தக வடிவில் தகவல்கள், செய்திகள் தொகுக்கப்படுவதற்கான அவசியம் இன்னும் இருப்பது, மீண்டும் உறுதியாகிறது.

(வீரப்பன் : வாழ்வும், வதமும் – என். சொக்கன் – கிழக்கு பதிப்பகம் வெளியீடு – 136 பக்கங்கள் – ரூ 50/-)

நன்றி: Yahoo! Groups : dokavithai

Vikadan Diwali Malar – Deepavali Special 

Vikadan Diwali Malar – Deepavali Special Posted by Hello

தீபாவளி வாழ்த்துக்கள்

நாளை மற்றொரு நாளே என்பது போல் தீபாவளியன்றும் அலுவலகம் சென்று வேலை பார்க்கலாம்; வீட்டிலிருந்து வேலை பார்ப்பதாக சொல்லி சன் டிவி கவனிக்கலாம்.

தீபாவளிக்கான வெடிகள் என்றுமே மனங்கவர்ந்ததில்லை. சஞ்சிதாவின் முதல் பிறந்த நாளுக்கு சென்னை சென்றபோது தீபாவலியாகிப் போனது. வெடிச் சத்தம் கண்டு அவள் அலற, நாங்கள் ஏதோ அனுகுண்டு போடப்படுவது போல் ஒலிகள் புகா அறை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இரவு பத்து மணிக்கு மேல் வெடிக்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், தொடர்ந்து காசைக் கரியாக்கிக் கொண்டிருந்தார்கள். நான் வலைப்பதிவில் விடாமல் பைட் நிரப்புவது போல் அவர்களுக்கும் அது மனமகிழ்வைக் கொடுத்திருக்க வேண்டும்.

இப்பொழுது சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் விளம்பரம் வேறு படுத்துகிறது. நாய்கள் அச்சமுறும் என்றெல்லாம் சொல்கிறார்கள். மனேகா அமைச்சராக இல்லாதபோதும் பிராணிகளுக்குக் கனிவு கிடைக்கிறது.

தீபாவளி என்றால் பிடித்திருப்பது புத்தாடைகளும், இனிப்புகளும். சியர்ஸும், வால்-மார்ட்டும் சேல் போடும்போதெல்லாம் புத்தாடைகள் எடுப்பதால் கொஞ்சம் மதிப்பு குறைந்துதான் போனது. இருந்தாலும் புதுசு என்றுமே புதுசுதான். இனிப்புகள் அமெரிக்காவின் உணவுநலப் பிரசாரங்களினால் பயத்துடன் கும்பிடு போட வைத்திருக்கிறது.

‘சோயா’ விளம்பரமொன்றில் ‘சாப்பிடு ராஜா… சாப்பிடு…’ என்று வாயில் விதம் விதமாகத் திணிப்பது போல், விருந்து வந்தால்தான் காலா ஜாமுன், சம்-சம், பால் கோவா உண்ண மனோபலம் இருக்கிறது. தீபாவளி புது ட்ரெஸ்ஸை நண்பர்களிடம் காட்டும்போது ஏற்படும் ‘இதுதானா…’ என்பது போல், பார்ட்டிகளில் பட்டும் படாமல் பேசிக் கொள்வது சோர்வைத் தரலாம்.


போன வருட விகடன் தீபாவளி ஸ்பெஷலைப் புரட்டியதில் ஜெயமோகனிடம் கேட்ட சில கேள்விகள்:

  • எழுத்துமூலம் எதை அடைய நினைக்கிறீர்கள்?
  • சிறுபத்திரிகை உலகில் சமீபமாக சண்டை சச்சரவுகள் அதிமாகியிருக்கிறதே… சமீபத்தில் ‘சொல்புதிது’ பத்திரிகையில் வந்த ‘நாச்சார் மட விவகாரம்’ கதையில் சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டிருந்தார்கள் என்றுகூட சர்ச்சை எழுந்ததே..”
  • உங்கள் நூல்வெளியீட்டு விழாவில் பேசும்போது ‘இளையபாரதி நூல்கள் வெளியீட்டு விழாவில் கருணாநிதி அவர்களுக்கு இலக்கியவாதிகள் சிலர் காவடி தூக்கி விட்டார்கள்’ என ஆவேசமாகப் பேசி இருக்கிறீர்கள். அதோடு கலைஞரின் படைப்புகளை நிராகரித்தும் பேசி இருக்கிறீர்கள். என்ன கோபம் அது?”

    அப்படியே கொஞ்சம் புத்தம்புதிய, என்னுடைய ஃபேவரிட் மைக்ரோசாஃப்டின் தேடலை முடுக்கிப் பார்த்ததில் கிடைத்தவை:

    1. Lifcobooks.com – Diwali Celebrations

    3. Namakkal kavinjar Ramalingam Pillai pATalkaL- தீபாவளி எனும் திருநாள்:
    “தனித்தனி வீட்டின் தரைமெழுகி
    தரித்திரப் பீடையைத் தலைமுழுகி,
    மனத்துயர் யாவையும் மறந்திடுவோம் ;
    மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம்.

    உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்
    உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்
    புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.
    புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம்.

    கட்சிச் சண்டைகள் பட்டாசைக்
    கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின்
    பட்சம் வந்த மனத்துடனே
    பழகுவம் எல்லாம் இனத்துடனும்.

    ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம் ;
    ஒருவருக் கொருவர் உபகாரம் ;
    இவ்வித வாழ்வே தினந்தோறும்
    இருந்திட வேண்டிநம் மனம்கோரும்.”


    சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’: “விகடன் தீபாவளி மலர் மறுபடியும் வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. எங்கள் இளமைக்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் தீபாவளி என்றால் அதிகாலை எண்ணெய்க் குளியல், புத்தாடைகள், பட்சணங்கள், பட்டாசு, தீபாவளி ரிலீஸ் படங்களுடன், தீபாவளிமலரும் பண்டிகையின் ஓர் அங்கம். ஏஜெண்டிடம் சொல்லி வைத்து, உறை பிரிக்காமல் முகப்புப் படத்தில் கண்ணாடி பேப்பருடன் வரும் மலரை முதலில் கையில் வைத்து வாசனை பார்ப்பதே இன்பமான தீபாவளி அனுபவம். போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். நான் முதலில் பொம்மை பார்த்துவிட்டு, ‘இவர்கள் எல்லாம் சண்டைபோட்டு ஓயட்டும்… நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம்… எங்கே போகிறது?’ என்று விட்டுப் பிடிப்பேன். யாரார் வீட்டில் மலர் வாங்கி இருப்பார்கள் என்பது தெருவுக்கே தெரியும். ‘ஒரு க்ளான்ஸ் பார்த்துட்டு, இதோ இப்பக் கொடுத்துர்றேன்’ என்று கூசாமல் இரவல் வாங்கிச்செல்வார்கள். கொடுத்தது வீதியெங்கும் ஒரு ரவுண்ட் முடித்துவிட்டு – தற்செயலாக தெற்குச் சித்திரை வீதிக்குப் போனால், அங்கே நம் கையெழுத்துடன் மலர் ஓடிக் கொண்டிருக்கும். பொலிவிழந்து, பக்கங்கள் காது மடங்கி, சில தேவ தேவதைகள் நீக்கப்பட்டு, ஒரு மாதம் கழித்துப் பிரசவத்துக்கு வரும் மகள் போல அல்லது ஹாஸ்டலிலிருந்து லீவுக்கு வரும் மகன் போல் திரும்பி வரும்.

    என் நினைவில் தேவனின் மல்லாரிராவ் கதையோ, துப்பறியும் சாம்பு கதையோ ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். சில்பியின் தெய்வீகச் சித்திரங்கள், கோபுலுவின் முழுப்பக்க ‘நார்மன் ராக்வெல்’ ரக ஓவியம், ராஜுவின் நகைச்சுவை ஓவியங்கள் இவையெல்லாம் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளன.

    விகடன் பவழவிழா மலர் போட்ட போது, அதற்குக் கிடைத்த ஆதரவைப் பார்த்து நானும் பிரமித்தேன். இதுதான் தீபாவளி மலரை மறுபடி கொண்டுவரும் தைரியம் தந்திருக்கிறது. சில கலாசார அடையாளங்கள் மறைந்தாலும் திரும்பி வந்துவிடும் என்று மக்லூஹன் சொன்னது நினைவுக்கு வருகிறது.”

  • appusami.com

    அழைப்பிதழ் தலைவலிகள்ரா கி ரங்கராஜன்:

    நான் பணியாற்றிய இடத்தில், அச்சகத் தொழிலாளி ஒருவரின் மகளுக்குத் திருமணம். நேரில் பத்திரிகை கொடுத்து அழைத்தார். ஒரு நண்பருடன் நான் போயிருந்தேன். நண்பரிடம் ரகசியமாக, ‘என்ன கொடுக்கலாம்’ என்று கேட்டேன். அவர் என் காலை ஒரு மிதி மிதித்து, ‘கம்மென்றிருங்கள். இவர்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு நாம் வந்ததே இவர்களுக்குப் பெரிய கெளரவம். எதுவும் தர வேண்டாம்,’ என்றார். கொடுப்பதாக இருந்த பத்து ரூபாயைப் பையில் திரும்பப் போட்டுக்கொண்டு, தொழிலாளி அன்புடன் நீட்டிய கூல்டிரிங்க்கைக் குடித்துவிட்டுத் திரும்பினேன்.

    அடுத்த மாதம், ஏவி.எம். சரவணனின் வீட்டுக் கல்யாணத்திற்குப் போக வேண்டியிருந்தது. அதே நண்பருடன் செல்கையில், அதே ரகசியக் குரலில், அதே கேள்வியைக் கேட்டேன். ‘கம்மென்றிருங்கள். இவ்வளவு பெரிய கல்யாணத்தில், இவ்வளவு பெரிய மனிதர்கள், இவ்வளவு பெரிய பரிசுகளுடன் வந்திருக்கும்போது, நாம் என்ன கொடுத்தாலும் எடுபடாது’ என்றார்.

    அப்போதும் பேசாமலே திரும்பிவிட்டேன். ஆனால் அதன்பிறகு அந்த நண்பருடன் எந்தத் திருமண விழாவுக்கும் போவதில்லை. தோன்றிய இடத்துக்குப் போகிறேன். தோன்றியதைக் கொடுக்கிறேன். வந்து விடுகிறேன்.



    உபாத்தியர்கள்தேவன் :

    சாதாரணமாக மாணவர்கள் எழுதும் கட்டுரைகளில் பெரும் பகுதியும் உபாத்தியாயர்களைப் பரிகசிப்பதாகவே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரண உபாத்தியாயர்களை ஆதரித்து, அவர்கள் கஷ்ட நிஷ்டூரங்களைச் சரிவர எடுத்துச் சொல்ல ஒருவரும் முன்வராமைதான். அவர்களைப் பூராவும் ஆதரித்துப் பேச நான் சக்தியற்றவனாக இருந்த போதிலும் மேற்படி பிராம்மணனின் மோர்க் குழம்பு வரிசையையாவது கைக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.

    மேலும் உபாததியாயர் ஒருவர். எதிரில் உட்காருபவர் ஐம்பது பேர். அவர் உங்களைப் பற்றி ஓர் அபிப்பிராயம் கொள்வதற்குள், அவரைப்பற்றி ஐம்பது அபிப்பிராயங்களைச் சொல்கிறீர்களே, இது நியாயமா? ஒருவரைப் பரிகசிப்பதோ, ஏளனம் செய்வதோ மிகவும் இலகுவான காரியம்.

    ஆனால், ஒவ்வொரு மாணவனும் தானும் உபாத்தியாயரின் நாற்காலியில் பின் ஒரு சமயம் உட்கார தேரிடலாம் என்று மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்பானானால் உபாத்தியாயர்களிடம் அநுதாபங்கொள்ளாமல் இருக்க முடியாது.



    கல்கியின் எழுத்துக்கள்முசிரி துகாராம் :

    வாழ்க்கையில் கஷ்டத்தை வெறுக்கும் மனிதர்கள் கலைகளில் மட்டும் சோக ரஸத்தை அநுபவிப்பதில் ஏன் இவ்வளவு இன்பமடைகிறார்கள் என்பது சிருஷ்டி ரகசியங்களில் ஒன்று.

    துகாராம் பாடி முடித்ததும், ”இந்த ஒரு பாட்டுப் போதுமே!” என்று நான் வாய் விட்டு சொன்னேன். ஆனால், என் குரலின் சப்தம் இவ்வளவு பெரியதா என்று சந்தேகம் தோன்றியது. அப்புறம் விசாரித்தால், ஏக காலத்தில், என் அருகில் இருந்தவர்கள் ஐந்தாறு பேரும் அப்படியே சொன்னார்கள் என்று தெரிந்தது. வாய் விட்டு சொல்லாத இன்னும் இரண்டு மூன்று பேரும் ”நாங்களும் அப்படித்தான் நினைத்தோம்” என்றார்கள்.

    மேற்படி பாட்டு குந்தலவராளியில் அமைந்தது. சாதாரணமாய், இந்த ராகத்திலுள்ள பாட்டுக்கள் இங்கிலீஷ் நோட்டுக்கள் போல் தொனிக்கும். ஸ்வரங்களைத் தனித்தனியாகப் பிரித்து உதிர்த்து விடலாம் போல் இருக்கும். அத்தகைய ராகத்தில் இவ்வளவு கமகமும் குழைவும் கொடுத்து இவ்வளவு உருக்கத்தை ஊட்டிப் பாடியிருப்பது முசிரி ஒருவருக்குத் தான் சாத்தியம் என்று சொல்லலாம்.



    ஷபாஷ் ஷாப்பிங்பாக்கியம் ராமசாமி:

    – கணவன்மார் விரும்பும் டெலிபோன்

    – குந்தி மா ப்ளாங்கட் (போர்வை)

    – வுல்·ப் மேன்ஸ் பவர் பவுடர்

    – மாஜிக் ஷெல்·ப்

    – மார்பு என்ஹான்ஸனர்

    Water Melon Arts – Happy Birthday Flowers – Floris…

    Water Melon Arts – Happy Birthday Flowers – Florist Dreams Posted by Hello

    Water Melon Arts – Rose Arrangements – Floral 

    Water Melon Arts – Rose Arrangements – Floral Posted by Hello