Monthly Archives: நவம்பர் 2004

Who was Sankararaman Anantakrishnasharma ? 

Who was Sankararaman Anantakrishnasharma ? Posted by Hello

How a ‘literary’ genius supposedly finds time from…

How a ‘literary’ genius supposedly finds time from his actual employment? Posted by Hello

பொய்விளம்பி

ஜெயேந்திரரின் கைது அனைவரும் அறிந்ததே. அதையட்டி நமக்கு மட்டுமே கிடைத்த சில உண்மையில்லாதத் தகவல்கள்.

— ஜயேந்திரருக்கும் விஜயேந்திரருக்கும் கடும்போட்டி நிலவுவதாக கூகிள் சொல்லுகிறது. ஜயேந்திர (சரஸ்வதி) என்று தேடினால் 22,100 பக்கங்கள் கிடைக்கும். விஜயேந்திர (சரஸ்வதி) என்றால் 19,000 பக்கங்களைப் பெறுவதால், வெகு விரைவிலேயே ‘பெரியவரை’ முந்தி விடுவார் என்று கூகிளறிந்த வட்டாரங்கள் எழுதுகிறது.

— ஜயேந்திரர் சமீபத்தில் ‘சத்ரபதி’ படத்தை ரசித்திருக்கிறார். ‘நம்மை மாதிரியே முதல் பாதியில் யார் என்பதை காட்டிக் கொள்ளாமல், பிற்பகுதியில் உலகுக்கு வெளிக்கொணருவது நன்றாக இருக்கிற’தாக சக சிறைக் கைதிகளிடம் சொன்னதாகத் தெரிகிறது.

— இந்து முண்ணனி தலைவர் இராம. கோபலன் சிறையில் ஜயேந்திரரை திடீர் விஸிட் அடித்தார். சந்தித்தபொழுது ஆதி சங்கராச்சாரியார் எழுதிய கீதையின் உரையை படிக்கக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

— ‘அட்டகாசம்’ சரணின் அடுத்த படத்தில் இரட்டை வேடம் கட்ட பொருத்தமான நடிகரைத் தேடி வருவது நாம் அறிந்ததே. கதையைக் கேட்ட ‘ஜயேந்திரர்’ இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், ‘இந்து ஞான மரபில் ஏழு தரிசனங்கள்’ கிடைக்கும் விதமாக திரைக்கதை அமைக்கும்படியாக சொல்லியிருப்பதால் உதவி இயக்குநர்கள் மண்டை உடைத்துக் கொள்கிறார்கள்.

— தனது அடுத்த அம்பலத்தை விரைவாக வெளியிடுவதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிவிப்பார். “சுய மரியாதைத் தோழர்கள் அனைத்து ஹிந்து மத அமைப்புக்குள்ளும் ஊடுருவி ‘விடுதலை’ அளிக்கும் கடைசி நிலையில் இருக்கிறார்கள். நமது முதன்மைத் தலைவர் மாட்டிக் கொண்டிருப்பதை இந்த நேரத்தில் அம்பலப் படுத்தினால் — ‘குருதிப்புனலில்’ கமல் செய்யாத தவறை நாம் செய்தவர்களாகும் அபாயம் இருக்கிறது” என ரகசிய சுற்றறிக்கையில்

எழுதியுள்ளார்.

— முதல்வர் ஜெயலலிதா ‘நக்கீரனை’ எட்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தின் தமிழ் துணைப்பாடமாக ஆக்கப் போகிறார். உண்மை, திறனாய்வு, எளிய தமிழ், அரசல் புரசலான செக்ஸ் செய்திகள் போன்ற டீனேஜ் மக்களுக்கு ஏற்ற விஷயங்களை செம்மொழியில் சொல்வதால் இந்த அந்தஸ்து கிடைக்கிறது. இதன் மூலம், எதிர் பிரச்சாரத்தில் இயங்க நினைக்கும் ‘நக்கீரனும்’ தன் பக்கம் சேர்ந்து விடும் என்று நம்புகிறார்.

——————–

– பாஸ்டன் பாலாஜி

பிகு: முழுக்க முழுக்க கற்பனை செய்திகளே 🙂

Eraa. Murugan 

Eraa. Murugan Posted by Hello

Kanniyakumari Thiruvalluvar 

Kanniyakumari Thiruvalluvar Posted by Hello

எனது வெண்பாப் புராணம் – என். சொக்கன்

© தினம் ஒரு கவிதை

Eraa Murugan - Thanks: Kizhakkuஎன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘ஒரு பச்சை பார்க்கர் பேனா’வின் முன்னுரையில், இரா. முருகன் இப்படி எழுதினார் :

‘என். சொக்கன், புதுக்கவிதை எழுத ஆரம்பித்து – எல்லோரும் இப்படித்தான் தொடங்குகிறோம் – சிறுகதைக்கு வந்தவர்’

இந்த வாக்கியம் ஓரளவு உண்மைதான். என்றாலும், நான் எழுத ஆரம்பித்தது புதுக்கவிதை அல்ல. மரபுக் கவிதைதான்.

பத்தாம் வகுப்பில் எங்களுக்கு இலக்கணப் பாடம் நடத்திய ஆசிரியர் பெயர் திரு. பெ. செ. சுந்தரம். அவர்தான் வெண்பா இலக்கணத்தைப் புரியும்படி சொல்லித்தந்து, கூடவே எங்களுக்கு ஒரு பயிற்சியும் கொடுத்தார்.

www.kalanjiyam.comஅதாகப்பட்டது, ஏதாவது ஒரு திருக்குறள் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொள்வது. புத்தக கிரிக்கெட் விளையாடுவதுபோல், அதில் சடாரென்று ஒரு பக்கத்தைப் பிரித்து, அங்கே தட்டுப்படுகிற குறளை, ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்வது.

பிறகு, அந்தக் குறளை அக்குவேறு ணிவேறாய்ப் பிரித்து, நேர் – நேர் தேமா, நிரை – நேர் புளிமா என்றெல்லாம் பட்டியலிடவேண்டும்.

இப்போதுதான், முக்கியமான கடைசிக் கட்டம். நாங்கள் தேர்ந்தெடுத்த அந்தத் திருக்குறளில், அவர் சொல்லிக்கொடுத்த வெண்பா இலக்கணம் சரியாக வருகிறதா என்று சோதிக்கவேண்டும். அதாவது, வெண்பா இலக்கணப்படி எங்கேனும் தளை தட்டுகிறதா என்று பார்க்கவேண்டும்.

ஒருவேளை தளை தட்டினால், நேராக அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு, ஆசிரியரின் அறைக்கு வரவேண்டும். தளை தட்டாமல், எல்லாம் சரியாக இருக்குமானால், மீண்டும் திருக்குறள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, வேறொரு பக்கத்தைப் பிரித்து, முதலில் செய்த எல்லாவற்றையும் திரும்பச் செய்யவேண்டும்.

இப்படியாக, ஏழெட்டுக் குறள்களைப் பிரித்து மேய்ந்தபிறகு, அவர் ஏன் இந்தப் பயிற்சியை எங்களுக்குத் தந்திருக்கிறார் என்று புரிந்துவிட்டது. பல மாதங்கள் செலவழித்து, 1330 குறள்களையும் அலசி ஆராய்ந்தால்கூட, எங்கேயும் தளை தட்டப்போவதில்லை. ஆனால், இப்படிப் பிரித்து ஆராய்கிற கலையால், வெண்பா இலக்கணம் எங்களுக்குப் பளிச்சென்று புரியும்.

சிரியர் பெ. செ. சுந்தரத்துக்கு நன்றி. அநேகமாய், அவருடைய வகுப்பில் படித்த எல்லோரும், வெண்பாப் பித்து பிடித்து அலைந்தோம் என்பதுதான் உண்மை. குறிப்பாக, நானும், என்னுடைய சிநேகிதன் கார்த்திகேயனும் இணைந்து, சொந்தமாகக் குறள் வெண்பாக்களெல்லாம் எழுதத் தொடங்கிவிட்டோம்.

thirukural.tamilpower.comஅப்போது எழுதிய வெண்பாக்களெல்லாம் இப்போது எங்கே தொலைந்துவிட்டது என்று தெரியவில்லை. னால், வெண்பா இலக்கணம்மட்டும், ஒரு வசீகரமான நினைவாக எனக்குள் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.

பின்னர், பல ஆண்டுகள்கழித்து, இணையத்தில் உலவத் தொடங்கியபின், மன்ற மையம் என்ற தளத்தில், ‘வெண்பா வடிக்கலாம் வா’, என்ற சுவாரஸ்யமான விவாதத்தில் கலந்துகொண்டேன்.

வகைவகையாய், சுவைசுவையாய் அங்குள்ளவர்கள் எழுதித் தள்ளியிருந்த அழகு வெண்பாக்களைப் பார்த்தபிறகுதான், மீண்டும் வெண்பா எழுதவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது.

ஆனால், மன்ற மையத்தில் தொடர்ந்து எழுதிவந்தவர்கள் எல்லோரும், அபாரமான தமிழாற்றல் கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்களுக்கிடையே, என்னுடைய பொம்மை வெண்பாக்கள் எடுபடுமா என்ற பயத்தில், ஒரு வாசகனாகவே தொடர்ந்துகொண்டிருந்தேன்.

அப்போது, என்னுடைய சிறுகதைகள் ஐந்தாறு, ஒரே வாரத்தில், வெவ்வேறு பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்டுத் திரும்பிவந்தன. மிகவும் அவமானகரமான அந்த சோகத்தை, யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஆகவே, அதை ஒரு வெண்பா வடிவில் எழுதி, மன்ற மையத்தில் இட்டேன்.

சற்றே அவசரத்துடனும், உணர்ச்சிமயமாகவும் எழுதிய அந்த அரைகுறை வெண்பா, இப்போதும் பளிச்சென்று நினைவிருக்கிறது :



திரும்பி வருகிற ஒவ்வொரு அஞ்சலும்

தீயாய்ச் சுடுகுது என்னை – எழுத்தை

விரும்பியே தொட்டதாய் ஞாபகம். ஏன்இந்த

வேதனை நாள்கள் எனக்கு ?

இந்தப் பாவில், வெண்பா இலக்கணம் சரியாகவே பயின்றுவருகிறது. என்றாலும், இதில் சில அசட்டுத்தனமான பிழைகள் செய்திருந்தேன். (உதாரணம் : ‘அஞ்சல்’ என்னும் வார்த்தை, உயிரெழுத்தில் தொடங்குவதால், ‘ஒவ்வொரு அஞ்சல்’ என்பது சரியில்லை. ‘ஒவ்வோர் அஞ்சல்’ என்பதுதான் சரி – னால், ‘ஒவ்வோர் அஞ்சல்’ என்று எழுதும்போது, தளை தட்டுகிறது !)

தவிர, இந்தப் பாடலின் எதுகையும், மோனையும் சரியாக அமையவில்லை. இதுபோன்ற தவறுகளையெல்லாம் மன்ற மையத்திலிருந்த அறிஞர்கள் பொறுமையாய் எடுத்துச்சொல்லி திருத்தினார்கள்.

மீண்டும் பத்தாங்கிளாஸ் இலக்கண வகுப்பில் அமர்ந்திருப்பதுபோல்தான் உணர்ந்தேன் நான். மறுபடி உற்சாகமாய் வெண்பாவைக் கற்றுக்கொண்டு, என் தவறுகளைத் திருத்திக்கொண்டேன்.

அதன்பிறகு, அவ்வப்போது விளையாட்டுத்தனமாய் வெண்பாக்கள் எழுதிப் பார்ப்பதுண்டு. ‘மரபுப் பிரியர்’ நண்பர் சின்னக் கண்ணன் எழுதிய பல சிறுகதைகளுக்கு, வெண்பாவிலேயே விமர்சனம் எழுதி விளையாடியிருக்கிறோம்.

எல்லாம் சரி, இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் ?

விஷயம் இருக்கிறது. இங்கே இடம் போதவில்லை. அடுத்த வாரம் பேசலாம்.

நன்றி: Yahoo! Groups : dokavithai

அராஃபத்தும் புஷ்ஷும்

பத்ரியின் பதிவுக்கு என்னுடைய நன்றிகள்.

என்னுடைய தமிழோவியம் கட்டுரை, யாஸர் அராராஃபத் என்னும் அரசியல்வாதியைக் குறித்தவை. பாலஸ்தீன மக்களையும் இஸ்ரேலியத் தலைமையையும் குறித்து நிறைய எழுதலாம். அராராஃபத்தை காந்தியின் நெஞ்சுரத்தோடு ஒப்பிட முடியாது. காந்திக்கு தேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளும் மனப்பான்மை இருந்தது. அகதிகளாக சிலரை பாகிஸ்தானுக்கும், சிலரை இந்தியாவுக்கும் அழைத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. அந்த கஷ்டமான முடிவை மக்களிடன் எடுத்துச் சொல்லி வழி நடத்தினார்.

யாரையும் இன்னொருவரோடு ஒப்பிடுவது எனக்கு உவப்பில்லாத செயல். அடுத்த வீட்டுக் குழந்தையையும் என்னுடைய குழந்தையையும் சமனிட்டு, ‘என் குழந்தைக்கு கராத்தே தெரியும்’ என்றும், உடனே நான் ‘என் குழந்தைக்கு குங்-பூ’ என்றும் சொல்லி சமாதானம் அடைவது போல் எனக்குப் படுகிறது. இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி புஷ்தான் கொள்கைகளிலும், உடும்புப்பிடிநிலைகளிலும், மக்கள் ஆதரவுகளிலும் அராராஃபத்திற்கு மிக அருகே நிற்கிறார். புஷ்ஷை எதிர்ப்பவர்கள் அதே நிலைப்பாட்டை யாஸர் அராராஃபத் மேலும் பாய்ச்சலாம். போர் தொடுப்பதன் மூலமே சுதந்திரத்தை நிலைநிறுத்தமுடியும் என்பதை இருவரும் நம்புகிறார்கள். பணத்தை திசைதிருப்புவது, கடவுள் நம்பிக்கை மூலம் அரசியல், உட்கட்சி கிளர்ச்சிகளை நசுக்குதல் என்று தொடரலாம்.

பி.எல்.ஓ.வின் லெபனான் தாக்குதல்களை குறித்து எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. ஜனவரி 1976-இல் டமோர் (Damour) பகுதிகளில் நடந்த சூறையாடல்களும், அவற்றின் தொடர்ச்சியாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளானதும் இணையத்தில் அலசப்படுகிறது. சிரியாவுடன் ஒத்துழைத்து பிற நாடுகளில் கலகம் விளைவிக்கவும் அராராஃபத் அஞ்சவில்லை.

பெஸ்லானில் நடந்த குழந்தைகள் பலி எனக்கு முதலில் அச்சத்தையும், தொடர்ந்து வெறுப்பையும் கொடுக்கிறது. ஆனால் அதற்கு முன்னுதாரணமாக 1974-இன் மே மாதத்தில் இருபத்தியோரு குழந்தைகள் இறந்திருக்கின்றனர். வட இஸ்ரேலில் இருக்கும் நகரம் மாலோ-விற்குள் (Ma’alot) மூன்று பி.எல்.ஓ. தீவிரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள். வழியில் இருந்த ஒரு குடும்பத்தினைக் கொன்றுவிட்டு, பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்தை பிணைக்கைதியாகி இருக்கிறார்கள். வழக்கமான கோரிக்கைதான். நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் இருக்கும் அவர்களின் கூட்டாளிகள் விடுவிக்கப்பட வேண்டும். ரஷியாவைப் போல் இஸ்ரேலும் விட்டுக் கொடுக்கவில்லை. இஸ்ரேலியப் அதிரடிப்படை நுழைந்தவுடன் குழந்தைகளின் மேல் கைகுண்டுகளும், துப்பாக்கிகளும் செலுத்தப்பட 25 பேர் மரணமடைந்துள்ளனர். பி.எல்.ஓ.வின் தலைவர் அரா·பத்தை நினைவு கூர்கிறோம். இறக்கடிக்கப்பட்ட குழந்தைகள் பெயர்களும் இணையத்தில் கிடைக்கிறது.

——

இஸ்ரேலின் பங்குக்கு அவர்களும் பல்லாயிரக்கணக்கில் அவர்களின் புகழ்பெற்ற சகுனி வேலைகளை செய்திருப்பார்கள். இஸ்ரேலின் பிரதம மந்திரியாக இரண்டு தீவிரவாதிகள் இருந்திருக்கிறார்கள்.

* மெனேச்சம் பேகின் (Menachem Begin) கிங் டேவிட் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் 92 பேர்களைக் கொன்றிருக்கிறார்.

* டேர் யாஸினில் (Deir Yassin) யிட்ஸாக் ஷமீரின் (Yitzhak Shamir) ஸ்டேர்ன் அடியாட்கள் (Stern Gang) 260 பேர்களை அழித்திருக்கிறார்கள்.

ஏரியல் ஷரோன் (Ariel Sharon) போர்க்கால கிரிமினல். ஷரோன் இறக்கும்போது அவருக்கு நினைவாஞ்சலி எழுதுபவர்கள் சப்ரா (Sabra), ஷட்டிலா (Shatila) அகதிகள் முகாமில் கொன்று குவிக்கப்பட்ட இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களைக் குறித்தும் எழுதுவார்கள்.

திட்டமிட்ட முறையில் தாக்குபவர்களுக்கு வசதியாக இரவு விளக்குகளை அமைத்துக் கொடுத்தது, பன்னாட்டுத் தொண்டு நிறுவன ஆர்வலர்களை அப்புறப்படுத்தியது போன்றவற்றையும் விவரிப்பார்கள். தானே பார்த்து பார்த்து நிகழ்த்திய க்யுப்யா (Qibya) அட்டூழியங்களையும் கொல்லப்பட்ட அறுபது மக்களையும் குறிப்பிடுவார்கள்.

——

இருபக்கத்தில் இருந்தும் இன்னும் நிறைய அடுக்கலாம். அராஃபத்தை மட்டுமே ஆதரித்த இந்திய ஊடகங்கள்தான் எனக்கு வருத்தமளித்தது. ஒருவரின் மறைவுக்குப் பிறகு அவதூறு சொல்லவேண்டாம். ஆனால், அவரின் தவறுகளையும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணங்களில் நடக்கும் பிழற்வுகளையும் பத்திரிகைகள் சுட்டிகாட்டலாம்.

மாலதி மைத்ரியின் வரிகள் தோன்றுகிறது.

‘ஏதேனும் ஒரு திசையில்

குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம்

என் உடலின் ஏதோவொரு பாகம்

ஊனமடைகிறது’


(நீரின்றி அமையாது உலகு – பக்கம் 30)

யாஸர் அராஃபத்

தமிழோவியத்தில் என்னுடைய யாஸர் அராஃபத் குறித்த எண்ணங்கள் அடங்கிய கட்டுரையைப் படிக்கலாம்.

Spiral of Violence II (c) ??Artistஇந்தியா சென்றுவிட்டு களைப்பாக அமெரிக்கா திரும்பியபோதுதான் அந்த நேர்முகம் எனக்கு கிடைத்தது. ட்ரிம் குறுகுறு மீசை, ஒல்லியான உடல், இந்திய முக அமைப்பு கொண்ட வாடகை வண்டி ஓட்டுநர். விமானதளத்துக்கு உள்ளே வர அனுமதி இல்லாததால், பனி பெய்யாத குளிர் இரவில் வெளியில் என் பெயர் தாங்கிய பலகையுடன் காத்திருந்தார். புகழ்பெற்ற அமெரிக்கத் தொலைகாட்சித் தொடர்களான ‘டேக்ஸி கேப் கன்·பஷன்ஸ்’ போன்றவை பார்த்ததாலோ என்னவோ, வழக்கம் போல் பேச்சு கொடுத்தேன்.

டாக்ஸி டிரைவர் பாலஸ்தீன நாட்டவர். குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது. இன்னமும் மணம் முடிக்கவில்லை. ஒரு நாட்டை குறித்து ‘·பாரின் பாலிசி’, ‘நியு யார்க் டைம்ஸ்’, ‘பிபிசி’ என்று படிப்பதை விட அந்த நாட்டின் குடிமகன்களிடம் அரை மணி நேரம் பேசினால் ஓரளவு தெளிந்த அலசல் கிடைக்கும். நான் இந்தியாவில் இருந்து கிளம்பிய அன்றுதான் ‘ஹமாஸ்’ வீரர் தற்¦காலை செய்து கொண்டு பத்தோ பதினைந்தோ இஸ்ரேலியர்களை விண்ணுலகம் அனுப்பியிருந்தார். ‘தி ஹிந்து’வும், ·ப்ரான்க்பர்ட்டில் இலவசமாக கிடைத்த ‘இண்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூனும்’ தலைப்புச் செய்திகளுக்கு மிக அருகே செய்தியாக்கியிருந்தார்கள். தலையங்கப் பக்கங்களில் ‘ஹமாஸ்’ எவ்வாறு அரா·பத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக இயங்குகிறது என்று வருத்தமும் பட்டிருந்தார்கள்.

வழக்கம் போல் ஒரு வரியில் ‘இதெல்லாம் நிற்காதா?’ என்று ஓட்டுநரிடம் வினா விடுத்தேன். பொறுமையாக விளக்க ஆரம்பித்தார். க்ளிண்டன் ஏற்பாடு செய்த உச்சி மாநாடு பற்றி கொஞ்சம் பிண்ணனி கொடுத்தார். அதில் யாஸர் அரா·பத் கையெழுத்திட மறுத்திருக்கிறார். என்ன திட்டம் என்பதை எங்கள் நாற்பததைந்து நிமிட பயணத்தில் பத்து நிமிடம் சுருக்கமாக சொன்னாலும் ஒன்றும் மண்டையில் ஏறவில்லை.

ஆனால், சாராம்சமாக புரிந்து கொண்டது யாஸர் அரா·பத் என்பவர் பாரதப் போரின் கிருஷ்ணன் போல. ‘ஹமாஸ்’ போய் குண்டு வீசி வருகிறதா? ஹமாஸ¤ம் அரா·பத் பேச்சின் படியே செயல்படுகிறது. என் குடும்பம் வறுமையில் இருக்கிறதா? அரா·பத்தின் கொள்¨கப் பிடிப்புதான் காரணம். என்னுடைய அண்ணாவின் மாப்பிள்ளை இஸ்ரேலினால் கொல்லப்பட்டானா? அங்கும் அரா·பத் அரூபமாகத் தெரிகிறார்.

அப்படியிருந்தும் அவனுக்கு அரா·பத் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று முடித்தான்.

கொலையாளி, தீவிரவாதி, உடும்புப்பிடி கோட்பாடுகள் கொண்ட அரா·பத் ஏன் பிடிச்சிருக்கு என்று நான் அதிகம் கேட்கவில்லை. எங்காவது எசகு பிசகாக கேள்வி கேட்டு, அவன் எங்காவது கடத்திச் சென்று பிணைக்கைதியாக்கி விடுவானோ என்னும் அளவு அவன் பேச்சில் ஆக்ரோஷம் இருந்தது.

தினசரிகளின் மூலம் மட்டுமே அறிந்த ஒரு ஆதர்ச தலைவரை பற்றிய நேரடி வருணனை அது. இந்தியாவிற்கு அடிக்கடி வந்து போகும் தலைவர்; காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் என்று உலக அரங்கில் அறிவித்த தலைவர்; இஸ்ரேலின் கொடுங்கோலிற்கு அடிபணியாதவர் என்னும் எண்ணம் மட்டுமே என் முன்னே நிலைநிறுத்தப் பட்டிருந்தது. அன்று ‘ஹமாஸ்’ மூலம் கொலைகளும் செய்து வருபவர் என்று சொல்லப்பட்டது.

இந்திரா காந்தி இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் இந்தியா வெகு சீக்கிரமே சுபிட்சப் பாதையில் சென்றிருக்கும். சகாய விலையில் ராணுவத் தளவாடங்கள், பாகிஸ்தானின் அத்துமீறலகளை எளிதாக கண்காணித்தல் போன்ற தொழில் நுட்பங்கள் கிடைத்திருக்கும். வளைகுடா நாடுகளுடன் நல்லுறவு பாவித்ததில் பெட்ரோல் விலையும் குறையவில்லை; இன்றளவில் த¡வூத்தும் நாடுகடத்தப் படவில்லை.

இறந்த பிறகு ஒருவரை தூஷிப்பதை பலரும் விரும்புவதில்லை. வீரப்பனே ஆனாலும், ‘அவனுக்குள்ளும் ஒரு நல்ல மனிதன் இருக்க¡ன்’ என்று கண்டெடுத்து அவற்றைப் பெரிதாக சொல்வதே உவப்பாக உள்ளது. ஒஸாமாவிற்கு ரோல் மாடல் யார் என்பதை நமக்குத் தெரியாது. யாஸர் அரா·பத்தாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஏதன்ஸ் ஒலிம்பிக்ஸில் பாதுகாப்புக்கு கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் (மில்லியன் அல்ல) டாலர் செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 6,750,000 கோடி ரூபாய். இவ்வளவுக்கும் பிள்ளையார் சுழி போட்டது 1972 ஒலிம்பிக்ஸில் நடந்த பதினொன்று இஸ்§ரலிய வீரர்களின் படுகொலை. தொடர்ந்து 1973-இல் சூடானின் அமெரிக்க வெளியுறவுத் துறையினரின் மரணங்கள், 1974-இல் இரண்டு டஜன் இஸ்ரேலிய பள்ளிச் சிறுவர்களின் கொலை, 1985 விமான கடத்தல் என்று பல நிகழ்வுகள் மூலம் பாலஸ்தீன பிரச்சினையை மக்கள் மனதில் இருத்தி வந்திருக்கிறார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமான விவகாரத்தை அமெரிக்காவும் மற்ற நாடுகளும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஒன்றரை பில்லியன் டாலருக்கு மேல் பாலஸ்தீனத்துக்கு நன்கொடையாக அமெரிக்கா வழங்கி வருகிறது. வெஸ்ட் பேங்க், காஸா போன்ற பகுதிகளில் உள்கட்டமைப்பு, நீர்வளம், கல்வி, சுகாதாரம் போன்ற பல துறைகளில் செயல்படுத்தி இருக்கிறார்கள்.

தனது பதவிக்காலம் முசிவதற்குள் முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்று க்ளிண்டன் பெரிதும் விரும்பினார். இஸ்ரேல் ஒப்புக் கொண்ட திட்டத்தை பாலஸ்தீனத்துக்கு தீவிர ஆதரவு தரும் எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான், மொரோக்கோ, டூனிஸியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதங்களுடன் யாஸர் அரா·பத்திடம் சமர்ப்பித்தார். வசனம் பேசி மகிழும் சில தமிழக அரசியல்வாதிகள் பே¡ல் ஒரு கையில் சமாதானச் சின்னமும் மற்றொரு கையில் துப்பாக்கியும் கொண்டு தோன்றிய ஐ.நா. பேச்சு புகழ் பெற்றது. ஆனால், சமாதான உடன்படிக்கை எதையும் ஏற்றுக் கொள்ளாமல் கடைசி வரை சிறுவர்கள் முதல் பெண்டிர் வரை துப்பாக்கி தூக்குமாறு பாலஸ்தீன தலைவர் கட்டளையிட்டார். ‘அவர் சொல்படியே நடப்போம்’ என பட்டும்படாமல் மற்ற நாடுகளும் ஒதுங்கிக் கொண்டு விட்டது.

இப்பொழுது யாஸர் அரா·பத் மறைவிற்குப் பிறகு சில புதிய வழிகள் தென்படலாம். பிற அண்டை நாடுகளுக்கு பாலஸ்தீனத் தலைவர்களை வலியுறுத்தும் துணிவு வரலாம். விட்டுக் கொடுத்து லாபம் பெறுவது குறித்து பாடங்கள் நடத்தலாம். சொந்த நாடாக இயங்குவதின் லாப நஷ்டங்களை மக்களிடம் நேரடியாக எடுத்துரைக்கலாம். பலமிக்க ஒரே ஒரு சர்வாதிகாரிக்கு பதிலாக, ஜனநாயக முறையில் ஆயிரம் தலைவர்களைத் தேர்தெடுக்கும் வலிமையினை உணரலாம். எகிப்து, ஜோர்டானுடன் எல்லைக்கோடுத் தொடர்பு கொண்ட சுதந்திர நாட்டை உருவாக்கலாம்.

தேர்தல் மற்றும் சுதந்திரம் மட்டும் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வராது. இதயநோய் உள்ள ஒருவனுக்கு கண்ணில் தூசி விழுந்திருக்கிறது. தூசி மட்டுமே இந்த க்ஷணம் பெரிதாகத் தோன்றும். கண்ணில் உறுத்தும் தூசியை ஊதித் தள்ளிவிட்டால் உலகமே தெளிந்தது போன்ற பார்வை கிட்டும். ஆனால், தூசி பெரிதல்ல. இதயநோய்க்கு வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகளும், மாற்று வால்வுகளும் அதி முக்கியம்.

பாலஸ்தீனத்தில் தூசியாக இருப்பது இஸ்ரேல். இஸ்ரேலை அழிப்பதால் பாலஸ்தீனத்துக்கு எவ்வித நனமையும் கிடைக்காது. இதய நோயான தீவிரவாதம், வகுப்புவாதம், பொருளாதாரப் பின்னடைவுகள், போன்றவற்றை குணப்படுத்த வேண்டும். புதிய தலைவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். இனி அவர்களை வழிநடத்தப் போவது யாஸர் அரா·பத்தின் பிடியில் சிக்கியிராத மக்கள்தானே ?

நுழைவுத் தேர்வுகளைத் தவிர்ப்போம்

நான் படித்த கல்லூரிக்கு நுழைவுத் தேர்வுகள் கிடையாது. அதனாலோ என்னவோ நான் நுழைவுத் தேர்வுகளை ‘குங்குமம்’ வாசகர்கள் ‘காலச்சுவடு’ பத்திரிகையைப் பார்ப்பது போன்ற பயங்கலந்த ஒதுக்கலோடு பார்த்து வருகிறேன். +2 வில் தேர்வு எழுதுகிறோம். விதம் விதமாக, பிடித்த சப்ஜெக்ட்களை எல்லாம் ஏற்கனவே தீர்மானித்து, ஒரு வருடம் படித்து, சிறப்பு வகுப்புகளுக்கு சென்று, கோனார் நோட்ஸ் முதல் தினமணி மாதிரித்தாள் வரை நோட்டம் விட்டு, இரண்டு மூன்று ரிவிஷன் எழுதி, கடைசியாக அரசுத் தேர்வும் எழுதுகிறோம்.

அதன் பிறகு கொசுறாக, அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, எஸ்ஐயீடி, என — ஏ முதல் ஜெட் வரை வரும் அனைத்து எழுத்தையும் எவ்வளவு முறை எவ்விதமாக மூன்று முதல் ஐந்து தடவை வருமாறு கணக்கிடுக என்று கேட்கும் கணிதக் கேள்வியில் ஆரம்பித்து இந்தியாவின் பிரதம மந்திரி யார் போன்ற அசையும் பொருட்கள் சார்பான வினாக்கள் வரை தொடுக்கும் அனைத்திந்தியா, தமிழ்நாடு, தெலுங்கானா, கூடுவாஞ்சேரி, திருமணஞ்சேரி நுழைவுத் தேர்வுகள் தேவையா?

பத்தாவது முடிந்தவுடனேயே மாணவர்களுக்கு நுழைவு ஜுரம் வந்துவிடும். கெமிஸ்ட்ரியில் கார்பனையும் ஹைட்ரஜனையும் வைத்து அடுக்கு மாடிகள் கட்டுவார்கள். ஆறு பாயிண்ட் எழுத்துருவில் ரெண்டு பக்கம் நீளும் ஃபிஸிக்ஸ் கேள்விக்கு ஒரு பின்னத்தைப் போட்டு அதன் தலைப் பகுதியில் நியு யார்க் நகர திங்கட்கிழமை காலை ட்ராஃபிக் போல நீளும் கார் போன்ற சின்னங்களையும் வால் பகுதியில் குசேலரின் பிள்ளைகள் போல வதவதவென்று சில குறிகளையும் கொண்டு விடை கொண்டு வருவார்கள்.

பார்த்தால் வயிற்றில் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் சுரக்கும். நாமும் ப்ரில்லியண்ட், ஐஎமெஸ், ஐஏஎஸ் என்று ஏதாவது ஒன்றில் சேர்ந்து தபால்முறையிலோ, தரிசனமுறையிலோ யாஸர் அராஃபத் இறக்கும் வயது வரை உபயோகப்படாதப் பாடங்களை வந்திருக்கும் ஒன்றிரண்டு பெண்பாலாரை அரஹரா போட்டுக் கொண்டே படித்து வருவோம்.

ஆனால், இந்த வகுப்புகளினால் ஒரு நிஜ வாழ்க்கைக்கான பாடம் பொதிந்திருந்தது. நான்தான் தவறவிட்டுவிட்டேன். அன்றே எளிதில் உணர்ந்து கொண்டு பி.ஏ. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் சென்றிருக்க வேண்டிய குறிப்பால் உணர்த்தும் பாடம். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு வந்த ஒருவர் கூட ‘நாடோ டித் தென்றல்’ கார்த்திக் போன்ற விஷமிகளிடம் பாஸ் மார்க் எடுத்திருக்க மாட்டார்கள். இந்தப் பெண்கள்தானே படித்து தேறி பொறியியலிலும் சேரப் போகிறார்கள் என்பது உரைக்கவில்லை.

இதுவரை நான் ஜோக் எதுவும் அடிக்கவில்லை என்றாலும்…. கொஞ்சம் சீரியஸாக பேசுவோம்.

காலையில் எட்டு மணிக்கு பள்ளிக் கூடம் சென்றால் மாலை நான்கரை வரை பிஸியாக இருப்போம். பிறகு பஸ் பிடித்து டுடோ ரியல் வகுப்புக்குச் செல்ல வேண்டும். முடிந்து வரும்போது இரவு ஒன்பதரையாகி விடும். அப்புறம் கொஞ்சம் அன்றாட பள்ளிப் படிப்பு; தொடர்ந்து நுழைவுத் தேர்வு படிப்பு. இதில் எப்பொழுது ‘மை டியர் பூதமும்’ ‘சலனமும்’ பார்ப்பது?

நானாவது சென்னை மாநகரில் இருக்கிறேன். நேர்முக வகுப்புகளும் உண்டு. நுழைவுத் தேர்வுகளுக்கான தபால் முறைப் பயிற்சிகளும் கிடைக்கும். கூடப் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கையும் அதிகம். ‘அழகி’ போன்ற கிராமங்களில் இவ்வளவு வசதி இருக்காது என்றே தோன்றுகிறது. அதுவும் நகர காக்கைகளைப் போல் இல்லாமல் கிராமக் கிளிகளை ‘ஒளியிலே தெரிவது…’ தேவதையா என்று பாதி நேரம் சந்தேகப் படுவதில் ஐஐடிக்கள் எட்டக்கனியாகும் வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்காகவாவது +2 மதிப்பெண்களே, பொறியியல், மருத்துவம் போன்றவைக்கும் ஒரே தகுதியாக வைக்க வேண்டும்.

அப்படியே பெருங்களத்தூர், காட்டாங்கொளத்தூர் போன்ற சிற்றூர்களில் இருந்து அருகே இருக்கும் பெரிய ஊர்களுக்கு வந்து சென்று படிக்க வாய்ப்பிருக்கலாம். முதலாவதாக சிறப்பு தேர்வுகளுக்கான பயிற்சி கட்டணங்கள். சாதாரண வருமானத்தில் வாழ்பவருக்கு, கல்விச்செல்வமே பெரிய செலவாகத் தோன்றும். இதிலே நுழைவுத் தேர்வுக்காக காசு கட்டி பொய்யனையோ பொண்ணையோ படிக்க அனுப்புவார்களா?

இரண்டாவது கிராமப்புற மக்களின் டவுன் பஸ் வசதி. ‘நினைவிருக்கும் வரை’ பிரபுதேவா பஸ் ரொம்பும் வரை ரோஜாவையும் சுவலட்சுமியையும் டாவடித்துக் கொண்டிருப்பார். அதற்குள் முதல் ஒரு மணி நேரம் காலி. திரும்பி வருவதும் அகாலம் ஆகிப் போகும் வாய்ப்பு இருக்கிறது. உள்ளூர் தியாகராய நகரில் வகுப்புக்குச் சென்றுவிட்டு நான் வீடு திரும்பும்போது விவிதபாரதியில் விளம்பரதாரர் நிகழ்ச்சி கூட முடிந்து போன ஒன்பதரை ஆகியிருக்கும். கிராமப்புறங்களில்…?

இதைப் பெண்களுக்கு எதிரான நடவடிக்கையாக கூட சொல்லுவேன். (அப்பாடா… பெண்ணியம் வந்துடுச்சு!)

நான் பார்த்தவரை வருடா வருடம் பெண்கள்தான் ஆண்களை விட அதிக அளவில் தேர்வுறுகிறார்கள். சிபிஎஸ்ஈ, மெட்ரிக், தமிழ்நாடு, என +2, பத்தாம் வகுப்பு என எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண் பெரும்பாலும் அனைத்துப் பாடங்களிலும் பெற்று, தினத்தந்தி, தினமலர், மாலை மலர், மாலை முரசு, மக்கள் குரல் என பேட்டியும் கொடுக்கிறார்கள். இப்பொழுது சன் டிவியிலும் வருவதால் பார்க்கிறேன்.

ஆனால், பிலானி, ஐஐடி, எம்எம்சி, அண்ணா, எம்.ஜி.ஆர்., எஸ்.ஆர்.எம்., க்ரெஸ்செண்ட் என சகாக்கள் படித்த/படிக்கும் ப்ரொஃபஷனல் கல்லூரிகளில் குறைந்தே காணப்படுகிறார்கள். நிச்சயம் தேர்ச்சி பெற்ற 55:45 போன்ற +2 சதவீதத்துக்கும் இந்த நுழைவுத் தேர்வுகளில் சமாளித்து புத்தகம் பிடிப்போருக்கும் விகிதாசாரங்களில் சம்பந்தமே இல்லை. அட்லீஸ்ட், 50:50 கூட இல்லாமல், ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும் நுழைவுத்தேர்வுகள் ஒழிக! (ஜிந்தாபத்துக்கு எதிர்ப்பதமாக அந்தக்கால பேங்க் வாசல்களில் நின்று கத்திக் கொண்டிருப்பார்கள்… அது என்ன ஹிந்தாபாத்தா? பகாளாபத்தா?)

சரி… இப்போ தீர்வுக்கு வருவோம். ஒன்று ஒழிக என்று சொல்லும்போதே, எது வாழ்க என்றும் சொல்லிவிட்டும் போய் விடுகிறேன்.

பிட்ஸ் (BITS, Pilani) எவ்வாறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்தது? நுழைவுத் தேர்வுகள் கிடையாது. +2 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே செல்லுபடியாகும். எங்கம்மாவுக்கு நினைவு தெரிஞ்ச காலத்தில் இருந்தே ‘ஹிப்பாங் குப்பாங் ஜுப்பாங்’ ஹார்லிக்ஸ் சாப்பிடுவது போல், பிட்ஸும் பல்லாண்டு காலமாக இந்த முறையை வெற்றிகரமாக அனுசரித்து வருகிறது. என்னைப் போன்ற சிலர் வெளிவந்தாலும், பெரும்பாலும் நன்முத்துக்களே கிடைத்திருக்கிறது என்பதை நான் பீற்றிக் கொள்ள விரும்பவில்லை.

இதே முறையை அனைத்துக் கல்லூரிக்கும் முன் மாதிரியாக வைக்க வேண்டும். சிபிஎஸ்ஈ பரீட்சைகள் வெகு கடினம்; தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் அள்ளி அள்ளிக் கொடுத்து விடுவார்கள்; தமிழில் மதிப்பெண் எடுப்பது கஷ்டம்… (இப்போ நீ எழுதியிருப்பது போல் செகண்ட் பேப்பர் கட்டுரை எழுதினால் ஒற்றுப் பிழைகளுக்கு பத்து மைனஸ் செஞ்சிடுவாங்க என்று நீங்க சொல்வது காதில் விழுகிறது) என்பது போன்ற கேள்விகளுக்கும் பிட்ஸ் நுழைவு முன்மாதிரியாக விளங்குகிறது.

ஸ்டேட் ஃபர்ஸ்ட் (அல்லது தேசிய அளவில் முதல் மதிப்பெண்) எடுத்தவரை எடுத்துக் கொள்வார்கள். காட்டாக தமிழ்நாட்டு +2 தேர்வில் 1200-க்கு 1150 முதல் மதிப்பெண் என வைத்துக் கொள்வோம். என்னைப் போல் ஒருவன் 1100 எடுத்திருந்தால், 1100/1150 எவ்வளவு கிடைக்கும்?

என்னைப் போல் ஒருவன் விண்டோ ஸ் கால்குலேட்டர் பொத்தானை அமுத்தி ‘95.652173913043478260869565217391’ என்று பதில் சொல்வான்.

இதில் தமிழ் எடுத்தவனும், ஃப்ரென்ச் இலக்கியம் படித்தவனும், எஸ்பரேண்டோ ஓதியவனும் ஒரே மாதிரி கருதப்படுகிறார்கள். இதுவே இந்த முறையின் ஒரே குறைபாடு. இதைத் தவிர்க்க +2 தேர்வின் போதே இன்னுமொரு நுழைவுப் பாடத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். வேதியியல், உயிரியல், ஆகியவை தவிர உலகவியல், பொது அறிவு இயல், மிச்ச இயல், முத்தமிழ் ஆகியவற்றை இதில் வல்லுநர்களைக் கொண்டு பாடத்திட்டமாக அமைக்க வேண்டும். இது மட்டுமே நுழைவுத் தேர்வுகளுக்குத் தகுதி பெற காரணியாக விளங்க வேண்டும்.

இந்தப் பாடம் அனைத்து பள்ளிகளிலும், கிராமம் முதல் நகரம் வரை ஒரு வருடம் முழுக்க வழக்கம் போல் வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும். அதுவே நுழைவுத் தேர்வுக்கும் பயன்படும். எழுபத்தியெட்டு நுழைவுத் தேர்வுகள், முப்பத்திநான்குப் பாட வகைகள், நூற்றி சொச்ச கவுன்சலிங் எல்லாம் ஒழிக்கப் பட்டு கொஞ்சம் சிம்பிளாக்க சொல்லுங்க சார்.

— பாஸ்டன் பாலாஜி

No Aurora Borealis 

No Aurora Borealis Posted by Hello