காதல் சொல்லும் பாடல்


‘பேரரகன்’ சூர்யாவே பேசியிருக்கும் சுவாரசியமான வசன கவிதை ராகாவில் மனதைக் கவர்ந்தது.



அவன்:

ஒரு அழகான பொண்ணு இருந்தா

அதவிட ஒரு அழகான பையன் இருந்தான்

அவங்க ஒரு நாள் சந்திச்சாங்க

அவள்:

என்னது…?

அவன்:

அவளுக்குத் தமிழே வராதுடி

அவள்:

போடா…

அவன்:

ஹே… ஒகே.. ஓகே…

அவளுக்கு அவனப் பிடிச்சது

ஆனா சொல்லலை

ஏன்னு தெரியலை

அவள்:

என்ன…?

அவன்:

ஓண்ணுமில்லே…

அவள்:

சொல்லு!?

அவன்:

அந்தப் பொண்ணு பேசுவா.. பேசுவா…

பேசிட்டே இருப்பா

ஆனா

அது அவனுக்குப் பிடிச்ச ராகம்

அவனுக்கு தூரத்தில இருந்தா தெரியாது

பரவாயில்லை

தன்னுடைய உலகத்தை அவளோடப் பெரிய பெரிய கண்களில் பார்த்தான்

அவ கையெழுத்துக் கிறுக்கல்

ஆனா

அதை எடுத்து

பைத்தியமா இருந்தான்

அவ நடக்கிறப்பக் கொஞ்சம் கசமுசா என்றிருக்கும்

ஆனா அவ முடி அசையறதைப் பார்த்தால்

அந்தக் காற்றுக்கேப் பொறாமை வரும்

அவள்:

ஹே…

நிறுத்து… நிறுத்து

அவன்:

You know Priya

He just loved everything about Her

அவ முடி

அவ நெற்றி

அவ கண்

அவ மூக்கு

அவ கன்னம்

அவ உதடு

அவ கழுத்து

அவ ….

கோரஸ்:

த்தநந…த்தநந…

அவன்:

அவளப் பத்தின நிறைய விஷயம் அவனுக்குப் பிடிக்கலே

அவ பேசற விதம்

ஸ்மோகிங்

The way she behaves

இப்படி நிறைய

நிறையக் கிண்டல் பண்ணியிருக்கான்

அவளப் பிடிச்சிருக்கு

அவன யாருக்கும் பிடிக்கலே

He was really bad Priya

ஆனா தனியா

எப்பவும் தனியா இருந்தான்

அவளுக்கு அவனப் பிடிச்சது ப்ரியா

Don’t know Why

ப்ரியா…!

ஏன் ப்ரியா…?

ஏன் என்னை?

கல்யாணம் பண்ணிக்கோ

எப்பவும் உன்கூடயே இருக்கணும்

உன்னைக் காதலிக்கணும்

உன்னைத் தொல்லை பண்ணனும்

உனக்காக வீட்டுக்கு வரணும்

உன் மடியில் தூங்கணும்

இதே மாதிரி எனக்கொரு குட்டி ப்ரியா வேணும்

அவளை பார்த்துகிட்டே எனக்கு வயசாயிடும்

நான் உன்னோடுதான் சாகணும்

அப்படியில்லேன்னா

சாகணும்

இங்கே…

இப்போ

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.