Tamil Gossips


இங்கே வந்திருக்க வேண்டியது. இங்கே போட்டு விட்டார்கள்.

1. முதலாம் சரித்திர குறிப்பு: வெற்றி

/* இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? */

நான் கேள்விப்பட்ட தகவலொன்றையும் [உறுதிப்படுத்தப்படாத தகவல்] இங்கே
இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்த போது, பாகிஸ்தான், மற்றும் சீன உளவுப் படைகள் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டு தாம் ஆதரவு த்ருவதாகத் தெரிவித்திருந்தனராம்.

ஆனால் இந்திய நலனுக்கு எதிராக குறிப்பாக எமது உடன்பிறப்புக்களான 60 இலட்சம் தமிழர்களும் அங்கமாக இருக்கும் இந்திய நாட்டின் நலன்களைப் பாதிக்கக் கூடிய உறவோ உதவியோ எமக்குத் தேவையில்லை என அவர்களின் கோரிக்கையை புலிகளின் தலைமைப் பீடம் ஏற்க மறுத்ததாம்.

இந்திய நடுவண் அரசு, ஈழத் தமிழர்களைக் கொல்லுவதற்கு சிங்கள அரசுகளுக்கு தொடர்ந்தும் ஆயுத உதவிகளைச் செய்து வரும் போதும் விடுதலைப் புலிகள் இந்திய நலனுக்கு எதிராகப் பாகிஸ்தானுடனோ அல்லது சீனாவுடனோ தொடர்பு வைப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

ஆனால், புலிகளாலும், ஈழமும் இந்திய நலனுக்கு எதிரானது எனும் மாயையை ஒரு குறிப்பிட்ட சாதியினரும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த தகவற் தொடர்பு சாதனங்களும் பரப்பி வந்தன. வருகின்றன. அரசியலை நன்கு அறிந்தவகளுக்கு இது எப்படிப்பட்ட மாயை என்பது தெளிவாகப் புரியும்.

8/08/2007 09:00:00 PM


2. இரண்டாம் வரலாற்று சாட்சியம்: Anonymous said…வெற்றி,
நீங்கள் குறிப்பிட்டதுபோல நானும் கேள்விப்பட்டேன். அதுமட்டுமல்ல பி.ஜே.பி எதிர்க்கட்சியில் இருந்த போது புலிகளிடம் தம்மை ஒரு இந்துஅமைப்பாகவும் பெளத்தத்துக்கும் அதற்கு ஆதரவுதெரிவிக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போராட்டமே ஈழப்போரென்றும் பிரகடனப்படுத்தச் சொல்லியும் கேட்டார்கள் என்றும் அறிந்தேன். அதற்கு புலிகளோ தாம் ஒரு மதம் சாராத அமைப்பு என்றும் தம்முடன் ஆரம்ப காலத்திலிருந்தே மிகப்பல கிறிஸ்தவர்கள் இப்ப்போரில் இணந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள். அப்போதுகூட போராட்டத்தில் ஆதரவளிக்கும் கிறிஸ்துவர்கள் , முக்கியமாக பாதிரிகள் அவ்வாறே செய்யும்படியூம் தாம் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்து தமக்கு தமிழர் விடுதலை பெறுவதே முக்கியம் எனக்கூறினர் எனவும் அறியக்கூடியதாக இருந்தது. எனினும் புலிகள் எடுத்த முடிவு தூரநோக்குள்ளதே என நினைக்கிறேன்.- 8/08/2007 10:33:00 PM

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.