தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்: குடிசை பெண்களுக்கு தோசை மாவு வழங்கிய ஜி.கே.வாசன்
சென்னை, மாநகராட்சி பகுதியில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
107-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ருக்மணிக்கு ஆதரவு திரட்டினார். புஷ்பா நகர் குடிசை பகுதியில் நடந்து சென்று ஓட்டு கேட்ட வாசனுக்கு வயதான மூதாட்டி உள்பட ஏழை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
மிகவும் ஏழை பெண்கள் செலவு செய்து ஆரத்தி எடுத்ததை பார்த்து நெகிழ்ந்த வாசன் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். வியாபாரி ஒருவர் தோசை மாவு பாக்கெட்டுகளை விற்ப னைக்கு வைத்து இருந்தார். ஒரு கிலோ எடையுள்ள அந்த மாவு பாக்கெட் என்ன விலை என்று விசாரித்தார். ரூ.12 என்றார் அவர்.
உடனே அவரிடம் இருந்த 20 பாக்கெட் மாவுக்கும் தனது பாக்கெட்டில் இருந்து ரூ.240 எடுத்து கொடுத்தார். அந்த மாவு பாக்கெட்டுகளை அங்கு நின்று கொண்டிருந்த ஏழை பெண்களுக்கு கொடுக்கும் படி கூறினார். பின்னர் தொடர்ந்து பிரசாரம் செய்தார்.











அப்புடியே சட்னி சாம்பாருக்கு ஒரு ஏற்பாடு பண்ணிட்டாருன்னா புன்னியமா போகும்…