தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, தின இதழ், தினமுரசு, தினக்குரல் என எல்லா தினசரிகளும் ”தி’”யில் துவங்குவதை எதிர்க்காத தமிழ்ப் பற்றாளர்கள், ‘தி இந்து’ வை “தி” போட்டதற்காக திட்டுவது திடுக்கிடவைக்கிறது.
தமிழில் பெண்பால் சொற்கள் “தி”யில் முடியும். ஒருத்தி… குறத்தி… கார்த்தி… “தி”யை கண்டிப்பதால் பெண்ணியக் குரலையே முடக்க நினைக்கிறார்கள் ஆணாதிக்கவா”தி”கள்.
எழுத்தாளர்களுக்கு “தி” மிகவும் பிடித்த முதல் எழுத்து. தி. ஜானகிராமன், தி. க. சி, திரு. வி. க… எல்லோருக்கும் முதல் எழுத்து “தி”. அந்த நீண்ட நெடிய மரபில் “தி இந்து” உதயமாகிறது.
உதய சூரியனுக்கு “தி”.மு.க. அந்த திராவிட் அணி ஆடிய காலத்திலேயே கிரிக்கெட் வருணணைக்கு புகழ் பெற்றது “தி” இந்து.
இடுகுறிப்பெயர்களுக்கு முதலில் வருவது “தி”.
திசை… (மாலனுக்கு முன்னோடி!)
திணை… (திண்ணை.காம்)
திரு… (செல்வம்)
திரி… (எதையும் மாற்றிச் சொல்வது – திரிப்பது)
தி இந்துவின் தமிழ்ப் பதிப்பு வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ”சிந்தனைக் களம்” பகுதியில் ’சிறப்புக் கட்டுரைகள்’ வெளியிடுகிறார்கள். தினமணி போன்ற பெத்த பெயரை வைத்துக் கொண்டு (தினகரனின்) தமிழ் முரசு போன்ற உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.
சிரியாவைக் குறித்து பாரா எழுதிய மேலோட்டமான கட்டுரை கிடைக்கிறது. ஜெயமோகன் பத்தி எழுத்தாளர் ஆனால் நடக்கப் போகும் அபாயமும் தெரிகிறது.
என்னைப் போன்ற சாதாரண விமர்சகர் கூட நாவலின் ஓரிரு பக்கங்களை மட்டும் ஆங்காங்கே படித்துவிட்டு தேர்ந்த அறிமுகத்தைக் கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி அவ்வப்போது சந்தித்த மனிதர்கள், ஆங்காங்கே பார்த்த தொலைக்காட்சி, இணையத்தில் மூழ்கடிக்கும் நிலைத்தகவல்கள் மட்டுமே கொண்டு மேக்ரோ பார்வை கொடுப்பதன் ஆபத்தை மீண்டும் மீண்டும் ஜெயமோகன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். ஊடகத்தை கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் medianama.com , fourth-estate-critique, thehoot.org போன்ற பல்வேறு தளங்களின் உதவியைக் கோரி கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதியிருக்கலாம்.
அந்தக் காலத்தில் நேருவும் கென்னடியும் மட்டுமே செய்தியாளர்களுக்கு முக்கியமானவர்கள். இந்தக் காலத்தில் பக்கத்து மாநகராட்சி கவுன்சிலரும், பையன் ஆடும் கிரிக்கெட் அணியும், முக்குத்தெருவில் உதயமான பவானி அம்மனும் செய்தியை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கோ 2ஜி கொள்ளை அடிப்பதை நினைத்து அங்கலாய்ப்பதை விட உள்ளூர் ஊழல்களைத் தடுப்பதிலும், பக்கத்து வீடு காதல்களை அங்கீகரிப்பதிலும் செயலூக்கத்தோடு இயங்கவும் ஊடகங்கள் உதவுகின்றன.
செய்தித்தாள் என்பது மேற்கை பொறுத்தவரை இறந்த காலம். வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட திவால் ஆகி அமேசான்.காம் எடுத்துக்கொண்டுவிட்டது. சிகாகோ ட்ரிப்யூன், நியு யார்க் டைம்ஸ் என்று இணையத்துக்கு முந்தைய முன்னுமொரு நூற்றாண்டில் கோலோச்சிய பதிப்புகள் எல்லாம் கணக்கு வைப்பு புத்தகங்களில் சிவப்பு மையை கக்கி கடைசி இரத்தங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தியாவில் மட்டும், எப்படி புதுப் புது பத்திரிகைகள், தினசரிகள், நாவல்கள், வார இதழ்கள் முளைக்கின்றன?
காலை எழுந்தவுடன் ஐ-பேட் கொண்டு கக்கூஸ் போகுபவர்கள் குறைந்த அளவில் இருப்பதால்… வலை மேய்வதற்கான கட்டணம் இரவு நேரங்களில் மட்டும் சல்லிசாக இருப்பதால்… எல்லோருடைய செல்பேசியிலும் தமிழ் எளிதாகத் தெரியாததால்… கட்சிக்கொரு பேப்பர் நடத்துவதால்…
”நாவலாசிரியயர்கள் சொற்றொடர்களாக சிந்திப்பதில்லை; அத்தியாயங்களாக யோசிப்பவர்கள்” என்பார் வர்ஜீனியா வுல்ஃப். நல்ல புனைவாளர்களை முன்னூறு வார்த்தைகளுக்குள் வாரா வாரம் கிறுக்க வைக்கும் சுரேஷ் கண்ணன்கள் ஆக்கி விடாதீர்கள் என்று எண்ண வைத்திருக்கிறது தமிழில் வரும் ’தி இந்து’.
வட அமெரிக்காவில் பல தமிழ் சங்கங்கள். ஐம்பது மாநிலம் இருந்தால் நூறு சங்கங்களாவது இருக்கும். என்னைப் போல் ஒற்றை நபர் அசோசியசன்களை கணக்கில் கொண்டால், ஆயிரத்தி எழுநூற்றி முப்பத்தியெட்டு தேறும்.
FeTNA என்கிற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழா மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இம்மூன்று நாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள்.
இந்த அடுக்கு உனக்கானது. இந்தப் பிரிவை விட்டு நீ முன்னேறக் கூடாது என்று தமிழ் மாட்ரிமொணி.காம் தடுத்து நிறுத்துகிறது. அவர்களுக்கு விளம்பரம் தந்து இடமும் கொடுத்து முகப்பில் இனரீதியாக பிரித்து மதவாரியாக வகைசெய்து அமெரிக்கா வந்தும் சாதிப்பாசத்தை விட்டுத் தராத ஃபெட்னா அமைப்பை பார்த்தால் வருத்தம் கலந்த அதிர்ச்சு வருகிறது.
தமிழ் மேட்ரிமொணி.காம் அடுக்கும் பிரிவுகளையும் அவற்றை எவ்வாறு தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவை முன்னிறுத்துகிறது என்பதன் ஸ்க்ரீன்ஷாட்:
ஃபெட்னாவின் விளம்பரதாரர் சொல்லும் பட்டியல்
Religion – சமயம்
Hindu : இந்து
Muslim – Shia : முஸ்லீம் – ஷியா
Muslim – Sunni : இஸ்லாம் – சுன்னி
Muslim – Others : முஸ்லிம் – பிற
Christian – Catholic : கிறித்துவம் – கத்தோலிக்கம்
Christian – Orthodox : கிறிஸ்துவம் – ஆர்த்தொடாக்ஸ்
Christian – Protestant : கிறிஸ்துவம் – புரோடஸ்டண்ட்
Muslim – Ansari
Muslim – Arain
Muslim – Awan
Muslim – Bohra
Muslim – Dekkani
Muslim – Dudekula
Muslim – Hanafi
Muslim – Jat
Muslim – Khoja
Muslim – Lebbai
Muslim – Malik
Muslim – Mapila
Muslim – Maraicar
Muslim – Memon
Muslim – Mughal
Muslim – Others
Muslim – Pathan
Muslim – Qureshi
Muslim – Rajput
Muslim – Rowther
Muslim – Shafi
Muslim – Sheikh
Muslim – Siddiqui
Muslim – Syed
கிறிஸ்துவம்
Christian – Born Again
Christian – Bretheren
Christian – Church of South India
Christian – Evangelist
Christian – Jacobite
Christian – Knanaya
Christian – Knanaya Catholic
Christian – Knanaya Jacobite
Christian – Latin Catholic
Christian – Malankara
Christian – Marthoma
Christian – Others
Christian – Pentacost
Christian – Roman Catholic
Christian – Seventh-day Adventist
Christian – Syrian Catholic
Christian – Syrian Jacobite
Christian – Syrian Orthodox
Christian – Syro Malabar
தற்சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற Phillip Garrido குறித்த செய்தி: Questions arise over how kidnapper went undetected – Yahoo! News: “For 18 years, Phillip Garrido managed to elude detection as he pulled off what authorities are calling an unfathomable crime, kidnapping and raping 11-year-old Jaycee Dugard, keeping her as his secret captive for nearly two decades and fathering two of her children.”
பள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.
பதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.
மூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.
இந்தச் சிறுமிகள் பள்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.
அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நல்ல வேளை.
‘கமல்ஹாசன் – ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.
அப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:
மாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்
1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் – யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”
2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.
புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.
இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”
இப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா? தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா?
அமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா? அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா?
மேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா? எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது? எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது?
அதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு?
பாலியல் குற்றவாளி – Sex Offender
சிறுவன்களையோ சிறுமிகளையோ வன்புணர்பவர்
அவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.
குழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.
சிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.
மேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.
ரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.
மதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்
அந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.
ஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்கஎன்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.
‘மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.
‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.
தனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்
பாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.
1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.
2. வேட்டையாடு விளையாடு: – Garrido came under suspicion in the unsolved murders of several prostitutes in the 1990s, raising the prospect he was a serial killer as well. Several of the women’s bodies — the exact number is not known — were dumped near an industrial park where Garrido worked during the 1990s. Police executed a search warrant at his home in the investigation.
3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”
உங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா?
3. Just another week of rapes | Life and style | The Guardian: “Nearly 50,000 rapes and attempted rapes take place in the UK every year, but only a few are covered by the media. Julie Bindel gives a snapshot of which cases are reported – and how”
பரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா?
கோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை?
அன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே!
1. எந்தப் பக்கமும் சாயாத பாபா – தாமரையிலைத் தண்ணீர் போல் ‘ஒட்டி ஒட்டாமல் இரு’
2.எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வாணம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு
3. தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
காவியங்கள் உனைப்பாடக்
காத்திருக்கும்பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde