Tag Archives: வினா

Invitation: Articles for Solvanam

சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.

அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:

அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?

ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?

இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?

ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?

உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?

ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?

எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.

ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?

ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?

ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?

ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?

இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.

உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com

அழகிய பெரியவன் ஏன் “இந்து தமிழ்” நாளிதழை எரித்தார்?

காரணங்கள்:

1. திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தற்போதைய  தலைவரான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி ஆகிய இருவரில் யார் கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை 2007 ஆம் ஆண்டு மே 9-ம் தேதி தினகரன் நாளிதழ் வெளியிட்டது. தினகரன் நாளிதழ் கலைஞரின் பேரன் கலாநிதி மாறனின் சன் டி.வி குழுமத்தின் அங்கமாகும். கலைஞரின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக முடிவுகளை வெளியிட்டது தினகரன் நாளிதழ். மு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக தொண்டரணி அமைப்பாளருமான அட்டாக் பாண்டி தலைமையிலான குண்டர்கள் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகத்தை தாக்கினர். பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, பெட்ரோல் குண்டுகளை வீசியதில் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களாகப்  பணியாற்றிய வினோத், கோபி மற்றும் காவலாளி முத்து ராமலிங்கம் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

அந்த நிகழ்வை நினைவு கூறுவதற்காக, சிம்பாலிக் ஆக, அந்த அப்பாவி உயிர்களை நினைவு கோருகிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.

எழுத்தாளர் அழகியபெரியவன்.

2. தினத்தந்தி பத்திரிகையை இதே ‘குற்றத்துக்காக’ எரிக்க முடியுமா? நாடார் படைகள் வந்து சுளுக்கெடுத்துவிடும் என்கிற பயமா?

(என்னும் கேள்வியை அழகிய பெரியவனிடம் முன் வைக்கிறார் ஒத்திசைவு) வெ. ராமசாமி

தினத்தந்தி பத்திரிகை

3. அதிமுக கொடுத்த பணத்தை எரிக்க முடியாது. தினகரன் கும்பல் கைமாற்றிய பிட் காயினைப் பற்ற வைக்க முடியாது. அதெல்லாம் நிஜமாகவே காசு செலவாகிற விஷயம். எனினும், வாளாவிருக்க இயலாது. அதற்காக பைசா பிரயோசனம் இல்லாத அறச்சீற்றத்தைக் கையாள்கிறார் ரைட்டர் அழகியபெரியவன்.

4. ஹோமம் செய்தால் ஆன்மிகம் ஆகி விடும். அக்கினி வளர்த்தால் பிராமணக் கட்சி ஆகி விடும். எனவே, இவ்வாறு யக்ஞம் செய்கிறார் அழகிய பெரியவன்.

5. எல்லாப் பேப்பரையும் வாங்கி எரிப்பது நிஜமாகவே போர் அடிக்கும் வேலை. பாதி செய்தித்தாள் கடைகள் இயங்குவதில்லை. அன்றாடம் செய்தித்தாள் வாங்காவிட்டால், செய்தித்தாளே கையில் கிடைக்காது. தினசரி படிப்பதைத்தானே எரிக்க முடியும் என்கிறார் அழகிய பெரியவன்.

6. செய்தித்தாள்கள் எல்லாம் இது காலம் மட்டும் நிஜமாகவே “நான்காவது தூண்” என்று நம்பிக் கொண்டு இருந்தார் அழகியபெரியவம். அந்த போலி சாயம் போய் வெளுத்துவிட்டதில் அதிர்ச்சி அடைகிறார். அன்றாட பேப்பர்கள், ஊடகங்கள், மீடியாக்கள் எல்லாமே காசுக்காக அச்சிடுபவை என்றும் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்தியாக வெளியிடும் என்பதை உணர்கிறார் அழகியபெரியவன். அதனால் வந்த ஆத்திரம் இவ்வாறு வெளிப்பட்டது.

7. ஃபேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர் போன்ற ஊடகங்கள் மட்டுமே இவ்வாறு ஃபேக் நியூஸ் போட வேண்டுமா என்று போட்டிக்கு பிள்ளைப் பெற்றது தமிழக தினசரிகள். அன்றாடம் ஃபேஸ்புக், வாட்ஸாப் பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அப்ளிகேஷன்களை ஐஃபோனை விட்டு நீக்கவும் முடியாது. ஆப்பிள் ஃபோனையும் எரிக்க முடியாது. “எடுடாப் பேப்பரா… எரிடா பொறுப்பா!” என்று செயலில் இறங்கி ஃபேஸ்புக்கில் தன் கண்டனத்தைப் பதிவு செய்கிறார் அழகியபெரியவன்.

8. தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. தேர்தல் நாளன்று பேசப்பட விரும்பி, இச்செயலை நிறைவேற்றினார் அழகியபெரியவன்.

9. அமெரிக்காவில் “Burning Man” புகழ்பெற்ற விழா. அது வீடு அடங்கிக் கிடந்த காலத்தில் தள்ளிப் போடப்பட்டது. அதைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்கிறார் அழகியபெரியவன்.

தமிழ் விக்கிப்பீடியாவும் இயல் விருதும்: கேள்விகளும் சச்சரவுகளும்

E_Mayooranadhan_I_Mayuranathan

இயல் விருது அறிவிப்பு

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார். முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ நூறு பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.

இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது

Wiki_Tamil_Wikipedia_India_Languuages_Charts_Quality_Content_Stats_Statistics_users_updated

சிஜு ஆலெக்ஸ் Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு

1. Analysis of the Indic Language Wikipedia Statistical Report 2012 | Indian Wikimedia Stories

2. Wiki turns 15, free libraries a bonanza – Times of India

Page_View_Wikipedia_Tamil_India_Languages_Wkik_Users_Bengali_Hindi_readers_updated

 

கூகுளும் விக்கியும் மொழியாக்கமும்

 

Soda_Bottle_Bala_Jeyaraman-Google_translation_project_-_Tamil_Wikipedia.pdf

நன்றி: 1. A Review on Google Translation project in Tamil Wikipedia – A-Review-on-Google-Translation-project-in-Tamil.pdf

2. Google_translation_project_-_Tamil_Wikipedia.pdf

3. Google Translate Blog: Translating Wikipedia

 

தமிழ்விக்கியில் தரப்பட்டுள்ள புள்ளிவிவரம்

நன்றி: தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்

  • பக்கங்கள்= 2,43,640
  • கட்டுரைகள்= 84,002
  • கோப்புகள்= 9,251
  • தொகுப்புகள்= 20,92,989
  • பயனர்கள் = 94,626
  • சிறப்பு பங்களிப்பாளர்கள்= 304
  • தானியங்கிகள் = 181
  • நிருவாகிகள் = 37
  • அதிகாரிகள் = 4

 

தமிழ் விக்கிப்பிடியா தொடர்பாக எப்போதும் இருக்கும் கேள்விகள்

  1. உங்களைப் பற்றி விக்கிப்பிடியாவில் நீங்கள் தகவல் சேர்த்ததுண்டா?
  2.  உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் (நீங்கள் எழுதிய புத்தகம், விற்கும் பொருள் போன்றவை) தவிர வேறு எதாவது விக்கிப்பிடியாவில் எழுதியதுண்டா?
  3. ஸ, ஹ, ஜ, ஷ,  ஸ்ரீ, க்ஷ போன்ற எழுத்துக்களை நீக்கி கர்ண கடூரமாக்கும் முறை பற்றி உங்கள் எண்ணம் என்ன? (தொடர்புள்ள இடுகை: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு) – கவனிக்க… எனக்கு பஜ்ஜி சொஜ்ஜி பிடிக்கும்
  4. 85 பேர் சேர்ந்து 78.7% பக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் அந்தக் கூட்டமைப்பிற்குத்தானே விருது போக வேண்டும்?
  5. பலரும் வலைப்பதிவு, ட்விட்டர் ஓடை, ஃபேஸ்புக் பக்கம், புத்தக வெளியீடு, அச்சு நூல், ஊடக வேலை என்று பிழைப்பையோ பெருமையோ நாடும்போது, எது தன்னலமற்ற விக்கிப்பிடியாவை நாட வைக்கிறது?
  6. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விக்கிப்பிடியாவை குறிப்புதவிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை சொல்லியே வளர்க்கிறார்கள். இவ்விதச் சூழலில் விக்கிப்பிடியாவின் பயன்பாட்டையும் மதிப்பையும் எப்படி தக்க வைப்பது?
  7. நீங்கள் எழுதிய ஒன்றை இன்னொருவர் உடனடியாக மாற்றுவார்; உங்களின் ஆக்கத்தை மற்றொருவர் அழிப்பார்; பஞ்சாயத்தில் வரும் தீர்ப்பே இறுதி முடிவு என்னும் சூழலில் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தி எங்கிருந்து வருகிறது?
  8. லாபநோக்கற்ற அமைப்புகள் தொடர்ந்து நீடித்திருப்பது ஆச்சரியகரமானது. நன்கொடைகள் மூலமாகவே காலாகாலத்திற்கும் தமிழ் விக்கிப்பீடியா இயங்குமா?
  9. தமிழ் வாசிக்கத் தெரியாத (ஆனால், கேட்க/பார்க்க மட்டுமே தெரிந்த) தலைமுறை இப்போது உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் விக்கியின் வருங்கால முக்கியத்துவம் எப்படி இருக்கும்?
  10. விக்கிப்பிடியாவின் நம்பகத்தன்மையை எவ்வாறு நம்புவது? காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா? அல்லது மதவெறியைத் தூண்டும் அமைப்பிற்கும் பக்கம் ஒதுக்கி அவர்களின் தூஷணை வெளிப்பாட்டிற்கு தளம் அமைத்து இயங்குவதாலா?

சில சுவாரசியங்கள்

  1. டிசம்பர் 2003ல் முதன் முதலாக துவங்கியவுடன் எழுதப்பட்ட பக்கங்கள்:
    1. 1 2 தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் ,
    2. 2 2 தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் ,
    3. 3 1 இந்து சமயம்
  2. பத்து பக்கங்களுக்குள் கை வைத்தவர்களின் எண்ணிக்கை: 11,381 (80% பேர் சேர்ந்து இரண்டு சதவிகிதத்திற்கும் கீழான பக்கங்களில் கை வைத்திருக்கிறார்கள்)
  3. டாப் 10 விக்கிப்பிடியர்களை இங்கேக் காணலாம்.
  4. ஆங்கில் விக்கியில் கீழ்க்கண்ட பக்கங்கள் மிக அதிகமாக மறுபடியும் மறுபடியும் திருத்தி சண்டைக்குள்ளாகி எடிட் செய்யப்பட்டிருக்கிறது:
    1. Sri Lankan Tamil people
    2. Sri Lankan Tamil nationalism
    3. Liberation Tigers of Tamil Eelam
    4. List of top Tamil-language films
    5. Chennai Super Kings
  5. இன்றைய தேதியில் 61ஆம் இடத்தில் தமிழ் இருக்கிறது:
    1. 61 Tamil தமிழ் ta 84,002 243,640 2,092,989 37 94,626 304 9,251 31
    2. Language Language (local) Wiki Articles Total Edits Admins Users Active Users Images Depth
  6. ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கு விக்கி ஆக்கங்களை உருவாக்கியதைக் குறித்த விழியத்தை இங்கே பார்க்கலாம் (தொடர்புள்ள பதிவு: Duolingo creator: ‘I wanted to create a way to learn languages for free’ | Education | The Guardian)
  7. இன்றைய நிலையில் தலை பத்து விக்கி மொழிகள்:
    1. வரிசை மொழி மொத்த விக்கியில் இந்த மொழியின் பங்கு
      1 ஆங்கிலம் 55.5%
      2 ருஷியன் 5.9%
      3 ஜெர்மன் 5.8%
      4 ஜப்பானிய 5.0%
      5 ஸ்பானிஷ் 4.6%
      6 ஃபிரென்ச் 4.0%
      7 சீனம் 2.8%
      8 போர்த்துஇசியம் 2.5%
      9 இத்தாலிய 1.9%
      10 போலிஷ் 1.7%
  8. பயன்பாட்டின் (உபயோகிப்போரின் எண்ணிக்கைப்படி)
    1. வரிசை மொழி வலைவழியே பார்வையிடுவோர் தொகை     மொத்த வருகையாளர்களின் இந்த மொழியின் பங்கு
      1 English 872,950,266 25.9%
      2 Chinese 704,484,396 20.9%
      3 Spanish 256,787,878   7.6%
      4 Arabic 168,176,008   5.0%
      5 Portuguese 131,903,391   3.9%
      6 Japanese 114,963,827   3.4%
      7 Russian 103,147,691   3.1%
      8 Malay 98,915,747   2.9%
      9 French 97,180,032   2.9%
      10 German 83,738,911   2.5%
  9. விக்கி திட்டங்கள்
    1. திட்டம் உரல்
      விக்கிப்பீடியா http://ta.wikipedia.org/
      விக்‌ஷனரி http://ta.wiktionary.org/
      விக்கி புத்தகங்கள் http://ta.wikibooks.org/
      விக்கி மூலம் http://ta.wikisource.org/
      மேற்கோள் விக்கிப்பிடியா http://ta.wikiquote.org/
      செய்திகள் வாசிப்பது விக்கி http://ta.wikinews.org/
  10. மேலும் புள்ளிவிவரங்கள்
    1. ata Languages Regions Participation Usage Content
      Month Code
      ⇒ Project
      Main Page
      Language
      ⇒ Wikipedia article
        Speakers in millions
      (log scale) (?)

        Editors per million
      speakers (5+ edits)
      Prim.+Sec.
      Speakers
      M=millions
      k=thousands
      Editors (5+)
      per million
      speakers
      Views
      per hour
      Article
      count
    2. Dec Summary Tables Charts ta Tamil AS
      66 M 2 2,668 83,971

நன்றாக எழுத என்ன தேவை?

ஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.

சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்?

1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்?
2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்? ஏன்?
4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

இப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.

பள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.

ஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ!’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.

இதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது?’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.

நான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ!?

ஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.

இது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.

கிறித்துவ மதப் பிரச்சாரகருக்கான வினாக்கள்

கோடை காலத்தின் மதியங்களில் வீடு வீடாகப் போய் பைபிளோடோ அல்லது சைக்கிளோடோ வந்து பிரச்சாரம் செய்பவர்கள் இங்கே அதிகம். அழைப்பு மணி அடித்தால், திறந்து பார்த்தால், ‘உங்களை நல்வழிப்படுத்தறேன்.’ என்று மென்மையாகவும், ‘எல்லாக் கேள்விகளுக்கும் விடை வைத்திருக்கிறேன்’ என்று அறிவுபூர்வமாகவும், ‘சோகம் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்’ என்று பூஸ்ட் ஆகவும் கிறித்துவத்திற்கு அழைக்கிறார்கள்.

இந்தியாவில் எத்தனை சாதி என்று எண்ணிவிடலாம். கிறித்துவத்தில் எத்தனை உட்பிரிவு என்று அளவிடுவது இறைவரால் மட்டுமே இயலும். ஒவ்வொரு பிரிவினருக்கும் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.

“ஜனநாயகத்தில் நம்பிக்கை உண்டா? போப் தேர்தலில் நான் வாக்களித்து தேர்தல் நடக்குமா?”

“ஸ்பெயின் இன்க்விஸிஷன் குறித்து பாவ மன்னிப்பு கோரியாச்சா?”

“நான் நிச்சயம் உங்கள் புத்தகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்து முடிக்கிறேன். எனக்காக நீங்களும் குரானோ பகவத் கீதையோ வாசித்து விடுகிறீர்களா?

“ஆதாமும் ஏவாளும் குரங்கு என்று என்னுடைய வேதநூல் சொல்கிறதே? அதைப் பற்றி பேசலாமா?”

ஸ்தோத்திரம்

What does the Bible say about snake handling? Should we be handling snakes in church?:

I said, ‘I don’t think you are qualified to speak to me about Jesus‘. They looked very astonished and asked, ‘Why not’? ‘Because’, I said, ‘you have no faith’. ‘Our faith in Jesus is as strong as a rock’ they insisted. ‘I don’t think it is’ I said with a smile. ‘Please open your Bible and read the Gospel of Mark, chapter 16, verse 16, 17 and 18′ I said and while they flicked through their Bibles I went quickly inside and came out again.

One of them found the passage and I asked him to read it out loud. It said, ‘He who believes and is baptized will be saved but he who does not believe shall be condemned. And these signs will follow those who believe in my name. They shall cast out devils, they shall speak in tongues, they will handle snakes and if they drink poison it will not hurt them and they will lay hands on the sick and they will recover’.

When he finished I said, ‘In that passage Jesus says that if you have real faith you will be able to drink poison and not die’. I took a bottle of Lankem from behind my back, held it up and said, ‘Here is some poison. Demonstrate to me the strength of your faith and I will listen to anything you have to say about Jesus’.

You should have seen the looks on their faces! They didn’t know what to say. ‘What’s the problem’? I asked. ‘Is your faith not strong enough’? They hesitated for a few moments and then one of them replied, ‘The Bible also says that we must not test God‘. ‘I’m not testing God’, I said, ‘I’m testing you. You love to witness for Jesus and now is your big opportunity’.

It is describing something that will occur, not commanding that something should occur. An example of this is the Apostle Paul inActs 28:3-5: “Paul gathered a pile of brushwood and, as he put it on the fire, a viper, driven out by the heat, fastened itself on his hand … But Paul shook the snake off into the fire and suffered no ill effects.” Notice that Paul did not seek out to handle a snake. The snake bit Paul, but God protected Paul from the effects of the snake bite. Mark 16:17-18 is saying that if you are faithfully serving God in the spread of the gospel, He can protect you from anything that may cross your path.

 

7 Questions for America’s Udhayakumar supporters and Infrastructure critics

தொடர்பான பதிவு: அணு உலைகளை ஏன் ’அமெரிக்கா’ உதயகுமார் எதிர்க்கிறார்?

1. கூடங்குளம் உண்ணாவிரதம் » ஜெயமோகன்: இந்தநிமிடம் வரை நம்முடைய முக்கியமான அதிகார பீடங்கள் எவையும் அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதுவரை அவரைநோக்கி ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக்குரல் வரவில்லை.

ஒசாமா பின் லாடன் மதத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார். வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாதவர்களை அமெரிக்காவில் யூனியன் தொழிலாளிகள், மிரட்டி உருட்டுவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்; அடி வாங்கி இருக்கிறேன். இந்த மாதிரி கொள்கைக்காக கொண்ட லட்சியத்தில் ஈர்ப்போடும் முனைப்போடும் இருப்பவர்களின் உள்நோக்கங்களை ஆராயாமல் உள்ள உறுதியை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டுமா?

2. இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை… « திண்ணை – ஞானி: சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்த்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள்.

நீங்களும் இணையத்தை பரவலாக வாசிப்பீர்கள் என்று அறிந்திருக்கிறேன். மின்ரத்து இல்லாத சில மணித்துளிகளில் கீழ்க்கண்ட உரல்களை படித்து தெளிவடைவீர்கள் என்று நம்புகிறேன்.

அ) Benefits Of Nuclear Power
ஆ) Top 10 Facts About Nuclear Energy – CASEnergy Coalition

3. அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள் ! | வினவு!: ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ, வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.

தங்கம் வாங்கினால் திருடு போய் விடும். வண்டி ஓட்டினால் விபத்துக்குள்ளாகும். கணினியால் கண் பிரச்சினை வரும்; செக்ஸ் வைத்துக் கொண்டால் எயிட்ஸ் வரும். மின்சாரம் வந்தால் ஆபத்து வருமா?

4. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar: They promise foreign direct investment (FDI), nuclear power, development, atom bombs, security and superpower status. We demand risk-free electricity, a disease-free life, unpolluted natural resources, sustainable development and a peaceful future.

நிலக்கரி போன்ற நச்சுத்தன்மையற்ற எரிசக்தி கிடைப்பது ஏன் பிடிக்கவில்லை? கேரளா மாநிலம் முழுக்க காற்றாலையால் ரொப்பி வருண பகவான் அருளினால் கூட கூடங்குளம் போன்ற குறுகிய இடத்தில் கிடைக்கும் உற்பத்தி கிடைக்காது. மக்கள் முன்னேற்றத்தை விட, தங்கும் இருப்பிடத்தை விட இராட்சத காத்தாடிகள்தான் தங்கள் குறிக்கோளா?

5. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.: அணுக்கழிவுகளை தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்று சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையில் இருந்து கழற்றி வைத்து விட்டு பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது.
.
.
ஃபாசில் எரிபொருட்களின் வளம் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப்பிரச்சனை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும்.

ஒரு யுரேனியம் குளிகை – அதாவது உங்களின் சுண்டு விரல் கூட அல்ல… சுட்டுவிரலின் நுனி
– (சவுதி எண்ணெய்க் கிணறுகளின் கிடைக்கும்) பதினேழாயிரம் கன சதுர இயற்கை வாயு
– எண்ணூறு கிலோ நிலக்கரி
– ஐநூறு லிட்டர் பெட்ரோல்

இப்படி முழுவதும் தயாரான, தற்கால நுட்பங்களை உள்ளடக்கிய, தொழிற்சாலையை இயக்குவதில் அதன் மூலம் பயனடைவதில் ஏன் சுணக்கம்?

6. Koodankulam: Letter to IAEA, Nuclear Regulators and Human Rights Organisations — DiaNuke.org: The KKNPP reactors from Russia are being set up without sharing the Environmental Impact Assessment (EIA), Site Evaluation Study and Safety Analysis Report with the people, or the people’s representatives and the press. No public hearing has been conducted for the first two reactors either

அமெரிக்கா வரை சு. ப. உதயக்குமாரால் சுற்றுலா வரமுடிகிறது. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாட முடிகிறது. உலகெங்கிலும் இருந்து பணம் கொணர முடிகிறது. ஆனால், திருநெல்வேலி வரை வந்தவர்களை சந்திக்க செல்ல முடிய வில்லையா? அரசு ரகசியங்களையும் பாதுகாப்பு ஆவணங்களையும் படிப்பதற்கு நேரம் ஒதுக்க மனமில்லையா?

7. 02 | மார்ச் | 2012 | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்: “உதயகுமாருக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம்”: ஜெர்மனிய நிறுவனத்திடமிருந்து –
2,15,21,900.00 ரூபாய். INDISKA MAGASINET AB Box 27317,S-102 54,Stockolm, Sweden என்கிற ஸ்வீடிஷ் நிறுவனத்திடமிருந்து 41,91,222.00 ரூபாய்.”

இவ்வளவு சொல்ப வருமானத்தை வைத்துக் கொண்டு பள்ளிச்சிறுவர்களை படிக்க அனுப்பாத பெற்றோர்களுக்கு பஞ்சப்படி தர முடிகிறதா?

வினாடி வினா: உலகமயமாக்கல் பொது அறிவு கேள்விகள்

globalization-world-foreign-answers_fp_quiz

விடைகள் சரி பார்க்க: Foreign Policy: The FP Quiz

உங்க ஸ்கோர் என்ன?

மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

மைத்ரேயனின் கருத்துகள்…

பராக்கின் ரசிகன் அல்ல நான்.

ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.

ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 ஆண்டு அரசியல் முதலீட்டில் அவர்கள் சேமித்து வைத்த பெரும் நிதிக் குவியல் அது கொணரும் ஏராளமான ஊடக பலம் எல்லாவற்றையும் தன் பேச்சு வன்மையாலும், மக்களை அது சென்று சேரும் தன்மையைப் புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்ததாலும் வென்று வந்தவர்.

மகெய்னுக்கு இதே செயலைச் செய்ய கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆயிருக்கின்றன.

பராக் கிட்டத்தட்ட தாம் எந்தக் கொள்கைகளை முதலில் முன்வைத்தாரோ அவற்றில் இருந்து பெரிதும் பின் வாங்காமல் இந்த உள்கட்சித் தேர்தலை வென்றிருக்கிறார்.

மகெய்ன் கடந்த 30 வருடங்களில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் நிறைய நிறைய. பெரும் பண முதலைகளின் பின்னணியும், கிருஸ்தவ சர்ச்சுகளின் பலமும், அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வையும் அவருக்கு ஒரு வலு உள்ளதான பிம்பத்தைக் கொணர்கின்றன.

உண்மையில் மகெய்னுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஏதும் உருப்படியாகத் தெரிந்திருக்காது என்பது என் கணிப்பு. பராக்கிடம் நிறைய சிறந்த நடுவயது executive talent அதுவும் குறிப்பாக financial sector இல் இருந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு ஜனாதிபதி அமெரிக்காவில் அவரே எல்லாவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்பதை புஷ் 8 ஆண்டுகளில் திறம்பட நிரூபித்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல பிலியன் டாலர்கள் வாண வேடிக்கை விட்டுக் கொண்டு 8 வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கிறது.

இது ஒன்றே போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கதிகலங்க அடிக்க.

பல ட்ரிலியன் டாலர் போர ஒன்றை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அதன் பொருளாதாரம் க்ஷீணித்துப் போவதில் அதிசயம் இல்லை.

போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடம் இருந்து பெறும் லாபம் எல்லாம் அமெரிக்காவில் தானே முதலீடு செய்யப்படும் என்று யாராவது கோணலாக ஒரு வாதம் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும் 8 ஆண்டுகள் ரிபப்ளிகன் கட்சி பதவியில் இருந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் காலாவதி ஆகி விடும். அதற்காக டெமக்ராடிக் கட்சி ஏதோ உன்னத புருடர்களால் ஆனது என்று நான் வாதிடவில்லை.

இருக்கும் பிசாசுகளில் எது நல்ல குழந்தை என்று கேட்டதற்கு, அப்பன் சொன்னானாம், அதோ கூரை மேல் ஏறி நின்று தீப்பந்ததால் வீட்டுக்கு நெருப்பு வைக்க முயல்கிறதே அவன் தான் இருப்பதற்குள் நல்லவன் என்று.

அந்த நிலைதான் அமெரிக்கப் பிரஜைகளுக்கு. ஆனால் வினையை எத்தனை நாடுகளில் விதைத்தார்கள். அதெல்லாம் திரும்பி வருகிறது.

என்ன பிரச்சினை என்றால் தனி மனித அமெரிக்கர்கள் நிறைய நன்மை செய்ய முயன்றிருக்கிறார்கள் அதெல்லாம் எப்படித் திரும்பி வந்து உதவும் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்று நீங்களே சொல்லி மெக்கென் இடம் இருக்கும் மைனஸ்களை நீங்களே இல்லாமல் செய்துவிட்டீர்கள்.

புஷ் பொருளாதாரத்தில் ஈராக் யுத்தத்தினால் அமெரிக்காவுக்கு பொருளாதார லாபம் ஏதுமில்லாதது போல் நீங்கள் போட்ட கணக்கு ஒப்புக்கொள்ள முடியாதது. புஷ் ஏதோ வெறி பிடித்து சண்டை ஆரம்பித்து நடத்தியது போன்ற பிம்பம் சரியானதில்லை. யுத்தம் ஒன்றும் நஷ்டகணக்கு அல்ல.

உங்கள் இரண்டு வாதங்களையும் நான் முன்னமே எதிர்பார்த்து அந்த இரு வரிகளையும் எழுதினேன்.

அமெரிக்க அதிபர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டாம் என்பது ரானால்ட் ரேகன் காலத்தில் உறுதிப்பட்டுப் போயிற்று.

எல்லாம் தெரிந்த கிளிண்டனால் வலது சாரி செனட், காங்கிரஸ் ஆதிக்கத்தில் ஏதும் உருப்படியாக மக்களுக்குச் செய்ய முடியாமல் பொருளாதாரத்தை ஓரளவு பெரும் பண முதலைகளின் கைப்பிடியில் இருந்து மீட்டு மத்திய தர மக்களுக்கு ஓரளவு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து விட்டுப் போனதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை நான் அவ்வளவு நம்புவதில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகையும், ஆடிகளும் அதிகம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பால்பட்ட சானல் தீவுகள் போன்ற இடங்களில் அமெரிக்கப் பண முதலைகள் சேர்த்து வைத்திருக்கும் நிதியின் அளவு ஒரு வேளை அமெரிக்காவின் வருட மொத்த வருமானம் அளவு கூட இருக்கும் என்று ஊகம் .

இதைப் பற்றி மதர் ஜோன்ஸ் என்ற ஒரு சிறப்பான அரை இடது, தொழிலாளர் சார்பு ஆனால் நல்ல ஆய்வு சார்ந்த பத்திரிகை மரபைக் கடைப்பிடிக்கும் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு வருடம் முன்பு பிரசுரித்தது என்று நினைவு. அதை அந்தப் பத்திரிகையின் வலைப் பக்கத்தில் போய் ஆவணங்களில் தேடினால் கிடைக்க வாய்ப்பு அதிகம். நான் இந்தப் பத்திரிகையின் நாணயத்தையும், நா நயத்தையும் நம்புபவன்.

இப்படித் தனிநபர் ஜனாதிபதி ஒன்றும் பொருளாதாரத்தில் பிரமாதமாகக் கிழித்து விட முடியாது என்ற கருத்தை கருத்தியலில் (ideology) அமைப்பியல் பார்வை என்று சொல்வார்கள். நான் அமைப்பியலுக்கும், தனிநபர் வாதத்துக்கும் இடையில் இருப்பவன்.

தனிநபர் ஏதோ உலகத்தையே புரட்டி விட முடியும் என்ற கருத்து ஓரளவு இளம்பிள்ளைக் கருத்து. அந்த வயதில் தாம் அசாதாரண சக்தி உள்ளவர்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடில் என்ன பிரயோசனம்? இளைஞர் வளர அந்த நம்பிக்கை அவசியம்.

நடுவயது வரும்போது அமைப்புகளின் இயல்பு புரிந்து தனிநபர் சாகச விழைவுக்கும், அமைப்பின் எளிதில் நகராத் தன்மைக்கும் இடையில் எப்படி ஊடாடி காரியங்களைச் சாதிப்பது என்பது ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

இதில் ஓரளவு ஹிலரி வெற்றி பெற்றிருந்தார் சமீபத்து ஏழு எட்டு ஆண்டுகளில். அவரது இந்த அனுபவ முதிர்ச்சி இப்போது வீணாகப் போகிறது என்பதில் எனக்கு வருத்தமே.

ஆனால் மகெய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. அவர் தன் வியத்நாம் போர்க்கைதி பிம்பத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாள் காலம் ஓட்டி இருக்கிறார். ரிபப்ளிகன் நிர்வாகங்கள் அவருடைய காலத்தில் கிட்டத்தட்ட 2/3 பகுதி இருந்ததால் அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி இருக்கவும்
வாய்ப்புண்டு.

ஆனால் நிர்வாகத் திறமை என்று பார்த்தால் ஓபாமாவுக்கும் இவருக்கும் எந்த பெருத்த வேறுபாடும் இல்லை. இருவரும் அமெரிக்க அரசியலில் மிகவும் பெருமையாகக் கருதப்படும் executive experience அதாவது மேலாட்சியாளராக இருந்து நிர்வாகம் செய்து வெற்றி பெறுவது என்ற அம்சத்தில் முழு சூனியம். இருவருக்கும் அது கிடையாது.

[ இந்த அனுபவம் என்பதே ஒரு விதமான மாயை என்பதை நாம் இப்போது கருத வேண்டாம். அதற்குள் நுழைந்தால் நான் மிகவும் cynical ஆக இதை அணுகுகிறேன் என்று எல்லாரும் திட்டுவார்கள் என்று ஊகம் உண்டு.]

ஒபாமாவுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம், ஏனெனில் புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை. டெக்சாசில் தான் ஏதோ பெருத்த முன்னேற்றங்கள் கொண்டு வந்ததாக அவர் தம்பட்டமடித்தது எல்லாம் ஊடகங்களின் ஒத்துழைப்போடு அவர் நடத்திய மாயை என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து பின்னால் நிரூபித்த கட்டுரைகள் பல பார்த்திருக்கிறேன்.

அவருக்குப் பின்னே ஊடகங்களும், கிருஸ்தவப் பேரியக்கங்களும், க்ளிண்டனின் உருப்படா பாலுறவுக் கேளிக்கைகளால் அன்னியப்பட்ட ஒரு பெரும் நடு அமெரிக்க மக்கள் திரளும் இருந்தன. அப்போதும் கூட தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

இப்படிக் கத்தி முனையில் இருந்த ஒரு நாட்டை அனேகமாக ரிபப்ளிகன் கட்சியின் மீது வெறுப்பே வருமளவுக்குத் தள்ளி இருக்கும் பெருமை புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம்.

ஊழல் மக்களுக்கு உதவாது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு infrastructural investment இல் ஏராளமாகப் பின் தங்கி இருக்கிறது என்பது எத்தனை ஆயிரம் பாலங்கள் இடியும் அபாயத்தில் இருக்கின்றன, அவற்றைப் பற்றிப் புஷ் அரசு கவலையே படவில்லை என்று மத்திய அரசின் ஹைவேஸ் டிபார்ட்மெண்டின் உள்ளாய்வு அறிக்கையே சமீபத்தில் குறை சொன்னதாக ஒரு அறிக்கை படித்தேன்.

மேலும் புஷ் அண்ட் கோ கொள்ளை அடித்தது மக்களுக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களானால் அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

  • சாதாரண தொழிலுற்பத்தியால் ஏராளமான தொழிலாளருக்கு வேலை கிட்டும்,
  • உள்நாட்டில் நுகர்பொருட்கள் நிறைய மக்களுக்குக் கிட்டும்,
  • சுழற்சியில் பணமும், லாபமும், முதலீடும் நாட்டுக்குள்ளேயே தங்கும்.
  • மக்களிடம் வேலைத் திறன்,
  • தொழில் நுட்ப அறிவு,
  • ஊக்கம், வாழ்வில் பிடிப்பு,
  • பண்பாட்டில் நம்பிக்கை, மேலெழுந்து வர உழைக்கும் ஆர்வம், தவிர
  • நல்ல வாழ்க்கை வாழ்வதில் கிட்டும் ஒருவித விகாசம் எல்லாம் இருக்கும்.

ராணுவத் தளவாடத் துறையின் பொருட்கள் மக்களால் நுகரப்பட முடியாதவை. அவை சுழற்சி இல்லாதவை. வெறுமே பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு துருவேறிக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டுப் பயிற்சியும் பெறும் மனிதர்கள் சாதாரண வாழ்வுக்கு அந்தத் திறமைகளை மாற்றித் தர சில பத்தாண்டுகள் பிடிக்கும். ராணுவ வீரர்கள் பெருமளவு பாசறைகளில் வாழ்வதால் இந்தத் திறன் எளிதில் மக்களிடம் கை மாற்றித் தரப்படுவதில்லை.

தவிர ராணுவத் தளவாடங்கள் சாதாரண நுகர் பொருட்களைப்போல மலிவு விலைக்குக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப் படுவதில்லை. அவை நுகர்வாரிடம் விற்கப் படுவது உயர் விலைகளுக்கு, அந்த உயர் விலையை அரசிடம் பெறுவதற்காக நிறைய லஞ்சமும் ஊழல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது அரசை மேலும் மேலும் உளுத்துப் போகச் செய்கிறது, மக்களின் வரிப்பணம் நல்ல ஆக்க பூர்வமான வேலைகளுக்குப் பயன்படாமல் கோடவுனில் தூங்கப்போகும் பொருட்களுக்குச் செலவிடப்பட்டு மக்களின் தேவைகள் பின்னே ஒத்திப் போடப்ப்டுகின்றன.

இதுவும் சுழற்சியில் மக்களின் முதலீட்டு வளர்ச்சியை முடக்குவதே.

இதைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தீர்களானால் ஏன் ராணுவச் செலவு அதிகமாக உள்ள நாடுகள் உருப்படாமல் போகின்றன என்பது புரிய வரும்.

ஆக ஒபாமா இளைஞர் ஆனாலும் அறிவு தீர்க்கம் உள்ளவர் என்பதை மனதில் வைத்து, எப்படி ஹிலரியைப் போன்ற் ஒரு வலுவான் எதிராளியை அவர் தோற்கடித்தார் என்பதையும் கருதுங்கள்.

அந்தத் தேர்தல் ஏதோ வெறும் பிரச்சாரத்தால் வெல்லப் படக் கூடியதல்ல. சில ஆயிரம் குழுக்களை நாடு முழுதும் அமைத்து அவற்றை நடத்தி கோணல் ஏதும் இல்லாமல் சமாளித்து இரண்டு வருடம் போல இந்தப் போட்டி நடக்கிறது. கடுமையான உழைப்பு தேவை இதற்கு. அதுவும் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து வர இந்த உழைப்பு ஏராளமாகத் தேவை.

ஹிலரிக்கு எல்லாம் அனேகமாக ஏற்கனவே வேண்டுகிற இடத்தில் இருந்தன.

மகெய்னுக்கும் பல வருடங்களாக அதிபர் தேர்தலில் போட்டி இட்டுத் தோற்றுத் தோற்று கற்ற பாடங்கள் நிறைய, அமைப்பும் இடத்தில் இருந்தது. எதிர்க்க வலுவான ஆட்கள் யாரும் இல்லாததாலும் அவர் ஓரளவு சுலபமாகவே இந்தப் போட்டியில் வென்றிருக்கிறார். அவரும் பல பத்து வருட நிதி சேமிப்பில் மேலே மிதந்து வந்து வென்றிருக்கிறார்.

மகெய்னுடைய தத்துவமோ, பொருளாதாரக் கொள்கைகளோ புஷ்ஷின் கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றில் இருந்து அதிகம் மாறக் கூடியவை அல்ல, ஏனெனில் அவருக்குப் பின் நிற்கும் பண பலம் அப்படி ஒரு பெரும் விலகலை அனுமதிக்காது.

ஒபாமாவுக்கு இந்த வகை கட்டுப்பாடுகள் குறைவு. அதுவும் 8 வருடமாக அதிகாரத்தில் இல்லாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளி வருவதால் பணமுதலைகளின் influence அவர் மேல் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. குறைவு என்றுதான் சொல்கிறேன்.

மேலும் அவருடைய rhetoric, policy declaration எல்லாம்

  • நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் பொருளாதாரம்,
  • தொழில் உற்பத்தியை நாட்டில் வளர்க்க முயற்சி செய்தல்,
  • ராணுவச் செலவை மட்டுமல்ல, அன்னிய மண்ணில் போய் அட்டகாசம் செய்யும் கருத்தையே ஓரம் கட்டுதல்

என்று பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன.

இவை ஏதும் பொருளாதாரத்தில் தற்குறியாக இருந்தால் புரியாமல் செய்யவோ அல்லது பேசவோ முடிந்திருக்காது.

என் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பத்துபக்கம் எழுத விருப்பம் இல்லாமல் கோடி மட்டும் காட்டி விட்டேன். அதை நீங்கள் உள் நுழைந்து உள் தர்க்கம் எப்படி ஓடும் என்று பார்த்துப் புரிந்து கொண்டால் நல்லது.

நல்ல கேள்வியைக் கேட்பது எப்படி?

நிறைய கேள்வி பதில்கள் பதிவகங்களில் கிடைக்கின்றன. இந்தப் பதிவின் இறுதியில் தற்காலத் தொகுப்பை பார்க்கலாம்.

கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்பதற்காக இந்தக் வலைக்குறிப்பு…

Mortgage crisis; sub prime loan பிரச்சினைகள் என்று ஏழு கடல், ஆறு மலைகளைத் தாண்டி அமெரிக்க கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் புதுமணத் தம்பதியினர். வீடு வாங்கினார்கள். கொஞ்சம் சல்லிசாக கிடைக்கிறது என்பதற்காக மஞ்சக்கடிதாசு கொடுத்தவரின் பழைய வீட்டை அமுக்கிப் போடுகிறார்கள்.

ஹாலில் கோவிந்தா பிங்க் பல்லை இளிக்கிறது. அவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் விஸ்டாவின் இனிமையான வண்ணங்கள் மட்டுமே மனதுக்கு லகுவாக இருக்கும். மாற்ற முடிவெடுக்கிறார்கள்.

பக்கத்துவீட்டுக்காரன் ஆன என்னை அழைத்து, “உங்களுக்கும் இதே சைஸ் ஹால்தானே? இப்பத்தான் வெள்ளையடிச்சேன்னு சொல்றீங்க… எத்தனை டப்பா பெயிண்ட் வாங்கினீங்க?”

“ஏழு” என்றேன்.

சூலா அமுது கூட விருந்தோம்பாமால், துரத்திவிட்டு விடுகிறார்கள்.

ஹோம் டிப்போ சென்று ஏழு டப்பாவை வாங்கி, வேலையை ஜரூராக ஆரம்பிக்கிறார்கள். நான்காம் டப்பா முடிவதற்குள் ஹால் பளிச்சென்று தயார்.

கோபம் கலந்த குழப்பத்துடன் மாம்பழ மார்ட்டினி பருகும் ராத்திரியில் கதவு தட்டப்படுகிறது. “நீங்க சொன்ன பேச்சக் கேட்டதால், மூணு டப்பா வேஸ்டு!!” என்கிறார்கள்.

“ஓ… உங்களுக்கும் பாக்கி ஆயிடுச்சா!” என்று வழியனுப்பினேன்.

கேள்வி வடிவமைப்பது ரொம்ப முக்கியமான விஷயம்.

இனி பதிவுகள்…

  1. தனித்திரு விழித்திரு பசித்திரு – செந்தழல் ரவி: “முடியல முடியல் – கேள்வி பதில் பதிவு”
  2. Vasantham Ravi வசந்தம் ரவி: “வசந்தம் ரவி ரிடன்ஸ் – கேள்வி பதில் பதிவு”
  3. முதுவை ஹிதாயத்: இஸ்லாம் கேள்வி-பதில்
  4. ரவிபிரகாஷ் – ஏடாகூடம்: கற்பனைக் கேள்வி பதில்! (கல்கி – 30.3.80)
  5. :-): தானே கேள்வி தானே பதில் – அதிரடிப் பதிப்பு!!
  6. பரஸ்பர நிதி: பரஸ்பர நிதி – கேள்வி பதில் 2 (Mutual Funds. Q&A part 2)
  7. நாகரீக கோமாளி: பதில்களற்ற கேள்விகள்
  8. தமிழ் பைபிள் பாருங்க: கிறிஸ்த்தவம் கேள்வி பதில்
  9. Dondus dos and donts: டோண்டு பதில்கள் – 21.03.2008
  10. ஆச்சார்ய ஹ்ருதயம்: குருவிடம் சில கேள்விகள் – 2
  11. கலைஞருக்கு சில கேள்விகள்… « கடுகு.காம் – Kadugu.Com
  12. IdlyVadai – இட்லிவடை: இட்லி வடை பதில்கள் 31-3-2008

மாபெரும் விலைக்குறைப்பு – நகைக்கடையும் லாலுவின் இரயில்வேயும்

இந்திய வரலாற்றிலேயே, எந்த துறையாக இருந்தாலும் சரி. “கட்டணம் குறைப்பு” என்ற தலைப்பை செய்தித்தாள்களில் முதன்முறையாக இன்றுதான் இந்தியன் பார்க்கிறான்.
லக்கிலுக்

தினத்தந்தி செய்தியின் படி:

தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு
100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1
200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2
300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3
400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4
500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5
700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7
900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8

அமெரிக்காவின் ஆம்ட்ராக் இருவுள் நிறுவனம், விமானசேவைக்கு பலியாகிக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசின் தாராளமான மானியங்களினால் ஓரளவு தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அது மாதிரி ஆகாமல், பணவீக்கத்துக்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்தாமல் இருப்பதற்கு லாலுவை பாராட்டவேண்டும்.

அதே சமயம், ஒத்தை ரூபாயை பேரம் பேசுவது போல் இறக்கிவிட்டு, ‘இமாலய விலைக்குறைப்பு’ என்று சந்தைப்படுத்துவது, லல்லுவின் மானகைத் திறனை பறைசாற்றுகிறது.

தகவலறியும் சட்டத்தின் மூலம் அல்லது விஷயமறிந்தவர்கள் மூலம் அறிய விரும்புபவை:

  • Safety: கடந்த ஆணடில் எத்தனை விபத்துகள் நடந்தன? இவற்றில் எப்பொழுது எல்லாம் இந்திய இருவுள் அலுவலரின் கவனக்குறைவினால் நிகழ்ந்தது?
  • Danger/Prevention: காரோட்டி வந்து மோதியவர்கள், கடக்கும்போது தவறிப் போனவர்கள் ஆகியவற்றின் கணக்கு என்ன? இவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது
  • Security: சம்ஜவுதா குண்டுவெடிப்பு போன்றவை தடுக்க, அண்டை நாடுகளுடனான போக்குவரத்தில் உள்நுழைபவர்களுக்கான சோதனை, விமான பாதுகாப்பு பரிசோதனை போல் உள்ளதா?
  • Disabled Friendly: கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு வசதியாக இருவுள் நிலையங்களும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் அமைந்திருக்கின்றனவா? எத்தனை? மற்றவை எப்பொழுது மாற்றப்படும்
  • Privacy Protection: பெயர்களை வெளியில் ஒட்டும் முறை இன்னும் தொடர்கிறதா? ஏன்? தனி மனிதரின் பெயர்/வயது/பால்/இனம்/மொழி போன்றவை இவ்வாறு வெளிப்படுத்துவது தடுக்கப் பட முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா?
  • On time Performance: எத்தனை இரயில்கள் நேரத்துக்கு சென்றடைகின்றன? அரை மணி நேரத்துக்கு மேல் தாமதமாக செல்லும் சதவிகிதன் என்ன?