Tag Archives: மதராஸ்

பேட்ட (அ) பட்டினம்

சென்னை என்றால் மதராஸ்.

மதராஸ் என்றால் மதர் ஆசி.

அந்த மதர் உங்கள் அம்மா ஆக இருக்கலாம்!

அல்லது அகில இந்திய அண்ணா திமுக கட்சியின் அம்மா ஆக இருக்கலாம்!

பாண்டிச்சேரி மதர் ஆக இருக்கலாம்!

மதர் தெரஸா ஆக இருக்கலாம்!

அன்னை மேரி ஆக இருக்கலாம்!

அதுதாங்க சென்னை.

இங்கே மதம், கட்சி, எல்லாம் இல்லாததால் –> மதராஸ்.

அது ஒரு மொழி.

பிராமணா பாஷை…

கொங்குத் தமிழ்…

நாகை மலையாளம்…

இதெல்லாம் தமிழென்றால் –> மதராஸில் இருப்பது தொல்காப்பியத் தமிழ். ”வளர்தமிழ்” (வளர்ந்தது, வளர்கிறது, வளரும்)

சோ இதை முதலில் திரையில் விக்கிப்பிடியாத்தனமாகப் பதிந்தார்.

அதன் பின் நாகேஷ், கமல் என்று சினிமாக்காரர்கள் தொடர்ச்சியாக இலக்கண சுத்தமாக இந்த நகரத்தின் உரையாடல்களை உதிர்த்திருக்கிறார்கள்.

பேட்ட ராப், கானா என்று இதற்கு இசை சம்பந்தமான உப பிரிவுகளும் உண்டு.

அவற்றைக் கேட்கும் போது மெரீனா கடைகளின் ஓசையும் தட்டுக்கடைகளின் உணவும் இருந்தால் சுவைக்கும்.

சென்னா பட்டூரா கிடையாது. ஆனால், அதுதான் சோளே பட்டூரா ஆக அன்றைய பாலிமர் உணவகத்திலும் தாசா-விலும் பரிமாறப்பட்டது.

திருவொற்றியூரில் சுந்தரர்

திருமயிலையில் ஞானசம்பந்தர்.

நடுவில் செயிண்ட் தாமஸ் மௌண்ட், ஆயிரம் விளக்கு என்பார்கள் சென்னையை.

அந்த சென்னையை வடது, இடது, மத்திமர் என்று செண்ட்ரல் அரசாங்கம் பிரித்து தொகுதியாக்கினார்கள்.

அதன் பிறகு பா. இரஞ்சித் அதைப் படமாகவும் எடுத்தார்.

அந்தத் தலைப்பை வெற்றிமாறனும் கையாண்டார்.

மதராஸி என்றால் வடக்கத்தவருக்கு குறியீடு.

மதாராஸ் என்றால் சென்னை செண்டிரலும் எல்.ஐ.சி. பில்டிங்கும் என்பான் கோடம்பாக்கத் தமிழன்.

மதாராஸ் என்றால் காந்தி சிலையும் வள்ளுவர் சிலையும் என்பான் சென்னைக்காரன். (அம்பேத்கார் இல்லாத இடமெங்கே?!)

சென்னைக்காரன் என்றால் வாழும் வேட்கை உள்ளவன் என்பது தமிழருக்குப் புரிந்த அடையாளம்.

நான் பச்சை சென்னையையிட்.

டாக்டர் நாகேஸ்வரன் – அஞ்சலி

மயிலாப்பூர் டி.எஸ்.வி கோவில் தெருவில் ஒரு சின்ன அறையில் அவரின் பார்வையறை இருக்கும். அந்தத் தெருவிற்கு ஏன் “டாக்டர் நாகேஸ்வரன் தெரு” என்று பெயர் வைக்கவில்லை என்று நினைத்திருக்கிறேன்.

அவர் குழந்தை நல மருத்துவர்.
அவர் ஒரு மனநல மருத்துவரும் கூட.
அவரை குருஜி என்றும் சொல்ல வேண்டும்.
பலர் அவரை தங்களின் ஆலோசகர் + வழிகாட்டுனர் ஆகவே பார்த்தார்கள்.

சுருக்கமாக நல்ல மனிதர். பழகுவதற்கு எளிமையானவர். வாழ்க்கை சிக்கல்கள் ஆகட்டும்; உடல்நலக் குறைபாடுகள் ஆகட்டும்; பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றோருக்கு சுருக்கமான தீர்வுகளை ஐந்து ரூபாயில் தந்தவர்.

மயிலையில் நிறைய விஷயங்களுக்கு கூட்டம் அலை மோதும். வருடத்திற்கொரு முறை அறுபத்து மூவர். ஆண்டிற்கொரு முறை வைந்த ஏகாதசியின் போது ஸ்ரீனிவாசப் பெருமாள். கிறிஸ்துமஸ் இரவின் போதும் புனித வெள்ளி காலத்தின் போதும் சாந்தோம் சர்ச். ஆனால், நாகேஸ்வரன் எப்பொழுதெல்லாம் அவர் க்ளினிக்கில் இருக்கிறாரோ, அப்பெழுதெல்லாம் அந்தத் தெருவே ரொம்பி வழியும்.

சாதாரண பொது சந்திப்பு, சிறப்பு வழி, ஐநூறு ரூபாய் வழி, பின் வழி, வி.ஐ.பி. வழி என்பதெல்லாம் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் உரியதல்ல. டாகடர் நாகேஸ்வரனுக்கும் உரியது. சொல்லப் போனால், திருமலை தேவஸ்தானத்திற்கு இவர்தான் வழிகாட்டி.

மருத்துவமனையை நடத்தும் நேரம் போக, தன் நோயாளிகளின் நல்ல / கெட்ட விஷயங்களுக்கும் தவறாமல் ஆஜர் ஆவார். காதுகுத்து, கல்யாணம் என்று பத்திரிகை வைத்தால், அவரின் அக்மார்க் சிரிப்புடன் வருவார். ஓரமாக உட்கார்ந்திருப்பார். சகஜமாகப் பேசுவார். உங்களை இயல்பாக்குவார்.

நான்கைந்து முறை அவரைப் பார்க்க நான் சென்றிருக்கிறேன். கடுமையான ஜுரம், வாந்தி / பேதி, உடல்கட்டிகள் என்று விதவிதமான உடலியல் சிக்கல்களுடன் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குரிய கவனிப்பையும் மருந்தையும் கொடுத்துவிட்டு, அவர் என்னிடம் பல்வேறு முக்கியமான விஷயங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்.

  1. ‘நீ ஏன் மதராஸ் மொழியில் பேசுகிறாய்? நல்ல தமிழில் உரையாட வருமா?’; என் அம்மாவைப் பார்த்து, “இந்தப் பையனுக்கு சுத்தமா பிராமண பாஷையே வருவதில்லை… இல்லியா?” – வந்த சிக்கல் போயேவிடும். உண்மையான சிக்கல் உரைக்கும்.
  2. “வடக்கிந்தியா வாசம் எப்படி இருக்கிறது? வீட்டை விட்டு தொலைதூராம் இருக்கிறாயே… பிரிவை எவ்வாறு சமாளிக்கிறாய்?”
  3. “ஆளைப் பார்த்தால் மூன்று வேளை சாப்பிடற மாதிரியே தெரியலியே! பூஞ்சான் மாதிரி இருக்கே… புரதச் சத்து சேர்த்துக்கோ; கார்த்தாலே சாப்பிடாம இருக்கியோ?”

அவரைப் போல் உழைக்க வேண்டும்.
சக உயிர்கள் மீது கரிசனமும் பரிவும் வேண்டும்.
சரியான கவலைகளை நோக்கி நமக்குத் தெரிந்தவர்களை முன் செலுத்த வேண்டும்.

வாழும் காலத்தில் ஆரவாரமின்றி மருத்துவர் நாகேஸ்வரன் போல் சுற்றத்தினாரின் மகிழ்ச்சிக்காவும் ஆரோக்கியத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் ஆர்வத்துடன் இயங்க வேண்டும்.

சென்னை – 2017

சென்னையில் ஹாரன் சத்தம் கம்மியாகி இருக்கிறது. கார் ஓட்டுனர்கள் வயதுக்கு வந்திருக்கிறார்கள். மோசமான டிரைவர்களுடன் வாழ்க்கையை அனுசரிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க சாய் பாபா!

சென்னையில் பிரமிக்கவைக்கும் ஐஸ்வர்யா ராய்க்களின் வரத்து அதிகமாகி உள்ளது. முன்பெல்லாம் திருமணங்களில் மட்டுமே, தென்பட்டவர்கள் இப்போது மால்களிலும் சினிமா அரங்குகளிலும் டூ வீலரின் பின்புறங்களிலும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். வாழ்க ராஹுல் காந்தி!

மயிலை என்பது பிராட்வே என அறியப்படுகிறது. தினமும் ரஸிக ரஞ்சனி சபாவும் பாரதீய வித்யா பவனும் அமர்க்களமாக ஏதாவதொரு நிகழ்வை இலவசமாகத் தருகிறது. சொற்பொழிவோ.. கர்னாடக சங்கீதமோ… இசை நாடகமோ…. சொர்க்கம் எனப்பட்டது என்னவென்றால் ரிடையர்மெட்ண்ட் வாழ்க்கை @ மாட வீதி. வாழ்க கொல்ஸ்டிரால்!

பக்தர்கள் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளனர். திருவொற்றியீஸ்வரனாகட்டும்; வெள்ளீஸ்வரர் ஆகட்டும்… பிரதோஷம் முதல் உச்சிக் கால பூஜை வரை! கூட்டம் எக்கச்சக்கம். வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி!!

நல்ல காபி என்பது சில வீடுகளில் மட்டுமே கிட்டுவது என்பது போய் பல இடங்களில் கிடைக்கிறது. அம்பிகாவின் ஆத்து காபி ஒரு உதாரணம். சரவண பவன் பரவாயில்லை உதாரணம். காஃபி டே மோசமான ஸ்டார்பக்ஸ் உதாரணம். வாழ்க நரசூஸ்!

பள்ளி நண்பர்களை இந்த முறை சந்தித்தது அபாரமான தருணம். இதுவரை வலையில் அறிமுகமானவர்களை மட்டுமே தைரியமாக சந்தித்தேன். திக்குவாய் பாலாஜியை சந்தித்து நரேந்திர மோடியையும் ஜி.எஸ்.டி.ஐ.யும் விமர்சித்தவர்களுக்கு ஜே!!

அறிவியல் புனைவுகள்: 2014 சிறுகதை சிறப்பிதழ்

தினமலரில் அறிவியல் புனைவுகளை சென்னை தினம் 375 – சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். அது குறித்த பார்வை.

1. “சக்கரம்” – பிரசன்னா

ஒரே கதையில் எக்கச்சக்கமாய் திணித்திருக்கிறார் பிரசன்னா. ஒரு இடத்தில் நிலைக்கும் சூரியன் போல் கதை நகர வேண்டும். இங்கோ மழை போல் மூத்திரம் அடிக்கிறது. தினமலர் என்பதால் இது போதும் என்று முடிவெடுத்து இருப்பார் கதாசிரியர். வாசகனிடம் எந்தவித கருத்துருவாக்கமும் எண்ணவிதைப்பும் உருவாக்காத ஆக்கம். அதைவிட படு பொருத்தமில்லாத ஓவியங்கள் இந்தக் கதையின் நடுவே வருகிறது. கதையில் அறிவியல் என்பதே கிடையாது. வருங்காலத்தில் நடப்பதாக பாவ்லா செய்கிறது. அந்த வருங்காலத்தைக் குறித்தும் கற்பனாசக்தி இல்லாத கதை. புனைவு என்றால் நம்பகத்தன்மை வேண்டும். முக்கிய கதாபாத்திரத்துடன் ஒன்ற வேண்டும். புதியதாக ஏதாச்சும் விஷயம் இருக்க வேண்டும்.

ஒன்றுமே இல்லாமல் அறிபுனை கதை என்கிறார். அதாவது மேஜிகல் ரியலிசமாக வருங்காலமும் இக்காலம் போல்தான் இருக்கும் என்கிறார்.

  1. ஒரு காப்ஸ்யூல் சோறு – சுதாகர் கஸ்தூரி
  2. கால இயந்திரக் கைதி – ஜீவ.கரிகாலன்
  3. சென்னை 2114 – ஆயிஷா இரா.நடராசன்
  4. போகம் தவிர் – இரா.முருகன்
  5. 2047 ஆகஸ்ட் 15 – ராஜேஷ்குமார்
  6. நாளை மற்றுமொரு – தவமணி வசீகரன்
  7. இன்னும் 5 நிமிடங்களில் – ஜி.பி

சென்னை ராஜாங்கம் – 2

நேற்று பெருமாளுடன் தொடங்கியதால் இன்று ருத்ரனில் துவங்கலாம். ரஜினி பாட்டு போட்டால் கமல் பாடலும் தொடரும் ‘ஒலியும் ஒளியும்’ கால பாரம்பரியம். வெள்ளீஸ்வரர் கோவிலிலும் ‘வைகாசிப் பெருவிழா’ ஆரம்பிக்க இருக்கிறது. ஸ்ரீனிவாசர் ஷங்கர் படம் மாதிரி. வண்ணப் புகைப்படங்களுடன் பிரும்மாண்டம். இருபக்க பச்சைத்தாளில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் மாதிரி அமரிக்கையான தயாரிப்புடன் வள்ளீசுவரர்.

கோவில் படிக்கட்டில் அழுக்கான bitch படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பைரவர் கழுத்தைச் சுற்றி ருத்திராட்சம் அணிந்திருந்தார்.

கபாலி கோவில் பிரதோஷத்திற்கு ரஜினி பட ஓப்பனிங் போல் கூட்டம் அலைமோதும். இருபது வருடம் முன்பு பார்த்த சிலர் இன்றும் வந்திருந்தார்கள். கோவில்களில் கூட்டம் அதிகரிக்கவும் இல்லை; எல்லா வயது வகையிலும் குறையவும் இல்லை.

நந்திதேவரைப் பார்க்க பெண்மணிகள் தாராளமாக முண்டியடித்து இடிக்கிறார்கள். இனி சல்லிக்கட்டுக்கு ‘மகளிர் மட்டும்’ சிறப்பு போட்டி நடத்தலாம். விருமாண்டித் தோற்றுப் போவார்.

உடற்பயிற்சிக்கும் உண்ணாமுலைக்கும் சம்பந்தம் இருப்பது எத்தனை அட்சரம் உண்மையோ, மகிழ்ச்சிக்கும் மலர்மிசை ஏகுவதற்கும் தொடர்பு இருக்கும்.

வரப்போவதை அறிந்து அறிவுறுத்த சோதிடமும் எண் கணிதமும் கைரேகையும் மூலஸ்தானமும் உதவுமா? சந்தோஷம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் அலசி ட்ரையரில் போடுகின்றன.

1. What Makes Us Happy? – The Atlantic (June 2009): “Is there a formula—some mix of love, work, and psychological adaptation—for a good life?”

2. What You Don’t Know Makes You Nervous – Happy Days Blog – NYTimes.com: “Happy Days is a discussion about the search for contentment in its many forms — economic, emotional, physical, spiritual — and the stories of those striving to come to terms with the lives they lead.”

‘டெக்கான் சார்ஜர்ஸ்’ கில்லி அடித்து நொறுக்குவார் என்பதை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ செவாக் முன்பே அறிந்திருந்தால் யாதொரு வருத்தமும் ரசிகருக்கு இல்லை என்கிறது பிந்தைய கட்டுரை.

Wiiஇல் பௌலிங் போடும்போது ஒரு பால் ஸ்ட்ரைக் செய்தாலே, அடுத்த தடவை கை நடுங்கும். பந்துக்கு பந்து ஆறும், நான்குமாக விளாசி, இடைவேளைக்கு ஒரு பந்து பாக்கி இருக்கும் சமயத்தில், லட்டுவாக தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் கில்க்ரிஸ்ட்.

‘ஏதோ நடக்கிறது! இதமாய் இருக்கிறது!!’ என்று விட்டுவிடலாம். மேட்ச் ஃபிக்ஸிங் என்பது அந்தக் காலம். பெட் பாக்ஸிங் என்பது இந்தக் காலம்.

Where-is-prabhakaran-LTTE-Nakkeeran-Cover-Storyதமிழகப் பாதை தனிமனிதக் கவலை என்றால், தமிழ்வலை வழி தனி வழி. சென்னையெங்கும் ‘தமிழக அரசியல்’ பத்திரிகையின் சுவரொட்டி அல்லோலகல்லப்படுகிறது. இணையத்தில் வழக்கம்போல் குண்டுச்சட்டி கழுதையாக நக்கீரன் அடிபடுகிறது.

1. உயிருடன் உள்ளார் பிரபாகரன்

2. சிதைவுகள்…: நக்கீரன்: ஊடகத்துறையின் பொறுக்கித்தனம்?

3. புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?: பி.இரயாகரன்

கடந்த மூன்று உரல்களைத் தேடும்போது கிடைத்த Ivan Sivan ட்விட்:

TV Artists Union President passed away. http://bit.ly/vo1ud
12:06 PM May 19