Tag Archives: போர்

குருதி – மலையாளப் படம்: மூன்று பார்வைகள்

நன்றி: ஃபேஸ்புக்

Gokul Prasad

குருதி- சில எண்ணங்கள்.

இந்தப் படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. தர்க்கப் பிழைகள் இருக்கின்றன. இதன் க்ளைமாக்ஸ் ஓர் உதாரணம். அதன் காரணமாக படம் நன்றாக இல்லை.

இப்படம் இஸ்லாமியர்களை ‘மட்டும்’ மோசமாகச் சித்தரித்திருப்பதாகவும் அவர்களது தீவினைகளுக்கு எதிர்வினையாகவே இந்துத்வர்கள் செயல்படுவது போலக் கட்டமைக்கப் பிரயத்தனப்படுகிறது என்றும் பலரும் அபிப்ராயப்படுவதை நான் ஏற்கவில்லை.

முதல் விஷயம், பிருத்விராஜ் சொல்கிற ஃப்ளாஷ்பேக். ஃபிரான்சின் நவீன மனநிலையுடன் ஒப்பிடும்போது, அவர்களது முற்போக்குத்தனத்துடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியர்கள் அங்கே நிகழ்த்திய வன்முறை – நேரடியாகவும் கருத்தியல் ரீதியிலும் – சகித்துக்கொள்ள முடியாதது. சார்லி ஹெப்டோ பத்திரிகையில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வரைந்ததற்காக குண்டு வைத்த இஸ்லாமியர்களைக் கண்டு ஐரோப்பியர்கள் அஞ்சுவது நியாயமானதே. புரிந்துகொள்ளக்கூடியதே. அவர்கள் முந்நூறு ஆண்டுகளாக இரத்தம் சிந்தி அந்தக் கருத்துச் சுதந்திரத்தை அடைந்தவர்கள். அவர்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.

இந்தப் படம் இஸ்லாமியக் குடியேறிகள் ஃப்ரான்ஸில் செய்த அட்டூழியங்களையும் அவர்கள் ஈடுபட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் தன்னுடைய கதாபாத்திரத்தின் மனநிலையை வகுப்பதற்கான reference-ஆக எடுத்துக்கொள்கிறது. இதில் எந்தத் தவறுமில்லை.

நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன்.

இரண்டு விதமான இஸ்லாமியர்களை இப்படம் சித்தரிக்க முயல்கிறது.

1. தங்களது மதவெறி காரணமாக கொலைவெறிச் செயல்களில் ஈடுபடுபவர்கள்.

2. இஸ்லாமிய மதநெறியின் பொருட்டு தங்களது நன்னம்பிக்கை வழுவாது வாழ்பவர்கள். யாருடைய பார்வை சரி, எந்தத் தரப்பு தவறு என்பதற்குள் விரிவாகச் செல்லாமல் சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். இந்த இரண்டு தரப்பு இஸ்லாமியர்களுமே தங்களது நம்பிக்கை மீது மிகுந்த பிடிப்புடனும் பற்றுடனும் வாழ்கிறார்கள். அதில் பாவனை இல்லை, நாடகம் இல்லை, போலித்தனம் இல்லை. சரியோ தவறோ தாங்கள் தீர்க்கமாக நம்புவதைக் கடைபிடிப்பதில் தயக்கங்கள் இல்லை. இதில் அவரவர்க்கு அவரவர் நியாயம் இருக்கிறது.

ஆனால், பலரும் கருதுவதைப் போல அந்த இந்துத்வ சிறுவனை இப்படம் அப்பாவியாகக் காட்டவில்லை. அவனை ஒரு புழுவைப் போல காட்டுகிறார்கள். அவன் தனது கொள்கைக்கு விரோதமாக மாட்டுக்கறி உண்கிறான். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறான். இதன் மூலம் அவன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நிறுவிவிடுகிறார்கள்.

‘அவங்க கோவிலை எரிச்சாங்க. இவன் கத்தியை எடுத்துட்டான்’ என இந்துப் பெண் சுமா சொல்லும் காரணம்கூட வெறும் சால்ஜாப்புதான். இஸ்லாமியர்களைப் போல தன்னுடைய செயலுக்கான விளைவுகளை (conviction) ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. தன்னுடைய வயதைக் காரணம் காட்டி அடுத்தவர்கள் மீதோ பழிசுமத்தி தன்னைத் தூய்மையில் நிறுத்திக்கொள்ள அவன் நடிக்கிறான். அதற்கு சுமா துணைபோகிறாள். கடைசியில், தான் உயிர் பிழைப்பதற்காக, தன்னைக் காப்பாற்றிய சுமாவையும் அவளது அண்ணனையும் நடுக்காட்டில் தள்ளிவிட்டு இருவரையும் உயிருக்குப் போராட விட்டுவிடுகிறான். எவ்வளவு சுயநலம்! குள்ளநரித்தனம்! (ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மதவெறி/சாதிவெறி அதிகம் எனக் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.)

பிரச்சினை என வந்துவிட்டால், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் உதவுகிறார்கள். தங்களது கூட்டாளிகளைப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இந்துத்வனோ, தான் மட்டும் தப்பிப் பிழைத்தால் போதுமென நினைக்கிறான். ஓர் இந்துத்வனை நம்பி சக இந்துக்கள் அவனுக்கு உதவிசெய்ய நினைப்பதுகூட பேராபத்தில்தான் முடியும் என்பதல்லவா இதன் பொருள்? அவன் கடைசிவரை தன் தவறை ஒப்புக்கொள்வதில்லை, மனம் திருந்துவதில்லை, தனக்காகச் சொந்த மதத்தினரைப் பகைத்துக்கொண்ட ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் வேதனை எந்த விதத்திலும் அவனைப் பாதிக்கவில்லை. அவர்களது குருதியை உறிஞ்சிவிட்டு இன்னமும் வெறி அடங்காது வெறுப்புடன் திரிகிறான். இவனை விடவா இப்படத்தின் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மோசமானவர்கள்?

அதனால், அந்த இந்துத்வனை அப்பாவியாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதைத் தர்க்கரீதியில் ஒப்புக்கொள்ள முடியாது. அவனைத் தீமையின் உருவகமாகக் காட்டியிருக்கிறார்கள் என்கிற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.


Suresh Kannan

‘மனிதனால் யாரையும் வெறுக்காமல் இருக்க முடியாது’

‘குருதி’ மலையாள திரைப்படம் பார்த்தேன். மேற்கண்ட வாக்கியம்தான் இந்தப் படத்தின் ஆதார மையம் என்று தோன்றுகிறது.

‘இந்த வாக்கியத்தை உங்களால் தாண்டி வர முடியுமா?” என்கிற சவாலான கேள்வியை, மூசா என்கிற ஓர் இஸ்லாமியப் பெரியவரின் வழியாக ஒவ்வொரு பார்வையாளனையும் நோக்கி கேட்கிறது இந்தப் படம்.

ஆயிரம்தான் இருந்தாலும் மதம் என்பது ஒரு கற்பிதம்தான். அது நம்முள் விதைக்கும் நல்ல விஷயங்களைத் தாண்டி வன்மமாகவும் வெறுப்பரசியலாகவும் பரவும் அபத்தத்தை ரத்தக் கறையோடு விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறது இந்தத் திரைப்படம்.

அனைத்து மதத்திலும் சில அடிப்படைவாதிகள் இருப்பார்கள். மத அரசியலின் புகையை ஊதிக் கொண்டே இருப்பார்கள். இந்தச் சாத்தான்களின் குரலை புறக்கணித்து விட்டாலே போதும்.

அப்படியொரு ‘சாத்தானாக’ ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பிருத்விராஜ். அவருடைய தயாரிப்பாக இருந்தாலும் இப்படியொரு எதிர்மறைப் பாத்திரத்தை எடுத்ததற்கு பாராட்டு. (ஹேராமில் கமல் ‘அப்யங்கர்’ பாத்திரத்தை எடுத்திருப்பாரா என்கிற கேள்வி இங்கு எழுகிறது).

படம் இழுவையான காட்சிகளுடன் துவங்கினாலும் ஒரு கட்டத்தில் நெருப்பு மாதிரி பற்றிக் கொள்கிறது. பிறகு வேகம். வேகம்தான்..

மதக்காழ்ப்பு என்பது சிலரிடம் அப்பட்டமாகவும் பலரிடம் மறைமுகமாகவும் ஒளிந்திருக்கும் ஆபத்து, ‘நாம்’ ‘அவர்கள்’ போன்ற பிரிவினைவாத சிந்தனைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது, இந்தப்படம்.

திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று பல தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. நிச்சயம் தவற விடக்கூடாத திரைப்படம்.


Devibala Malathi DM

சிறப்பான படத்தை பார்த்த ஒரு திருப்தி. வாழ்வில் நாம் காணும் மனிதர்களின் மேல் அரசியல் , சுயநலம் ,பொறாமை என்ற பெயரில் நாம் செலுத்தும் வெறுப்பை நம் கண் முன்னே ஓர் இரவின் நிகழ்வுகள் பின்னணியில் சொல்லிவிடுவதே இந்த படம்.

மதத்தின் மேல் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் , அதன் இரு வேறு நன்மை தீமைகளை எடுத்துக்கூறும் ஒரு திரைக்காவியம் என்பதாக இந்த படத்தை நாம் காணலாம்.

ஒரு காட்சி என்னை மிகவும் கவர்ந்தது, கொல்வதற்காக வரும் எதிரிகள் வீட்டு மெயின் ஸ்விட்சை அணைக்கிறார்கள் அப்பொழுது அங்கு உள்ளிருக்கும் இருவர் தன்னைத்தான் கொல்ல வருகிறான் என்று நினைத்து இரு மத இளைஞர்கள் எதிர் எதிர் ஒரு ஆயுதத்தை ஏந்தி எதிர்த்து நிற்பார்கள் . அப்பொழுது அங்கிருக்கும் பெரியவர் ” இதுதான் நம் நாட்டின் பிரச்சனையும் ” என்பார். எவ்வளவு நாசூக்காக நம் நாட்டின் மத பிரச்சினையை விளக்கி விட்டார்.

பிருத்விராஜ் சிறப்பான நடிப்பு😊.

தாசி? விலைமகள்? பணிப்பெண்?

அந்த 96 பேர்களை விட யுயுத்ஸுக்குக் கூடுதல் ஸ்தானம் கதையிலும் கிட்டுகிறது.

அவனும் மறக்கப்பட்டிருப்பான். ஆனால் பிற்பாடு அவன் பாண்டவர் பக்கம் போரிட்டதனாலும், பரீட்சித்தின் ராஜ்யபரிபாலனனாகவும் வரப்போகிறானே.. அதனால் அவனைச் சொல்லித்தானே ஆகவேண்டும்.

ஆனால் அவனுடைய அம்மா? அவன் பெயரை முதலில் குறிப்பிடப் பட்டதோ அல்லது யாரானும் கூட்டத்தில் கேள்வி எழுப்பியதில் சேர்க்கப்பட்டதோ தெரியாது. இன்னும் ஒவ்வொருவர் அவள் பெயரை வேறு வேறு விதமாகத்தானே சொல்கிறார்கள் – சுகதா, ப்ரகதி, சௌவாலி என்று

சரித்திரத்தின் பக்கங்களிலும், தொன்மங்களிலும் என்றும் பலசாலிகளும், வெற்றியாளர்களும், உயர்ந்த பிறப்புள்ளவர்களுமே கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், இந்தவகைகளில் இருப்பினும் கூட ஒரு வகையினருக்கு இந்தத் தகுதி கிடைத்ததில்லை- பெண்கள்! கண்ணனின் உயிர் சினேகிதிதான் – ஆனால் ராதையைப் பற்றி நாம் என்ன அறிவோம்?

மறைந்த அரசனின் விதவைகள் – ஆனால் அம்பிகைக்கும், அம்பாலிகைக்கும் வியாசருடன் உறவு கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று கேள்விகேட்க யாருக்காவது தோன்றியதா? அவர்கள் குலவாரிசை சுமக்கும் கர்ப்பப்பைகள் மட்டுமேதானா? மகான் எனப் போற்றப்படும் விதுரனின் தாய் – அவள் பெயர் என்ன? அவளுக்கு வாழ்க்கை பற்றிய வேறு கற்பனைகள் இருந்தனவா?  

காந்தாரியின் கர்ப்பம் முழுமை அடையவே அடையாதோ என்ற பயத்தில் திருதராஷ்டிரன் உறவு கொண்ட தாசிப்பெண்- தந்தைக்கு இறுதியில் கொள்ளி வைத்த புத்திரன் யுயுத்ஸுவின் தாய் – அவள் பெயர் என்ன? தந்தையால் அங்கீகரிக்கப் படாத தாசிமகன் செய்யும் ஈமச்சடங்கில் திருதிராஷ்டிரனின் ஆத்மாவுக்கு முக்தி கிடைத்ததா? பிள்ளை பெறுவதற்காக மட்டுமே உறவு வைக்கப்பட்டு பின் ஒதுக்கப்பட்ட அந்தப் பெண் திருதிரஷ்டிரனின் இறப்புக்குப் பின் தன்னைக் கைம்பெண் என கருதிக் கொள்ளவேண்டுமா?

வங்காளத்தின் சில எழுத்தாளர்கள் இத்தகைய பெயர் தெரியாத, மறக்கப்பட்ட விளிம்புப் பாத்திரங்களைப் பற்றி கதைகளிலும் நாடகங்களிலும் கேள்விகள் எழுப்புகிறார்கள். அவற்றில் ஒன்று மஹாஸ்வேதா தேவியின் சௌவாலி

மற்றொன்று புத்ததேப் பாஸுவின் சிறு நாடகம் “ஆனாம்னி அங்கனா

சொல்வனத்தில் வங்கச் சிறப்பிதழின் இரண்டாவது பகுதியில் இவற்றைப் படிக்கலாம்.

  It is believed that the Mahabharatha has been modified many times. It is possible that a closer to our times version was written a few hundred years back. There is a netflix series called Dharmakshetra where the various significant characters of the mahabharath are put on stand in the court of chitraguptha. In one episode Bhisma is questioned why he did not consider Vidura as a possible king as both his step brothers were not fit for the role. The obvious answer is that he was a dasiputra. It seems dasis and dasiputras didn’t enjoy much of a status in Duryodhana’s mind.  See how he acts when Draupadhi becomes his “dasi”.

Yuyutsu was taunted by Duryodhana and his brothers for being friendly with the Pandavas and  for pointing out their misdeeds.  They did not think of him as one of the kauravas. As a mother this must have irked Sugadha / Sauvali as in reality Yuyutsu was second in line to the throne. She must have felt exploited and  marginalised. Mahasweta devi is trying to imagine her feelings on being treated thus. I think the focus is more on the exploitation of the servant class . On how they used them as they pleased hardly regarding their desires and expectations. Wonder what might have happened if Gandhari had a miscarriage!

Anamni Angana deals with a similar issue with respect to Vidura’s mother. She had her simple desires and dreams which were teampled upon for the convenience of The royal household. Maybe Vidura got treated better because he was Satyavati’s grandson too. Most books refer to yuyutsu’s mother as Sugadha  incl. WIKI. In Jeyamohan’s book she is referred to as  and a favorite of Dritharastra as they were connected through a shared interest in music. In his version she remains close to him till the end . She even takes Yuyutsu to task after the vastrapaharan for not taking an open stand like Vikarna. In Jeyamohan’s version of the epic the mother’s name is Pragathi.

குரு வம்சத்து ஆட்சி தலைமகன் வழியே மாற்றப்படுவது. அதனால்தான் கௌரவர்களில் துரியோதனனுக்கும், பாண்டவர்களில் யுதிஷ்ட்ரனுக்கும் பதவி போகிறது. பாண்டவர்கள் ஐந்தே பேர் என்பதாலும், சிலருடைய சாதிப்புகள் அபாரமானவை என்று கதை போவதாலும் நாம் அதிகமாக அர்ஜுனனையும், பீமனையும் பற்றிக் கேள்விப்படுகிறோம், ஆனால் யுதிஷ்ட்ரரோ, நகுல சகதேவர்களோ அதிகம் கவனிக்கப்படுவதில்லை. இது இலக்கிய உத்தி.

நாயகர்களைத் தவிர மற்றப் பாத்திரங்கள் நிழலிருட்டில் இருப்பது அனேகமாக எல்லா நாட்டு நாடகங்கள், இலக்கியத்திலும் பொது உத்தி. 

இருப்பினும் கௌரவர்களில் தலைமகன் துரியோதனன், பாண்டவர்களில் யுதிஷ்ட்ரன் என்பதால் அவர்கள் இருவருக்கும் பதவி போகிறது என்றாலும், இருவருக்கும் தனித்தனியே சில தகுதிகளும் உள்ளதாகக் கதை அமைக்கப்படுகிறது. பீமனுக்கு நிகர் பலமும் யுத்தத் திறனும் கொண்டவன் துரியோதனன் என்று நாம் அறிகிறோம். விதுரனுக்கு நிகர் ஞானமும், தர்ம சிந்தனையும் உள்ளவனாக யுதிஷ்ட்ரன் அறியப்படுகிறான். 

கதைப்படி யுயுத்ஸு துரியோதனனுக்கு அடுத்துதான் பிறக்கிறான். அதனால் அவனுக்கு பீஷ்மருக்குக் கிட்டும் தலைமகன் என்ற ஹோதா கிட்டுவதில்லை. பீஷ்மர் தன் ஆட்சி உரிமையைத் தானம் செய்து விடுகிறார். அதனாலும், அவருடைய அபார போர்த்திறமைகளாலும் அவருக்கு ஏதோ பீடம் கிட்டுகிறது. விதுரன் அத்தனை பீடமேற்றப்படாவிடினும், தர்ம நியாயக் கேள்விகளுக்கு அவர் அணுகப்படுவதாகக் கதை அமைகிறது. அவரும் அலட்சியம் செய்யப்படவில்லை. 

போர்க்களத்தில் திறனுள்ளவர்களுக்கே அந்தக் கதையிலும், அந்தக் கால கட்டத்திலும் மதிப்பு இருந்தது என்று நாம் ஊகிக்கலாம். ஏனெனில் இன்னமும் காட்டை அழித்து நாட்டைக் கட்டிப் பரப்பும் நிலையில்தான் நாகரீகம் இருக்கிறது. இன்னமும் பெரும்பாலான பாரத நிலம் கடக்க முடியாத வனப் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இத்தனைக்கும் இது ராமாயணத்துக்கு மிகப் பிந்தி வந்த காலம். 

வியாசர் நடப்பை எழுதினார் என்றே வைத்துக் கொண்டாலும், அவர் ஒருவரே எழுதினார், மற்றதெல்லாம் பிற்சேர்க்கைகள் என்று கூட அனுமதித்தாலும், வியாசர் ஒரு காவியத்தைத்தான் எழுதுகிறார். அதாவது அது தகவலை ‘அப்படியே’ எழுதியதல்ல. நாடகப்படுத்தப்பட்ட ‘கதை’. சிலப்பதிகாரக் கதையை நடந்த வரலாறு என்று எண்ணி நாம் பேசினால் அது பொருந்தாது. அது அன்றைய சமுதாயப் போக்குகளின் ஒரு சித்திரம். அதிலும் இளங்கோ ஒரு நூலாசிரியனாக மட்டும் இருக்கிறார். அரசவையில் பங்கேற்பதாகக் கூடக் கதையில் இல்லை என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் பெயரே சொல்வது போல அவர் இளைய அரசன். 

யுதிஷ்ட்ரருக்குக் கிட்டிய ஹோதாவை விட துரியோதனனுக்குக் கூடுதலாகவே அந்தஸ்து கிட்டுகிறது. புராணத்திலும் கவனிப்பு நிறைய குவிக்கப்படுகிறது. இருப்பினும் துரியோதனனும் கூட பீஷ்மருக்கோ, கர்ணனுக்கோ, அர்ஜுனனுக்கோ, பீமனுக்கோ, திரௌபதிக்கோ கிட்டும் கவனிப்பை விடக் குறைவாகவே பெறுகிறான். கதையின் மையத்தில் இருப்பதையும், அது நிகழும் தருணங்களின் எண்ணிக்கையையும் வைத்துச் சொல்கிறேன். 

இதர கௌரவர்களில் துஷ்சாஸனனைத் தவிர, விகர்ணனைத் தவிர வேறெந்த கௌரவரை நமக்குப் பெயர் கூடத் தெரியும்? பட்டியலில் படிக்கலாம் அவ்வளவுதான், இல்லையா? அந்த 96 பேர்களை விட யுயுத்ஸுக்குக் கூடுதல் ஸ்தானம் கதையிலும் கிட்டுகிறது. கதையின் வருணிப்பிலும் அவனுக்கு மஹாரதன் என்ற பட்டம்தான் உண்டு. மறக்கப்பட்ட ஒருவனால் மஹாரதனாக ஆவது இயலாதது. வெறும் வில்வித்தையைத் தானே கற்று அர்ஜுனனையும் தோற்கடிக்கும் திறன் கொண்டதால் ஏகலைவனுக்கு விரல் வெட்டு நேர்கிறது என்றால், யுயுத்ஸுவுக்குக் கிட்டுவது ‘மறக்கப்படுவது’ இல்லை. மஹாரதனாக ஆகக் கொடுக்கப்படும் பயிற்சிகளும் சாதாரணர்களுக்குக் கிட்டுவனவாக இருந்திராது. 

பாரதத்தின் பல நூறு பாத்திரங்களில் அனைவருக்கும் ஒரே கவனம் கொடுக்கப்படுவது நேர ஒரு சாத்தியப்பாடும் இல்லை. உபகதைகள் என்று நாம் அறிவன பலவும் பிற்சேர்க்கை என்று இன்று சொல்லப்படுகின்றன. அவை எல்லாம் ‘ஸ்மிருதி’ என்று நீங்கள் வருணிப்பது போன்றவை என்றால், அவற்றின் நோக்கம் பரவலாகத் தெரிய வந்த ஒரு பெருங்கதையில் சேர்வதன் மூலம் அவை சமூகத்தின் ஒழுங்கமைப்புக்கு ஏதோ விதங்களில் கருத்துகளை முன்வைப்பதாக இருக்கலாம். குறைந்த பட்சம் கெடுமதிக்குத் தண்டனை இக பரத்தில் கிட்டும் என்ற மிகச் சாதாரண தர்ம பரிபாலனமாகவாவது நோக்கமாக இருக்கும்.

சிலவற்றுக்குத் தத்துவார்த்த நோக்கங்களும் இருக்கும். ‘கொக்கென நினைத்தாயா கொங்கணவா’ என்று தமிழில் சொல்லப்படும் சம்பவம், வடமொழிப் பிரதிகளில் குடும்பஸ்த்ரீகளுக்குத் தெரிந்த பிரம்ம ஞானம், காட்டில் உடல் வருத்தித் தவம் புரிந்தவனுக்கும் இல்லை. என்ன உடல் வருத்தம் புரிந்தாலும், எத்தனை துறவறமும் ஞானத்தைத் தராமல் போகலாம். எத்தனை சாதாரணக் குடும்பப் பாரம் சுமத்தலும் புத்தித் தெளிவுக்குத் தடை இல்லை என்ற ‘சமாதான’ அறிவுறுத்தலோடு, ஓரளவு கூரிய விமர்சனமும் அதில் இருக்கிறது. இது பௌத்தம், சமணம் ஆகியவற்றின் துறவே, துறப்பே விடுவிப்புக்கு வழி என்ற போதனையை மறுக்கும் கதை கூட. 

யுயுத்ஸுவின் அம்மாவுக்கு மறக்கப்படுவது நேர்ந்திருக்கலாம். அதுபற்றி எனக்கு விவர ஞானம் இல்லை. 

ஆனாலும் சாதாரணத் தர்க்கப்படி நோக்கினால், சுகதா என்ற பெயர் கதையில் பேசப்படுவதே கவனிப்புதான். பாரதத்தில் அத்தனை பாத்திரங்கள் உண்டு என்கையில் பெயர் சொல்லப்படுவதே ஒரு அளவு பிரதான்யம் கிட்டுவதுதான். பெருங்கதை என்பதாலும், அன்றைய உலக இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான தன்மைகள் என்று பார்ப்பதாலும் நமக்குத் தெரிவது ஒன்று. பாத்திரங்களின் மனப்பாங்குகளை விலாவாரியாக வருணித்து, சர்ச்சித்து, எதிரும் புதிருமாகப் பேசி விவரிப்பதெல்லாம் இந்தக் காவியங்களில் அரிதாகத்தான் காணப்படுகின்றன. அவை எல்லாமே அந்தந்தப் பிரதேச, குறுங்குழு மக்களின் விவரணைக்குத் திறப்புகள் கொடுப்பதோடு, காலத்துக்கேற்ற மறு தைப்புக்கு (டெய்லரிங்) இடம் கொடுக்கின்றன. 

[போர்ஹெஸின் கதையை இங்கு நினைவு படுத்துகிறேன். வரைபடம் நிலப்பரப்பாகுமா என்றால் ஆகாது. அப்படி ஆனால் என்ன ஆகும்? நிலப்பரப்பு மறக்கப்பட்டு வரைபடம் எதார்த்தமாகி விடுமா என்று அவர் கேட்டு ஒரு விசித்திரக் கதை எழுதுகிறார். இது பற்றிப் பின்னால் எழுதுகிறேன்.]

யுயுத்ஸு இறுதியில் இந்திரப்ரஸ்தத்தின் மன்னனாக மகுடாபிஷேகம் பெறுகிறான். பரீட்சித்து குழந்தை என்பதால் அவனுக்குப் பதில் குரு வம்சத்து ராஜ்யத்தை ஆள்பவனும் அவனே. இது கிட்டத் தட்ட பீஷ்மர் நிலைக்கு யுயுத்ஸு உயர்த்தப்படுவது போன்றது. பீஷ்மரும், குருடனான, சிறுவனான தன் தம்பிக்குப் பதில் ராஜ்யத்தை ஆள்கிறார். அவரும் குலம் இன்னதென்று அறியாத ஒரு பெண்ணுக்குப் பிறந்தவர்தான். 

அடுத்து ஒரு சொல்லின் பயன்பாட்டைப் பற்றிய கேள்வி. தாசி என்ற சொல் அன்று வேலையாள் என்ற பொருளில் பயன்பட்டிருக்கலாம். ஆனால் இன்று தமிழில் அந்தச் சொல்லுக்கு அதை விடப் பல மடங்கு கேவலமானது. விலைமகள் என்று பெரும்பாலான தமிழர் புரிந்து கொள்வர். சுகதா/ சௌவாலி விலைமகள் இல்லை. அவள் ஒரு வைசிய குலப் பெண். அரண்மனையில் பணிப்பெண்ணாகச் சேர்க்கப்பட்டவள். அத்தனை நூறு பெண்கள் நடுவே இவள் திருதராஷ்ட்ரனின் வாரிசுக்குக் காரணமாகிற அளவுக்கு இருந்தால், நிச்சயம் காந்தாரிக்கு நெருங்கிய குழுப் பணிமகளில் ஒருத்தியாக இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.  

நாம் இந்தப் பெண்ணுக்குத் தாசி என்ற சொல்லைப் பயன்படுத்துவதை விட பணிமகள் அல்லது வேறேதாவது பொருத்தமான வேலை வருணனைச் சொல்லைப் பயன்படுத்துதல் நல்லது. 

குரான்படி நடக்கும் இஸ்லாமியர் யார்?

ஐஸிஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்த இருபத்தியோரு யெஸிடி பெண்களுடன் ருக்மிணி கலிமாக்கி அவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நியு யார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். முஸ்லீம் இறையியலின்படி பெண்களை அடிமையாக நடத்துவது மட்டுமல்ல, வன்புணர்வையும் மதக் கடமையாக மேற்கொள்ளவேண்டும் என்பதை ஐஸிஸ் சட்டமாக வைத்திருக்கிறது.

போரின் போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாவது புதிது இல்லை. ஐ.நா. செயலர் பான் கி மூன் மாதந்தோறும் மன்னிப்புக் கேட்டுகொள்வது மாதிரி ஐ.நா. அமைதி காக்கும் படைகள் முதற்கொண்டு எந்த நாட்டு இராணுவம் அன்னிய நாட்டிற்குள் நுழைந்தால் – பெண்கள் மீது அத்துமீறல் சகஜமாக நிகழ்த்தப்படுகிறது. 2011ல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் செய்தித்தாளில் இதுதான் தலைப்புச் செய்தி: “காங்கோவிலும் லைபீரியாவிலும் ஐ.நா. அமைதிப்படை மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் குறையத் துவங்கியிருக்கின்றன”

ஆனால், ஐஸிஸ் போர்க்குற்றமாக பெண்கள் மீதான வன்முறையை நடத்துவதில்லை. ஒரு ஊருக்குள் நுழைகிறார்கள். அந்த ஊரை ஆக்கிரமிப்பதற்கான முதல் படியாக, அந்த சிற்றூரில் இருக்கும் சிறுமிகளையும், பெண்டிர்களையும், லாரி லாரியாக அபகரிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரிடமும் தங்களின் கேள்விப் பட்டியலில் இருந்து விடை கேட்டு குறித்துக் கொள்கிறார்கள். எப்போது மாதப்போக்கு வந்தது போன்ற அந்தரங்கங்களையும் விடாமல் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்கிறார்கள். ஏனென்றால் கருவுற்றிருக்கும் தாயை பலாத்காரம் செய்யக் கூடாது என்று இறைதூதர் காலத்தில் இருந்த வழக்கத்தை இன்றும் பின்பற்றுவதே காரணம்.

பிறகு, அந்தப் பெண்களை அடிமை ஏலம் விடுகிறார்கள். அடிமையைப் பெற்றுக் கொண்டவரின் கடமை என்ன? முதலில் நமாஸ் செய்யவேண்டும். தொழுகை முடிந்தவுடன் பன்னிரெண்டு வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்யவேண்டும். அதன்பின் குளித்துவிட்டு, மீண்டும் நமாஸ் செய்து இறைக்கடமையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின், மீண்டும் அந்த குழந்தை விற்கப்படுகிறார்.

யெஸிடிகள் மீது இன்னும் கோபத்துடன் இந்த வன்முறையை ஐஸிஸ் செலுத்துகிறது. கிறித்துவர்கள் போல், இஸ்லாமியர்கள் போல் ஒரு இறைவர், அவர்களின் தூதர் என்று ஒற்றைப்படையில் இல்லாமல், ஏழு தெய்வங்களை யெஸிடிகள் வணங்குகிறார்கள். அவர்களின் புனித நூல் குரான் போல் பைபிள் போல் எழுத்தில் இல்லாமல், வழிவழியாக முன்னோர்களின் வாய்ப்பேச்சு மூலமாகவே தலைமுறை தாண்டி ஓதப்பட்டு வருகிறது. இதைக் கண்டு ஐஸிஸ், பன்கடவுள் கொண்ட சமூகம் மீது நபிகள் நாயகம் காலத்தில் விளங்கிய நிலையை விரிவாக எடுத்தோந்தும் நூல்களை வெளியிட்டிருக்கிறது. நபிகளும் அவர்களின் தோழர்களும் எவ்வாறு பலதெய்வ வழிபாடு செய்தவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள் என்பதை வழிகாட்டி விளம்பரமாக வெளியிட்டு தங்களின் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.

இன்னும் இந்த நிலையில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட யெஸிடி பெண்களை கொத்தடிமைகளாக ஐஸிஸ் வைத்திருக்கிறது. இவர்களை எப்படி விற்க வேண்டும், நபிகள் காலத்தில் நடந்த தொன்மையான வழக்கப்படி எவ்வாறு பலாத்காரம் செய்வது, அடிமை வர்த்தகத்தில் ஐஸிஸ் அரசிற்கு எவ்வளவு வரிகட்ட வேண்டும் என்பதை தங்களின் பிரதேசத்தில் சட்டமாக்கி இருக்கிறார்கள்.

முழுக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

சிரியா – ஒபாமா நலமா?

சிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது?

ஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.

இந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.

ஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.

கொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது? இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…?

ஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.

அதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது? சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004)! அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.

போரும் அரசியலும்: ரத்தசரித்திரம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.

துரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.

கிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.

கிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.

கிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.

அஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.

கிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.

மேரி என்றால் மன்னிப்பு; மேற்கு என்றால் ஆக்கிரமிப்பு

பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை பிரித்தானியர் இன்றளவும் விடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் வடக்கு அயர்லாந்து.

பெல்ஃபாஸ்ட் நகரின் கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டண்டுகளுக்கும் நடுவே சுவர் எழுப்புவதை சரித்திர பின்னணியில் விவரிக்கிறது: The American Scholar: Belfast: City of Walls – Robin Kirk

இங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

எல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.

1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

பாதிரியாரும் ஆயரும்

கிராமத்திற்கு புதிதாக வந்திருந்த இளம் பாதிரியாரை விருந்துக்கு அழைக்கிறார் மறை மாவட்ட ஆயர். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது பக்கத்தில் வரும் பரிந்துரைகள் கவனத்தை சிதறடிப்பது போல், உணவின் ருசியுடன் உணவை செய்த வீட்டு வேலைக்காரியின் மீதும் பாதிரியாருக்கு கண் அலை பாய்கிறது. இவ்வளவு லட்சணமான பெண்ணை சும்மாவா பிஷப் வைத்திருப்பார் என்று சிந்திக்க வைக்கிறது.

பிஷப் நாடி பிடித்து விடுகிறார். “நீ நெனக்கிற மாதிரி எதுவும் இல்ல… அவ எனக்கு சமைச்சுப் போடறதுக்கும் துணி தோய்க்கிறதுக்கும் மட்டுமே துணையா இருக்கா!”

ஒரு வாரம் போன பின் வேலைக்காரி பிஷப்பிடம் சொல்கிறாள். “யாராவது ஸ்பெஷலா வந்தால் மட்டுமே அந்த வெள்ளிக் கரண்டி பயன்படுத்துவேன். அருட் தந்தை வந்துட்டுப் போனப்புறமா அதைக் காணவில்லை. அவர் எடுத்திருக்க மாட்டார்… இல்லியா?”

“ஆவர் எடுத்திருப்பார்னு தோணல. இருந்தாலும் கடுதாசு போடறேன்”னு சொன்ன ஆயர் எழுதினார்: “நீங்கள் வெள்ளிப் பாத்திரங்களை எனது இல்லத்தில் இருந்து எடுத்ததாக நான் சொல்லவில்லை. ஆனால், உண்மை என்னவென்றால் தாங்கள் இரவு உணவிற்கு வந்த நாளில் இருந்து அந்த சாமானைக் காணவில்லை!”

கொஞ்ச நாள் கழித்து பாதிரியிடம் இருந்து பதில் வந்திருந்தது: “மேன்மை பொருந்திய ஆயர் அவர்களுக்கு, நீங்கள் பணிப்பெண்ணுடன் படுப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால், நிஜத்தை சொல்லவேண்டுமென்றால், உங்கள் படுக்கையில் நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தால், அங்கே உள்ள அந்த வெள்ளிக் முட்கரண்டி உங்களை உறுத்தியிருக்கும்.”

ஆஃபீஸ்ஸ்பேஸ்

அலுவல் மீட்டிங்குகளும் இப்படித்தான்… எதையோ நினைப்போம். சொல்ல மாட்டோம். அவர்களாகவே ஏதோ புரிந்து கொள்வார்கள். பின்னணியில் அரசியல் சூழ்ச்சி திட்டம் நடக்கும். உள்ளடி வேலை இருக்கும். சின்னச் சின்ன குழுவாக சந்திப்புகள் அரங்கேறும். மின் மடலில் காய் நகர்த்தப்படும்.

அதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொல்கிறது:

The Quiet Plotter

Deadly Meetings in the Workplace – WSJ.com:
CRIME: Practices passive-aggressive insubordination.
MODUS OPERANDI: Remains quiet at meetings; later undermines bosses and decisions.
LEVEL: First degree nuisance

இந்த மாதிரி பெயர்கள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கின்றது? எப்படி முத்திரை குத்துகிறார்கள்?

  • The Multitasker?
  • The Jokester?
  • The Dominator
  • The Rambler?
  • Placater
  • Decimator
  • Detonator
  • Naysayer


விவாத விளையாட்டு

எல்லாமே கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் புழக்கத்தில் இருப்பவை. சொல்லப் போனால், ரோல் ப்ளே எனப்படும் இன்னின்னார் இப்படி இப்படி செய்வதில் வல்லவர் என உருமாறும் ஆட்டங்கள்.

சிலர் இதில் உருப்படியானவர்கள். காரியத்தை முடிக்க உதவுபவர்கள். முன்னேற்றத்திற்கு வழிகோல்பவர்கள். ப்ராஜெக்ட்டையும் கம்பெனியையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துபவர்கள். செயல்வீர்ர்கள். அப்படிப்பட்டவர்களின் பங்குகளை இப்படி பிரிக்கலாம்:

  • கல்வியாளர் (பயிற்றுனர்)
  • சமரச மார்க்கவியலாளர் (Compromiser)
  • க்ரியா ஊக்கி (Encourager)
  • தகவல் தேடி (Seeker of Information)
  • சந்தேகாஸ்தபமானதை கேள்விக்குள்ளாக்குபவர் (Questioner of dubious Assertions)
  • சரிபார்ப்பவர் (Validator)
  • பொறுமையாக காது கொடுப்பவர் (Attentive Listener)
  • பிணக்குகளை ஊடல்களாக்கி கொசுவாக்குபவர் (Diffuser of Tension)

மேலும் விரிவாக மேற்கண்ட ரோல் மாடல்களைப் படிக்க: Social Work Practice: A Critical Thinker’s Guide By Eileen D. Gambrill


The life of man upon earth is a warfare
– Job 7:1

முதலாம் வாசக முன்னுரை: வாசகம் ஜாப் 7:1-4,6-7
மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது.

முதல் வாசகம்

ஜோப் நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.


Abraham Lincoln

First Inaugural Address: Monday, March 4, 1861

This country, with its institutions, belongs to the people who inhabit it. Whenever they shall grow weary of the existing Government, they can exercise their constitutional right of amending it or their revolutionary right to dismember or overthrow it.


ஏர் உழுவைத் திருப்பிப் போட்டது போல் கேள்விக்குறி இருப்பது தற்செயல் அல்ல! பழைய மண்ணாக இருக்கும் மூடநம்பிக்கைகளை உடைக்கவும் அடுத்து விதைகள் வளர்ந்து பூத்துக் குலுங்க புத்துணர்வாக்கவும் வினாக்குறி ஏர்.

Saul Alinsky

9/11: பத்தாண்டு பலன்

இந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.

செப்டம்பர் 11, 2001.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன? எது நடந்தது?

  1. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் போர்
  2. இஸ்லாமிய வெறுப்பு
  3. பொருளாதாரப் பின்னடைவு

இஸ்லாமிய வெறுப்பு – அதீத பயம்

  • 88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.
  • 83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொலையாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.

  • அமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா? ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங் இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.

அயல்நாட்டுப் போர்

  • ஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.
  • இராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.

  • இறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை? அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு
    • வேலைவாய்ப்பின்மை
    • மருத்துவ சிகிச்சை தராமை
    • குடும்பத்தினருக்கு ஏற்படும் பளு
    • மனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
  • வீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.
  • போராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும்? தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்?

பொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை

இதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.
நிதி நிலவரத்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

  • இது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.
    • ஒன்று வரி ஏற்றப்படும் – வருமானம் அதிகரிக்க வழி
    • அல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது
ஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.
ஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது!

இராவணன் படப்பாடல்: அமெரிக்க கடன், போர், வர்த்தகம், நிதி தரம்

இந்த கடன எப்ப வந்து நீ கேக்கறே
என் சொகுசுக்குள்ள கேள்விக்குறிய நீ வெதச்சே

அடி நியூ புக்லாந்து பெரிசுதான்
சின்ன ஸ்கானர் உயரம் சிறிசு தான்
ஒரு கூகிள் தேஞ்சு பறக்குதடி
மொத்த புக்கும் நெட்டில் கிடைக்குதடி

சொத்தே போகுதே சொத்தே போகுதே
சொவ்வறைய நீ கொஞ்சம் சுழிக்கையில

அமெரிக்கன் தவிக்கிறன் அவிச்சத கேட்கிறன்
அஸ்திரத்த விடணும் உன் மேலே

அக்கரைச் சீமையில் நீயிருந்தும்
ஏரியலில் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழமென்று தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி ராணுவம் துடிக்குதடி

லிபியாவும் கியூபாவும் தூரம் தூரம்
ஒட்ட நினைச்சு ஆகல

டெமொக்ரட்ஸ் சொல்லும் நல்ல சொல்ல
டெவில் புத்தி கேட்கல

தனியா தவிச்சு ஆப்கானிஸ்தானில் தடம் கெட்டு திரியுதடி
தனியா குறுகி சீனா தள்ளிவிட்டு சிரிக்குதடி

இந்தச் சண்டைக் கிறுக்கு தீருமா
அடி ஹெல்த்கேர் விட்ட ஒபாமா மாறுமா

என் தேக்கத்தை தீர்த்து வச்சு வளருமா

லண்டனும் நியுயார்க்கும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
டாலரும் யூரோவும்
இப்ப தலை சுத்திக்கிடக்குதே

(சொத்தே போகுது)

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல
இந்தியாவும் பெர்சியாவும் தப்பிப் போகும் பணப்புழக்கத்தில

கத்தி காட்டி சதி போட்ட அரசருக்குள்ள
கத்தி குத்தில்லாத அரசாட்சியுமில்ல

எட்ட இருக்கும் சென்னையப் பார்த்து
இறக்குமதியாக்கிறது காரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
பங்கோ வர்த்தகமோ போகல

கள்ளா காவியமா ஒரு பாகுபாடு தெரியலயே
கள்ளா இருந்தும் உடம்புல கிக்கு ஏறலியே

என் பாண்டும் ஒருநாள் சாயலாம்
என் மியூசியத்துல உன்பொருள் போகுமா

நாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து கொலம்பசுக்குள்ள

லண்டனும் நியுயார்க்கும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
டாலரும் யூரோவும் இப்ப தலை சுத்திக்கிடக்குதே

(சொத்தே போகுது)


அசல்

பாடியவர்– கார்த்திக், இர்பான்

இசை – A.R. ரகுமான்

படம் இராவணன்

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே
என்புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்சே

அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உயரம் சிறிசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி

கடும் தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசிரே போகுதே உயிரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

மாமன் தவிக்கிறன் மடிப்பிச்சை கேட்கிறேன்

மனசைத் தாடி என் மணிக்குயிலே

அக்கரைச் சீமையில் நீயிருந்தும்

ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழமென்று தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைச்சு ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேட்கல

தனியா தவிச்சு உசிர் தடம் கெட்டு திரியுதடி

தனியா குறுகி என்னை தள்ளிவிட்டு சிரிக்குதடி

இந்த மன்மத கிறுக்கு தீருமா

அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

என்மயக்கத்தை தீர்த்து வச்சு மன்னிச்சிடுமா

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்திக்கிடக்குதே

(உசிரே போகிறதே)

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்ட மனசுக்குள்ள

விதி விலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து

மொட்டு விரிக்குது தாமரை

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலயே

பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒருநாள் சாயலாம்
என் கண்ணில உன்முகம் போகுமா
நாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து மனசுக்குள்ள
(உசிரே போவுது)

ஈழப் படுகொலை: முத்துக்குமார் பத்திரிகை ஊழியர் தீக்குளித்து தற்கொலை: பதிவுத் தொகுப்பு

-/பெயரிலி.
அவர்களின் நல்லெண்ணத்துக்கு மதிப்பளித்தாலும், தம்மைத்தாமே கொளுத்திக்கொள்வது பயங்கரமான மடமைத்தனம்.

தம்மைத்தாமே கொன்று கொல்வது ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். அதற்குப் பின்னால், எல்லாப்பரபரப்பும் மடிந்தபின்னால், சார்ந்திருக்கும் குடும்பத்தினை ஒரு நாயும் அணுகிப் பார்க்காது.

ஈழத்திலே எத்தனையோ இவர்களின் வயதினை ஒத்தவர்கள் உயிர்வாழ இன்னொரு வழிமுறை கிட்டாதா என்று எறிகணைவீச்சிலே செத்துப்போக, இத்தனை வழிமுறைகளிருக்கும் இவர்கள் இப்படியாக இங்கே செத்துப்போவது அநியாயம்.

தமிழகத்திலே கொளுத்திக்கொள்ளவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல; கொளுத்திக்கொல்லவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல.

நடைவண்டி: ‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு.: ஆழியூரான்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்ற 30 வயது கூலித் தொழிலாளி இன்று காலை இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்துள்ளார். அவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் இருவிதமாகவும் சொல்லப்படுகின்றன.


தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.
:::
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
:::
ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…


நர்சிம்
என்ன எழுதுவது?
நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று எழுதினால் நான் கோழை.. ஏனெனில் நான் நெகிழும் நிகழ்வில் உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும்
மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றால்.. நான் ஒரு சாடிஸ்ட்.. உன் முடிவில் என்ன மகிழ்ச்சி?
:::
14 பக்க கடிதம் எழுதும் அளவு அவகாசம் இருந்த உனக்கு ஒரு நிமிடம் சிந்திக்க கிடைக்காததை எண்ணித்தான் வருத்தமாக இருக்கிறது.
யார் யாது சொன்னாலும் இது வீரம் அல்ல முத்துக்குமார்.
:::
உன் மரணச்செய்திகள் இன்னும் 3 நாட்களுக்கு உன் உடலை எரித்த தீயை விட பலமடங்கு எரியும்..அதற்கு பிறகு உன் அஸ்தியை போல இந்த நிகழ்வும் கரைந்து மறைந்து மறந்து போகும். என்ன பலன்?
யாவரும் கேளிர்!!…


இட்லிவடை
இவ்வளவு வாய்கிழிய பேசும் தமிழக தலைவர்கள் திருமங்கலம் இடைத்தேர்தலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ?
:::
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்தால் தான் இவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது பரிவு ஏற்படுமா ? இரண்டு வருஷம் முன்பு எங்கே போனது இந்த பாசம் ?

நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, போன்றவர்கள் செங்கல்பட்டு மணவர்களின் உண்ணாவிரத பந்தலில் மாணவர்களை உசுப்பிவிடுகிறார்கள். ஏன் இவர் பையன் “ஸ்டுடண்ட் நம்பர் ஒன்” சிபி இதில் கலந்துக்கொள்ள கூடாது ?
முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம்?


உண்மைத் தமிழன்
“செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.
:::
இதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
:::
அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது.
:::
மதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட..
:::
ஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள்.

மதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.

கலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.

மக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.
முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?


கொழுவி
எத்தனை ஈழத் தமிழருக்கு 95 இல் யாழ்பாண இடப்பெயர்வின் போது தீக்குளித்து மாண்ட தமிழக உறவின் பெயர் தெரியும்?
முத்துகுமரன்கள் வேண்டாம்


superlinks
த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
ஈழ‌த்தில் இந்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அர‌சு ந‌ட‌த்தும் இன‌ப்ப‌டுகொலை போர்


அசுரன்:
“என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன்” என முத்துக்குமரன் தெரிவித்தார்.
நக்கீரன்: உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய், நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!


நாக.இளங்கோவன்
வெறுமனே, “எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நான் தற்கொலையை வெறுக்கிறேன் – இது கோழைத்தனம்…” என்றெல்லாம் நினைப்பதை விட்டு விட்டு, அவன் உணர்வினைப் போற்றவேண்டும். அதனை மதிக்க வேண்டும். நாமும் உணர்வு கொள்ள வேண்டும். அதுவே அந்த ஆன்மாவுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை.
நயனம் – nayanam: முத்துக்குமரனின் தீக்குளிப்பும் சில கருத்துகளும்!


வினவு
வேலைக்காக தட்டச்சு செய்து வாழும் முத்துக்குமாரின் கைகள் தனது 2000 வார்த்தைகள் அடங்கிய மரண சாசனத்தை ஒரு அரசியல்
கட்டுரையாக நிதானம் தவறாமல் அடித்திருக்கிறது. முத்துக்குமாருக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தாலும் அவர் இந்த தலைவர்களின் மோசடி நாடகத்தை புரிந்தே எழுதுகிறார். குறிப்பாக தி.மு.கவின் உணர்ச்சிப் பசப்பல்கள் வடிவேலு காமடியைவிட கீழாக இருப்பதாக கேலி செய்கிறார்
ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?


வினவு
முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.
ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!


வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்
குடியரசு தினத்தன்று, இந்திய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் என்பதால் பரபரப்புடன் வந்திருந்த காவல்துறையினர், தோழர் கோவனின் இனஉணர்வுமிகுந்த, கணீரென்ற பாடல்களுக்கு மெய்மறந்து நின்றதைக் காணமுடிந்தது.
அங்கூ…. அங்கூ…: ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…


பி.இரயாகரன்
புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது.
முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்


கலகம் / தமிழ் அரங்கம்
உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன, இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன. டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில் சுற்றிபார்க்க வருபவர்களும், தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும் குறையவில்லை. தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.
சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்


வாசு
நிஜமாகவே இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் எதாவது இதை செய்ய சொன்னதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் முத்துக்குமார் எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனமானது.
Our Thoughts: உயிர் இத்தனை மலிவா?


சக்கடத்தார் சக்(ங்)கடத்தார்
எங்கட பாசத்திற்குரிய உறவுகளே! உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆதரவு எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் ஆட்சியாளர்கள் எலும்புத் துண்டுக்காக வாலாட்டுவதற்கு நீங்கள் ஏன் இப்படியான வழியில் உங்கள் உயிரை மாய்க்க வேண்டும்?? உங்கள் ஆதரவை, உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டவராய்த் தானே நாங்கள் இருக்கின்றோம்.. பிறகு ஏன் உறவுகளே இப்படியான வழி முறைகளைக் கைக் கொள்ள வேண்டும்?? இனிமேல் இப்படியான உயிரை மாய்க்கின்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் எம் அன்புக்குரிய உறவுகளே??
கிழவனின் கிறுக்கல்கள்…: தீ கொழுத்தத் தணல் கொடுக்கும் நாட்டில் தீக் குளிப்பா???


சுபானு
நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே அது அதைவிடக் கொடுமை. ஒரு இரும்புக் கூட்டுக்குள் விலங்கிடப்பட்டு உணர்வுகளைக் கூட சுதந்திரமாக வெளியிடக் கூட முடியாத மனித மனங்களைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம்.

அதைவிட வருத்தம் என்னவென்றால் எனக்கேன் இந்த வேண்டாப் பொல்லாப்பு என்று என் பல்கலைக்கழக நண்பர்கள் சிலபேர் மனம் விட்டுக் கதைக்கூட பயப்பட்டு ஓடுகின்றார்களே அவர்களை என்னவென்று சொல்வது. வெறுமனே நண்பர் வட்டாரங்களுக்கிடையில் தமது வீரவசனம் பேசிக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காதல் கதைகளில் தம்மை ஈடுபடுத்திக் கதைத்துக் கொண்டும், நாம் உண்டு எம் வேலையுண்டு என்னும் என இருக்கும் நாம் எங்கே, ஈழத்தமிழர்க்காக தன் இன்னுயிரை தமிழர்க்காக அர்ப்பணித்த அந்த முத்துக்குமார் எனும் இளைஞர் எங்கே.

சின்னத் தீச் சுடர் ஒன்று கையில் பட்டாலே வலியில் துடித்துப் போய்விடுவோம். ஆனால் முத்துக்குமார் தன் உடலையே மண்ணெண்னையூற்றித் ஈழத் தழிழர்களுக்காக தீக்கிரையாக்கினான்
ஊஞ்சல் – Unchal: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்


யுவகிருஷ்ணா
கடந்த வாரம் பெண்ணே நீ அலுவலகத்துக்கு சென்றபோது கூட முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அவர் கூகிளில் தேடிப்பார்க்கும் விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நான் சென்றபோது..
மடிப்பாக்கம் லக்கிலுக்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


Stop the Vanni Genocide / படுகொலைகளை நிறுத்து
எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
முத்துக்குமாருக்கு அஞ்சலிகள்


மணிகண்டன்
முத்துகுமரனின் இந்த செயல் அசாதாரணமானது. மக்களின் மெத்தனபோக்கை சற்றே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த சூழ்நிலையில் அவரின் மையக்கருத்தான “ஈழ மக்களின் துயர் துடைப்போம்” என்பதே முன்னிறுத்த படவேண்டும். அவரது முழு அறிக்கை தமிழகத்தில் உள்ள ஒருமித்த கருத்துள்ள கட்சிகளையும் ஒன்று சேரவிடாது. முத்துகுமரன் உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதப்பட்ட / பேசப்பட்ட கருத்தை எல்லாம் நம்பிய நல்ல மனிதர்.

பான் கி மூன் சீனர் என்றும், ராஜிவ் காந்தியின் கொலை இன்டெர்போல் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.


தமிழ் சசி / Tamil SASI

தீக்குளிப்பு போன்றவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் இது போன்ற செயல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இன்று பேசி விட்டு நாளை எல்லோரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் “நீண்ட” துன்பத்தில் சிக்க போவது அந்த இளைஞரை நம்பி இருக்கும் குடும்பம் தான்.

இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

இனி பல முத்துகுமரன்கள் உருவாகுவார்கள் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சு பொறுப்பில்லதது. ஒரு முத்துகுமார் போதும்.

ஹிந்தி திணிப்பிற்காக இது போன்று பல இளைஞர்கள் தீக்குளித்த சாம்பலில் இருந்து தான் திமுக ஆட்சியை பிடித்தது. அப்படி ஆட்சியை பிடித்த திமுகவின் இன்றைய தலைவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தன்னுடைய வாரிசுகளை தான் ஆட்சியில் அமர்த்த முயலுகிறார். நடுவண் அரசில் அவர் கட்சியின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தமிழக நெடுஞ்சாலைகளில் ஹிந்தி எழுத்துக்களை நிறுவிய பொழுது அதனை அவரால் தடுக்க முடியாமல் போனது. இது தான் வரலாற்று நிகழ்வு. இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தீக்குளிப்பு போன்ற அர்த்தமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.


முத்து தமிழினி
கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார். யாரும் கண்டுக்கலை.
ஒரு தமிழனின் பார்வை:ஈழ பிரச்சினை – கருணாநிதியை கும்முவது தீர்வாகாது


வெற்றி

அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்

முத்து, நீங்கள் மேற்கூறியுள்ள கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. காரணம், பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்த போது காங்கிரசுக் கட்சி போல கண்மூடித்தனமாக தமிழின அழிப்புக்குத் துணை போகவில்லை.

2000ம் ஆண்டில் நோர்வே மூலம் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பாரதிய ஜனாதாக் கட்சி மறைமுகமாக பெரும் பங்காற்றி இருந்தது என நான் அறிந்தேன்.

அதுமட்டுமல்ல, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஈழ விடயத்தில் தமிழக மக்களினதும் தமிழகத் தலைவர்களினதும் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் ஓரளவுக்கேனும் மதிப்பளித்துச் செயற்பட்டார்.

பா.ஜ.க தனித் தமிழீழத்தை ஆதரிக்கவில்லையெனினும், ஈழத்தமிழர்களின் சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நோக்கியே இருந்தது.

ஆனால் காங்கிரசுக் கட்சி, தமிழின அழிப்புக்கு சிங்கள அரசுக்கு உதவியளித்து வருகிறது.


We The People

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.

அப்புறம் எதுக்கு உண்ணாவிரதம், மனிதசங்கிலி, எம்.பிக்கள் ராஜினாமா என்று டெய்லி நாடகம் போட்டார் என்று அவரிடமோ! இல்லை நீங்களாவோ சொன்னால் தேவலை??!!

1989 தி.மு.க ஆட்சி போனதுக்கு காரணம் ஜெ-ராஜீவ் கூட்டணியே தான் அது தான் அரசியல், நீங்க சொல்லறத பார்த்தா 1980 எம்.ஜி.ஆர் ஆட்சி கலைப்பு ஈழப்பிரச்சனைக்காக என்று சொல்லுவீங்க போல… என்னங்க உங்கள ஒரு அரசியல் புலின்னு நினைச்சா, இப்படி காமெடி பண்ணறீங்க!!?


ராஜ நடராஜன்
கருணா, அனந்தசங்கரி, பிள்ளையான் போன்றவர்கள் இடம் மாறியும் கூட உங்களை புதுப்பித்துக் காட்டும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை நீங்கள் உருவாக்காததே தமிழக தமிழர்களின் நம்பிக்கையின்மைக்கான காரணமும், இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டாவது சுய கவுரவத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கைதான் ஈழத்தமிழனுக்கு இத்தனை அவலங்களுக்கும் மத்தியிலும் இன்னும் மக்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கிறதெனலாம்.

இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழனை மீண்டும் சம உரிமையோடு அணைத்துக்கொள்வதும், அல்லது இரண்டாம்தரக் குடிமகனாக வரவேற்பதும்,அல்லது அகதியாக உலகம் முழுவதும் ஊர்சுற்றவிடுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் காத்துக் கிடக்கின்றன.மண்வாசனை காரணமாகவோ இயலாமையினாலேயோ தன் மண்ணை விட்டு நகராத உயிரோடிக்கும் உண்மை தமிழர்களின் எதிர்காலம் நிலைக்கவேண்டும்.
பார்வையில்: தமிழகம்,ஈழம், இலங்கை-ஓர் பார்வை


பத்ரி சேஷாத்ரி
விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் அழித்தொழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அப்படியே அது நடந்தாலும், அதையொட்டி, ராஜபக்‌ஷேவும் இலங்கை அரசும் தமிழர்களுக்கு எதையும் அள்ளிக்கொடுத்துவிடப் போவதில்லை. தமிழர்களின் நிலை இப்போது இருப்பதைவிட மிக மோசமாகத்தான் போகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பால் இலங்கையைத் துண்டாக்கி, தனி ஈழத்தைப் பெறுவது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.
எண்ணங்கள்: இலங்கைப் பிரச்னையும் தீக்குளித்தலும்


யட்சன்
தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.
:::
விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை.
:::
விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.
முட்டாள் குமரனும் சில முழு பூசனிக்காய்களும்….


மாலன்
இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி )
:::
விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.
:::
இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக் கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ் – ஜெயவர்த்தன திட்டத்தில் (scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு ‘தேனிலவு’ கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல;

தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.
என் ஜன்னலுக்கு வெளியே…: முத்துக்குமார்