Tag Archives: பொருளாதாரம்

வால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்

உங்களுக்கு மாதந்தோறும் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலையில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வேலை போய்விட்டது. என்ன செய்வீர்கள்?

முருகன் இட்லி கடையில் சேர்வீர்களா? காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை காலர் கசங்காமல் இருந்தவர், ஒரே நாளில் கழிவறை சுத்தம் செய்பவராக மாறுவீர்களா? ஒரு மணி நேரத்திற்கு ஒரு சந்திப்பு, மதிய உணவிற்கு ஒன்றரை மணி நேர ஒதுக்கல், எக்ஸெல் கோப்புகளை நிரப்புதல் என்றெல்லாம் காலந்தள்ளியவர் நான்கு டபரா காபியும் எட்டு தட்டு இட்லியும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வினாடியும் பம்பரமாகாச் சுழல்வீர்களா?

ஜேம்ஸ் ஆடம்ஸ் நிஜமாகவே செய்து பார்த்திருக்கிறார். அவர் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். முதலீட்டாளர்களிடம் “இது அருமையான முதலீடு. உங்கள் சேமிப்பை என்னிடம் கொடுத்தால் ஒரே மாதத்தில் இரட்டிப்பு ஆக்குவேன்!” என்று வார்த்தைஜாலத்தில் மயக்கி, பணம் பறித்தவர். 2008ல் துவங்கிய பொருளாதாரச் சரிவு 2009ல் விஸ்வரூபம் எடுத்தபோது, முதலீட்டாளர்களின் பொருள் எல்லாம் திவாலாகி விட, அந்தப் பணத்தை நிர்வகித்த ஜேம்ஸ் ஆடம்ஸும் வேலை நீக்கம் ஆகிறார்.

நானும் பலமுறை வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மீண்டும் அதே துறையிலேயே வேலை தேடி இருக்கிறேன். கணினி நிரலி எழுதுவதில் இருந்து கணினித்துறை ஆலோசகராக – பக்கத்து வீட்டிற்குத் தாவி இருக்கிறேன். தொலைத்தொடர்பு துறையில் இருந்து பொருளாதாரத் துறை; அங்கிருந்து சேமநலத்துறை என்று வெவ்வேறு துறைகளுக்குத் தாவினாலும் எல்லாமே கணினியும் நிரலியும் மென்பொருளும் நிர்வாகமும் சார்ந்த வேலைகள். ஒரு நாள் கூட இன்று மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை பார்க்கலாம் என்றோ பர்கர் கிங் கிளை ஒன்றைத் துவக்கலாம் என்றோ யோசித்ததே இல்லை.

இந்த மாதிரி சாதாரண மக்கள் யோசிப்பதில்லை. ஜேம்ஸ் ஆடம்ஸ் யோசிக்கிறார். ஏன்?

movies_films_waffle_street_james_adams_movie_images_wife_danny_glover_house

இரண்டு காரணங்கள் இருந்திருக்கும். முதலாவது… அவருடைய குடும்பப் பின்புலம். தாத்தா தொழில் செய்திருக்கிறார். டயர் விற்றிருக்கிறார். கார் பழுது பார்க்கும் நிறுவனம் நடத்தியிருக்கிறார். அப்பாவும் அதே போல் பிறிதொரு பிஸினெஸ் நடத்தியிருக்கிறார். சர்க்கஸில் கீழே பாதுகாப்பு வளையம் இன்றி ஆடுபவர்கள் சாதாரணர்கள். ஆனால், சொந்தமும் பந்தமும் பக்கத்து ஊர்களில் இருப்பதும், அவர்களின் பணம் கொடுக்கும் துணைக்கரமும் கொண்டவர் ஜேம்ஸ்.

இரண்டாவது… மார்கன் ஸ்டான்லி அல்லது கோல்ட்மென் சாக்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த மாதிரி பொய் வாக்குறுதி கொடுத்து செல்லாத பத்திரங்களை விற்று பெரும் பணம் ஈட்டியது. அதன் பிறகு, அந்த வருவாய் வருவதற்குக் காரணமாக இருந்த முகங்களை மாற்றியது. அந்த முகங்களில் ஒருவர் ஜேம்ஸ். புத்திசாலி நிதி வர்த்தகர். நிதியாளுமை தெரிந்தவர். வேலையை விட்டுத் தூக்கும்போது மூன்றாண்டு சம்பளம் கூட கொடுத்து சீட்டைக் கிழித்திருப்பார்கள். சிலர் இந்த பல்லாண்டு கால ஊதியத்தை வைத்துக் கொண்டு புதிய தொழில் தொடங்குவார்கள். ஜேம்ஸும் அது போல் யோசித்து இருப்பார்.

life-behind-the-lobby_-indian-american-motel-owners-and-the-american-dreamஆனால், பெரும்பாலான சப்வே உணாகங்களை குஜராத்திகள் நடத்துவதாக அமெரிக்க தேஸிகளுக்கு இடையே பேச்சு உண்டு. இது இன்னும் டிரம்ப் காதிற்கு எட்டியதா என்று தெரியவில்லை. அதே போல் உள்ளூர் காபிக் கடையான ‘டன்கின் டோண்ட்ஸ்’ உடனடி உணவகங்களும் இந்தியர்களே பெரும்பாலும் நடத்துகிறார்கள். இதைப் படித்த வெள்ளை இனவெறியர் எவராவது துப்பாக்கியும் கையுமாக டன்கின் டோனட்ஸுக்குச் சென்று அதன் முதலாளிகளை சுட்டுத் தள்ளாமல் இருப்பாராக என எல்லாம் வல்ல ஃபேஸ்புக்காரை வேண்டிக் கொள்கிறேன்.

இது போன்ற விரைவு உணவகங்களுக்கு வருமானம் ஓரளவு உத்தரவாதம். முதல் கிளையைத் துவக்கி நடத்துவதுதான் சிரமம். அதில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு இரண்டாவது கிளை, மூன்றாவது கிளை என்று கடகடவென விரிவாக்கலாம். முதல் கிளையில் நாய் போல் உழைத்தவர்களை இரண்டாம் கிளையின் மேலாளர் ஆக்கலாம். அதை, அப்படியே விரிவாக்கி, ஒரு லயத்தில் செலுத்தினால் ஆறேழு கிளைகள் வரை எளிதாகக் கொண்டு சென்று நிம்மதியாக வாழலாம். ஆனால், முதல் கிளை மட்டும் ஒழுங்காக அமையாவிட்டால், முழு கட்டிடமும் விழுந்து விடும்.

mcfranchise_income

முதல் கிளை நல்ல இடத்தில் இருக்க வேண்டும். அங்கே கூட்டம் வர வேண்டும். சுவாரசியமான கூட்டமாக இருக்க வேண்டும். கிம் கர்டாஷியன் போன்றோர் எல்லாம் வாஃபுல் ஹவுஸ் பக்கம் வருவார்கள். அது நமது வாஃபுல் ஹவுஸ் ஆக இருக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு இருக்கக் கூடாது. சிப்பந்திகள் கர்ம சிரத்தையாக பணி புரிய வேண்டும். யாரும் கடன் சொல்லி ஏமாற்றி ஓடக் கூடாது. சும்மா சாப்பிடுபவர்களை விட இளைஞர் குழாம் வர வேண்டும். கல்லூரி மாணவிகள் வந்தால் மற்றெல்லோரும் தானாக வருவார்கள். எலி, கரப்பான் பூச்சிகள் இல்லாத சுகாதாரம் அமைய வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல். அதனால், முதல் கிளையில் உயிரைக் கொடுத்து நடத்த வேண்டும். அதன் பின், தன்னாலேயே கல்லா கட்டலாம்.

இதில் சில எட்டாக்கனிகளும் உண்டு. மெக்டொனால்ட் உணவகம் ஆரம்பிக்க ஐந்து மில்லியன் கேட்பார்கள். அதுவே சிபோட்லே துரித உணவகம் ஆரம்பிக்க வெறும் இரண்டு மில்லியன் போதும். வாஃபுல் ஸ்ட்ரீட் ஆரம்பிக்க 335,000 கேட்கிறார்கள். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? எனவே, பலருக்கு இந்த தொழில் தொடங்குவது எல்லாம் ‘சீச்சீ… அந்தப் பழம் புளிக்கும்’ என்றே ஆகி விடுகிறது.

franchise-cost-chart1

இந்தத் திரைப்படம் எப்படி முக்கியமானது ஆகிறது:

1. வாழ்ந்துகெட்டவரின் வாழ்க்கையைச் சொல்கிறது. பந்தா பி.எம்.டபிள்யூ. கார். நான்கு படுக்கையறைகளும் அழகிய அறைகலன்களும் கொண்ட வீட்டைக் கொண்டவரின் நிஜவாழ்க்கை இது. எனக்கும் இது போல் நிகழ்ந்து, அமெரிக்காவில் நடுத்தெருவிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்த்தும் கதை.

2. மேற்கத்திய உலகு இப்போது கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஒப்பந்தக்கார உலகிற்கு மாறிக் கொண்டிருக்கிறது. அதை இவரின் வாழ்க்கையும் சுட்டுகிறது. குமாஸ்தா வாழ்க்கை முடிந்துவிட்டது. இன்ன வேலையை முடிக்க இவ்வளவு டாலர் என்று பேரம் பேசுவோம். அந்த வேலையை செய்து முடித்தால் கையில் காசு. செய்து முடிக்காவிட்டால் பணமும் போச்சு; பேரும் போச்சு. கணித்துறை வல்லுநரோ, பயிலக குருவோ… எவரானாலும் காரியம் முடித்தால் மட்டுமே சோறு பொங்க முடியும்.

3. இந்த வேலை என்னால் செய்ய முடியும்; அந்த வேலையில் வருவாய் வரும் என்பதால் நாம் ஒரு பணியில் இருக்கிறோமா? அல்லது இந்த வேலையில் நயாபைசா லாபம் இல்லாவிட்டால் கூட செய்துகொண்டிருப்போமா? – இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வது அவசியம். ஒரு செயலை ஊதியத்திற்காக செய்தால் சிரத்தை இருக்கலாம்; நேர்த்தி கூட அமைந்து விடலாம்; நமக்கு திருப்தி கிடைக்குமா?

சிங்கப்பூர்: முதலிய நாடா? கம்யூனிசத் தோட்டமா?

எகனாமிஸ்ட் பத்திரிகையையும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தினசரியையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தால், சிங்கப்பூர் தடையிலா வணிகக் கொள்கை கொண்டிருக்கிறது என நினைப்போம். அயல்நாட்டினரிடம் இருந்து மூலதனத்தை, இரு கரம் கொண்டு சிரம் தாழ்த்தி வரவேற்பதாகக் கேட்டிருப்போம். இதனால் வரிக் கட்டுப் பாடற்ற வாணிபமும் வியாபாரத் தடையின்மையும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்டன என உறுதியான தீர்மானத்திற்கு வந்திருப்போம்.

சிந்தனைக்கு சில தகவல்களும் எண்ணங்களும்:

  1. சிங்கப்பூரின் நிலம் அனைத்தும் அரசாங்கத்திற்கே, முழுக்க முழுக்க சொந்தம்.
  2. உங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டுமானால், அரசுத்துறை சார்ந்த ’குடியமைப்பு அபிவிருத்தி குழு’விடம் இருந்து பெறலாம். – கிட்டத்தட்ட 85% குடியிருப்புகளை நிர்வாகமே தருகிறது.
  3. உலக அளவில் வெறும் பத்து சதவிகிதமே அரசு சார்ந்த நிறுவனங்களால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. சிங்கப்பூரில் இது உலக அளவை விட இரண்டு மடங்கு அதிகம்! நடுவண் அரசின் நான்கில் ஒரு பங்கு எடுமுதல் பயன்பாட்டை அரசாங்க அமைப்புகளே உருவாக்குகிறது.
  4. சென்னை, மும்பை போன்ற நகரங்களின் அளவோடும், மக்கள் தொகையோடும் சிங்கப்பூர் நகரத்தையும் ஒப்பிடலாம்:

 

நகரம்

சிங்கப்பூர்

மும்பை

சென்னை

1. நிலப்பரப்பு 277 ச.மை. 233 ச.மை. 164.8 ச.மை.
2. மக்கள்தொகை 5,469,700 12,478,447 4,681,087
3. மக்கள் தொகை அடர்த்தி 19,725/ச.மை. 54,000/ச.மை. 28,000/ச.மை.
4. தண்ணீர் போத்தலின் விலை (0.33 லிட்டர் புட்டி) 53.80 14.50 14.50
5. பியர் விலை (0.5 லிட்டர் மது) 362.53 60.00 60.00
6. மின்சார கட்டணம்(சராசரி) 9,629.71 1,483.33 1,483.33

இதை சோஷலிஸம் என்பதா? மார்க்சிஸம் என்பதா? கீனிசிய கோட்பாடு என்பதா?புதுச்செவ்வியல்வாதம் (neoclassicism) என்பதா?

யாராவது, சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ கொண்டிருந்த சித்தாந்தம் ‘இதுதான்!’ என்று அறுதியிட்டு வாதிட்டால், அந்த நபருக்கு நிதிநிலைக் கொள்கை, பொருளாதாரக் கருத்தியல் ஆகியவற்றில் எதுவும் தெரியாது என்பதை மட்டும் உறுதியாக அறியலாம்.

Obama 2nd Term start: State of the Union 2013

நேற்று ஒபாமா பேசினார்.

பிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.

கூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.

ஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:

* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”

* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’

* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’

இவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.

நினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன?

அடுத்த கூகிள் யார்?

எனக்கு வேலை போகும் போதுதான் உத்வேகம் பிறக்கும். அன்றாட உத்தியோகத்தில் உழலும்போது எந்த வித செயலூக்கமும் இன்றி ஒன்பதில் இருந்து ஐந்து வரை உழைத்துக் கொட்டும் செக்குமாடாக இருப்பேன். வேலையை விட்டு நீக்கப்படும்போதோ, புதிய வேலையை தேடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதோ, புத்துணர்ச்சியும் சந்தோஷமும் தைரியமும் நிறைந்து இருக்கும்.

அமெரிக்காவும் என்னைப் போலத்தான்.

ஜெராக்ஸ் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவின் தொழில்துறையின் கஷ்டதிசையில்.

கூகிள் எல்லோரும் உபயோகிக்கிறோம். அது துவங்கியது அமெரிக்காவின் டாட் காம் நம்பிக்கையின்மையின் உச்சகட்டத்தில்.

இப்பொழுது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடனில் தத்தளிக்கும் காலகட்டம். 2007ல் துவங்கிய பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து தள்ளாடி எழுந்திருக்க முடியாமல் ஸ்பெயினும் இத்தாலியும் இன்ன பிற அண்டை நாடுகளும் கடன் சுமையில் மஞ்ச நோட்டிஸ் தரும் காலம். சீனாவின் கடன் கொடையினால் அமெரிக்காவே அடிமைப்பட்டு ஏற்றுமதிக்கு புதிய நாடுகளைக் கோரும் காலம். இந்தோனேசியாவும் பிரேசிலும் உலகத்தின் போக்கை நிர்ணயிக்கும் காலம்.

இந்த நேரத்தில் எந்த புதிய துறைகள் அமெரிக்காவிற்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கும்? எந்த முன்னேற்றங்கள் உடனடி லாபமும் தொலைதூரப் பார்வையும் கொண்டு செல்வாக்கை நிலைநாட்டும்?

சில தூரதிருஷ்டி பார்வைகளும், சகுனங்களை முன்வைத்த கணிப்புகளும், பத்தாண்டு பலன்களும்:

எண்ணெய் & எரிவாயு

சவுதி அரேபியாவை நம்பி மட்டும் இருந்தால் பிரயோசனமில்லை என்பது ஒபாமா கட்சி வாதம். உள்நாட்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து எண்ணெய்க் கிணறுகளை முழு மூச்சாக தோண்டி உபயோகிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி ரிபப்ளிகன் வாதம். கனடாவை உபயோகிக்கலாம்; பெட்ரோல் அதிகம் குடிக்காத கார்களை பயனுக்கு கொணரலாம் என்பது ஒபாமா வாதம்.

எது எப்படியோ இந்த எரிவாயு மற்றும் இயற்கை சக்தி துறைகளில் நிறைய முதலீடு நடந்திருக்கிறது. ஒபாமா மீண்டும் அரியணை ஏறாவிட்டால், அவை எல்லாம் அப்படியே முடங்கி பாதியில் வயிறுடைத்த காந்தாரி மகன்கள் கௌரவராக பாண்டவர் பூமியான இரான்+இராக் இடம் தோற்று இருக்கும். ஆனால், சகுனி எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனங்கள் ஆதரவுடன் புதிய பராக்கிரமத்துடன், பீஷ்மர் டெட்ராயிட் ஜெனரல் மோட்டார்ஸ் வழிகாட்டுதலுடன் ரத கஜ பலத்துடன் களத்தில் சின்னப் பையலாய் குதிக்கும்.

வாகன தயாரிப்பின் மாற்றங்களும் சுற்றுச்சுழல் அச்சுறுத்தல்களும் கரியமில கட்டுப்பாடுகளும் உள்ளூர் எண்ணெய் வர்த்தகமும் அமெரிக்காவை மீண்டும் கார் துறையின் மூலம் வால் ஸ்ட்ரீட்டை உயர்த்தி ஷாங்காயை தட்டி வைக்கும்.

முப்பரிமாண அச்சு

1930களின் மின்ஒளிவரைவியல் துறையில் கால்பதித்த ஜெராக்ஸ் ஐம்பதாண்டுகளாக தொழில்துறையில் முன்னோடியாக இருந்த மாதிரி, அடுத்த ஜாக்பாட் – 3டி அச்சுப்பொறி.

எனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவான தண்ணீர்க் குடம் வேண்டும். இரண்டு கேலன் கொள்ளளவு இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த வடிவமைப்பாளர் கொடுக்கும் உருவில் தயாராக வேண்டும். இதெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்தால் ஒழிய சாத்தியமில்லை. ஆனால், வெகு கூடிய விரைவில் சிகாகோவில் தயாரகும் கேட்/கேம் (கணிப்பொறிவழி வடிவமைப்பு) ஓவியங்கள் கொண்டு சிவகாசியிலும் சீனாவிலும் சல்லிசான விலையில் திடப் பொருட்கள் எனக்கே எனக்காக உருவாகும். மின்னல் வேகத்தில் வந்தடையும்.

இன்றைக்கு கூகிள் செய்திகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வது மாதிரி. நம் விழைவிற்கேற்ப வீட்டுப் பொருட்களை வாங்கலாம்.

உடல்நலம் & மரபியல்

ஒபாமா என்றாலே அமெரிக்கர்களுக்கு எப்போதும் நினைவில் வரும் சொல்லாக ஒன்றை நிலை நாட்டியிருக்கிறார்: ஒபாமா கேர் – அவரின் எதிராளிகளும் இந்தச் சொல்லாலேயே ஒபாமாவை தூஷணை செய்து, ஒபாமாவின் உடல்நல காப்பீடு திட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளையும் சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கி இருக்கிறது.

அது இருக்கட்டும்.

இருபது வருடங்களாக நடந்து வரும் மனிதகுல மரபுரேகைப் பதிவு திட்டம் ஆகட்டும். சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகட்டும். மரபியல் சார்ந்து மருந்துகளை பரிந்துரைக்கும் உத்தி வெகு விரைவில் பரவலாக பிரபலமடையும்.

எனக்கு இருக்கும் கொழுப்பு; எனக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி; அன்றாடம் உட்கொள்ளும் மது; முட்டி வலியின் தீவிரம் போன்ற ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தியெட்டு விஷயங்களையும் கணக்கில் கொண்டு, எனக்கே எனக்கான அனாசின் மின்னல் வேகத்தில் தயாராகும்.

உங்களுக்கும் அதே டைலனால்; எனக்கும் அதே இருநூறு மில்லிகிராம் டைலனால் என்னும் காலம், கூடிய சீக்கிரமே காலாவதியாகும். இதை எல்லாம் வாங்கும் பலம் நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றடைய ஒபாமாவின் சேமநல காப்புறுதி திட்டம் கால்கோள் இடும்.

செயற்கை உயிரியல்

மனிதனுக்குத் தெரிந்து இந்த மண்ணில் ஒண்ணே முக்கால் மில்லியன் ஜந்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் அதை விட பன்மடங்கு உயிரினங்களை சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

காருக்கு பெட்ரோல் வேண்டுமா… அதற்கு ஒரு உயிரினம் தயாரிக்கலாம்.

சுற்றுச்சூழல் கெடுகிறதா… அதற்கு ஒரு உயிரினம் உருவாக்கலாம்.

இவை எல்லாம் இன்றே கிட்டத்தட்ட சாத்தியம் என்றாலும், பலருக்கும் அணுக்கமாக கிடைக்குமாறும் குறைந்த பொருட்செலவில் உருவாக்குதலிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் விலகவும் சோதனைச் சாவடிகளில் விடை கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் எண்ணுகிறார்கள்.

தண்ணீர்… தண்ணீர்

அடுத்த இருபதாண்டுகளில் நல்ல நீருக்கான தேவை இரட்டிப்பாகும். உலகெங்கும் சுத்த குடிநீருக்கான அவசியம் விஞ்ஞானத்தை நோக்கி விடை கோரி கையேந்துகிறது.

கரிமம் மூலம் உண்டான கிராஃபீன் தகடுகள் கடல்நீரில் நிறைந்திருக்கும் உப்புகளை நீக்கி குடம் குடமாக தண்ணீரை வெகு எளிதாக அதிவிரைவாக தயாரிக்கும் முறைகள் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது. நீராலான உலகை உப்பு நீரில்லாத உவப்பான நீராக மாற்றும் வித்தையில் கண்ட வெற்றி பொருளாதார மாற்றங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்லும்.

இறுதியாக…

நானோ தொழில்நுட்பம் மூலம் சில்லுகளை சேர்ப்பது முதல் கடைகளில் பொருள்களை கண்காணிப்பது வரை பல பயன்கள் நம்மை சென்றடைந்திருக்கிறது. கார்பன் நுண்ணிய டியுப்கள் மூலமாக கிடைக்கும் லாபாங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வரத்துவங்கினால் இண்டெர்னெட் புரட்சி போல் அடுத்த பூதாகாரமான வளர்ச்சியும் வரப்பிரசாதங்களும் பிரமிக்கவைக்கும்.

அதற்கெல்லாம் எதிர் நீச்சல் போடும் தைரியமும் துணிச்சலாக ஆபத்தான செலவுகளை செய்து பார்க்கும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

சிறு தொழில் முதலீடுகளில் பின்னடைந்தாலும் சரி… நசிவு கண்ட முனைவோர்களையும் சரி… அமெரிக்காவில் எப்போதுமே எள்ளி நகையாடாமல், அடுத்த வாய்ப்பு தந்து தட்டிக் கொடுத்து அவர்களிடம் இருந்து வெற்றியை வரவழைக்கும் வித்தையை தக்க வைத்திருக்கும் வரை, இந்த முன்னோடி + முதலிடம் தட்டிப் போகாது.

9/11: பத்தாண்டு பலன்

இந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.

செப்டம்பர் 11, 2001.

பத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன? எது நடந்தது?

  1. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் போர்
  2. இஸ்லாமிய வெறுப்பு
  3. பொருளாதாரப் பின்னடைவு

இஸ்லாமிய வெறுப்பு – அதீத பயம்

  • 88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.
  • 83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொலையாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.

  • அமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா? ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங் இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.

அயல்நாட்டுப் போர்

  • ஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.
  • இராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.

  • இறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை? அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு
    • வேலைவாய்ப்பின்மை
    • மருத்துவ சிகிச்சை தராமை
    • குடும்பத்தினருக்கு ஏற்படும் பளு
    • மனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.
  • வீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.
  • போராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும்? அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும்? தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்?

பொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை

இதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.
நிதி நிலவரத்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.

  • இது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடுக்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.
    • ஒன்று வரி ஏற்றப்படும் – வருமானம் அதிகரிக்க வழி
    • அல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது
ஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.
ஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது!

அன்னா ஹஸாரே: இந்திய இளைஞர்களுடன் உரையாடல்

வேலாயுதம் துணை ! ஓம் தத் குவாடரோச்சி !!

காந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.

அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்.

அரசியல், ஆளுமை, இந்தியா, காந்தி

இந்தியாவில் இருக்கும் என்னை விட இளையவர்களான அடுத்த தலைமுறையினர் சிலருடன் பேசினேன்.

கிடைத்தது ஏழு பேர். பூனா, கொல்க்த்தா, சென்னை, டெல்லியில் இருப்பவர்கள். இருவர் தமிழர். அதில் ஒருவர் மதுரைக்காரர். எல்லாருமே பதினெட்டில் இருந்து முப்பதுக்குள். கல்லூரி மாணவர்களும் உண்டு.

உரையாடிய அனைவருமே அன்னா மீதும் அரசியல் மீதும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

சாட் பெட்டியில் இருந்து…

1. ’காந்தியும் நேருவும் தோளில் கைபோட்டுக் கொண்டால் சரி. ஆனால், நாளைக்கே மன்மோகனும் (அல்லது அத்வானியும்) அன்னாவும் கை கோர்த்துக் கொண்டால்?’

2. ‘அவருக்கு பா.ஜ.க. என்னும் மதவாதம் மட்டுமே பின்னணியில் இருக்கிறது.’

3. ‘எல்லாரும் குட்டையில் ஊறின மட்டைகள். அன்னாவும் விதிவிலக்கல்ல. இவரால் எனக்கு, சாதாரண ஆளுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை.’

4. ‘நான் என் பாஸுடன் (க்ரூப் டிஸ்கஷன் மாதிரி) முரண்பட்டு, வித்தியாசப்படுத்திக் கொள்வது போல் அன்னாவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழைகிறார்.’

5. ‘தமிழகத்தில் வைகோ கூவினார். டெல்லியில் ஹசாரே சத்தம் போடுகிறார். நம்ம அப்பா அம்மா, நம்மைப் படிக்க வைப்பது போல் அரசியல்வாதிக்கு போராடத்திற்கு ஆள் சேர்ப்பது.’

6. ‘ரத யாத்திரைக்கும் உண்ணாவிரதத்திற்கும் வித்தியாசம் எனக்குத் தெரியல. ஹீரோயினைத் தேய்த்து விடுவது போல் இதெல்லாம் சும்மா உசுப்பேத்தேல். இதற்கெல்லாம் நான் ஏற மாட்டேன்.’

7. ‘இந்த மசோதாவில் என்ன பிரச்சினை, எங்கே இடையூறு என்று எனக்குப் புரியவில்லைதான்; ஆனால், இவ்வளவு பெரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்தால், அதில் விஷயம் இல்லாமலாப் போயிடும்?!’

8. ‘இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இவர்கள் சவுண்ட் குறையாது.’

9. ‘நான் மட்டும் இந்த மாதிரி இவர ஆதரிச்சுப் பேசுனா, பைத்தியம் மாதிரிப் பாக்கிறாங்க. மொத்த குரூப்பே எனக்கு எதிராக ரவுண்ட் கட்டுது. ஆள விடுப்பா…’

10. ‘நல்ல பிரொகிராம் எழுதணும்னு ஆசைப்படுவோம்; ஆனா நடக்காது. அது மாதிரி இவரோட ஊழல் எதிர்ப்பு, வாய்தா வாங்கி தூங்கிடும்’

இவர்கள் அனைவருமே அன்னா-வின் விக்கிப்பிடியா பக்கம் கூட படிக்கவில்லை. தகவல் அறியும் சட்டம் அறிந்திருக்கவில்லை. அவருடைய குறிக்கோளை சந்தேகிக்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அச்சம் கொள்கின்றனர். ’அப்படி நடக்கலாம்; இப்படி ஆகி விடும்’ என்றே ஊகிக்கின்றனர்.

பாதை சரியா? இறுதி முடிவு நல்ல விஷயமா? என்பதைக் குறித்து கவலைப்படாமல் தங்களால் துரும்பைக் கிள்ளிப் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.


Noted Research Writer and Cultural Anthropologist Jeyamohan‘s view

’இன்றைய காந்தி’: கிராமசுயராஜ்யம்

ஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை. அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில் ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்

ராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது. ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது

மெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.

அண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும் அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.

தேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது

விவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.

ஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது!

இந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப்புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.

மேலும்:

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1


ஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை: அசராத போராளி அன்னா ஹசாரே

விகடன்.காம்

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி…

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்…

* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கியிருக்கிறார்!

ஏப்ரல் 2011…

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கினார்!

ஆகஸ்ட் 2011..

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

இந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது செய்தது காவல்துறை.

 


செய்திகள்

சிவில் சொசைட்டி உறுப்பினரான கிரண் பேடி கூறுகையில், ‘‘போலீசாரின் யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு மாதம் உண்ணாவிரதத்துக்கு ஹசாரே அனுமதி கோருகிறார்’’ என்றார். இதனால், முட்டுக்கட்டை நீடிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவும் நீடித்தது. முன்னதாக, திகார் சிறையில் ஹசாரேயை வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி சந்தித்து பேசினார். பாபா ராம்தேவ் திகார் சிறை வாசலில் குவிந்திருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசினார். ஹசாரேயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியிடம் ராம்தேவ் மனு அளித்தார்.

”ஊழலை உடனே கட்டுப்படுத்த அரசிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

”சட்டம் இயற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது. அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மக்கள் வழங்கி உள்ளனர்.” இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


நிகழ்வுகள் / டைம் லைன்

2011, ஜனவரி 30: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, அன்னா ஹசாரே தலைமையில் நாடு முழுவதும் ஊர்வலம் நடந்தது. இதில், கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், பிரசாந்த் பூசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 26: லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் மக்களையும் உறுப்பினராக சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்., 5 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.

மார்ச் 3: அன்னா ஹசாரேவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கடிதம் மூலம் பிரதமர் அழைப்புவிடுத்தார்.

மார்ச் 7: கிரண்பேடி, அக்னிவேஷ், பிரசாந்த் பூஷனுடன் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் ஹசாரே.

மார்ச் 8: மத்திய அமைச்சர்கள் அந்தோனி, வீரப்பமொய்லி, கபில் சிபல், சரத் பவார் அடங்கிய துணைக்குழு ஒன்று பிரதமரால் அமைக்கப்பட்டது.

மார்ச் 28: துணைக்குழுவுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹசாரே அறிவித்தார்.

ஏப்.,4: உண்ணாவிரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஹசாரே. இவரின் இந்த முடிவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.

ஏப்.,5: மகாத்மா காந்தியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, இந்தியா கேட்டில் தொடங்கிய பேரணி ஜந்தர் மந்தர் வரை சென்றது. அங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார் . தொடக்கத்தில் 5,000 ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஏப்.,8: ஹசாரே வலியுறுத்தியபடி குழு அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையுடன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தார், ஹசாரே.

ஏப்.,9: குளிர்கால கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். சுதந்திர போராட் டத்திற்கு பின் நாடு தழுவிய போராட்டமாக பார்க்கப்பட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

ஆக.,16: லோக்பால் மசோதாவில் ஏற்றம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணா விரதம் இருக்கத் துவங்கும் முன்பே ஹசாரே கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் எகிப்து வருமா? சூடான் ஆகுமா?

இது ரொம்ப பழைய கதை. நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல் கதை

ஒரு ஊரில் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோழியும் ஒரு சேவலும் வளர்த்தாள். அது நாளொரு முட்டையும் இட்டு வந்தது. சிறு சிக்கன் பல பணம் என்பதற்கேற்ப, ஒன்றை இரண்டாக்கி, இரண்டை பன்மடங்காகப் பெருக்கினாள்.

அவளுக்கு பக்கத்து வீடு மாளிகையாக இருந்தது. அதில் இருந்தவளுக்கு பத்து கோழி இருந்தது. தினந்தோறும் ஆறுமுகனின் கைக்கு ஒன்றாக டஜன் ஈண்டது.

திடீரென்று ஒரு நாள் மாளிகைக்காரிக்கு முட்டை வரத்து குறையத் துவங்கியது. அவள் பக்கத்துவீட்டுக்காரியை சந்தேகப்பட்டாள்.

அரசனிடம் முறையிட்டாள். ஒற்றைக் கோழி வைத்திருப்பவளோ ‘நான் எடுக்கவில்லை’ என மறுக்கிறாள்.

‘அவள் ஏழை. அதனால்தான் எடுக்கிறாள்’ என்கிறாள் பணக்காரி.

குழம்பிப்போன ராஜா, அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து அனுப்பித்துவிட்டான். விடிந்தது. அரண்மனை வாயிலில் சேறும் சகதியும் ஆக்கிவைக்க சொன்னான். வாயிலைக் கடந்ததும் ஒரு சிறிய கப்பும், இரண்டு வாளி நிறைய தண்ணீரும் வைத்தான்.

இருவரும் வந்தார்கள். ஒத்தை கோழிக்காரி ஒரேயொரு குடுவையளவு நீரை வைத்து, இரண்டு கால்களையும் சுத்தமாக அலம்பிக் கொண்டுவிட்டாள்.

பத்து மாட்டுக்காரிக்கு ஒரு வாளி போதவில்லை. பருத்த கால்கள். கவனம் சிதறிய நடை. சறுக்கி விடக் கூடாதென்ற பயம். எல்லாம் சேர்ந்து முட்டி வரை கரை. முன்னவள் பாக்கி வைத்திருந்த வாளித் தண்ணீரையும் தாராளமாக தாரை வார்த்தாள்.

மரியாதைராமன் பார்த்துக் கொண்டிருந்தார். தன் முட்டை போதாதென்று அடுத்தவர் முட்டையையும் சுடும் பழக்கம் கொண்ட பணக்காரியை கண்டித்து, அபராதம் விதித்தார்.

அங்கே சாட்சியம் இல்லை. அமெரிக்காவில் மீடியம் இருந்தாலும் மக்கள் மருண்டதில் ஒபாமாவின் பிடி தளர்ந்து முட்டை சிதறிவிட்டது.

மரியாதைராமன் போல் குடிமகன்களுக்கும் குழப்பம். நிறைய வைத்திருப்பவர் சிரத்தையாக மேய்த்தால், எதற்காக வளர்ச்சியில் பின் தங்க வேண்டும்? ஒழுங்காக கணக்கு போட்டு, கண்ணுங்கருத்துமாக நிர்வகித்தால், ஏழை பக்கத்துவீட்டுக்கார இந்தியா/சீனா போல் நாமும் முன்னேறலாமே?

இப்போதைக்கு அமெரிக்காவின் விஜயகாந்த் ஆன ‘டீ பார்ட்டி‘யிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் புள்ளிவிவரம்:

கி.பி. 1980: அமெரிக்காவின் மொத்த வருவாயின் பத்து சதவீதத்தை ஒரு சதவீத பெரும்பணக்காரர் ஈட்டுகிறார்கள்.

2007: வெறும் பத்து சதவிகித பெரும்பணக்காரர்கள் 50% (சரி பாதி) வருவாயை வைத்திருக்கிறார்கள்.

2007: நான்கு லட்சம் டாலருக்கு மேல் ஈட்டும் மிகப்பெரும் செல்வந்தர்களிடம் 25% பணம் அடைந்திருக்கிறது.

1973 முதல் இப்போது வரை, பாக்கி 99% சதவிகித சராசரி அமெரிக்கரின் வருவாய் 8.5% உயர்ந்திருக்கிறது.

அதே காலகட்டத்தில் 1% செல்வந்தர்களின் சம்பளம் 190% வளருகிறது.

இப்போது விஜய்காந்த்தின் மதிப்பை உணர்ந்திருப்பீர்கள்.

  • இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
  • இப்படி பணங்குவிப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா?
  • எட்டு மில்லியன் அமெரிக்கர்களை வேலையில்லாமல் தவிப்பது குற்றமில்லையா?

முழங்கினார்கள்; ‘தேநீர் கட்சி‘ வென்றது.

இப்பொழுது நிகழ்காலம். முதலில் டுனீசியா; நேற்று எகிப்து; நாளை யேமன்? ஜோர்டான்?

Unrest in Arab countries

Political crisis in Egypt

எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறது… எப்படி வெடித்தது! ஏன் உருவானது… இதுதான் ஊடகங்களின் பேசு பொருள்.

1848 -இல் ஃப்ரெஞ்சு போராட்டத்திற்கும் அரபு நாடுகளின் எழுச்சிக்கும் முடிச்சுப் போடுகிறது ‘தி வோர்ல்ட்’.

இந்தோனேஷியாவில் 1998 பொங்கி எழுந்த ஏழை வறியோரின் கோபத்தையும் எகிப்தின் போராட்டமும் ஒரு விதத்தில் சரி நிகர் என்கிறது என்.பி.ஆர்.

1989களில் சோவியத் ருஷியா துண்டாடியதும், செக்கோஸ்லோவேகியா பிரிந்ததும், பில் கிளின்டனின் போஸ்னியா போரும் ஒப்பிடத் தக்கது. – அல் ஜஸீரா.

தலைப்புக்கு நிஜமாகவே வந்து விடலாம்.

இனப் போராட்டத்திற்குள்ளான சூடான் இரண்டாகப் பிரிகிறது. அமெரிக்கா இரண்டாகப் பிரியுமா?

சவூதி அரேபியா போல் இஸ்லாமிய நாடாகவும் பிரஸ்தாபிக்காமல், லெபனான் போல் சுதந்திரமும் புழங்காமல் இருக்கும் எகிப்தில் படித்தவர்கள் போராட்டத்தை முன்வைக்க, வறியோர்கள் பின்னெடுத்து செல்கிறார்கள். அமெரிக்காவிலும் ஜீஸஸ் அருளுடன், வீடற்றோர் பொங்கியெழும் ‘டீ பார்ட்டி’ புரட்சி எழுமா?

இந்தியாவைப் பாருங்கள்… உங்கள் வேலையை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
சீனாவைப் பாருங்கள்… நீங்கள் உபயோகிப்பவை அனைத்தும் அங்கேதான் தயாராகிறது.

இந்தியனை… வெளியேற்று; சீனாவை… தூக்கியெறி!

பணக்கார ஆசியர் பி.எ.டபில்யூவிலும் லெக்சசிலும் பவனி வரும்போது, அண்டியிருக்க ஓலைக்குடிசைக்கு கூட வக்கிலாதவர்களுக்கு கோபம் வரும். அதுவும், வேற்று நிறத்தவனாகவும் இருந்துவிட்டால்…

உகாண்டாவில் நடந்தது; ஃபீஜியில் நடக்கும்; ஏன் நடக்காது என்பது இன்னொரு நாளைக்கான மேட்டர்.

தொடர்புள்ள நூல்கள்:

1. The Mendacity of Hope: Barack Obama and the Betrayal of American Liberalism by Roger D. Hodge

2. Ill Fares the Land by Tony Judt

ஜாதி: தேவையா? வேண்டாமா?

சில பதிவுகள்:

1. jeyamohan.in » Blog Archive » சாதி பேசலாமா?

2. jeyamohan.in » Blog Archive » சாதியுடன் புழங்குதல்…

3. jeyamohan.in » Blog Archive » சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

4. திணை இசை சமிக்ஞை: நவீன சமூகமும் இரட்டைநிலையும் – தமிழவன்

சாதி ஏன் வேண்டும்?

  1. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பில் வாக்கு வங்கி எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்வதற்கு
  3. சம்பளம், வேலை போன்ற குறியீடுகளைக் கொண்டு முன்னேறிய வர்க்கங்களை அடையாளம் காட்டுவதற்கு
  4. தொன்றுதொட்டு வரும் இனக் குறியீடுகளையும், குலவழக்கங்களையும் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு
  5. முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே வெள்ளை நிறத்தல்லாதவர் மீதம் அண்டை நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரும் ஒடுக்கப்படும் நிலை; இங்கே இப்ப என்ன அவசரம்?
  6. வத்தக்குழம்பு, குழிப்பணியாரம் என்று உணவு ஸ்பெஷாலிடிகளுக்கு சரவண பவன்கள் மட்டும் என்று மாறாதிருப்பதற்கு
  7. ஐஐடி, என்.ஆர்.ஐ., ஆட்டோ ஓட்டுநர் என்று பிரிவுகள் மாறலாம்; சகோதரப் பற்று சாகாது
  8. சாதியை எல்லாம் எப்பொழுதும் ஒழிக்க முடியாது என்று சொல்வதற்கு

ஜாதி ஏன் தேவையில்லை?

  1. சமூகம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தப்பட வேண்டும் என்பதால்
  2. இன்றைய நாகரிக உலகு பொருளுடையார், இல்லார் என இரண்டே பிரிவினர் கொண்டதால்
  3. பார்ப்பான், பள்ளன், கள்ளன், செட்டி என்று எல்லாமே வசைச் சொல்லாகிப் போனதால்
  4. மண்டல் போல் அரசியல் கலவரம் ரசிக்காததால்
  5. லாலு, மாயாவதி, முலாயம் என விகித்தாசார லஞ்ச ஒதுக்கீடு மேல் கொண்ட வெறுப்பினால்
  6. அப்படியே விளிம்பு வர்ணம் பார்த்து கட்சி அமைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல் விடுதலை சிறுத்தைகள் வரை அனைவரும் இந்துத்துவா முதல் தீவிரவாதம் வரை அனைத்து ஒதுக்கப்பட வேண்டியோருக்கும் ஆதரவு நல்குவதால்
  7. க்ளாசிஃபைட் விளம்பரங்களில் கோத்திரம் பார்க்காததால் கொலை செய்யும் மணமுடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டுவதால்
  8. பிரிவினையை விரும்பாததால்

“A caste-ridden society is not properly secular. When a person’s beliefs become petrified in caste divisions, they affect the social structure of the state and prevent us from realising the idea of equality which we claim to place before all else.” – Jawaharlal Nehru

olla podrida

ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால், ஒரு மாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. தமிழ்மணம் பக்கம் சென்று ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது.

நித்தியானந்தாவிற்கு டாப் 10 போட கொள்ளை ஆசை. நேரம் அமையவில்லை. இப்பொழுதும் போடலாம். அட்லீஸ்ட் ட்விட்டரில் கிடைத்த சம்பாஷணைகளில் கவர்ந்ததைத் தொகுக்கலாம்.

ரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வணக்கத்துக்குரிய பிதா, பாப்பரசர் பெனடிக்ட்டும் உறுதுணை நின்றிருக்கிறார். திருச்சபையின் திரைமறை திருப்பலி களப்பணி.

அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்றால் துணிச்சல் வரும். ஒபாமா போன்றவருக்கு அதுவே அபயம் என்றால் ஜிம் பன்னிங் (Jim Bunning) போன்ற சிலருக்கு அசட்டுத் துணிச்சல். மறுமுறை வாக்கு கோரினால் நிச்சயம் தோல்வி என்பதால் அதீத நிலைப்பாடா? அல்லது டெமொக்ரடிக் ஆளுங்கட்சியே காசு கொடுத்து கூவச் சொல்லியதா?

கிறித்துவிற்கு முன் பிறந்த போப்பை விமர்சிக்கும் இந்தப் பதிவில் 1907ல் இயற்றப்பட்டது நீங்குவது பாராட்டுவதுதானே பொருத்தம்?

இல்லை… தேர்தல் நிதிக்கு தரப்படும் பணம் எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஒபாமாவிற்கும் ஹில்லரிக்கும் இதனால் பெரும்பாதிப்பு இருக்காது. ஆனால், அமெரிக்காவில் பென்ச் நீதிபதிகளுக்கும் தேர்தல் உண்டு. அவர்கள் உள்ளூர் வழக்கொன்றில், நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருப்பார். அவர், மறுபடி வாக்காளரை சந்திக்கும்போது, அதே நிறுவனம் அசுர பலத்துடன் மீடியாவில் எதிர்மறை விளம்பரத்தை சுழலடிக்கும். போட்டி வேட்பாளருக்கு பற்றுடன் வரவு வைக்கும்.

இதே போல் மாநில சட்டமன்றத்திலும், பெருவணிகர்களைப் பகைத்துக் கொள்ளும் சட்ட மசோதாக்களை ஆதரிக்க அரசியல்வாதிகள் அஞ்சும் சூழல் தோன்றும். இன்று வணிக ஸ்தாபனத்திற்குப் பிடிக்காத சட்ட வரைவை நிறைவேற்றினால், நாளைய பொழுதில் பில்லியன் டாலர் கணக்கில் தீர்த்துக் கட்டப்படுவோம் என்பது அவருடைய லிபிதம்.

ஒவ்வொரு அரசியல்வாதியாக, ஒவ்வொரு நீதிபதியாக, ஒவ்வொரு தேர்தலாக இந்த மாதிரி செலவழிக்க வேண்டாம். வணிக நிறுவனத்தின் பலம் என்பது அல் க்வெய்தாவின் ஆள்சேர்ப்பு மாதிரி. எங்கேயாவது ஒரு வெடிகுண்டு போதும். பூரா பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் தேசம் மாதிரி தோன்றும். அதே போல், எங்காவது ஒரு சாம்பிள் போதும். ‘அவனுக்கு நேர்ந்த கதி, உனக்கும் ஆவணுமா?’ என்றே மிரட்டி, அனைவரையும் வழிக்குக் கொணரலாம்.

தொடர்புள்ள இடுகை: ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்! « US President 08

Democrats Far Outspend Republicans On Field Operations, Staff Expenditures – WSJ.com

In 2004, the Democratic Party spent nearly $120 million on advertising in support of then-nominee John Kerry, compared to only $500,000 this fall

தலைப்புக்கு என்ன அர்த்தம்?

1. An incongruous mixture.
2. A spicy stew of seasoned meat, vegetables, chickpeas, etc.

ETYMOLOGY: From Spanish olla podrida (literally, rotten pot), from olla (pot) + feminine of podrido (rotten).

USAGE: “Alice Randall’s collection of cookbooks is formidable, an olla podrida of Junior League and soul food cookbooks and classics like The Joy of Cooking.”
– Penelope Green; What Matters Most; The New York Times; Sep 16, 2009.

துவக்கத்தில் எதற்கு தமிழ்மணம் பேச்சு? அன்றாடம் வராவிட்டால், கவர்ந்திழுக்கிற மாதிரி தமிழ்மணத்தில் எதுவுமேயில்லை. திடீரென்று வந்து விழுபவருக்கு சென்னைக்குப் போன அமெரிக்கன், சேனல்களைத் தாண்டிய கதையாக, டிவியை அணைக்கவைக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ எங்கே, துணையெழுத்தோடு ‘ராமாயணம்’ அங்கே என்று காட்ட வேண்டாமோ?

தசாப்தம்

“Our incomes are like our shoes; if too small, they gall and pinch us; but if too large, they cause us to stumble and to trip.”
Philosopher John Locke

கடந்த பத்தாண்டுகள் எப்படி இருந்தது?

இன்டர்வ்யூக்களில் கேள்வி கேட்கத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டால் ‘Where do you see yourself 5 years from now?’னு பட்டவர்த்தனமாய்க் கேட்பார். ரொம்பவே லட்சியவாதியாக பொய் சொல்லாமல், அதே சமயம் உண்மை விளம்பியாக ‘உங்க சீட்டுதான் மேடம்’ என்று உளறாமல் அரை விண்டோவில் ட்விட்டர் பக்கம் திறந்து படிக்கும் சர்க்கஸ் சாகசமாய் பதில் சொல்லவேண்டும்.

சொல்லியிருப்பீர்கள். அப்பொழுது சொல்ல நினைத்த இடத்தை இப்பொழுது நீங்கள் பிடித்தாகி விட்டதா?

சுயநலம்

எனக்காக யோசித்தேன்.

2000த்தில் எங்கே மட்டிக் கொண்டிருந்தேனோ, 10லும் அதே கதவிடுக்கில் சிக்கிய நிலை. ‘வேலயில்லாதவன்தான்; வேல தெரிஞ்சவன்தான்’ என்பதாக ரஜினி பாடிய அளவு மோசமில்லை. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாண்டுகள் சரியும் பொருளாதாரம்’ தலைப்பை தேர்ந்தெடுத்து விளக்கும் சூட்சுமம் அறிந்திருந்தும், பட்டமும் பெறாமல், தெரிந்த சூத்திரத்தை வருமுன் காப்போனாக விலக்கவும் அறியாத நிலை.

க்ளின்டன் ஆட்சியின் கடைசி ஆண்டில் துவங்கிய சரிவு, ஆல் கோருக்கு ஆப்படித்து, ஆப்கானிஸ்தானில் ஆப்படித் துவங்கியபின் நிமிர்ந்தது. புஷ் இறுதியாண்டில் அடுத்த கட்ட பொருளாதார பொலபொல; ஒபாமாவும் இரானிலோ யேமனிலோ போர் தொடுக்காமல் நிற்காது போலிருக்கிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை

இதற்கு இந்தியா நேர்மார். ஆட்சி கைமாறினாலும் நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தொய்வில்லை. குட்டி கார், பெரிய டிவி, அடுக்கு மாடியில் ஒரு வீடு, ஆளுக்கொரு செல்போன். சாய்நாத் போல் வறியோர் – வட்டிகொண்டோர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை புள்ளிவிவரமாக்கா விட்டால், அபார பாய்ச்சல். மேல்தட்டு இமாலயத்தைத் தொட்டுப் பார்க்கிறது. மிடில் கிளாஸ் ஆனைமுடியைத் தாண்டிவிட்டது.

கல்லூரி முடிந்தவுடன் தொடரும் பருவமும் இலக்கும் எளிமையானவை. கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை; வேளாவேளைக்கு வடித்துக் கொட்ட மனைவி; அவளின் என்டெர்டெயின்மென்டுக்கு குழந்தை; பெற்றோரை விட்டு போதிய தூரம்; கோல்ஃப் ஆடி தண்ணியடிக்கவோ, தண்ணியடித்து பௌலிங் போடவோ நான்கு நண்பர்கள்.

எளிமையான கனவு கண்டால், கனிவாக சித்திக்கும் பத்தாண்டுக் காலம். அதற்கு அடுத்த பத்தாண்டுகள்?

நாற்பது வயதில் நாய்க்குணம்

Peer pressureஐ வெளிக்காட்டாத ஆசாமியானால், ஐபிஓ பார்த்த கல்லூரித் தோழனையோ, சிக்யூஓ ஆகிவிட்ட நண்பனின் மனைவியையோ, இந்தியா திரும்பி ஆஃப்ஷோரிங்கை நிரூபித்த நபரையோ உதாரண புருஷராக நினைக்காமல், 9 டு 5 சாகரத்தில் சங்கமமே விருப்பமாக சொல்லிவிடுவார்.

கொஞ்சம் ஹைப்பர் பேர்வழியானால், தலை 5 (இப்ப மீந்திருப்பது நான்கா/மூன்றா) கான்ட்ராக்ட் வேலையில் மூழ்கி பார்ட்னராகும் பாதை பக்கம் பேபி ஸ்டெப்ஸ் வைத்திருப்பார்.

Contractors as Prostitutes vs Marriage as Full Time Employment

நிரந்தர வேலைக்காரரை மனைவி எனவும், குந்துரத்தரை வரைவின் மகளிர் எனவும் ஒப்புநோக்கலாம்.

மனைவிக்கு விவாகரத்து தர ஜீவனாம்சம் அழவேண்டும். முழு நேர உழைப்பாளியை நீக்கினால் severance pay தரவேண்டும். சிஎன்என் தலைப்புச் செய்தி போல் நிமிடந்தோறும் மாறும் தொழில்நுட்பங்களை குந்துரத்தர் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். கீப் எனப்படுபவள் அதே போல் தன் தோற்றத்தை சிக்கென்று வைத்திருக்க வேண்டும்.

இன்ஷூரன்ஸ், பென்சன் மாதந்தோறும் பற்றுக் கணக்கு போல், மனைவியோடு இலவச இணைப்பாக மாமனார், மாமியார் தொகையறா செலவுகள் எக்கச்சக்கம். ரேட்டு நிறைய என்றாலும், குந்துரத்தரோடு ஒரு மணி நேரத்திற்கு ‘இத்தினி ரேட்டு’ என்று பேசிவிட்டால், முடிந்தது காரியம்.

மத்தியமரில் இத்தனை வகையா?

தாலி கட்டிய பத்தாண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைப் பாதை எவ்விதம் அமைக்க விருப்பம்?

1. காலாகாலத்திற்கும் சம்பளம்; கவர்ன்மென்ட்டு உத்தியோகம் போல் வால் ஸ்ட்ரீட் இருக்கை.
2. கான்ட்ராக்டர் -> கன்சல்டன்ட் -> பார்ட்னர் -> சொந்த நிறுவனம்
3. புத்தம்புது ஐடியா + ஏமாந்த முதலீட்டாளர் = மாறிக் கொண்டேயிருக்கும் நிறுவன ஸ்தாபனர்

அமெரிக்கரை மேற்கண்ட மூன்று வட்டத்துள் சுருக்கினால், இந்தியரை எவ்விதம் அடக்கலாம்?

வளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கும் தலைமுறையை இப்படி பாகுபடுத்துவது இயலாது. கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்க நிலையைக் கண்டிராத சமூகம்.

பொறியிழந்த விழியினாய் போ போ போ

அமெரிக்காவைப் போல் போரை நம்பி பிழைக்காத நிதிநிலை. ரஷியாவைப் போல் அரசாங்க செலவை மட்டுமே நம்பியிராத நிலை. எமிரேட்ஸைப் போல் எண்ணெயைத் தலைக்கோசரம் வைத்து உறங்காத வளம்.

இத்தகைய நாட்டின் இளைய தலைமுறையையும், கொஞ்சம் தலை நரைத்த தலைமுறையும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளுமா? அப்படி மாபெரும் வீழ்ச்சி வந்தால் எப்படி சமாளிக்கும்?

சத்யம் தந்த சாம்பிள் போல் தற்கொலையும், அமெரிக்க இந்தியர் சிலர் மேற்கொண்ட மரணங்களும் அன்றாட பெட்டிச் செய்திகளாகி விடும்.

Call center ஆப்பிரிக்காவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடம்பெயர்ந்தால் transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது?

லட்சக்கணக்கில் இளநிலைப் பொறியாளரை உருவாக்கிவிடும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், பட்டதாரிகளை தொழில் முனைவோராகவும், சுயசிந்தனையாளர்களாகவும், வாக்குஜால வித்தர்களாகவும் மாற்றுவது எக்காலம்?

நகரத்தில் எல்லோரும் பேராசைக்காரர்; கிராமத்தோர் நிறைமனதுக்காரர்; போன்ற வார்ப்புரு தேய்ந்தாலும், பொன் செய்யும் மருந்து மனத்திற்கும் எதிர்நீச்சல் வெறிக்கும் பேலன்ஸ் கிடைப்பது எங்ஙனம்?

அடுத்த தசாப்தத்திலும் பொங்கும் மங்களம் எங்கும் தங்க, காங்கிரஸ் + பாஜக அரசியல்வாதிகளிடம் திட்டம் இருக்க எல்லாம் வல்ல இறைவரை வேண்டுகிறேன்.