Tag Archives: பாலா

பாலு மகேந்திரா – அஞ்சலி

பாலு மகேந்திரா குறித்து சுஜாதா எழுதியது ஆழமாகப் பதிந்திருப்பதற்கு காரணம், அதில் இருக்கும் ஹீரோயினும் என்னுடைய ஆதர்சம் என்பதால் கூட இருக்கலாம். அதை விட வம்பு என்பதால் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள என்னுடைய சுய பிம்பம் மறுக்கிறது.

உதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். பாலு மகேந்திரா நடு நாயகமாக வீற்றிருக்கிறார். சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை; ‘உள்ளே வரலாமா’ அனுமதி கோரல் இல்லை. உள்ளே நுழைந்தவர் எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திராவின் மடியில் சென்று அமர்கிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.

பாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ…” எனக் கெஞ்சுகிறார். அமர்ந்தவரோ அதை பொருட்படுத்தாமல், பாலு மகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அலட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை? எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி!” என்கிறார். அவளோ கண்டு கொள்ளவேயில்லை.

தர்மசங்கடத்தில் சுஜாதா விடை பெறாமல் வந்ததற்கான காரணம் நடிகை ஷோபா. அஞ்சலி.

பாலு மகேந்திரா பற்றி சுஜாதா | அவார்டா கொடுக்கறாங்க?


0. அ. முத்துலிங்கம்

1. என்னை ‘நான்’ ஆக்கியவர் . . . – சுகா

2. ஜெயமோகன்

3. எஸ் ராமகிருஷ்ணன் – தலைமுறைகள்

முந்தையது – பூவண்ணம் போல நெஞ்சம்

4. இரா முருகன்

5. அகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா!

மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல!

ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.

எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார்.

அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.

அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…?

ஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”

எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.

6. சாரு நிவேதிதா

Anandha_Vikadan_Cartoon_Balu_Mahendra_Director_Tamil_Movies_Vikatan_Cap_13_hasifkhan_feb

7. இயக்குநர் பாலா – ஆனந்த விகடன்

பாலு மகேந்திரா இல்லாவிட்டால் நானெல்லாம் எப்பவோ செத்துப் போயிருப்பேன்

என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். ‘அம்மா இங்க வாங்க…’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. ‘ந்தா போதும் போதும் உங்க சண்டை… புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க…’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி… ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்… ‘உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா’ என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.

Balu_mahendira_Bala_Directors_Tamil_Akila_Films_Movie_Icons

8. படலை

அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

9. பிபிசி:

1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.

தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.

பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.

அவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

10. வழக்கு எண் 18/9 :: பாலாஜி சக்திவேல் பாராட்டு

11. தலைமுறைகள் – சினிமா விமர்சனம் :: சினிமா விகடன்

12. தருமி

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 1

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 2

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 3

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 4

Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 5

Director Balu mahendra talking about Tamiliam Subas`s short film Vanni Mouse on Makkal TV “Ten Minute Stories”

Balu Mahendra – An Era: STAR Vijay

Balu Mahendra – The Legendary Era Of Indian Film: Puthu Yugam TV

Balu Mahendra about Vaali -Vaali Birthday Special

New Year Special : Thalaimuraigal with Director Balu Mahendra

Director Balu Mahendira Special In Rewind Ep-64 Dt 06-10-13

Thalaimuraigal Tamil Movie Press Meet | Balu Mahendra


இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு
இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில்.

நேரம்: மாலை 5.30 மணிக்கு.

நினைவை பகிர்பவர்கள்:

  1. கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம்
  2. ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்
  3. எழுத்தாளர் சந்திரா
  4. எழுத்தாளர் தமயந்தி
  5. தயாரிப்பாளர் UTV தனஞ்செயன்
  6. பத்திரிகையாளர் ஞாநி
  7. எழுத்தாளர் பவா செல்லத்துரை
  8. எழுத்தாளர் மாலன்
  9. ஒவியார் ட்ராட்ஸ்கி மருது
  10. எழுத்தாளர் சா. கந்தசாமி
  11. இயக்குனர் தாமிரா
  12. எழுத்தாளர் & நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன்
  13. நடிகை ரோகினி
  14. எழுத்தாளர் பிரபஞ்சன்
  15. நடிகர் நாசர்
  16. எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன்
  17. ஒளிப்பதிவாளர் (திரைப்படக் கல்லூரி) ஜி.பி. கிருஷ்ணா
  18. பத்திரிகையாளர் அசோகன் அந்திமழை
  19. ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார்
  20. ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்
  21. எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
  22. இயக்குனர் வஸந்த்
  23. கல்வியாளர் எஸ்.கே.பி கருணா
  24. கலரிஸ்ட் சிவராமன் (பிரசாத் லேப்)
  25. எடிட்டர் லெனின்
  26. ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர்
  27. இயக்குனர் வெற்றிமாறன்
  28. பாடலாசிரியர் ந. முத்துக்குமார்

ஒருங்கிணைப்பு: கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் & தமிழ் ஸ்டுடியோ & வம்சி புக்ஸ்


Kamal Haasan’s tribute to Balu Mahendra | Business Line:

Letter_Kokila_Moonraam_Pirai_kamal-on-balumahendra


Balu Mahendra: A fascinating journey in filmdom – The Hindu

The Balu Mahendra I knew – The Hindu

Naturalism was his signature

Master craftsman who was also a great teacher

In a first, Balu Mahendra faces the camera

Paradesi – FIR: Quick Review

பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.

ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?

கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.

வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.

எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.

தமிழ் ஆர்வலரும் நானும் – பாஸ்டனில் மு இளங்கோவன்

 A glance leaves an imprint on anything it’s dwelt on.
Joseph Brodsky 

[Russian poet(1940-1966) – “A Part of Speech” in Collected Poems in English]

துவக்கப் பாடமாக வீடியோ பார்த்துவிடலாம்

அமெரிக்க வந்த காரணம் என்ன? தமிழ் இணைய மாநாடு என்ன செய்தது?

சந்தித்த கதை

மீன் தொட்டிக்குள் நீந்துவது போல் வலை வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. எல்லா மீன்களும் இடமிருந்து வலமாக சுற்றியது. குழாம் அமைத்தது. தொகுதிப் பங்கீடு செய்தது. நானும் நடுவில் இருந்தேன். ஆங்காங்கே சுறா தென்படும். சிலரை கபளீகரம் செய்து கொண்டிருக்கும். நானும் குட்டி மீன்களைக் கவ்வி பசியாறினேன்.

அப்போதுதான் கூர்மாவதாரமாக முனைவர் மு இளங்கோவன் எதிர்கொண்டார்.

அனுபவத்தில் ஆமை என்றால், வயதில் பட்டாம்பூச்சியாக இருக்கிறார். நெடுநெடு உயரம். கருகரு முடி. துடிதுடி கண். பதட்டமில்லாத நடை. தெளிவான உச்சரிப்பு. பாவனையற்ற கனிவு. ஜாக்கிரதையானப் பேச்சு. வம்புகளற்ற உரையாடல்.

சலபதியை சந்தித்தபொழுதும் சரி; ஜெயமோகனோடு இருந்த சில நிமிடங்களிளும் சரி… ஞாநியும் ஆகட்டும்.

சளைக்காமல் கதைக்கக் கூடியவர்கள்.

அ. முத்துலிங்கம் போன்றோர் வேறு இனம்.

கேள்விக்கு சீரியமாக எதிர்வினையாற்றுவார்கள். விவாதங்களை இறுதிவரை கவனித்து முத்தாய்ப்பாக முழுமையாக்குவார்கள். சீரியமாக கவனிப்புடன், ட்விட்டரில் 140 எழுத்துக்குள் சிந்தனையை அடக்குவதற்கொப்ப, எண்ணி, எண்ணியதை சரியான வார்த்தையைக் கொண்டு கோர்த்து, முத்து சிந்தக் கூடியவர்கள்.

மு. இளங்கோவனாரும் அதே ரகம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்

தமிழ் இணைய மாநாட்டுக்காக பிலடெல்பியா வந்தவர் பாஸ்டன் பக்கமும் எட்டிப் பார்த்தார். எட்டிப் பார்த்தது, ஹார்வர்ட், எம்.ஐ.டி போன்ற தலை பத்து கல்லூரிகளைப் பார்வையிட.

நான் பலமுறை இந்த இடங்களுக்கு சென்றிருந்தாலும், சென்றபோதெல்லாம் சுற்றுலாவாசியாகவே பராக்கு பார்த்திருக்கிறேன். வளாகத்தின் முக்கிய கட்டிடங்கள், வகுப்பறைகளின் அமைப்பு, மாணவர்களின் வாழ்க்கைமுறை, ஆசிரியர்களின் அலுவலகம், இருப்பிடங்களுக்கும் கல்விக்கூடத்திற்குமான தூரம் போன்றவற்றை கவனித்ததில்லை.

எனவே, ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களே நெறிப்படுத்திய சுற்றுலாக்களை தேர்ந்தெடுக்கு, அவர்களைப் பின் தொடரும் விதமாக, பார்க்கச் சென்றோம்.

அலுவலில் இருந்து வீட்டுக்கு சேணம் கட்டிவிட்ட குதிரையாக ஒரே பாதை. அதே திருப்பம். பழக்கமான பயணமாக இருப்பதை, கூகிள் வரைபடம் (மேப்) வந்தவுடன், சோதித்து பார்த்ததில் புத்தம்புது குறுக்குவழி கிடைப்பது போல், இந்த வழிகாட்டி சுற்றுலாக்கள் பல புதிய விஷயங்களை அடையாளம் காட்டி வழி திறந்தது.

எம்.ஐ.டி.யின் சுயம் சார்ந்த மதிப்பீடுகளும், மாணவ வயதின் பரிசோதனை கலந்த முயற்சிகளும் விளங்கின என்றால், யேல் பல்களையின் பணமும், பிரும்மாண்டமும், உள்ளே நுழைந்த புகழ் பெற்றவர்களின் பேரும் மிரட்டின.

நடுவாந்தரமாக ஹார்வார்டு. கொஞ்சம் அலட்சியம்; கொஞ்சம் திமிர்; கொஞ்சம் பந்தா எல்லாம் யேல் பல்கலையை நினைவூட்டினாலும், பாஸ்டன் நகரத்தின் அண்மை மாணவர்களைத் தரையையும் சுட்டிக் காண்பிப்பதாகத் தெரிகிறது.

  • முதல் வருடம் கழித்தபிறகு முதுநிலையோ, இளநிலையோ… பட்டம் வாங்க விரும்பும் படிப்பை தேர்வு செய்வது;
  • ஐந்தாவது வகுப்பிலேயே கல்லூரிக்கு முதற்படி எடுக்கும் பால்ய காலப் படிக்கட்டுகள்;
  • படிப்பைத் தவிர மக்கட்பண்பு, குணநலன், சகாக்களோடு பழகும்விதம், வெற்றி பெறுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பது;
  • யேல், ஹார்வார்ட் போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இன்றளவிலும் மதம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் செலுத்தி, இறை சார்ந்து இட்டுச் செல்வது;
போன்ற தகவல்களை அறிந்து கொண்டோம்.

தமிழும் தமிழ் சார்ந்த கணினியும்

இளங்கோவனுக்கு பல்வழி அடையாளம். தமிழ்ப் பேராசிரியர்; கணினியில் தமிழ்ப் பயன்பாடுகளை அடையாளம் கண்டு, புதியவர்களுக்கு எளிதாக்கி, கிராமப்புறங்களுக்கும் பரவலாக்குபவர்; நாட்டுப்புற பாடல் தொகுப்பவர்; சிலம்பு சொற்பொழிவாளர்.

ஆனால், நேர்ப்பேச்சில் நம்மிடம் இருந்து விஷயம் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார். தன் பெருமைகளை, தன் அறிவை, தன் சாதனைகளை மூச்சு விடாமல் பேசியே திணறடிப்பவர் மத்தியில் பிறரின் திறனை தூண்டிலிட்டு, திரியேற்றி, சம்பாஷணைகளை சுவாரசியமாக்குகிறார்.

ஒருங்குறி ஆகட்டும்; வாழ்க்கையின் அடுத்த அடிகள் ஆகட்டும்; தமிழைக் கணினி கொண்டு, பரவலாக்கி அன்றாட பயன்பாட்டுக்கு அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஆகட்டும் – தீர்மானமான கொள்கைகள் வைத்திருக்கிறார்.

நம் மீது அதை திணிப்பதில்லை; ஆனால், அதன் நலன்களை சுருக்கமாக விளக்குகிறார். அடுத்தகட்ட செயல்பாடுகளை சொல்கிறார். பயனுள்ள முடிவை நோக்கிய திட்டங்களை வைத்திருக்கிறார்.

இனி அவர்…

தமிழ்க் கல்வி முறை

தமிழை இணையம் மூலமாக கற்பிக்க அடுத்த நடவடிக்கை என்ன?

வலை வழியாக தமிழ்ப் பாடங்களை எப்படி கற்றுக் கொடுக்கலாம்?

பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
தமிழிணைய மாநாடு – பார்வையாளரில் ஒரு பகுதி
யேல் பல்கலை – பார்னி பேட், சுதீர்
ஃபெட்னா – சார்ல்ஸ்டன் – 2011 துவக்க விழா
கோடை மழை வித்யா, நாசர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடலாசிரியர் நா முத்துக் குமார் – பெட்னா 2011
விழா மலர் வெளியீடு – பெட்னா 2011
பாஸ்டன் (நியு இங்கிலாந்து) வலைப்பதிவர், தமிழ் ட்விட்டர் சந்திப்பு
மேரிலாந்து, பால்டிமோர், வர்ஜீனியா, வாஷிங்டன் டிசி – மும்மாநில தமிழ்ச்சங்கம்
பிலடெல்பியா தமிழ் இணைய மாநாடு – தமிழ் யூனிகோட், ஒருங்குறி, எழுத்து சீர Continue reading

நான் கடவுள்: 140 எழுத்து விமர்சனம்

முந்தைய நான் கடவுள் பதிவு

1. நான் கடவுள் பாத்த பயபுள்ள் எமோசனல் ஆகி ஃபர்ஸ்ட் ஃஹாப்புல அழுதுட்டதா வேற சொல்லுறான். அகோரிஸ் தானாமாம் about – Potteakadai

2. நான் கடவுள்: பல இடங்களில் லாஜிக் இடிக்கிறது. திரைக்கதையில் எதிர்பார்த்த நேர்த்தி இல்லை. படம் சட்டென்று முடிந்து விட்ட உணர்வு nklraja

3. #naan kadavul. Nonsense. pls stay away folks.

premise. விளிம்பு நிலைல இருந்தா செத்துப் போறதுதான் வழி. இதுக்கு ஏதோ உபநிஷத்துக்களை எல்லாம் துணைக்குக் கூப்பிடறார் வசனகர்த்தா.

bala’s picturisation was realistic than Slumdog Millionaire. but that did not make the film ( in total) any better.

he film seemed okay in the first half. but nothing much in the latter part. romba yematram

saw today at sangam cinemas with azad bhai. not suitable for kids. bala got carried away by the praises he got 4 pithamagan.

if pithamagan is 8 on a 10 scale, then nan kadavul is just 3. fully agree with pavithra’s review – http://is.gd/iEud

icarusprakash

4. அப்ப படம் நல்லா ஒடும்னு தோணுது.நான் கடவுள் பத்தி பேசுன எல்லாரும் பயங்கர Goryனு சொல்றாங்க. தயாரிப்பாளாருக்கும் பாலாவுக்கும் வேலை ஒவர்.narain

5. NAAN KADAVUL passed 12A: The BBFC gave the Tamil language film NAAN KADAVUL a rating of 12A on Fri, 06 Feb. This.. http://tinyurl.com/b9e4lpbbfc

6. நான் கடவுள் ஒரு அற்புதம்…பூஜாவுக்கு நேஷனல் அவார்டு கொடுக்கலையெண்டால் இந்தியாவைக் கொளுத்துவோம் என்று ஒரு ரசிகர் பொங்குகிறார் Potteakadai

7. Saw Naan Kadavul. watchable once. heavy plot. too sad. his earlier three movies touched me better. bala has to reinvent his hero characters. – ravidreams
/ ரவி

8. found this line “Bala can ask Danny Boyle (Slumdog Millionaire director) to take a walk” in Naan Kadavul review http://tinyurl.com/csfmsbDK

9. A H A M B R A H M A S I….. A must watch movie from Bala – anenth

10. A friend of mine whos a bigtime Bala fan watched the movie. He says the movie is a ‘Thooo’ . I’m still gonna watch it. – benly

11. Sify review – Outstanding. Indiaglitz calls it “a movie to cherish and celebrate” & says Bala’s gone to greater heights.

Previous tweet re. Sify’s Naan Kadavul review (verdict – Outstanding) http://tinyurl.com/cvfscz

If Naan Kadavul the level 3 in Tamil cinema’s journey to intl. cinema & Subramaniyapuram the level 2, what’s level 1? Is there a level 4?

anantha

12. Just got back from “Naan Kadavul”. I strongly advice all to avoid this movie.

Naan Kadavul: Like a typical Bala movie, one of the lead character kills few bad mans and the other lead character gets killed.

jaggy / Jagadishkumar G

சுடச்சுட விமர்சனங்கள், பார்வைகள்ஸ்பாய்லர்கள் இருக்கலாம்

Naan Kadavul: Something is Missing

நான் கடவுள் திரைப்பட விமர்சனங்கள்:

முந்தைய பதிவு: சென்சார் விமர்சனம் + கதை

1. உண்மைத்தமிழன்: First Day; First Look: ஆர்யா பேசும் மொத்த வசனங்களை ஒரு A4 பேப்பரில் எழுதிவிடலாம்.
:::
டைட்டில் காட்சியில் துவங்கி, இறுதிக் காட்சி வரை எங்கும் காவிக்கொடிகள்.. பக்தி, ஆன்மீகம்.. ஜோதிடம், சாஸ்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், கேள்விகள்.. கடவுளைத் தேடும் பணி என்று படம் முழுவதும் இந்துத்துவா மயம்தான். வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.
:::
சென்ற வாரம்தான் Slumdog Millonaire படத்தினைப் பார்த்துத் தொலைத்துவிட்டதனால், இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.

bala-arya-movies-previews-films-reviews-naan-kadavul-stills-018

2. செய்திகள் மட்டுமே சித்திரமானால்:
மூலம்: ஜெயமோகன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலக் கட்டுரை
தமிழில்: ஜடாயு

“இந்த ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.

இந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் நான் கடவுள் படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். நான் கடவுள் படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.

3. Cable Sankar: நான் கடவுள் – சினிமா விமர்சனம்.: பிச்சைகாரர்களை மேய்க்கும் முருகன், திருநங்கை பெண், அவர்களின் தலைவன், போலீஸ் இன்ஸ்பெக்ட்ர், அந்த போலீஸ் ஏட்டு, உடல் ஊனமுற்ற அம்பானி பற்றி பேசும் சிறுவன், இரண்டு கை, கால் இல்லாத எப்போது கண் மூடி, வாய் பேசாதிருக்கும் சாமியார், சாமியார் என்று சொல்லிக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் சாமியார்கள், கீச்சு குரல் சாமியார், சாமி வேடமிட்டு பிச்சையெடுக்கும் குறை கொண்ட பெண்கள், என்று நிஜ பிச்சைகாரர்களை நம் கண்முன்னே வாழ விட்டிருக்கிறார்கள்.

கவிஞர் விக்ரமாதித்தன் மனநிலை குன்றிய குழந்தையை அந்த கும்பலில் வைத்து காப்பாற்றும் ஒரு பிச்சைகாரர்.

அழகன் தமிழ்மணி ருத்ரனின் அப்பாவாக வந்திருக்கிறார். அமமாவாக பாரதி.

பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எங்கே விட்டோம் என்று தெரியாமல் அலையும் தகப்பனுக்கு, ருத்ரனை பார்த்ததும் ஞாபகம் வருவது ‘என் புள்ளைய எனக்கு தெரியாதா’ என்பதெல்லாம் சரியான ஜல்லியடிப்பு. பூஜாவிடம் நீ வயசுக்கு வந்திட்டியான்னு கேட்கும் பிச்சைகார தலைவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யாமல் கடைசிவரை பாதுகாப்பது படத்தின் இயல்பு நிலைக்கு மாற்றான காட்சிகள்.

பாலா சார் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய காமெடி என்கிற பெயரில் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை வைத்து பாடி மிமிக்கிரி செய்து படத்தை ஓட்டுவீர்கள். அந்த காட்சிகள் படத்துக்கு எந்த விதத்தில் உதவியிருக்கிறது என்றே புரியவில்லை.

4. அயன்:

Cinema Critics: விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா

  1. சேது – தேவதாசிகள்
  2. நந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள்
  3. பிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்

இந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம். . . .

‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’

பேசாமலேயே மொழி படத்துல கலக்கின ஜோதிகாவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான். பூஜாவுக்கு பெரிய ஜே. . . .

5. லக்கிலுக் / மடிப்பாக்கம்

யுவகிருஷ்ணா: Movie Reviews: ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

ட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை

‘Nenu Devudni’ – Naan Kadavul: Feb Updates

1. நான் கடவுள்: விமர்சனம் & கதை

2. படம் பெப்ரவரி ஆறாம் தேதி வருகிறது.

3. தெலுங்கு டிவி உரிமைக்கு மட்டும் இரண்டு கோடி கிடைத்திருக்கிறது.

4. முதல் நாயகன் அஜித். முதலில் முதல்போட தயாரானவர் தேனப்பன்.

‘நான் கடவுள்’ எதிர்க்க தயாராகும் அஜித் ரசிகர்கள்
ajith-b-studio-thenappan-original-nan_kadavul1

2006 – ஆண்டு தொடக்கத்தில் நான் கடவுள் படம் அஜித் தடிப்பில் உருவாக இருந்தது. ‘அஜித் – பாலா’ காம்பினஷன் கோலிவுட் – இல் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்திற்காக அஜித் நீண்ட தலை முடி வளர்த்து வந்தார். (அந்த முடியுடன் தான் வரலாறு, பரமசிவன், திருப்பதி போன்ற படங்களிலும் நடித்தார்.

பரமசிவன் படத்தை தாயரித்தது பாலாவின் நிறுவனம்தான். அந்த படித்தில் நடித்ததுகூட பாலவின் நிர்பந்தத்தில்தான்.)

மே மாதம் தொடங்கவேண்டிய படபிடிப்பு தொடங்கவில்லை. ரொம்ப நாள் வெயிட் பண்ணி பார்த்த அஜித்; இனி இது ஒத்து வராது என எண்ணி பாலா-விடம் பேசி விட்டு படத்திலிருந்து விலகி கொண்டார்.

இதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது.

அஜித்தை ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார் பாலா. பாலா, தன்னுடன் சில தயாரிப்பு நிர்வாகிகள் , விநியோகஸ்தர்கள் புடை சூழ வந்து, அஜித்திடம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் இப்பவே கட்ட சொல்லி காட்டமாக நடந்துகொண்டனர்; பணம் கட்டினால் தான் வெளியே போக முடியும் என எச்சரித்தனர் பாலா கோஷ்டியினர்; இதை முற்றிலும் எதிபார்க்காத அஜித் மிகவும் அதிர்த்து போனார்.

இதை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் கொந்தளித்தனர். சென்னையில் பாலா அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர்; போலீஸ் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை; பின்னர் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க அப்போது சமாதானமாயினர். ஆனால் பாலா-வின் ‘நான் கடவுள்’ ரிலீஸ் ஆகும் போது பார்த்துகொள்ளலாம் என நினைத்து ரசிகர்கள் சமாதானமாயினர் என்பதே உண்மை.

இப்போது ‘நான் கடவுள்’ ரிலீஸ் ஆக உள்ளதால்; Revenge எடுக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

5. உச்சகட்டம்: ஆர்யா நரமாமிசம் சாப்பிடும் க்ளைமாக்ஸ்

Naan Kadavul – Lyrics

bala-arya-jeyamohan-cinema-films-reviews-naan-kadavul-stills-030ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?

கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?

எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?

இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !

ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..

வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

வேலியில்லா சோலைக்காக‌
வந்ததொரு காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
bala-arya-movies-cinema-films-reviews-naan-kadavul-stills-003
நன்றி: Song of the Day: kaNNil paarvai from naan kadavuL: “‘கண்ணில் பார்வை’ ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்.”

oOo

கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம் !
ஓ தெய்வமே ! இது சம்மதமோ ?
bala-arya-movies-cinema-pooja-reviews-naan-kadavul-stills-028
முந்தைய பதிவு: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்

மேலும்: Amma Un Pillai naan – Nan Kadavul பாடல் : இசை « Karthik’s Perception
bala-arya-movies-cool-films-reviews-naan-kadavul-stills-005

எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா

நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியவை:

காசியில்: கனவின் கதை: “மணிகர்ணிகா கட்டத்துக்கு”

”சார் பெரிய ரைட்டர்!”

ஆனந்த விகடன் பேட்டி 2007

சினிமாவுக்குப் போன இலக்கியவாதி? திரையும் சமரசமும் – ஒரு கடிதம்

படப்பிடிப்பு: தேனியில்…

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

இசை வெளியீடு: சென்னையில்…

நான் கடவுள், கடிதங்கள்

பதில்: இருகேள்விகள்

நாவல் :ஏழாம் உலகம் :கடிதங்கள்

பயணக்குறிப்பு: இந்தியப் பயணம் 17 – வாரணாசி

மற்ற தமிழ்ப்பட வேலை: கதாநாயகன் தேர்வு

கிசுகிசு – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம்.

முந்தைய பதிவு:
1. “பிச்சைப் பாத்திரம்”

2. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி

3. Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

4. Naan Kadavul – Music

5. நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

“பிச்சைப் பாத்திரம்” – நான் கடவுள்

நன்றி: ரவி ஆதித்யா: நான் கடவுள்

அசல்: Raajavin Ramanamaalai – Pitchai Paathiram (Non-Film devotional album)

புதுசு: Pichaipaathiram – Madhu Balakrishnan: Naan Kadavul

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

நன்றி: The Hub :: View topic – Bala’s Naan Kadavul & Pulikesi’s Weblog

விளக்கம், பொருள், மொழிபெயர்ப்பு, தமிழாக்கம்: அண்டை அயல்: நான் கடவுள்; ருத்ரம்

முந்தைய பதிவு: Naan Kadavul – Music « இசை விமர்சனம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….

அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

ஆர்யா – குமுதம்

‘நான் கடவுள்’ பற்றி…

காசியில ருத்ரதாண்டவம் ஆடிய நான் எப்படியோ பழநிக்கு வந்தேன். அங்கேயுள்ள மக்களால என்னைத் தாங்க முடிஞ்சுதா? இல்ல என்னால அந்த மக்களோடு செட்டாக முடிஞ்சுதா?!

பாலா முதல்ல சந்திக்கும் போதே சிரசாசனம், பத்மாசனம் பண்ற படத்தைக் காட்டி இதே மாதிரி பண்ணணும். ஒரு `மாசத்துல தயாராக இருங்க’ன்னு கிளம்பிட்டார். அந்த ஆசனங்களைப் பத்தி யோகா மாஸ்டர்கிட்ட கத்துக்கிடலாம்னு போனால், `தம்பி இதுதான் யோகாவுல கடைசி ஆசனம். குறைந்த பட்சம் ஒரு வருஷமாவது ஆகும்’னு சொன்னார். அப்புறம் நானாகவே வீட்டுல தினமும் மூணு மணிநேரம் பெட்ரூம்ல சுவத்துல தலைகீழாக சாய்ஞ்சபடி ப்ராக்டீஸ் பண்ணினேன்.

`நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு விஷ்ணு வர்தனுடன் சேர்ந்து பண்ற `சர்வம்‘ வந்துடும். அதனால நான் விட்ட இடைவெளியை நிச்சயம் நிரப்பிடுவேன்.”

நான் கடவுளில் பல பிரச்னைகளால் உங்களுக்கு ஜோடியாக ஹீரோயின்கள் மாறிக் கொண்டே இருந்தார்களே… அந்தக் கொடுமையான அனுபவம் எப்படியிருந்தது?

“அது கொடுமையில்ல. ஹீரோயின்கள் மாறியதால காமெடியான அனுபவம்தான் இருந்துச்சு. முதல்ல ஹீரோயினோடு எடுத்த காட்சிகளை, திரும்பத் திரும்ப மத்த ஹீரோயின்களோடு எடுக்க வேண்டியிருந்துச்சு. ஒரே காட்சியை நான்கு ஹீரோயின்களோடும் நடிச்சேன்.