ஞாயிற்றுக்கிழமைகளில் பாட்டி வீட்டிற்கு செல்வோம். அவள் விவித பாரதியின் சாயாகீத் ரசிகை. அங்கே கேட்க ஆரம்பித்த “தேரே பினா ஜிந்தகி ஸே கோயி… ஷிக்வா தோ நஹி”, பிறிதொரு அந்தாக்ஷரியில் கை கொடுத்தது.
அந்தப் பாடலை சற்றே பார்ப்போம். நாயகனும் நாயகியும் ரகசியமாக சந்திக்கிறார்கள். நாயகியைப் பொறுத்தவரை அவன் மட்டும் அவளுடைய வாழ்வில் குறுக்கிடா விட்டால், அவள் வாழ்வு தெளிந்த நதியாக, கொந்தளிப்புகள் இல்லாமல் அமைதியான ஓடத்தில் மிதந்து சென்றிருக்கும். ஆனால், அவன் இல்லாவிட்டால், வாழ்க்கை என்பது வாழ்வாக இருந்திருக்காது.
நான் நாவலும் சிறுகதையும் படிக்க ஆரம்பித்ததே, அதை ஏதாவதொரு பெண்ணிடம் கொடுத்து அவளின் மனதைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்தில்தான். “நில்… கவனி… காதலி” என்று ராஜேஷ் குமார் கொடுத்து பார்த்தேன்; பலிக்கவில்லை. அடுத்த அஸ்திரம்… ‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ அந்தாக்சரி விளையாட்டு. இந்தப் பாடல் என் உணர்வை, குறிப்பால் உணர்த்த உதவியது.
அந்த மாதிரி இன்னொரு அற்புதமான ரேடியோ நிகழ்ச்சி Only A Game.
அலுவலில் அரசியல் பேச முடியாது. எல்லோரும் தீவிர கொள்கைவாதிகள். என் உடன் வேலை பார்க்கும் டீமில் ஐந்து பேருக்கு ஐந்து கொள்கை; ஒரே அணியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக ஒருவர்; காவல்துறையின் பணிக்கு அதி தீவிர ஆதரவாளர் இன்னொருவர்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பையும் வெறுப்பவர் பலர்; சட்டம் மற்றும் ஒழுங்கு முக்கியம் என்று உறவினர்களை போருக்கும் காக்கி சட்டைக்கும் பலி கொடுத்தவர் சிலர்.
எனவே, எல்லோருக்கும் பொழுதுபோக்கான பேச்சு என்பது – “விளையாட்டு”. நேற்று ரெட் சாக்ஸ் எப்படி பேஸ்பால் ஆடினார்கள்? இந்த வருடம் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்தில் சாதிப்பார்களா? பனிச்சறுக்கு ஹாக்கியில் ப்ருயின்ஸ் எவ்வாறு கெலிப்பார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக நியு இங்கிலாந்து பேட்ரியாட்ஸ், டாம் ப்ரேடி, பெலிசிக் எல்லோரும் போங்காட்டம் ஆடுகிறார்களா அல்லது அழுகுணி ஆட்டத்தில் அமெரிக்க கால்பந்தின் மன்னர்களாக இருக்கிறார்களா?
இப்படி பேச ஒரு நிகழ்ச்சி… ஒலிப்பதிவு… பாட்காஸ்டிங்… தேவை. அதை டபிள்யூ.பி.யூ.ஆர். வானொலியின் “ஒன்லி எ கேம்” நிகழ்ச்சி அருமையாக பூர்த்தி செய்தது.
அலுவலுக்குப் போக ஒரு மணி நேரம். திரும்பி வருவதற்கு இன்னொரு மணி நேரம். அப்போது கேட்பதற்கென்று பிரத்தியேகமாக சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன்:
வெயிட் வெயிட்… டோண்ட் டெல் மீ
ரேடியோ லாப்
ஃப்ரீகனாமிக்ஸ்
டெட் டாக்ஸ்
ஷங்கர் வேதாந்தம் வழங்கும் ஹிட்டன் பிரெயின்
அந்த வரிசையில் இந்த ஒலிபரப்பிற்கு சிறப்பான இடம் இருந்தது. வெறுமனே ஸ்கோர்களை ஒப்பிக்காமல், அந்த ஆட்டக்காரர்களின் கதையையும் சொல்லியது. சட்டென்று பருந்துப் பார்வை பார்த்து, பழைய சரித்திரத்தை விவரித்து, விஷயத்தைப் புரிய வைத்தது. பெரிய பெரிய அணிகளின் ஆட்டங்களைப் பற்றி மட்டும் அலசாமல், பக்கத்து வீட்டுப் பையன் ஆடிய விதத்தை அவ்வப்போது கண்முன்னே காதின் வழியே உபாசித்தது.
எத்தனையெத்தனை கதைகள்! எவ்வளவு அணுக்கமான சம்பவங்கள்!! நெகிழவைக்கும் உண்மை நிகழ்வுகளின் குரல்கள்!!!
ஆண்கள் மட்டுமே ஆடிய விளையாட்டுகள் எல்லோரின் கவனத்தைக் கவர்ந்தபோது, மகளிர் கலந்து கொண்ட போட்டிகள், அவர்களின் சாதனைகள், அந்தப் பெண்களின் போராட்டங்கள் என்று என்.பி.ஆர். ரேடியோவிற்கே உரிய தனித்தன்மையை நிலைநாட்டியது. மியா ஹாம், க்றிஸ்டீன் லில்லி, ப்ரியானா ஸ்கரி எனப் பல பெண் நட்சத்திரங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்டது இவர்கள் வழியாகத்தான். 1999ல் உலகக் கோப்பை வீரர்களாக அவர்கள் உலகம் அறியப்படுவதற்குமுன் அலைவரிசையில் அவர்களை உலாவவிட்டு கண்முன்னேக் கொணர்ந்திருந்தார்கள்.
உச்சத்தில் இருக்கும்போது விடைப்பெற்றுவிட வேண்டும். ஒரு நிகழ்ச்சியோ பத்திரிகையோ நடிகரோ – தன் தொழிலில் சாதித்துக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற்று, வெற்றிடத்தை உணர்த்த வேண்டும்.
Bug Music: How Insects Gave Us Rhythm and Noise – by – David Rothenberg சமீபத்தில் வாசித்தேன்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ் குடிமக்கள் இளையராஜாவா, ஏ ஆர் ரெஹ்மானா என பிணக்குப் போட்டு கொள்வதற்கான மூத்த காரணத்தை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. பல கோடி மில்லியன் ஆண்டுகள் முன்பே பூச்சிகள் இருந்ததை நாம் அறிவோம். அதில் இருந்து புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் ஆனதும் அறிவோம்.ஆனால், அந்தப் பூச்சிகளிடம் இருந்துதான் ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்று அறிந்து கொண்டதை அறிவோமா?
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கொருமுறை குறிஞ்சி பூப்பது இருக்கட்டும்; பதினேழு ஆண்டுகள் கருத்தரிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அளபெடை இசைக்கும் சிகாடா (cicada) பூச்சிகளை கவனித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல… இவருக்கு முன்னோடியாக 1690இலேயே மட்சுவோ பாஷோ என்பவர் சிக்காடாக்களின் தாளங்களை ரசித்து ஹைக்கூ ஆக்கியதையும் கவனிக்கிறார். 1980களில் வந்த ஆராய்ச்சி பத்திரிகைகளைப் புரட்டி அதில் கவனிக்கப்பட்ட பூச்சிகளின் ராகங்களையும் ஆய்கிறார். புத்தகத்தின் ஆசிரியர் டேவிடுக்கு அசாத்திய பொறுமை கலந்த விடா ஆர்வம்.
பறவையின் குரலில் பாட்டு கேட்பது எளிது. வைரமுத்து கூட குக்கூ எனக் இந்தக் குயில் கூவாதோ எனத் தொட்டு, மைனா, மயில், கோழி, வாத்து எல்லாவற்றையும் மெல்லிசையில் மடக்கியுள்ளார். டேவிட் ராதன்பெகும் அவ்வாறே. புறாக்கள் விருத்தம் போடுகிறதா, கிளி செப்பலோசையில் உருகுகிறதா, மஞ்சக் காட்டு மைனா எகனை மொகனையுடன் மெல்லிசைக்கிறதா என துவங்கி இருக்கிறார். இந்தப் புத்தகம் முடிந்தவுடன் கிரிக்கெட் பூச்சிகள், சுவர்க்கோழிகள் துணையுடன் இசைத் தொகுப்பே வெளியிட்டிருக்கிறார்.
இந்த சினிமாப் பாடல் எங்கிருந்து சுடப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதி வேர், எங்கோ பூச்சிகளின் மெட்டில்தான் இருக்கும் என்று நீங்களும் ஆய்வுபூர்வமாக நம்பவேண்டுமானால், புத்தகத்தை வாசிக்கணும்.
பெருந்தலைகளை விளம்பரத்திற்கு பயன்படுத்துவது தொன்றுதொட்ட வழக்கம்.
இந்தியாவில் லக்ஸ் சோப் விளம்பரங்களுக்கும், விலையுயர்ந்த ஆடை வகைகளுக்கும் வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது வலி நிவாரணி முதல் வீடு விற்பனை வரை செலபிரிட்டி மயம். நைக்கி, ரீபாக் என்றாலே விளையாட்டு நட்சத்திரங்கள் நினைவிற்கு வருவார்கள். ‘யெஹி ஹை ரைட் சாய்ஸ் பேபி’ போன்ற இனிப்பு பானங்களுக்கு புகழ்பெற்றவர்கள் தேவை. ஆனால், செல்பேசி வாங்கும்போது “இன்னார் சொன்னார்… நல்லா இருக்கும்” என்று நினைத்து வாங்குவதில்லை.
கணினியின் தரம் என்ன? ஆண்டிராய்ட் இருக்கிறதா? நமக்கு தோதுப்படுமா? சி.பி.யூ எப்படி? புத்தம்புதியதாக என்ன தருகிறார்கள்? இப்படி எல்லாம் ஆராய்ந்து பார்த்தது ‘ஒலியும் ஒளியும்’ காலம். இன்றைய எம்.டி.வி. நிஜ நாடகங்களைக் கொண்டு இளைய தலைமுறையினரைக் கவர்வது போல், சாம்சங் நிறுவனம் பாடகரைக் கொண்டு புதிய செல்பேசியை விற்கிறது.
ஜே-சீ வெளியிடும் அடுத்த ஆல்பம் சாம்சங் கேலக்ஸி எஸ்4 வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே கிடைக்கும். அவர்களின் செல்பேசி மூலமாக மட்டுமே கிடைக்கும். இளையராஜா ரசிகராக இருப்பது போல் ஜே-ஸீ வெறியர்களுக்கு சாம்சங் தூண்டில் போட்டு இருக்கிறது.
விண்டோஸ்8 வாங்கினால் டெம்பிள் ரன் கிடைக்காது. ஐஃபோன் வாங்கினால் வரைபடம் சரியாக வராது. கூகிள் ஆண்டிராய்ட் செல்பேசிகளில் ஆப்பிள் ஐபாடில் இருப்பது போல் கலை நுணுக்கமும் ஆக்க மிளிர்வும் கொண்ட ’ஆப்ஸ்’ இருக்காது. இதையெல்லாம் மறைக்க, நம் குரல்மொழியை கண்டுபிடிக்க இயலாத செயலியின் செயலற்ற ஆற்றலை அமுக்க ஜெஸிகா ஆல்பா, சாமுவேல் ஜாக்ஸன் வகையறாக்கள் தேவைப்படுகிறது.
இசை என்றால் ஆப்பிள் ஐ-ட்யூன்ஸ் என்னும் மனப்பதிவை உடைக்கவும் இந்த ஜே-ஸீ உடன்படிக்கை உதவுகிறது. வெறுமனே வந்து மைக்ரோசாஃப்ட் உபயோகியுங்கள் என்று சொல்வதற்கு பதில் எக்ஸ் பாக்ஸ் வைத்திருந்தால் மட்டுமே நம்முடைய அபிமான சீரியலைப் பார்க்க முடியும் என்பதன் அடுத்த கட்டம் ஆரம்பித்துவிட்டது.
இன்று அண்ணாவின் நினைவு நாள். அவருக்கு அமெரிக்காவில் கூட அணுக்கத் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் கெண்ட்ரிக் லமார். அவரின் சமீபத்திய நினைவாஞ்சலியை கீழேக் காணலாம்.
இருவரின் ஊரும் ”கா”வில் அரம்பிக்கிறது. காம்ப்டனில் பிறந்து வளர்ந்தவர் கெண்ட்ரிக். காஞ்சீவரத்தில் பிறந்தவர் அண்ணா. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றார் அண்ணா. லமாரின் பாடலைக் கேட்டு எல்லோரும் அந்த வேத வாக்கியத்திற்கு ஒப்புக் கொண்டு சாமியாடுவதை விழியத்தில் பார்த்திருப்பீர்கள்.
”It’s a revolution, I suppose
We’ll paint it red to fit right in”
– என்கிறார் கென்ட்ரிக். புரட்சித் தலைவருக்கு குரு என்னுடைய குருதானே என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.
அதற்கு முன் கோவில் சுவர்களில் சிவப்பும் வெளுப்பும் இருக்கும். அதை மாற்ற தி.மு.க., அதிமுக, தே.மு.தி.க., என எல்லோர் கொடிகளிலும் சிகப்பை அறிமுகம் செய்து, பட்டி தொட்டியெல்லாம் கொள்ளையடித்தவர் அண்ணா.
”Bury me alive, bury me with pride”
– என்கிறார் லமர். அண்ணா இருக்கும்போதே பதவியாசை கொண்டு போட்டி நடந்ததை இங்கேக் குறிப்பிடுகிறார். அறிஞர் ஆவதற்கு முன்பே அண்ணாவை புதைத்துவிட்டதை குறிப்பால் உணர்த்துகிறார் கெண்ட்ரிக்.
இந்தப் பாடலின் போது டெய்லர் ஸ்விஃப்ட் தலையாட்டுவது துணையிருந்தாலும் அதை மேடையில் ஏற்றாத அண்ணாவின் நற்குணத்தையும் மக்கள்செல்வம் இல்லாத நிலையையும் நமக்கு அறிய வைக்கிறது.
கடல் கடந்து அண்ணா புகழ் பாடும் கெண்ட்ரிக் வாழ்க! அவரின் இசைக்கு ஆடும் ஸ்விஃப்ட் புகழ் ஓங்குக!!
இளையராஜாவை இரண்டு மூன்று தடவை பார்த்திருப்பேன். கங்கை அமரன் போல் எல்லா வருடமும் ராஜா வந்ததில்லை.
கபாலீஸ்வரர் கோவில் கச்சேரிகள் மூன்று வகைப்பட்டவை. ஐந்து மணிக்கு சொற்பொழிவு + உபன்யாசம். கிருபானந்த வாரியார்கள், கீரன், திருத்தணி சுவாமிநாதன் என்று பெரியோர் பாடலுடன் உரை கொடுப்பார்கள். ஏழு மணிக்கு மெல்லிசை + பக்தி பாடல்கள். ஐயப்பன் வீரமணி, சூலமங்கலம் சகோதரிகள் போன்றோர் குரல் கொடுப்பார்கள். அதன் பிறகு இரவுக் காட்சிதான் நான் பார்த்தது.
எம்.எஸ். விஸ்வநாதனும் உண்டு. எட்டு மணி கச்சேரியை அவர் கறாராக ஒன்பது மணிக்கெல்லாம் தொடங்கிவிடுவார். பாவலர் பிரதர்ஸுக்கு கெத்து ரொம்ப ஜாஸ்தி. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு பத்து மணி கூட ஆகிவிடும். பின்னிரவு ஒரு மணி வரை பேச்சும் அரட்டையும் நக்கலும் கலந்து பாடல் மிக்ஸ்களும் வந்து கொண்டேயிருக்கும்.
விநாயகர் மட்டும்தான் கச்சேரி கேட்பது போல் சன்னிதியை திறந்து வைத்திருப்பார். மற்ற தெய்வங்கள் எல்லாம் நகை நட்டுடன் பத்திரமாக உறங்க சென்றுவிடும்.
ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் பிரும்மாண்டமாக இருந்ததில்லை. அந்தப் பக்கம் எட்டடி; இந்தப் பக்கம் பத்தடி என்று இருக்கும் குட்டி மேடைக்குள் கோரஸ், டிரம்ஸ், ஹம்மிங்ஸ் எல்லாம் அடைக்கணும். ஒவ்வொரு வருடமும் சுவாரசியமாக செய்வார்கள். கிளாசிக்ஸ் முதற்கொண்டு அப்பொழுது வந்த புதுப்பாடல் வரை எல்லாமும் கொடுப்பார்கள்.
கோவில் என்பதற்காக சமரசம் செய்து கொள்ளாமல், ‘வாடீ என் கப்பங்கிழங்கே’ என்று கூத்துப்பாடலும் வாழ்வே மாயத்தின் ‘தேவி’ கிண்டல்களும் கிட்டத்தட்ட கற்பகாம்பாள்களைக் குறி வைத்தே அரங்கேறும்.
ஆனால், அந்தக் காலத்தில் இவ்வளவு கற்பழிப்புகள் ஊடகங்களில் பாடல் பெறவில்லை. தனிமனித அக்னிப் பரீட்சையாகவே முடங்கிவிட்டது.
தமிழ்நாட்டு ஆண்களுக்கு செய்திகள் பார்க்கப் பிடிக்கும். தமிழ்ப் பெண்களுக்கு சீரியல் பார்க்கப் பிடிக்கும். இருவருக்கும் அரட்டை அரங்கம், விவாத மேடை, நீயா? நானா? போன்ற திண்ணைப் பேச்சு முழக்கங்கள் பிடிக்கும்.
தமிழ் பாப் கல்ச்சர் ரசனைகளை தொடர்ந்து கவனிப்பதால் எல்லாவற்றையும் பார்த்து வைப்பது போல் விஜய் டிவியின் ‘நீயா/நானா’ பார்த்தேன். அதுவும், தென்னக சிந்தனையாளர்களான ஞாநி, எஸ் ராமகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, கடற்கரய், கவிதா முரளீதரன், குட்டி ரேவதி, ராஜகோபாலன், பாலா, சாரு நிவேதிதா, அபிலாஷ், சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்றோர் கலந்து கொண்டதால் இண்டெலக்சுவலாக, மாற்று சிந்தனையை முன்வைக்குமோ என்று ஆசையுடன் பார்த்தேன்.
நிறைய பட்டியல் போட்டார்கள். முன்பு உட்கார்ந்திருவர்களை வாய் நிறைய பாராட்டினார்கள். தனக்கு விருது கொடுத்தவர்களை உற்சாகமாக முன்வைத்தார்கள். வெகுசன ரசனையை விட்டு இம்மி பிசகாமல் ரசித்தார்கள்.
எஸ் ராமகிருஷ்ணன் கனடா ‘காலம்’ இதழை சிறந்த சிற்றிதழாக முன் வைத்தார். அவருக்கு இயல் விருது கிடைத்த போது காலம் பத்திரிகையை படிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பார்.
’அடவி’ சிற்றிதழுக்கு தந்த விருது எனக்கு புதிய பத்திரிகையை அறிமுகப்படுத்தியது:
பாஸ்கர் சக்தி வந்திருந்ததாலோ… என்னவோ… ஆனந்த விகடனை ஆஹா! ஓஹோ!! அற்புதம்!!! என்று பாராட்டினார்கள். எண்பதுகளின் மேட்டரை மறுபடி போடுவதால் இருக்கலாம். கிளுகிளுப்பாக செக்ஸ் தூவி எழுதுவதால் இருக்கலாம். சன் டிவி குழுமத்தின் குங்குமத்தை பாராட்ட முடியாது. எனவே, விகடனைப் பாராட்டும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம். எஸ். ராமகிருஷ்ணனின் தொடர் வருவதால் இருக்கலாம். உண்மையான காரணத்தை குமுதம் ரிப்போர்ட்டர் ஆராயலாம்.
நல்ல திரைப்படமாக ‘சாட்டை’ படத்தைப் பாராட்டினார்கள். சரி… ‘அறஞ்செய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ என்று ஔவையார் போதனைகளை எடுத்தால்தான் ‘நீயா… நானா’ பேச்சாளர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்ற்றறிந்தேன்.
’அட்டகத்தி’ சிறப்பாக இருந்தது என்றார்கள். எண்டெர்டெயின்மெண்ட் என்று துளிக்கூட இல்லாத சினிமாவை எப்படி தைரியமாக முன்னிறுத்தலாம் என்பதை அறிந்தேன்.
இஸ்லாமியர்களை நல்லவர்களாக காண்பிப்பதால் ‘நீர்ப்பறவை’ பெஸ்ட் படம் என்றார் “சமநிலைச் சமுதாயம்” இதழின் எடிட்டர். வெளிப்படையாக பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அறிந்தேன்.
ஷா நவாசுக்கு அபிலாஷ் விருது கொடுத்தார். எல்லோரும் ஒரு கைத்தடியை அழைத்து வந்திருந்தார்கள். சில சாமிகள் வராத காரணத்தால் பூசாரிகள் வந்திருந்தார்கள். பேஸ்புக்கில் ஐம்பது நண்பர்கள் கூடியதை சாதனையாக சொன்னார்கள். நார்மலாக எதிரும் புதிருமாக விவாதம் நடக்கும். இந்த தடைவ எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தவர்களே முதுகு சொறிந்தார்கள். கிட்டத்தட்ட விஜயகாந்த நடிக்கும் விக்கிரமன் படம் பார்த்த சந்தோஷம். லட்டுவில் பூண்டும் வெங்காயமும் போட்டது போன்ற இனிப்பு.
வழக்கம் போல் எல்லோருக்கும் டோக்கன் போராளியான லாபியிஸ்ட் உதயகுமாருக்கு விருது தந்து நிகழ்ச்சியை பூர்த்தி செய்தார்கள்.
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
Laichana Laichana Ithay
Lavangam Lavangam Kaadichana
Inichana Inichana
Vaai Madalil Kadala Thanichanaa
Køzhukana Møzhukana
Nalla Payuthu Payuthu Thalukanaa
Èlachaana Køzhachaana
Rømba Šethuki Šethuki Ozhachana
Nee Šengiskana Ini Un Kiss Thana
Naan Mangøøse Thanaa
Un Kayil Kachakasthana
Irukaana Idupirukaana Illaiyana Illiyana
Un Èdaithaanaa Inba Kadaithanaa
Mel Èdaithandi Kudaithanaa
Ada Ikani Mukani Mugadu
Naan Thutha Naga Thagudu
Un Uthatukul Èthana Uthadu
Onnu Kudu Kudu
Adi Anjana Manjana Mayilu
Nee Kanjan Janga Railu
Un Iduppae Aaram Viralu
Nee Killu Killu
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
====================
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்
அடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
லைச்சனா லைச்சனா என்னை
லவங்கு லவங்கு காடிச்சனா
இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை திணிச்சனா
கொழுகனா மொழுகனா
நல்ல பழுத்து பழுத்து தலுகானா
எழச்சானா கொழைசானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா
நீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கயில் கஸகஸ்தானா!
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
Dance by youth members from North Carolina, Wisconsin, Connecticut, Virginia, and Maryland performing to parts of various Tamil kuthu songs such as “Sonna Puriyathu,” “Kalasala,” “Kadhal Vandhale,” “Irukaanaa,” “Pidikale,” “Mannarkudi,” and ending with beat segment from “Dia Dole” song. Performed at FeTNA Silver Jubilee Convention at Baltimore, MD.
kallaasala kalasala.. kalaasala kalasala
vadake ketu paaru enna pathi solluvaan
jardha beeda pole en perathaan melluvaan
Vidya Vandana Singing – Nee Ninaindhaal at FETNA 2012
வித்யா அய்யர் & வந்தனா ஐயர் பாடும் அன்பே வா… முன்பே வா!
ஆடல் கலையே தேவன் தந்தது
’அது… இது… எது!’ சிவகார்த்திகேயன்
நீயா… நானா! அரட்டை அரங்கம்
பரதநாட்டியம்
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கண்ணதாசனின் அறிவுரை: நியுயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அறிவுரைக் கவிதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் (FETNA) வெள்ளிவிழா நிகழ்வில் இந்த பாடல் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டது. The event took place in Baltimore, MD, USA on July 5,6&7, 2012 and participated by more than 2,500 Tamils, including leading figures from Tamilnadu and Canada.
வீணை இசை
Dance Program – Nannarae Nannarae
இளைய தளபதி நடிகர் விஜய் – Puli Urumuthu: சிறுவர் நடனம்: புலி உறுமுது! இடி இடிக்குது!! வேட்டைக்காரன்!!!
தமிழிசை
FETNA 2012 Charlotte Silambam
மேடையில் நாட்டியம் – Kummi Adi Pennae
Thanthana Thana Thanthana…
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
———————————————————————————————————
ஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..
பொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல
தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல
ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல
மீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல
பேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல
பழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்
துரத்திவந்தானே எனக்கு புடிக்கல
ஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி
கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல
ஏ சேல கட்ட புடிக்கல
சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல
ஏ வேட்டி கட்ட பிடிக்கல
விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல
பலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல
எனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
தமிழில் ஒலியும் ஒளியும் மாதிரி ஹிந்தியில் சித்ரஹார். தொண்ணூறுகளில் மனதைக் கவர்ந்து தொடர்ந்து நினைவில் பதிந்திருக்கும் பாடல்கள் பட்டியல்.
1. I Love My India – Pardes
சிஸ்டத்திற்குள் இருந்தே சிஸ்டத்தை முறியடிப்பது போல், இந்தியா பிடிக்கும் என்று சொல்லி அமெரிக்க தேசி மாமனாரை வீழ்த்தும் மஹிமாவா… குடியரசு தின ஸ்பெஷலா…
2. Man Mohini – Hum Dil De Chuke Sanam
ஹீரோயினுக்கு மழைப்பாடல் கொடுப்பார்கள்; சின்னச் சின்ன ஆசை கேட்பார்கள். ஆனால், துள்ளல் எண்ட்ரி கொடுப்பது ஐஸ்வர்யா ராய்.
3. Mehndi Lagake Rakhna – Dilwale Dulhania Le Jayenge
விடிஞ்சா கல்யாணம்; மாப்பிள்ளையின் முன்னிலையில் காதலியுடன் கொஞ்சம் டூயட்; துளி பயம்; நிறைய ஆட்டம். நடிப்புக்கு கஜோல்.
4. Rangeela Re – Rangeela
ராம் கோபால் வர்மாவின் முதல் இந்தி படிக்கட்டு; ஏ ஆர் ரெஹ்மானின் ஆஸ்கார் பாய்ச்சல்; ஊர்மிளாவின் அலட்டலில்லாத பாங்கு; எல்லாவற்றையும் மிஞ்சும் கனவும் நம்பிக்கையும் கொப்பளிக்கும் அர்த்தமுள்ள வரிகள்.
5. Ek Ladki Ko Dekha To – 1942 A Love Story
இரண்டு நிமிடம் முன்னால் விழுந்த பனி போல் மெத்து மெத்தான ஒளித்தொகுப்பு.
6. Aati Kya Khandala – Ghulam
இறுக்கமான நேரத்தில் இயல்பாக்கி, விவகாரமான கேள்வியை விளையாட்டாக கொக்கி போடும் லாவகம்.
7. Jadoo teri nazar: Dar
தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்து, துணை நடிகராக உயர்ந்து, வில்லனாகக் கலக்கி இன்று ரா #1, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!
8. Phir Bhi Dil Hai Hindustani – Title Song
விளம்பரம் எடுப்பவர், திரைப்பாடலுக்கு காட்சியமைப்பு கொடுத்தால், இப்படித்தான் சௌக்கியமாக அமையும்.
9. Ramta jogi – Taal
ஐஷ்வர்யா ராய்க்கு நடிப்பு வராவிட்டாலும், ஆட்டம் அமர்க்களம்.
10. Pehla Nasha – Jo Jeeta Wohi Sikander
பக்கத்து வீடு; சின்ன வயது துவங்கி தோழி; முதல் காதல்; பதின்ம வயதில் கல்லூரியில் சகாக்களுடன் பார்த்த காட்சியின் நினைவு மீட்டல்.
நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் வண்டவாளங்களை இரண்டு சரணங்களில் சுருக்கும் அழகு.
6. இந்த வாழ்வே மாயம்:வாழ்வே மாயம்
கமலுக்கென்று நிறைய பாடல்கள் இருக்கின்றன; ‘அந்தி மழை’, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’, அண்ணாத்தே ஆடுறார்…
7. தோல்வி நிலையென நினைத்தால்:ஜெய்சங்கர்
பாடலுக்கேற்ற காட்சியமைப்பு; கடவுளை தரிசித்தது போன்ற உத்வேக எழுப்புதல்.
8. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்:திருடா திருடா
வைரமுத்து மாயாஜாலம்; ரெஹ்மானின் இளமை; திரைப்படத்தின் பசுமை
9. தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு: அவள் ஒரு தொடர்கதை
கண்ணதாசன் அருமை தெரியாத காலம்; பாலச்சந்தர் குன்சாக புரிந்த நேரம்; பெண்ணுரிமை புரிந்ததாக மயங்கிய சமயம்.
10. டேக் இட் ஈசி ஊர்வசி:காதலன்
சென்னையைப் பார்த்து இப்படி ஜொள்ளு விட வைக்கமுடியுமா! – சாங்கர்
கொசுறு: கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்:ஒரு தலை ராகம்
நியாயமாக ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வோ, ’விழிகள் மேடையாம்; இமைகள் திரைகளாம்’ கிளிஞ்சல்களோ பிடித்திருக்க வேண்டும்; ஆனால், கல்லூரி காதல் என்றால் டி ராஜேந்தர் முதல் படம்.
Indian-American man held for living in US airport for 3 months ‘due to fear of Covid-19’
Aditya Singh was charged… twitter.com/i/web/status/1…1 day ago
Mukesh Ambani has spent years trying to turn his inherited oil business into a tech empire: Silicon Valley
Jio st… twitter.com/i/web/status/1…2 days ago
Deadline: Another New Covid-19 Variant Discovered In L.A. Might Be Vaccine Resistant, Researcher Says; Strain First… twitter.com/i/web/status/1…2 days ago
India Today: Cricket Australia writes open letter to BCCI: 'We congratulate Team India for the resilience, courage,… twitter.com/i/web/status/1…2 days ago
RT @ksrk: முதல் படம் Inauguration Day ஐ ஒட்டி இன்று இணையத்தில் பரவலாகப் பதிவாகியுள்ளது.
Washington monument-ல் எடுத்த படங்கள் என்னிடம் நி… 3 days ago
RT @svembu: 1/ I want to put the social media abuse in perspective. I live and work in villages and I visit many villages in Tamil Nadu, pa… 3 days ago
You Are Not a Gadget: A Manifesto and Ten Arguments for Deleting Your Social Media Accounts Right
social-validati… twitter.com/i/web/status/1…3 days ago
Looks like India will win the match, in spite of Pant 3 days ago
The Buy Nothing Project have worked hard to address the first of the three infamous “Rs,” Reducing, Reusing, and Re… twitter.com/i/web/status/1…4 days ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde