Tag Archives: நண்பர்

உடனுறை விக்கினமூர்த்திகள்

சொல்வனத்தின் அசோகமித்திரன் சிறப்பிதழ் நடுவே அனுக்ரஹாவின் ’டைகர்’ சிறுகதையும் கிடைத்தது. நியூ யார்க்கர் போன்ற இடங்களில் எளிதில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்த சிறுகதை. அதன் தொடர்ச்சியாக…

ஔவையார் சொன்னது போல் உலகத்தில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு. ஹாஸ்டலில் வசிப்போர்; ஹாஸ்டலில் வசிக்காதோர்.

முனிசிரேஷ்டர்களைப் போன்றோர் ஹாஸ்டலில் வசிப்போர். அவர்களுக்கு தவம் செய்வது மட்டுமே குறிக்கோள். யார் ஹோமகுண்டத்தைத் தயார் செய்தார்கள், ஆகுதிக்கான அவிஸ் எப்படி உண்டானது என்றெல்லாம் கவலையில்லை. அதே போல், ஹாஸ்டல்வாசிகளும் படிப்பு அல்லது தங்கள் குறிக்கோளுக்கான பாதை அமைப்பது மட்டுமே இலட்சியம். யாருடைய சோப்பு, என்ன நேரத்தில் சாப்பாடு என்பதெல்லாம் பொருட்டேயல்ல.

“பார்த்திபன் கனவு” படத்தில் வரும் டயலாக் போல், “வீடு என்ன மியூசியமா? வைத்தது வைத்த இடத்தில் அலங்காரமாக பொருந்தியிருக்க!” என்பது பெரும்பாலான மைலாப்பூர் வர்க்க நடுத்தர வருமான குடும்பங்களுக்குப் பொருந்தும். சொல்லப் போனால் அவர்கள்தான், முதல் முதலாக மேலாண்மையில் புகழ்பெற்ற ”Effective shop floor oranization” என்பதை பயன்படுத்தியவர்கள். அந்தந்தப் பொருள் ஒருங்கே கோர்த்து பொருத்தமாக வைத்திருப்பதை விட, இந்தப் பொருள் எதற்குத் தேவையோ அதை பயன்பட்டிற்கு அருகாமையில் வைப்பது என்னும் நுட்பத்தை “போட்டது போட்டபடி கெடக்கு” என்றும் மொழிபெயர்க்கலாம்.

ஹாஸ்டல்வாசிகளுக்கு பின்னிரவுகளில் படிப்பைத் துவங்குவதுதான் விருப்பமாக இருக்கும். உணவு அசுத்தமானது என்று சொல்லுமாறு எதையும் சமைக்கும் கட்டாயத்திலும் அவர்கள் இல்லை. படிக்கும் நேரத்தைத் தவிர்த்து கொஞ்சம் கல்லூரி சம்பந்தமான வேலை; அதையும் விட்டால் அரட்டை; அப்படியும் நேரம் கிடைத்தல் உறக்கம்; அதற்குப் பிறகு கடுமையான அண்டார்டிகா குளிர்காலத்தில் மின்சாரமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் வாய்க்கப் பெற்றால் அறையை சுத்தம் செய்யலாம். பெரும்பாலான சமயங்களில் சிரத்தையை வருங்காலத்திலும் அசிரத்தையை புறத்தோற்றத்திலும் அமைத்துக் கொள்வதற்கு மின்தட்டுப்பாடு கூட காரணம்.

டெல்லியில் இருந்தபோதும் சரி… பெங்களுரில் இருந்தபோதும் சரி… தொண்ணூறுகளில் விலைவாசியும் வீட்டு வாடகையும் இவ்வளவு எகிறவில்லை. எப்பொழுதுமே வீட்டை வாடகைக்கு எடுத்து விடுவோம். அதன் பிறகு இரண்டு பெட்ரூமானால் நான்கைந்து பேர்; மூன்று பெட்ரூமானால் ஆறேழு பேர் பிடிப்போம். கிட்டத்தட்ட ஒத்த மனது கொண்டவர்கள்; பைசா பைசாவாகக் கணக்கு பார்த்து வட்டி போட்டு பைசல் பண்ணாதவர்களாக, சமைக்கத் தெரிந்தவர் ஒருத்தர், பாத்திரம் கழுவ மட்டுமே தெரிந்த ஒருத்தர் என்று கலவையாகத் தேர்ந்தெடுப்போம். அனேகமாக ஓரிரு பெண்களும் அமைந்து விடுவார்கள். எல்லோருக்கும் மாதத்திற்கு ஐநூறு ரூபாய் வாடகை வரும்.

எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே பகுதியில் வேலைக்குப் போவதால், திரும்பி வீட்டுக்கு வருவதிலும் சிக்கலில்லை. ஒருவருக்கு வேலை தாமதமானால், இன்னுமொருவராவது அவருக்காக அலுவலில் தாமதித்தே அவருடன் கிளம்புவார். இதனால், இரவு பத்து மணிக்கு பெண் தனியாக வந்தால் எதிர்கொள்ளும் சிரமங்களும் தவிர்க்கப்பட்டது.

பெண்களும் கூட இருப்பதால் அவர்கள் சொல்லியோ, அல்லது அவர்களுக்கு பயந்தோ அல்லது அவர்களின் உதவியானாலோ அறைகள் ஓரளவு ஒழுங்காக சுத்தமாகவே இருக்கும். இந்தக் கதையில் வரும் பேயிங் கெஸ்ட் பிரச்சினையை தொடர்ச்சியாக எதிர்கொண்டதில்லை. அந்தவகையில் எனக்குப் பெரிய கொடுப்பினை. ஆனால், அலுவல் சம்பந்தமாக பிறரோடு வீட்டைப் பகிர்ந்தபோது, கொடுமையான விஷயங்களை சந்தித்து இருக்கிறேன். நிச்சயமான பெண்ணுடன் போனில் பேசுவதை ஒட்டுக் கேட்பதை வழக்கமாகக் கொண்டவர்கள், இரண்டு டாலர் பிரெட் பாக்கெட்டில் இருந்து இரு ரொட்டிகளை எடுத்ததற்காக ஒரு டாலர் தர வேண்டும் என்று வசூலித்தவர்கள், என்று விதவிதமாக எரிச்சலூட்டுபவர்கள் அறிமுகமானார்கள்.

இன்றைய நிலையில் பாதுகாப்பு என்பதை விட சௌகரியம் என்பது மட்டுமே பேயிங் கெஸ்ட் ஆக பெண்களை வசிக்க வைக்கிறதோ?

நண்பர்களும் தொடர்புகளும்: அந்தக் கால அந்தரங்கம்

தெருவில் நடக்கிறப்ப, சோபி காலே-க்கு யாரோ தவறவிட்ட டயரி கிடைக்கிறது. தெரிந்தவர் டயரியை புரட்டக் கூடாது என்றுதான் எழுதப்படாத விதி இருக்கிறது. தெரியாதவரின் டயரியை படிக்கலாம். தெரியாதவரின் பெயர் பியர் டி.

டயரியைப் புரட்டிப் பார்க்கிறார். நிறைய முகவரி இருக்கிறது. கூடவே முகவரியில் வசிப்பவர்களின் தொலைபேசிகளும். இதெல்லாம் நடந்த காலம் ஜூன் 1983. எனவே, செல்பேசியில் முகப்புத்தகம் பார்க்காத காலம். கையில் குறிப்பேடு வைத்து எழுதி சேமித்த காலம்.

கிடைத்த டயரியை தொலைத்தவரிடம் சேர்க்கிறார். சேர்ப்பதற்கு முன்பாக, தனக்கும் ஒரு ஜெராக்ஸ் போட்டு வைத்துக் கொள்கிறார்.

பியர் டி பார்த்து பார்த்து சேகரித்த முகவரிகளின் உரிமையாளர்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள சோபி-க்கு ஆர்வம். பியர் டி-யின் தொடர்புகளை தொலைபேசியில் அழைக்கிறார். அவர்களிடம் சென்று டயரிக்கான சொந்தக்காரரைப் பற்றி பேசுகிறார். அதை பத்திரிகையில் வெளியிடுகிறார்.

சோபி காலே சேர்கரித்த வம்புகள் இப்பொழுது பிரென்சு வழியாக ஆங்கிலத்திற்கு வந்தடைந்திருக்கிறது.

The Address Book | Harper’s Magazine

என் ஃபேஸ்புக் பக்கத்து தோழரையோ, டிவிட்டர் பின்பற்றியையோ சோபி காலே தொடர்பு கொண்டால் புத்தகம் எழுதும் அளவு சங்கதி கிடைத்திருக்காது. ஆனால், சமூக வலைப்பின்னல் 2.0ன் தாத்பரியம் புரிந்திருக்கும்.

அ) குடும்ப விவரங்கள், தேடல் விருப்பங்கள், சிந்தனை ஓட்டம் எல்லாம் மின்மடலை குடைந்தால்தான் கிடைக்கும்.

ஆ) நாலாயிரம் நண்பர்களில் நாலு பேரை நேரில் சந்தித்திருக்கிறேன்.

இ) தொழில்நுட்பத்தில் அர்ச்சுனர்; வாசிப்பில் பெஞ்சமின் பிராங்கிளின்; தலைமைப் பண்பில் ஜார்ஜ் வாஷிங்டன். மொத்தத்தில் காந்தியும் ஹிட்லரும் கலந்த மாண்புடன் பழகுபவர் என்று அறியலாம்.

கதை புரியும்! கதாநாயகன் தெரியும்!! காரணம் அறியுமோ?

தொலைபேசியில் நண்பனுடன் உரையாடல். ‘ஜிந்தகி ந மிலேகி தோபாரா’ திரைப்பட நட்பு போல் ரொம்ப உறுதியான பழங்கால கல்லூரி கால தோழன்.

விட்டதெல்லாம் பிடித்துக் கொண்டிருந்தோம். ‘அவன் எப்படி இருக்கான்… இவ எங்கே இருக்கா… நம்ம குருப்பில் கூட கே இருந்திருக்காங்க…’ என்று தகவல் பரிமாற்றம் சென்றது. ஒரு மணி நேரம் கழித்து பிரியாவிடை பெற்றோம்.

கட் செய்தவுடன் ஒட்டு கேட்டிருந்த மகள் பொன்மொழி சொல்கிறாள்.

Great minds discuss ideas; average minds discuss events; small minds discuss people.

ரூஸ்வெல்ட் பொண்டாட்டி ரொம்ப அடிபட்டிருப்பாங்க போல. அவங்க புருஷனப் பத்தி வம்பு பேசற Hyde Park on Hudson படம் ஒடிகிட்டு இருப்பதால் சொல்லி இருப்பாங்கனு சமாளிச்சேன்.

அமெரிக்க இந்தியர் சமூகவியல்: தமிழ்ச் சங்கம்

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவின் தமிழ் சங்கங்களையும் வருடாந்திர விழாவையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னுடைய அனுபவங்களின் தொகுப்பாக இந்தத் தொடரைத் துவங்குகிறேன்.

தமிழ்ச் சங்கங்கள் மூன்று விதமான எண்ணங்களை தற்போது நிறைவேற்றுகிறது.

அ) இந்து கோவில், கிறித்தவத் தேவாலயம் என்று பிரிந்திருக்கும் தமிழர்களை ஒரே இடத்தில் திரட்டி, அமெரிக்காவின் லாபியிஸ்ட் சக்தியாக முயல்வது;

ஆ) ஆங்கிலம் மட்டுமே அதிகம் வாசிக்கும் தன்னுடைய குழந்தைகளின் பரத, பாடல் திறமைகளுக்கும் மாறுவேடப் போட்டிகளுக்கும் மேடை அமைத்துத் தருவது

இ) புலம் பெயர்ந்த தமிழ் நாட்டினரின் ஈழம் சார்ந்த குற்றவுணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுப்பது

பெட்னா நிஜத்தில் ஒரு சத்சங்கம் போல் இயங்குகிறது. சத்சங்கத்தில் சாய் பாபாவோ எவ்று யாராவது தனி மனிதரின் புகைப்படம் இருக்கும். இங்கே தமிழ் மூதறிஞர் என்று மு வரதராசர், பொ. வே. சோமசுந்தரர் போன்ற யாருடைய பெயராவது மினுக்கும். நான்கு நாள் விழாவில் அந்தத் தமிழறிஞர்களைக் குறித்து நான்கே முக்கால் நிமிடம் (285 வினாடிகள்) ஒருவர் பேசுவார்.

மேடையேறுபவர் அனைவரும் தமிழைப் போற்றிப் புகழுவார்கள். தமிழே போற்றி, தாயே போற்றி, தரணி ஆண்டாய் போற்றி என்று நூற்றியெட்டு துதிகள் நடக்கும். இருபத்தியெட்டு பேர்களாவது இப்படி அருச்சனை செய்தாலும், ஒவ்வொருவருடையதும் தனித்துவமாக இருக்கும். முதலாமவர் ’தமிழ் தேய்கிறது; எனவே தமிழ் வாழ்க’ என்பார்; இரண்டாமவர் ‘அமெரிக்க குழந்தைகள ”ம்ம்மா” என்றழைக்கின்றன; எனவே தமிழ் வாழும்’ என்பார். மூன்றாமவர் ‘வடநாட்டை சேர்ந்த குஷ்பு தமிழில் உரையாடுகிறார்; எனவே தமிழ் வெல்கிறது!’ என்பார்.

இத்தகைய நெருக்கடியிலும் இருபத்தியெட்டாவது ஆளாக மேடையேறுபவர் தன்னை துல்லியமாக வித்தியாசப்படுத்தி, “ஆமிர் கான் கூட தமிழ் பேசுகிறார்! எங்கும் தமிழ்” என்று முடிப்பார். இத்தகைய தகவல் துணுக்குகளை நான் எங்கும் ஒரு சேர கேட்டதில்லை.

பெட்னா சத்சங்கத்தில் பொங்கல் கிடைக்கும். சப்பாத்தியும் குருமாவும் உண்டு. பஜனைப் பாடல்கள் போல் அடுக்கு மொழி கவியரங்கமும் அரங்கேறுகிறது. பந்திக்கு சீக்கிரம் போனால் சுவையான சாப்பாடு கிடைக்கலாம். ஐம்பதாயிரம் நூபாய் போட்டு 65 தனித்தனி வண்ணங்களுடன் வாங்கிய ஆரெம்கேவி ’ஜடாவு பட்டு’ பார்க்கலாம். நடிகை சினேகாவுடனும் நடிகர் விக்ரமுடனும் தோள் மேல் கை போட்டு ஒளிப்படம் எடுக்கலாம். என்னவாக இருந்தாலும், அங்காடித் தெரு அஞ்சலியை அழைந்த்து வந்திருக்கலாம், என்பது என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட இரண்டணா அபிப்பிராயம்.

பத்தாவது படிப்புக்கான விடுமுறையில் நான் பத்தரையில் இருந்து பன்னிரெண்டு வரை வெள்ளிக்கிழமைகளில் கபாலி கோவில் செல்வேன். கலகலவென்று இருக்கும். அப்பொழுது இராகு காலம்.

துர்கை சன்னிதியில் கூட்டம் களை கட்டும். பெரும்திரளான பெண்கள் பயபக்தியுடன் அம்மனை சுற்றி வருவார்கள். அந்தக் காலங்களில் கபாலீஸ்வரர் கோவில் மாதிரி பெரிய ஆலயங்களில் மட்டுமே துர்கை சன்னிதி இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும்விதமாக தெருமுக்கு பிள்ளையாருக்கு பக்கவாட்டிலும் துர்கை எழுந்தருள ஆரம்பித்தார். அந்த நிர்வாகத்தினரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர்.

இராகு கால சிறப்பு பூஜை போல் பெட்னாவும் அரங்கேறுகிறது. நான் துர்கையை பயபக்தியுடன் மூன்று சுற்று சுற்றியது போல் அமெரிக்கத் தமிழரும் பெட்னாவை மூன்று நாள் கொண்டாடுகின்றனர்.

வீட்டை விட்டால் வேலை; வேலை விட்டால் சமையல்; சமையல் விட்டால் முயங்கல் என்று வழக்கப்படுத்திக் கொண்ட வாழ்க்கையில் இருந்து இந்த மூன்று நாள் விடுதலை தருகிறது. தமிழருக்குப் பெரும்பாலும் நட்பு வட்டம் ஒழுங்காய் அமைவதில்லை; மேலே சொன்னதை அடித்து விடவும். அமைத்துக் கொள்வதில்லை என்பதே சரி.

என்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.

இன்னொரு சகா, மாதந்தோறும் புத்தக சங்கத்திற்காக நூலைப் படித்து அலசி ஆராய்ந்து பேசுவார். அதற்காக ஆறு பேர் ஒன்றுகூடுகிறார்கள்.

இந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.

வருடாந்திர விடுமுறையைக் கூட இந்தியாவிற்கு மட்டுமே செலவழிக்கிறோம். இப்படியாக முடங்கிப் போனவர்களுக்கு, இந்த மூன்று நாள்களில் நல்ல பேச்சுத்துணை கிடைக்கிறது.

‘நீயா நானா’வில் காதல் திருமண விவாதம் குறித்தும், ‘வாகை சூட வா’ வைரமுத்து வரிகளைக் குறித்தும் சிலாகித்து தங்கள் ரசனையைப் பகிர ஆள் அகப்படுகிறார்கள்.

ஆனால், இந்த மாதிரி தனி நபர் பேச்சில் தப்பு இருந்தாலாவது, மற்ற நண்பர்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் தட்டிக் கேட்க முடிகிறது.

அதுவே, மேடையில் பேசும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் சொல்லும் தகவல் பிழைகளை சுட்டிக் காட்ட முடியாத அடக்குமுறை இருப்பது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் தமிழச்சி பிறந்த இந்தியாவும் பேச்சுரிமை கொண்ட நாடு. பெட்னா நடக்கும் அமெரிக்காவிலோ கருத்து சுதந்திரம் இன்னும் சிறப்பாகவே இயங்குகிறது. தமிழச்சி போன்றோரின் காந்திய மறுப்பு கருத்துகளோடு மாறுபடுவதை விட்டுவிடலாம்.

குறைந்த பட்சம், காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் சான்றாதாரங்களை எடுத்து வைக்கக் கூட இடம் தராமல் பெட்னா அமைப்பு இயங்குகிறது.

இவ்வளவு இருந்தும், நான் மதிக்கும் நல்லகண்ணு அய்யா போன்றோர் வருவதற்காகவே பெட்னா செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். அவரைப் போன்றோர் வருவதற்காக நிச்சயம் உழைக்கலாம். பெட்னா சொல்வது முற்போக்கு; செய்வது அக்கிரகாரம். மிக ஆபத்தான முகப்பூச்சு கொண்டு இயங்குகிறார்கள். மேடையில் பெரியார் கோஷம் போடுகிறார்கள். விழா மலரில் சாதி மறுப்பு திருமணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். எனினும், செயலூக்கம் துளி கூட இல்லை. சொற்பொழிவு மட்டும் போதும் என்று நினைப்பவர்களை அறியாமல் வியர்வை சிந்துபவர்களை எண்ணினால் பரிதாபம் கலந்த சோகம் எழுகிறது.

நான் பல ஆண்டுகளாக இங்குள்ள சிறுவர்களுக்கு தமிழ்க் கற்றுத் தருகிறேன். என்னைப் போல் ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஆசிரியர்கள் ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று பந்தா காட்டாமல் இயங்குகிறார்கள். பரத நாட்டியத்தில் தற்கால வரலாறுகளை தமிழ்ப்பண் கொண்டு அரங்கேற்றுதல், பாரதி பாடல்களைக் கொண்டு இசை நாடகமாக்குதல், பரபரப்பு செய்யத் தெரியாத படைப்பாளிகளை வாசகர் வட்டத்தில் உரையாடச் செய்தல் என்று பல நல்ல விஷயங்கள் பெட்னா போர்வை இல்லாமலேயே சிறப்பாக நடந்து வருகின்றன.

பெட்னா அழைக்கும் பலரால் தானாகவே அமெரிக்கா வந்து செல்லும் பண பலமும் புகழும் உண்டு. ”பாவண்ணன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன் போன்ற இலக்கியவாதிகள் வருவதில்லையே, நாங்களே காசு கொடுத்து பெட்னா மூலமாக வ்ரவழைக்கலாமா?” என்னும் கேள்விகளுக்கு இது வரை பெட்னா தரப்பில் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.

நாஞ்சில் நாடன் வந்தபோதும் கூட, “இவ்வளவு தூரம் வந்துட்டீங்க… அப்படியே ஃபெட்னாவிற்கும் எட்டிப் பார்த்திருங்க! உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு!” என்பது போன்ற வரவேற்புகள் சகஜம்.

புகழ்பெற்ற கலெக்டரை அழைப்பதை விட அமரிக்கையான குடத்துள் விளக்குகளை கூப்பிடலாம். முதியவர்களை அழைப்பதில் தவறேதுமில்லைதான்; எனினும் மனுஷ்யபுத்திரன் போன்ற இளமையான ஆளுமைகளை பேசச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வருடந்தோறும் விழாவின் மூலமாக ஒன்றேகாலில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்தான் புரளும் நிர்வாகத்தில் தமிழகத்தின் முக்கியமான இளமையான சிந்தனாவாதி ஆளுமைகளையும் அழைத்து வருவார்கள் என்று நினைப்பது அநியாயம்!

Software Development & Writers, Bloggers, Authors: Technology & Tamil Net

பத்தாண்டு வலை வாழ்க்கை


அசல்

நகல் – தமிழ் புத்தக ஆசிரியரும் வாசகர் குழாமும்

சங்கமம், கூடல்+வாய், பயினி & சமுசு

1. மதுரைக்கு காலை நேர ரயில். மாட்டியவர்கள் எல்லோரிடமும் குலம், கோத்திரம் தவிர பாக்கி குறுக்கு விசாரணை நடந்தேறின. ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தில் விகே ராமசாமியுடன் பேசிக்கொண்டே மோகன் சமாளிப்பது போல் அலுவல் தொலைபேசி, நேர்காணல் தொலைபேசி இரண்டையும் கொடுத்துக் கொண்டே வாய் கொடுத்தவர் ‘BPO’ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாண்டு அனுபவத்தில் புதிய இடத்திற்கான முயற்சியில் மேலாளர் ஆக விண்ணப்பித்திருக்கிறார். வீடு வாங்கியாச்சு. எம்.பி.ஏ.வும் கூடிய சீக்கிரமே சேர்ந்துவிடுவார்.

2. இவர் SAP குந்துரத்தர். சம்பாதிப்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான். மாடர்ன் மேட்ரிமனியல் நடத்துகிறார். முதற்பக்கத்தில் தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தாலே, மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் வலையகம் என்பது உறுதியாகும்.

3. விதவிதமான ஹோட்டல்களைக் கொண்டு வருவது இவரது கனவு. தற்போதைய வேலையில் போதிய அளவு சேமித்ததும், நண்பர்களுடன் பெங்களுருவுக்கு ஓர் உணவகம் (மூன்று நட்சத்திர பாணியில் கையேந்தி பவன் + சாலோயோர செட்டப் கொண்ட உயர்தர அமைப்பு), சென்னைக்கு சாலட் பஃபே (வித விதமான காய்கறி + ஆர்கானிக் + நேச்சுரல் முன்னிறுத்தப்படும் உணவு) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், கணக்கு போட்டு, திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறார்.

4. ‘தோழா… தோழா… தோள்கொடு தோழா’ என்று பாடிய பாண்டவர் பூமி நாயகியை ‘சிவசக்தி‘ ஆக்கிய பாரா மாட்டினார். ஒரு குழாயைத் திறந்தால் எக்ஸ்பிரெசோ காபி, அடுத்த பொத்தானைத் தட்டினால் சாக்லேட் மில்க், இன்னொன்றைத் தொட்டால் கோக் என்பது போல் அடுத்த கரண் படத்திற்கு எப்படி வசன வேலை நடக்கிறது, குமுதத்தில் ஆயில் ரேகை எவ்வாறு விரிவடையப் போகிறது, சிவசக்தி எவ்வாறு சீரியல் விரும்பிகளை ஈர்க்கப் போகிறது என்று ஊற்றாக கிளை மாறினாலும் எல்லாவற்றுக்கும் சூட்சுமமான புத்திசாலித்தனமாகிய மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

5. அடுத்து மாட்டியவர் ‘கிழக்குபத்ரி. ‘என்.எச்.எம் ரைட்டர் இலவசமாகக் கொடுப்பது ஏன்?’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது?’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா?’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா?’ போன்ற என் கேள்விகளுக்கு புத்தியில் பச்சை குத்துவது போன்ற விளக்கங்களுடன் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

6. மதுரை தருமி, மலேசியா டிபிசிடி, வலைச்சரம் சீனா, உண்மைத்திராவிடர் ஜாலிஜம்பருடன் மதுரை சந்திப்பு அமர்க்களமாக நடந்தேறியது. ‘எந்த புதிய பதிவுகள் தங்களைக் கவர்கின்றன?’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை?’, போன்ற சங்கடமான நேரடி வினாக்களுடனும் அமெரிக்காவும் இந்தியாவும், தமிழில் பதிவெழுத வந்த கதை என்று நெருக்கமான சந்திப்புக்கு உரிய சுவாரசியங்களுடன் மகிழ்வாகப் பறந்தது.

7. மிக்சர், காராசேவு, முறுக்குடன் ஆஜர் ஆன டுபுக்கு சந்திப்பில் நீண்ட காலமாக சந்திக்க நினைத்த செந்தில், அவ்யுக்தாவுடன், ‘எத்தனை சுண்டல் வாங்குவது?’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது?’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா?’ என்பன மிக தீவிரமாக கொசுக்கடிகளுடன் காந்தி சிலைக்கடியில் எட்டு பேரால் அலசப்பட்டது.

8. வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், அதிஷா, முரளிகண்ணன், மக்கள் சட்டம், ப்ருனோ, கென் என்று பார்க்காத பல முகங்களை பாலபாரதியும் லக்கிலுக்கும் அறிகம் செய்துவைத்தார்கள். ‘டுபுக்கு சந்திப்பு மெகா மொக்கையா, இந்த சந்திப்பு அதனை மிஞ்சுமா?’ என்று விவாதித்தோம். மழைக்குக் கூட காவல் நிலையம் ஒதுங்கியது கிடையாது என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் அனைவரும் ‘உள்ளே’ இருந்தார்கள். ‘மேகம் கொட்டட்டும்; செல்பேசி நனையட்டும்; கூட்டம் உண்டு’ என்று (அசல்) பாபா தம் போட்டு காற்றை அனுப்பி, மேகங்களைக் கலைக்கும் கூட்டம்; இருக்கைகளை கால்சட்டை கொண்டு காயவைக்கும் கூட்டம்; சுகுணா திவாகர்+ஆழியூரான் சிறப்புக் கூட்டம் என்று உள்ளரங்குகளுடன் களைகட்டியது.

9. கிளம்பும் அன்று சென்னைக் கச்சேரி தேவ் & இளா சங்கமித்தனர். பலூன் தவறவிட்ட சிறுமி ஒன்றுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விழுந்ததை, எடுத்துக் கொடுக்க, அவளோ ‘கிம்மி எ ப்ரேக்’ பார்வை ஒன்றை வீசியதை விசாவதாரத்திற்குப் புகைப்படம் எடுத்தது போன்ற பல முக்கியமான தருணங்கள் நிறைந்த சந்திப்பு இது.