Tag Archives: தத்துவம்

ஜெல்-மன் அம்னீசியா (Gell-Mann Amnesia)

டன்னிங்-க்ரூகர் விளைவு (Dunning-Kruger Effect) உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது சுருக்கமாக:

சராசரிக்கும் மிகக் குறைவான திறமை உள்ளவர்கள் தங்கள் திறமையினை மிகை மதிப்பீடு (over estimated) செய்கின்றனர். இதற்கு காரணம் அவர்களின் அறியாமையே. அறியாமையினால் அவர்களுக்கு தங்கள் குறை தெரிவதில்லை அதனை திருத்தி கொள்ள வேண்டும் என்ற புரிதலும் இல்லை

அதைப் போல் இன்னொரு கருத்தை சில காலமாக பார்த்து வருகிறேன்: ஜெல்-மன் அம்னீசியா (GellMann Amnesia)

காலையில் தினமணியையோ தி ஹிந்துவையோ புரட்ட ஆரம்பிக்கிறீர்கள். அதில் வந்திருக்கும் நடுப்பக்க கட்டுரையிலோ தலையங்கத்திலோ நான் கற்றுத் தேர்ந்து பல்லாண்டுகளாக உழைத்து கரை கண்டவன். எனக்கு கணினி, நிரலி, புத்தக வெளியீடுகள். உங்களுக்கு சரித்திரமோ பூகோளமோ உயிரியலோ இருக்கலாம்.

ஆனால், அந்தக் கட்டுரையின் அச்சு நிர்ப்பந்தங்களினாலோ, எழுதியவரின் அவசரத்தினாலோ, பதிப்பாசிரியரின் கபனக்குறைவினாலோ – கட்டுரையில் போதாமைகளை உணர்கிறீர்கள். அந்த கருத்துப் பத்தியில் தகவல் பிழைகளைக் கண்டுபிடிக்கிறீர்கள். புரிதல்களின் போதாமைகளை உணர்கிறீர்கள். முழு விளக்கத்தையும் சரியான முறையில் விளக்காததைக் கண்டு வெகுண்டெழுகிறீர்கள்.

இந்த மாதிரி கட்டுரை வந்ததால் எந்த லாபமும் இல்லை. சொல்லப் போனால், வாசிப்பவருக்கு குழப்பத்தையும் தவறான சித்திரத்தையும் அது தருகிறது என்று திடமாக நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை முன்வைக்கத் தயாராக இருப்பீர்கள்.

“நகரும் காருக்கு கண்ணாடி இருக்கிறது. வீட்டில் கண்ணாடி ஜன்னல் இருந்தாலும் அது நகராது. எனவே, கண்ணாடிக் கதவுகளால் கார் நகரவில்லை!” என்பது போல் எழுதியிருப்பதாக பூரணமாக உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அயர்ச்சியாக இருந்தாலும் நாளிதழின் அடுத்த பக்கத்திற்கு தாவுகிறீர்கள். அதில் வர்த்தகமோ, அரசியலோ, விளையாட்டோ அலசி இருப்பார்கள். பெரு நாட்டின் வன்முறையை கண்டித்து இன்னொரு தலையங்கம் இருக்கும். சூர்யகுமார் யாதவ் எவ்வாறு விளையாட ஆரம்பித்தார் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்திருப்பார்கள். அதையெல்லாம் வெள்ளந்தியாக நம்புவீர்கள். அவர்கள் சொல்வது எப்படி உண்மை என்பதை ஆராயாமல் ஏற்றுக் கொள்வீர்கள்

– மைக்கேல் கிரிக்டன் (ஜூராஸிக் பார்க் புகழ்)

நம் பத்திரிகைகளும் புத்தகங்களும் அவ்வாறே… சிறிய விவரங்களில் மட்டும் தவறு இருக்காது; அந்த தகவலுக்கான உந்துதல், காரணம், உட்குறிப்பு, அடிப்படை உண்மைகள் … எல்லாவற்றிலும் தவறு இருக்கும். அவரைத் திருத்த நினைப்பீர்கள். பதிவின் அணுகுமுறையையும் பொருளடக்கதையும் சாட எண்ணுவீர்கள். ஆனால், அதே நிறுவனத்தின் பிறிதொரு நூலை எடுத்து விதந்தோதி வாங்கி அடுத்த கடைக்குச் சென்று வீடுவீர்கள்.

இதற்கு பெயர் ஜெல்-மான் அம்னிசியா

இதைப் படித்தவுடன் உங்களுக்குத் தோன்றிய நிறுவனம் / பத்திரிகை / நபர் / புத்தக வெளியீட்டாளர் / வலை சஞ்சிகை என்ன?

You do not describe the past by writing about old things, but by writing about the haze that exists between yourself and the past

வாழ்க்கை என்பது அபத்தமானதா? இது இந்தக் கதையின் தொடர்பு.

நான் இந்த வாழ்க்கை அபத்தம் என்பேன். ஏன்? இரு காரணங்கள். ஒன்று அண்டவெளி; மற்றொன்று காலம். இந்தத் திரண்ட அகிலத்தில், நாம் வெறும் நகத்துணுக்கு. அதே போல், நம் ஆயுள் காலமும், யுகம் யுகமாக, டிரையாசிக், ஜுராசிக் என நீளும் இடையூழி காலத்தின் மிகச் சிறிய தொடர்ச்சியின் துகளாகும்.

இது போல் அளவில் குறைவால் இருப்பதால் மட்டும் வாழ்க்கை சிறுமையாகிவிடுமா என்பதை இந்தத் துணுக்குகள் மூலம் இக்கதை ஆராய்கிறது.

வால்டேரின் தத்துவ புனைவான “மைக்ரோமேகாஸ்” ஞாபகமிருக்கிறதா? சிரியஸ் நட்சத்திரத்தில் இருந்து இராட்சஸ் உருக் கொண்ட பூதம், பூமிக்கு சுற்றுலா வருகிறது. தன் பூதக் கண்ணாடியினால், நம்முலகைப் பார்க்கிறது. எதுவும் தெரியவில்லை. ஒன்றும் கண்ணுக்கு புலப்படவில்லை. கட்டாங்கடைசியில் மாபெரும் கடலில் ஒரு சிறிய கப்பலில் நிறைய மனிதர்களை கண்டுபிடிக்கிறது.

“அட… பார்வைக்கு புலனாகாத பூச்சிகள்!” என ஆச்சரியப்பட்டு, அந்த ஜந்துக்களுக்குக் கூட இதயம் இருப்பதை கண்டுகொள்கிறது. அதன் பிறகு, மானுடர்களின் அற்ப உடல் அளவு, அவர்களை அற்ப பதர் என்றே அழைக்க வைக்க வேண்டுமோ என எண்ணுகிறது.

“ஏ, புத்திசாலி அணுக்களே! நீங்கள் இவ்வுலகின் சுகங்களை ரசித்து மகிழ்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமான சிந்தையிலும், சந்தோஷமான காதலிலும் திளைத்து உற்சாகத்தில் திளைக்கிறீர்கள்… இல்லையா?”

இதற்கு பதிலாக அந்த மானுடர்கள் அரிஸ்டாடிலின் தத்துவத்தையும் டெஸ்கார்தேயின் மெய்யியல் அனர்த்தங்களையும் படு தீவிரமாக விளக்க ஆரம்பிக்கின்றன. இப்போது, பூதத்தால் தன் நகைப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த சிறிய மனிதனை மாற்று கிரகபூதம் பார்த்தது போல் இந்தச் சிறுகதையை நான் பார்ப்பேன். இதில் நிறைய பகுதிகள் இருக்கின்றன; நிறைய துகள்கள் இருக்கின்றன; நம்முடைய புற+அக உலகம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

மேலும்: Devotions Upon Emergent Occasions, by John Donne

Man consists of more pieces, more parts, than the world. And if those pieces were extended, and stretched out in man as they are in the world, man would be the giant, and the world the dwarf; the world but the map, and the man the world.
சிறுகதை » மீர்ச்சா கர்த்தரெஸ்கோகாலத்துகள்

நான் ஒரு முட்டாளுங்க

தங்களுக்கு விஷயம் தெரியும் என்று நினைப்பவர்கள், எதையும் கற்றுக் கொள்வதில்லை
லாவோ சூ

Knowledge_Overconfidence_dunning-kruger effect

நட்பாஸ் போகிற போக்கில், கீழ்க்கண்ட முன்முடிபை சொல்லிப் போகிறார்:

சமகாலத்தில் நம்மைப் போன்ற முட்டாள்கள்தான் அதிகம், புரிகிறது

இதைத்தானே பெர்ட்ரண்ட் ரஸல் அன்றே சொன்னார்:

”இந்த உலகத்தில் என்ன பிரச்சினை என்றால், முட்டாள்கள் இரும்புப்பிடி முடிவுகளுடனும், அறிவாளிகள் சந்தேகவாதிகளாகவும் இருப்பதுதான்”
Bertrand Russell, The Triumph of Stupidity in Mortals and Others: Bertrand Russell’s American Essays, 1931-1935 (Routledge, 1998), p. 28

Coginitive_Bias_Social_Behavior_Decision_Calvin_Hobbes

பெர்ட்ரண்டு ரஸ்ஸல் சொன்னது ஒரு எண்ணம். வெறும் விவாதம் இதை விலாவாரியாக ஆராய்ந்து, பல பேரிடம் கணிப்பு நடத்தி, அந்தத் தரவுகளைக் கோர்த்து, ஜஸ்டின் க்ரூகர் (Justin Kruger) என்பவரும் டேவிட் டன்னிங் (David Dunning) என்பவரும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தினார்கள். இந்த சிந்தனையை ஆதாரபூர்வமாக நிரூபித்தார்கள். இதற்கு டன்னிங் – குருகர் விளைவு (Dunning-Kruger Effect) என பெயரிட்டார்கள்.

அது என்ன சொல்கிறது?

1. திறமையற்றவர்களிடம் தங்கள் திறமை பற்றி அளவுக்கதிகமான மதிப்பீடு இருக்கிறது

2. தங்களை விட அதிதிறன் கொண்டவர்களை திறமையற்றவர்கள் சரியாக மதிப்பிடுவதில்லை

3. தங்களின் போதாமைகளையும் தங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் அறியும் சக்தியை – திறமையற்றவர்கள் பெற்றிருக்கவில்லை.

4. அந்த மாதிரி திறமையற்றவர்களுக்கு போதிய அளவு பயிற்சியும் முறையாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் கொடுத்தால், தங்களின் திறனற்ற தன்மையை புரிந்து கொள்வார்கள்.

DarwinEatsCake_Cartoons_Dunning_Kruger_Effect

இதையே கொஞ்சம் நீட்டித்து,
– கமல் கவிதை எழுதுவதையும்,
– பத்மா சேஷாத்ரி / ஐஐடி மாணவர்கள் எல்லோரும் தங்களை முதல் மாணவர்கள் என எண்ணம் உருவாக்கிக் கொள்வதையும்,
– ஜெயமோகனின் எல்லா நிலைப்பாடுகளும் தெளிவானவை என்று அவர் நினைப்பதையும்
– மகஸேசே விருது குறித்து உலகமே பெருமிதப் படுவதாக சில தமிழ் பாடகர்கள் கருதுவதையும்
– ஏற்கனவே குண்டாக இருக்கும் என் போன்றோரிடம் கிருஷ்ண ஜெயந்தி பட்ஷணம் எடுத்துக் கொண்டாயா எனக் கேட்டால், ‘ரெண்டே ரெண்டு விள்ளல்’ என்று பதில் அளிப்பதையும்
நினைத்துப் பார்க்கலாம்.

டிரம்ப் தேர்தலில் நிற்பதையும், அவருடைய ஆதரவாளர்கள் எப்படி டொனால்ட் டிரம்ப் சொல்வதையெல்லாம் நம்புகிறார்கள் என்பதும் கூட இதே டன்னிங்-க்ரூகர் தாக்கம் என்கிறார் மிச்சிகன் பல்கலை தத்துவப் பேராசிரியர்.

Calvin and Hobbes_Dunning_Kruger_Effect

வாழ்க்கையில் வெல்லவே ‘டேக் இட் ஈஸி பாலிசி’

லோகத்தில் இரு விஷயங்கள் சிரமமானவை.

1. இன்னொருவரின் மண்டைக்குள் உங்கள் எண்ணத்தை விதைப்பது

2. இன்னொருவரின் பணத்தை உங்கள் கைக்கு வரவைப்பது

.
.
.
.
.

முதலாமவதில் வெற்றி பெறுபவர் –ஆசிரியர்

இரண்டாமவதில் வெற்றி காண்பவர் –முதலாளி

இரண்டிலும் கலக்குபவர் –மனைவி

அடுத்தவரின் விருப்பத்தை தன் கைக்காசு போட்டு நிறைவேற்றுபவர் – ‘இல்லத்தரசர்’

(இணையத்தில் வாசித்தன் மொழியாக்கம்)

ஜெயமோகனைக் கவர்ந்த தத்துவவியல் புத்தகங்கள்

புத்தக கடையில் ஜெமோ விரும்பி வாசிக்க எடுத்த நூல்களின் பட்டியல்:

1. Confessions of a Philosopher – Bryan Magee

2. If on a winter’s night a traveler – Italo Calvino

3. 2666 – Roberto Bolano

4. Ludwig Wittgenstein: The Duty of Genius – Ray Monk

5. Pragmatism: The Classic Writings – Edited by H S Thayer

6. The Meaning of Truth: William James

7. Evolution and the Founders of Pragmatism: Philip P Wiener

8. The Geography of Thought: Richard E Nisbett

கிருஷ்ணா! கிருஷ்ணா!

மலந்துடைக்க தாள்களை கடகடவென பறித்த சமயம் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தது நினைவுக்கு வருகிறது.
10:33 AM Nov 20th

அதே போன்ற இன்னொரு மலங்கழிக்கும் இடம். ஆத்மார்த்தமாக தியானித்து நச்சுகளை வெளியேற்றுகையில் கிருஷ்ணனே வந்துசேர்ந்தார்.

‘என்னடா! நீ ‘ஒன்லி விமல்’ சூட்டிங், ஷர்ட்டிங் பார்த்தது இல்லையாடா?’

‘ஏஞ்சாமி?’

‘அங்கே கூட இப்படி துணிக்கட்டுகளை பண்டில் பண்டிலாக அடுக்கி வைத்திருப்பார்கள். எண்பதுகளின் தமிழ்நாட்டு கோ ஆப்டெக்ஸில் இதைப் பார்த்தவன் நீ. இருந்தும் ஏன்டா என்னோட இன்சிடென்ட்டை வம்புக்கு இழுத்தாய்?’

‘உங்கள எங்க சாமி உள்ளே இழுத்தேன்? நான் துச்சாதனன். வெள்ளைப் புடைவையாக பேப்பர். கொடுத்தது காஸ்ட்கோ; வாங்கி வைத்தது நான்; தயாரித்தது ஸ்காட் கம்பெனியாம்’.

த்வைதம் பேசுகிறாயா? டாய்லெட் பேப்பருக்காக மரத்தை வெட்டியது தவறு என்பாய். அங்கு மீண்டும் பச்சை தழைக்காவிட்டால் க்ரீன்பீஸ் கொண்டு போராட்டம் நடத்துவாய். தண்ணீரைக் கொட்டி ஃப்ளஷ் செய்யாதே என்றும், அதை அப்படியே வைத்திருந்து உரமாக்கலாம் என்றும் பேதம் பாராட்டுவாய்!’

‘சாமீ! ரொம்ப விக்கிப்பீடியா பக்கம் போகாதீங்க. அப்படியே டெமொக்ரசி நௌ எல்லாம் வேணாம்.’

‘அது இருக்கட்டும். மீண்டும் கேட்கிறேன். அள்ள அள்ளக் கொடுத்தவன் கிருஷ்ணன். பத்து தடவை பீ பெய்தால் தீர்ந்து போகும் உருளையோடு ஒப்பிடலாமா?’

‘முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க சாமீயோவ். கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் த்வைதத்தின் அடிப்படையிலும் புத்தம், ஜெயினம் எல்லாம் கடவுள் அபவாதம் என்னும் அத்வைதம் போதிக்குதா?’

‘முதலில் பிரபத்தியை அணுகு மகனே. சர்வமும் சித்திக்கும்’

‘யூ மீன் பாப்பாத்தி?’

‘பிரபத்தி என்றால் பரிபூரண சரணாகதி அப்பா’.

‘எது எப்படியோ. பிரபத்தி பேர் நல்லாருக்கு. அடுத்த தமிழ் ஹீரோயினுக்கு வெச்சுக்கலாம். அதற்கப்புறம் அவளை சரணாகதி அடைஞ்சா மோட்சம் வருமே.’

‘எனக்கு மீராபாய்தான் சரி. நான் ஜூட்.’

நட்பைக்கூடத்தானே கற்பைப் போல எண்ணுவோம் – ஆண்

தோழியின் வீட்டுக்கு சென்ற மனைவி நேரம் போனது தெரியாமல் சன் டிவி பார்த்ததில் தாமதமாகிப் போகிறது. இரவு வீட்டுக்கு திரும்பாமல், நண்பியின் இடத்திலேயே டேரா அடித்துவிடுகிறாள். செல்பேசியிலும் போதிய அளவு சிக்னல் கிடைக்காமல் படுத்துகிறது.

காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தோழியின் இல்லத்தில் உறங்கியதை கணவனிடம் சொல்கிறாள்.

தனக்குத் தெரிந்த அவளின் தலை பத்து நண்பர்களை அழைத்து விசாரிக்கிறான் புருஷன்காரன். அவர்களில் எவரிடத்திலும் மனைவி தங்கவில்லை.

கொஞ்ச நாள் கழித்து…

கணவன் வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கிவிடுகிறான். வீடு திரும்பியவுடன், சில நாள் முன்பு மனைவி சொன்ன அதே சாக்கை சொல்கிறான். ‘நண்பனின் வீட்டில் போதை அதிகமாகி உறங்கிப் போனேன்’.

அவளும் அவனுடைய ஆத்மார்த்தமான அத்யந்த சினேகிதர்களைக் கூப்பிட ஆரம்பிக்கிறார்.

எட்டு பேர் அவன் தன்னுடைய இடத்தில் சீட்டாடி களைத்து நித்திரை பயின்றதாக சொல்கிறார்கள். பாக்கி இரண்டு பேர் இன்னும் அவன் அங்கேதான் இருப்பதாக தலையிலடித்து சத்தியம் செய்கிறார்கள்.

அசல்

ட்விட்டர்த்துவம்

இப்போதைக்கு ட்விட்டர் போதை பாடாய் படுத்துகிறது.

ட்விட்டரில் என்ன எழுதலாம்?

எடுத்துக்காட்டு…

பட்டமும் மேல பறக்கும்; பருந்தும் பறக்கும்; பலூனும் மேல மேல பறக்கும்;

பட்டம் பறக்கறதுக்கு தரையில் டீல் போடணும்!
பருந்து பறக்கறது வயித்துக்கு தீனி தேடணும்!!
பலூன் பறந்து ஆகாசத்துக்கு வழி போடும்!!!

பட்டம் மாதிரி திட்டம் போடு;
பருந்து மாதிரி தேடலோடு இரு;
பலூன் மாதிரி எல்லாத்தையும் லேசா எடுத்துக்கோ;
ராக்கெட் மாதிரி பறப்பே!

How to increase your hit rate based on a Search term?

1. தலைப்பு ரொம்ப முக்கியம். ஒரு இடுகைக்கு ஒரு தலைப்புதான். செக்ஸ் படங்கள் குறித்த பதிவு என்றால் செக்ஸியாக படங்களை இடாவிட்டாலும், அப்படி வைக்கவும்.

2. நாலைந்து முறை தேடிப் பார்க்கவும். தேடல் முடிவில், அப்படியே சென்று விடாமல், க்ளிக் செய்து, தேடல் பூர்த்தியானதை கூகிளிடம் தெரிவிக்கவும். இப்படி தினசரி முழுமையடைதலை, பல்வேறு கணினிகளில், விதவிதமான ஐ.பி.க்களில், எல்லாவிதமான உலாவிகளின் துணையுடன் செய்தால், சீக்கிரமே முதலிடம் சித்திக்கும்.

3. உங்களுக்குத் தெரிந்த நாலு பதிவரை அழைத்து, படங்கள் செக்ஸ் வேன்டுமானால், என்னும் தொடர்புள்ள வார்த்தைகள் வருமாறு, முன்னே பின்னே மாற்றிப் போட்டு, தொடுப்பு கொடுக்க வைக்கலாம். இதனால், இது நிச்சயம் நம்பகமான இடுகை என்று தேடல் பொறிகள் அறிந்து கொள்ளும்.

பயணங்கள் முடிவதில்லை அந்தக்காலம்;
முடிவுகள் பயனில்லை இந்தக்காலம் 🙂

What did your original face look like before you were born?

நான் பார்த்தவரை உங்கள் கேள்விகள் பெரும்பாலும் பிரபஞ்சக் கருந்துளை மாதிரி – தான் ஏன் இருக்கிறோம் என்றே தெரியாமலோ/சட்டைசெய்யாமலோ இருப்பது போலத் தோன்றும் கேள்விக்கு ‘பதில் சொல்லி முடித்தோமென்று நினைத்த பின்னரும்’ அப்படியே குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பது போலத் தோன்றும். உங்களது கேள்விகளின் ஆழம் தான் இதற்குக் காரணமென்று நினைக்கிறேன் 😉
சன்னாசி

Before I sought enlightenment, the mountains were mountains and the rivers were rivers;

while I am studying Zen, mountains are no longer mountains and rivers are no longer rivers;

but once I reached satori mountains are once again mountains and rivers again rivers.
நன்றி: ZEN, From "The Tao of Physics" by Fritjof Capra