Tag Archives: ஜோக்

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!

தயிர் வடை தரமணி

1. முதலில் தமிழின் இடைநிலை இதழ்களில் நிலவும் மோசமான மதிப்பீடுகளும் இலக்கிய விமர்சகர்களின் போதாமையும் குறித்து, ஒரு ஒட்டுப் படம்

2. தரமணி திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும்: ஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு – இந்த திரைப்படம் எப்படி நுட்பமாக ஒரு ஆணாதிக்க தளத்தில் இயங்குகிறது என்பதை விவரிக்கும் நோக்கில்….

3. அடுத்ததாக “தரமணி’ திரைப்படம் குறித்த என்னுடைய பதிவு: தமிழ் சினிமா குறித்து ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் வரும் வசனம் பொருத்தமாக இருக்கும்

’உனக்கு ஏன்ப்பா சுதந்திரம்னு பேர் வச்சாங்க?’

“நான் 1947ல் பொறந்தேன்”

‘அப்படின்னா… சொதந்திர வயசாச்சா ஒனக்கு! அதான் நீயும் வளரவேயில்ல!!’

இப்பொழுது ‘தரமணி’ படத்திற்கு இது எப்படி பொருந்துகிறது என்று பார்ப்போம்:

‘இந்த ஊர் எப்போ சென்னைக்குள் நொழைஞ்சது?’

“1977ல் சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம் உருவானது. அப்பொழுது தரமணி பஞ்சாயத்தும் மதராஸ் மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டது.”

‘அந்த வருடம்தான் ’அவர்கள்’ படமும் ’ஆறு புஷ்பங்கள்’ படமும் வந்தது. அப்பொழுது எப்படி சினிமாவை எடுத்தார்களோ, அதே மாதிரிதான் இப்பொழுதும் ராம் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்”

4. அப்படியானால் வெகுசன ஊடகங்களில் இந்த மாதிரி மாற்றுப்படங்களே வருவதேயில்லையா? அல்லது பொதுத்திரள் சந்தையில் இந்த மாதிரி பெண்ணியக் கருத்துகளை முன் வைக்கவே முடியாதா? பார்க்க – Mother! Mastermind Darren Aronofsky Explains His Disturbing Fever Dream | Vanity Fair

Aronofsky has a response for those people: “They are missing the whole point. It’s misogyny if it says that this is good . . . I think [any spit-take revulsion is] just like an initial reaction to being punched. We are telling the story of Mother Nature turning into a female energy, and we defile the earth. We call her dirt. We don’t clean up after our mess. We drill in her. We cut down her forests. We take without giving back. That’s what the movie is.” Referencing Hurricane Irma, which was touching down in Florida as the film premiered, Aronofsky added, “Naomi Klein, one of the great eco-feminist out there, sent me a text yesterday, talking about the irony of the film premiering yesterday with what’s happening right now in America.”

வன்புணர்வு காட்சியைக் காண்பித்தால் அசிங்கமாக இருக்க வேண்டும். ஆசைப்பட வைக்கக் கூடாது.

‘தரமணி’ திரைப்படத்தில் பெண்ணியமும் இல்லை; முடிச்சும் இல்லை. இரண்டையும் கேவலப்படுத்துகிறது. இந்த மாதிரி ராம் படம் எடுப்பதற்கு ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரம் எடுக்கலாம். அதில் நேர்மை இருக்கிறது.

5. கொஞ்சம் காட்டம் ஜாஸ்தியாகி விட்டது. நகைச்சுவை இடைவேளை:

ஒரு ஊரில் நான்கு பேர் இருந்தார்கள். ஒரு பொறியாளர்; ஒருவர் கணக்காய்வாளர்; ஒருவர் வேதியியலாளர்; மற்றொருவர் அரசு ஊழியர். நால்வரும் ஆளுக்கொரு நாய் வளர்த்தார்கள். தங்களின் நாய்தான் திறமை வாய்ந்த நாய் என்று பெருமிதம் கொண்டிருந்தார்கள்.

முதலில் எஞ்சினீயர் தன் நாயை அழைத்தார். ”ஏ… மின்னலு! உன்னோட வித்தைய காமி…” என்கிறார். அந்த நாய் மேஜையில் இருக்கும் தாளை எடுத்து வந்தது. அடுத்து பென்சிலைக் கொணர்ந்தது. வெள்ளைத்தாளில் முழு வட்டத்தை செவ்வனே வரைந்தது. அதன் பின் சதுரம் போட்டது. முக்கோணைத்தையும் தன் கால்வண்ணத்தில் கொணர்ந்தது. எல்லோரும் அதை வியந்து பாராட்டினர்.

ஆனால், கணக்கரோ தன் நாய் இதைவிடத் திறமை வாய்ந்தது என்றார். ”ஏய்… அட்சரா! இங்கே வந்து நம்ம மேட்டர செய்ரா!!” என விளிக்கிறார். அட்சரா எனப்பட்ட நாய் சமையலறைக்கு ஓடிப்போகிறது. அங்கிருந்து எடுத்துவந்த ஒரு டப்பா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை அரைக்காலாக பிரிக்கிறது. அரைக்காலை அடுத்து ஐந்து காணி விள்ளல்கள் ஆக்குகிறது. அடுத்து வேதியிலாளர், “ரசா… வாடா! அவுத்துவிடு.” என்கிறார்.

ரசாயனம் என பெயரிட்ட அந்த நாய் ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு படி பாலை எடுக்கிறது. அதை நான்கு உழக்கு ஆகப் பிரிக்கிறது. கீழே ஒரு துளிக் கூட சிந்தாமல் 4 உழக்கை எட்டு ஆழாக்கு ஆக்குகிறது. எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். இப்பொழுது அரசாங்க சிப்பந்தியைப் பார்த்து, “உன் நாய் என்ன செய்யும்?” என வினவுகிறார்கள். அவரும், “ஏய் திண்ணைத்தூங்கியே… செஞ்சு முடி.” என்கிறார்.

துள்ளியெழுந்த அந்த நிர்வாக நாய் முதலில் மைசூர்பா எல்லாவற்றையும் ஒரே மூச்சில் கபளீகரம் செய்தது. தாகசாந்திக்கு அனைத்துப் பாலையும் உறிஞ்சிக் குடித்தது. பேப்பரில் கக்கா போனது. அதன் பிறகு முன்று நாய்களிடமும் வல்லுறவு கொண்டது. வன்கொடுமையின் போது தன் முதுகுத்தண்டு தடம் புரண்டதாக புகாரையும் பதிந்தது. அது போல் தரமணி திரைப்படமும் இயக்குநர் ராமும் நிறைய வித்தை காட்டுகிறார்கள்.

6. இது கேம் ஆஃப் த்ரோன்ஸ் காலம். எனவே:

அ) Fight Like a Lady: the Promotion of Feminism in Game of Thrones

ஆ) Drama queens: why it’s all about women and power on screen right now | Books | The Guardian

இ) ‘Game of Thrones’ has become an unlikely tale of female empowerment – LA Times

7. ஆங்கிலப் படம் ஆச்சு; ஆங்கில தொலைக்காட்சி ஆச்சு… பாக்கி? ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு: Fiery Collections of Essays From Young Feminist Writers – The New York Times

அ) YOU PLAY THE GIRL: On Playboy Bunnies, Stepford Wives, Train Wrecks, and Other Mixed Messages By Carina Chocano
ஆ) ONE DAY WE’LL ALL BE DEAD AND NONE OF THIS WILL MATTER By Scaachi Koul
இ) BITCH DOCTRINE: Essays for Dissenting Adults By Laurie Penny

சுற்றுலா நகைச்சுவை

பாரிஸ் நகர வாயிலில் வருகையாளர்களுக்கான தகவல் மையம் அமைத்திருந்தார்கள். முதலாவதாக ஒருத்தன் விசாரிக்க வந்தான்.

“நான் நாலு மாசம் இங்கேயே இருக்கப் போறேன். முழுப் பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்தது: “பத்து சதவிகிதம் கூட பார்த்து முடிக்க முடியாது!”

வரிசையில் அடுத்தவர் வந்தார்: “நான் நாலு வாரம் இங்கேயே இருக்கப் போறேன். சொஞ்சமாவது பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. பரிமாற்றகர் கொஞ்சம் பிரகாசமடைந்து “ஐம்பது சதவிகத சுற்றுலாத் தலங்களை பார்த்துடலாம்!”

இரண்டையும் கேட்ட மூன்றாமவர் கேட்கிறார்: “நான் நாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப் போறேன். எவ்வளவு பாரிஸைப் பார்க்கலாம்?”. கல்லாகாரர் தீர்க்கமாக சொல்கிறார். “உங்களால் அனைத்து நகரத்தையும் முழுமையாகப் ரசித்து சுற்ற முடியும்.”

நானும் அடுத்த வாரம் முதல் பாரிஸ் பக்கம் செல்கிறேன். பாரிஸில் ஒரு ட்வீட் அப் போடணும். நீங்க சந்திப்புக்கு வர விருப்பம் என்றால் தொடர்பு கொள்ளுங்களேன்

மதன் ஜோக்ஸ் – ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு

எண்பதுகளில் செல்லுபடியானது அரசியல் அளவில் இன்றும் ஏகத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

எல்லாமே எப்பொழுது வேண்டுமானாலும் சிரிக்க, சிந்திக்க வைப்பவை.

லத்தீன் அமெரிக்க சாரு நிவேதிதா ஜோக்


Once there was a man who loved baked beans. He would eat up to 5 and sometimes 6 plates at a time, but that always be followed with smelly, loud, stinky gas.

One day he met a beautiful lady and decided to talk to her. They started seeing each other. Since he did not want her to smell his nasty gas after eating beans, he made the sacrifice, and stopped eating them. One year later they were married.

On his birthday, the next year, he was coming home from work, when suddenly his car broke down. He called his wife to tell her what had happened, and also to let her know that he would be home a little late. She said she understood, but to hurry, because she had a surprise for him.

On his way he saw a diner and smelled baked beans cooking inside. Since he had to walk 6 miles to get home, he figured that by the time he got there all the smelly gas would be gone. He went in and ate 7 bowls of baked beans. On his way back home, he was farting nasty and smelly gas.

Finally he got home and on the door his wife had hung a blind fold for him to wear, so he wouldn’t peek. She sat him at the table, when all of a sudden the phone rang. She made him promise he wouldn’t peek until she got back.

Unfortunately, his gas came back and he couldn’t hold it in any longer. Since she was taking so long, he decided to let it go. He picked up his leg and let it rip. It smelled so bad, he had to get a napkin and fan so she wouldn’t smell it. He wanted to fart again, so he once again picked up his leg, but this time it was so loud and smelly, that it shook the windows and killed the flowers.

After a couple of more farts his wife finally got off the phone, so he stopped.

When she took the blind fold off to his surprise, there were 12 guests seated at the table.

வெகு காலம் முன்பு படித்த நகைச்சுவை. இன்றைய சூழலில் பிறமொழிப் படங்கள், பரிந்துரை இலக்கியங்கள், சுவையான மசாலா என கலந்து அடிப்பதால் டக்கென்று அந்த மனிதருக்கு சாரு நிவேதிதா பொருத்தமாகப் பட்டார்.

Anandha Vikadan Jokes: 1945 Cartoon Fun

ஆனந்த விகடன் நகைச்சுவை - ஜோக்ஸ்: 1945

ஆனந்த விகடன் நகைச்சுவை - ஜோக்ஸ்: 1945

டிராம் காலம்: அந்தக் கால புடைவை விகடன்: நகைச்சுவை

நட்பைக்கூடத்தானே கற்பைப் போல எண்ணுவோம் – ஆண்

தோழியின் வீட்டுக்கு சென்ற மனைவி நேரம் போனது தெரியாமல் சன் டிவி பார்த்ததில் தாமதமாகிப் போகிறது. இரவு வீட்டுக்கு திரும்பாமல், நண்பியின் இடத்திலேயே டேரா அடித்துவிடுகிறாள். செல்பேசியிலும் போதிய அளவு சிக்னல் கிடைக்காமல் படுத்துகிறது.

காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தோழியின் இல்லத்தில் உறங்கியதை கணவனிடம் சொல்கிறாள்.

தனக்குத் தெரிந்த அவளின் தலை பத்து நண்பர்களை அழைத்து விசாரிக்கிறான் புருஷன்காரன். அவர்களில் எவரிடத்திலும் மனைவி தங்கவில்லை.

கொஞ்ச நாள் கழித்து…

கணவன் வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கிவிடுகிறான். வீடு திரும்பியவுடன், சில நாள் முன்பு மனைவி சொன்ன அதே சாக்கை சொல்கிறான். ‘நண்பனின் வீட்டில் போதை அதிகமாகி உறங்கிப் போனேன்’.

அவளும் அவனுடைய ஆத்மார்த்தமான அத்யந்த சினேகிதர்களைக் கூப்பிட ஆரம்பிக்கிறார்.

எட்டு பேர் அவன் தன்னுடைய இடத்தில் சீட்டாடி களைத்து நித்திரை பயின்றதாக சொல்கிறார்கள். பாக்கி இரண்டு பேர் இன்னும் அவன் அங்கேதான் இருப்பதாக தலையிலடித்து சத்தியம் செய்கிறார்கள்.

அசல்

ரெண்டுக்கு வந்த கோலாகலம்

Comedy with Urine, Shit, Crap
அரியணை என்பார்கள் சில பேர்கள்; கொல்லைக்கு என்பார்கள் அந்தக் காலத்தவர்கள்; ‘எக்ஸ்யூம் மீ‘ கேட்டுப் போவார்கள் நவநாகரிகர்கள். எல்லாத்துக்கும் ஒன்றுதான் இலக்கு – ‘காலைக்கடனை மாலையில் செய்தாலும் காலைக்கடனா?’ என்று செந்தில் கவுண்டமணியிடம் கேட்டால் நகைச்சுவை. இனி ‘ரெண்டுக்கின் கதை‘.

காலைக்கடனையும் வலையில் மேய்வதையும் சரிசமமாகக் கழிக்க கருத வேண்டும்.

  • இரண்டுமே அளவோடு இருத்தல் முக்கியம். நேரங்காலம் தெரியாமல் போய்க்கொண்டிருக்க கூடாது.
  • கண்ட இடத்தில் சென்றால் ஜாக்கிரதையாக கிருமிநாசினிகளை தெளித்து பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பாக செல்லாவிட்டால் தொற்று வியாதி பீடிக்கும் அபாயம் உண்டு.
  • வேலையை முடித்த பிறகு, சென்ற சுவடே இல்லாமல் தனிப்பட்ட விஷயங்களை ஒழுங்காக சுத்தம் செய்தல் அவசியம்.
  • திறந்தவற்றையெல்லாம் மூடிவைத்துவிட்டு வெளியேற வேண்டும். அடுத்தவர் எட்டிப் பார்த்தால் எதுவும் தெரியக்கூடாது.
  • சிக்கலாக இறங்கிக் கொண்டிருந்தால், செரிமானத்தில் போதிய நடவடிக்கை தேவை. இங்கே காய்கறிகளை வெட்டவும்; அங்கே வீடீயோக்களை வெட்டி விடும்.
  • ரொம்ப உட்கொண்டால் அஜீரணமாகி ஒவ்வாமை ஏற்பட்டு, எங்கும் துர்நாற்றம் எழவைக்கலாம்.
  • இரண்டுமே வர வேண்டிய நேரத்தில் வராவிட்டால், நித்திரை நிர்மூலமாகி அவஸ்தை கொடுக்கும்.
  • இரண்டும் இடங்களிலும் செல்லும் இடத்திலெல்லாம் அனானியாக கிறுக்கி வைக்கலாம்.

வலைவலத்திற்கும் மலஜலத்திற்கும் பாக்கி உள்ள ஆறு வித்தியாசங்களை ஆற அமர அங்கே இருக்கும்போது யோசிக்குமாறு வீட்டுப் பாடம் தந்துவிட்டு சொந்தக் கதைக்கு போவோம்.

பாட்டி ரொம்ப ரொம்ப ஆசாரமானவள். ‘கோமாதாடா… மஹாலஷ்மியே குடியிருக்கா’ என்றவுடன் பெசன்ட் நகருக்கு செல்லாமலேயே தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் தொட்டு கும்பிட சென்றது நினைவில் இருக்கிறது.

‘உதயம்’ படத்தில் அமலாவைக் கடத்தி செல்லும் காட்சி நினைவிருக்கிறதா? சத்தவஹனா எக்ஸ்பிரெஸ் போன்ற ஏதோ ஒரு வண்டி செல்வதற்காக லெவல் கிராசிங்கில் காத்திருந்தால், ட்ரெயின் சென்றவுடன் அந்தப் பக்கம் நாகார்ஜுனா இருப்பார். அந்த மாதிரி, நான் பசுவை தொட்டு வணங்க சென்றவுடன் எனக்கு கோமிய அபிஷேகம் லபித்தது. ராம் கோபால் வர்மாவுக்கும் இந்த மாதிரி தடாலடி டைமிங் கிடைத்திருக்க வேண்டும். அதை உருவி உதயமாக்கிவிட்டார்.

கோடைகாலத்துக்கு ஏற்ற சூடான அருவி. இன்றளவில் சூடான விசயம் ஒகேனக்கல்.

‘எப்பா… இவ்வளவு மூத்திரம் அடிக்குதே இயற்கை? இதற்கும் நியுசன்ஸ் கேசு போடுவதே அண்ணன் கை!’ என்று கவிப்பேரரசர் வைரமுத்து விஜயகாந்த்துக்கு பாட்டெழுதினால் பன்ச் பறக்கும்.

காவேரி பொங்கி வந்தால்தான் பிரச்சினை இல்லை. பிரயாணத்தின்போது பொங்கி வந்தால் மிகக் கொடுமை. அதுவும் நிகழ்ந்திருக்கிறது.

புது தில்லிக்குள் புகுந்திருந்த புதுசு.

ஹிந்தியைத் தமிழில் கூட படிக்கமாட்டோம் என்ற இறுமாப்புடன் வளர்ந்த நண்பர்கள், என்னுடைய வடமொழி புலமையை மெச்சி, ‘மாம்ஸ்… இந்த வண்டி டிஃபன்ஸ் காலனி போகுமான்னு விசாரி’ என்று அனுப்பி வைத்தார்கள். ‘ஏ பஸ் கைஸே சல்தே ஹைன்?’ என்று நான் வினவ, நடத்துனர் சொன்ன ‘பெட்ரோல்’ பதில் எல்லாருக்கும் புரிந்து என்னுடைய மொழி ஆளுமையை இன்றும் சந்தேகாஸ்தபமாகப் பார்ப்பது தனிக்கதை.

இப்படிப்பட்ட ஹிந்தியை வைத்துக் கொண்டு, ராஜஸ்தான்-ஜெய்ப்பூர் சுற்றுலாவில் அர்த்த ராத்திரி அரைத் தூக்கத்தில் ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுனரிடம் பிரச்சினையை விளக்கிய சோகக் காவியத்தை சொல்ல ஆசைதான். ஆனால், அதைவிட சட்டென்று நினைவுக்கு வந்த ஒன்றைக் கூறி இந்த அமர்வை பூர்த்தி செய்யலாம். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி முறை கக்கூசையும் மேற்கத்திய நாகரிக டாய்லெட்டையும் ஒப்பிட்டு நிறைய நகைச்சுவை குஷ்வந்த் சிங் துவங்கி குழும மடல் வரை மணம் வீசும்.

மிஸ்டர் எக்சுக்கு அதுதான் முதல் விமான பயணம். அமிஞ்சிகரையைத் தாண்டாதவருக்கு ஏரோபிளேன் சுற்றுலா. விமானத்தில் கொடுத்ததெல்லாம் சாப்பிட்டதில் வயிறு கலக்குகிறது. இவரைப் போல் இன்னும் பலரும் பெரிய வரிசையாகக் காத்திருக்க, தன் அவஸ்தையை அழகான விமானப் பணிப்பெண்ணிடம் நாணிக் கோணிக் கொண்டு அவசரமாக உணரவைக்கிறார்.

“அவசரத்துக்கு பாவமில்ல. மகளிர் கழிவறையை உபயோகிச்சுக்குங்க. ஆனால், அங்கே மூணு பொத்தான் இருக்கும்! அதை மட்டும் தொடாம இருக்கணும்! புரிஞ்சுதா?” என்று கண்டிப்புடன் அனுப்பி வைக்கப் படுகிறார்.

வந்த காரியம் ஸ்வஸ்தமாக நிறைவேறுகிறது. சொன்ன மாதிரியே மூணு பட்டன் இருக்கிறது. மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில் அழுத்த அழைக்கிறது.

ஆர்வம் தாங்காமல் மஞ்சள் பொத்தானை தட்டுகிறார். என்ன ஆச்சரியம்! வேகமாகவும் பீய்ச்சாமல், வென்னீராகவும் ஊற்றாமல், சில்லென்று விறைக்காத இளஞ்சூட்டோடு தண்ணீர் கழுவி விட்டுவிடுகிறது. ‘இதைப் போய் அமுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாளே’ என்று ஆப்பிள் விழுந்த நியூட்டனாக அடுத்து சிவப்பை தட்டிவிடுகிறார்.

முடி வெட்டியவுடன் ஷாம்பூ போட்டு தலை துவட்டுவது போல் தாலாட்டாக தசைகளை பிடித்து விட்டு, உலர்த்திவிடுகிறது. ‘இதுவல்லவா சொர்க்கம்’ என்று பச்சை விசையை முடுக்குகிறார்.

மூர்ச்சையடைந்து, ‘நான் எங்கிருக்கிறேன்’ என்னும் வசனத்துடன் மருத்துவமனையில் துயில் களைகிறார். அருகே பரிவு கலந்த கோபத்துடன் அதே அழகுடன் விமான சிப்பந்தி.

“நான் எத்தனை தடவை சொன்னேன்? கேட்காம அந்த பச்சை பட்டனை அமுக்கியிருக்கே… மாதவிடாய் வரும் சமயம் வச்சுக்கும் தக்கை அடைப்பானை எடுக்கிறது அது! உன்னோட ஆணுறுப்பு தலைகாணிக்கடியில் பத்திரமா இருக்கு”

கடைசியில் கருத்து சொல்லாமல் போக இது கமல் படம் அல்ல என்பதால்…

அந்தக் காலத்தில் பஞ்சகவ்வியம் புனிதப்பசு என்றால் இன்று சிறுநீர் நிறைந்த இலக்கியம் புனிதப்பசு.

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை: சங்கம்னா ரெண்டு

கண்ணை நம்பாதே… உன்னை ஏமாற்றும்!

ஏப்ரல் 1 வாழ்த்துகள் 

voices-philosophy-head-dog-belief-eye-rationale-cartoon-new-yorker.gif

கருத்துப்படம்: தி நியூ யார்க்கர் Cartoons from the Issue of April 7th, 2008: Issue Cartoons: The New Yorker

நகைச்சுவைத்துவம்:

ஜனார்தனுக்கு வேலை சீக்கிரமே முடிந்துவிட, மூன்று இருபது 12சி -யைப் பிடித்து வீடு திரும்பி விடுகிறார். கிராண்ட் ஸ்வீட்ஸ் அல்வாவும் கையுமாக இல்லத்தரசிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நுழைந்தால், போர்வைக்குள் பப்பி ஷேமாக மாடி வீட்டு மாதவனுடன் மனைவி இருக்கிறாள்.

ஜனார்தன் வாயைத் திறப்பதற்கு முன், படுக்கையில் இருந்து துள்ளி குதித்து மாதவன் கேட்கிறார்:

“இருபதாண்டு கால உன் நண்பன் நான் சொல்வதை நம்பப் போகிறாயா அல்லது உன் கண்ணால் கண்டதையா?”

எங்கேயோ படித்த ஜோக்

ரஷிய பஸ் ஸ்டாப். பேப்பரை விரித்தபடி நிற்கும் ஒருவரிடம் பவ்வியமாக மற்றவர் கேட்கிறார்.

‘சார் நீங்க கேஜிபியா?’

‘இல்லை’ என்கிறார் திருவாளர் பேப்பர்.

“உங்க வீட்டம்மா கேஜிபியா” இது பவ்வியம்.

“இல்லை” என்கிறார் திருவாளர் பேப்பர் கொஞ்சம் சிடுசிடுவுடன்

“அப்ப உங்க பக்கத்து வீட்டுல யாராச்சும்…”

“இல்லைய்யா”

“உங்க உற்றார் உறவினர் …”

“இல்லைய்யா இல்லை”

இப்போது திருவாளர் பவ்யம் சீறுகிறார், “பிறகு ஏன்யா எருமை மாடாட்டம் என் காலை மிதிச்சுட்டு நிக்கிறே காலை எடுடா தடிமுண்டம்”