Tag Archives: சூரியன்

மிகவானுள் எரி தோன்றினும் குளமீனொடுந் தாட்புகையினும்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த உரையாடல்:

Meet C/2022 E3 (ZTF) (her friends call her the green comet for short)

“பீஷ்ம ஏகாதசிக்காக புதன்கிழமையன்று வானில் பெருமாள் தோன்றினார். பார்த்தாயா!?”

“தவறவிட்டுட்டேனே… எப்பொழுது, எப்படி வந்தார்?”

“அது வால் நட்சத்திரம் எனலாம்… பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் மையப்பகுதி இரு கார்பன் அணுக்கள் சேர்ந்த டைகார்பன் (C2) என்ற மூலக்கூறுகளால் நிறைந்துள்ளது. சூரிய ஒளியோடு இந்த டைகார்பன் அணுக்கள்  வினைபுரிவதால் இந்தப் பச்சை நிற ஒளி வருகிறது.”

அருஞ்சொல் தளத்தில் ஜோசப் பிரபாகர் கட்டுரை எழுதுவது போல் பாடம் எடுக்கிறீர்கள். ஆன்மீகமாகச் சொல்லுங்களேன்…”

“மகாவிஷ்ணு மரகத மேனியனாக பச்சை நிறத்தில் பீஷ்மருக்காக விஸ்வரூப தரிசனம் தருகிறார். எனவே இந்த காட்சியை ‘பச்சை வண்ண பெருமாள்’ எனலாம்!”

“ஏதோ ஏகாதசினு சொன்னீங்களே?”

“பீமன் கூட பட்டினி இருப்பதால் நேற்றைக்கு பீம ஏகாதசி என்று பெயர்.”

“எனக்குத்தான் காது ஒழுங்காக் கேக்கலியா! பீஷ்ம ஏகாதசினு சொல்லிட்டு இப்பொழுது சாப்பாட்டு ராமனை உபவாசம் இருப்பதாக சொல்கிறீரே?”

“பீஷ்மர் கதை உங்களுக்குத்தான் தெரியுமே! அவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள்.”

“அதெல்லாம் சரி… பீஷ்மருக்கும் வால் நட்சத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“பிரபாசன் எனும் வசு வைகறையை குறிப்பவர். அவருடைய மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, வசிட்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில், வசிட்டரால் சாபம் பெற்று மண்ணுலகில், சாந்தனு – கங்கை தம்பதியர்க்கு பீஷ்மராக பிறந்தார்.”

“பீஷ்ம ஏகாதசி அன்னிக்குத்தான் பீஷ்மர் பரமபதம் அடைந்தார். அன்றைக்கு பச்சை வால் நட்சத்திரம் வருது. சரியா?”

“இல்லை. பீஷ்மர் அஷ்டமியில் மரணமடைந்தார். அதாவது ரத சப்தமி அன்று பரந்தாமத்திற்கு செல்ல நிச்சயித்தார்.”

“அப்படியானால், பச்சை தூமகேது… ஏகாதசி பெருமாள்… பீஷ்ம ஏகாதசி… எல்லாம் எதேச்சைதானே?”

“கோதர்ம: சர்வதர்மாணாம் பவத: பரமோ மத: !

கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்மசம்சார பத்தனாத் !

என்ற யுதிஷ்டிரன் வினவியபோது, “அனைத்து தர்மங்களிலும் சிறந்த தர்மம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “நாராயண நாம ஸ்மரணையே சிறந்த தர்மம்” என்று பதிலளித்தவர். அர்ஜுனனின் ரத சாரதியாக குதிரைகளை வழி நடத்தும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என் இதயத்தில் எப்போதும் நிலைக்கட்டும் என்று தியானம் செய்கிறார் பீஷ்மர்”

“வானியல் அறிவு அதிகம் வளராத காலகட்டத்தில் இருந்த மனிதர்கள் அவ்வப்போது வானத்தில் திடீரென்று ஒரு பொருள் நட்சத்திரம் போன்றே ஒளிர்ந்துகொண்டே வால் போன்ற தோற்றத்தில் இருந்ததால் இதற்கு வால் நட்சத்திரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால், இது உண்மையில் நட்சத்திரம் அல்ல. கோளும் அல்ல. அதற்கு வால் எப்போதும் இருப்பதில்லை. – என்பார் ஜோசப் பிரபாகர்.”

“சரியே… அதனால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமம் பூராவும் சொல்லி முடித்தபின், ‘ரதாங்கபாணி ரக்ஷோப்ய: சர்வப்ரஹரணாயுத’ என்ற நாமத்தோடு முடிக்கிறார். அதற்கு முன்பே ‘சக்ரீ’ என்கிறார். அந்த சக்கரத்தின் கனற்கொடியை C/2022 E3 (ZTF) எனலாம்.”

“அந்த மாதிரி ஜீரோ டிகிரி ஃபாரென்ஹீட்டில் தேவுடா காத்தால் பச்சை வண்ணப் பெருமாள் தெரிவார் என்கிறீர்கள்?”

“அதே… அதே… சபாபதே!”

பாஸ்டன் பெருமாள் – பார்த்தசாரதி கோலம்

பருவகாலங்கள்: ஈஸ்டர் ஞாயிறு

பனிக்காலம் முடிந்து குளிர் விலகுவதை ஒவ்வொரு இனக்குழுவும் அந்தக் காலத்தில் கொண்டாடி வந்தது.

ஒருவர் புனித வெள்ளி முடிந்து ஈஸ்டர் என்கிறார். இன்னொருவர் வண்ணப் பொடி தூவி ஹோலி என்கிறார். இஸ்ரேலியர்கள் passover என கொண்டாடுகிறார்கள். மார்கழியில் பெரிய குளிர் இல்லாவிட்டாலும் மாசி மகம் அன்று ‘தீர்த்தமாடும் நாள்‘. எத்தனை நாள்தான் குளிக்காமல் அட்டு மாதிரி தோய்க்காத பழைய கோட்டு சூட்டுகளையேப் போட்டுத் திரிவது!

பூப்பூக்கும் காலம். அதுவரை வாடி வதங்கிய புல்லும் மரங்களும் துளிர்க்கும் காலம். முட்டையில் இருந்துதான் கோழி வந்தது என நம்புவதைப் போல் முட்டைகளுக்குள் மிட்டாயை ஒளித்து, அவற்றைத் தோட்டத்தில் புதைத்து, குழந்தைகளைத் தோண்டச் சொல்லி தூர் வாரும் காலம். அந்தக் கால pagan கொண்டாட்ட முட்டையில் இருந்துதான் இந்தக் கால இயேசு உயிர்த்தெழுந்திருக்கிறார்.

தமிழ்ப் புத்தாண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. முஸ்லீம்களுக்கும் யுகாதி ஆண்டுத் துவக்கத்திற்கும் தொப்புள்கொடு உறவு. இஸ்லாமில் ஷியா பிரிவினரும் நௌரூஸ் (Nowruz) என மார்ச் 21ஆம் தேதியை புது வருடப் பிறப்பாகக் குறிக்கிறார்கள். சங்க காலத்திலும் இளவேனிற் காலம் பாடல் பெற்றிருக்கிறது.

”வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன” (குறந்தொகை : 147 : 1)
“கான விருப்பை வேனல் வெண்பூ”(குறந்தொகை : 329 : 1)

அனைவருக்கும் வசந்த காலம் பிறக்க புனித ஞாயிறு வாழ்த்துகள்.

விஷயம் தெரியாமல் காலை விட்டால் விஸ்வரூபம்

தீபம் இதழில் வெளியான பொன்னம்மாள் பக்கங்களில் இருந்து:

Deepam_PonnammalPakkam