Tag Archives: சமூகம்

டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct

இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.

சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?

இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?

கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:

1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.

கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.

நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1

சமூக வலைப்பின்னல் தளங்களில் தனிமனிதர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள்

புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:

விவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி?

தமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி!’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.

வேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.

என்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.

இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்றெல்லாம் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.

ஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.

இதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலாம். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.

நம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி? உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.

அதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.

நீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.

தகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல!’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.

சட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.

இந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.

டென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

ஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.

இதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.

1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.

2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.

3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.

வாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.

தோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.

அன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.

சிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.

இறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.

குடுகுடுவென்று காரியத்தில் இறங்காதே! காலத்தே பயிர் செய்யாமலும் இராதே!!

தொடர்புள்ள பதிவு: BBC News – Need a job? Learn to impress the robots

அமெரிக்க இந்தியர் சமூகவியல்: தமிழ்ச் சங்கம்

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவின் தமிழ் சங்கங்களையும் வருடாந்திர விழாவையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அந்த விதத்தில் என்னுடைய அனுபவங்களின் தொகுப்பாக இந்தத் தொடரைத் துவங்குகிறேன்.

தமிழ்ச் சங்கங்கள் மூன்று விதமான எண்ணங்களை தற்போது நிறைவேற்றுகிறது.

அ) இந்து கோவில், கிறித்தவத் தேவாலயம் என்று பிரிந்திருக்கும் தமிழர்களை ஒரே இடத்தில் திரட்டி, அமெரிக்காவின் லாபியிஸ்ட் சக்தியாக முயல்வது;

ஆ) ஆங்கிலம் மட்டுமே அதிகம் வாசிக்கும் தன்னுடைய குழந்தைகளின் பரத, பாடல் திறமைகளுக்கும் மாறுவேடப் போட்டிகளுக்கும் மேடை அமைத்துத் தருவது

இ) புலம் பெயர்ந்த தமிழ் நாட்டினரின் ஈழம் சார்ந்த குற்றவுணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுப்பது

பெட்னா நிஜத்தில் ஒரு சத்சங்கம் போல் இயங்குகிறது. சத்சங்கத்தில் சாய் பாபாவோ எவ்று யாராவது தனி மனிதரின் புகைப்படம் இருக்கும். இங்கே தமிழ் மூதறிஞர் என்று மு வரதராசர், பொ. வே. சோமசுந்தரர் போன்ற யாருடைய பெயராவது மினுக்கும். நான்கு நாள் விழாவில் அந்தத் தமிழறிஞர்களைக் குறித்து நான்கே முக்கால் நிமிடம் (285 வினாடிகள்) ஒருவர் பேசுவார்.

மேடையேறுபவர் அனைவரும் தமிழைப் போற்றிப் புகழுவார்கள். தமிழே போற்றி, தாயே போற்றி, தரணி ஆண்டாய் போற்றி என்று நூற்றியெட்டு துதிகள் நடக்கும். இருபத்தியெட்டு பேர்களாவது இப்படி அருச்சனை செய்தாலும், ஒவ்வொருவருடையதும் தனித்துவமாக இருக்கும். முதலாமவர் ’தமிழ் தேய்கிறது; எனவே தமிழ் வாழ்க’ என்பார்; இரண்டாமவர் ‘அமெரிக்க குழந்தைகள ”ம்ம்மா” என்றழைக்கின்றன; எனவே தமிழ் வாழும்’ என்பார். மூன்றாமவர் ‘வடநாட்டை சேர்ந்த குஷ்பு தமிழில் உரையாடுகிறார்; எனவே தமிழ் வெல்கிறது!’ என்பார்.

இத்தகைய நெருக்கடியிலும் இருபத்தியெட்டாவது ஆளாக மேடையேறுபவர் தன்னை துல்லியமாக வித்தியாசப்படுத்தி, “ஆமிர் கான் கூட தமிழ் பேசுகிறார்! எங்கும் தமிழ்” என்று முடிப்பார். இத்தகைய தகவல் துணுக்குகளை நான் எங்கும் ஒரு சேர கேட்டதில்லை.

பெட்னா சத்சங்கத்தில் பொங்கல் கிடைக்கும். சப்பாத்தியும் குருமாவும் உண்டு. பஜனைப் பாடல்கள் போல் அடுக்கு மொழி கவியரங்கமும் அரங்கேறுகிறது. பந்திக்கு சீக்கிரம் போனால் சுவையான சாப்பாடு கிடைக்கலாம். ஐம்பதாயிரம் நூபாய் போட்டு 65 தனித்தனி வண்ணங்களுடன் வாங்கிய ஆரெம்கேவி ’ஜடாவு பட்டு’ பார்க்கலாம். நடிகை சினேகாவுடனும் நடிகர் விக்ரமுடனும் தோள் மேல் கை போட்டு ஒளிப்படம் எடுக்கலாம். என்னவாக இருந்தாலும், அங்காடித் தெரு அஞ்சலியை அழைந்த்து வந்திருக்கலாம், என்பது என்னுடைய தாழ்மையான தனிப்பட்ட இரண்டணா அபிப்பிராயம்.

பத்தாவது படிப்புக்கான விடுமுறையில் நான் பத்தரையில் இருந்து பன்னிரெண்டு வரை வெள்ளிக்கிழமைகளில் கபாலி கோவில் செல்வேன். கலகலவென்று இருக்கும். அப்பொழுது இராகு காலம்.

துர்கை சன்னிதியில் கூட்டம் களை கட்டும். பெரும்திரளான பெண்கள் பயபக்தியுடன் அம்மனை சுற்றி வருவார்கள். அந்தக் காலங்களில் கபாலீஸ்வரர் கோவில் மாதிரி பெரிய ஆலயங்களில் மட்டுமே துர்கை சன்னிதி இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும்விதமாக தெருமுக்கு பிள்ளையாருக்கு பக்கவாட்டிலும் துர்கை எழுந்தருள ஆரம்பித்தார். அந்த நிர்வாகத்தினரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர்.

இராகு கால சிறப்பு பூஜை போல் பெட்னாவும் அரங்கேறுகிறது. நான் துர்கையை பயபக்தியுடன் மூன்று சுற்று சுற்றியது போல் அமெரிக்கத் தமிழரும் பெட்னாவை மூன்று நாள் கொண்டாடுகின்றனர்.

வீட்டை விட்டால் வேலை; வேலை விட்டால் சமையல்; சமையல் விட்டால் முயங்கல் என்று வழக்கப்படுத்திக் கொண்ட வாழ்க்கையில் இருந்து இந்த மூன்று நாள் விடுதலை தருகிறது. தமிழருக்குப் பெரும்பாலும் நட்பு வட்டம் ஒழுங்காய் அமைவதில்லை; மேலே சொன்னதை அடித்து விடவும். அமைத்துக் கொள்வதில்லை என்பதே சரி.

என்னுடைய அலுவலக பாஸ் வாரந்தோறும் மூன்று சீட்டு மங்காத்தா ஆடுவார். தன்னுடைய உற்ற நண்பர்களின் வீட்டில், தங்களுக்குப் பிடித்தமான இசையுடன், உணவுகளுடன், பின்னிரவு வரை சில்லறைக் காசு பந்தயம் கட்டி ஆடுவார். பணம் ஜெயிப்பது குறிக்கோள் அல்ல. எனினும், அந்த வாராந்திர நிகழ்வு ஒரு சடங்கு. எவரின் வீட்டில் எந்த சாப்பாட்டுடன் என்ன விளையாட்டு என்று திட்டமிடுவதே சுகம்.

இன்னொரு சகா, மாதந்தோறும் புத்தக சங்கத்திற்காக நூலைப் படித்து அலசி ஆராய்ந்து பேசுவார். அதற்காக ஆறு பேர் ஒன்றுகூடுகிறார்கள்.

இந்த மாதிரி எந்தவித ஒன்றுகூடலும் இல்லாத சமூகமாகவே பெரும்பாலான அமெரிக்கத் தமிழர் இருக்கின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வம் கிடையாது. நுண்கலைகளை ரசிப்பதை நேர விரயம் என்பர்.

வருடாந்திர விடுமுறையைக் கூட இந்தியாவிற்கு மட்டுமே செலவழிக்கிறோம். இப்படியாக முடங்கிப் போனவர்களுக்கு, இந்த மூன்று நாள்களில் நல்ல பேச்சுத்துணை கிடைக்கிறது.

‘நீயா நானா’வில் காதல் திருமண விவாதம் குறித்தும், ‘வாகை சூட வா’ வைரமுத்து வரிகளைக் குறித்தும் சிலாகித்து தங்கள் ரசனையைப் பகிர ஆள் அகப்படுகிறார்கள்.

ஆனால், இந்த மாதிரி தனி நபர் பேச்சில் தப்பு இருந்தாலாவது, மற்ற நண்பர்கள் சுதந்திரமாகவும் இயல்பாகவும் தட்டிக் கேட்க முடிகிறது.

அதுவே, மேடையில் பேசும் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் சொல்லும் தகவல் பிழைகளை சுட்டிக் காட்ட முடியாத அடக்குமுறை இருப்பது வருந்தத்தக்கது. இத்தனைக்கும் தமிழச்சி பிறந்த இந்தியாவும் பேச்சுரிமை கொண்ட நாடு. பெட்னா நடக்கும் அமெரிக்காவிலோ கருத்து சுதந்திரம் இன்னும் சிறப்பாகவே இயங்குகிறது. தமிழச்சி போன்றோரின் காந்திய மறுப்பு கருத்துகளோடு மாறுபடுவதை விட்டுவிடலாம்.

குறைந்த பட்சம், காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் சான்றாதாரங்களை எடுத்து வைக்கக் கூட இடம் தராமல் பெட்னா அமைப்பு இயங்குகிறது.

இவ்வளவு இருந்தும், நான் மதிக்கும் நல்லகண்ணு அய்யா போன்றோர் வருவதற்காகவே பெட்னா செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். அவரைப் போன்றோர் வருவதற்காக நிச்சயம் உழைக்கலாம். பெட்னா சொல்வது முற்போக்கு; செய்வது அக்கிரகாரம். மிக ஆபத்தான முகப்பூச்சு கொண்டு இயங்குகிறார்கள். மேடையில் பெரியார் கோஷம் போடுகிறார்கள். விழா மலரில் சாதி மறுப்பு திருமணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். எனினும், செயலூக்கம் துளி கூட இல்லை. சொற்பொழிவு மட்டும் போதும் என்று நினைப்பவர்களை அறியாமல் வியர்வை சிந்துபவர்களை எண்ணினால் பரிதாபம் கலந்த சோகம் எழுகிறது.

நான் பல ஆண்டுகளாக இங்குள்ள சிறுவர்களுக்கு தமிழ்க் கற்றுத் தருகிறேன். என்னைப் போல் ஒவ்வொரு ஊரிலும் தமிழ் ஆசிரியர்கள் ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று பந்தா காட்டாமல் இயங்குகிறார்கள். பரத நாட்டியத்தில் தற்கால வரலாறுகளை தமிழ்ப்பண் கொண்டு அரங்கேற்றுதல், பாரதி பாடல்களைக் கொண்டு இசை நாடகமாக்குதல், பரபரப்பு செய்யத் தெரியாத படைப்பாளிகளை வாசகர் வட்டத்தில் உரையாடச் செய்தல் என்று பல நல்ல விஷயங்கள் பெட்னா போர்வை இல்லாமலேயே சிறப்பாக நடந்து வருகின்றன.

பெட்னா அழைக்கும் பலரால் தானாகவே அமெரிக்கா வந்து செல்லும் பண பலமும் புகழும் உண்டு. ”பாவண்ணன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன் போன்ற இலக்கியவாதிகள் வருவதில்லையே, நாங்களே காசு கொடுத்து பெட்னா மூலமாக வ்ரவழைக்கலாமா?” என்னும் கேள்விகளுக்கு இது வரை பெட்னா தரப்பில் மௌனம் மட்டுமே பதிலாக இருக்கிறது.

நாஞ்சில் நாடன் வந்தபோதும் கூட, “இவ்வளவு தூரம் வந்துட்டீங்க… அப்படியே ஃபெட்னாவிற்கும் எட்டிப் பார்த்திருங்க! உங்களை இரண்டாயிரம் தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எங்களுக்கும் இன்னொரு பேச்சாளர் கிடைச்சா மாதிரி ஆச்சு!” என்பது போன்ற வரவேற்புகள் சகஜம்.

புகழ்பெற்ற கலெக்டரை அழைப்பதை விட அமரிக்கையான குடத்துள் விளக்குகளை கூப்பிடலாம். முதியவர்களை அழைப்பதில் தவறேதுமில்லைதான்; எனினும் மனுஷ்யபுத்திரன் போன்ற இளமையான ஆளுமைகளை பேசச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வருடந்தோறும் விழாவின் மூலமாக ஒன்றேகாலில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்தான் புரளும் நிர்வாகத்தில் தமிழகத்தின் முக்கியமான இளமையான சிந்தனாவாதி ஆளுமைகளையும் அழைத்து வருவார்கள் என்று நினைப்பது அநியாயம்!

அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா?

வட அமெரிக்காவில் பல தமிழ் சங்கங்கள். ஐம்பது மாநிலம் இருந்தால் நூறு சங்கங்களாவது இருக்கும். என்னைப் போல் ஒற்றை நபர் அசோசியசன்களை கணக்கில் கொண்டால், ஆயிரத்தி எழுநூற்றி முப்பத்தியெட்டு தேறும்.

இவர்களை இரு பெரிய சக்திகள் ஒருங்கிணைக்கின்றன.

ஒரு பிரிவினர் அல்லது மையப்புள்ளி சக்தி ஹூஸ்டனில் தமிழ்நாடு ஃபவுண்டேஷனின் மாநாடு நடத்தியது. (தொடர்பான பதிவு: தமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் மாநாடு)

இவர்களை விட பெரும்புள்ளி ஃபெட்னா. வாஷிங்டன் டிசியில் மாநாடு போடுகிறது. ‘அமெரிக்கா’ உதயகுமார் போன்றோருக்கு (தொடர்பான பதிவு: அணு உலைகளை ஏன் ’அமெரிக்கா’ உதயகுமார் எதிர்க்கிறார்?) நிதி திரட்டும் அமைப்பு.

FeTNA என்கிற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழா மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இம்மூன்று நாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள்.

இந்த விழாவிற்கான ஸ்பான்சர்களின் முக்கிய இடத்தை பாரத் மாட்ரிமோனி.காம் இடம் பிடித்திருக்கிறது.

தமிழ் மேட்ரிமொனி, வடமா மேட்ரிமொனி, வாத்திமா மேட்ரிமொனி, பிரகச்சரணம் மேட்ரிமொனி என்று உபதளைங்களை நடத்தும் அமைப்புடன் பெட்னா கூட்டு வைத்திருக்கிறது.

ஆனால், அதன் அமைப்பாளர்களோ, ‘பாய்ஸ்’ திரைப்படத்தைக் கூட பாய்சு என்று மாஞ்சு மாஞ்சு படுத்தித் தமிழ் போடுபவர்கள்.

தமிழ்மாட்ரிமனி.காம் எவ்வாறு சாதி வேற்றுமைகளுக்கும் இனவெறிக்கும், சமயப் பிணக்குகளுக்கும் துணை போகிறது என்பதை இங்கே கேட்கலாம்: Beyond Class Part IV: India – Searching for Your Caste Online

அமெரிக்கா வந்து குடியுரிமை பெற்ற பிறகும் சாதி மேன்மையை தூக்கிப் பிடிக்கும் உபநயனம் போடுவதன் பின்னணி என்ன?

நியூ ஜெர்சியில் இயங்கும் சமயக் கூட்டமைப்புகள் எதற்காக பிராமணீயத்தை தூக்கிப் பிடிக்கிறது?

தமிழ் மேட்ரிமணி.காம் எப்படி சமூகச் சீரழிவிற்கு துணை போகிறது?

என் பி ஆர் ஆராய்கிறது.

இந்த அடுக்கு உனக்கானது. இந்தப் பிரிவை விட்டு நீ முன்னேறக் கூடாது என்று தமிழ் மாட்ரிமொணி.காம் தடுத்து நிறுத்துகிறது. அவர்களுக்கு விளம்பரம் தந்து இடமும் கொடுத்து முகப்பில் இனரீதியாக பிரித்து மதவாரியாக வகைசெய்து அமெரிக்கா வந்தும் சாதிப்பாசத்தை விட்டுத் தராத ஃபெட்னா அமைப்பை பார்த்தால் வருத்தம் கலந்த அதிர்ச்சு வருகிறது.

தமிழ் மேட்ரிமொணி.காம் அடுக்கும் பிரிவுகளையும் அவற்றை எவ்வாறு தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவை முன்னிறுத்துகிறது என்பதன் ஸ்க்ரீன்ஷாட்:

ஃபெட்னாவின் விளம்பரதாரர் சொல்லும் பட்டியல்

Religion – சமயம்

  1. Hindu : இந்து
  2. Muslim – Shia : முஸ்லீம் – ஷியா
  3. Muslim – Sunni : இஸ்லாம் – சுன்னி
  4. Muslim – Others : முஸ்லிம் – பிற
  5. Christian – Catholic : கிறித்துவம் – கத்தோலிக்கம்
  6. Christian – Orthodox : கிறிஸ்துவம் – ஆர்த்தொடாக்ஸ்
  7. Christian – Protestant : கிறிஸ்துவம் – புரோடஸ்டண்ட்
  8. Christian – Others
  9. சீக்கியர் – Sikh
  10. ஜெயினர் – திகம்பரர் – Jain – Digambar
  11. ஜெயின் – ஷ்வேதாம்பர் – Jain – Shwetambar
  12. ஜெயினம் – Jain – Others
  13. பார்சி – Parsi
  14. புத்தம் – Buddhist
  15. Jewish

Caste / Division

ஹிந்து மதம்

ஆதி திராவிடர் – Adi Dravida
அருந்ததியர் – Arunthathiyar
படகர் – Badaga
போயர் – Boyar
பிராமின் குருக்கள் – Brahmin – Gurukkal
பார்ப்பன ஐயங்கார் – Brahmin – Iyengar
பிராமின்ஸ் – ஐயர் : Brahmin – Iyer
அந்தணர் – பிறர் : Brahmin – Others
ஸ்ரீ வைஷ்ணவர் – Chattada Sri Vaishnava
செட்டியார் – Chettiar
தேவேந்திர குல வெள்ளாளர் – Devandra Kula Vellalar
முக்குலத்தோர் – தேவர் – Devar/Thevar/Mukkulathor
கவுண்டர் – Gounder
கிராமணி – Gramani
அர்ச்சக குருக்கள் – Gurukkal – Brahmin
காருணீகர் – Karuneegar
கொங்கு வெள்ளாள கவுண்டர் – Kongu Vellala Gounder
கிருஷ்ணாவகர் – Krishnavaka
குலாலார் – Kulalar
குரவன் – Kuravan
குரம்பர் – Kurumbar
மருத்துவர் – Maruthuvar
மீனவர் – Meenavar
முதலியார் – Mudaliyar
கள்ளர் – Mukkulathor
முத்துராஜர் – Muthuraja
நாடார் – Nadar
நாயக்கர் – Naicker
நாயுடு – Naidu
பண்டாரம் – Pandaram
பார்கவ குலம் – Parkava Kulam
பிள்ளை – Pillai
ரெட்டியார் – Reddy
பிறப்டுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் – SC
பழங்குடியினர் – ST
சேனைத் தலைவர் – Senai Thalaivar
செங்குந்த முதலியார் – Senguntha Mudaliyar
சௌராஷ்டிரர் – Sourashtra
சோழிய வெள்ளாளர் – Sozhiya Vellalar
உரளி கவுண்டர் – Urali Gounder
வள்ளுவன் – Valluvan
வண்ணார் – Vannar
வன்னிய குல ஷத்திரியர் – Vannia Kula Kshatriyar
வீர சைவர் – Veera Saivam
வெள்ளாளர் – Vellalar
வெட்டுவ கௌண்டர் – Vettuva Gounder
விஷ்வகர்மா – Vishwakarma
வொக்கலிகர் – Vokkaliga
யாதவர் – Yadav

இஸ்லாம் மார்க்கம்

Muslim – Ansari
Muslim – Arain
Muslim – Awan
Muslim – Bohra
Muslim – Dekkani
Muslim – Dudekula
Muslim – Hanafi
Muslim – Jat
Muslim – Khoja
Muslim – Lebbai
Muslim – Malik
Muslim – Mapila
Muslim – Maraicar
Muslim – Memon
Muslim – Mughal
Muslim – Others
Muslim – Pathan
Muslim – Qureshi
Muslim – Rajput
Muslim – Rowther
Muslim – Shafi
Muslim – Sheikh
Muslim – Siddiqui
Muslim – Syed

கிறிஸ்துவம்

Christian – Born Again
Christian – Bretheren
Christian – Church of South India
Christian – Evangelist
Christian – Jacobite
Christian – Knanaya
Christian – Knanaya Catholic
Christian – Knanaya Jacobite
Christian – Latin Catholic
Christian – Malankara
Christian – Marthoma
Christian – Others
Christian – Pentacost
Christian – Roman Catholic
Christian – Seventh-day Adventist
Christian – Syrian Catholic
Christian – Syrian Jacobite
Christian – Syrian Orthodox
Christian – Syro Malabar

சீக்கியர்

Sikh – Ahluwalia
Sikh – Arora
Sikh – Bhatia
Sikh – Bhatra
Sikh – Ghumar
Sikh – Intercaste
Sikh – Jat
Sikh – Kamboj
Sikh – Khatri
Sikh – Kshatriya
Sikh – Lubana
Sikh – Majabi
Sikh – Nai
Sikh – Others
Sikh – Rajput
Sikh – Ramdasia
Sikh – Ramgharia
Sikh – Ravidasia
Sikh – Saini
Sikh – Tonk Kshatriya

ஜெயின்

Jain – Agarwal
Jain – Bania
Jain – Intercaste
Jain – Jaiswal
Jain – KVO
Jain – Khandelwal
Jain – Kutchi
Jain – Oswal
Jain – Others
Jain – Porwal
Jain – Unspecified
Jain – Vaishya

அனைத்தும்

Ad Dharmi
Adi Andhra
Adi Dravida
Adi Karnataka
Agarwal
Agnikula Kshatriya
Agri
Ahom
Ambalavasi
Amil  Sindhi
Anavil  Brahmin
Arekatica
Arora
Arunthathiyar
Arya Vysya
Audichya  Brahmin
Ayyaraka
Badaga
Bagdi
Baibhand  Sindhi
Baidya
Baishnab
Baishya
Bajantri
Balija
Banayat Oriya
Banik
Baniya
Baniya – Bania
Baniya – Kumuti
Banjara
Barai
Barendra  Brahmin
Bari
Baria
Barujibi
Besta
Bhandari
Bhanusali  Sindhi
Bhatia
Bhatia  Sindhi
Bhatraju
Bhatt  Brahmin
Bhavasar Kshatriya
Bhoi
Bhovi
Bhumihar  Brahmin
Billava
Bishnoi/Vishnoi
Bondili
Boyar
Brahmbatt
Brahmin – Anavil
Brahmin – Audichya
Brahmin – Barendra
Brahmin – Bhatt
Brahmin – Bhumihar
Brahmin – Daivadnya
Brahmin – Danua
Brahmin – Deshastha
Brahmin – Dhiman
Brahmin – Dravida
Brahmin – Garhwali
Brahmin – Gaur
Brahmin – Goswami/Gosavi
Brahmin – Gujar Gaur
Brahmin – Gurukkal
Brahmin – Halua
Brahmin – Havyaka
Brahmin – Hoysala
Brahmin – Iyengar
Brahmin – Iyer
Brahmin – Jangid
Brahmin – Jhadua
Brahmin – Jyotish
Brahmin – Kanyakubj
Brahmin – Karhade
Brahmin – Khandelwal
Brahmin – Kokanastha
Brahmin – Kota
Brahmin – Kulin
Brahmin – Kumaoni
Brahmin – Madhwa
Brahmin – Maithil
Brahmin – Modh
Brahmin – Mohyal
Brahmin – Nagar
Brahmin – Namboodiri
Brahmin – Narmadiya
Brahmin – Niyogi
Brahmin – Paliwal
Brahmin – Panda
Brahmin – Pandit
Brahmin – Pareek
Brahmin – Pushkarna
Brahmin – Rarhi
Brahmin – Rigvedi
Brahmin – Rudraj
Brahmin – Sakaldwipi
Brahmin – Sanadya
Brahmin – Sanketi
Brahmin – Saraswat
Brahmin – Saryuparin
Brahmin – Shivhalli
Brahmin – Shrimali
Brahmin – Sikhwal
Brahmin – Smartha
Brahmin – Sri Vaishnava
Brahmin – Stanika
Brahmin – Tyagi
Brahmin – Vaidiki
Brahmin – Vaikhanasa
Brahmin – Velanadu
Brahmin – Vyas
Brahmin – Others
Brajastha Maithil
Brajastha Maithil
Bunt (Shetty)
CKP
Chambhar
Chandravanshi Kahar
Chasa
Chattada Sri Vaishnava
Chaudary
Chaurasia
Chennadasar
Chettiar
Chhapru  Sindhi
Chhetri
Chippolu (Mera)
Christian – Born Again
Christian – Bretheren
Christian – Church of South India
Christian – Evangelist
Christian – Jacobite
Christian – Knanaya
Christian – Knanaya Catholic
Christian – Knanaya Jacobite
Christian – Latin Catholic
Christian – Malankara
Christian – Marthoma
Christian – Others
Christian – Pentacost
Christian – Roman Catholic
Christian – Seventh-day Adventist
Christian – Syrian Catholic
Christian – Syrian Jacobite
Christian – Syrian Orthodox
Christian – Syro Malabar
Christian – unspecified
Coorgi
Dadu  Sindhi
Daivadnya  Brahmin
Danua  Brahmin
Darji
Deshastha  Brahmin
Devadiga
Devandra Kula Vellalar
Devang Koshthi
Devanga
Devar/Thevar/Mukkulathor
Dhangar
Dheevara
Dhiman
Dhiman  Brahmin
Dhoba
Dhobi
Dommala
Dravida  Brahmin
Dumal
Dusadh (Paswan)
Ediga
Ezhava
Ezhuthachan
Gabit
Ganda
Gandla
Ganiga
Garhwali
Garhwali  Brahmin
Gatti
Gaur  Brahmin
Gavara
Gawali
Ghisadi
Ghumar
Goala
Goan
Gomantak
Gondhali
Goswami/Gosavi  Brahmin
Goud
Gounder
Gowda
Gramani
Gudia
Gujar  Gaur
Gujjar
Gupta
Guptan
Gurav
Gurjar
Gurukkal  Brahmin
Halba Koshti
Halua  Brahmin
Havyaka  Brahmin
Helava
Hoysala  Brahmin
Hugar (Jeer)
Hyderabadi  Sindhi
Intercaste
Irani
Iyengar  Brahmin
Iyer  Brahmin
Jaalari
Jain – Agarwal
Jain – Bania
Jain – Intercaste
Jain – Jaiswal
Jain – KVO
Jain – Khandelwal
Jain – Kutchi
Jain – Oswal
Jain – Others
Jain – Porwal
Jain – Unspecified
Jain – Vaishya
Jaiswal
Jandra
Jangam
Jangid  Brahmin
Jangra – Brahmin
Jat
Jatav
Jeer
Jetty/Malla
Jhadua  Brahmin
Jogi (Nath)
Kachara
Kadava Patel
Kahar
Kaibarta
Kalal
Kalar
Kalinga
Kalinga Vysya
Kalita
Kalwar
Kamboj
Kamma
Kansari
Kanyakubj  Brahmin
Kapu
Karana
Karhade  Brahmin
Karmakar
Karuneegar
Kasar
Kashyap
Katiya
Kavuthiyya/Ezhavathy
Kayastha
Khandayat
Khandelwal
Kharwa
Kharwar
Khatri
Kirar
Koiri
Kokanastha  Brahmin
Kokanastha Maratha
Koli
Koli Mahadev
Koli Patel
Kongu Vellala Gounder
Konkani
Korama
Kori
Kosthi
Kota  Brahmin
Krishnavaka
Kshatriya
Kudumbi
Kulal
Kulalar
Kulin  Brahmin
Kulita
Kumaoni  Brahmin
Kumawat
Kumbhakar
Kumbhar
Kumhar
Kummari
Kunbi
Kuravan
Kurmi/Kurmi Kshatriya
Kuruba
Kuruhina Shetty
Kurumbar
Kushwaha (Koiri)
Kutchi
Lambadi
Larai  Sindhi
Larkana  Sindhi
Leva patel
Leva patil
Lingayath
Lodhi Rajput
Lohana
Lohana  Sindhi
Lohar
Loniya
Lubana
Madhwa  Brahmin
Madiga
Mahajan
Mahar
Mahendra
Maheshwari
Mahishya
Maithil  Brahmin
Majabi
Mala
Mali
Mallah
Mangalorean
Manipuri
Mapila
Maratha
Maruthuvar
Matang
Mathur
Meena
Meenavar
Mehra
Mera
Meru Darji
Mochi
Modak
Modh  Brahmin
Mogaveera
Mohyal  Brahmin
Mudaliyar
Mudiraj
Mukkulathor
Munnuru Kapu
Muslim – Ansari
Muslim – Arain
Muslim – Awan
Muslim – Bohra
Muslim – Dekkani
Muslim – Dudekula
Muslim – Hanafi
Muslim – Jat
Muslim – Khoja
Muslim – Lebbai
Muslim – Malik
Muslim – Mapila
Muslim – Maraicar
Muslim – Memon
Muslim – Mughal
Muslim – Others
Muslim – Pathan
Muslim – Qureshi
Muslim – Rajput
Muslim – Rowther
Muslim – Shafi
Muslim – Sheikh
Muslim – Siddiqui
Muslim – Syed
Muslim – UnSpecified
Muthuraja
Naagavamsam
Nadar
Nagar  Brahmin
Nagaralu
Nai
Naicker
Naidu
Naik
Naika
Nair
Nambiar
Namboodiri  Brahmin
Namosudra
Napit
Narmadiya  Brahmin
Nath
Nayaka
Neeli
Nepali
Nhavi
Niyogi  Brahmin
Oswal
Otari
Padmasali
Pal
Panchal
Panda  Brahmin
Pandaram
Pandit  Brahmin
Panicker
Parkava Kulam
Parsi
Partraj
Pasi
Paswan
Patel
Pathare Prabhu
Patnaick/Sistakaranam
Patra
Perika
Pillai
Poosala
Porwal
Prajapati
Pushkarna  Brahmin
Raigar
Rajaka
Rajastani
Rajbhar
Rajbonshi
Rajpurohit
Rajput
Ramanandi
Ramdasia
Ramgariah
Ramoshi
Rarhi  Brahmin
Ravidasia
Rawat
Reddy
Relli
Rigvedi  Brahmin
Rohiri  Sindhi
Ror
Rudraj  Brahmin
SC
SKP
ST
Sadgope
Saha
Sahiti  Sindhi
Sahu
Saini
Sakaldwipi  Brahmin
Sakkhar  Sindhi
Saliya
Sanadya  Brahmin
Sanketi  Brahmin
Saraswat  Brahmin
Saryuparin  Brahmin
Savji
Sehwani  Sindhi
Senai Thalaivar
Senguntha Mudaliyar
Settibalija
Shetty
Shikarpuri  Sindhi
Shimpi
Shivhalli  Brahmin
Shrimali  Brahmin
Sikh – Ahluwalia
Sikh – Arora
Sikh – Bhatia
Sikh – Bhatra
Sikh – Ghumar
Sikh – Intercaste
Sikh – Jat
Sikh – Kamboj
Sikh – Khatri
Sikh – Kshatriya
Sikh – Lubana
Sikh – Majabi
Sikh – Nai
Sikh – Others
Sikh – Rajput
Sikh – Ramdasia
Sikh – Ramgharia
Sikh – Ravidasia
Sikh – Saini
Sikh – Tonk Kshatriya
Sikh – Unspecified
Sikhwal  Brahmin
Sindhi
Sindhi-Amil
Sindhi-Baibhand
Sindhi-Bhanusali
Sindhi-Bhatia
Sindhi-Chhapru
Sindhi-Dadu
Sindhi-Hyderabadi
Sindhi-Larai
Sindhi-Larkana
Sindhi-Lohana
Sindhi-Rohiri
Sindhi-Sahiti
Sindhi-Sakkhar
Sindhi-Sehwani
Sindhi-Shikarpuri
Sindhi-Thatai
Smartha  Brahmin
Sonar
Soni
Sourashtra
Sozhiya Vellalar
Sri  Vaishnava
Srisayana
Stanika  Brahmin
Sugali (Naika)
Sunari
Sundhi
Surya Balija
Suthar
Swakula Sali
Tamboli
Tanti
Tantubai
Telaga
Teli
Thakkar
Thakore
Thakur
Thatai  Sindhi
Thigala
Thiyya
Tili
Togata
Tonk Kshatriya
Turupu Kapu
Tyagi  Brahmin
Uppara
Urali Gounder
Urs
Vada Balija
Vaddera
Vaidiki  Brahmin
Vaikhanasa  Brahmin
Vaish
Vaishnav
Vaishnava
Vaishya
Vaishya Vani
Valluvan
Valmiki
Vania
Vanika Vyshya
Vaniya
Vanjara
Vanjari
Vankar
Vannar
Vannia Kula Kshatriyar
Variar
Varshney
Veera Saivam
Velaan
Velama
Velanadu  Brahmin
Vellalar
Veluthedathu Nair
Vettuva Gounder
Vilakkithala Nair
Vishwakarma
Viswabrahmin
Vokkaliga
Vyas  Brahmin
Vysya
Yadav
Yellapu

செல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து

இணையத்தில் கண்டது:

அ) Mohamed Hashmath  –  Yesterday 11:35 AM (edited Yesterday 11:36 AM)

ஆ) செல்ஃபோனில் காதலித்துப்பார்

உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும்
உலகம் உன்னையே பார்க்கும்
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும்
உனக்கும் வறுமை வரும்
கடன்கள் அதிகமாகும்
ரீலோட் கடைக்காரன் கடவுளாவான்
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும்
காதிரண்டும் செவிடாகும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

குப்பை மேட்டில் நின்று கதைப்பாய்
பல நாட்கள் குளிக்கமாட்டாய்
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய்
வந்துவிட்டாள் வருசங்கள் நிமிசமென்பாய்.
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரனாய்ப் பார்க்கும்
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய்
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன்போல் நடந்து திரிவாய்
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரிலோட் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.
செல் ஃபோனில் காதலித்துப்பார்

உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும்
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் மிஸ்ட் காள் மட்டும் தெளிவாய்க் கேட்கும்
உன் ஃபோனே பெட்ரி டவுன்னாகி
உனக்கு ஆப்படிக்கும்
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும்
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்.
Missed Call வராவிட்டாள் பைத்தியம் பிடிக்கும்
Missed Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்.
செல் போனில் காதலித்துப்பார்

கடன்களை வாங்கி வாங்கியே ரீலோட் பண்ண உன்னால் முடியுமா?
Out Goingஉம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா
சபையிலே மெதுவாகவும்
தனிமையிலே உருகி உருகியும் பேச
உன்னால் ஆகணுமா
ஃபோன் சூடாகவேண்டுமா
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும்
பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா
தொலைபேசியில் காதலித்துப்பார்

ஏர்டெல் (சிம்) கொம்பனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும்
Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும்
டயலொக் சிம்முக்கும்
மொபிடெல் சிம்முக்கும்
கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும்
கழிவறையில் உற்காந்து கொண்டு பேசவும் முடியுமே
கட்டாந்தறையில் படுத்துக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும்
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும்
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும்
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும்
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ள் பண்ணாமல் விட்டாலும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
நீ பிச்சைக்காரனாவாய் இல்லை கடன்காரனாவாய்

இரண்டில் ஒன்று
உனக்கு நிச்சயம்
செல்ஃபோனில் காதலித்துப்பார்..

அசல்

கவிப்பேரரசு வைரமுத்து – காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம் விளங்கும்….
உனக்கும் கவிதை வரும்…
கையெழுத்து அழகாகும்…..
தபால்காரன் தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்…
காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்…
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்…
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்…
காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்…
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்…
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்…
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்…
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்…
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்…
ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்…
தாகங்கள் சமுத்திரமாகும்…
பிறகு
கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்…
காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே…
அதற்காகவேனும்…
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…
காதலித்துப் பார்!

ஆ இரா வேங்கடாசலபதி – பயோ டேட்டா

நன்றி: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் – Madras Institute of Development Studies

கல்வி/படிப்பு

  1. பி. காம். – சென்னை பல்கலை, 1987
  2. எம் ஏ (சரித்திரம்), மதுரை காமராஜர், 1989
  3. பிஎச்டி (வரலாறு), ஜவஹர்லால் நேரு, புது தில்லி, 1995

ஆராய்ச்சித் துறை

  • Social History
  • Cultural History
  • Intellectual History
  • Literary Historiography – இலக்கிய வராலாற்றியல்
  • Social and Cultural Change – சமூக மற்றும் கலாச்சார மாற்றம்

Visiting Faculty, Fellowships and Awards

  1. April-July 2006, Charles Wallace Visiting Fellow, Center of South Asian Studies, University of Cambridge
  2. February-March 2005, UPE Visiting Fellow, University of Hyderabad.
  3. Fall Quarter 1999, Visiting Assistant Professor, Department of South Asian Languages and Civilizations, University of Chicago.
  4. December 1997-January 1998, Visiting Fellow, Indo-French Cultural Exchange Programme, Maison des Sciences de l’Homme, Paris.
  5. October 1996, Visiting Fellow, Maison des Sciences de l’Homme, Paris.
  6. September-October 1996, Research Grant,Charles Wallace India Trust, U.K.
  7. August 1992-January 1994, Junior Research Fellowship,Indian Council of Historical Research, New Delhi.
  8. 1999, Bursary to complete a manuscript on popular literature in Tamil, V.S. Sethuraman Centre for Culture Studies.

வேலை/அனுபவம்:

  1. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் – Madras Institute of Development Studies, Chennai (from June 2001)
  2. Department of Indian History, University of Madras, Chennai (from December 2000 – May 2001)
  3. வரலாற்றுத்துறை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை, திருநெல்வேலி, April 1995- December 2000

புத்தகங்கள் (ஆங்கிலம்) :: Books (English)

  1. 2006 (ed.) A.K. Chettiar, In the Tracks of the Mahatma: The Making of a Documentary, Orient Longman, Hyderabad.
  2. 2006 In Those Days There Was No Coffee: Writings in Cultural History (New Perspectives on Indian Pasts, Series Editor: Saurabh Dube), Yoda Press, New Delhi.
  3. 2006 (ed.) Chennai, Not Madras: Perspectives on the City, Marg, Mumbai.
  4. 2003 (trans.) Sundara Ramaswamy, J.J.: Some Jottings, Katha, New Delhi.

புத்தகங்கள் (தமிழ்) :: Books (Tamil)

  1. 2006 (ed.) புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்third volume of the chronological and variorum edition of the complete works of Pudumaippithan), Nagercoil.
  2. 2005 (trans.) துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் – பாப்லோ நெருதா :: (Tamil Translation of Pablo Neruda), காலச்சுவடு.
  3. 2004 (ed.), பாரதியின் ‘விஜயா’ கட்டுரைகள் – காலச்சுவடு.
  4. 2004 முச்சந்தி இலக்கியம் (Popular Literature in Colonial Tamilnadu), Nagercoil.
  5. 2004 முல்லை – ஓர் அறிமுகம், Mullai Pathippagam, Chennai.
  6. 2003 (ed.), ஏகே செட்டியார் – அண்ணல் அடிச்சுவட்டில் (The making of the documentary, Mahathma Gandi), Kalachuvadu Pathippagam, Nagercoil.
  7. 2002b நாவலும் வாசிப்பும் – ஒரு வரலாற்றுப் பார்வை(Early Novels and Reading Practices: A Historical View), Nagercoil (second edition 2003).
  8. 2002a (ed.) புதுமைப்பித்தன் கட்டுரைகள் (second volume of chronological and variorum edition of the complete works of Puthuumaippithan), Nagercoil (second edition 2003).
  9. 2000b அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள் (collection of research papers on Tamil cultural history), Nagercoil (second edition 2001).
  10. 2000a (ed.) புதுமைப்பித்தன் கதைகள் (first volume of chronological and variorum edition of the complete works of Pudhumai piththan), Nagercoil (third revised edition 2002).

பத்தி/கட்டுரை/ஆய்வு வெளியீடு/Translations

  1. 2007 ‘Exaggerated Obituaries: The Tamil Book in the Age of Electronic Reproduction’, in Nalini Rajan (ed.), Digital Culture Unplugged: Probing the Native Cyborg’s Multiple Locations, Routledge, London, New York & New Delhi, 2007.
  2. 2006 ‘Madras Manade: How Chennai remained with Tamilnadu’, in A.R.Venkatachalapathy (ed.), Chennai, Not Madras: Perspectives on the City, Marg, Mumbai.
  3. 2005d ‘Andha Kalathil Kapi Illai: Tamilagathe Kapiyude Samskariga Charithiram’, Pachakuthira, August (Malayalam translation of 2002c)
  4. 2005c ‘Enna Prayocanam: Constructing the Canon in Colonial Tamilnadu’. Indian Economic and Social History Review, 42(4), October-December, special number on Language, Genre and Historical Imagination in South India.
  5. 2005b ‘Review symposium: Literary Cultures in History’, Indian Economic and Social History Review, 42(3)
  6. 2005a ‘Drinking Coffee: Contending with Modernity in Late Colonial Tamilnadu’ in Satish Poduval (ed.), Re-figuring Culture: History, Theory and the Aesthetic in Contemporary India, Sahitya Akademi, New Delhi.
  7. 2004c ‘Triumph of Tobacco: The Tamil Experience’, in Jean-Luc Chevillard, Eva Wilden (eds.), South-Indian Horizons: Felicitation Volume for Francois Gros, Institut Francais de Pondichery & Ecole Francaise d’Extreme-Orient, Pondicherry.
  8. 2004b ‘In Those Days There was no Coffee: Coffee-Drinking and Middle-Class Culture in Late Colonial Tamilnadu,’ in Sanjay Subrahmanyam, Land, Politics and Trade in South Asia, Oxford University Press (reprint of 2002c).
  9. 2004a ‘Street Smart in Chennai: The City in Popular Imagination’, in C.S. Lakshmi (ed.), The Unhurried City: Writings on Madras, Penguin.
  10. 2003c ‘Caricaturing the Political: A Brief History of the Cartoon in Tamil Journalism’, Art India, 8(4), Quarter 4.
  11. 2003b ‘In Print, On the Net: Tamil Literary Canon(s) in the Colonial and Post Colonial Worlds’, in Sumit Gupta, Tapan Basu (eds.), Globalisation, Conflict and Identity, Nehru Memorial Museum and Library, New Delhi.
  12. 2002c ‘In Those Days There was no Coffee: Coffee-Drinking and Middle-Class Culture in Late Colonial Tamilnadu,’ Indian Economic and Social History Review, 39(2-3), Dharma Kumar Memorial Volume.
  13. 2002b ‘Coining Words: Politics and Language in Late Colonial Tamilnadu’ in Vasant Kaiwar & Sucheta Mazumdar (eds.), Antinomies of Modernity: Essays on Race, Orient, Nation, Duke University Press
  14. 2002a ‘Fiction and the Tamil Reading Public’, in Meenakshi Mukherjee (ed.), Early Novels in India, Sahitya Akademi, New Delhi.

தற்போதைய ஆய்வு & ஆர்வம்/Current Research Work

  • Indo-Danish Interaction in the 18th century with special reference to Print (in collaboration with the National Museum of Denmark)
  • Studies in the social history of the Dravidian movement.
  • The making of middle-class culture in colonial Tamilnadu.
  • Tamilnadu: Academic Perspectives from Without
  • A multi-volume biography of and documentation on V.O.Chidambaram Pillai (1872-1936).
  • Editing the collected works of Pudumaippithan (thus far three volumes published; three more are under preparation).

அங்காடித் தெரு, பார்ப்பனீயம், சாதி, பெண்ணியம் – திருமலை ராஜன்

தொடர்புள்ள செய்தி:

:: By NILANJANA S. ROY (NYT) – In India, thousands of women are participating in movements against the abuse of women in public spaces.
முந்தைய இடுகை :: ஜாதி: தேவையா? வேண்டாமா?

முதலில் அங்காடித் தெரு சினிமாவில் நீங்கள் வைத்திருந்த பிராமணப் பெண்ணின் பாத்திரம் உங்கள் கதைப் படி, கதையின் வலுவிற்குத் தேவையான ஒரு பாத்திரம் என்பதையும் அந்தப் பெண்மணியின் மூலமாகவே நீங்கள் மாத விலக்கைத் தீட்டாகவும் அதே நேரத்தில் புனிதமாகவும் கருதும் இந்து மதத்தின் இரு வேறு எல்லைகளை விளக்குவதற்கும் அதன் மூலம் சேர்மக்கனி பெறும் மன தைரியத்தை விளக்குவதற்கும் அந்தப் பாத்திரத்தை நீங்கள் படைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயம் உங்களது பாத்திரப் படைப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் மாட்டேன். அதன் நோக்கம் பற்றி நன்கு அறிந்தவன். மேலும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் மட்டுமே அந்தக் காட்சிக்கு யதார்த்தமும், நிஜத்தன்மையும் கிட்டும் என்பதற்காக நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நிச்சயமாக நீங்கள் பிராமணர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் அந்தப் பாத்திரத்தை வைக்கவில்லை என்பதை நன்கு அறிவேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஒரு காட்சிக்கு அதன் களனும், அந்தப் பாத்திரங்களின் நம்பகத்தன்மையும், களனின் யதார்த்தமும், ஏன் பாத்திரங்கள் கையாளும் மொழியும் கூட முக்கியமானவை என்பதை மலையாளப் படங்களையும், பிற முக்கியமான உலகப் படங்களையும் தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் இந்தக் காட்சிக்கு நீங்கள் பயன் படுத்தியிருக்கும் பாத்திரத்தின் ஜாதியின் முக்கியத்துவம் குறித்தும் நான் வேறு எவரையும் விட மிக நன்றாகவே அறிவேன்.

நம்பூதிரிகளைக் காட்டாமல் ஒரு பரிணயம் எடுக்கவியலாது. மீனவர்களைக் காட்டாமல் ஒரு செம்மீன் சாத்தியமேயில்லை. கம்னியுஸ்டுகளைக் காட்டாமல் ஒரு அரபிக் கதாவை எடுத்திருக்க முடியாது. நாயர்களைச் சொல்லாமல் ஈழவர்களைச் சொல்லாமல் பெரும்பாலான மலையாளப் படங்களை எடுத்திருக்கவே முடியாது. முஸ்லீம்களைச் சொல்லாமல் ஒரு மிழிகள் சாட்சி எடுத்திருக்க முடியாது. கிறிஸ்துவர்களைக் காண்பிக்காமல் ஒரு அச்சன் உறங்காத வீட்டையோ, ஒரு சின்சையோ தொட்டிருக்கக் கூட முடியாது.

ஆகவே ஒரு படைப்பில் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நாவலாக இருந்தாலும் சரி அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அதைச் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச் சொல்லாமல் மழுப்பினால் அது மணிரத்தினத்தின“இருவர்” சினிமா போல ஒரு வெளிறிப் போன ஒரு அபத்தமான படைப்பாகவே போய் முடியும். அந்தப் படைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாகி அந்தப் படைப்பே கேலிக்குரியதாகி விடும். ஆகவே ஒரு படத்திலோ ஒரு நாவலிலோ ஒரு ஜாதியோ, ஒரு கட்சியோ, ஒரு இனமோ, ஒரு மதமோ சொல்ல வேண்டிய தேவை அந்தக் கதைக்கு இருப்பின் அதைத் தயங்காமல் சொன்னால் மட்டுமே ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் ஆட்சேபணையும் கிடையாது.

அதே அடிப்படையில் எனக்கும் அங்காடித் தெரு படத்தில் நீங்கள் படைத்திருக்கும் பாத்திரங்களில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை நான் நிச்சயமாகத் தயங்காமல் சொல்வேன். அப்படி எவ்வித சந்தேகமும் இருந்திருப்பின் மிக நீண்ட இரு பெரும் பதிவுகளை அந்தப் படம் குறித்து

http://solvanam.com/?p=7588
http://solvanam.com/?p=7575

நான் சொல்வனத்தில் எழுதியே இருக்க மாட்டேன்.

இரண்டாவதாக நான் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் என்னை நிறுத்திக் கொண்டு இங்கே எழுதவில்லை. முதலில் அப்படி நிறுத்திக் கொள்ளும் தகுதி எனக்குக் கிடையாது. அப்படியே நான் நிறுத்திக் கொள்ள முயன்றாலும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்னைக் கல்லால் அடித்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆகவே அந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டியதில்லை. நான் இங்கு என் சார்பாக மட்டுமே என் அனுபவத்தின் அடிப்படையில் விளைந்த சில கருத்துக்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேனே அன்றி நான் யாரையும் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் பேசவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

வேறு எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் ஒரு ஒற்றுமையான பிரதிநிதி இருந்து விட முடியும் ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அந்த ஒற்றுமை உணர்வு சாத்தியமே இல்லை என்பது என் தீர்மானமான எண்ணம். அங்கு ஒரே ஒருவர் மட்டும் மிச்சம் இருந்தால் கூட நிச்சயம் இரண்டு விதமான கருத்து அந்த ஒருவரிடமிருந்தே கிளம்பும் அவ்வளவு ஒற்றுமையுள்ள சமூகம் அது. ஆகவே நான் எனக்காக மட்டுமே இங்கு பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன்.

ஆனால் ஒருவர் ஒரு குழுவிற்காக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாமியத் தீவீரவாதத்தால் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப் படும் எந்தவொரு ஹிந்துவும் ஹிந்துக்கள் சார்பாகப் பேசினால் அதை நாம் தவறாக கருத முடியாது என்பதே என் எண்ணம்.

இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது ஆனால் அதே வேளையில் கடும் ஏழ்மைச் சூழலில் வாழும் இந்து மாணவனுக்கு அது கிடையாது என்னும் பொழுது அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக அந்த ஏழை இந்து மாணவன் மதம் மாற வாய்ப்புகள் உண்டு.

ஆக அரசாங்கமே மதமாறத்தை ஊக்குவிக்கிறது என்ற அநியாயத்தைக் கருதி ஒரு இந்துவாக நான் குரல் கொடுத்தால் நிச்சயமாக அதை ஒரு குழுவின் பிரதிநிதியாக என்னைக் கருதிக் கொள்கிறேன் என்று நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிச் சொன்னால் அது தவறு. ஆக ஒரு சில இடங்களில் பிரதிநித்த்துவக் குரல்கள் ஒலிப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்

இந்த இரண்டு சுய விளக்கங்களுடன் என் கருத்துக்களை வைக்கிறேன்.

முதலில் தமிழ் சினிமக்களில் பிராமண ஜாதி பாத்திரங்கள் இழிவாகக் காண்பிக்கப் படுவது குறித்து சில கருத்துக்கள்.

தமிழ் சினிமா, இலக்கிய, கலைச் சூழலில் இன்று நீங்கள் எந்த ஜாதியையும், எந்த கட்சியையும் குறை கூறும் வகையில் சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பிராமணர்கள் மட்டுமே. பிராமணர்களை சினிமாக்களில் இழிவாகவும், கேலிக்குரியவர்களாகவும், ஆபாசமாகவும் காண்பிக்கப் படுவது எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பல வருடங்களகாகத் தமிழ் நாட்டில் தொடர்ந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர்களே பிராமண சினிமாக்காரர்கள் தான் என்பதையும் சொல்ல வேண்டும்.

சூர்யா போன்ற இயக்குனர்கள் பிராமணப் பெண்களைக் காட்டும் விதம் போல் வேறு எந்த விதப் பெண்களையும் பெயர் சொல்லிக் காண்பித்து விட முடியாது. சினிமாக்களில் மட்டும் அல்ல பத்திரிகைகள், இணைய தளங்கள், ப்ளாகுகள் ஆகிய இடங்களிலும் கூட இந்த ஆபாசம் தொடர்கிறது. அதற்கு எந்த விதமான நியாயத்தையும் சொல்லி விட முடியாது. ஒரே காரணம் அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். எதிர்த்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதற்கான ஒற்றுமை இல்லாதவர்கள்.

ஏற்கனவே தமிழக அரசியலில் அவர்கள் கொடுமையானவர்களாகவும் ஆதிக்க ஜாதியினர்களாகவும் பெரும் வில்லன்களாகச் சித்தரிக்கப் பட்டவர்கள். ஆகவே அவர்களை எப்படி சித்தரித்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க்க மாட்டார்கள், அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அவர்களை அடித்து விரட்டி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இவ்வித சித்தரிப்புக்களுக்குக் காரணம். இதையே நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொல்லியிருந்திருப்பேன்.

ஒரு ஜாதியினரை ஒரு கதையின் நம்பகத்தன்மை கருதி காண்பிக்கக் கூடாதா என்றால் அதற்குப் எனது பதில் தாராளமாக காண்பிக்கலாம் காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக அந்த வித யதார்த்த நோக்கம் கருதி பிராமணர்கள் காண்பிக்கப் படுவதில்லை. அவர்களது உடை, தோற்றம், மொழி ஆகியவற்றைக் கேலி செய்யும் நோக்கிலும் பெண்களை விரக் தாபத்தில் அலையும் பெண்களாகச் சித்தரிக்கும் நோக்கிலும் மட்டுமே அந்த ஜாதியினர் காண்பிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழ் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் எவரும் அறிவர்.

இதனால் உனக்கு என்ன? நீ ஏன் அவர்களது பிரதிநிதியாக வருகிறாய் ? என்று நீங்கள் கேட்க்கலாம்.

நான் யாருடைய பிரதிநிதியாகவும் இங்கு வரவில்லை. நான் என்னுடைய பிரதிநிதியாக மட்டுமே இங்கு பேசுகிறேன்.

ஒரு பிராமணப் பெண்ணை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் விரக தாபம் மிக்க பெண்களாக சித்தரிப்பதன் மூலம் அந்த ஜாதிப் பெண்கள் தெருவில் வரும் பொழுது அவர்களைக் காணும் எந்தவொரு விடலைப் பையன்கள் மனதிலும், எந்தவொரு பொறுக்கியின் மனதிலும், எந்தவொரு லும்பன்களின் மனதிலும் அவர்களை கேலிப் பொருளாக எளிதில் வக்கிரமாகக் கைக்கொள்ளும் மனோநிலையே ஏற்படும். இதில் படிதவர்களுக்கும் தெருவில் சுற்றும் ரவுடிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லை.

அதனால்தான் அமெரிக்காவில் பி எச் டி செய்யும் பொறுக்கிகள் கூட இணையத்தில் பாட மறுக்கும் பாப்ப்பாத்திகள் என்று எளிதாக எழுதி விட்டு முற்போக்குப் பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடிகிறது.

சினிமாக்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெருமுனை தி க, தி மு க, தனித் தமிழ் கூட்டங்களிலும் இதே விதமான வக்கிரப் பிரச்சாரமே தமிழ் நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக அவிழ்ந்த்து விடப் பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது பிராமணப் பெண்களும் ஆண்களும் தெருவில் செல்லும் பொழுது ஏற்படுத்தப் படும் அவமானகரமான செயல்பாடுகளுக்கு இந்த விதமான சினிமாக்களே பொறுப்பாகின்றன. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தமிழ் இணைய ப்ளாகுகளையும் அதில் வெளியிடப் படும் பின்னூட்டங்களையும் ஒரு நாள் உலாவிப் பார்த்தாலே புரிந்து விடும்.

பிராமணப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கடுமையான கேலிக்கும் தாக்குதலும் அடிக்கடி உள்ளாகின்றனர். ஆவணி அவிட்டம் என்ற பிராமணர்களின் பூணூல் அணியும் சடங்கு முடிந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் தாக்கப் படுவதும் ஆபாசமாகக் கிண்டல் செய்யப் படுவதும் இன்றும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் நடை பெறுகின்ற ஒரு காட்சியே. ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்து வரும் பொழுது செய்யப் படாத ஒரு கிண்டல், ஒரு முஸ்லீம் குல்லா போட்டு வரும் பொழுது, மீசையை மழித்து விட்டுத் தாடி மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது செய்யப் படாத ஒரு கேலி, ஒரு சர்தார் தாடி வைத்து, டர்பன் வைத்துக் கொண்டு போகும் பொழுது செய்யப் படாத அவமானம், ஒரு பாதிரியார் பாவாடை அணிந்து கொண்டு போகும் பொழுது செய்யப் படாத ஒரு ஏளனம், ஒரு பிராமணப் பெண் மடிசார் கட்டிக் கொண்டு போகும் பொழுதும், ஒரு பிராமணப் புரோகிதர் குடுமி வைத்துக் கொண்டு செல்லும் பொழுதும், ஒரு பிராமணர் பூணூல் அணிந்து கொண்டு போகும் பொழுது மட்டுமே செய்யப் படுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டின் இன வெறுப்பு அரசியல் மற்றும் ஆபாச சினிமாக்கள் இரண்டுமே காரணம் என்று நான் சொல்கிறேன்.

இதை நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் என் மனைவியோ, அம்மாவோ, அப்பாவோ, மகளோ செல்லப் படும் பொழுதும் இதே அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் சுயநலம் கருதி நான் இவற்றைக் கடுமையாக எதிர்க்கிறேன். கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

இதனால் பாதிக்கப் படாத இந்த நிலைகளையெல்லாம் அறிய நேராத நீங்களோ வேறு எவருமோ இதையெல்லாம் வெற்றுப் புலம்பல் என்று கருதி மிக எளிதாக இடது கையால் ஒதுக்கி விட்டுப் போய் விடலாம் அல்லது ஒரு குழுவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொண்டு அநாவசியமாகப் புலம்புகிறான் என்று மிக எளிதாக ஒதுக்கி விடலாம். உண்மை அதுவல்ல இன்றும் இவை போன்ற அவமானத் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்குப் பெரும் அளவில் நம் அரசியல் கட்சிகளும், ஆதிக்க ஜாதியினரின் பழியைப் பிறரிடம் தள்ளி விடும் போக்கும், சினிமாக்களுமே காரணம் என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்களினால் நான் சொந்த வாழ்வில் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப் படும் பொழுதும் அவ்வாறு பாதிக்கப் படும் சாத்தியம் இருக்கும் பொழுதும் அதற்கான காரணங்களை ஒது தனிப்பட்ட ஒரு அநாதயான குரலாகவேனும் ஒரு சிறிய பலவீனமான எதிர்ப்பையாவது பதிய முயல்கிறேன்.

இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்.

மேலும் ஒரு கமலஹாசனின் குடும்பப் பெண்களோ, ஒரு பாலச்சந்தரின் குடும்பப் பெண்களோ டவுண் பஸ்ஸில், தாம்பரம் பீச் ட்ரெயினில் செல்பவர்கள் அல்லர், ரேஷன் அரிசிக்காக க்யூவில் நிற்கும் பிராமணர்கள் அல்லர், தனியார் வேலைக்குச் செல்பவர்கள் அல்லர். ஆகவே அவர்களுக்கு இது குறித்து எவ்விதக் கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி விட்டார் என்று சொன்னால் அவர்களுக்கு முற்போக்கு பட்டம் கிட்டும் அவர்களின் ஜாதி அடையாளத்தை மறைக்க உதவும் அதனால் அதை வேகமாகச் செய்வார்கள்.

ஆகவே பாதிக்கப் படுபவர்கள் மட்டுமே இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும். நான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். சிறு வயதில் நான் அனுபவதித்த ஒரு கொடூரமான தாக்குதலின் பயங்கரத்தில் இருந்து இன்றும் மீள முடியாத கடுமையான கசப்பில் உழல்பவன் என்ற முறையில் இவை போன்ற சினிமாக்களை ஒரு தனி மனிதனாக கண்டித்தால் அது தவறு ஏதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

சினிமாவில் பிராமணப் பெண் அலைவதாகக் கவர்ச்சி மதிப்பு கருதி மட்டும் காண்பிக்கப் படும் பொழுது அதைப் பார்க்கும் ரோட்டில் அலையும் ரவுடிக்கு அவன் காணும் பிராமணப் பெண்களின் இடுப்பைக் கிள்ளச் சொல்லும் தைரியத்தை அளிக்கிறது. சினிமாவில் குடுமி வைத்த ஒரு புரோகிதர் இழிவு செய்யப் படும் பொழுது ரோட்டில் அதே போலச் செய்யும் ஒரு புரோகிதர் அசிங்கமாக ஏசப் படுகிறார் சமயங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். இவையெல்லாம் நடக்கின்றன, நானே கண்டிருக்கிறேன். உங்கள் சூழலில் நடக்கவில்லை என்பதினால் இப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள்.

ஏன் தமிழ் நாட்டில் தலித்துக்கள் அவமானப் படுத்தப் படுவதில்லையா, கொடுமைக்குள்ளாவதில்லையா நீ அவமானப் பட்டால் என்ன உன் முன்னோர் செய்த பாவத்திற்கு நீ கொடுக்கும் விலை இது என்பது அடுத்த பதிலாக வரும். நிச்சயமாக ஒடு தலித் படும் வேதனைக்கும் அவமானத்திற்கும் வேறு எந்த அவமானமும் ஈடு இணையாகாது. ஆனால் அவர்களை சினிமாவில் அப்படிச் சித்தரிக்க யாரும் துணிவதில்லை.

கட்சி மேடைகளில் யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் அவமானம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரால் உண்டாக்கப் படுவது மட்டுமேயன்றி சினிமாக்கள் காரணமாக இருப்பதில்லை.

எனக்கு ஜெயமோகனைத் தெரியும், ஒரு சினிமாவிலோ ஒரு படைப்பிலோ தேவை கருதி ஒரு ஜாதியோ ஒரு இனமோ, ஒரு மதமோ ஒரு கட்சியோ சித்தரிக்கப் பட வேண்டுமானால் அதன் அவசியம் குறித்து நன்கு தெரியும். ஆகவே அங்காடித் தெருவில் நீங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி அந்தக் கதையின் நம்பகத்தன்மைக்காகவும், அதன் நிஜத்தன்மைக்காகவும் மட்டுமே அந்தக் காட்சியை வைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்கு தெரியும்.

ஆனால் உங்களை அறியாத உங்கள் எழுத்துக்களைப் படித்தறியாத, உங்கள் நோக்கங்களை அறிந்திராத, தமிழ் சினிமாவில் வழக்கமாக பிராமணர்கள் சித்தரிக்கப் படுவதைக் கண்டு வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட அதனால் பாதிக்கப் பட்ட ஒரு சராசரி பிராமணப் பெண்ணோ ஆணோ, அப்படிச் செய்யும் சினிமாக்காரர்களையும் உங்களையும், வசந்த பாலனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவே செய்வார்கள். அது புரியாமல் உங்களைப் பற்றி அறியாமல் செய்யும் ஒரு செயலாகவே நான் கருதுவேன்.

அடுத்து அடையாளம் குறித்து. எனக்கு அடையாளங்கள் ஏதும் கிடையாது. எனக்கு அடையாளங்களின் அவசியமும் தேவையும் கிடையாது. எந்த பிராமணர்களிடத்தும் போய் எதற்காகவும் கெஞ்சி நின்றதும் கிடையாது. ஜாதி என்பது உறவுகளைப் பேணவும் உணவு, சடங்குகள் போன்ற ஒரு சில கலாச்சார அடையாளங்களை தொடர்வதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டால் கஷ்டப் படுவதற்கு உதவுவதற்காகவும் வேண்டுமானால் ஜாதிகள் தேவைப் படுமே ஒழிய அவற்றை மீறி அதன் தேவைகள் ஏதும் இல்லை என்ற கொள்கைகள் உடையவன்.

மேலும் ஒருவர் எந்த ஜாதியில் பிறந்தாலும் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் யாருக்கும் உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது என்ற நம்பிக்கையும் உடையவன். ஆனாலும் நான் பிறந்த குழுவின் அடிப்படையில் என் மீது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அடையளங்கள் திணிக்கப் படுகின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியாது, நீ இந்த ஜாதி ஆகவே இப்படித்தான் நடந்து கொள்வாய் என்ற தெளிவான முன் தீர்மானங்கள் கொண்டே இன்று தமிழ் நாட்டில் எவரும் அணுகப் படுகிறார்கள்.

ஆகவே என் மீது திணிக்கப் படும் ஜாதி சார்ந்த அடையாளங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஜாதியின் அடையாளமாக நான் இதைச் சொல்லாமல் தனிப்பட்ட அளவில் பாதிக்கப் பட்ட பாதிக்கப் படும் வாய்ப்புள்ளவன் என்ற அளவில் மட்டுமே நான் இதை அணுகுகிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

அங்காடித் தெருவில் அந்த பிராமணர் பாத்திரம் குறித்தும் பக்தியுள்ள இந்துக்கள் வில்லன்களாக காண்பிக்கப் படுவதும் குறித்தும் நீங்கள் உள்நோக்கம் கருதி அவற்றை வைக்காவிட்டாலும் கூட வக்கிரம் புரையோடிப் போன நம் தமிழ் சூழலில் அவை எவ்வாறு புரிந்து கொள்ளப் படும் என்ற என் அச்சத்தை எனது அங்காடித் தெருவின் சமூகப் பார்வை என்ற கட்டுரையில்

http://solvanam.com/?p=7588

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். குறை உங்களிடம் இல்லை நம் பார்வையாளர்களிடம் உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு பிராமணப் பெண்ணை அப்படிச் சித்தரிப்பதினால் எல்லா பிராமணப் -பெண்களுமே அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த ஜாதியையும் சொல்ல வரவில்லை என்பதை ரப்பர் படித்த, பி தொ நி குரல் படித்த, காடு படித்த, அனைத்து கட்டுரைகளையும் படித்த, ஜெயமோகனுடன் நெருங்கிப் பழகி நேரில் அறிந்த நான் நன்கு அறிவேன். அதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் கிடையாது.

ஆனால் இதை அறியாத பொதுவாகவே கடந்த அறுபது எழுபது வருடங்களாக தமிழ் நாட்டில் நிலவி வரும் கடுமையான பிராமணக் காழ்ப்புச் சூழலில் வளர்ந்த பிராமணர்கள் என்றாலே கொடூரமான வெறியர்கள் என்று சொல்லி வளர்க்கப் பட்ட தமிழர்களில் பலருக்கும் இந்தக் காட்சி பிராமணர்களை கடுமையாக வெறுக்க மற்றும் ஒரு காரணத்தைக் கற்றுக் கொடுக்கும் அது போன்ற குரோத மனப்பான்மைக்கு தூபம் போடும்.

இது சினிமாவில் அதை வைத்த உங்கள் நோக்கம் வேறு ஆனால் அது பெரும்பான்மை தமிழர்களிடம் ஏற்படுத்தும் விளைவு வேறு. நீங்கள் அறியாமலேயே விளைவது அந்தக் குரோதம். இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான்.

ஆனால் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஆகவேதான் தமிழ் சினிமாக்களில் ஜாதிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இங்கு நிலவும் சூழலில் ஒரு கட்சியையோ, ஜாதியையோ, தலைவர்களையோ படைப்பின் யதார்த்தம் கருதி கூட அப்படியே காண்பித்து விட முடியாது என்பதுதான் தமிழ் நாட்டு யதார்த்தம். ஆனால் பிராமணர்களை காண்பிக்கலாம் அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்வார்கள். கையை, தலையை வெட்ட வரமாட்டார்கள்.

உண்மைதான்.

அதனால் உங்களைப் போன்ற ஒரு சில படைப்பாளிகள் நேர்மையான காரணங்களினால் ஒரு சின்ன சுதந்திரம் எடுத்துக் கொள்கிறீர்கள் அதில் தப்பும் இல்லை. ஆனால் அந்த சின்ன சுதந்திரம் கூட அப்படிப் பெருந்தன்மையுடன் புரிதலுடன் அமைதி காக்கும் ஒரு தரப்பாருக்கும் கூட எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே என் ஆதங்கம்.

இன்றைய தமிழ் சூழலில் ஒரு சிவாஜி, ஒரு எம் ஜியாரை விமர்சிக்க முடியாது. பிராமணர்களைத் தவிர வேறு எந்தவித ஜாதியினரையும் பெருமைப் படுத்துவது அன்றி வேறு எந்த விதமாகவும் விமர்சித்து விட முடியாது. பா ஜ க போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியினரையும் சினிமாவில் விமர்சித்து விட்டு உயிரோடு இருந்து விட முடியாது.

இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் படைப்புச் சுதந்திரம் கருதி எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு சமூகத்தை மட்டும் எப்படியும் காண்பிக்கலாம் என்பது நிச்சயம் படைப்பாளிக்கு எந்த வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது ஆனால் அந்த சமூகத்தின் மீது தமிழ் நாட்டுச் சூழலில் ஒரு வித புரிதல் இல்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த அவை போன்ற யதார்த்தம் கருது உள்நோக்கமின்றி வைக்கப் பட்ட காட்சிகள் காரணமாகி விடுகின்றன என்று கருதுகிறேன்.

இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் நான் ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், ஒரு சமுதாயம் அல்லது ஒரு கட்சி மட்டுமே தன் பலவீனம் காரணமாகவோ, எண்ணிக்கை காரணமாகவோ, பெரும் தன்மை காரணமாகவோ, சரியான புரிதலின் காரணமாகவோ அல்லது வேறு எந்த விதமான காரணமாகவோ தன்னைப் பற்றிய நேர்மையான, ஆபாசமான, கேலியான, உள்நோக்குள்ள்ள, இல்லாத அனைத்து விதமான சித்தரிப்புகளையும் பொறுமையுடனும் புன்னகையுடனும் அனுமதிக்கிறது என்றாலும் கூட என் படைப்புகளில் நான் அந்த சமூகத்தை மட்டுமே பயன் படுத்த மாட்டேன். என்று எனக்கு எல்லாவிதமான சமூக அமைப்புகளையும், ஜாதிகளையும்,கட்சிகளையும், தலைவர்களையும் ஒரே விதமாக விமர்சிக்கும், சித்தரிக்கும் உரிமை மறுக்கப் படுகிறதோ அந்தவிதமான ஒரு விஷச் சூழலில் நான் ஒரு சமூகத்தை மட்டும் அது அனுமதிக்கிறது அல்லது அது அனுமதிக்கும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது அல்லது பெருந்தன்மையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக என் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதே என் நிலைப்பாடாக இருக்கும்.

எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது.

அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார்.

சோவின் நிலைப்பாடே என் நிலைப்பாடாகவும் இருக்கும்

என் அச்சங்கள் தேவையற்றதாகவும், அதீதமானதாகவும் நீங்கள் கருதலாம். பாதிக்கப் படாத யாரும் அவ்வாறே கருதுவார்கள். நான் சொல்வது என் அனுபவத்தின் அடிப்படையில் நான் கண்ட சம்பவங்களின் அதன் காரணங்களாக நான் கருதுபவற்றின் அடிப்ப்டையில் அமைந்தவை மட்டுமே. இதையே நான் மலையாள சினிமா சூழலுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எல்லா ஜாதியினரைப் பற்றியும், மதத்தினரைப் பற்றியும், கட்சியினரைப் பற்றியும் துணிவுடன் விமர்சிக்கும் சுதந்திரம் நேற்று வரை இருந்தது. இன்று கைகள் வெட்டப் பட்ட கிறிஸ்துவ கல்லூரி ஆசிரியருக்குப் பின்னால் கேரளத்திலும் கூட தமிழகத்தில் நிலவும் சூழல் வந்து விட்டிருக்கிறதோ என்ற அச்சம் நிலவுகிறது.

இருந்தாலும் நேற்று வரை இருந்த மலையாள படைப்புலகச் சூழலில் எந்த ஜாதியினரை விமர்சிப்பதிலும் யாரும் தயக்கம் இருந்ததில்லை அதற்கான தேவையும் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டின் சூழல் வேறு. இங்கு கருணாநிதியையும், எம் ஜி யாரையும் குறிப்பிட்டு ஒரு சாதாரண சினிமா கூட எடுக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. மலையாள அரபிக் கதாவில் சர்வ சாதாரணமாக பிரணையில் விஜயனும், அச்சுதானந்தனும் பேசப் படுகிறார்கள். போப்பும், நம்பூதிரிகளும், சங்கராச்சாரியர்களும் மிகச் சுதந்திரமாக விமர்சிக்கப் படும் சூழல் உள்ளது. அங்கு தாராளமாக படைப்புச் சுதந்திரத்தைப் பயன் படுத்தலாம்.

ஆனால் புரையோடிப் போயிருக்கும் தமிழ் நாட்டுச் சூழலில் வேறு விதமாகச் செயல் பட வேண்டிய கட்டாயமே எந்தவொரு படைப்பாளிக்கும் நிலவுகிறது. அந்த சூழல் மாறும் ஒரு காலம் வரும் பொழுது என்று எல்லா ஜாதியினரையும் சமமாக விமர்சிக்கலாம் என்ற காலம் வரும் பொழுது, என்று எல்லா கட்சியினரையும் அரசியல்வாதிகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக நேர்மையாக விமர்சிக்கலாம் என்ற நிலை வரும் பொழுது பிராமணர்களையும் அவர்களில் பலரது சிறுமைகளுக்காகவும், ஆணவங்களுக்காகவும், ஜாதி மேலாண்மைக்காகவும், தீண்டாமைக்காகவும் கட்டாயம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இருக்க முடியாது.

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27

கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?

:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?

பதில்:

  • ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்
  • தேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்
  • இணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்

ஏன் ஒபாமா வெற்றி பெற வேண்டும்?

– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

மிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.

:::

ஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.

:::

இந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.

:::

அமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.

:::

தன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.


ஒளியேற்றுவாரா ஒபாமா

ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்

அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.


4. Conservative Tamils for McCain | Asian Americans for McCain

மணிக் கூண்டு சிவாவின் கேள்விக்கு பதில்: கறுப்பு/வெள்ளை: ஏன் மெகயின்?

மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! … | மணிக் கூண்டு: ஓபாமாவிற்காக ஓர் நாள்!

நான் வாக்குகள் சேகரிக்க சென்ற பொழுது என் சட்டையில் ஓபாமா பேட்ஜை பார்த்த பொழுது ஓரு சில வெள்ளைகாரர்கள் கதவை சாத்திக் கொண்டார்கள். இதில் துளிக்கூட பொய் இல்லை! என்னைக் கண்டு கதவை சாத்திக் கொண்டார்கள் என்று சொல்லவில்லை! அதாவது நான் ஓபாமா ஆதரவாளன் என்று தெரிந்த காரணத்தாலும், நான் வைத்து இருந்த ஓபாமா சுவர் விளம்பரங்களை பார்த்தவுடன் அதனை நாகரீகமாக மறுக்காமல் அவர்களுடைய அணுகுமுறையில் அவர்கள் ஓபாமாவை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது!

என்னுடைய வீட்டுக்கு அவ்வப்போது யாராவது வந்துகொண்டிருப்பார்கள்.

  • ‘நாங்க யூடாவிலிருந்து வருகிறோம்! மார்மன் தேவாலயத்தில் இருந்து இலவச பைபிள் கொடுப்போம்’
  • ‘சில்லறை ஏதாவது இருக்குமா? எனக்கு கஞ்சா அடிக்கணும்’
  • ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’

இப்போதெல்லாம் வாயில் மணியடித்தால் போய் பார்க்க சிரமப்படுவதேயில்லை.

நான் மார்மன் மதத்திற்கோ, அந்த மதத்தை பிரச்சாரம் செய்பவர்களுக்கோ எதிரானவன் இல்லை. இருந்தும் அவர்களுடன் அளவளாவுவதை வெட்டி நேரமாகவே நினைக்கிறேன். அதே போல், திடமான மாற்று முடிவை எடுத்தவர்கள் உங்களைத் தவிர்த்திருக்கலாம்.

கல்லூரியில் பிரச்சாரம் செய்வதற்காக ஒவ்வொரு மாணவனின் கதவைத் தட்டிய அனுபவமுண்டு. ‘உங்க ஆளுக்குத்தான் அய்யா வாக்கு’ என்று சொல்லாவிட்டால் விடமாட்டோம். அடுத்தவரின் குறைகளை மட்டும் வலியுறுத்தி, அவன் கேட்கும் கேள்விகளை நிராகரித்து, மந்திரித்து விட்டவர்கள் மாதிரி சாமியடிப்போம். அந்த பயமாகவும் இருக்கலாம்.

கடந்த ஒரு ஆண்டுகளில் எனக்கு தெரிந்து அல்லது அலுவலகத்தில் அல்லது வேறு இடங்களில் வெள்ளைக் காரர் வெளிப் படையாக ஓபாமாவை ஆதரித்துப் பார்க்கவில்லை!

நியு ஹாம்ஷைரில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பல்லாண்டு காலம் முன்பு (போன வருடம்தான்) நடந்த ஐயோவா முதல் நேற்று நடந்த சொற்பொழிவு வரை யூட்யுபிலோ, புகைப்படத்திலோ பார்த்திருப்பீர்கள்.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிறுபான்மையினர். பெரும்பான்மையினரான வெள்ளைக்காரர் ஆதரவின்றி ஜனநாயகக் கட்சியின் முதற்கட்ட வாக்குப்பதிவையும் வென்று, ஒபாமாவால் இவ்வளவு தூரம் வந்திருக்க இயலாது.

  • உங்கள் அலுவலில் எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர்?
  • அவர்கள் எந்தக் கட்சி சார்ந்தவர்கள்?
  • கடந்த தேர்தல்களில் எவ்வாறு வாக்களித்தார்கள்?
  • எவ்வளவு பேரிடம் விசாரித்தீர்கள்?
  • அலுவல் தாண்டி, பள்ளிக்கூடத்தின் சக பெற்றோர்கள், தாங்கள் சேவை புரியும் அமைப்புகள் போன்ற இன்ன பிற இடங்களிலும் இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கொண்டீர்களா?

அலுவலில் பேசாப்பொருளாக கருதப்படும் அரசியல் குறித்து வெளிப்படையான எண்ணங்களை எதிர்பார்க்க முடியாது.

இப்படி அமெரிக்க பொருளாதரம் ஏராளமான சரிவை சந்தித்த பொழுதும் வெள்ளைகாரர்கள் கண்மூடிதனமாக ஜான் மெக்கயனை ஆதரிக்க என்ன காரணம்? குறிப்பாக வயதான வெள்ளைக் காரர்கள் ஏன் ஓபாமாவை ஆதரிக்க மறுக்கிறார்கள்?

ஜான் மெகயினை ஆதரிக்க என்ன காரணம்?

  1. அனுபவம்: உங்கள் வீட்டில் குழாய் பழுதாகிறது. சரி பார்க்க யாரை அழைப்பீர்கள்? craigslistஇல் விளம்பரம் தந்திருக்கும் பதின்ம வயது பாலகன். பக்கத்து வீட்டில் இருக்கும் உங்கள் அத்யந்த நண்பனுக்கு ரிப்பேர் செய்த பத்து வருடம் ப்ளம்பராய் கொட்டை போட்டவர்?
  2. புடமிட்டவர்: சோதனை வரும்போது சொந்தமாக முடிவெடுக்க வேண்டும். எடுத்த முடிவில் தடங்கல்கள் வந்தாலும், நல்ல முடிவாக இருக்கும்பட்சத்தில் அசராத மனம் வேண்டும். வியட்நாமில் தான் மட்டும் விடுதலை என்பதால் மறுத்தல் போன்ற எடுத்த முடிவுகளில் பின் வாங்காதவர்.
  3. சுதந்திரமான சிந்தனை: தன்னுடைய கட்சியிட்ட ஆணைப்படி 98% செனேட்டில் வாக்களித்தவர் ஒபாமா. கட்சி என்ன சொல்கிறதோ; அதுவே சித்தாந்தம். கொறடா எப்படி வழிநடத்துகிறாரோ; அதுவே வேதாந்தம். மெகயின் அவ்வாறு கண்மூடித்தனமாக பின்பற்றாமல் தன்னுடைய குடியரசுக் கட்சியை பகிரங்கமாக எதிர்த்தவர்.
  4. நிக்ஸன் எவ்வழி? ஒபாமா அவ்வழி: உங்களுக்கு கடுமையான சோதனை. நண்பர் நிதியுதவி செய்து மீட்பிக்கிறார். கொஞ்ச நாள் கழித்து அந்த நண்பரே உங்களிடம், ‘ஒரு சோபா வாங்கி இருக்கேன். வீட்டுக்குள் தூக்கி வைக்க ஒரு கை கொடுக்க முடியுமா?’ என்று பதில் மரியாதை கோரினால் என்ன செய்வீர்கள்? இன்று ஒபாமா தேர்தல் காணிக்கையாக மில்லியன்களை தன்னுடைய கோடீஸ்வர நண்பர்களிடமிருந்து கோரி செலவழிக்கிறார். நாளைக்கு அவர்கள் ஊழல் செய்ய உதவி கேட்டால்?
  5. வாக்கு சுத்தம் உள்ளவர்: சுத்தமான அரசியல்; எனவே, தேர்தல் விளம்பரங்களுக்கு செலவழிப்பதில் வரைமுறை வேண்டும் என்பதில் ஸ்திரமாய் இருப்பவர் மெகயின். நேற்றுக்கு ஒரு சொல்; நாளைக்கு இன்னொன்று என்று கொடுத்த வாக்குறுதிகளை மீறுபவர் ஒபாமா.
  6. ஊழல் செய்தாலும் அதை ஒத்துக்கொள்ளும் துணிவும் பொறுப்புணர்ச்சியும் கொண்டவர்: கீட்டிங் விவகாரத்தில் அனுபவமின்மையால் தான் நடந்துகொண்ட விதத்திற்காக வாக்குமூலமாக புத்தகம் எழுதியவர் எங்கே? டோனி கொடுத்த பணத்தில் வீடு கட்டிவிட்டு, அதைக் கேள்வி எழுப்பினால் மழுப்புபவர் எங்கே?
  7. இன்னொரு புஷ்ஷாக மாறாதவர்: சுவாரசியமானவர், மனதில் தோன்றியதை பேசுபவர், இளரத்தம், போர்முனைக்கு செல்லாதவர் போன்ற புஷ் குணாதிசயங்கள் ஒபாமாவிடம் உண்டு. பாகிஸ்தானை தாக்குவேன் என்று பகிரங்க ஒண்டிக்கு ஒண்டி அழைப்பவர். மெகயின் ஆழம் பார்த்து காய் நகத்துபவர்.
  8. இன்னொரு கார்ட்டராக மாறாதவர்: வாஷிங்டனுக்கு வெளியாள் என்று சொல்லித்தான் அதே ஜனநாயகக் கட்சியில் இருந்து வந்தார் கார்ட்டர். இரான் விவகாரம் முதல் ஒன்றிலும் காத்திரமான அணுகுமுறை காட்டாமல், ஒபாமா செனேட்டில் அடிக்கடி போடும் ‘ப்ரெஸன்ட் சார்’ ஆக கழுத்தறுக்காதவர் மெகயின்.
  9. அரசு செலவை எக்கச்சக்கமாக்காதவர்: ஜனநாயகக் கட்சிவாசிகளுக்கு எப்போதுமே அகலக்கை. வரவு எட்டணா என்றால் அதற்குள் செலவைக் கட்டுப்படுத்துவது அவசியம்தான், என்றாலும் வரிச்சுமை ஏற்றுவதில் நீண்டகால வரலாறு கொண்டவர்கள். எல்லாவற்றிலும் அரசின் மூக்கை நுழையவைத்து ரெட் டேப் கொண்டு வந்து, திவாலாகிக் கொண்டிருக்கும் சோஷியல் செக்யூரிட்டி, மெடிகேர் போல் நிர்வகிக்கவும் தெரியாமல் நிர்க்கதி ஆக்குபவர் அல்ல மெகயின்.
  10. செனேட், ஜனாதிபதி, ரெப்ரஸேன்டேடிவ் எல்லாவற்றிலும் ஒரே கட்சியின் ஆக்கிரமிப்பு கூடாது: காங்கிரஸ் சபையில் ஏற்கனவே ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை வகிக்கிறார்கள். செனேட்டிலும் மயிரிழையில் அதே நிலை. அதிபரும் ஒபாமாவானால் கொண்டாட்டம்தான். தன்னிச்சையாக ஜார்ஜ் டபிள்யூ புஷ் எடுத்த முடிவுகள் போல் லகான் இல்லாத வெள்ளை மாளிகை ஆபத்தானது.

இந்த பத்தில் வெள்ளைக்காரன், வயசானவன், மகளிரணி என்பதெல்லாம் ஏதுமில்லை. சந்தேகமாக இருந்தால், ஹிப் ஹாப் ரிபப்ளிகன் போன்ற பல்லாயிரக்கணக்கான கறுப்பர்களின், தற்பால் விரும்பிகளின், இளைஞர்களின் குடியரசு சார்பைப் பரப்பும் வலையகம் பக்கம் எட்டிப்பார்க்கவும்.

ஓபாமாவை வரவிடாமல் தடுக்க அவர் கறுப்பர் என்றாலும் பரவாயில்லை, அவரை இஸ்லாம் என்றும் தீவிரவாத தொடர்புகள் கொண்டர் என்றும் சித்தரிக்க முயற்சிப்பதன் பின்புலம் என்ன?

ஒபாமா மட்டுமல்ல. ஜான் கெர்ரியும் இந்த சித்தரிப்புக்குள் ஆணியடித்து மாட்டப்பட்டிருக்கிறார். அதாவது பல்வேறு தலைவர்கள், தங்களுடைய எதிர்க்கட்சிகளால் இவ்வாறு சாயம் பூசப்பட்டிருக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு சம உரிமை கோரிய வேட்பாளரை விமர்சிக்கும் விதமாக வெள்ளைக்காரரின் கை — வேலை மறுக்கப்பட்ட கடிதத்தை கசக்குவதாக வந்த விளம்பரம் முதல் சிகப்பழகு களிம்பு வரை எல்லாவிதமான விளம்பரங்களும் மிகை நாடும் கலையே.

ஒபாமாவும் இந்த மாதிரி எதிர்மறை பிரச்சாரத்தில் மெகயினை விட பன்மடங்கு வீரியத்துடனும் பணபலத்துடனும் ஈடுபடுகிறார்.

ஆனால், மெகயின் தன்னுடைய கூட்டங்களில் ‘ஒபாமா இஸ்லாமியன்’ என்றாலோ, ‘தீவிரவாதி’ என்றாலோ, மிகக் கடுமையாக அந்தப் பேச்சை நேரடியாக கண்டிக்கிறார். இங்கே தனித்து நிற்கிறார்.

சாரா பேலின் குறித்து மட்டரகமான வாசகங்களுடன் வரும் டி-ஷர்ட் வாக்காளர்கள் ஒருவரைக் கூட ஒபாமா இவ்வாறு முகத்திற்கு நேராக முகஞ்சுளிக்காதது இங்கு குறிப்பிடத்தக்கது. தனக்கு வோட்டு பெரிதல்ல என்றால், நன்றல்லதை கண்டவுடன் களைய வேண்டும் என்னும் மனப்பக்குவமும் திறமும் தைரியமும் வேண்டும்.

அமெரிக்க தேவாலயங்களில் வெள்ளைக்கார பாதிரியார்கள், ஜான் மெக்கயனுக்கும் ஓட்டளியுங்கள் என்று சொல்லாமல் சொல்வதன் காரணம் என்ன?

போன பதில்தான். கெர்ரிக்கும் இதை செய்தார்கள்.

ஜான் கெரி தற்பால் திருமணத்தை செய்து வைக்கும் மாகாணத்தில் இருந்து வருகிறார். கிறித்துவரே அல்ல என்று பிரச்சாரம் களைகட்டியது. அவர் கறுப்பர் அல்ல.

குடியரசு கட்சிக்கு தேவை வாக்கு. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் வீட்டுமனை மதிப்பு சரிவு, நிதிநிலை நெருக்கடி, வங்கி திவால் எல்லாவற்றையும் பில் க்ளின்டன் காலத்தின் கொள்கைகளினால் ஆரம்பித்தது என்று ஒப்புக்கொள்ளாமல், சாமர்த்தியமாக ஜார்ஜ் புஷ் தலையில் மட்டும் கட்டிவிடும் ஜனநாயகக் கட்சி போல்.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைய கறுப்பு இளைஞர்கள் வெள்ளைக்கார பெண்களுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்து இருக்கிறேன், ஆனால் ஒரு வெள்ளைக் கார இளைஞன் கறுப்பு பெண்ணுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்தது மிக மிக குறைவு!

இந்தத் தகவல் எல்லாம் அமெரிக்க சென்ஸஸ் வலையகத்தில் விரிவாகக் கிடைக்கிறது. அதன் அடிப்படையில் ஆராய்ந்து அறிந்ததை பகிர வேண்டுகிறேன்.

நான் வேலைப் பார்க்கின்ற நிறுவனத்தில் முடிவுகள் எடுகின்ற அதிகாரத்தில் கறுப்பர்கள் இல்லை! கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த தினக் கூலி வேலைகளில் நிறைய கறுப்பர்கள் இருக்கிறார்கள். எடுத்து காட்டாக பேருந்து ஓட்டுனர், புகை வண்டி ஓட்டுனர், தபால் அலுவலகத்தில், நிறைய ஷாப்பிங் மால்களில் துப்பரவு தொழிலாளியாக இப்படி பல. சிறிய வேலைகளில் கறுப்பர்கள்! மிகப் பெரிய அதிகார பதவிகளில் வெள்ளைக்கார மக்கள்!

அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ் போன்ற பல நிறுவனங்களில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.

உங்கள் ஒரு நிறுவனத்தை வைத்து மட்டும் முடிவெடுக்க முடியாது. அமெரிக்காவில் மொத்தம் எத்தனை நிறுவனங்களில் உள்லன? அவற்றில் எத்தனை கறுப்பர்கள் CxOவாக இருக்கிறார்கள்? எந்தப் பொறுப்பு வரை ‘முடிவு எடுக்கும் அதிகார’மாக கருத்தில் கொள்ளவேண்டும்?

எல்லாவற்றிக்கும் மேலாக நடந்து முடிந்த இரண்டு கலந்துரையாடலில் (Debate) ஜான் மெக்கயன் ஓபாமாவை நேரிடையாக பார்த்து பேசவேயில்லை! கண்களை பார்க்கவே இல்லை! வெள்ளைக் காரன் என்ற திமிரா? ஓபாமா என்ன தீண்ட தகாதவாரா?

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு என்று பாட்டு பாடவா அங்கு போய் இருந்தார்கள்? வாக்குவாதம் புரியும் இடத்தில் முகத்தைப் பார்த்து பேச வேண்டும் என்பது அமெரிக்க பழக்கவழக்கம்.

அதிபர் தேர்தலை குறிவைத்தே பன்னெடுங்காலமாக இயங்கு வரும் ஒபாமா, இந்தத் தேர்வில் புன்சிரிப்பு சிந்தி மண்ணாந்தையாக நிர்ச்சலன முகம் காட்டுவதால் வென்றவர் ஆக மாட்டார். நான் கூட காதில் பஞ்சு அடைத்துக் கொண்டு, கிளிப்பிள்ளையாக சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்து காரியத்தில் கண்ணாயிருக்கலாம். இரத்தமும் சதையும் உணர்ச்சியின் பால்பட்ட மெகயினால் பொய்யை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.

உங்களிடம் இல்லாத ஒன்றை மட்டும் வைத்து உங்களைப் பார்த்து (நீ புஷ்! நீதான் புஷ்!! உன் இன்னொரு உருவம் புஷ்!!!) என்று சதா எந்தக் கேள்விக்கும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்ததால் வருத்தம் கலந்த புறக்கணிப்பு வெளிப்பட்டால் அதற்குப் பெயர் திமிரா?

தொடர்புடைய சில இடுகைகள்:

1. ஒபாமா கறுப்பரா ? ஒபாமா கறுப்பர்களின் பிரதிநிதி அல்ல… : தமிழ் சசி

2. கறுப்பர் பிரச்சனைகளை பேச மறுக்கும் ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளரா ? : தமிழ் சசி

3. ஒபாமா கறுப்பர்களின் வேட்பாளர் அல்ல : வெங்கட்

4. ‘வெள்ளை’ மனதும் வெள்ளை மனதும் : சிறில் அலெக்ஸ்

5.  ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை : சிறில் அலெக்ஸ்

விரிவான வாசிப்புக்கு:

1. The Role of Race–Maybe Not So Much – Swampland – TIME

2. David Von Drehle’s cover story has yet another perspective, this one from the ground in Missouri

3. Peter Beinart column in Time about how the McCain campaign are playing the race card in this election–not through the usual methods of stoking fears of black criminality and freeloading, but through insinuations that Barack Obama is a foreigner, not “the American president Americans have been waiting of,” as the McCain campaign artfully says of its candidate, but a Kenyan, a Muslim, something weird and un-American.

4. The New Race Card – The Plank

5. Immigrant Perspectives – News21 Project

6. Gender and Race: The Battle Rages Beneath the Surface – Harvard Business Online’s HBR Editors’ Blog: Why do women leaders provoke more anxiety than men — black or white?

7. The Chronicle: 3/17/2006: Race, Politics, and the Census: looks at how the election will affect America’s conceptions of race. In 2006, David A. Hollinger suggested reforms that would make racial Census categories more meaningful and useful.

8. The End of Race as We Know It – ChronicleReview.com: Where does the Obama campaign leave the black narrative of victimization?

9. Race Will Survive the Obama Phenomenon – ChronicleReview.com: By David R. Roediger – Barack Obama has been presented as the transracial emblem of a postracial era. The realities of inequality and identity politics say otherwise.

10. Hot Air » Obama ad: McCain’s an anti-amnesty Republican racist like Rush Limbaugh