Tag Archives: காவல்

டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct

இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.

சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?

இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?

கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:

1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.

கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.

நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1

நெருப்பிலாமல் புகையுமா?

செய்தி: Blaze destroys Khalsa Mahal; 1 fireman dead

The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)

Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.

சென்னை எழிலகத்தில் தீ: வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்; சதியா ?

இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.


ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்

1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.

3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்

4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.

5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.

6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦

பாரதம் – அருந்ததித்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: பாட்டி – கோணங்கித்துவம்

டைனோ: எல்லோரும் துப்பாக்கி சுட கற்றிருக்கணும்

டைனோ Says:
நவம்பர் 29, 2008 at 2:04 பிற்பகல்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது, துப்பாக்கி வைத்திருப்பனெல்லாம் கன்சர்வேட்டிவ் என்று கட்டியம் கூறி வெறுப்பை உமிழ்பவர்கள் இதையும் படிக்கவேண்டும்! NRAவின் பக்கத்து நியாயங்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். Right to self-defense!

அனைவருக்கு துப்பாக்கியும் தோட்டாவும் கொடுப்பதால் கிடைக்கும் நன்மை பயக்கும் திட்ட வரைவுகள்:

  1. மீசை இருந்தால் ஆம்பளை என்பது பழமொழி. துப்பாக்கி வைத்திருப்பவர் வீரர். அத்துமீறி உள்ளே வருபவர்களை துப்பாக்கியை வைத்து சுட குறி பார்ப்பதற்குள், அவர்கள் உங்களிடமிருந்து ஆயுதத்தைப் பறிப்பார்கள். ‘ஏழைகளுக்கும் தோட்டா‘ என்று இந்தத் திட்டத்திற்கு நாமகரணமிடலாம்.
  2. பாஸ்டன் பக்கம் மாதத்திற்கு இரண்டு குழந்தை (சமீபத்திய இறப்பில் பத்து மாசம் ஒன்றும் மூன்று வயது சிறுவனும்) இறக்கிறார்கள். இந்த மாதிரி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டில், விளையாட்டாக எடுத்து சுட்டுப் பார்த்து ‘மக்கள் தொகையை மட்டுப்படுத்தல் திட்டம்‘ வெற்றிகரமாக என்.ஆர்.ஏ வினால் நடத்தப்படுகிறது.
  3. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதாக காய்கறி கத்தியைக் கூட ஸ்திரமாக பிடிக்கத் தெரியாதவர்கள் கையில் துப்பாக்கியை திணித்து, ‘புல்லாங்குழல் அடுப்பூதும் திட்டம்‘ என நடுநடுங்க வைக்கலாம்.
  4. வீழ்ந்து கிடக்கும் நிதிநிலையை நிலைநிறுத்த, துப்பாக்கி விற்பனையை அதிகரித்து, அதனால் புல்லட் ப்ரூஃப் மேலணி மேனியாவை முடுக்கி, தொடர்ச்சியாக தோட்ட புகமுடியா கார்கள் என்று ‘சந்தைப்படுத்தி சதை துப்பும் திட்டம்’ வரவைக்கும்.
  5. பள்ளிகளில் கடந்த மாதம் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. (Timeline: US shooting sprees – History of school shootings). இது அமெரிக்க கலாச்சாரத்திற்கு மிகப் பெரிய இழுக்கு. இதைப் போக்க ‘வாசகசாலை சிறார்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளும் திட்டம்‘ அறிமுகம்.
  6. நத்தார் தினம் நெருங்குகிறது. விரும்பிய டிஃபனி பரிசையும் லெக்சஸையும் கொடுக்க முடியாத வறியவர்கள் (பார்க்க #1 ‘ஏழைகளுக்கும் தோட்டா’) கையில் துப்பாக்கியை கொடுத்து அங்காடிகளையும் கடைகளையும் பாதுகாப்பற்றதாக ஆக்கி, பனி விழாத புவிவெப்ப சூழலின் இறுக்கத்தைக் குறைத்து ‘சடலம் விழும் காலம்’ வருகிறது.
  7. மான்களும் மூஸ்களும் இன்னும் கொஞ்ச காலமே காடுகளில் காணக்கிடைக்கும். அதற்குள் பாக்கி இருக்கும் ஒன்றிரண்டையும் ஒழித்துவிட ‘சாரா பேலின் சகாயம்’ உதயம்.
  8. தீவிரவாதி கையில் மட்டும் ஏகே-47 இருக்கிறதே? சஞ்சய் தத் ஆசைப்பட்டதும் இதுதானே! உங்களிடமும் வெடிகுண்டும், ஏவுகணைகளும் கிடைத்தால் ‘பக்கத்து விட்டு பரமசிவத்துடன் பஞ்சாயத்துக்கு செல்லேல்’ என சடக்கென்று பாயும்.

அனானிகள் போலி முகம் கொண்டு அடுத்தவரைத் திட்டுவது போல் அசட்டு தைரியம் கொடுக்க துப்பாக்கி உதவுகிறது.

இன்றைய சந்தேகம் & அறச்சீற்றம்

anjathey-prasanna-daya-lengthy-hair-cinema-movies.jpgதமிழக சினிமா காவல்துறை மேல் எனக்கு பெருத்த அவமரியாதை கூடிய சந்தேகம் எழுந்துள்ளது.

என் மகளுக்கு இருக்கும் கொஞ்சூண்டு தலைமுடியை வாரி விடுவதற்குள் பிராணன் போகிறது. இங்கே ‘வேட்டையாடு விளையாடு’ டேனியல் பாலாஜி, ‘அஞ்சாதே’ பிரசன்னா என்று எல்லா வில்லர்களும் சடாமுடியுடன் அருள்பாலிக்கிறார்கள். நாராயண் ‘சத்யா’ போன்ற லஞ்சப் பேர்வழிகள் நிறைந்த திரைப்பட போலீசால் ஏற்பட்ட வினை!

Vettaiyadu Vilaiyaduஇதில் டேனியல் பாலாஜி இன்னும் அக்கிரமம். அமெரிக்கா வந்த பிறகு பின் வழுக்கையும் முன் வழுக்கையும் தலை குலுக்கிக் கொள்ளும் தண்ணீரில் நீராடியும் ‘வேட்டையாடு விளையாடு’ என்று கொலையுதிர்த்தும் சிலிர்த்துக் கொண்டே பான்டீன் விளம்பரமாயும் கொழிக்கிறார்.

இதெல்லாம் நல்லதுக்கில்லை.

மயிரை சீராட்டி பாராட்டி சாம்பிராணி போடும் நேரத்தில் நாலு பொண்ணை வியாபாரம் செய்தோமா… ராகவனுக்கு எலுமிச்சை அனுப்பினோமா என்றெல்லாம் பொறுப்பாக செயல்படாமல் கூந்தல் வளர்த்து வெறுப்பேற்றும் நெகடிவ் நாயகர்களை நம்ப முடியாத குணச்சித்திரமாக சித்தரிக்கும் மிஷ்கின் & கவுதம் மேனனுக்கு கண்டனங்கள்!!!