Tag Archives: கவிதை

Invitation: Articles for Solvanam

சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.

அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:

அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?

ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?

இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?

ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?

உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?

ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?

எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.

ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?

ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?

ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?

ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?

இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.

உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com

சலிப்பு – கொரோனா கவிதை

“New Theories on Boredom”, by Elisa Gabbert

(from the New York Review of Books) March 26, 2020 Issue

Once as a kid, I was so bored at my parents’ office that I made a deck of cards.
How bored are dogs? Pretty bored, I think.
I wonder what would bore a tortoise.
I don’t trust books that aren’t a little boring.
It’s almost like there should be different words for “boring because simple” and “boring because complex.”
You can call this banality versus tedium, or “bad boring” versus “good boring.” Kubrick movies are often great while also boring.
Whether something is boring or not has nothing to do with how good it is.
You could also call “boring because complex” interesting-boring (boring in an interesting way) or slow-interesting (interesting, but at a pace that sometimes resembles boredom).
To state the obvious, all good poetry is slow-interesting.
I often wonder why having a beverage makes something boring more interesting.
I wonder why we don’t get bored in the shower.
Michel Siffre lived alone in a cave in Texas for six months and got so bored he contemplated suicide, making it look like an accident.
I heard on the radio that lazy people have higher IQs—because their minds are more active, they don’t get bored doing nothing.
I don’t think this is true.
Some people outside are having a boring conversation about dogs in general.
When it rains it’s boring.
When it rains it bores holes into your body. Turns out it was acid rain!
Being so bored you actually start crying must be a transformative experience.
Just speaking for myself here but I love being bored.
Like to me, sex is not art. Once it’s over it’s boring again.
We’re in the bargaining stage of civilization, and it’s boring.
Civilization got bored with itself.
Pretty cool how we’ve evolved to find peace boring!
A boring man war movie.
“This is boring.” “No, it interrogates boringness!” “This is doggerel.” “No, it interrogates talent!”
What, poets can’t be bored by eclipses?
How boring not to have a crush on anyone.
You can only be bored almost to death.
Did you ever have a kiss so bad you felt like you were the bad kisser?
I think this is related to how boring people make me feel boring.
Did you know that you can trick people into being more interesting by being more interesting yourself?
I used to be bored around my parents, which made them boring. In my thirties I was shocked to learn that I didn’t know everything about them.
So if you have to spend time with boring people, try being DAZZLING.
I’m glad Andre Gregory knows the Andre character is a “raging narcissist” mansplaining bore.
My most common thought while lucid dreaming is “God, what a boring dream.”
My TED Talk topic would be “Jiro Dreams of Sushi Is Not an Enjoyable Movie.”
I would just make people watch it and stop it every now and then to say, “See? This is boring and oppressive.”
A totally fascist approach to sushi.
Execution in art has become a great tromping bore but: sorry artists, you still have to execute.
I sometimes think After Hours is the worst movie that’s anyone’s favorite movie.
I associate it strongly with Joe Versus the Volcano, since I think of both as somehow “angry boring.”
It takes a special kind of mediocrity to be offensive and boring at the same time.
I’m so over the “boring on purpose” defense.
I think I mean if the language is boring there should at least be some emotions or ideas or something.
Boring through, or thoroughly boring?
I was very boring today.
Sometimes the dystopia was boring.
At least everyone was boring at the same time about something inherently interesting.

அனைவரையும் கண்காணிக்கும் அன்பான கிருபை கொண்ட கருவிகள்

நன்றி: Richard Brautigan: All Watched Over By Machines Of Loving Grace

நான் யோசிக்க விரும்புகிறேன் (எவ்வளவு
சீக்கிரமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் பசும் புற்றரை
அங்கே பாலூட்டிகளும் கணினிகளும்
ஓருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒன்றாக
நிரல்நெறி இணக்கத்துடன்
நன்னீர் போல்
நிர்மலமான வான்வெளியைத் தொடும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(தயவு செய்து… இப்போதே!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் வனாந்திரம்
கற்பகதரு மரங்களும் கணிப்பொருள்களும் நிரம்பியிருக்க
மனக்கவலையின்றி மான்கள் சஞ்சரிக்க
கணிப்பொறிகளைக் கடந்தால்
அங்கே கான்முகம் போல்
சுழலும் மொட்டுகள் அரும்பும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(அப்படித்தான் இருக்கவேண்டும்!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுப்புறச் சூழியல்
நம் பயனில் வேலையில் இருந்து விடுதலை கிட்ட
இயற்கையுடன் மீண்டும் இணைய
நாம் பாலூட்டியாக திரும்ப மாற
சகோதரன்களும் சகோதரிகளுமாய் இருக்க
அன்பான கிருபை கொண்ட கருவிகள்
அனைவரையும் கண்காணிக்கும்.
Nongirrnga_marawili_baratjula_2014_Cybernetics_Forest_Ecology

என் குறிப்புகள்

இந்த ஆக்கம் 1967ல் எழுதப்பட்டது. அப்போது உடோப்பியக் கனவுகள் இருந்தால் சரி. கம்ப்யூட்டரும் காட்டு விலங்குகளும் கைகோர்த்துக் கொண்டு சந்தோஷமாய் வாழுகின்றன என்று எண்ணியிருக்கலாம்.

ஐம்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால், மனிதன் + முதலியம் ==> முடிந்தவரை குப்பை போடுகிறது. தொழில்நுட்பம் என்பது வேவு பார்ப்பதற்கும், ஒற்றறிவதற்கும், ரகசியமாய் கண்காணிப்பதற்கும், அடுத்தவரின் பொருள்களைத் திருடுவதற்கும், உலகளாவிய உளவுக்கும் நேர்மையாய் இருக்கிறது.

மீண்டும் 1967ல் இருந்த நிலையைப் பார்க்கலாம். இணையம் கிடையாது, உலகளாவிய செல்பேசி பயன்பாடு கிடையாது. ருஷியாவுடன் பிரச்சினைகள் இருந்தாலும், இன்னுமொரு உலகப்போர் மூளும் அபாயம் கிடையாது. ஐஸிஸ் கிடையாது. எல்லோர் கையிலும் ஐபோன் கிடையாது. கணினிக் கழிவுகள் கிடையாது.

அந்தக் காலகட்டத்தில் பறக்கும் கார்கள், சூரியசக்தியில் ஓடும் வீடுகள், பசுமைப் புரட்சி, கூட்டுறவு என நினைத்து எழுதியிருப்பார். இன்று?

இரு கவிதைகள்: நிஜமும் கற்பனையும்

Activism is the rent I pay for living on the planet. -Alice Walker

disney_pixar_cars_Movies_Trains

மகளின் பாடப் புத்தகத்தைப் படித்தால் பல திறப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக சொன்னால், என்னுடைய பள்ளிக்காலத்தில், ஆங்கில இலக்கியத்திற்கு இன்னும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்திருக்கலாம்.

இரண்டு கவிதைகள் வாசிக்கச் சொன்னார்கள்:

1. The Song of Wandering Aengus by William Butler Yeats : The Poetry Foundation
2. The Railway Train, by Emily Dickinson

படித்து விட்டீர்களா? இப்பொழுது கேள்வி நேரம்:

இந்த இரண்டுக் கவிதைகளிலும் உண்மையும் மாயையும் எங்கு கலக்கிறது? இந்த இரு ஆக்கங்களில் இருந்து நேரடியாக விளங்கிக் கொள்ள முடிவதையும் பூடகமாகப் புரிவதையும் விவரி.

எமிலி டிக்கன்ஸனின் கவிதைக்கு ‘புகைவண்டி’ என்று தலைப்புக் கொடுக்காவிட்டால், அந்தக் கவிதை எதைக் குறித்து எழுதப்பட்டது என்பதே புதிராக இருந்திருக்கும். அந்தக் கவிதை எழுதியபோது, எமிலி, எந்தத் தலைப்பும் வைக்காமல், கவிதையை வெளியிட்டிருக்கிறார். ”அது பல மைல்கள் ஓடுவதை பார்க்க விரும்புகிறேன்” என்று துவங்கும் முதல் வரியே, அந்தக் கவிதைக்கு தலைப்பாக வைத்திருக்கிறார். எமிலி எழுதியவாறே, இந்தப் புத்தகத்தில், எமிலியின் கவிதையை தலைப்பு இன்றி கொடுத்திருந்தால், அந்தப் புதிரை விடுவிப்பதில் சுவாரசியம் இருந்திருக்கும்.

எனக்கோ, தலைப்பு தெரிந்துவிட்டது. இப்பொழுது எமிலி எதைக் குறிப்பிடுகிறார் என்பது துவக்கத்திலேயே போட்டுடைக்கப்படுகிறது. கடைசி வரியில் தொழுவம் (stable) என்கிறார். எனவே குதிரையையும் இரயிலையும் ஒப்பிடுகிறார் எனப் புரிந்து கொண்டேன். இதன் பிறகு இந்தக் கவிதையில் எங்கே அசல் முடிகிறது… எங்கே அரூபம் துவங்குகிறது என்பதில் பெரிய குழப்பம் இல்லை.

Boanerges என்னும் புரியாத குறியீடு வருகிறது. அது தெரியாவிட்டாலும் கவிதை புரியும். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த விடை: Boanerges என்றால் இடியின் மகன்கள். குதிரை போன்ற துள்ளலான கனைப்பைக் குறிக்க, கிறித்துவ விவிலியத்தில் யேசு கிறிஸ்து பயன்படுத்தும் சொல்லாக்கம். )

எமிலி கவிதையின் தலைப்பை சொல்லியிராவிட்டால் சுவாரசியம் இருந்திருக்கும். ‘புகையிரதம்’ என்று போட்டு உடைத்தபின் நேரடியாக ஒரே ஒரு அர்த்தம் விளங்குகிறது. உயிரற்ற புகைவண்டிக்கு, உயிரூட்டமுள்ள குதிரையை ஒப்பிட்டு கவிதை வளரும்போது நிஜம்; பிக்ஸாரும் (Pixar films) டிஸ்னியும் எடுத்த படம் போல் கார்களுக்கும் பொறிகளுக்கும் பிரத்தியேகமான உலகம் இருக்கும் என்பது கற்பனை.

Swan_Celtic_Irish_Goddess_aengus_Mythology_Strory_Paintings_Art

அடுத்ததாக வில்லியம் பட்லர் யீட்ஸ் எழுதிய ’அலைபாயும் ஏங்கஸ்’ கவிதை. எமிலியின் எளிமையான சந்தக்கவியை விட இந்தக் கவிதை எனக்கு பிடித்து இருந்தது. நல்ல புனைவைப் படித்தால், ‘ஏதோ புரிகிற மாதிரி இருக்கு… ஆனால், சொல்ல முடியல’ என்னும் தொண்டையில் மிடறும் நிலைப்பு புரிகின்ற புன்முறுவலை தோன்ற வைக்கிறது.

வனாந்திரத்திற்குள் சென்றவன், ஏதோவொரு காட்டுக் கனியை ஓடையில் விட்டெறிய, அதற்கு கெண்டை மீன் சிக்குகிறது. அதை வறுப்பதற்கு அடுப்பு மூட்டினால், மீனோ, பருவப்பெண்ணாக மாறி, அவனின் பெயர் சொல்லி விளித்து அழைத்துவிட்டு, மரங்களின் நடுவில் ஓடி மறைந்துவிட்டது. அவளைக் கண்டுபிடிப்போம் என்னும் நம்பிக்கையில் கிழவராகிய பின்னும் தாருகாவனத்தில் தவம் போல் தேடுகிறேன் என கவிதை முடிகிறது.

இந்தக் கவிதையில் Aengus என்பது புரியாத பெயர். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த கதை: அயர்லாந்து நாட்டின் கெல்ட்டிய இனத்தவருக்குரிய தொன்மத்தில் ஆங்கஸ் கடவுள் ஆக இருக்கிறார். இளமைக்கும் அழகுக்கும் உரிய சம்ஸ்கிருத மன்மதன் போல் காதற் கடவுள். ஆங்கஸின் கனவில் தினசரி அந்தப் பெண்மணி வருகிறாள். அவனை பசலை நோய் பீடிக்கிறது. அவனால் தன்னுடைய காதலியை நேரில் காண இயலவில்லை. உறக்கத்தில் வரும் தேவதையைத் தேடித் தேடி அலைகிறான். அவளோ ஒரு வருடம் அன்னமாகவும் அடுத்த வருடம் மானுடப் பெண்ணாகவும் வலம் வருபவள். அவளை நூற்றுக்கணக்கான அன்னங்கள் நீந்தும் வெள்ளி நீரோடையில் மிகச்சரியாக கண்டுபிடிக்கிறான். அவளை அடையாளம் கண்டுகொண்ட அடுத்த நொடியே அவனும் அன்னமாக மாறி அவளுடன் பிருந்தாவனம் செல்கிறான். )

தன்னுடைய கவிதையின் துவக்கத்தில், யீட்ஸ், இவ்வாறு சொல்கிறார்: ‘ஏனென்றால், என்னுடைய தலைக்குள் தீப்பிடிக்கும் ஜ்வாலை கழன்று கொண்டிருந்தது’. ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தில் தணிக்கவியலா ஆர்வம் இருக்கும். அந்த நெருப்பு எரிந்து கொண்டேயிருக்கும். அந்த ஆர்வம் என்பது நிஜம். அது கொழுந்து விட்டெறியும் அக்னியாக தோன்ற வைப்பது கவியின் பொய்.

ஆயிரத்தோரு இரவுகள் போன்ற கதைகளில் மீன்கள் பெண்ணாக மாறுவதைக் கேட்டிருக்கிறேன். கவிஞர் யீட்ஸ், அந்தக் கதைகளைப் படித்து, அவற்றையும் தன்னுடைய ஐரிஷ் தொன்மத்தையும் இங்கே கலந்திருக்கலாம்.

பற்றுக்கோல் என்பது குச்சியாக முதல் வரியில் வருகிறது. அந்தக் குச்சியில் கல்வி என்பதைக் கவ்வி கனியாக சொருகிக் கொள்கிறார். அதைக் கொண்டு அகப்படவியலா கண்டுபிடிப்பான, மீனைப் பிடிக்கிறார். அந்த விருந்தை உண்பதற்காக தயாரிக்கும்போது, உரு மாறி தப்பித்து ஓடி விடுகிறது. அந்த உரு மாற்றத்தைத் தேடித் தேடி காலம் ஓடி விடுகிறது. முதிய வயதிலும் அந்த கிடைக்கவியலாப் பெண்ணைத் தேடி மோகம் தலைக்கேறி அலைக்கழிக்கிறது. காட்டில் கனிகள் உண்டு. வேறு மீன்கள் உண்டு. அதில் நாட்டம் இல்லை

மனதிற்குப் பிடித்த வேலையை மூப்படையும் வரை செய்ய நினைப்பது அசல் விருப்பம். அந்த எண்ணம் மாயமானாக கண்ணாமூச்சி ஆடுவது கூட அசலில் நிகழ்வதே. இந்த நிஜத்தை, இளவயது காதலைத் தேடி பரிதவிப்பதற்கு ஒப்பிடுவதாக நினைப்பது கனவு லோகம்.

புனித பிம்பங்களை புனைவாக்குவது எப்படி?

Before I built a wall I’d ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offence.
Something there is that doesn’t love a wall,
That wants it down.
– “Mending Wall” – Robert Frost

பக்கத்துவீட்டுக்காரரையும் பாசமுடன் பார்க்க அழைக்கும் கவிதைகளை எழுதியவரின் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும்? “ஹார்ப்பர்” பத்திரிகையில் ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் கதை எழுதியிருக்கிறார். கொஞ்சம் காட்டமாக; நிறைய உள்மாந்திரமாக; ஆங்காங்கே வம்பு தூவி.

முழுக்க முழுக்க புனைவு என்றால் விட்டுவிடலாம். புகழ்பெற்ற எழுத்தாளனைப் பற்றிய கற்பனை என்று சொல்லிவிடலாம். கற்பனை என்பதால் நிஜ சமாச்சாரங்கள் ஒன்றும் உள்ளே கிடையாது என்றும் விட்டுவிடலாம். ஆனால், ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் எழுதிய சிறுகதைக்கு Fall of Frost (by) Brian Hall புத்தகம் அடிப்படையாக இருந்தது என அடிக்குறிப்பிடிருக்கிறார். அப்படி என்னதான் குற்றம் செய்துவிட்டார் ராபர்ட் ஃப்ராஸ்ட்?

1. சக எழுத்தாளர்களை மரியாதைக் குறைவாக விமர்சிப்பது: மற்ற கவிஞர்களை எல்லாம் மட்டம்தட்டி தன் புகழைப் பரப்பி இருக்கிறார். தன்னை ஆராதிக்காத எவராக இருந்தாலும், அவர்களுடைய முக்கியமான ஆக்கங்களை தன்னுடைய இலக்கிய தாதாயிஸம் மூலமாக அமுக்கி இருக்கிறார்.

2. குடும்பத்தை சிதைத்தது; ஆறு வயது மகளை துப்பாக்கி முனையில், “அப்பாவா? அம்மாவா? இப்பவே ஒண்ணு தேர்ந்தெடு!” என்று நள்ளிரவு எழுப்பி மிரட்டுகிறார். ‘மானே…தேனே’ என்று கவிதைப் பழகத் துவங்கிய மகனை முளையிலேயே அறுக்கிறார். பதினாறு வயது சிறுமி எவரை பார்த்தாலும், அவர்கள் பின்னே தன் கவிதையைப் பாடி துரத்தியிருக்கிறார்.

3. ஓரிரு படைப்புகளை முன்னிறுத்துயே காலந்தள்ளியது: ரஜினியின் எல்லாப் படத்திலும் பன்ச் வசனம் வருவது போல், தன்னுடைய சிறந்த கவிதையை மட்டும் எல்லா சபைகளிலும் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட தன்னுடைய ஆதர்சம், தன்னுடைய கண் முன்னே சரிவதை இந்தக் கதை புனைவாக்குகிறது. இலக்கியவாதியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யலாமா என்னும் கேள்வியை வீசுகிறது. சரித்திரக்கதையை எப்படி புனைகதை ஆக்குவது என காட்டுகிறது. அறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி போன்ற புனித போப் பிம்பங்களின் ஒன் ஹிட் வொண்டர் ஆக்கங்களை எப்படி கலைப்பது என காட்டுகிறது.

இங்கே இணையத்தில் முழுக்கதையும் கிடைக்கிறது

செல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து

இணையத்தில் கண்டது:

அ) Mohamed Hashmath  –  Yesterday 11:35 AM (edited Yesterday 11:36 AM)

ஆ) செல்ஃபோனில் காதலித்துப்பார்

உன்னைச் சுற்றி ஈக்கள் மொய்க்கும்
உலகம் உன்னையே பார்க்கும்
தொலைபேசிக் கட்டணத்தின் பெறுமதி விளங்கும்
உனக்கும் வறுமை வரும்
கடன்கள் அதிகமாகும்
ரீலோட் கடைக்காரன் கடவுளாவான்
உன் விரல்கள் பட்டே (தொலைபேசி) இலக்கங்கள் அழியும்
காதிரண்டும் செவிடாகும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

குப்பை மேட்டில் நின்று கதைப்பாய்
பல நாட்கள் குளிக்கமாட்டாய்
Call வராவிட்டால் நிமிசங்கள் வருசமென்பாய்
வந்துவிட்டாள் வருசங்கள் நிமிசமென்பாய்.
இந்த உலகமே உன்னைப் பைத்தியக்காரனாய்ப் பார்க்கும்
ஆனால் யாருமே பார்க்காததுபோல் உணர்வாய்
வீட்டுக்கும் ரோட்டுக்கும் பேயன்போல் நடந்து திரிவாய்
இந்த ஃபோன், இந்த சிம், இந்த ரிலோட் எல்லாமே காதலுக்குதவும் ஏற்பாடென்பாய்.
செல் ஃபோனில் காதலித்துப்பார்

உன் ஃபோன் அடிக்கடி சார்ஜில் கிடக்கும்
பேரிரைச்சல் கொண்ட நேரத்தில்கூட அவள் மிஸ்ட் காள் மட்டும் தெளிவாய்க் கேட்கும்
உன் ஃபோனே பெட்ரி டவுன்னாகி
உனக்கு ஆப்படிக்கும்
உன் பல மணிநேரங்களை அது விழுங்கும்
ஃபோன் கட்டணம் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உன் பாக்கெட் மட்டும் சஹாராவாகும்.
Missed Call வராவிட்டாள் பைத்தியம் பிடிக்கும்
Missed Call வந்துவிட்டால் பைத்தியம் அடங்கும்.
செல் போனில் காதலித்துப்பார்

கடன்களை வாங்கி வாங்கியே ரீலோட் பண்ண உன்னால் முடியுமா?
Out Goingஉம் SMSஉம் அவளிடமிருந்து வந்ததுண்டா
Call waiting போய் சண்டைகள் வந்ததுண்டா
கவரேஜ் இல்லா நேரங்களில் கூரைமேல் ஏறிப் பேசத் தெரியுமா
சபையிலே மெதுவாகவும்
தனிமையிலே உருகி உருகியும் பேச
உன்னால் ஆகணுமா
ஃபோன் சூடாகவேண்டுமா
ஐந்தங்குல இடைவெளியில் சாப்பாட்டுக் கடையிருந்தும்
பட்டினி கிடந்து (ரீலோர்ட் செய்ய) காசு சேர்த்துப் பழகியதுண்டா
தொலைபேசியில் காதலித்துப்பார்

ஏர்டெல் (சிம்) கொம்பனிக்காரன் வாழவேண்டுமே அதற்காகவேனும்
Nokia (ஃபோன்) கொம்பனிக்காரன் பிழைக்கவேண்டுமே அதற்காகவேனும்
டயலொக் சிம்முக்கும்
மொபிடெல் சிம்முக்கும்
கட்டண வித்தியாசம் விழங்குமே அதற்காகவேனும்
கழிவறையில் உற்காந்து கொண்டு பேசவும் முடியுமே
கட்டாந்தறையில் படுத்துக்கொண்டும் பேச முடியுமே அதற்காவேனும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்

பெற்றோர் உன்னிடம் சண்டைபிடித்தாலும்
உறவுகள் கேவலமாய்ப் பேசினாலும்
தொலைபேசிக் கட்டணம் எவ்வளவுதான் எகிறினாலும்
ஃபோன் எவ்வளவுதான் சூடானாலும்
நீ நேசிக்கும் அவள் உனக்கு மிஸ் கோர்ள் பண்ணாமல் விட்டாலும்
செல்ஃபோனில் காதலித்துப்பார்
நீ பிச்சைக்காரனாவாய் இல்லை கடன்காரனாவாய்

இரண்டில் ஒன்று
உனக்கு நிச்சயம்
செல்ஃபோனில் காதலித்துப்பார்..

அசல்

கவிப்பேரரசு வைரமுத்து – காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்…
உலகம் அர்த்தப்படும்…
ராத்திரியின் நீளம் விளங்கும்….
உனக்கும் கவிதை வரும்…
கையெழுத்து அழகாகும்…..
தபால்காரன் தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்…
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்…
காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்…
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்…
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்…
காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்…
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்…
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்…
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்…
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்…
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்…
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்…
ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்…
தாகங்கள் சமுத்திரமாகும்…
பிறகு
கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்…
காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே…
அதற்காகவேனும்…
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…
காதலித்துப் பார்!

எவன்டி உன்னப் பெத்தான் … கைல கிடைச்சான் செத்தான்

அவசரத்தில் ஆணுக்கானதா, பெண்ணுக்குரியதா என்று கவனியாமல் தவறான கழிவறைக்குள் நுழைந்து விடுவது போன்றது சிம்புவின் திரைப்பாடல்கள். எந்த டாய்லெட்டாக இருந்தால் என்ன… காரியம் நடக்கும்.

இன்னொரு விதத்தில் பார்த்தால் சிம்பு ஒரு ட்ரீம் டெவலபர். அவரைப் போல் பன்முறை சுழற்சிக்குள்ளாக்கக் கூடிய (ரெட்யூஸ். ரீயூஸ். ரீசைக்கிள்) கவி எவரும் இல்லை. நாலு எஃப், எட்டு டி போட்டால் பாடல் தயார். அதையே காலத்திற்கேற்றபடி டெண்டுல்கர், வைரமுத்து, மன்மோகன், ஃபேஸ்புக் என்று எவருக்கும் மாற்றிப் போடலாம்.

கடைசியாக பைந்தமிழ் பா வல்லுநர். சொல்பின்வரு நிலையணி, பொருள் பின்வரு நிலையணி, சொற்பொருட் பின்வரு நிலை அணி எல்லாம் ஒரே செய்யுளில் வருமாறும் புனைகிறார்.

அப்படி ஒரு பாடல் – (படம் :: வானம்)

Oh Baby I feel like flying
Flying up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make Love to me there

உன்னப் பாத்த ஃபெர்ஸ்டு செக்கன்ட்ல என்னக் காணோம்
தேடிப் பாக்கிறன் கண்டபடி நானும்

பாத்த ஃபெர்ஸ்டு செக்கண்ட்லேர்ந்தே என்னக் காணோம்
தேடிப் பாக்கிறன் கண்டபடி நானும்

சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும்

வந்து என்னக் கண்டுபிடிச்சுக் குடு
இல்ல ரொம்ப சிம்பிள் உன்ன எனக்குக் குடு
இல்ல தயவு செஞ்சு ஒரு GUN எடுத்து என்ன சுடு

எவண்டி உன்னப் பெத்தான்
கைல கிடைச்சான் செத்தான்

I Feel Like Kissing You
I Feel Like Touching You
I Feel Like Holding You
I Feel Like Looking Sweet Love To You..

என் ஃபேஸ்புக் ஸ்டேடஸும் நீதான்
என் ட்வீட்டர் ட்வீட்டிங்கும் நீதான்
என் ஸ்கைப் கோலும் நீதான் நீதான்

என் பி பி எம் உம் நீ தான்
என் ஃபேஸ் டைமும் நீதான்
என் ஐ ஃபோன் ஐ பாட் எல்லாமே நீதான்

என் ஐ டியூன்ஸ் ப்ளேலிஸ்டும் நீதான்
அதில் லவ் சோங்கும் நீதான்
அது ப்ளே ஆகிற ஸ்பீக்கர் நீதான்

என் அப்பாவும் நீதான்
என் அம்மாவும் நீதான்
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்

என் கடவுளும் நீதான்
என் உயிரும் நீதான்
எனக்கெல்லாமே நீதான்

I Feel Like Flying High Oh High Baby Girl
U Know U Make Me Go So Wild Oh Wild
U Baby Girl

உன் பேஸ்ட் ப்ரஷும் நான்தான்
உன் ஷவர்ஜெல்லும் நான்தான்
உன் மானம் காக்கிற மேலாடை நான்தான்

உன் லிப் க்ளொஸும் நான்தான்
உன் ஐ லைனர் நான்தான்
உன் அழகக் கூட்டிற மேக்கப் நான்தான்

உன் டெடி பெயாரும் நான்தான்
உன் பெட் & பில்லொவ் நான்தான்
உன் வீட்டோட நைட் வாட்ச்மான் நான்தான்

உன் நகமும் சதையும் நான்தான்
உன் எலும்பும் நரம்பும் நான்தான்
அது உள்ள ஓடும் ரத்தமும் நான்தான்

உன் ஃப்ரெண்டும் நான்தான்
பாய் ஃப்ரெண்டும் நான்தான்
உனக்கெல்லாமே நான்தான் நான்தான்

Who The F*** is your daddy daddy daddy daddy daddy daddy
if i see him he is just dead body body body body body body body
Who The Fuck is your daddy daddy daddy daddy daddy daddy
if I see him he is just dead body body body body body body body


இப்பொழுது இணையத்தில் கண்ட உல்டா

கலைஞர் சமீபத்துல “அம்மா”வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோட பாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு… அதே ட்யூன்ல பாடுங்க..

Oh (Big)Baby I feel like spitting
Spitting up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make fight To Me There

நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும்
தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும்
நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும்
தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும்

சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்
சத்தியமா எனக்கு தயாநிதி வே….ணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்

ஒண்ணு எனக்கு தமிழ்நாட்ட குடேய்…
இல்ல ரொம்ப சிம்பிள் ஸ்பெக்ட்ரம் கேச விடேய்
இல்ல தயவு செஞ்சி கனிமொழியயாச்சும் வெளிய விடேய்….

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
கைல கெடச்சா செத்த்தான் செத்தான் செத்தான் செத்தான்

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்…

மூஞ்சப் பாரு… i feel like….
மூஞ்சப் பாரு… i feel like….
மூஞ்சப் பாரு.. i feel like….

I FEEL LIKE …. BITING YOU
I FEEL LIKE …. PUNCHING YOU
I FEEL LIKE …. BEGGING YOU
I FEEL LIKE …. FUCKING YOU

என் head ache um நீதான், என் action 500 um நீதான்
என்னப் புடிச்ச 71/2 நீ தான் ((hi pitch))
என் sleeping pills um நீதான், என் power glass um நீதான்
நான் தினமும் போடுற sugar free yum நீதான் (hi pitch)
என் கலைஞர் காப்பீடு நீதான் என் சமச்சீர் கல்வி நீதான்
எனக்கு அடிச்ச ஆ..ப்பும் நீதான்
என் கச்சத்தீவும் நீதான்… என் மஞ்ச துண்டும் நீதான்
என் உண்ணா விரத போரும் நீதான்

என் enemy யும் நீதான். மடி கணிணியும் நீதான்
அட எல்லாமே நீதான்…. நீதான்…. நீதான்… நீதான்…ஆங்….ஆங்… ஆங்,… ஆங்… அஹ அஹ அஹ அஹ..ஆங்ங்ங்ங்…..

மூஞ்சப் பாரு… I FEEL LIKE…

Who the “M..” is your Mummy Mummy Mummy Mummy
நீ என்னை ஆக்கிட்ட Dummy Dummy Dummy Dummy

who the “D..” is your teacher teacher teacher teacher
நீ என்ன படுத்துற torture torture torture torture….

எவண்டி உன்ன பெத்தான்
என் கைல கெடச்சா செத்தான்..
எவண்டி உன்ன ……….த்தான்……. த்தான்……. த்தான்….
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்

வீட்டுப்பாடமாக கீழ்க்கண்டவற்றுக்கு பாடல் எழுதவும்:

  1. சச்சின் டெண்டுல்கர், 100
  2. கவிப்பேரரசு வைரமுத்து, நோபல் இலக்கியம்
  3. சாரு நிவேதிதா, ஞானபீடம்
  4. ஃபேஸ்புக், ஐபிஓ
  5. சோனியா காந்தி, அன்னா ஹசாரே
  6. ரூபர்ட் முர்டாக், பி ஸ்க பி
  7. கேசி ஆண்டனி, சி என் என்
  8. பராக் ஒபாமா, பற்றாக்குறை பொக்கீடு
  9. நெட்ஃப்ளிக்ச், யூ ட்யூப்
  10. பத்மநாபசாமி, புதையல்

Software Development & Writers, Bloggers, Authors: Technology & Tamil Net

பத்தாண்டு வலை வாழ்க்கை


அசல்

நகல் – தமிழ் புத்தக ஆசிரியரும் வாசகர் குழாமும்

Vijay & Anushka in Vettiakkaaran: Karikalan Kaala Pola

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்

ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்

மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு

கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு

பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு

சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு

கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்

Vijay’s Vettaikaaran: Nan Adicha Thanga mata

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்புப் புடி
நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள் பறை நீ

ஏய் வாழு வாழு வாழ விடு
வாழும் போதே வானைத் தொடு

வம்பு பண்ணா வாளை எடு
வணங்கி நின்னா தோளைக் கூடு

உணவு உடை இருப்பிடம்
உழவனுக்கும் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கணும்

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்

வாய் மூடி வாழாதே
வீண் பேச்சு பேசாதே

காலம் கடந்து போச்சுதுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதே

குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து

வரட்டி தட்டும் செவத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சை மீறாதே
தீயோர் சொல் கேட்காதே

ஏதோ நானும் சொல்லிப்புட்டேன்
ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையினா உன்ன நீயே மாத்திக்கோ