சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.
அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:
அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?
ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?
இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?
ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?
உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?
ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?
எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.
ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?
ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?
ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?
ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?
ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?
இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.
உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com
அன்னிய தேசத்திற்கு ஆயா வேலை பார்க்க போகும் எந்த இந்திய தாத்தா, பாட்டிக்கும் நடக்கக் கூடிய விஷயம் இது.
இதைப் போல் பல கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன:
“Everyday Use” by Alice Walker: ஆப்பிரிக்க அமெரிக்க சூழல்
“The Third and Final Continent” by Jhumpa Lahiri: இந்தியச் சூழல்
“The Joy Luck Club” by Amy Tan: சீன குடியேறிகளும், இரண்டாம் தலைமுறை அமெரிக்க மகள்களும்
எனினும் Gish Jen எழுதிய Who’s Irish? அதன் தமிழ் மொழிபெயர்ப்பால் மிளிர்கிறது. திறமையான மொழியாக்கம். எளிமையான, அணுகலான, சிக்கலற்ற நடை.
#Solvanam தளத்தில் படிக்கலாம்
Culture is the values, beliefs, thinking patterns and behavior that are learned and shared and that is characteristic of a group of people.Identities are constructed by an integral connection of language, social structures, gender orientation and cultural patterns.
சொல்வனம் தளத்தின் சிறப்பு இந்த மாதிரி விநோதமான கதைகளைத் தமிழில் அறிமுகம் செய்வது; வெறுமனே ஆங்கிலத்தில் இருக்கிறது என்று மட்டும் சுட்டாமல், வாசிக்கக் கூடிய தமிழில் உருவாக்கம் செய்வது!
தந்திரக் கை – கசந்த இனிப்பைச் சொல்லும் கதை. குறுவிசனம்.
ஒன்றை இழந்தால் மட்டுமே இன்னொன்றைப் பெற முடியுமா? இதை மேற்குலகில் Faustian offer என்கிறார்கள்.
இளம் பெண் சமீபத்தில் தனது கணவனையும் மகளையும் திடீரென்று சோகமான விபத்தில் இழக்கிறார். துக்கமும், வாழ்க்கையும் இறப்பும் அவை குறித்த நினைவுகளுமாய் கதை எழுகிறது. என்ன பேரம் போட்டார்கள்? எவற்றை விலை பேசினார்கள்? நினைத்தது நின்றதா?
“பால்ய கால நினைவுகளில் இருந்து இந்தக் கதை உருவானது. அப்பொழுதுதான், அந்தத் தாறுமாறான விளம்பரத்தை அதைவிட தாறுமாறான இடத்தில் தற்செயலாக பார்த்தேன். மூளையில் ஏற்பட்ட வீக்கத்திற்காக என் ஒன்றுவிட்ட அக்கா, அறுவை சிகிச்சைக்குள்ளாக இருந்த சமயம் அது. அந்த சமயத்தில் கடுமையான, நிலையான கலக்கத்தில் இருந்தேன். அப்பொழுது பயத்தால் முடங்கி, செய்வதறியாது அவளின் கணவனை, தினசரி இரண்டு தடவை அழைத்து அவளின் நிலையைப் பற்றி கேட்பேன். அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி அவள் சகஜநிலையான பிறகு, இதை எழுதத் துவங்கினேன். ”
solvanam வாருங்கள். வாசியுங்கள். உங்கள் கருத்தைப் பகிருங்கள்.
சொகுசான இடங்களில் வாழ்பவருக்கு வறுமையும் தெரியாது. அங்கிருப்போரின் கதைக்களனும் ரம்மியமாக உளச்சிக்கல்களைக் கொண்டிருக்கும்.
இது பெரும்பாலானோருக்கு உவப்பானது. பெரும்பாலானோர் கதை எழுதுவதில்லை. அவர் நிம்மதியை நாடுபவர்.
அமெரிக்காவாக இருக்கட்டும். பணத்தில் புரளும் மேற்குலகம் ஆகட்டும். ஒவ்வொரு நியு யார்க் லண்டனிலும் நுழையக்கூடாத பிரதேசங்கள் உண்டு. அது வரைபடத்தில் இருந்தாலும் கூகிள் மேப்ஸ் அனுப்பாத சாலையைக் கொண்ட அரணாக இருக்கும். அங்கு போதை வஸ்துவும் கிடைக்கும். ராப்பிசாசாக அலைபவருக்கு வேண்டியவையும் விற்கப்படும்.
இது பெரும்பாலானோர் விரும்புவது. நல்லவர் எல்லாம் சொர்க்கத்தில் மிதப்பது வசதி. அல்லவர் எல்லாம் நரகத்தில் கண் காணாமல் இருப்பது தெரியாது.
நல்ல உணவு; கொண்டாட்டமான கேளிக்கை; நடந்தால் வரும் சுகந்தம் – இது சொர்க்கவாசி.
சாலை நடுவில் திக்கற்ற பார்வதி; பச்சை குத்திய தடிமாடு; சாயம் போன கார்; பேட்டையில் நுழைந்தாலே வரும் பயம் – இது சுவர்க்கவிரும்பி ஹாலிவுட் படத்தில் மட்டும் பார்க்கும் அக்ரஹாரம்.
இவ்வளவு முன்னுரையும் எதற்கு?
அமெரிக்காவில் கருப்பினத்தவரை பிச்சை எடுத்து பார்த்திருக்கிறேன். வயதானவரை சாலையோரமாக தட்டி வைத்துக் கொண்டு உண்டியல் குலுக்குவதைக் கண்டு அவசரமாக நகர்ந்திருக்கிறேன்.
சிலர், “இந்த தானம் எனக்காக இல்லை! எங்கள் அமைப்புக்காக!!” என்று சொல்வார். சிலர், “நானும் என் குடும்பமும் சாப்பிட்டு ஆறு வேளை, மூன்று நாள் ஆகி விட்டது. இந்தக் கடுங்குளிரில் ஒரு வாய் கவளத்துக்காவது காணிக்கை கொடுக்கவும்.” என்பார். சிலர், “உனக்காக நான் இராக் சண்டைக்குப் போனேன்! அப்படிப்பட்டவனை இப்படியா நடு ரோடில் விடுவது?” எனக் கேட்பார்.
அவருக்கு உருக்குலைந்த தோற்றம் இருக்கும். வெறித்த பார்வை இருக்கும். போருக்குச் சென்று திரும்பியவர் என்றோ சமீபத்திய பொருளாதராச் சரிவில் வேலை இழந்தேன் என்றோ எழுதியிருக்கும். புகைக்கு அடிமையானவர் என்பது முக அடையாளம்.
கருப்பர்; நோஞ்சான்; எலும்புருக்கி; கிழவி; வெடவெடக்கும் கை; பதற்றமான நடை; இறைஞ்சும் பார்வை – இதைக் கடந்து போக மனதை சிந்தையின் நியாயம் கொண்டு அடக்குவேன்.
ஆனால்… இன்று…
சாலையின் இந்தப் பக்கம் இந்தியப் பெண்மணி. அசப்பில் மணிரத்னம் கதாநாயகி போல் இருந்தார். சாலையின் இன்னொரு பக்கம் போஷாக்கான பூசியத் தோற்றம் கொண்ட பழுப்பு நிற தெற்காசியன். தமிழனோ? தெலுங்காக இருக்குமோ? வட இந்தியராகவும் இருக்கலாம். பக்கத்தில் மூன்றோ, நான்கு வயதோ மதிக்கத்தக்க குழந்தை. அதற்கான தள்ளுவண்டி.
பிற இரப்பாளர் இடத்தில் பார்த்தது போன்றே அழுக்கான கம்பளி. உடைமையைக் கொண்ட தரைவிரிப்பு. நம்மவர் ஏன் இப்படி வருவோர், போவோரிடம் கையேந்த வேண்டும்?
எல்லா தேஸி மக்களும் சுந்தர் பிச்சை மாதிரி அந்தஸ்துடன் சௌக்கியமாக இருப்பவர்கள் அல்லவா? நல்ல சம்பளம். சொகுசான கார். வீட்டு வேலை உதவிக்கு பெற்றோர். ஞாயிறு ஆனால் ஊர்சுற்றல். இப்படிப்பட்ட குடிபுகுந்தவரை மட்டுமே பார்த்தவனுக்கு அறிவு இயங்க மறுத்தது.
யாசகத்துக்கு என்ன காரணமாக இருக்கும்?
மனைவியை விற்கும் அன்னக்காவடியோ?
குழந்தையை வைத்து மிரட்டுகிறானோ?
இந்த ஆண்களே இப்படித்தான். எருதாண்டிமாடு ஆண்வர்க்கம்.
தன் வீடு, வாசல் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு ஓட்டாண்டியானவரோ?
சாஃப்ட்வேர் இல்லாத உணவக வேலை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவரோ?
ஆடலுடன் பாடல் கச்சேரி நிகழ்ச்சிக்கு வருவோர் ஓரிருவரை தொலைத்துவிட்டுச் சென்றுவிடுவார். அந்த மாதிரி அனாதையாக்கப்பட்டோரோ?
ஆள்குறைப்பு, வேலையிழந்து நெடுங்காலம் காத்திருத்தல் போன்ற திடீர் தரித்திரத்தால் இந்த மாதிரி இறங்கினாரா?
கலிஃபோர்னியா போன்ற வேறு ஊரில் இருந்து வந்து கொள்ளையடிக்கப்பட்டு அனைத்து விஷயங்களையும் இழந்தவரோ?
பேருந்து நிலையத்தில் பயணத்திற்கு சொந்த ஊருக்குத் திரும்பிப் போக காசு வேண்டும் என்று இறைஞ்சுவாரே… அவரோ?
செய்வதறியாது திகைத்து கையறு நிலையில் இந்த இறுதி மார்க்கத்தில் இழங்கியவரோ?
சீவகராக பிஷை எடுத்து உண்ணவேண்டும் என்பது ஜாதகப் பரிகாரமாக சொல்லப்பட்டதால் அதற்காக இந்த மாதிரி பொன்னம்பலத்தார் ஆனாரோ?
பிட்காயின், டாஜ்காய்ன், எதிரீயம் என்று பணத்தை சூதாடி அழித்தவரோ?
அந்தப் பெண்ணின் அறிவிப்புத் தட்டியைப் படிக்க எத்தனித்தேன். அந்த அட்டை என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்குள் பச்சை விழ சாலையை விரைந்து விட்டேன்.
கூட வந்த நண்பர் செந்தில் சொன்னார்: “ரொம்ப யோசிக்காதீங்க பாலா… குறும்பட ஷுட்டிங் ஆக இருக்கும்!”
பின்புறம் காவலர் வருவது தெரிந்தது. அந்தத் தம்பதியரையும் சிறுவனையும் போலிஸ் ஜீப்பில் ஏற்றியனுப்புவது தூரப்புள்ளியாக மறைந்தது.
மேற்குலகின் இலக்கிய வட்டத்தில் சிறுகதைகள் ஆழமான வாசிப்புக்கு போதுமானவை அல்ல என்பது பெரும்பான்மை வாதம். அந்தக் கருத்திற்கு சவால் விட்டு நிராகரிக்கும் ஆக்கங்கள் பரிசு பெறுகின்றன.
அந்த மாதிரியான படைப்பு – டீஷா ஃபில்யா எழுதிய “ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி? ”
இது எச்.பி.ஓ. தொலைக்காட்சியில் டிவி தொடராக வரப்போகிறது. பென் + ஃபாக்னர் விருது வாங்கியிருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் புகழைப் பெற்றிருக்கிறது.
இந்த மாதிரி பரிசுகள் பெறுவதற்கு முன், முதலில் ஒரு வெளியீட்டாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர் கொள்கின்றன. நிராகரிப்புக்குப் பிறகு நிராகரிப்பை எதிர்கொண்ட டீஷா, “ஒவ்வொரு புத்தக வெளியீட்டாளரும் அது “நல்ல பொருத்தம்” அல்ல என்று வலியுறுத்துகின்றனர். ஏன் இவ்வளவு பிரசுரகர்த்தாக்கள் என் தொகுப்பை திரும்ப அனுப்பினார்கள் என்று யோசிக்காமல் இருப்பது கடினம் என நினைத்தேன். அவர்கள் எல்லோரும் கறுப்பு (குணம்) என்னும் அடையாளத்தை அழித்து கருப்பினத்தவர்களின் கதைகளை எழுதச் சொன்னார்கள். அந்த மாதிரி கட்டுப்பாடுகள் இல்லாத பதிப்பகத்தார் கடைசியில்தான் கிடைத்தார்.” என்கிறார்.
கதைசொல்லி நாற்பதுகளில் இருக்கும் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி. பள்ளியில் ஓவியம் கற்றுக் கொடுப்பவர். அவளை ஒரு பொதுக்கூட்டத்தில் சந்திக்கிறோம். கலையையும் அறிவியலையும் ஒருங்கிணைத்து எவ்வாறு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் என்பதற்காக அந்தக் கல்வி மாநாடு நடக்கிறது. அவளுக்கு கருப்பின ஆண்கள் எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்பதன் மீது ஒரு கண். அந்த ஆடவனை அவளின் அம்மா ஒப்புக் கொள்ள வேண்டும்.
அவள் திறமையான இயற்பியலாளரை சந்திக்கிறாள். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால் அவசரப்படாமல் எச்சரிக்கையாக இருக்கிறார். முதல் சந்திப்பில் மணிக்கூறாக பேசுகிறார்கள். அவளின் வேலையைப் பற்றிப் பகிர்கிறாள். அவனும் தன் வேலையைப் பற்றிச் சொல்கிறான். இருவரும் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்கிறார்கள். இருப்பினும் முதலில் அவனுக்கு காதல் ஆர்வம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.
உறவின் வளர்ச்சியைப் பார்ப்பதுதான் கதையின் உற்சாகம்.
இந்த அற்புதமான கதையை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கதையை திற்ம்பட மொழியாக்கம் செய்த ஷ்யாமா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
வாசகர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் படித்ததில் எந்த ஆக்கத்தை நவீன உருவகக் கதையாக கருதுகிறீர்கள்? எவை படிமத்தை தன்னுள்ளே கொண்டே நாவலின் தன்மையையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது?
வெ.சா.
ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகினார். அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். Darkness at Noon என்று அதற்குப் பெயர். அது உடனே உலகம் முழுதும் புகழப்பட்ட, கெஸ்லருக்கு உலகப் புகழ் அளித்த நாவலும் ஆயிற்று. நாவல் முழுதும் நிகழ்வது ஒரு சிறைச்சாலையில். அரசியல் கைதியின் சிறைவாசம் பற்றியது. ஒரு கைதிக்கும் இன்னொரு கைதிக்கும் (அவனும் அரசியல் சதிச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவன்} இடையே பழக்கம் ஏற்படுவது கதவைத் தட்டித்தான். கதவையா, சுவரையா? என்பது மறந்து விட்டது. அந்தத் தட்டலிலும் ரகசியக் குறிப்புகள் உண்டு. எல்லாமே அன்றைய ரஷ்யாவில் நடந்த அரசியல் சதிகள், வழக்குகள், கொலைகளைப் பிரதிபலிப்பதாகத் தான் சிறைச்சாலை நடப்புகளை நாம் புரிந்து கொள்வோம். இதே போல இன்னொரு குறியீட்டு நாவலும் அப்போது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. ஜியார்ஜ் ஆர்வெல் என்னும் ஆங்கில நாவலாசிரியரின் மிருகங்களின் பண்ணை ( Animal Farm) என்னும் ஒரு நாவல். பன்றிகள் அந்தப் பண்ணையைக் கைப்பற்றி விடுகின்றன. முன்னால் இரண்டு கரடிகள் ஓன்றையொன்று அழிக்கத் திட்டமிட்டு இரண்டுமே அழிகின்றன. பன்றிகளின் ராஜ்யத்தில் ஒரு கோஷம் “எல்லாரும் சமம் இங்கு. ஆனால் கொஞ்சம் கூட சமம் கொண்ட பன்றி தான் அதிகாரம் செய்கிறது. (All are equal. But some are more equal) நமக்குப் பரிச்சயமான பஞ்ச தந்திரக் கதைகள் பாணியில் ரஷ்யாவில் நடைமுறையிலிருந்த கோஷங்களையும் அதன் நடைமுறை அர்த்தங்களையும் கிண்டல் செய்தது மிருகங்களின் பண்ணை.
கருத்துருவகம் (அலிகரி) ஒரு திட்டவட்டமான பொருளைச் சுட்டும் பொருட்டு உருவாக்கப்பட்ட இன்னொரு பொருள் அல்லது அமைப்பு அல்லது கூற்று.
பராசக்தி ஒரு உருவகக்கதையாக (allegory) அமைக்கப் பட்டிருந்தது 1952 வெளிவந்த இந்தப்படக்கதை பிரிட்டீஷ் இந்தியாவில் அதாவது 1952 நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த புகழ்பெற்ற நீதிமன்றக் காட்சி, நீதிபதியின் இருக்கைக்கு மேலிருக்கும் பிரிட்டீஷ் அரசின் சின்னத்தின் வெகுஅண்மைக்காட்சியுடன் தொடங்குகின்றது. தணிக்கை முறையிலிருந்து தப்ப பலநாடுகளில் இத்தகைய உத்தி அமைக்கப் பட்டிருந்தாலும் பராசக்தி தணிக்கை வாரியத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது
– சு. தியடோர் பாஸ்கரன் (மீதி வெள்ளித்திரையில்)
என் பார்வையில் கீழ்க்கண்ட தமிழ்ப் படைப்புகளைச் சொல்வேன்:
காடு – ஜெயமோகன்
வெயிலைக் கொண்டு வாருங்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி (சூரியனுக்கு அருகே சென்று கருக விரும்பும் பறவையாக ஜோசப் ஜேம்ஸை கற்பிதம் செய்வது)
பூனைக் கதை – பா. ராகவன்
அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் – எம்.ஜி. சுரேஷ்
ஒரு எழுத்தின் சாயல் உங்கள் மீது பட்டு விடாமல் இருக்க கண்டதையும் படிக்க வேண்டும். வித விதமாக வாசிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரை முதல் ஆன்மிகம் வரை எதையும் விடக் கூடாது.
அதுவும் அறிவியல் புனைவு மாதிரி எழுத நினைக்கும் போது ஃபிலிப் ராத் கதைகளும் ஜெயகாந்தன் புனைவுகளும் கையில் எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத துறையில் ஆழ்ந்து, அமைதியாக மூழ்கினால் நல்ல எழுத்து வரும்.
அந்த நினைப்பில் மீண்டும் தி.ஜா.வை எடுத்தேன். பயப்பட வேண்டாம். இன்னும் எதுவும் எழுத ஆரம்பிக்கவில்லை. எனினும், அரூ போட்டி முடிவவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், அதில் சில கதைகள் ஜெயமோகனின் சாயலில் இருப்பதாக வெளியான கட்டுரைகளும் இந்த முன்குறிப்பை எழுத வைத்தது.
தலைப்புக்கு போய் விடலாம்: ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்” – குறுநாவல் அளவில் ஒரு சிறுகதை. நல்ல வேளையாக இணையத்தில் கிடைக்கவில்லை.
கதையை சொல்லாமல், இந்த ஆக்கம் ஏன் எனக்குப் பிடித்தது என்று பட்டியல் போடலாம்:
பா. ராகவன் சொல்வார் (அவர்தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டாலும் சிக்கலில்லை) – ஒரு நல்லவர் கெட்ட விஷயத்தை செய்ய வேண்டும். கெட்டவராக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஏதாவதொரு உத்தமமான விஷயத்தை செய்ய வேண்டும். அதெல்லாம் இந்தக் கதையில் நடக்கிறது.
2. என்னுடைய மாமா அன்னதாதா. நிறைய தான தருமங்கள் செய்பவர். தினமும் வீட்டு வாசலில் வரும் மாடு முதல் எங்கோ இருக்கும் குப்பைமேட்டில் பொறுக்குபவர் வரை தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களும் ஆடைகளும் தருபவர். கோடையில் அவரின் நிலத்தடி நீர் வற்றி விட்டது. கிணற்றை தூர் வார ஆட்களை அழைத்திருந்தார். நூறடி வரை புரட்டிப் போட்டு வெளியகற்றுவது என்று ஒப்புதல். வந்த மூன்று பேரும் காலை ஏழில் இருந்து மாலை நான்கு வரை அடைப்பை நீக்கி தெளிவாக்கின்றனர். வண்டலை இழுத்து வெளியேற்றி விட்டதாகச் சொல்கின்றனர். நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகமாகி நீரேந்தும் அளவும் மேம்பட்டதாக கண்ணுக்கு பட்டது. ஆனால், என் மாமாவோ, “இது நூறடி இல்லை!” என்றார். அவர்கள், “சாமீ… இது சத்தியமா நீங்க சொன்ன கூலிக்கு, ஒப்பந்தப்படி முழுக்க தூர் வாரிட்டோம்.” என இறைஞ்சுகிறார்கள்.
கடகடவென் மாமா கிணற்றில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதல பாதாளத்தை நோக்கி இறங்க ஆரம்பித்தார். கையில் நூறடியை அளக்கும் அளவுகோல் வேறு. நான் மிரண்டு விட்டேன். அவர்களும் அரண்டு விட்டார்கள். கடைசியில் அளந்து பார்த்ததில் எண்பத்தி ஏழு அடிதான் ஆகி இருந்தது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க மாட்டார்; ஆனால், ஆற்றில் போடும் ஊதியத்தை அளந்து பார்ப்பார்கள் மனிதர்கள்.
மீண்டும் பாரா: சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும். – இதெல்லாம் வைத்திருக்கிறார் ஜானகிராமன்.
இதைத்தான் சிவசங்கரி “சின்ன நூற்கண்டா உங்களை சிறைப்படுத்தும்?” என்று அ-புனைவாக ஆக்கினார்?
தி.ஜா.ரா.வின் வார்த்தையிலே சொல்வதானால்: “எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். ”
இந்தக் கதையில் என்னத் தெறிப்பு என்பதை வாசித்து விட்டு சொல்லுங்கள்.
நெட்ஃப்ளிக்சில் “ரவீந்திரநாத் தாகூரின் கதைகள்” பார்த்தேன். அனுராக் பாசுஇயக்கியது. கதைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்னவென்றால், பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் துன்பத்தில் இல்லை.
சோகர் பாலி
மான்பஞ்சன்
உடைந்த கூடு
எறும்பு அரம்பு (“சமப்தி” அடிப்படையில்)
தண்டனை (‘சாஸ்தி’ அடிப்படையில்)
டுய் பான் (இரண்டு சகோதரிகள்)
மிருனால் கி சித்தி
அதிதி
காபூலிவாலா
The stories by themselves may not read great (now).
Assume for a second (hypothetically), a well-trained person who is good in literal translation brings it to Tamil – It will be verbatim and plain.
but, The screen adaptation, the sets (art director), time machine going to the 19th century, beautiful costumes, coloring, photography, rustic scenery – all add magic to the short stories/fiction.
Did I say, the women in this series are just nostalgic and beautiful? The same actresses in other films were never showed them in this light.
It is relaxing, enjoyable, and pleasant. When I am in tough times (job loss, covid, other sad events), I like to watch feel-good films. When life is good (promotion, arrival of newborns, good events), I like to watch depressing movies, dystopian sci-fi.
So, I liked this Tagore series on Netflix.
via interweb
“துன்பத்தில் ஒரு பெண் இல்லை” – ரவீந்திரநாத் தாகூரின் கதைகள் சக்திவாய்ந்த பெண்களை சித்தரிக்கின்றன
நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் முற்போக்கான, தைரியமான, மற்றும் அவர்களின் காலத்திற்கு முன்னால் இருந்த கதைகளுக்கு பெயர் பெற்றவர். இந்த கதைகளின் தொகுப்பானது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “ரவீந்திரநாத் தாகூரின் கதைகள்” என்ற பெயரில் அனுராக் பாசு இயக்கியது. இது EPICசேனலில் ஒளிபரப்பப்பட்டது, மேலும் இது பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிகழ்ச்சி தற்போது நெட்ஃபிக்ஸ் இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அனுராக் பாசு வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனது தனித்துவமான தொடர்பைக் கொடுத்தார், மேலும் நடிகர்கள் தங்கள் பங்கை மிகச்சிறப்பாக நடித்து இந்த கதைகளை உயிர்ப்பிக்க வைத்தனர். கதைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்னவென்றால், பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் துன்பத்தில் இல்லை. தாகூரால் நெய்யப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் பெண்கள் பலவீனமானவர்களாகவும் சார்புடையவர்களாகவும் கருதப்பட்டு ஆணாதிக்க வங்காள சமுதாயத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளான காலங்களில் தைரியமாக இருந்தன. ரவீந்திரநாத் தாகூரின் சில கதைகளின் பட்டியல் இங்கே, பெண் கதாபாத்திரங்கள் அவற்றின் காலத்திற்கு முன்னால் இருந்தன, தங்களுக்குள் புரட்சிகரமாக இருந்தன.
1. சோகர் பாலி
ஆதாரம்: தாசா புதுப்பிப்புகள்
சோகர் பாலி என்பது ஒரு பெங்காலி சொல், அதாவது ‘கண்ணில் மணல்’ அல்லது ‘கண்ணில் உள்ள துகள் தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்துகிறது’. இந்த சொல் தனிநபர்களுக்கிடையேயான உறவுகளின் சிக்கலான வலையை மிகச்சரியாக விவரிக்கிறது, குறிப்பாக இந்த வார்த்தை ஒரே மனிதனை விரும்பும் இரண்டு பெண்களுக்கு இடையிலான பொறாமையை விவரிக்கிறது. ராதிகா ஆப்டே, ஆரம்பத்தில் விதவை பெற்ற பினோதினி என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தவர், ஆஷலதாவை திருமணம் செய்து கொண்ட மகேந்திராவின் மீது கண்களைக் கொண்ட ஒரு பெண்மணியாக சித்தரிக்கப்படுகிறார். பினோடினி ஒரு விதவை, இது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவாக கருதப்பட்டது. மகேந்திராவை அவளது சிற்றின்பத்தால் கவர்ந்திழுக்க முயற்சிக்கையில், அவளது பாலுணர்வை ஆராய அவளுக்கு ஒரு வெறி இருந்தது. இது காமம் மற்றும் பொறாமை ஆகியவற்றின் கலவையாக இருந்தது, ஏனென்றால் பினோடினியை கூட பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை மகேந்திர நிராகரித்தார், மேலும் அழகான ஆனால் படிக்காத பெண்ணாக இருந்த ஆஷலதாவை மணந்தார். தனது வாழ்க்கையில் எந்த விதியை எதிர்கொண்டாலும் அது மகேந்திரா மற்றும் அஷலதா தான் என்று பினோடினியின் இதயத்தில் ஆழ்ந்த மனக்கசப்பு இருந்தது, மேலும் அவர் அவருக்கு ஒரு சிறந்த போட்டி என்று அவர் நம்பினார். அவள் ஆஷலதாவுடன் நட்பு கொண்டிருந்தாள், இது மகேந்திராவை நெருங்குவதற்கான வாய்ப்பாகக் கண்டாள்.
பினோடினியின் விதவை அவளது பாலியல் ஆசைகளை அடக்கச் செய்யவில்லை. அவர் ஒரு வாம்பாக சித்தரிக்கப்படுகிறார் என்றாலும், அவர் சூழ்நிலைகளுக்கு பலியானார் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான அவளுடைய உரிமை அவளுடைய விதியால் பறிக்கப்பட்டது. அவர் ஒரு துறவி அல்ல, ஆனால் ஒரு பெண், அதன் செயல்கள் அன்பு, காமம் மற்றும் பொறாமை ஆகியவற்றால் நகர்த்தப்பட்டன, அது அதிக உயிர்களை நாசமாக்கியது மற்றும் அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதை உணராமல். பல்துறை நடிகையாக ராதிகா ஆப்தே பினோடினியின் பாத்திரத்திற்கு நியாயம் செய்தார், இது தாகூரின் கதைகளில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புத்திசாலித்தனமான கதாபாத்திரங்களில் ஒன்றாக மாறியது.
2. Maanbhanjan
source: instagram
ஒரு அழகான மற்றும் திறமையான பெண்மணியான கிரிபாலாவைச் சுற்றி கதை சுழல்கிறது, அவர் ஒரு பணக்கார ஆனால் மோசமான நில உரிமையாளரான கோபிநாத்தை மணந்தார். அவர் மீதான காதல் இழந்து அவர் ஒரு நாடக நடிகை லத்திகாவைப் பார்க்கத் தொடங்கினார். ஒருமுறை, கிரிபாலா தனது கணவர் தன்னைப் பற்றிய அலட்சியத்தின் மூலத்தைக் காண ரகசியமாக தியேட்டருக்குச் சென்றார். லத்திகா நடித்த லைலா மஜ்னுவின் நாடகத்தைப் பார்த்த அவர், மயக்கமடைந்தார். கணவனை மீண்டும் வெல்ல நாடக நடிகையின் அழகை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார். அவரது அழகு மற்றும் பல முயற்சிகள் இருந்தபோதிலும், கோபிநாத் ஒதுங்கி இருந்தார். அவன் ஒரு முறை அவளை மோசமாகத் தூக்கி லத்திகாவுடன் ஓடிவிட்டான். லத்திகா கணிசமான காலத்திற்கு தியேட்டரில் இல்லாததால், அவருக்கு பதிலாக ஒரு புதிய நடிகை வந்தார் என்ற செய்தியைக் கேட்டார். அவர் ஏமாற்றமடைந்து, அவருக்கு பதிலாக யார் என்று கண்டுபிடிக்க கோபிநாத்தை தியேட்டருக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். பாராட்டுக்களைப் பெற்ற புதிய நடிகை வேறு யாருமல்ல, அவரது சொந்த மனைவி கிரிபாலா அல்ல என்பதைக் கண்ட கோபிநாத், அதிர்ச்சியடைந்தார்.
கிரிபாலா தனது கணவரை மீண்டும் கவர்ந்திழுக்க ஒரு நாடகக் கலைஞராக ஆனார் என்று சில பார்வையாளர்கள் கருதினாலும், ஒரு முறை அவர் தியேட்டரில் சேர்ந்து புகழ்பெற்ற முகமாக மாறினார் என்ற விளக்கத்தை நான் கண்டேன், அது அவளிடமிருந்து எடுக்கப்பட்ட சரியான பழிவாங்கல் வேறொரு நாடக நடிகைக்காக அவரை விட்டு வெளியேறிய கோபிநாத். கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒரு திருமணமான பெண்ணின் அவலநிலையை இந்தக் கதை காட்டுகிறது, அதே நேரத்தில் தனக்கு ஒரு பெயரை உருவாக்க தனது துக்கங்களுக்கு மேலே உயர்ந்த அதே பெண்ணின் வலிமையையும் இது காட்டுகிறது.
3. உடைந்த கூடு (நாஷ்டானீர்)
Thanks: pinterest
ஒரு தனிமையான இல்லத்தரசி தனது திருமணத்திற்கு வெளியே உருவாகும் ஒரு உணர்ச்சி ரீதியான இணைப்பை மையமாகக் கொண்டு, கதையின் தலைப்பு சரியானது, இது ஒரு திட்டமிடப்படாத காதல் முக்கோணத்தின் காரணமாக ஒரு திருமண உறவு எவ்வாறு சிதைந்து போகிறது என்பதைக் காட்டுகிறது. செய்தித்தாள் ஆசிரியரான பூபதி தனது பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார், அவரது மனைவி சாருலதா, அழகான, திறமையான மற்றும் படித்த பெண்மணிக்கு இசையில் ஆர்வம் கொண்டவர். அவர் தனது உறவினர் அமோல் என்ற சட்ட மாணவரை அவர்களுடன் வாழ அழைக்கிறார், இதனால் அவர் சாருலதாவுக்கு நிறுவனம் கொடுக்க முடியும். அமோல், தனது நகைச்சுவையான தன்மையுடன், அவளுக்கு ஒரு சிறந்த நிறுவனமாக மாறிவிடுகிறார், அதே நேரத்தில் அவளுக்கு இசை பாடங்களையும் தருகிறார். தேவர்-பாபி இரட்டையர்கள் இசை, கவிதை மற்றும் இயற்கையின் மீது பிணைப்பைத் தொடங்கினர். படிப்படியாக, சாருலதா தனது கணவரைப் புறக்கணிக்கும்போது அமோலுக்கு ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டார். அமோல் இதை உணர்ந்து, அவளிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முடிவுசெய்து, ஒரு திருமண கூட்டணியை ஏற்றுக்கொண்டார். சாருலதா அவனை தங்குமாறு கெஞ்சினாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. க்ரெஸ்ட்ஃபாலன், அவள் மீண்டும் தனிமையாகி, அமோல் வெளியேறியவுடன் இசை மற்றும் கவிதை மீதான அனைத்து ஆர்வத்தையும் இழந்தாள். தனக்கு ஒரே ஆதரவாக இருந்த மனைவி, தனது தம்பியின் எண்ணங்களில் தொலைந்து போயிருப்பதை அறிந்த பூபதி மனம் உடைந்தாள். மைசூரில் ஒரு வேலையை எடுக்க அவர் நகரத்தை விட்டு வெளியேறினார், சாருலதாவிடம் தன்னுடன் இருந்தால் மட்டுமே அவளை தன்னுடன் அழைத்துச் செல்வேன் என்று கூறி அவளது சோகத்தையும் தனிமையையும் முடிவுக்குக் கொண்டுவந்தான். அவள் உண்மையாக இருக்க முடிவுசெய்து, இந்த திருமணத்தில் எந்தவிதமான உணர்ச்சிகரமான தொடர்பும் இல்லை என்பதை அறிந்த அவனுடன் செல்ல மறுத்துவிட்டாள்.
ஒரு வழக்கமான உலகத்தைப் பொறுத்தவரை, திருமணமான ஒரு பெண் மற்றொரு ஆணுக்கு விழுவது ஒரு முழுமையான பாவமாகத் தோன்றலாம். ஆனால் சாகுலதா கறுப்பு நிறத்தை வரைவதற்கு தாகூர் தைரியமாக இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒரு பெண்ணின் தனிமை, அவரது துக்கம், வாழ்க்கையின் அனைத்து சிறிய விஷயங்களிலும் அவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை, சாருலதா இழந்த அனைத்தையும் மிக அழகாக சித்தரிக்கிறது. சாருலதா கதாபாத்திரத்தில் நடிக்கும் அமிர்தா பூரி பார்வையாளர்களை தனது ஒளி வீசுவதால் மெய்மறக்கச் செய்து கதையை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
4. எறும்பு அரம்பு (“சமப்தி” அடிப்படையில்)
Courtesy: pinterest
இது இரண்டு துருவ எதிர் நபர்களுக்கு இடையிலான காதல் கதை. அபூர்பா, ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர், படித்தவர், தனது விதவை தாயிடம் கீழ்ப்படிதல் கொண்டவர், ஒரு தாழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த டோம்பாய்ஷ் பெண்ணான மிருன்மொயீயைக் காதலிக்கிறார். ஒரு மருமகள் மற்றும் ஒரு பாரம்பரிய வீட்டில் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அவள் வெறுப்படைந்தாள். அபூர்பாவின் தாயும் மிருன்மொயீயை ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் இறுதியாக தனது மகனின் ஒரே விருப்பத்திற்கு அடிபணிந்து, அவர்களை திருமணம் செய்து கொண்டார். மிருன்மோய் அபூர்பாவிடம் தன்னை நேசிக்கவில்லை என்று தெளிவாகக் கூறுகிறார், மேலும் ஒரு மரபுவழி குடும்பத்தின் மருமகளின் தரத்துடன் பொருந்த முயற்சித்ததில்லை. ஆனால் அபூர்பாவின் கனிவான இதயமும், அவர்மீது அவர் கொண்டிருந்த அன்பும், அவருக்காக அவளை வீழ்த்தியது, அதே நேரத்தில் அவளும் மாமியார் மீது ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டாள், அவளுடைய பாசத்தை வென்றாள்.
ஒரு ஆண் தன்னை காதலிக்க வைப்பதற்கு பெண்ணின் தன்மை, நேர்த்தியானது அல்லது கருணை போன்ற சமூக விதிமுறைகளுக்கு ஒரு பெண் பொருந்த வேண்டியதில்லை என்ற கதை ஒரு செய்தியை அனுப்புகிறது. அவள் அவளாகவே இருக்க முடியும், அவளுடைய எல்லா குறைபாடுகளையும் மீறி சரியான மனிதன் அவளை நேசிப்பான். இங்கே, திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை ஏன் கடுமையாக மாறுகிறது என்பதை மிருன்மோயியால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதே நேரத்தில் ஒரு பையனின் வாழ்க்கை அப்படியே உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு பெண்ணாக இருந்து ஒரு பெண்ணாக இருக்கும் பயணத்தின் பாரம்பரிய யோசனையையும், இந்த யோசனைகளுக்கு எதிராக நிற்கும் கதாநாயகன் பற்றியும் ஆராய்கிறது.
5. தண்டனை (‘சாஸ்தி’ அடிப்படையில்)ஆதாரம்: எழுத்தாளரின் கஷாயம்
“நான் என் மனைவியை இழந்தால் இன்னொருவரைப் பெற முடியும், ஆனால் நான் என் சகோதரனை இழந்தால் நான் எப்படி மற்றொரு சகோதரனைப் பெறுவது?” கதையில் ஒரு கதாபாத்திரத்தால் கூறப்பட்ட இந்த வரிகள் பெண்களை மனித நேயமயமாக்குவதன் வேதனையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன, குறிப்பாக ஒரு மனைவி மற்றும் மருமகளின். பெண்கள் வெறுமனே சமூகத்தில் மலிவான, மாற்றக்கூடிய பொருட்களாக கருதப்படுகிறார்கள். ஒரு திருமண வீடு ஒரு பெண்ணின் உண்மையான வீடாகக் கருதப்படுகிறது, ஆனால் அவள் காட்டிக் கொடுக்கப்பட்டு மாற்றக்கூடிய விஷயமாகக் கருதப்பட்டால் என்ன செய்வது? தாகூரின் ‘சாஸ்தி’யை அடிப்படையாகக் கொண்ட’ தண்டனை ‘என்பது ஒரு கதை, அங்கு மினி என்ற இளம் பெண் தனது பெற்றோர் வீட்டில் நேசிக்கப்படுகிறாள், அவளது புதிய வீட்டில் சரிசெய்ய முயற்சிக்கிறாள். அவரது மூத்த மைத்துனர் ஒரு மோசமான பெண்மணி, அவர் எப்போதும் வேலை செய்வதைக் கண்டித்தார், அதே நேரத்தில் அவரது கணவர் உபேந்திரா ஒரு அன்பான மனிதர், வீட்டில் அவரது ஒரே தனிமை. ஒரு அதிர்ஷ்டமான தேதியில், அவரது மைத்துனருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஒரு சூடான வாக்குவாதம் நடந்தது, அந்த தருணத்தின் வெப்பத்தில், அவர் அவளைக் கொன்றார். காவல்துறையினர் வந்ததும், இதனால் முற்றிலும் அதிர்ச்சியடைந்த அப்பாவி மினி மீதான குற்றச்சாட்டுகளை உபேந்திரா மாற்றினார். இரண்டு பெண்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார், மினி தற்செயலாக ராதாவின் தலையில் ஒரு குவளை அடித்தார். மினி எல்லா வழிகளிலும் அமைதியாக இருந்தார். அவள் மறுக்கவில்லை. கீழ்ப்படிதலுள்ள மனைவியின் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற தந்தையின் வார்த்தைகளை அவள் நினைவில் வைத்தாள். உபேந்திரா குற்றத்தை இனி தாங்க முடியாதபோது, அவர் தான் குற்றவாளி என்று திறந்த நீதிமன்றத்தில் கூறினார். தனது சகோதரனின் தியாகத்தைப் பார்த்ததும், மூத்த சகோதரர் தேவேந்திரர் கடைசியாக தனது மனைவியைக் கொன்றது என்று ஒப்புக்கொண்டார். இந்த குழப்பத்தில், மினி பின்வாங்கவில்லை, முன்பு அவர் மட்டுமே என்று கூறப்பட்டதால், அவர் நீதிமன்றத்தால் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்.
வெளிப்புறமாக, மினி தனது கணவனையும் அவரது சகோதரரையும் காப்பாற்றும் ஒரு நல்ல மனைவியின் கடமையை நிறைவேற்றுவதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது அவளுடைய அமைதியான கிளர்ச்சி. தனது நம்பிக்கையை காட்டிக்கொடுத்து சிறைக்கு அனுப்பிய கணவருக்கு எதிரான கிளர்ச்சி. அவர் தனது தரையில் நின்று, தனது கணவரை பாரிய குற்ற உணர்ச்சி, தனிமை மற்றும் வருத்தத்தின் ஆயுள் தண்டனைக்கு அனுப்ப இறக்க தயாராக இருந்தார். தன்னை பின்னுக்குத் தள்ளிய கணவனை விட தூக்கு மேடைக்கு தன் உயிரைக் கொடுக்க அவள் தயாராக இருந்தாள். சோதனை முழுவதும் மினியின் ம silence னம் மற்றும் இறுதி வரை கதையின் மிக சக்திவாய்ந்த, இதயத்தைத் தூண்டும் பேச்சு என்பதை நிரூபித்தது.
6. டுய் பான் (இரண்டு சகோதரிகள்)ஆதாரம்: ரைட்டர்ஸ் ப்ரூ
கதாநாயகர்களின் பாலின மாற்றத்துடன் கதை தி ப்ரோக்கன் நெஸ்ட்டைப் போன்றது. இங்கே ஒரு மனிதன் தன் மனைவியின் சகோதரியை காதலிக்கிறான். கதை ஒரு பெண்ணின் இரண்டு வடிவங்களை சித்தரிக்கிறது. ஒன்று அன்பானவர் – மகிழ்ச்சியான, கட்டுப்பாடற்ற மற்றும் சுதந்திரமான, காமவெறி, மற்றும் உற்சாகம் நிறைந்தவர். மற்றொன்று தாய்மார் அன்பின் ஒரு வடிவம் – பாசம், கவனிப்பு மற்றும் பாதுகாப்பு நிறைந்தவை. ஒரு மனிதன் எப்போதுமே இந்த இரண்டு வடிவங்களையும் தனது வாழ்க்கைத் துணையில் விரும்புகிறான், ஆனால் எப்போதாவது எந்தவொரு பெண்ணும் இந்த எல்லா பண்புகளையும் பெற்றிருக்கிறாள். ஆகவே, மனிதன் தனது வாழ்க்கையில் காணாமல் போன விஷயங்களில் ஈர்க்கப்பட்டு, குழப்பத்தில் இருக்கிறான். தாய்மைப் பண்புகள் அனைத்தையும் பெற்ற மூத்த சகோதரியான ஷர்மிலாவின் கணவர் ஷஷாங்க். ஆனால் அவள் அவனுக்கு மிகவும் பாதுகாப்பானவள், மேலும் அவன் அவளை ஒரு கூண்டில் வசிப்பதைப் போல உணரவைக்கிறான், அவன் அவளை மிகவும் நேசிக்கிறான். ஷர்மிலாவின் தந்தையிடமிருந்தும் அவர் பெரும் உதவிகளைக் கொடுத்தார், எனவே அவர் அவர்களிடம் நன்றியுணர்வை உணர்ந்தார், மேலும் அவரது உணர்வுகளை அவளிடம் ஒருபோதும் திறக்க முடியவில்லை. மருந்துகள் படித்து வரும் ஷர்மிலாவின் தங்கை உர்மி, ஷர்மிளாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது அவர்களுடன் வாழ வருகிறார். நோய்வாய்ப்பட்ட தனது மனைவிக்கு நேரமில்லை, ஒரு வேலையாள் ஷாஷாங்க், இப்போது பெரும்பாலான நேரத்தை வீட்டிலேயே செலவிட்டார். அவரும் உர்மியும் நட்பு மற்றும் வசதியான உறவுகளைப் பகிர்ந்து கொண்டனர், டென்னிஸில் பொதுவான ஆர்வம் கொண்டிருந்தனர், மேலும் பெரும்பாலும் மனம் கவர்ந்த தருணங்களை ஒன்றாகக் கழித்தனர். அவர் தனது வேலையை புறக்கணிக்கத் தொடங்கினார், இதனால் அவரது வணிகத்திற்கு இழப்பு ஏற்பட்டது, அதில் ஷர்மிளாவுக்குத் தெரிந்தது. கடனை அடைப்பதற்கும், புதிதாக வியாபாரத்தைத் தொடங்குவதற்கும் அவள் நகைகளை அடமானம் வைத்தாள், ஷாஷாங்க் அதைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்தாள். விரைவில் சஷாங்கும் உர்மியும் ஒருவரையொருவர் காதலித்தார்கள். இந்த நெருக்கம் பற்றி ஷர்மிளாவுக்கு நன்றாகவே தெரியும், அவளுடைய உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்தது, அவளுடைய காதல் அவளிடமிருந்து விலகிச் சென்றது, ஆனாலும் அவள் கணவனின் மகிழ்ச்சிக்காக அமைதியாக இருந்தாள். தனக்கு மிகக் குறுகிய ஆயுட்காலம் இருப்பதை அவள் உணர்ந்தாள். எனவே அவள் ஷஷாங்கையும் உர்மியையும் அழைத்து எப்போதும் நிரந்தரமாக இருக்கச் சொன்னாள். இதற்கிடையில், ஷர்மிலா நகைகளை அடமானம் வைத்திருப்பது குறித்து ஷஷாங்கிற்கு தெரிய வந்தது. ஒரு குற்றப் பயணம் அவரைத் தாக்குகிறது, அவர் தனது அன்பான மற்றும் அக்கறையுள்ள மனைவியை தனது சுயநலத்திற்காக காட்டிக் கொடுத்தார் என்ற உணர்வு. அவர் திருத்தங்களைச் செய்ய முடிவுசெய்து, உர்மியுடன் பிரிந்து செல்வதாக ஷர்மிலாவிடம் கூறுகிறார், அது ஒரு தவறு என்பதால். இதற்கிடையில், அவர்கள் இருவரும் ஏற்கனவே தங்கள் இடத்தை விட்டு வெளியேறிய உர்மியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுகிறார்கள், மேலும் படிப்புக்காக வெளிநாடு சென்று கொண்டிருந்தனர். கடிதத்தில் ஷர்மிளாவுக்கு இவ்வளவு வேதனையை ஏற்படுத்திய இந்த முறைகேடான உறவுக்கு சகோதரியிடம் மன்னிப்பு கேட்டார்.
ஒரு ஆணின் வேறொரு பெண்ணிடம் செல்வதைத் தடுக்க, ஒரு மனைவி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. கணவருக்காக ஒரு மனைவி செய்த தியாகங்களை கதை சித்தரிக்கிறது, அவர் இன்னும் திணறடிக்கப்பட்டு தனது சகோதரிக்காக விழுந்தார். இது ஒரு பெண்ணின் தைரியத்தின் கதையைச் சொல்கிறது, அவர் தனது கணவரும் அவரது சகோதரியும் அவருக்கு மிகவும் தேவைப்படும்போது நெருங்கி வருவதைக் கண்டார், இன்னும் அவரது மகிழ்ச்சிக்காக அமைதியாக இருந்தார். ஒரு பெண்ணின் விருப்ப சக்தியைப் பற்றியும் இது கூறுகிறது, அவளுடைய இணைப்பு மற்றும் வலுவான உணர்வுகள் இருந்தபோதிலும், சரியான பாதையில் செல்லவும், சட்டவிரோத உறவிலிருந்து தனது படிகளை பின்வாங்கவும் தைரியம் இருந்தது, அவளுடைய சகோதரியின் மகிழ்ச்சிக்காக.
7. மிருனால் கி சித்தி (‘ஸ்ட்ரியர் போட்ரோ’ அடிப்படையில்)மூல: Pinterest
கதை ஒரு அழகான, புத்திசாலித்தனமான பெண், எழுதுவதில் விருப்பம், ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு பணக்கார குடும்பத்தினரால் திருமணத்திற்காக நல்ல தோற்றத்தின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு பழமைவாத குடும்பமாக இருந்தது, அங்கு பெண்களின் வாழ்க்கை சமையலறையில் மட்டுமே இருந்தது. அவளுடைய இருண்ட நிறத்திற்காக எப்போதும் அவதூறாக இருந்த அவளுடைய மூத்த சகோதரி, எந்த கேள்வியும் இல்லாமல் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டாள். ஆனால் மிருனால் வித்தியாசமாக இருந்தார், எப்போதும் பாலியல் பற்றி கேள்வி எழுப்பினார். அவளுடைய மூத்த சகோதரியின் தூரத்து சகோதரி பிந்து, ஒரு சிறுமி அவர்களுடன் வாழ வந்தபோது, எல்லோரும் அவளை ஒரு ஊதியம் பெறாத ஊழியரைப் போலவே நடத்தினார்கள், மிருனால் மட்டுமே அவள் பக்கத்தில் நின்றாள். பிந்துவின் சுமையிலிருந்து விடுபட, அவர்கள் அவளுக்காக ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தனர். மிருனாலுக்கு அவளுடைய அச்சங்கள் இருந்தபோதிலும், பிந்து தனது புதிய வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. திருமணத்திற்குப் பிறகு பிந்துவின் கணவர் ஒரு பைத்தியக்காரர், அவரது குடும்பத்தினர் அவளை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தனர். மிருனால் பிந்துவை மீண்டும் அழைத்து வர முயன்றார், ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை எதிர்த்தனர். பூரிக்கு யாத்திரை என்ற போலிக்காரணத்தில் வீட்டை விட்டு வெளியேறி, பிந்துவை வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல அவள் தீர்மானிக்கிறாள். ஆனால் பிந்து தன்னை தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரமான செய்தி அவளுக்கு கிடைத்தது. உடைந்து நொறுங்கி, அவள் தன் கணவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள், மேலும் பெண்களுக்கு மரியாதை இல்லாத தனது வீட்டிற்கு ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்ற தனது தீர்மானத்தை அவனிடம் கூறுகிறாள்.
கதை மிகவும் தொடுகின்றது மற்றும் இதயம் உடைக்கும் ஒன்று. ஒரு பெண் மட்டும் சமுதாயத்தின் ஆணாதிக்க விதிமுறைகளை சவால் செய்கிறாள், கணவனின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கிறாள், ஒரு சிறுமி அனுபவிக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுகிறாள், அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லை. பிந்து இறந்துவிட்டார், ஆனால் அவரது மரணம் மிருனாலுக்குள் சுயமரியாதையின் தீப்பிடித்தது, அவர் இப்போது தனது குடும்பத்தை விட்டு வெளியேறி, தனது நிபந்தனைகளுக்கு ஏற்ப தனது வாழ்க்கையை வாழ தயாராக இருந்தார். வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருப்பதை அவள் உணர்ந்தாள், அந்த வீட்டின் மருமகளாக இருப்பதன் மூலம் அவளால் சாதிக்க முடியவில்லை. அமிர்தா பாக்சி நடித்த மிருனாலின் கதாபாத்திரம் அப்பாவி மற்றும் அமைதியானதாகத் தோன்றுகிறது, ஆனால் குருதேவ் செதுக்கிய வலிமையான மற்றும் கடுமையான பெண் கதாநாயகர்களில் ஒருவர்.
அந்தக் காலத்து பெண்கள் தங்கள் குரல் சமூகத்தில் கேட்கப்படுவதை உறுதிசெய்ய இன்னமும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும், குருதேவ் எழுதிய இந்த சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்கள் கதையின் மற்ற கதாபாத்திரங்களை மறைத்துவிட்டன.
எழுத்தாளரைப் பற்றி சற்றே தெரிந்திருப்பது சிறுகதை வாசிப்பிற்கு சற்றே இடைஞ்சல். சுஜாதாவைக் குறித்தும் புதுமைப்பித்தன் குறித்தும் எதுவும் தெரியாது. என்ன ஜாதி, எந்த ஊர், எவ்வளவு வயது, இருக்காரா, போயிட்டாரா, ஆணா, பெண்ணா, நாலைந்து பேர் ஒரே பேரில் எழுதுகிறார்களா, நாலைந்து பேரில் எழுதுகிறாரா…
எதுவும் தெரியாது. எனவே, இந்தக் கதை பிடித்திருந்தது; இந்தக் கதை எரிச்சலூட்டுகிறது; இந்த கதையை கால்வாசியோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதில் தர்மசங்கடங்களோ முன்முடிவுகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது.
சௌகரியமாக வாசித்த காலம். மீண்டும் அவ்வாறு கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும்.
ஒரு கதையை எதற்காக நான் வாசிக்கிறேன்? அதில் இருந்து புதிய வாசல்கள் ஏதேனும் திறக்கிறதா என்னும் சுயநலம்; புரியாத விஷயங்கள், அறியாத மனிதர்கள், புலப்படாத தீர்மானங்கள் என்று விடை கிடைக்காத புதிர்கள் அவிழ்கிறதா என்னும் ஆர்வம்; சுவாரசியம், வாசிப்பின்பம், மகிழ்ச்சி போன்ற வேற்றுலகப் பிரவேசத்திற்கான சந்தோஷம்.
இந்தக் கதையில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
அறிந்த மனிதர்கள்; தேய்வழக்கான உரையாடல்கள்; போரடிக்கும் வாக்குவாதங்கள்; நானே இதை அறிவார்ந்து எழுதியிருந்தால் கூட கொஞ்சம் தர்க்கபூர்வமாக எழுதியிருப்பேனோ என்னும் அலட்சியம் கலந்த ஊக்கத்தைக் கொடுக்கும் நகர்வுகள்.
எடுத்த களம் – பாலச்சந்தர் காலத்து பெண்ணியம். சொல்லிய விதமாவது பாலு மகேந்திரா பாணியில் கவர்ச்சியாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை.
கதையை விட கடிதங்கள் மோசம். இந்தப் படைப்பில் எந்த விஷயங்களை ஆசிரியர் கையில் எடுத்திருக்கலாம்? நிஜ வாழ்வில் இந்த மாதிரி சம்பாஷணைகள் எத்தனை நாள் நீடிக்கும்? சுயம்புவாக ஒருவர் மட்டுமே முடிவெடுத்தால் அது எத்தகைய எதிர்வினைகளை உருவாக்கும்? இந்த மாதிரி பெரும்பாலும் அமைவதில்லை.
இதில் “விக்னேஷ் ஹரிஹரன்” கடிதம் தேவலாம். ஓரளவிற்கு மேல் சர்க்கரை திகட்டிப் போகிறது. அதையேத் தொடர்ந்து வாசகர் எதிர்வினையாகப் படித்துக் கொண்டிருந்தால்… அயர்ச்சி ஏற்பட்டு, கடிதங்கள் பிரிவையே ஒதுக்க நேரிடுகிறது.
தமிழில் இவ்வாறு ஆங்கில்ப் பேச்சுகளை பாவனைகளை இயல்பாக எழுதும் பலரை இப்போதைய காலகட்டத்தில் நான் அதிகம் பார்க்க / படிக்கவில்லை. எனவே, அது “பேஷ்”.
இந்த மாதிரி விஷயங்களைக் கையிலெடுக்க அனேகர் கூசுவார்கள். சாரு நிவேதிதா இந்தக் கதையை வேறு மாதிரி பலான பாதையில் கொண்டு சென்று ஜிகினாத் தோரணமாக்கியிருப்பார். எடுத்த சப்ஜெக்ட் மற்றும் சொல்ல நினைத்த விதம் – “பேஷ்”.
விவாதங்கள், உரையாடல்கள், வாதங்கள் – விடலைத்தனமாக முதிர்ச்சியடையாமல் வந்திருக்கிறது. போர்ட் ஆஃப் டைரக்டரில் இருப்பவர்கள் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக விவாதிக்க மாட்டார்கள். நம்பகத்தன்மை இல்லாததால் – ”அழுகல்”.
கடைசியில் வரும் ஒயின் அருந்தல் இன்னும் சோகமானது. ஒரு குடிகாரன் இதை எழுதியிருந்தால் அமர்க்களமாகி இருக்கும். இங்கே நீர்த்துப் போன காக்டெயிலாகவும் இல்லாமல், காத்திரமான விஸ்கி போல் குடலையும் எரிக்காமல் உப்பு சப்பற்ற பார்லி தண்ணீராக – “உவ்வே”.
கையடித்தல், முஷ்டிகைமைதுத்தனம் என்று பலவகையில் இன்னும் உள்ளே சென்று உளவியல் சிக்கலையும் ஆராயவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளுக்கான காரணங்களையும் மேலோட்டமாகவே பார்க்கிறது “குமிழிகள்”. அரைகுறைப் படமாகவே முடிந்தும் விடுகிறது.
ஒரு நாட்குறிப்பில் நாலு வார்த்தை எழுதும்போது பாதி சித்திரத்தைத் தீட்டி விட்டு ஓய்ந்து விடலாம். ஒரு சிறுகதைக்கு தன்னளவில் முழுமை தேவை. ஒரு படைப்பு அதன் கர்த்தாக்களின் காரியங்களுக்கான நியாயத்தை ஆராய வேண்டும். அவர்களின் முடிவுகளுக்கான பாதையை வரைபடமாக்க வேண்டும். புதிர் போல் ஒருங்கிணைந்து பூர்த்தியாக வேண்டும்.
தகவல்களும் வித்துகளும் புனைவிற்கு முக்கியம். ஆனால், புனைவாக நினைவில் தங்க அது மட்டும் போதாது.
”உங்களுக்கு பொருட்டில்லாததை விற்கிறீர்கள். தேவடியாத்தனம் செய்யும்போது அது உடம்பு. பதிப்பிக்கும்போது, அது மூளை. மூளையை வைத்துதானே புத்தகம் எழுதுகிறோம்…”
ஆஃபீஸ் ஸ்பேஸ் (Office Space) படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் இலக்கியத்தரமாக எழுதினால், வாசகனை கொஞ்சம் யோசிக்க வைக்குமாறு புத்தகமாக உருவாக்கினால் எப்படி இருக்கும்? ஹெலன் டூயிவிட் எழுதிய மின்னல் தடிகள் (Lightning Rods) போல் இருக்கும். அந்தப் புத்தகம் குறித்த அறிமுக விமர்சனங்கள்தான் எனக்கு ஹெலன் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்தது.
அந்தப் புத்தகத்தின் கதை என்ன?
சந்தையிலே செல்லுபடியாகாத விற்பனையாளர் அறிமுகம் ஆகிறான். எதையும் சாமர்த்தியமாகப் பேசி ஒழுங்காக விற்கத் தெரியாதவன். வெட்டிப் பேச்சும் அழையா ஆலோசனைகளுமாக காலத்தைப் போக்குபவன். அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக மனிதவள மேலாளர்கள் கெடுபிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக புத்தம்புதிய சாதனத்தை அறிமுகம் செய்கிறான். அலுவலில், பாலியல் தொல்லைகளை அதிகரிக்கும் சாதனம் – அனைத்து கழிப்பறைகளிலும் பொருத்தி விட வேண்டும். இந்தப் பொருளை நிறுவி விட்டால் உடன் பணிபுரியும் பெண்களைப் புணரலாம். யார் புணர்கிறார்கள் என்று தெரியாது. அலுவல் அழுத்தங்களும் அடக்கி வைத்த ஆசைகளும் இந்த மாதிரி சாதனத்தை நிறுவுவதால் நீங்கும் என்று அந்த விற்பனையாளன் அமோகமாக சந்தையில் சொல்லி, ஜாம்ஜாமென்று பணம் புரட்டுகிறான்.
இந்தக் கதையின் நாயகன் குறித்த பேட்டியில் ஹெலன் இவ்வாறு சொல்கிறார்:
“நான் பெண்ணாக இருந்தாலும், ஆண் பார்வையில் இந்தக் கதையை எழுதினேன். சொல்லப் போனால் பெண்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதுவதை விட ஆண்களை கதாநாயகனாகப் போடுவது எளிதாகவே இருக்கிறது.
என்னுடைய சின்ன வயதில் கை பாட்டுக்கு தானாக எதையாவது வரையும். ஆனால், பெண்களைத்தான் வரைய முடியும். என்னால் பசங்களை வரையவே முடியவில்லை. அந்த உருமாற்றம் எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை. ஆண்களுடன் பழகும்போது கவனித்தேன்; அவர்களால் தங்களைப் பற்றியே பேச முடிந்தது. ஒரு ஆண் கதாபத்திரத்திற்குள் சென்று, அந்த பாத்திரம் மாதிரி யோசிக்க வேண்டுமானால், ரொம்ப சிரமப் பட வேண்டாம். அந்த ’ஆணுக்கு’ ஒருவிதமான மனப்பிடிப்பைக் கொடுக்க வேண்டும். அந்தப் பிடிப்பின் மேற்சென்று மிகைவிருப்பமாக்க வேண்டும். அது எப்படி அவனை ஆட்டிப்படைக்கிறது என்று எழுதினால் போதுமானது.
பெண்களை கதாபாத்திரங்களாக்குவது அவ்வளவு நேர்ப்படையானதல்ல. அவர்கள், அவ்வளவு சீக்கிரம் உணர்வு வசம் சிக்கி மாற்ற இயலா எண்ணத்திற்குள் சுழல்வதில்லை.
மின்னல் தடிகள் (Lightning Rods) நாவல் செக்ஸைப் பற்றியது. சாப்பிடும்போது கூட செக்ஸை குறித்து சகஜமாகப் பேச ஆடவர்களால் முடிகிறது. எந்த ஆணுடன் பேசினாலும் சரி… அவர்கள் இந்த மாதிரி ஏதாவது ஒன்றை உதிர்க்கிறார்கள்: ‘பருத்த மார்புகள் எல்லாருக்கும் பிடிக்கும்!’ உடனே எனக்கு நூறு கேள்விகள் தோன்றும். உனக்கு எப்படி இது தெரியும்? உனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று எப்படி உன்னால் சொல்ல முடிகிறது? கருத்துக்கணிப்பு எடுத்தாயா? இதே ரீதியில்தான் என்னுடைய நாயகனும் இருக்கிறான். நம்பிக்கையாகப் பேசுவான். அவனுடைய இச்சையை வைத்து அனைவரைக் குறித்தும் அடித்துப் பேசுகிறான்.
இதே மாதிரி மக்களை பதிப்புத்துறையிலும் தொடர்ச்சியாக சந்தித்தேன். புத்தக வெளியீட்டிற்காக அவர்களுடன் உரையாடும்போது… மன்னிக்கவும்… பின்னாலிருந்து முகந்தெரியாத எவனோ ஒருத்தன் புணருவது போல் உணர்ந்தேன். தேவையில்லாத அறிவுரைகளைக் கேட்டு காது புளித்துப் போனபோது, இந்த நாவல் உருவானது.”
சரி… இப்பொழுது நவம்பர் ஹார்ப்பர்ஸ் இதழில் வெளியான ஏறுபவர்கள் (Climbers) கதைக்கே வந்து விடுவோம்.
ஹார்பர்ஸ் பத்திரிகையில் ஹெலன் (Helen DeWitt) எழுதிய ஏறுபவர்கள் (Climbers) கதை இங்கே கிடைக்கிறது: http://harpers.org/archive/2014/11/climbers/ (சந்தாதாரர்களுக்கு மட்டும் படிக்க இயலும்)
கதையில் நான்கு கதாபாத்திரங்கள். முதலாவதாக நமக்கு கில் அறிமுகமாகிறான். துடிப்பானவன். சுவாரசியமாகப் பேசுகிறான். நியு யார்க்கில் வசிக்கிறான். நிறைய படம் பார்த்து, புத்தகம் படித்து, இசை கேட்டு, கணினி மேய்ந்து, விளையாட்டுகள் களித்து வாழ்பவன். அவனுடைய உபசரிப்பு விழாவில் நமக்கு சக எழுத்தாளினியான ரேச்சல் அறிமுகமாகிறாள். பரபரப்பான கல்யாண ரிசப்ஷனில் தனியே போய் பஃபே சாப்பாடு எடுத்துக் கொள்வது போல், கில் வசிக்கும் வீட்டில் நடக்கும் இலக்கிய கூட்டத்தின் நடுவே விடப்பட்டிருக்கிறாள்.
இரண்டாவதாக சிஸ்ஸி தோன்றுகிறாள். (நீங்கள் என்னை முறைப்பது தெரிகிறது. ரேச்சல் என்பவள் இரண்டாம் எண்ணுக்குரியவள் அல்லவா என்று மறுமொழியில் கேட்காதீர்கள். பெயரில் என்ன இருக்கிறது? சிஸ்ஸியாக இருந்தால் என்ன… ரேச்சல் ஆக இருந்தால் என்ன போச்சு… அல்லது இருவருமே ஒருவர்தான் என்றாலும் உங்களுக்கு என்ன? நீங்கள் தொடருங்கள்) அவள் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரத்தில் பீட்டர் டிஜிக்ஸ்டிரா என்னும் எழுத்தாளரை அகஸ்மாத்தாக சந்திக்கிறார். இந்த எழுத்தாளர்தான் கதையின் மையக் கரு. இவரைச் சுற்றித்தான் எல்லாம் நகர்கிறது.
எழுத்தாளர் என்று ஒருவர் இருந்தால் நாவல் என்று ஒன்று உருவாகும். நாவல் என்று ஒன்று உருவானால், அதைப் பதிப்பிக்க பதிப்பாளர் என்று ஒருவர் வேண்டும். பதிப்பாளரிடம் பத்திரமாக எழுத்தாளரையும், அவ்வளவு பத்திரமில்லாமல் அவருடைய நாவலையும் கொண்டு சேர்க்க ஏஜெண்ட் என்று ஒருவர் வேண்டும். அவர் ரால்ஃப்.
கால்ஃப் ஆடுவது போல் நல்ல பெயர் ரால்ஃப். பெயருக்கேற்ப நல்ல ஆடைகளையும், கவின்மிகு பழரசங்களையும், திடகாத்திரமான கண்கவர் வழக்கங்களையும், கொண்டவன். கொஞ்சம் போல் படாடோபம். நேர்த்தியான விற்பனையாளனைப் போல் எழுத்துக்களை அற்புதமாக பிரபலமாக்குபவன். சன்னமான எழுத்துக்களையும் கோட்டையில் கோலோச்ச வைப்பவன். அவனுடைய கைபட்டு நூல் வெளியானால், ஆப்பிரிக்காவில் இருந்து எபோலா பரவுவது போல் உலகெங்கும் அந்தப் புத்தகம் நோபல் பரிசுக்காக பேசப்படும்.
இந்த நாலு பேருக்கு நடுவில் ராபர்ட்டோ பொலானோ (Roberto Bolaño) எழுதிய 2666 உருளுகிறது. எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவைப் அசப்பில் பார்த்தால் ராபர்ட்டோ பொலானோ கூட நினைவிற்கு வரலாம். எழுத்தாளர் பீட்டருக்கு சீக்கிரம் பணம் புரட்ட வேண்டும். சிகரெட் பிடிக்க பணம் வேண்டும். நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க வாடகைப் பணம் கட்ட வேண்டும். காலாற நடக்க பணம் வேண்டும். அதற்காகவாது எழுத வேண்டும். பணத்திற்காக எழுத வேண்டும்.
ராபர்ட்டோ பொலானோவின் 2666 குறித்து இரண்டு விதமான விமர்சனங்களை ரேச்சலும் சிஸ்ஸியும் சொல்கிறார்கள். ஒருவரால் இரண்டு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை. ’இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்தால் போதும் என்றால் அது ரொபார்ட்டோ போலானோ எழுதிய 2666 மட்டும்தான்’ என்னும் வகையில், இன்னொருவரால் 2666ன் சில பகுதிகளைப் படித்தாலே ஜென்ம சாபல்யம் கிட்டுகிறது.
பொலானோ எழுதிய பிரும்மராட்சஸ துப்பாறிவாளர்கள் (The Savage Detectives) நாவலை நீங்கள் படித்ததுண்டா? அதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பார்வையில் கதை விரியும். புலவர்களுடன் உரையாடல், புலமைக் காய்ச்சல்கள், கவிஞர்களின் வாழ்விலே ஒரு நாள் என்று கலவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையும் இவ்வாறே நாலு எழுத்தாளர்களின் வாழ்வியல் சித்திரங்களுடன், பேச்சுக்களுடனும், விமர்சனங்களுடனும், எழுதவியலா தருணங்களின் தவிப்புகளுமாக விரிகிறது.
ஏறுபவர்கள் (Climbers) கதையில் – நிஜ எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோ போல் உடனடியாக பணம் தேவைப்படும் கதாநாயகனாக பீட்டர் டிஜிக்ஸ்டிரா; ஆனால் ஏறுபவர்கள் (Climbers) கதையோ பொலானோவின் தி சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலைப் போல் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.
எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது சிக்கலானது. இவரைப் போல் இருக்கிறது, அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழாமல் பொதுப்படையாக, அதே சமயம் சம்பவங்களும் + விஷயங்களும் கலந்து எழுத வேண்டும். குறியீடுகள் சொல்லப் போய், கதையே புரியாமலும் போக விடாமல், நேரடியாகவும் பூடகமாகவும் புரிய வைக்க வேண்டும். எழுத்தாளர் என்றாலே இப்படித்தான் இருப்பார் என்னும் அரைத்த + புளித்த மாவான வார்ப்புருவிற்குள் சிக்காமல் கதை வளர வேண்டும். அவற்றை இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையில் ஹெலன் இயல்பாகக் கொண்டு வருகிறார்.
அந்த நாலு ஏறுபவர்களையும் கொஞ்சம் பார்ப்போம்.
பீட்டர் டிஜிக்ஸ்டிரா மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர். சிறிது சரிந்தாலும், மீண்டும் மனநல காப்பகத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். அவருக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழி. தாய்மொழியில் எழுதி பணம் சம்பாதிக்க முடியவில்லை. ஷிவாஸ் ரீகல் வேண்டாம். நல்ல பியர் கூட வாய்க்கப் பெறுவதில்லை. எனவே, ஆங்கிலத்தில் எழுத முயல்கிறார். முதலில் வார்த்தைகள்; தேர்ந்தெடுத்த வார்த்தைகளாகப் பொறுக்க வேண்டும். வார்த்தைகள் கிடைத்த பின் வாக்கியங்கள். வாக்கியங்களை எப்பொழுது நேரம் கிடைக்குமோ, அப்பொழுது மனிதர்களிடம் ஏற்றிவிடப் பார்க்கும் எழுத்தாளர்.
கில் ஒரளவு புகழடைந்துவிட்ட எழுத்தாளன். விளக்கு வைப்பதற்குள் வோட்கா ஏற்றிக் கொள்பவன். இலக்கியவாதி பீட்டர் டிஜிக்ஸ்டிராவிற்கு மாடியறையைக் கொடுப்பதால் சமூக அந்தஸ்திலும் ஏற நினைப்பவன். உண்மையை எழுத்தில் ஏற்ற எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடியலைபவன்.
ரேச்சல் புத்தகம் எழுதி அச்சில் கண்டவள். பீட்டர் டிஜிக்ஸ்டிராவை ஏற்றிவிடத் துடிப்பவள். வான் கோ வரைந்த ஓவியம் பிடிக்கும் என்பதால் வான் கோ வரைந்த ஊருக்கே சென்று, அவருடைய வீட்டினுள்ளே வசித்துப் பார்க்க விழையும் ஜாதி. எழுத்தாளருடன் அளவளாவினால், என்ன சங்கதி கிடைக்கும் என்று அளந்து பார்க்காமல், எழுத்தாளனின் எழுத்தை அடித்தல் திருத்தலோடு, முதல் பிரதியை வாசிக்க விழையும் ஜாதி. எழுத்தாளரின் ஒரு கதை பிடித்துப் போனதால், மொழி புரியாத அயல்நாட்டுப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வீட்டின் புத்தக அலமாரியில் கொலு வைத்து அழகு பார்க்கும் ஜாதி. ஒரேயொரு புரிதல் கலந்த ஆற்றுப்படுத்தும் சிணுங்கலில் எவரையும் ஆசுவாசப்படுத்தி தரைக்கு இறக்கும் ஜாதி.
இறுதியாக முகவர் ரால்ஃப். பாரிஸ் என்றால் சாக்லேட் காதல்; லத்தீன் அமெரிக்கா என்றால் மாந்திரீகம் தூவிய எதார்த்தம்; ஜப்பான் என்றால் தனிமைத் துயரின் விரக்தி; என்ற பாசறையில் டட்ச்சு மொழிக்கான இலக்கணமாக எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவை கணிப்பவர். அமெரிக்காவின் அமெரிக்கர்களின் எடுத்துக்காட்டாக கதையில் வருகிறார். கண் துஞ்சாமல், கருமமே கண்ணென இலக்கியத்தை செய்து முடிப்பவர். இவர் போன்றோர் ஏவுவதனாலேயே, எழுத்தாளர்கள் தங்கள் காவியங்களுக்கு இறுதி வடிவைத் தருகிறார்கள்; விமர்சகர்கள் பயபக்தியோடு அந்த இலக்கியபீடத்தை அணுகுகிறார்கள்; நூல் வெளியீட்டாளர்களும் லாபம் சம்பாதித்து பங்குச்சந்தையில் ஏறுகிறார்கள்.
கதையின் அமைப்பு மிகவும் சிக்கலான அமைப்பு. சிறுகதையில் இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நாட்டில் உலாவுகிறது. முடிவிற்கு வெகு அருகில் கதை துவங்குகிறது. அந்த முடிவிற்கு சற்றே முன்பாக கதை முடிகிறது. முன்னும் பின்னுமாக கதை உலாவினாலும் குலுக்கிக் குலுக்கிக் கதையை விட்டு தூரப் போடாமல், சுவாரசியமாக முன்னேறுகிறது. அந்த அமைப்பிற்காகவே இன்னொரு முறை படித்தேன். மீண்டும் படிக்கும்போதுதான், வார்த்தைகளின் தேர்வும், கதாபத்திரங்களின் குணாதிசய அறிமுகங்களும், சொல்லாட்சியும் பிடிபட்டது. அந்தச் சுவைக்காக மீண்டும் மூன்றாம் முறை படித்தேன். அப்பொழுதுதான் மற்ற புத்தகங்களின் விமர்சனமும், வேற்று மொழி கற்றுக் கொள்வதை சொல்லும் நேர்த்தியும், சுற்றுலா தலங்களை விவரிக்கும் வர்ணனையும் ஈர்த்தது. அதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும்.
Vikesh Kapoor is the winner of the 2022 Daylight Photo Awards! Vikesh's project See You At Home is an ongoing perso… twitter.com/i/web/status/1…2 days ago
Here’s the Real Story behind the Massive ‘Blob’ of Seaweed Heading toward Florida
Florida beaches are already recei… twitter.com/i/web/status/1…3 days ago
What was the impact of Julius Caesar’s murder? - Peter Stothard Author of The Last Assassin: The Hunt for the Kille… twitter.com/i/web/status/1…3 days ago
A Sontag Sampler
Things I dislike: sleeping in an apartment alone, couples, football games, swimming, anchovies, m… twitter.com/i/web/status/1…3 days ago
India ‘Green Growth’ Climate Spending Shortchanges Adaptation
Budget laid out plans to increase public investments… twitter.com/i/web/status/1…3 days ago
Indian NGOs Received Rs 55,449 Crore In Foreign Funding In 3 Years
Delhi - Rs 13,957.84 cr
Tamil Nadu - Rs 6,803.7… twitter.com/i/web/status/1…5 days ago
“Naatu Naatu”: “dappankuthu” (literally “drum punch”) in Tamil or “teenmaar” (literally “three sounds”) in Telugu,… twitter.com/i/web/status/1…1 week ago
PNAS is Not a Good Journal
(& Other Hard Truths about Journal Prestige)
What is a “Good” Mag?
publish lower quali… twitter.com/i/web/status/1…1 week ago
neuroscientist Christof Koch lays the foundation for the material basis of consciousness; and social psychologist C… twitter.com/i/web/status/1…1 week ago
intersection between religion and science. 18th-century philosopher Moses Mendelssohn’s rational arguments for the… twitter.com/i/web/status/1…1 week ago
The Transcendent Brain: Spirituality in the Age of Science - Gazing at the stars, falling in love, or listening to… twitter.com/i/web/status/1…1 week ago
THE TRANSCENDENT BRAIN
Humans are evolutionarily drawn to beauty. How do such complex experiences emerge from a col… twitter.com/i/web/status/1…1 week ago
Monsters: Claire
these days the impulse to, say, binge-watch Woody Allen movies or indulge an obsession with “Ros… twitter.com/i/web/status/1…1 week ago
Living the writing life means living with failure - On Writing and Failure,” Marche attempts to reset the way we ta… twitter.com/i/web/status/1…1 week ago
After the mother tongues
Persian language we know today was born out of interaction with Arabic and Islam
Cultura… twitter.com/i/web/status/1…1 week ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde