Tag Archives: இயக்குனர்

மந்திரவாதியும் மணி ரத்தினமும் – பொன்னியின் செல்வன் இரண்டு

மணி ரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் எடுக்கிறார்?

ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.

இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:

டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
பணத்தினால் பதவியை அடைபவர்.
இதுவே மாந்திரீக யதார்த்தம்.

டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார்.
இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன்.
இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி.
இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.

இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார்.
உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது.
அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.

இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.

கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர்.
அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர்.
அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.

உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர்.
அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர்.
அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார்.
அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார்,
அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர்.
பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.

நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான்.
அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர்.
ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர்.
அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர்.
அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.

அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார்.
டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும்.
இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம்.
நாடக மேடை.
அரச சபை.
அரசி என்பவள் நடிகை
அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன்.
இயக்குநர் என்பவர் ராஜகுரு.
அனிருத்த பிரும்மராயர்.
காதில் ஒதுவார்.
ஒதுவது புரிந்தத்தா?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

பாரதிராஜா படங்கள்

தலை பத்து குறிப்புகள்:

  1. அனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”
  2. தன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.
  3. நாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.
  4. வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.
  5. இவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ்  வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.
  6. மணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்
  7. ஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்
  8. படத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்
  9. எழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்
  10. அரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.
ஆண்டு படம் குறிப்புகள்
1977 16 வயதினிலே முதல் படம்
1978 கிழக்கே போகும் ரயில் கிராமம் – காதல் – ராதிகா
1978 சிகப்பு ரோஜாக்கள் குத்துங்க எஜமான் குத்துங்க! இந்த பொம்பளைங்களே இப்படிதான்!!

நல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு

1979 புதிய வார்ப்புகள் பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர்
1979 நிறம் மாறாத பூக்கள் மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி
1980 நிழல்கள் வைரமுத்து உதயம்

வறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு

1980 கல்லுக்குள் ஈரம் இயக்குநர் இல்லை

என்றாலும், மீண்டும் ரசிக்கலாம்

1981 அலைகள் ஓய்வதில்லை ஸ்ஸ்ஸ்ஸ்… ப்பா…அஆ….
1981 டிக் டிக் டிக் மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது
1982 காதல் ஓவியம் பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா?
1982 வாலிபமே வா வா போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ்
1983 மண் வாசனை ராதா போய் ரேவதி வந்தது… டும்! டும்!! டும்!!!
1984 புதுமைப் பெண் ஏவியெம் #MeToo
1985 ஒரு கைதியின் டைரி சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை
1985 முதல் மரியாதை இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள்
1986 கடலோரக் கவிதைகள் கொடுமை
1987 வேதம் புதிது நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே!
1988 கொடி பறக்குது அமலா டைம்ஸ்
1990 என் உயிர் தோழன் சரிவின் உச்சிக்காலம்
1991 புது நெல்லு புது நாத்து கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா?
1992 நாடோடித் தென்றல் இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா?
1993 கேப்டன் மகள் எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள்
1993 கிழக்குச் சீமையிலே மீட்சி
1994 கருத்தம்மா பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம்
1995 பசும்பொன் முடியல
1996 தமிழ்ச் செல்வன் இதற்கு குஷ்பூவே தேவலாம்.
1996 அந்திமந்தாரை அவார்ட் வேணும்
1999 தாஜ் மஹால் பையன் வேணும்
2001 கடல் பூக்கள் பையனும் வேணும்; அவார்டும் வேணும்.
2003 ஈர நிலம் மகனுக்காக
2004 கண்களால் கைது செய் ப்ரியா மணிக்காக
2008 பொம்மலாட்டம் அப்பாடா! இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு
2013 அன்னக்கொடி அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால்

 

 

கனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும்

பேசியவரின் பதிவு: திரைப்பட விழா » எழுத்தாளர் ஜெயமோகன்

உரையில் சொன்ன நான்கு மையக்கருத்துக்கள்.

1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.

2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.

3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.


ஏறத்தாழ முப்பது பேர் பார்வையாளர்கள். மூன்று நபர்கள் கொண்ட ஜூரி.

தமிழ் வணிக சினிமாவை நிராகரித்துப் பேச முடியாது. தமிழ்ப்படங்கள் என்பது ஒரு பண்பாட்டு உரையாடல். அவை சராசரி மனிதர்களுடன் பேசக்கூடியவை. ஆவரேஜ் ஆளுக்காகத்தான் படமெடுக்க முடியும். எதிர்காலத்தில் கலைப்படங்கள் காலூன்றலாம். ஆனால், இன்றைக்கு அந்த நிலை கிடையாது.

பகுதி ஒன்று

* உணவு: பெரிய சாப்பாட்டு மேஜை. அயிரம் பேர் உண்ணக் கூடிய விருந்து போன்ற அயிட்டங்கள் காட்டப்பட வேண்டும். பார்வையாளனுக்கு பசியாக இருக்கலாம். கல்யாண சாப்பாடு தேவையிருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டும்.

* ஆடை, அணிகலன்: நாயகி தன்னுடைய டிரெஸரைத் திறந்து நூற்றுக்கணக்கான புடைவையை அலசுவாள். அவற்றில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள். சினிமா பார்ப்பவனுக்கு அத்தனை புடவை எடுத்து தர முடியாது. பார்ப்பவளுக்கு இந்த மாதிரி சாய்ஸ் இருப்பது போல் கற்பனை தருவதற்கு சரோஜாதேவியும் ஜெயலலிதாவும் இவ்வ்வாறு செலக்சன் செய்ய வேண்டும்.

* இடம், லொக்கேஷன்: ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கலாச்சாரம். அனைத்து ஊர்களிலும் பிடிக்குமாறு புரியுமாறு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில், சின்னாளப்பட்டியில், சிகாகோவில், ஸ்கார்பரோவில் என்று எல்லா இடத்திற்கான சராசரி விருப்பங்களை உள்ளடக்கி எடுக்கிறார்கள்.

* ரிலாக்ஸேஷன்: இரண்டே கால் மணி நேரம் படம் ஓட வேண்டும். சினிமாவிற்கு கிளம்புவதற்கு பெரிய விஷயம். அந்தளவு சிரமப்பட்டு வருபவர்கள், டக்கென்று எண்பது மணித்துளிகளில் முடித்து அனுப்ப முடியாது.

* வணிக சினிமா: காதல் இல்லாத தமிழ் சினிமா எடுபடாது; எடுக்கணும்னு அவசியம் இல்ல. தமிழகச் சூழலில் காதல் செய்யும் வாய்ப்பு இல்லாததால் ஈடேற்றம் செய்வதற்கு இளமையும் காதலும் சினிமாவில் நிறைவேற்றுகிறது.

பகுதி இரண்டு

* சிறு பத்திரிகைக்காரன்: நா பார்த்தசாரதி, அகிலன், கல்கி எல்லாம் வணிக எழுத்தாளர்கள். அவர்கள் மட்டுமே புகழ் பெற்று விளங்கிய காலம் உண்டு. இன்று வெகுசன இலக்கியம் அல்லாதவர்கள்தான் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சிறுபத்திரிகைக்காரன். இன்று மைய எழுத்தாக விளங்குகிறேன். அது போல் குறும்படக்காரர்களும் மெயின் நீரோட்டத்தை நிர்ணயிப்பவர்களாக ஆகலாம்.

* இலக்கிய வாசிப்பு: கதைகளை தேர்தெடுக்கும்போது எண்ணங்களை மையமாக வைக்காமல், சிறப்பான சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புள்ள தற்கால செய்தி: Manushyaputhiran vs Arivumathy on S Ramakrishnan vs Kamalahasan: Marketing Kaliyugam Movie Songs

கலியுகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் வழக்கு எண் படத்தை துவைத்து காயப்போட்டுவிட்டதாக குறைபட்டுக் கொண்டார். இதுபோல் மனுஷ் போன்ற இலக்கியவாதிகளே செய்தால், அடுத்து வரும் தயாரிப்பாளர்களும் வர மாட்டார்கள்.. இது தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியையே பாதிக்கும். அது மிக அருமையான படம் என்று சொன்னார்.

அப்பாடக்கர்: Tamil Short Film by Ila

குறும்படம்:

நடிப்பு:

  • பாஸ்டன் ஸ்ரீராம்
  • ஜெயவேலன்
  • மாஸ்டர் சூர்யா

வசனம்: தேவ்

உணர்வும் ஆக்கமும்: இளா

Statutory Warning: இதற்கு மேல் ஸ்பாயிலர்கள் நிறைய இருக்கின்றன.

பின்னணி

1. ஃபேக் போடுவது

நகைச்சுவையான குறும்படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தின் கருப்பொருள் விவகாரமான விஷயம். சொவ்வறைக்காரர்கள் பொய் சொல்வது சகஜம். வானிலை படித்தவர்கள் தவறாக கணித்தால் தப்பில்லை. ஆனால், சாஃப்ட்வேரில் தெரியாததை தெரிந்ததாக சொன்னால் மாட்டிக் கொள்வேன்.

ஃபார்ச்சூன் 100 நிறுவனங்கள் முதல் உள்ளூர் கூடுவாஞ்சேரி கன்சல்ட்டிங் வரை இல்லாததையும் செய்யாததையும் இட்டு நிரப்பி காரியத்தை சாதித்துக் கொள்வதை பாடுபொருளாக ஆக்கியதற்கு பாராட்டுகள்.

2. பாஸ்டனில் கொழிஞ்சிக்காட்டூர்

பிரும்மச்சாரி ரூம் எப்படி இருக்கும்? தமிழக கிராம செட்டிங் மலை, குளம் எல்லாம் அமெரிக்காவில் எங்கே இருக்கும்? அவுட் டோர் சென்றாலும் முண்டா பனியன், கைலி சகிதமாக செல்வது சரிப்படுமா?

இது போன்ற நிதர்சன பிரச்சினைகளை லாவகமாக, பார்வையாளருக்கு துளிக்கூட சந்தேகம் வராத காட்சியமைப்பு. சிணுங்கும் தொலைபேசி முதல் நாயருக்கு டீ சொல்லும் பாங்கு வரை சிரத்தையான நுணுக்கங்கள். ’கலைஞர் டிவி’யின் நாளைய இயக்குநரின் சென்னைக்கார குருப்கள் கூட இப்படி பார்த்து பார்த்து செதுக்குவதில்லை.

3. இளா

இரண்டே நடிகர்கள். அவர்களை சட்டென்று இரண்டே நிமிடத்திற்குள் பதிய வைக்கும் குணச்சித்திரமாக்கம்.

எவ்வாறு என்பதை சுமாரான திரைக்கதை சொல்லிச் செல்லும். ஏன் என்பதை சுவாரசியமான கதைகள் சொல்லும். எப்படி என்பதை நகர்படங்களாக குறிப்பிடத்தகுந்த படங்கள் சொல்லிச் செல்லும். எதற்கு என்பதையும் முடிச்சுக்களோடு குறும்படத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இளா.

நாடகத்தன்மை எட்டிப் பார்க்காதது; பந்தா செட் போடாதது; பாடல் போட்டு நேரத்தை ரொப்பாதது; கால் மணி நேர குறும்படத்தின் கேரக்டர்களையும் ஆழப் பதிய வைப்பது. பலே… இளா!

ஷொட்டு

  • வசனம்: சில்லற இல்லாதவன் தாண்டா சிட்டிக்கெல்லாம் வருவான்!
  • ‘திங்க் பிக்’ என்னும் போஸ்டர் ரூம் நெடுக, கதாபாத்திரங்களின் லட்சியங்களை பிரதிபலிக்கிறது.
  • கணினிக்காரர்கள் புத்தகம் புத்தகமாக அடுக்கி வைத்து அழகு பார்ப்பதையும்; தலை மேல் துண்டு போல் மேலோட்டமாக வாசிப்பதையும் சொல்வது அழகு.
  • இது போல் ரசனைமிக்க காட்சிகள் நிறைய உண்டு. சாம்பிளுக்கு, ‘நோ ஆட்டோ ஃபார் ஃப்ரெஷர்ஸ்’ சொல்லலாம்.

சந்தேகங்கள்

  • யோசிப்பதற்காக மோவாய்க்கட்டை தேய்க்கும் தேய்வழக்காக நடிக்கும் ‘சாம்’ – தமிழ்ப்படங்களை நக்கல் விடுவதற்கா?
  • கம்ப்யூட்டரை விட ஜோதிகா பிரதானமாகத் தெரிவது, மங்களகரத்தின் சிம்பாலிக் ஷாட்டா?
  • ஜோக் தெரிய வேண்டும் என்னும் இடத்திற்காக ‘டெய்ங்’ என்று சத்தமாக வந்து விழும் இசைத் துணுக்கு, வெண்ணிறாடை மூர்த்தி சீரியல்களை கிண்டலடிக்கிறதா?
  • கோலிவுட்டை நினைவூட்டும் விதமான ‘சம்போ… சிவ சம்போ’ போன்ற பிட்டுகளின் உள்ளீடு என்ன?
  • நடுநடுவே கடிகாரத்தின் டிக் டாக் பின்னணியில் வருவது நேரம் உருண்டோடுவதன் குறியீடா?
  • பெங்களூரு, டே-1 எல்லாம் ஆங்கிலம்; சேலம் மாவட்டம் மட்டும் தமிழ் துணையெழுத்தில் வருவதன் ஊடுபிரதி மொழிச்சிக்கல்களைக் கையாள்கிறதா?

தொடர்புள்ள பதிவுகள்:

1. Notable Tamil Short Films: பார்க்கத் தகுந்த தமிழ் குறும்படங்கள்

2. நிமித்தகாரன்: குறும்படம்

3. நாளைய இயக்குநர்: கலைஞர் டிவி