பிபிசி செய்தி: பினாங் மாநிலத்தில் இந்திய இனத்தவருக்கு சாதகமான முடிவு
மலேசியா வாழ் இந்திய இனத்தவர்களை விட மலாய் இனத்தவர்களுக்கு, பெருஞ்சலுகைகள் வழங்கும் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை தாங்கள் இனி மேலும் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று மலேசியாவின் பினாங் மாநிலம் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் பிரதமர் அப்துல்லாஹ் படாவிக்கும், அவரது ஆளும் கூட்டணிக்கும், பலத்த இழப்புகளை ஏற்படுத்திய எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ள 4 மாநிலங்களில், பினாங்கும் ஒன்று.
வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும், மலாய் இனத்தவருக்கு சாதகமான கொள்கைகளை மலேசியா கடந்த 40 வருடங்களாக கடைப்பிடித்து வருகிறது. மலேசியா இனப்பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதாக மலேசியா வாழ் இந்திய வம்சாவளியினர் கண்டித்திருக்கிறார்கள்.
கொஞ்சமாய் பேக்கிரவுண்ட், நடப்புகள், அலசல்:
1. இங்கே ஆரம்பிக்கவும்: TBCD பார்வை : ‘மலேசிய விவகாரமும், தமிழர்களின் பலவீனமும் !’- உன்மை என்ன…?: பின்னூட்டத்தில் எழுந்த கேள்விகளுக்கு விடையும் கிடைக்கும்:
மலேசிய அரசு சிறுபான்மைகளுக்கான உரிமை சட்டத்தை அமல் படுத்துகிறதா? தமிழர்களைவிட அதிகமாக உள்ள சீனர்கள் நிலை என்ன? மலேசிய அரசு தன்னனை இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக் கொண்டு உள்ளதா?
2. அடுத்ததாக: மலேசிய தமிழர்கள் மலேசிய அரசிடம் வைத்த கோரிக்கைகள் என்ன..?
3. மேலும் மேலும் பின்னணி: THe WoRLD oF .:: MyFriend: “மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்”
இனி சில தமிழ்ப்பதிவுகள்:
1. இந்தியர்களின் குரலை நசுக்கியவர் சாமிவேலு – மகாதீர் – – மறுமொழியில்: “சாமிவேலு இந்தளவிற்கு வளர்வதற்கும் நம் சமூகத்தை நாசம் செய்வதற்கும் துணை நின்றவர்களில் மகாதிரும் ஒருவர். இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்! ஏன், 90களில் சீன அமைச்சர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஆறாக உயர்ந்த போது கூட இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையை இரண்டாகவோ மூன்றாகவோ அதிகரிக்கவில்லை?”
2. ஜடாயு ஐயா கக்கும் விசவாயு – மறுமொழியில்: “மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள். தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்.”
3. இந்தியர்களுக்கு அனைத்து நிலைகளிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் – 128 அரசு சார்பற்ற இந்திய அமைப்புகளின் கோரிக்கை – மறுமொழியில்
- இஸா சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்பட்டோரை உடனே விடுவிக்க ஆவன செய்யுங்கள்.
- இஸா சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுடன் போராடுங்கள்.
- மாநில ஆட்சி மன்றத்தில் அனைத்து இனங்களுக்கும் சமவாய்ப்பைக் கொடுங்கள்.
- மக்களின் குறைகளை செவி கொடுத்துக் கேளுங்கள். தீர்வு காணுங்கள்.
- 1957-க்குப் பின்னர் பிறந்த அனைவரும் பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெறச்செய்யுங்கள்.
- நாட்டு வளம் அனவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
- இனப்பாகுபாட்டை ஒழியுங்கள். இன ஏளனம் செய்வதை தடுக்க ஆவன செய்யுங்கள்.
- விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள், முடிந்தால் விலை குறைப்பை அமல்படுத்துங்கள்.
- நாட்டு வளம் விரயமாக்கப்படுவதை கட்டுப்படுத்துங்கள்.
- மாநில அரசின் கடுப்பாட்டில் உள்ள “டோல்” நிலையங்களை மூடுங்கள்.
4. டிபிசிடி: மலேசியத்தமிழர்களின் மக்கள் சக்தி உணர்ச்சியும், மலேசியத் தேர்தலும்: “மலேசியாவில் கடந்த 50 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில், பரிசான நேசுனல் என்ற (Barisan Nasional – BN, the National Front) தேதிய முன்னணிக் கூட்டணியே ஆண்டு வந்திருக்கிறது. கிளாந்தான் என்னும் மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும், இந்தக் கூட்டணியே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
…
அன்வர் இப்ராகிம் தலைமையில் கெடிலான் (Parti Keadilan Rakyat – PKR, People’s Justice Party) என்ற கட்சி இம்முறை பரிசான் நேசனலின் ஆதிக்கத்தை அசைக்கும் நோக்கோடு, மற்றைய எதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருமுனை களமாக மாற்ற முயன்று வருகின்றனர்.”
5. டிபிசிடி: மலேசியத் தமிழர்கள் தடுத்து நிறுத்திய ஒரு தேசிய முன்னனியின் ரோல்லர் கோஸ்ட்டர்: “இந்தத் தேர்தலில், பெரும்பான்மை பெறாவிட்டால், மலேசியாவின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பங்கம் வருமென்று பிராச்சாரம் செய்து வந்தது தேசிய முன்னணி. அரசாங்க இயந்திரம் தேர்தல் வேலைகளுக்கு முடுக்கி விடப்பட்டியிருந்தது. தொகுதிகள் வெற்றி வாய்ப்புக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.
…
“ஓம் சக்தி” என்ற ம.இ.க வின் தேர்தல் மந்திரத்திற்கு எதிர்ப்பாக “மக்கள் சக்தி” என்று முழங்கிய தமிழர்கள், தங்களது எதிர்ப்பை சனநாயக முறைப்படி காட்டியிருக்கிறார்கள்.”
6. மலேசிய நிலவரம் ஒரு கருப்பு பார்வை: “ஏப்ரலுக்கு மேல் கெ-அடிலான் கட்சியின் ஆலோசகரும் முன்னைய துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் அவசரம் அவசரமாக இந்த தேர்தலை நடத்துகிறது மலேசிய அரசு.
…
கல்வி, வேலை வாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்(பூமி புத்ரா) என்ற பெயரில் மலாய்க் காரர்களுக்குத்தான் முன்னுரிமை. காவல், ராணுவம், அரசாங்க நிறுவனங்கள், குடிநுழைவுத்துறை, மின்சாரம், வங்கி என அத்தனை அரசு வேலைகளும் மலாய்க்காரர்களுக்குத்தான். சீனர்கள் அரசையோ அரசு வேலையையோ நம்புவது இல்லை. கையில் வைத்திருக்கும் காசினைக் கொண்டு சொந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். தமிழர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் வேலையைத்தான் நம்பி இருக்கின்றனர்.
…
பாரிசன் தேசியக் கூட்டணிக்குக் கடும் போட்டியாக எதிர்க்கட்சித் தரப்பில் ஜனநாயக நடவடிக்கைக் கட்சி (National Justice Party – PKR), பார்டி இஸ்லாம் மலேசியா (Parti Islam se-Malaysia, or PAS), பார்ட்டி கெ-அடிலான் ரக்யத், Chinese Democratic Action Party (DAP) ஆகிய கட்சிகள் உள்ளன.
ஆளும் கூட்டணிக்கு ஐக்கிய மலாய் தேசிய இயக்கம் (United Malays National Organization), மலேசிய சீன சங்கம் (Chinese Gerakan party), மலேசிய இந்திய காங்கிரஸ் (Malaysian Indian Congress) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவுடன்தான் மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் பாரிசன் தேசியக் கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
…
இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் உதயக்குமார், கங்காதரன், வழக்கறிஞர் மனோகரன், வசந்தகுமார் மற்றும் கணபதி ராவ் ஆகியோர் வெளியே வர முடியாத படிக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
…
மலேசிய தொலைக்காட்சி நடிகை சுஜாதா கொலைக்கு, மஇக தலைவர் சாமிவேலுவின் மகன் வேல்பாரியே காரணம் என்று பலரும் நம்புகின்றனர். தவிர மைக்கா ஹோல்டிங்சில் பணம் போட்ட இந்தியர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் வாயில் வெண்ணெயை தடவி விட்டார் சாமிவேலு.
நன்றி: விடாது கருப்பு
7. மலேசியாவில் மத சுதந்திரம்: Religion in Malaysia | Lina Joy’s despair | Economist.com: A legal blow to religious freedom
8. இஸ்லாமிய ஷரியத் சட்டமா? ஜனநாயகமா? – BBC NEWS | Asia-Pacific | Malaysian voters wooed with Islam: “Voting and religion – Islamic credentials play a major role in the election campaign”
9. இட ஒதுக்கீடு கொள்கை ஏன் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடாது? – Pro-Malay Malaise – WSJ.com: Affirmative action policies are holding the country back.
செய்திகள்:
1. Malaysia’s Maturing Democracy – WSJ.com: Even Malays reject the status quo and vote for change.
2. Malaysia’s Governing Coalition Suffers a Setback – New York Times
3. Malaysia Opposition Takes Aim At Affirmative Action – New York Times
4. மலேஷியத் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை மீண்டும் கைப்பற்றினாலும் தேசிய முன்னணிக்கு பின்னடைவு
5. மலேசியாவில் மீண்டும் தமிழர்கள் போராட்டம்
6. மலேசியாவில் இந்திய வம்சாவளி அரசியல்வாதி படுகொலை
7. Facing Malaysia’s Racial Issues – பத்தித் தொகுப்பு
நடுவில் என்னுடைய ரெண்டணா:
- என்ன நடந்தது? முன்னாடி ஒரேயொரு மாநிலத்தில் மட்டும் ஆளுங்கட்சியாக இருந்த எதிரணியினர், ஒற்றுமையாகப் போராடியதன் விளைவாக ஐந்து மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். பாக்கி எட்டு மாநிலங்களிலும் ஐம்பதாண்டுகளாக ஆண்ட ‘தேசிய முன்னணி’யே மீண்டும் தொடர்கிறது. சென்ற சட்டசபையில் வெறும் பதினெட்டு இடங்களைப் பிடித்திருந்த எதிரணி, பாஜக-வும் விபி சிங்கின் ஜனதா தளமும் கை கோர்த்தது போல் போட்டியிட்டதில் 82 இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். ‘ஜன் மோர்ச்சா’ போட்டியிட்டது போல் மத வாத இந்துத்வா சக்திகளுடன் நேரடியாக சங்காத்தம் வைத்துக் கொள்ளவில்லை; ஆனால், மலேசியாவை இஸ்லாமிய நாடாக்க விழையும் Parti Islam se-Malaysia, or PAS கட்சியுடன் திரைமறை தொகுதி உடன்பாடு உண்டு.
- ஆளுங்கட்சிக்கு தோல்வியா? அப்படித் தோன்றவில்லை. மீசையில் துளியூண்டு மண் ஒட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலிலும் போட்டியிட முடியவில்லை. ஆளுங்கட்சிக்குத்தான் பெரும்பான்மையும் கிடைத்திருக்கிறது. இஸ்லாமிய சட்டத்தை அமலாக்க விரும்பும் எதிர்க்கட்சிக்கும், ஹின்ட்க்ராஃப்க்கும் ஏழாம் பொருத்தம்; அப்படியிருந்தும் தேர்தலுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு, கழுத்தறுக்காமல் இருந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி கூட்டணியைப் பார்த்தால் சீட்டுக்கட்டு மாளிகை போல் படுகிறது.
- தேர்தலில் போட்டியிட இயலாமல் செய்யப்பட்ட அன்வர் உத்தமரா? பெயரளவில் சுத்தம் என பொருள்படும் பெர்சி (Bersih) கூட்டமைப்பை உருவாக்கினாலும், ஊழல் குற்றச்சாட்டில் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார். மஹாதிருக்கு சரியான விகிதாச்சாரம் கொடுக்காத பிரச்சினையா அல்லது நிஜமாகவே தவறு செய்தவரா என்பது தெரியவில்லை. எப்படியாகினும், தன்னுடைய மகள், மனைவி, ஒன்று விட்ட மச்சினன், ரென்டு விட்ட மைத்துனி என்று பினாமியாக நிற்க வைத்து ஜெயிக்க வைக்கவும் தெரிந்த ஐ.எஸ்.ஓ.9000 அரசியல்வாதி.
- ஏன் திடீர் தேர்தல்? பெட்ரோல் விலை எகிறுவதால், பால் முதல் பாதாம் பருப்பு வரை எல்லாவற்றிலும் விலையேற்றம். தேர்தலுக்கு முந்தாநாள் வரை மானியம் கொடுத்து, எண்ணெய் பீப்பாயை தள்ளுபடியில் வழங்கிய அரசாங்கத்தால், இனியும் தாக்குப்பிடிக்க இயலாத நிலை.
- அடுத்த, நிதி நிலை பொக்கீட்டில் (பட்ஜெட்) ஆயில் கொள்முதலுக்கான விலைவாசி அதிகரித்ததால் ‘ஏற்றப்படுகிறது’ என்று அறிவிப்பதற்கு முன் எலெக்சன் முடிந்து விட்டது.
- அரசு ஊழியர்களுக்கு கொடுத்த போனசும் (முப்பத்தைந்து சதவீதமாம்!) அவர்கள் மனதில் இன்னும் பசுமையாக நிறைந்திருக்கும்போதே தேர்தல் நடந்தேறி இருக்கிறது.
- அமெரிக்கப் பொருளாதாரம் பணவீக்கம் நிறைந்து பணப்புழக்கம் குறைந்து recession ஆக ஓடிக்கொன்டிருக்கிறது. இதனால், மலேசிய நாட்டின் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் விலைவு இனிமேல்தான் தெரிய ஆரம்பிக்கும்; அதற்கு முன் ‘மலேசியா ஒளிர்கிறது’ என்று போர்டு போட்டு தேர்தல்.

- சீனர்களுக்குக் கூட இனப்பாகுபாடாமே? மலையாளிகளைப் போல் சாமர்த்தியசாலிகள் எவரும் இல்லை என்பது என்னுடைய பெங்களூர் எண்ணம். அமெரிக்கா வந்தபிறகு தராசுக்கு (பாரிசன் நேசனலுக்கு இதுதான் தேர்தல் சின்னம்) அந்தப் பக்கம் வைக்க சீனர்கள் வந்து சேர்ந்தார்கள். ஆளுங்கட்சியின் ஸ்திரத்தன்மையும் மதவாதத்தை பெருமளவில் ஊக்குவிக்காத நிலையும் மேற்கத்திய கொள்கைகளை பின்பற்றி தாராளவாதத்தை முன்னிறுத்துவதும், செல்வந்தர்களான (read capitalists) சீனர்களின் நெஞ்சை நிறைத்தே இருக்கிறது. மலாய் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை குறைத்தால் நல்லதுதான்; அதற்காக பெரும்பான்மை மக்களுடன் விரோதம் பாராட்டக் கூடாது என்று நாணல் போல் வளைகிறார்கள்.
தொடர்புடைய பதிவுகள்:
1. ஜடாயு எண்ணங்கள்: “மலேசியாவிலிருந்து ஒரு சந்தோஷ செய்தி!”
2. இன்றைய தலையங்கங்கள் – மார்ச் 11
3. My Nose: “கிழட்டு அனுபவங்கள்(10) – மலேசியா ராஜசேகரன்”
மலேசிய வலையகங்கள்:
1. மலேசியா இன்று :: Malaysia Indru
2. “ஓலைச்சுவடி”
3. VanakkamMalaysia.com
4. Malaysia Nanban5. The Star Online
6. The New Straits Times Online
7. hindraf.org | Hindu Rights Action Force; makkal sakthi here, makkal sakthi now!
8. Malaysia Votes (wordpress mirror)
தொடர்புள்ள வலையகங்கள்:
1. Economist.com | Country Briefings: Malaysia
2. Malaysia News – Breaking World Malaysia News – The New York Times