Tag Archives: அறிவியல்

கொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்

முதலில் கதையைப் படித்து விடுங்கள்:

https://www.newyorker.com/magazine/2020/03/23/out-there

“Out There,” by Kate Folk | The New Yorker: Fiction by Kate Folk: “The early blots had been easy to identify. They were too handsome, for one thing.”

ப்ளாட் என்பது என்ன? பாட் போல் அதுவும் கணினியில் மட்டும் இயங்குவது.

நம் துணைவர் எப்படி இருக்க வேண்டும்? என்னுடைய விஷயத்தில் அக்கறை எடுப்பார். தும்மினால், இருமினால் என்னாச்சு என்பார். எவனாவது இணையத்தில் தாக்கினால் குரல் கொடுப்பார். நான் செய்யும் அச்சுபிச்சுகளைப் பொறுப்பார். ப்ரூ காபி விளம்பரம் போல் எதிர்பாராததை செய்வார். வெறுமனே காமத்திற்கு மட்டும் என்னை உபயோகிக்க மாட்டார்.

மாடு பிடிப்பது போல் ஆணைத் தேடும் சமூகம். சந்தை போல் குவிந்திருக்கிறார்கள். அதில் பாதி பேர் போலி. கொஞ்ச காலம் துணையாக நடிப்பார்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பவர்கள் சட்டென்று இன்னொரு பெண்ணின் பின் சென்று விடுகிறார்கள். கரிசனத்துடன் விசாரிப்பவர்கள் பின்னொரு நோக்கத்தோடு வேறொரு பாதையில் போய் விடுகிறார்கள்.

இந்த நிலைமையில் எப்படி பொருத்தம் பார்ப்பது? யோனி, ரஜ்ஜு எல்லாம் போதுமா? பழக வேண்டும். ஆணின் உண்மையான குணாதிசயம் தெரிய வேண்டும். அந்தரங்கம் வெளிப்பட வேண்டும். ஆத்மார்த்தமான அன்பு உணரப்பட வேண்டும்.

இதைத் தற்காலத்திற்கேற்ப இந்தக் கதை சொல்கிறது.

கதாநாயகிக்கு நிறைய பிரச்சினைகள். முன்னாள் குடிப்பழக்கம்; தனிமை; அனாதரவாக விட்ட தந்தை; புதிய நகர வாசம்.

இருந்தாலும் நாயகி உயர்வாக உணர்கிறாள். சத்தான பழரசம்; பாவப்பட்ட ஜென்மம்; வஞ்சிக்கப்பட்டவள்.

This piece has some things in common with the recent one in The New Yorker, “Kid Positive” by Adam Levin (interrogation of our backstories, notions of real vs. fake and where the lines blur), as well as Elvia Wilk’s 2019 novel Oval, Ishiguro’s neo-classic Never Let Me Go, Jonathan Lethem’s novel from a few years back A Gambler’s Anatomy, and the stories of Aimee Bender (நன்றி: Kate Folk: “Out There” – The Mookse and the Gripes)

இயந்திரத்தனமாக நடப்பதை விரும்பாதவரின் கதை இது. நாயகியும் எந்திரத்தனமாகும் கதை இது. வேண்டுவதை செய்யும் கணவனை எதிர்பார்க்கிறோம். எப்போதும் ஒரே மாதிரி செயல்படும் புருஷனை எதிர்பார்க்கிறோம். இது சலிப்பூட்டும். எது வேண்டுகிறோமோ, அதுவே கிடைத்துவிட்டால், இடைவெளியை கோருகிறோம்.

மேலும்…

Kate Folk on Discerning Reality on the Internet | The New Yorker: The author discusses “Out There,” her story from this week’s issue of the magazine.

குன்றின் மீது அமர்ந்த குமரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள

இன்று அடுத்த கதை: நகுல்வசன் எழுதிய கடவுளும் கேண்டியும்

“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:6)

“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.

“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. ( மத்தேயு 5 )

“நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:24, 25) இந்த வீடு ஏன் இடிந்து விழவில்லை? ஏனென்றால் அந்த மனுஷன், ‘ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டிருந்தான்.’ (லூக்கா 6:48) இதிலிருந்து, இயேசுவின் வார்த்தைகளை வெறுமனே கேட்டால் மட்டும் போதாது, அவற்றின்படி ‘நடக்க’ நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்கிறோம்.

பிரச்சாரம் போதும். பிரசங்கத்தை நிறுத்திக் கொள்கிறேன். கிறித்துவின் மலைப் பிரசங்கத்தை ஏன் இந்தக் கதைக்கு எடுத்துக் கொள்கிறேன்?

  1. யேசு ஒன்றும் புதிய விஷயத்தைச் சொல்லிவிடவில்லை. கிறித்துவ கடவுள் அபவாதம் பேசவில்லை. அது முழுக்க முழுக்க கிறித்துவ கடவுளின் வார்த்தை. ஒத்துக் கொள்கிறேன். யூதர்களைப் பொருத்தவரை யேசு ஒரு தேவதூதர். அரூ போட்டியைப் பொருத்தவரை நகுல்வசன் எழுதியது அறிவியல் கற்பனை. அதே சமயம் சாமானியரை பொருத்தவரை, கடவுளும் கேண்டியும் இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்று புதுமைப்பித்தன் எழுதினார். அதை நகுல்வசன் சற்றே தொட்டுக் கொண்டு நவீனமாக்கி புதுமையாகத் தந்திருக்கிறார்.
  2. கடவுள் நேரில் வருவாரா? யேசு எப்படி தன்னிடம் கடவுள் சொன்னதை மலைமேல் பிரசங்கமாகப் பொழிந்தார்? யேசு இந்தியாவுக்கு வந்து புத்தமதத்தின் தத்துவங்களைக் கற்றுக் கொண்டு, அதன் பின் வளைகுடா நாட்டிற்குச் சென்று கிறித்துவமாக மாற்றிச் சொன்னாரா? இந்த மாதிரி வித விதமாக இந்தப் புனைவையும் அணுகலாம்.
  3. கிறிஸ்து சொன்ன கருத்தில் தெளிவு இருந்தது; குரலில் தீர்க்கம் இருந்தது; சொற்பொழிவில் கோர்வையான சிந்தனை தெரிந்தது; அதே சமயம் சுவாரசியமாகவும் கவர்ந்திழுக்கும் தன்மையுடனும் நம்பிக்கையும் அன்பும் கொடுக்கும் கருத்துக்களை முன்வைக்கிறார். அதெல்லாம் இந்தக் கதையில் கிடைக்கிறது.

கதையில் இருந்து…

கடவுள் ஹெட்செட்டைப் பொருத்திக்கொண்டார். திரையில் தெரிந்த நினைவுப் பட்டியலிலிருந்து அவர் நினைவுகளிலேயே மிகப் புராதன ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.

இருப்பு இல்லாமை இரண்டுமற்ற இருளை இருள் சூழ்ந்திருந்த வெளி.

இரவு பகல்கள் அற்று திசைகளின்றி வேறுபடுத்தலில்லாத வெறுமையால் போர்த்தப்பட்டிருக்கும் வெளி!. அப்படிப்பட்ட ஒரு வெளியில் வெப்பத்தின் திண்மையிலிருந்து அவர் உயர்த்தெழுகிறார். ஒருமையின் தனிமையால் அவருள் விழைவு ஊடுறுவுவதை அவரால் உணர முடிந்தது, அவ்விழைவின் அதிகரிப்பில் ஒர் உச்சம். அதன் தகிப்பில் பீஜம். அதன்பின், அதன்பின்… திரையில் இருள் கவிந்தது.

“End of selected memory” என்ற அறிவுப்பு திரையில் ஓடியது

கதையின் சவால்கள்

  1. துவக்கத்தில் வரும் பாஸ்டன் சமாச்சாரங்கள் பச்சைத்தமிழனை அன்னியமாக்கும்
  2. அந்தத் தத்துவப் பகுதிகள் கனவுகளில் வருவது தெளிவாக வெளிப்பட்டிருந்தாலும், இன்னும் சற்றே தத்வமசியை விவரித்து வாசக இடைவெளியைக் குறைத்திருக்கலாம்
  3. மனதில் பதியும் ஆக்கம் என்றாலும் இவ்வளவு ஜாலியான கதையின் முடிவில் “எல்லாமே நிராவிடம் தானோ?” என்ற எண்ணத்தை நிரப்பியிருக்கலாம்.

சென்ற பதிவு: குக்குரன்

அனைவரையும் கண்காணிக்கும் அன்பான கிருபை கொண்ட கருவிகள்

நன்றி: Richard Brautigan: All Watched Over By Machines Of Loving Grace

நான் யோசிக்க விரும்புகிறேன் (எவ்வளவு
சீக்கிரமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் பசும் புற்றரை
அங்கே பாலூட்டிகளும் கணினிகளும்
ஓருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒன்றாக
நிரல்நெறி இணக்கத்துடன்
நன்னீர் போல்
நிர்மலமான வான்வெளியைத் தொடும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(தயவு செய்து… இப்போதே!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் வனாந்திரம்
கற்பகதரு மரங்களும் கணிப்பொருள்களும் நிரம்பியிருக்க
மனக்கவலையின்றி மான்கள் சஞ்சரிக்க
கணிப்பொறிகளைக் கடந்தால்
அங்கே கான்முகம் போல்
சுழலும் மொட்டுகள் அரும்பும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(அப்படித்தான் இருக்கவேண்டும்!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுப்புறச் சூழியல்
நம் பயனில் வேலையில் இருந்து விடுதலை கிட்ட
இயற்கையுடன் மீண்டும் இணைய
நாம் பாலூட்டியாக திரும்ப மாற
சகோதரன்களும் சகோதரிகளுமாய் இருக்க
அன்பான கிருபை கொண்ட கருவிகள்
அனைவரையும் கண்காணிக்கும்.
Nongirrnga_marawili_baratjula_2014_Cybernetics_Forest_Ecology

என் குறிப்புகள்

இந்த ஆக்கம் 1967ல் எழுதப்பட்டது. அப்போது உடோப்பியக் கனவுகள் இருந்தால் சரி. கம்ப்யூட்டரும் காட்டு விலங்குகளும் கைகோர்த்துக் கொண்டு சந்தோஷமாய் வாழுகின்றன என்று எண்ணியிருக்கலாம்.

ஐம்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால், மனிதன் + முதலியம் ==> முடிந்தவரை குப்பை போடுகிறது. தொழில்நுட்பம் என்பது வேவு பார்ப்பதற்கும், ஒற்றறிவதற்கும், ரகசியமாய் கண்காணிப்பதற்கும், அடுத்தவரின் பொருள்களைத் திருடுவதற்கும், உலகளாவிய உளவுக்கும் நேர்மையாய் இருக்கிறது.

மீண்டும் 1967ல் இருந்த நிலையைப் பார்க்கலாம். இணையம் கிடையாது, உலகளாவிய செல்பேசி பயன்பாடு கிடையாது. ருஷியாவுடன் பிரச்சினைகள் இருந்தாலும், இன்னுமொரு உலகப்போர் மூளும் அபாயம் கிடையாது. ஐஸிஸ் கிடையாது. எல்லோர் கையிலும் ஐபோன் கிடையாது. கணினிக் கழிவுகள் கிடையாது.

அந்தக் காலகட்டத்தில் பறக்கும் கார்கள், சூரியசக்தியில் ஓடும் வீடுகள், பசுமைப் புரட்சி, கூட்டுறவு என நினைத்து எழுதியிருப்பார். இன்று?

அறிவியல் புனைவுகள்: 2014 சிறுகதை சிறப்பிதழ்

தினமலரில் அறிவியல் புனைவுகளை சென்னை தினம் 375 – சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். அது குறித்த பார்வை.

1. “சக்கரம்” – பிரசன்னா

ஒரே கதையில் எக்கச்சக்கமாய் திணித்திருக்கிறார் பிரசன்னா. ஒரு இடத்தில் நிலைக்கும் சூரியன் போல் கதை நகர வேண்டும். இங்கோ மழை போல் மூத்திரம் அடிக்கிறது. தினமலர் என்பதால் இது போதும் என்று முடிவெடுத்து இருப்பார் கதாசிரியர். வாசகனிடம் எந்தவித கருத்துருவாக்கமும் எண்ணவிதைப்பும் உருவாக்காத ஆக்கம். அதைவிட படு பொருத்தமில்லாத ஓவியங்கள் இந்தக் கதையின் நடுவே வருகிறது. கதையில் அறிவியல் என்பதே கிடையாது. வருங்காலத்தில் நடப்பதாக பாவ்லா செய்கிறது. அந்த வருங்காலத்தைக் குறித்தும் கற்பனாசக்தி இல்லாத கதை. புனைவு என்றால் நம்பகத்தன்மை வேண்டும். முக்கிய கதாபாத்திரத்துடன் ஒன்ற வேண்டும். புதியதாக ஏதாச்சும் விஷயம் இருக்க வேண்டும்.

ஒன்றுமே இல்லாமல் அறிபுனை கதை என்கிறார். அதாவது மேஜிகல் ரியலிசமாக வருங்காலமும் இக்காலம் போல்தான் இருக்கும் என்கிறார்.

  1. ஒரு காப்ஸ்யூல் சோறு – சுதாகர் கஸ்தூரி
  2. கால இயந்திரக் கைதி – ஜீவ.கரிகாலன்
  3. சென்னை 2114 – ஆயிஷா இரா.நடராசன்
  4. போகம் தவிர் – இரா.முருகன்
  5. 2047 ஆகஸ்ட் 15 – ராஜேஷ்குமார்
  6. நாளை மற்றுமொரு – தவமணி வசீகரன்
  7. இன்னும் 5 நிமிடங்களில் – ஜி.பி

எதிர்காலத்தில் என்ன நடக்கும்? – ப்ரூஸ் ஸ்டெர்லிங் பேட்டி

சொல்வனத்தில் இந்தப் பேட்டியின் மேம்பட்ட வடிவம் வெளியாகி இருக்கிறது. மொழிபெயர்ப்பின் முதல் டிராஃப்ட் இங்கே:

கோரி டாக்டொரொவ்: தொழில்நுட்பத்தினால் உலகம் மெருகேறியுள்ளதாக உணர்கிறீர்களா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போல் மனிதர் அல்லாத எந்த ஜீவனிடமும் இந்தக் கேள்வியை கேட்டால், அதன் கோணத்தில் பார்த்தால், சர்வ நிச்சயமாய் ’முன்னேறவில்லை’ என்பதுதான் பதில். நிறமிழந்த முயல்களும் மரபணு ஒட்டு போட்ட புகையிலைச் செடிகளும் ‘ஆமாம்’ வாக்கு போடலாம். தொழில்நுட்பம் என்னும் வார்த்தையை புழங்க ஆரம்பித்த கிரேக்கர்கள் காலம் துவங்கி வாழ்ந்து வரும் பவளப் பாறைகளிடமோ கற்பகத்தரு மரங்களையோ கேளுங்கள். நிறைய சோகக் கதைகளை கேட்பீர்கள்.

மாத்யூ பாட்டில்ஸ்: நாளைக்கு என்ன நடக்கும் என்று எண்ணுவதே மனிதனின் நித்திய கலக்கம். வருங்காலம் இப்படி சொக்குப்பிடி போட்டு வைத்திருப்பதில் பிரத்தியேகமாக எதாவது உண்டா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போன்ற புதிய தலைமுறையிnar, சரித்திர காலத்தில் இருந்து வரும் ஜோசியர் கையில் எதிர்கால ஆருடங்களை ஒப்படைக்க மாட்டோம். சமீபகாலமாக, வருங்கால ஆருடம் என்று பார்த்தால் நிறைய விஷயம் இருக்கிறது. முதலாவதாக, “வளர்ச்சி” என்றால் என்ன என்றே இப்பொழுது தெரியவில்லை. நம் பழமைவாதிகள் எல்லோரும் புரட்சியாளராகி விட்டார்கள். முற்போக்காளர்கள் எல்லோரும் பழமைவாதிகளாகி விட்டார்கள்.

நம்முடைய எல்லா வகையான சமூகப் போக்கு குறித்தும் அனைவரின் பழக்கவழக்கங்கள் குறித்தும் சேதி சேகரிக்க விரும்புகிறோம். முன்னெப்போதும் இருந்ததை விட அதி பிரும்மாண்டமாக, ஒவ்வொருத்தருடைய அந்தரங்க வாழ்க்கையையும் சமூகச்சங்கிலித் தொடர்புகளையும் கோர்த்து விஷயங்களை பெரிய அளவில் சேமிக்கிறோம். புதுக்கருக்கு இன்னும் போகாமல் இருப்பதால் இப்பொழுது இதில் நிறைய ஆர்வம்; இதெல்லாம் பயனுள்ளதாக மாற்றும்வரை இதில் நமக்கு ஆச்சரியம் இருக்கும்.

ஜியுஸெப்பி கிரானியெரி: உங்களுடைய ‘காதல் விநோதாமானது’ புத்தகத்தில் காவின்ஸ் சொல்வார்: ‘நான் கணினி கிறுக்கன் போல் ஆடை அணிவதில் கவனம் செலுத்தாதவனாக இருக்கலாம்; ஆனால், என்னால் மக்களின் போக்குகளை கணிக்க முடியும்.’ உங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய ஐந்து போக்குகளை பொறுக்க முடியுமா?

புரூஸ்: உங்களுடைய கற்பனையை எப்படியாவது குதிரையாக்கினால்தான் என்னுடைய வருங்கால போக்குகளை பொறுக்கமுடியும்.

எதிர்கால கணிப்புகளிலேயே மிக மிக முக்கியானதென்றால், அது வானிலை மாற்றம். மனிதருக்கு அதைப் பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. குற்றவுணர்ச்சியால் குமைகிறார்கள்; அல்லது தோள் குலுக்கி கண்டுங்காணாமல் ஒதுக்குகிறார்கள். ஆனால், நாளைய தேதியில் பெரிய வித்தியாசத்தை, வேறு எந்த சமகால நிகழ்வை விட வெகு ஆழமான பாதிப்பை உருவாக்குவதென்றால், அது இதுதான்.

தனிப்பட்ட முறையில் பார்த்தால், எனக்கு பல விஷயங்களில் நாட்டம் உண்டு. அமெரிக்காவில் தோன்றாத ஆனால் உலகத்தின் பிற நாடுகளின் புகழ் பெற்ற இசை பிடிக்கும். அருகிப் போன ஊடக சாதனங்களை நோட்டமிடுவேன். எண்வய மிடையத்தில் தோன்றும் புதுப் புது கணிமொழிகள் கற்பேன். ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் கணிப்பொறிகளை விரும்புகிறேன். இணையத்தின் பொருளாக ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற இணையம் நிறைந்திருக்கும் சாத்தியத்தினை ஆராய்கிறேன்.

உலகத்தில் இதெல்லாம் முக்கியமான போக்குகள் அல்ல. ஆனால், எனக்கு முக்கியமாகப் படுபவை. புரிந்து கொண்டு, ஆழமாகப் படித்து அறிந்து கொள்ள விரும்புபவை. இவை எல்லாமே என்னுடைய வலைப்பதிவில் முக்கியமானதாகவும் அடிக்கடி எழுதப்படுவதாகவும் இருக்கிறது.

இந்த உலகம் முழுக்க பல்வேறு போக்குகாளால் ஆனவை. ஆயிரக்கணக்கில் புத்தம்புது பாதைகள் இருக்கின்றன. ஆனால், ஒன்றே ஒன்றை எடுத்து அதனுள் சென்றால்தான், அந்த நுட்பத்தின் சூட்சுமத்தை நம்மால் பயன்படுத்திக்க முடியும்.

உதாரணத்திற்கு புகை பிடித்தால் உடல்நலம் கெடலாம் என்பதை எடுத்துக்கலாம். அனைவரும் அதை சொல்கிறார்கள். இவ்வளவு ஏன்… அந்த சிகரெட் பாக்கெட்டிலேயே புற்றுநோய் படம் எல்லாம் போட்டிருக்கு. எனவே, விளைவுகளில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், முழிப்பு வருகிற வரைக்கும் விடப்போவதில்லை. நமக்குனு வந்துச்சுனாத்தான் வெளங்கும். இது ஒரு பாதிப்பு. அது நம்மைத் தாக்கி உணரவைக்கிற வரைக்கும் தெரியப் போவதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு ‘போக்கு’ம். நமக்கு அந்தப் போக்கின் விளைவுகள் சொந்தமாவதற்கு நாம் அது கூட உறவாடணும்.

கோரி டாக்டொரொவ்: கணினியில் உருவாக்கும் ஓவியத்திற்கும் பேப்பரில் வரைவதற்கும் நடுவே உள்ளே பிரிவினை என்றாவது இல்லாமல் ஆகுமா? அல்லது ஏற்கனவே மின்னணுவியல் கலைக்கும் துணியில் தீட்டும் கலைக்குமான வித்தியாசங்கள் நீங்கிவிட்டதா?

புரூஸ்: இந்த பாகுபாடு எல்லாம் பாம்பு இரப்பை மாதிரி. மோனே, வான் கோ மாதிரி புகழ்பெற்ற ஓவியர்களின் வேலையை வாங்குவதற்கு ஏலப் போட்டி எதை வைத்து நடக்கிறது? அந்த ஓவியத்தின் கணினி பிரதியை வைத்துதானே.

மின்னணுவியல் கலைகளில் ஒரு வகையை மட்டும் சர்வ நிச்சயமாய் “மின்னணுவியல்” என்று பொதுமைப்படுத்தலாம் — அந்த கலை வடிவத்தில் கம்பிகள் காணக் கிடைக்கும்; மின்சக்தி பாயும்; நிஜமாகவே ஷாக் அடிக்கலாம். அந்த மாதிரி கலைப் படைப்பு நீடித்த தாக்கத்தை உண்டாக்காது.

ஆனால், எப்பொழுது இது துவங்குகிறது? எங்கே முடிகிறது? இந்த அனுபவத்தை சொல்லால் அளந்து விடுவது மிகவும் சிரமமான காரியம். விழியங்கள் எப்பொழுது கலை உன்னதத்தைத் தொடுகிறது? படம் பார்த்த பின்பு அந்த படத்தின் பாதிப்பு எப்பொழுது தீர்ந்து போகிறது?

ஐ-போனில் கிடைத்த அனுபவத்தையும் கம்பிப் பின்னல்களின் நடுவே குவிந்து கிடக்கும் கம்ப்யூட்டர் கலைத் தோற்றங்களையும் கணிமொழியில் நிரலியாளர் நிகழ்த்திய அற்புத சாத்தியங்களையும் எப்படி அந்த விஷயங்களின் நுட்பங்களை தோற்றமும் மறைவும் என்று அறுதியிட்டு பகிர முடியும்?

முன்பு நாடகம் இருந்தது. அது மட்டுமே கலை. இப்பொழுது சினிமாவும் அதற்கு நிகரான கலை. நாளைக்கு மின்னணுவியலில் உருவானவை மட்டுமே கலாவடிவமாகுமா என்பதை மேடையில் கூத்து கட்டின காலத்தில் திரைப்படம் கலையாக ஆகுமா என்று வினவுவதற்கு ஒப்பிடலாம்.

எனக்கு அப்படி மின்கல கலைக் காலத்தை கற்பனை செய்ய இயலுகிறது. ஆனால், நிஜத்தில் நிகழுமா என்றால் மாட்டேன் என்று மனசு சொல்கிறது. ரத்தமும் சதையுமான வடிவத்தை விட்டு விலகும் சமுதாயம் எனக்கு அன்னியமாகப் படுகிறது.

பால் டி ஃபிலிப்போ: எண்பதுகளிலே நீங்கள் அறிவியல் புனைவுகளை எழுத ஆரம்பித்ததற்கு பதிலாக, இன்றைக்கு நீங்கள் அறிபுனை எழுத்தாளராக எழுதத் துவங்கினால், என்ன உத்தியை உபயோகிப்பீர்கள்? புதிய அறிபுனை எழுத்தாளர்களுக்கு தங்கள் பெயரை பரவலாக்க, புகழ்பெற எந்த வியூகம் சரியானது? சுருக்கமாக சொன்னால், 2013ன் நிதர்சனங்கள் என்ன?

புரூஸ்: இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. ஒரு விஷயத்தை மட்டும் சிருஷ்டிகர்த்தாவாக பிடித்துக் கொண்டு காலந்தள்ளுவதென்பது இப்பொழுது இயலாதது. இன்றைக்கு அறிபுனை படைப்பாளியாக கலக்க வேண்டுமானால் உங்களுக்கு வலைப்பதிய தெரிய வேண்டும்; கருத்தரங்குகளில் பேச வேண்டும்; காமிக்ஸ் உலகிலும் வளைய வர வேண்டும்; கொஞ்சம் தொலைக்காட்சி; கொஞ்சம் சினிமா…

அறிபுனை எழுத்தாளராக இருந்து கொண்டு புத்தகங்கள் போட்டு, பத்திரிகைகளில் மட்டும் எழுதிக் கொண்டிருந்ததெல்லாம் இறந்த காலமாகிப் போயாச்சு.

எழுத்தாளராவதற்கான முதல் அடி என்பது உங்களுக்கு என்ன வாசிக்க பிடித்திருக்கிறதோ, அதைப் பற்றி எழுதுவது. அதற்கு அடுத்ததாக, நீங்கள் எழுதுவதை எவர் கவனமூன்றி வாசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஏன் நீங்கள் எழுதுவதை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிமுக்கியமான, மிகப் பெரிய அலைகளை உருவாக்கக்கூடிய படைப்புகளுக்கு, எந்த வெளியீட்டாள்ரும் பணம் தரவோ, எவரும் புத்தகமாக வெளியிடவோ வராவிட்டால் ஆச்சரியமே பட வேண்டாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: உங்களுடைய எழுத்து நடையையோ, கதைகளின் கருவையோ, தற்கால கணினி உலகிற்காக மாற்றிக் கொண்டீர்களா? வைய விரிவு வலை காலத்தின் புத்தகத் தயாரிப்பும் விநியோகமும் வாசகரோடு தொடர்பு கொள்ளும் முறையும் மாறினதால் எழுத்தாளருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன?

புரூஸ்: இந்தப் பிரச்சினையால், எண்பதுகளில் இருந்தே என்னுடைய எழுத்துலகம் மிகவும் சிரமதசையில் இருக்கிறது. இணையத்திற்காக நிறைய எழுதுகிறேன்; அதற்கும் என்னுடைய புத்தகங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இந்த கஷ்டத்தின் பின்விளைவுகளை சொல்வது சிரமம். ஆனால், அனுமானித்து வைக்கிறேன்.

என்னுடைய நடை கெட்டுப் போயிருக்கிறது. என்னால் எப்படி எல்லாம் பலவிதமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் முழுக்க முழுக்க முனைப்பு எடுத்து பயிலவே இயலவில்லை. ஆனால், அதுவே என்னை விழிப்பாகவும் நெகிழ்வாகவும் வைத்திருந்திருக்கிறது. இதற்கு, தற்கால இசைக் கலைஞரிடம் உள்ள டிஜிட்டல் இசையின் பாதிப்பை ஒப்பிடலாம். நிறைய புதுமையான சத்தங்களை உண்டாக்குகிறார்கள். அவற்றை அவசரமாக உருவாக்குகிறார்கள். ஆனால், அதனால் மட்டும் இசையில் லயிக்க முடிவதில்லை.

என்னுடைய எழுத்தின் மூலம் உலகத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைவரிடமும் பேச முடிகிறது என்று உணர்ந்தபோது மிகவும் கடமை கொண்ட படைப்பை கொடுக்க முடிந்தது. ஆனால், உலகளாவிய பார்வையினால், தேசிய பதிப்பாளரின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் என் எழுத்து என்னைக் கொண்டு போய்விட்டது. உலக மக்களுக்காக சர்வதேச சந்தையில் புத்தகம் போடும் பதிப்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் நூல் எழுதி வெளியிடும் ஆர்வம் குறைந்து போனது.

நடுவண் குடிமக்களுக்காக மட்டுமே அச்சடிக்கும் புத்தக வெளியீட்டாளர்கள் என்னை மறைத்து ஒதுக்குகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் எந்த மேற்கத்திய படைப்பாளிக்கு இந்த மாதிரி புறந்தள்ளல் சகஜமானது. உலகமயமாக்கலின் பொதுப் பிரச்சினை இது.

டெட் ஸ்ட்ரிஃபாஸ், ஜான் சண்ட்மான்: பெருங்கதைகளின் அந்திமக் காலம் நெருங்கி விட்டதாகவும், இனி வரும் காலம் சின்னச் சின்ன கதைகளிலும் குட்டிக் கதைகளை கோர்த்ததாகவும் விளங்கும் என்று சிலர் சொல்கிறார்களே. அதைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?

புரூஸ்: கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 2062ல் எவராவது ‘2012ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ட்வீட்கள்’ என்னும் நூலை வாங்கிப் படிப்பாரா? ‘தலை சிறந்த லைக் பட்டியல்’ என்று கற்பனை செய்ய முடியுமா? நான் வலையில் பதிபவன். கலைத்துப் போட்டு தொகுக்கும் விவரணை எனக்கு பிடிக்கும்தான். வலைப்பதிவு என்பது குறைந்த காலத்தில் கெட்டுப் போகும் பதார்த்தம் போன்றது. நீங்கள் வடிவேலுவின் அவ்வ்வ்வ் காமெடியை ரசிக்கலாம்; பகிரலாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: நல்ல அறிபுனை எழுத்தாளர்களைப் போல் நீங்களும் புதிய சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் உலவ விட்டிருக்கிறீர்கள். தெரிந்த வார்த்தைகளை வித்தியாசமாகக் கலைத்துப் போட்டு புதிய மொழியை உருவாக்குவது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருந்தாலும், தேவைதானா?

புரூஸ்: சமூக மாற்றம் மொழியில் உள்ள போதாமையை உணர்த்துகிறது. அதனால், நான் மொழியை அடுத்த கட்டத்திற்கு தள்ளுவதாக தோன்றுகிறது. உதாரணமாக, ’பொருட்களின் இணையம்’ என்னும் உபயோகத்தை எடுத்துக்கலாம். ’பொருள்’ என்றால் எதைக் குறிக்கிறது? எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் கார், ஃப்ரிட்ஜ், செல்பேசி… இப்படி… எந்தப் பொருளாக வேண்டுமானாலும் இணையத்தின் முழு சாத்தியத்தை உள்ளடக்கி இருக்கலாம்.

அடுத்ததாக ‘ஸ்பைம்’ – விண்வெளிகளில் கால வர்த்த பரிமானங்களை அளப்பதற்கான எளிய சொல். மறு சுழற்சி, முப்பரிமாண உருவாக்கம், பொய்த் தோற்றங்களுக்கான மெய்நிகர் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குவதற்கு பதிலாக ஸ்பைம் என்று சொல்லிப் போய்விடலாம். வேணுங்கிறவங்களுக்கு இருக்கு.

ஒரு பிரச்சினை இருக்கு; அதைக் குறித்து பேசணும்; பொது வெளியில் பரவலாக விவாதிக்கணும்; அதைக் குறித்து முன் கதை சுருக்கம் எல்லாம் சொல்லாமல் சுலபமாக எல்லோரையும் சென்றடைய வார்த்தை உபயோகங்களை உருவாக்குவதில் என்ன கொறஞ்சு போச்சு? ஆங்கிலத்தில் கொச்சை மொழியில் ஆயிரக்கணக்கான புது கிளைமொழிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

‘பக்கிஜங்க்’ என்று நான் புது வார்த்தை உருவாக்குவதால் ஆங்கிலம் அழிந்துவிடப் போவதில்லை. மறு சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கரிம நுண்குழாய்கள் குப்பை போடுகின்றன என்பதற்கு வட்டார வழக்கு உருவாக்குகிறேன்.

‘குப்பைவெளி’ (junkspace) என்றும் உருவருபெருவுரு (blobject) என்றும் கவித்துவமாக நான் பேசுவதாக சிலர் நினைக்கிறார்கள். அது நான் இல்லை. இந்த சொல்லாட்சிகளை கண்டுபிடித்து புழக்கத்தில் விட்டது மட்டுமே நான். அதனால் என்ன போச்சு? நான் அறிபுனை எழுத்தாளன். புது வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக நான் கைதாகப் போவதில்லை.

மாத்யூ பேட்டில்ஸ்: நாம் எதிர்பாரா வகையில் எது நம் காலங்கடந்து நிற்கும்?

புரூஸ்: பெரும்பாலும், பழங்கால சமாச்சாரங்கள்தான் நம் காலங்கடந்து தாக்குப் பிடிக்கிறது. பிரமிடுகளை எடுத்துக் கொள்ளலாம். மனிதனின் மற்ற எல்லா விஷயங்களை விட நீண்டகாலமாக இருக்கிறது. நாம் சேமிக்கும் இணையக் கோப்புகளை விட பேப்பர் நிலைத்து நீடிக்கும் என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், வன்தட்டுகள் எளிதில் அழியக் கூடியவை; பிட்டு பிட்டாக பிட்டுகள் உதிர்ந்து போகும்.

மற்ற நாகரிகத்தைப் போல் நாமும் இருந்தால், நம்முடைய குப்பை கூளங்களில்தான் சிறப்பான துப்புகளை விட்டுச் செல்வோம். குப்பை நம்மிடம் நிறையவே இருக்கிறது. பிரமிடு கோபுரம் மாதிரி நிலம் நிரப்பி, குப்பை மலை கொண்டிருக்கிறோம்.

ரிச்சர்ட் நாஷ்: நீங்க முன்பொரு முறை பேசும்பொழுது ’என்னிடம் வருங்காலத்தைப் பற்றி அறுதியிட்டு சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டால், நமக்கு வயதாவது மட்டுமே’ என்று குறிப்பிட்டீர்கள். அனைவரின் ஆயுளும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று சொல்வீர்கள்?

புரூஸ்: இன்றைய முதியோர் பாதுகாப்பங்களில் நம்முடைய வருங்காலத்தை உணரலாம். ஐரோப்பாவில் மூத்த நகரமாக ஜெனீவாவை சொல்கிறார்கள். அதிக அளவில் வயதானோர் வாழ்வதால் அந்த அடைமொழி கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று நிதானித்து, தடுமாறி ஏறி இறங்கும் முதியோர் நிறைந்த பயணங்களினால் பேருந்துகள் தாமதமாக ஓடுகின்றன. தாத்தா, பாட்டி நிறைந்த காபி கடைகளில் அவசரம் இல்லை; சத்தம் இல்லை.

குழந்தைகளோ அவர்கள்பாட்டுக்கு தங்கள் வயதொத்தவர்களுடன் தனியாக சேர்ந்து அவர்கள் இடங்களில் சுற்றுகிறார்கள். ஜெனீவா கிழவிகளானால் நிறைந்த இடமாக இருக்கிறது. மருத்துவ முன்னேற்றத்தினால் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க, ஆண் – பெண் பால் சமநிலை சரிகிறது.

இது ஒன்றும் ஆச்சரியமான மாற்றம் அல்ல. ஆனால், மாஸ்கோவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அங்கே ஆயுள் எதிர்பார்ப்பு ஜெனீவா போல் நீண்ட நாள் அல்ல. இரைச்சலும் கவர்ச்சியும் கூச்சலும் நிறைந்திருக்கும் மாஸ்கோவில் வாழ்வதும் கடினமே.

ரிச்சர்ட் நாஷ்: ஆயுள் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் கூடி வரும் காலகட்டத்தில் கலாச்சார மாற்றங்களாக என்ன நடக்கும்? ஒரு பக்கமோ அபரிமிதமான வளம்; இன்னொரு பக்கத்திலோ கடுமையான கருவுறுதிறன் பஞ்சம். வயதாகிப் போன முதியோரும் இந்த செழுமை ஏற்றத்தாழ்வும் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடுகிறது?

புரூஸ்: கருவளம் கம்மியாவதெல்லாம் கொஞ்ச காலம்தான் நடக்கும். அதற்கப்புறம் எந்த குழுவோட கருத்தரிக்கும் திறன் கம்மியாச்சோ, அவங்கள இன்னொரு குழு ரொப்பிரும். இன்னொரு வார்த்தையில் சொல்லணும்னா, பணக்காரங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையென்றால், புது பணக்கார வர்க்கம் முளைச்சுரும்.

ஆயுசு ஜாஸ்தியாகிக் கொண்டே போனால், முதியவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கும்; அதனால், இளசுகளின் குறைவான மக்கள்பேறு விகிதத்திற்கும், கிழவர்களின் எண்ணிக்கைக்கும் சமனாகிப் போச்சு என்று சிலர் வாதிடுகிறார்கள். அந்த மாதிரி கணக்கு என்னிக்குமே வேலை செய்ததில்லை.

இப்பொழுது நிறைய பேர் நிறைய ஆயுட்காலம் வரை வாழ்கிறார்கள். அது கொஞ்சம் எளிது. ஆனால், எல்லாவிதமான மனிதர்களும் நிறைய ஆயுள் வாழவில்லை. அதை சாத்தியமாக்க ரொம்பக் குறைவான முயற்சியே செய்திருக்கிறோம். நான் முடியாதுனு சொல்லவரல. இந்த மாதிரி நோய்வாய்ப்பட்டவர், மூன்றாம் உலகத்தவர்னு எல்லோருடைய வயதும் நீடித்து இருக்கக்கூடியதைப் பற்றி நிறைய அறிபுனை கதை கூட நான் எழுதியிருக்கிறேன். ஆனால், நிஜத்தில் பார்த்தால், ஒண்ணும் நடக்கல.

சோதனை எலியின் ஆயுளைக் கூட ஐந்து அல்லது பத்து மடங்கு அதிகரிக்க முடியல. இரண்டு வருஷம் வாழுகிற எலி, இன்னொரு வருஷம் கூடுதலாக வாழுது. அதை பத்து வருஷமா மாற்ற இன்னும் இயலவில்லை. அப்படி செய்ய முடிஞ்சா என்னோட கருத்து உடனடியாக மாறும்; கூடவே நிறைய கவலையும் வரும்; அரசியலில், சட்டத்தில், பொருளாதாரத்தில், அறத்தில், சமூகத்தில் என்று எல்லா துறைகளிலும் திரும்பிச் செல்ல முடியாத மாற்றங்களுக்கு உட்படுவோம்.

மரியான் டி பியர்ஸ்: நெடுங்காலம் வாழ்வதைப் பற்றி பேசும் இந்த சமயத்தில் மனித குலத்தை காப்பாற்றும் குணாதிசயமாக எதை சொல்வீர்கள்? வருங்காலத்தில் உங்களுக்கு எந்த விஷயம் பெருத்த நம்பிக்கையைத் தருகிறது?

புரூஸ்: என்ன நடக்குதுனே தெரியாமல் பொதுஜனங்கள் இருப்பதுதான் எனக்கு பெருத்த நிம்மதியைத் தருகிறது. கணிக்கவே முடியாத தகவல்களுக்குள் தடுக்கி விழுவதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. புதுசு புதுசா தப்பு செய்யும்போதுதான் நாம குண்டுசட்டிய விட்டு வெளியே வருகிறோம். அகிலத்தில் பல ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கின்றன.

நம்மைக் காப்பாற்றி வருவது தூரதிருஷ்டி பார்வை அல்ல… சூது வாதில்லாத தன்மைதான்.

நீல்ஸ் கில்மேன்: உலக இலக்கியங்களில் இருந்து வருங்காலமறியும் தரிசனமும் ஞானதிருஷ்டியும் கொண்ட பார்வை தந்ததில் முக்கியமானது எவை என்று பட்டியலிடுங்களேன்?

புரூஸ்: நிச்சயமாய் வன்னேவார் புஷ் எழுதிய ‘நாம் யோசிக்கும்படி’ (As We May Think) சொல்வேன். ஆனால், அது தற்கால அறிவியல் குறித்த கட்டுரை. அதனால், ‘இலக்கியம்’ என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனினும், அசாத்தியமானது.

‘வீரமிக்க புது உலக’த்தில் (Brave New World) ஆல்டஸ் ஹக்ஸ்லி நிறைய கணிப்புகளை சரியாக சொல்லி இருந்தார். அவை நம்மை பயமுறுத்தா விட்டாலும், ஹக்ஸ்லியை அச்சுறுத்தியது.

ஜூல்ஸ் வெர்னின் முதல் நாவலான ’இருபதாம் நூற்றாண்டின் பாரிஸு’ம் அநாயசமாக ஆருடம் கணித்திருந்தது. ஆனால், வெர்னால் அதை அச்சுப் புத்தகமாக்க முடியவில்லை. அதனால் அநாயசமாகவில்லை.

பின்வருவதை முன்பே சொன்னதில் ஆல்பர்ட் ரொபிதாவின் கேலி சித்திரங்களும் சாதனை படைத்தவை.

ஜியூலியானா க்வாஜரோனி: ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் பொறிகள், நம் வருங்கால தொழில்நுட்பத்திற்கும் இணையத்திற்கும் புனைவுகளுக்கும் எவ்வளவு முக்கியம்?

புரூஸ்: நான் ’மிகைப்படுத்திய எதார்த்த’த்தின் மிகப் பெரிய விசிறி. இந்தத் துறை பலவிதங்களில் பிளவுபடப் போகிறது. விதவிதமான மென்பொருள்களும், கருவிகளும், பிரத்தியேகமான வழிகளும் இந்தத் துறையில் வரும். சிலது பெரிய அளவில் புகழடையும்; சில காணாமல் போகும்.

கணினித்துறை ’ஊட்டம் சேர்த்த எதார்த்தம்’ மூலமாக மீமெய்யியல் லட்சியங்களைத் தொடுகிறது. எது நிஜம்? நிதர்சனத்திற்கு நான் என்ன செய்ய முடியும்? கணினித் துறையினால் யதார்த்தத்திற்கு எந்த ஆபத்துமில்லை.

“விழியத் துண்டுகளை எவ்வாறு கைபேசியில் ஒட்டி வெட்டலாம்?” போன்ற எளிமையான கேள்விகளின் பதிலிலேயே சுவாரசியமான எதார்த்தங்கள் ஒட்டியிருக்கும்.

நமது இலக்கியநுட்பம்

இரண்டு நிகழ்ச்சிகள். ஒரு நாவல் சம்பந்தமான சிக்கல். அதைச் சரிசெய்ய பல ஆண்டுகளாக முயன்றும் முடியவில்லை. ஏராளமான தற்காலிகத் தீர்வுகள். உடனடி மாற்றங்கள். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருந்தது

பதிப்புத்துறையில் உயர நிர்வாகியாக இருக்கும் நண்பரிடம் சொன்னேன். அவர் கேட்டார் ‘உங்களுடைய ஐம்பதாண்டுக்கால வாழ்க்கையில் எந்த நூலாவது முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு இலக்கியமாக செய்யப்பட்ட அனுபவம் உண்டா?’

நான் ஒரு நிமிடம் அயர்ந்தே போனேன். இல்லை!

இன்றுவரை கதை, கவிதை, கட்டுரை, நாவல் எதுவாக இருந்தாலும் ஒரு குறை என வந்துவிட்டால் அதை கடைசிவரை சரிசெய்யவேமுடியாது என்பதுதான் என் அனுபவம். என்னுடைய நாவலை 1998ல் எழுதும்போதே புதுமையில் ஒரு புரியாமை கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரை பல விமர்சகர்கள் படித்தும் அது சரிசெய்யப்படவில்லை. மொத்தமாக இடித்து வேறு நாவல் எழுதுமென்று கடைசியாக பதிப்பாளர் சொல்லிவிட்டார்.

திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் செய்வார்கள். அத்தியாயங்களை மாற்றுவார்கள். கலைத்து திரும்பப் பூட்டுவார்கள். சிலசமயம் தற்காலிகமாகக் கோர்வையாகும். நாலைந்துமுறை அப்படிச் செய்தபின் சரியாகவில்லை என்றால் ‘போய்டிச்சு சார்…மொத்தமா மாத்தணும்’ என்பார்கள்.

நான் அதைச் சொன்னேன். நண்பர் சொன்னார் ‘தமிழகத்தில் சமையல் சார்ந்த எந்த விஷயங்களுக்கும் நிரந்தரமாக தீர்வு கிடையாது. அதைச் செய்யத் தெரிந்த எவரும் தமிழர் இல்லை. கொழுப்பு ஏறுவது முதல் உங்கள் மூதாதையர் கைமணம் வரை எதையும் நம்மால் முழுமையாகச் சரிசெய்ய முடியாது, செய்யபப்ட்டதும் இல்லை’

மறுவாரம் மடப்பள்ளியில் என் மனைவியுடன் சமைத்துக்கொண்டிருக்கையில் அதைச் சொன்னேன். அவர்தான் என் வீட்டில் தொண்ணூறுசதம் சமைப்பவர். சிரித்தபடி ‘இது இப்போதா தெரிகிறது உங்களுக்கு? நான் முப்பதாண்டுகளில் ஐம்பதாயிரம் இல்லத்தரசிகளையும் செஃப்களையும் கண்டிருப்பேன். என்னிடம் ஆயிரத்தைநூறு கடை மசாலா இருக்கும். ஒரு சாம்பார் எப்படி ஓடுகிறது என்று தெரிந்த ஒரு தமிழ் சமையற்காரரையோ சாப்பாட்டுக்காரரையோ நான் இதுவரை பார்த்ததில்லை’

மிகவும் அதிகப்படியான கூற்று என்றே நான் நினைத்தேன். அவர் சொன்னார் ‘உண்மை…கொஞ்சம்கூட மிகை கிடையாது. மொத்த சாம்பாரையும் கொட்டிவிட்டு திரும்ப அள்ளக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அனுபவம் மூலம் எந்த நளபாகம் பிழைசெய்கிறது என்று ஊகித்து அதைக் கழற்றி மாற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சாம்பாரின் இதயத்தைப்பற்றி தெரிந்த தமிழர் என எவரும் இலலை’

அவரது தொழிலில் நூற்றுக்கணக்கானமுறை மலச்சிக்கல்கள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஆந்திர, கர்நாடக நிபுணர்களை வரவழைத்துத்தான் சரிசெய்திருக்கிறார். பற்பலமடங்கு செல்வில். அவர்களால் மட்டுமே பிரச்சினையைக் கண்டுபிடிக்கமுடியும். அவர்கள் கண்டுபிடித்த பிரச்சினையை அவர்கள் விளக்கும்போது கேட்டுப்புரிந்துகொள்பவர்கள்கூட நம் தொழில்நுட்பர்களில் ஆயிரத்தில் நாலைந்துபேர்தான்.

ஏன் என்று அவர் சொன்னார். ‘நமக்கு எங்கேயுமே ஆர்ட்ஸ் சொல்லித்தருவதில்லை. ஒரு சாம்பார் நூற்றுக்கணக்கான இடுபொருள்களின்படி உருவாகக்கூடியது. அந்த கலையை ஓவியம் போல் தீட்டத் தெரிந்துகொண்டு அவற்றை பலகோணங்களில் யோசித்தும் செய்தும் உள்வாங்கிக் கொண்டால்தான் மலச்சிக்கலின் சயன்ஸ் தெரியும். நம்மூரில் வாந்தி செய்து திருப்பி தப்பிலல்லாமல் எடுக்கத்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள். நம்மூர் செஃப்கள் கடைசி கடுகு தாளித்ததுமே அதுவரை போட்டது எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். ஆய் போனபின் ஆய் போகாத மூத்த பணியாளரிடமிருமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எதையாவது கற்றுக்கொள்வார்கள். அவ்வளவுதான் அவர்களுக்குத் தெரிந்தது…’

என் பதிப்பாளரும் அதையே சொன்னார். ஒரு கவிதையை எவரேனும் வெளிநாட்டில் எழுதினால் அதை முழுமூச்சாக அமர்ந்து மொழிபெயர்க்கத்தான் நம்மவர்களால் முடியும். அது என்ன என தெரியாது. அதன் இடம், பொருள் தெரியாது. அதற்கு காப்புரிமையும் கொடுப்பதில்லை. ராயல்டிக்கான விகிதமும் அதற்குள் ஏப்பம் விட்டிருக்கும். ’ஆங்கில அறிவு, அகராதி பார்த்தல் இரண்டைக்கொண்டும் சமாளித்துப்போகிறவர்கள்தான் இங்கே வெற்றிபெற்றவர்களாக இருக்கிறார்கள்’ என்றார் அவர்

ஜெயமோகன் எழுதிய இந்தக்கட்டுரையை ருசிக்கையில் ஒருவகையான லப்டப்புதான் வந்தது.

ஒத்திசைவு எழுதிய இந்தக்கட்டுரையை படிக்கையில் நாலு பேருக்கு நல்ல விதமா சாம்பார் போடறத வுட்டுட்டு டீ ஆத்தறாரேனு ஆதங்கமாச்சு.

போப் ராஜினாமா: என்னுள்ளே ஏதோ

நாம் ஒவ்வொருவரும் தனித் தனி நாடு. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை பல உயிரினங்கள் ஆக்கிரமித்துள்ளன. நம்முடைய சோத்தாங்கையில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கும் பீச்சாங்கை பாக்டீரியாக்களுக்கும் மாமன், மச்சான் உறவு கூட இல்லை. இரண்டுமே வெவ்வேறு நுண்ணுயிரி இனங்களைச் சேர்ந்தவை.

அப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த அறிவியல் கட்டுரை. The Teeming Metropolis of You | CAA

தூய பிரதேசங்களில் சௌகரியமாக வளர்ந்தவர் துணிச்சலான காரியங்களில் பயப்படாமல் இறங்குவதற்கும், சராசரியான மனிதர்கள் செட்டில்ட் வாழ்க்கைக்கு பிரியப்படுவதற்கும் கூட நமக்குள்ளே குடித்தனம் செய்யும் உயிரிகள் காரணம்.

உடலையும் சிந்தனையையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை இருபதாம் நூற்றாண்டின் மருத்துவ சாதனையாக சொன்னால்… என்னுள்ளே இருக்கும் கோடிக்கணக்கான உயிரினங்களின் தொகுப்புதான் நான் என்றும் என்னுடைய செயல்பாடுகள் என்றும் அறிவது இக்கால கண்டுபிடிப்பு.

கிறித்துவ மதப் பிரச்சாரகருக்கான வினாக்கள்

கோடை காலத்தின் மதியங்களில் வீடு வீடாகப் போய் பைபிளோடோ அல்லது சைக்கிளோடோ வந்து பிரச்சாரம் செய்பவர்கள் இங்கே அதிகம். அழைப்பு மணி அடித்தால், திறந்து பார்த்தால், ‘உங்களை நல்வழிப்படுத்தறேன்.’ என்று மென்மையாகவும், ‘எல்லாக் கேள்விகளுக்கும் விடை வைத்திருக்கிறேன்’ என்று அறிவுபூர்வமாகவும், ‘சோகம் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்’ என்று பூஸ்ட் ஆகவும் கிறித்துவத்திற்கு அழைக்கிறார்கள்.

இந்தியாவில் எத்தனை சாதி என்று எண்ணிவிடலாம். கிறித்துவத்தில் எத்தனை உட்பிரிவு என்று அளவிடுவது இறைவரால் மட்டுமே இயலும். ஒவ்வொரு பிரிவினருக்கும் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.

“ஜனநாயகத்தில் நம்பிக்கை உண்டா? போப் தேர்தலில் நான் வாக்களித்து தேர்தல் நடக்குமா?”

“ஸ்பெயின் இன்க்விஸிஷன் குறித்து பாவ மன்னிப்பு கோரியாச்சா?”

“நான் நிச்சயம் உங்கள் புத்தகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்து முடிக்கிறேன். எனக்காக நீங்களும் குரானோ பகவத் கீதையோ வாசித்து விடுகிறீர்களா?

“ஆதாமும் ஏவாளும் குரங்கு என்று என்னுடைய வேதநூல் சொல்கிறதே? அதைப் பற்றி பேசலாமா?”

ஸ்தோத்திரம்

What does the Bible say about snake handling? Should we be handling snakes in church?:

I said, ‘I don’t think you are qualified to speak to me about Jesus‘. They looked very astonished and asked, ‘Why not’? ‘Because’, I said, ‘you have no faith’. ‘Our faith in Jesus is as strong as a rock’ they insisted. ‘I don’t think it is’ I said with a smile. ‘Please open your Bible and read the Gospel of Mark, chapter 16, verse 16, 17 and 18′ I said and while they flicked through their Bibles I went quickly inside and came out again.

One of them found the passage and I asked him to read it out loud. It said, ‘He who believes and is baptized will be saved but he who does not believe shall be condemned. And these signs will follow those who believe in my name. They shall cast out devils, they shall speak in tongues, they will handle snakes and if they drink poison it will not hurt them and they will lay hands on the sick and they will recover’.

When he finished I said, ‘In that passage Jesus says that if you have real faith you will be able to drink poison and not die’. I took a bottle of Lankem from behind my back, held it up and said, ‘Here is some poison. Demonstrate to me the strength of your faith and I will listen to anything you have to say about Jesus’.

You should have seen the looks on their faces! They didn’t know what to say. ‘What’s the problem’? I asked. ‘Is your faith not strong enough’? They hesitated for a few moments and then one of them replied, ‘The Bible also says that we must not test God‘. ‘I’m not testing God’, I said, ‘I’m testing you. You love to witness for Jesus and now is your big opportunity’.

It is describing something that will occur, not commanding that something should occur. An example of this is the Apostle Paul inActs 28:3-5: “Paul gathered a pile of brushwood and, as he put it on the fire, a viper, driven out by the heat, fastened itself on his hand … But Paul shook the snake off into the fire and suffered no ill effects.” Notice that Paul did not seek out to handle a snake. The snake bit Paul, but God protected Paul from the effects of the snake bite. Mark 16:17-18 is saying that if you are faithfully serving God in the spread of the gospel, He can protect you from anything that may cross your path.

 

அடுத்த கூகிள் யார்?

எனக்கு வேலை போகும் போதுதான் உத்வேகம் பிறக்கும். அன்றாட உத்தியோகத்தில் உழலும்போது எந்த வித செயலூக்கமும் இன்றி ஒன்பதில் இருந்து ஐந்து வரை உழைத்துக் கொட்டும் செக்குமாடாக இருப்பேன். வேலையை விட்டு நீக்கப்படும்போதோ, புதிய வேலையை தேடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதோ, புத்துணர்ச்சியும் சந்தோஷமும் தைரியமும் நிறைந்து இருக்கும்.

அமெரிக்காவும் என்னைப் போலத்தான்.

ஜெராக்ஸ் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவின் தொழில்துறையின் கஷ்டதிசையில்.

கூகிள் எல்லோரும் உபயோகிக்கிறோம். அது துவங்கியது அமெரிக்காவின் டாட் காம் நம்பிக்கையின்மையின் உச்சகட்டத்தில்.

இப்பொழுது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடனில் தத்தளிக்கும் காலகட்டம். 2007ல் துவங்கிய பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து தள்ளாடி எழுந்திருக்க முடியாமல் ஸ்பெயினும் இத்தாலியும் இன்ன பிற அண்டை நாடுகளும் கடன் சுமையில் மஞ்ச நோட்டிஸ் தரும் காலம். சீனாவின் கடன் கொடையினால் அமெரிக்காவே அடிமைப்பட்டு ஏற்றுமதிக்கு புதிய நாடுகளைக் கோரும் காலம். இந்தோனேசியாவும் பிரேசிலும் உலகத்தின் போக்கை நிர்ணயிக்கும் காலம்.

இந்த நேரத்தில் எந்த புதிய துறைகள் அமெரிக்காவிற்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கும்? எந்த முன்னேற்றங்கள் உடனடி லாபமும் தொலைதூரப் பார்வையும் கொண்டு செல்வாக்கை நிலைநாட்டும்?

சில தூரதிருஷ்டி பார்வைகளும், சகுனங்களை முன்வைத்த கணிப்புகளும், பத்தாண்டு பலன்களும்:

எண்ணெய் & எரிவாயு

சவுதி அரேபியாவை நம்பி மட்டும் இருந்தால் பிரயோசனமில்லை என்பது ஒபாமா கட்சி வாதம். உள்நாட்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து எண்ணெய்க் கிணறுகளை முழு மூச்சாக தோண்டி உபயோகிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி ரிபப்ளிகன் வாதம். கனடாவை உபயோகிக்கலாம்; பெட்ரோல் அதிகம் குடிக்காத கார்களை பயனுக்கு கொணரலாம் என்பது ஒபாமா வாதம்.

எது எப்படியோ இந்த எரிவாயு மற்றும் இயற்கை சக்தி துறைகளில் நிறைய முதலீடு நடந்திருக்கிறது. ஒபாமா மீண்டும் அரியணை ஏறாவிட்டால், அவை எல்லாம் அப்படியே முடங்கி பாதியில் வயிறுடைத்த காந்தாரி மகன்கள் கௌரவராக பாண்டவர் பூமியான இரான்+இராக் இடம் தோற்று இருக்கும். ஆனால், சகுனி எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனங்கள் ஆதரவுடன் புதிய பராக்கிரமத்துடன், பீஷ்மர் டெட்ராயிட் ஜெனரல் மோட்டார்ஸ் வழிகாட்டுதலுடன் ரத கஜ பலத்துடன் களத்தில் சின்னப் பையலாய் குதிக்கும்.

வாகன தயாரிப்பின் மாற்றங்களும் சுற்றுச்சுழல் அச்சுறுத்தல்களும் கரியமில கட்டுப்பாடுகளும் உள்ளூர் எண்ணெய் வர்த்தகமும் அமெரிக்காவை மீண்டும் கார் துறையின் மூலம் வால் ஸ்ட்ரீட்டை உயர்த்தி ஷாங்காயை தட்டி வைக்கும்.

முப்பரிமாண அச்சு

1930களின் மின்ஒளிவரைவியல் துறையில் கால்பதித்த ஜெராக்ஸ் ஐம்பதாண்டுகளாக தொழில்துறையில் முன்னோடியாக இருந்த மாதிரி, அடுத்த ஜாக்பாட் – 3டி அச்சுப்பொறி.

எனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவான தண்ணீர்க் குடம் வேண்டும். இரண்டு கேலன் கொள்ளளவு இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த வடிவமைப்பாளர் கொடுக்கும் உருவில் தயாராக வேண்டும். இதெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்தால் ஒழிய சாத்தியமில்லை. ஆனால், வெகு கூடிய விரைவில் சிகாகோவில் தயாரகும் கேட்/கேம் (கணிப்பொறிவழி வடிவமைப்பு) ஓவியங்கள் கொண்டு சிவகாசியிலும் சீனாவிலும் சல்லிசான விலையில் திடப் பொருட்கள் எனக்கே எனக்காக உருவாகும். மின்னல் வேகத்தில் வந்தடையும்.

இன்றைக்கு கூகிள் செய்திகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வது மாதிரி. நம் விழைவிற்கேற்ப வீட்டுப் பொருட்களை வாங்கலாம்.

உடல்நலம் & மரபியல்

ஒபாமா என்றாலே அமெரிக்கர்களுக்கு எப்போதும் நினைவில் வரும் சொல்லாக ஒன்றை நிலை நாட்டியிருக்கிறார்: ஒபாமா கேர் – அவரின் எதிராளிகளும் இந்தச் சொல்லாலேயே ஒபாமாவை தூஷணை செய்து, ஒபாமாவின் உடல்நல காப்பீடு திட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளையும் சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கி இருக்கிறது.

அது இருக்கட்டும்.

இருபது வருடங்களாக நடந்து வரும் மனிதகுல மரபுரேகைப் பதிவு திட்டம் ஆகட்டும். சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகட்டும். மரபியல் சார்ந்து மருந்துகளை பரிந்துரைக்கும் உத்தி வெகு விரைவில் பரவலாக பிரபலமடையும்.

எனக்கு இருக்கும் கொழுப்பு; எனக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி; அன்றாடம் உட்கொள்ளும் மது; முட்டி வலியின் தீவிரம் போன்ற ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தியெட்டு விஷயங்களையும் கணக்கில் கொண்டு, எனக்கே எனக்கான அனாசின் மின்னல் வேகத்தில் தயாராகும்.

உங்களுக்கும் அதே டைலனால்; எனக்கும் அதே இருநூறு மில்லிகிராம் டைலனால் என்னும் காலம், கூடிய சீக்கிரமே காலாவதியாகும். இதை எல்லாம் வாங்கும் பலம் நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றடைய ஒபாமாவின் சேமநல காப்புறுதி திட்டம் கால்கோள் இடும்.

செயற்கை உயிரியல்

மனிதனுக்குத் தெரிந்து இந்த மண்ணில் ஒண்ணே முக்கால் மில்லியன் ஜந்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் அதை விட பன்மடங்கு உயிரினங்களை சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

காருக்கு பெட்ரோல் வேண்டுமா… அதற்கு ஒரு உயிரினம் தயாரிக்கலாம்.

சுற்றுச்சூழல் கெடுகிறதா… அதற்கு ஒரு உயிரினம் உருவாக்கலாம்.

இவை எல்லாம் இன்றே கிட்டத்தட்ட சாத்தியம் என்றாலும், பலருக்கும் அணுக்கமாக கிடைக்குமாறும் குறைந்த பொருட்செலவில் உருவாக்குதலிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் விலகவும் சோதனைச் சாவடிகளில் விடை கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் எண்ணுகிறார்கள்.

தண்ணீர்… தண்ணீர்

அடுத்த இருபதாண்டுகளில் நல்ல நீருக்கான தேவை இரட்டிப்பாகும். உலகெங்கும் சுத்த குடிநீருக்கான அவசியம் விஞ்ஞானத்தை நோக்கி விடை கோரி கையேந்துகிறது.

கரிமம் மூலம் உண்டான கிராஃபீன் தகடுகள் கடல்நீரில் நிறைந்திருக்கும் உப்புகளை நீக்கி குடம் குடமாக தண்ணீரை வெகு எளிதாக அதிவிரைவாக தயாரிக்கும் முறைகள் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது. நீராலான உலகை உப்பு நீரில்லாத உவப்பான நீராக மாற்றும் வித்தையில் கண்ட வெற்றி பொருளாதார மாற்றங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்லும்.

இறுதியாக…

நானோ தொழில்நுட்பம் மூலம் சில்லுகளை சேர்ப்பது முதல் கடைகளில் பொருள்களை கண்காணிப்பது வரை பல பயன்கள் நம்மை சென்றடைந்திருக்கிறது. கார்பன் நுண்ணிய டியுப்கள் மூலமாக கிடைக்கும் லாபாங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வரத்துவங்கினால் இண்டெர்னெட் புரட்சி போல் அடுத்த பூதாகாரமான வளர்ச்சியும் வரப்பிரசாதங்களும் பிரமிக்கவைக்கும்.

அதற்கெல்லாம் எதிர் நீச்சல் போடும் தைரியமும் துணிச்சலாக ஆபத்தான செலவுகளை செய்து பார்க்கும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

சிறு தொழில் முதலீடுகளில் பின்னடைந்தாலும் சரி… நசிவு கண்ட முனைவோர்களையும் சரி… அமெரிக்காவில் எப்போதுமே எள்ளி நகையாடாமல், அடுத்த வாய்ப்பு தந்து தட்டிக் கொடுத்து அவர்களிடம் இருந்து வெற்றியை வரவழைக்கும் வித்தையை தக்க வைத்திருக்கும் வரை, இந்த முன்னோடி + முதலிடம் தட்டிப் போகாது.

விஞ்ஞானமும் மெய்ஞானமும்: தாழம்பூ குவாசாரும் டெலஸ்கோப் பிரும்மாவும்

அறிவியல் நிகழ்வு

2007ஆம் வருடம். அண்டவெளியில் பச்சையாக பெரியதாக மிதப்பதை கண்டுபிடிக்கிறார்கள். என்னது, ஏது எதுவும் தெரியவில்லை.

கிட்டத்தட்ட பூமியின் பால் வீதி அளவு கொண்டது. டட்ச் மொழியில் ‘ஹானியின் பொருள்’ அர்த்தம் வருமாறு பெயர் வைத்தார்கள்: ஹானியின் வூர்வெர்ப். இது விண்மீன் மண்டலம் கிடையாது. வெறும் வாயு மட்டுமே.

அப்படியானால் எங்கிருந்து அந்தப் பச்சை நிறம் வருகிறது?

ஹானியின் பொருளுக்கு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தன் ஒளியை, குவாசார் அனுப்பி விட்டிருக்கிறது.

“நூறு மில்லியன் ஆண்டுகளுக்கொரு முறை முறை குவாசார் (quasar) கண் சிமிட்டும் என்று இதுவரை நினைத்திருந்தோம். ஆனால், இதன் மூலம் மில்லியன் ஆண்டுகளுக்கொரு தடவை என்று தெரிகிறது”, என்கிறார் கீல்.

என்.பி.ஆர்

புராணக் கதை

மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற சண்டைவந்தது. இருவரும் சிவபெருமான் முன்பு போய் நின்றனர். “உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் ஜெயிப்பவர்களே.. சிறந்தவர்கள்..” என்றார் சிவன்.

மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமான் போடும் பந்தயத்திற்காக காத்திருந்தனர். சிவன் திடீரென ஆதியும், அந்தமும் இல்லா அருட் பெருஞ்ஜோதியாக விஸ்வரூபம் எடுத்தார்.

“உங்கள் இருவரில் யார் என்னுடைய முடியையோ, அடியையோ முதலில் காண்கிறீர்களோ, அவரே எல்லோரையும் விட பெரியவர்” என்று கூறினார் சிவன்.

பிரம்மாவும், விஷ்ணுவும் போட்டிக்குத் தயாரானார்கள்.

“நான் சிவனின் திருவடியைக் காண்கிறேன்” என்று பெருமாள் பன்றியாக (வராகம்) உருமாறி பூமியைத் தோண்டி, உள்ளே சென்றார்.

சிவனின் திருவடிகள் பாதாளம் ஏழுக்கும் கீழே சென்று கொண்டிருந்தது. கோவிந்தர் ஒவ்வொரு பாதாளமாக போய் கொண்டிருந்தார்.

பிரும்மா?

சிவபெருமானின் திருமுடியைக் காண்பதற்காக பிரம்மா வானுலகில் பறந்து, பறந்து சென்றார். சிவனின் திருமுடியோ அகண்ட முகடுகளைப் பிளந்து மேலே சென்று கொண்டே இருந்தது. எவ்வளவு உயரம் போயும் பிரம்மாவால் சிவனின் முடியைக் காண முடியவில்லை.

ஒருவேளை, இந்நேரம் மகாவிஷ்ணு சிவனின் அடியைக் கண்டிருப்பாரோ என்று அச்சம் வேறு. அப்போது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.

பிரம்மன் அதை தாவிப் பிடித்து,”எங்கேயிருந்து வருகிறாய்? என்று கேட்டார்.

தாழம்பூ பதில் சொன்னது. “நான் சிவனின் தலைமுடியில் இருந்து தவறி விழுந்து பல யுகங்கள் ஆகிவிட்டன. கீழேவிழுந்து கொண்டிருக்கிறேன்.”

பிரம்மா சோர்ந்து போனார். தந்திரமாய் ஒரு வேலை செய்தார். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. அதனால் தாழம்பூவுடன் ஓர் ஒப்பந்தம் போட்டார்.

அதன்படி தான் சிவனின் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு (பொய்) சாட்சி சொல்லும் படியும் தாழம்பூவிடம் கேட்டார். தாழம்பூ ஒப்புக்கொள்ள, சந்தோஷமாய் கீழே இறங்கினார் பிரம்மா.

மிக்ஸிங் ஞானம்

பிரும்மா தலையைத் தேடிப் போனது ரஜோ குணம். விஷ்ணு அடக்கமாக கீழே சென்றது – தமோ குணம்

ரஜோ குணத்தில் பேராசைப் பெருக்கம்; தமோ குணத்தில் அறிவின்மை, பித்தம், மயக்கம் போன்றவை உண்டாகின்றன. இந்த இரண்டிலும் கடவுளின் தரிசனம் நமக்கு கிடைப்பதில்லை.

ஆனால் சத்வ குணத்தில் ஞானம் விருத்தி. சத்வ குண்ம் என்றால் அன்பு. அடி முடி தேடுவது என்பது இயற்கையில் பல ரகசியங்கள் புதைந்துக் கிடக்கின்றன. அவற்றை விஞ்ஞான பூர்வமாக அலச அலச பல புது விதமாக பிரச்சினைகள் முளைக்கின்றன. இதுவே இயற்கையின் சூட்சுமம்.