Tag Archives: அதிகாரம்

மந்திரவாதியும் மணி ரத்தினமும் – பொன்னியின் செல்வன் இரண்டு

மணி ரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் எடுக்கிறார்?

ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.

இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:

டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
பணத்தினால் பதவியை அடைபவர்.
இதுவே மாந்திரீக யதார்த்தம்.

டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார்.
இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன்.
இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி.
இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.

இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார்.
உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது.
அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.

இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.

கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர்.
அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர்.
அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.

உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர்.
அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர்.
அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார்.
அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார்,
அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர்.
பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.

நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான்.
அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர்.
ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர்.
அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர்.
அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.

அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார்.
டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும்.
இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம்.
நாடக மேடை.
அரச சபை.
அரசி என்பவள் நடிகை
அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன்.
இயக்குநர் என்பவர் ராஜகுரு.
அனிருத்த பிரும்மராயர்.
காதில் ஒதுவார்.
ஒதுவது புரிந்தத்தா?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

பேலினாயணம் – சாரா பேலின் மகாத்மியம்

குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் குறித்து நேற்று மட்டும் (மட்டுமே) வெளியான செய்திகள்.

இவர் மைய அரசு செயல்படும் விதத்தை மாற்றி, வாஷிங்டன் அரசின் செலவைக் குறைத்து, மற்ற அரசியல்வாதியைப் போல் இல்லாமல், வித்தியாசமாக, தன்னை உதாரணமாக முன்னிறுத்தி, தேவையில்லா விரயங்களை நீக்கி இயங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு செலவில் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா

குடும்பத்தோடு செல்ல வேண்டிய விழாக்களுக்கு கணவனையும் குழந்தைகளையும், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்துச் செல்லுதல் இயல்பு. ஆனால், அவ்வாறு அவர்கள் அழைக்கப்படாத இடங்களுக்கும், அவர்களை சாரா பேலின் அழைத்து சென்றிருக்கிறார்.

அழையா விருந்தாளியாக சென்றதை மறைக்க, அசலாக கணக்கு காட்டியதை, வெகு நாள்களுக்குப் பிறகு மாற்றி திருத்தியிருக்கிறார்.

டிசம்பர் 2006- இல் பதவியேற்றபின் பதின்ம வயது மகளும் உல்லாசமாக ஊர்சுற்ற ஏதுவாக 64 ஒரு வழி விமானப் பதிவுகளையும், 12 போக-வர பயணங்களையும் அலாஸ்கா அரசின் தலையில் சுமத்தியுள்ளார்.

செய்தி: Palin billed Alaska for kids’ travel – Los Angeles Times

கட்சி செலவில் $150,000த்திற்கு பேலினுக்கு கிடைத்த பகட்டு ஆடைகள்

அமெரிக்காவில் இந்தியர்களும் ஏழைகளும் வால்-மார்ட்டிலும், நடுத்தர வர்க்கத்தினர் ஓல்ட் நேவியிலும், கொஞ்சம் வசதிப்பட்டவர் சியர்ஸ் / டார்கெட்களிலும், மெகயினிடம் வரிவிலக்கு பெறுபவர் மேசீஸ் / லார்ட் அன்ட் டெய்லரிடமிருந்தும் ஆடைகள், அணிகலன்கள் வாங்குவோம்.

செல்வம் கொழிக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபே போன்றவர்கள் மட்டுமே நீமன் மார்கஸ், சாக்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிப்பு பெற்ற கடை பக்கம் எட்டிப் பார்க்க முடியும்.

உடுத்தும் உடைக்காக, சாதாரண அமெரிக்கர் வருடத்திற்கு $1,874 செலவழித்தால், சாரா பேலினோ கடந்த இரு மாதங்களில் மட்டுமே குடியரசு கட்சியின் புண்ணியத்தில் $150,000 கபளீகரம் செய்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ‘பிரச்சாரம் முடிந்தவுடன் இந்த ஆடைகளை தான தருமத்திற்கு கொடுத்துவிடப் போவதாக’ ஜான் மெகயின் குழு தெரிவித்திருக்கிறது.

செய்தி: Sarah Palin went on some kind of RNC-financed shopping spree, Politico says: Top of the Ticket – Los Angeles Times | Sarah Palin won’t be keeping her GOP-financed clothes

அமெரிக்கா என்பது எங்குள்ளது என்றதற்காக பேலின் மன்னிப்பு கோரினார்

வட கரோலினாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது

‘ஒரு சிலர்தான் உண்மையான அமெரிக்கர்கள். இந்த இடத்தைப் போல் சிற்சில இடங்கள்தான் அமெரிக்கா. மற்ற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் போலிகள்; அமெரிக்கர்கள் அல்ல’

என்று பொருள்பட பேசியதற்கு சாரா பேலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

செய்தி: Palin Apologizes for ‘Real America’ Comments – washingtonpost.com: “Two Congressmen Face Backlash After Their Own Remarks Questioning Others’ Patriotism” | P.S. Palin Apologizes – The Caucus Blog – NYTimes.com

துணை ஜனாதிபதியின் கடமை என்ன – சாரா பேலின் பேச்சுக்கு கண்டனம் எழுகிறது

கேள்வி: ‘துணை ஜனாதிபதி என்ன செய்வார்?’

சாரா பேலின்: ‘ஜனாதிபதியின் திட்டத்தை ஆதரிப்பது; ஜனாதிபதியின் அணியில் குழு உறுப்பினராக அங்கம் வகிப்பது போன்றவை துணை ஜனாதிபதியின் பணி.

அமெரிக்க செனேட்டின் பொறுப்பும் அவர்கள் கையில் உள்ளது. துணை ஜனாதிபதி விருப்பப்பட்டால், செனேட்டுக்குள்ளே நுழைந்து கொள்கை மாறுதல்களை விளைவிக்க முடியும்!’

நூறு உறுப்பினர் கொண்ட செனேட் அவையில் 50-50 என்று இழுபறியாக ஏதாவது வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் மட்டும், தன்னுடைய வாக்கை அளித்து பெரும்பான்மையை கொடுப்பது துணை ஜனாதிபதியின் வேலை. மற்றபடிக்கு, செனேட்டில் சாரா பேலினுக்கு ‘திட்டம்’ முன்னெடுத்து செல்ல எந்தவித அதிகாரமும் கிடையாது.

தற்போதைய துணை ஜனாதிபதி டிக் சேனி இவ்விதமாக துஷ்பிரயோகம் செய்துவருகிறார் என்னும் குற்றச்சாட்டு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

செய்தி: Palin’s view of vice presidency critiqued – 2008 Presidential Campaign Blog – Political Intelligence – Boston.com

அறிவுசார் சிந்தனைக்கு எதிரானவரா சாரா பேலின்?

இது கேள்வி: The Corner on National Review Online: “Palin’s Alleged Anti-Intellectualism : [Ramesh Ponnuru]”

இது கட்டுரை: The resentments of Sarah Palin: The New Republic :: Barracuda by Noam Scheiber

இது நச் பதில்: The Daily Dish | By Andrew Sullivan (October 22, 2008) – How Anti-Intellectual Is Palin?

  • குடும்பத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்? தனி மனித வாழ்வில் பகுத்தறிவு/படிப்பு/கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்?
    • பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மகன்
    • கல்லூரிக்கு செல்லும் எண்ணமில்லாத மகள்
    • வகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு அம்மாவின் பிரச்சார பீரங்கியாக செயல்படும் 13 வயது குழந்தை
  • மாநகர வருமானத்தை வைத்து விளையாட்டு மைதானம் கட்ட செலவு செய்தது
  • அருங்காட்சியகத்திற்கான நிதியைக் குறைத்தது
  • புது நூலகம் கட்ட கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்தது
  • அரசியல் சாசனம் குறித்த பேதைமை

கொசுறு

Palin: God will do the right thing on election day – It’s easy to get the sense that Sarah Palin is not a vice presidential candidate sympathetic to the concerns of a religious right activist, she’s a religious right activist running for the vice presidency.

முந்தைய இடுகைகள்:

1. வலையக கணக்கு வழக்கு

2. அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’

பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை

ஓல்ட் இஸ் கோல்ட்… புதிதாக சேர்க்கப்பட்ட குறிச்சொற்களுடன்

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.

எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு!” என்று கத்தியது.

கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.

இப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.

வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.

குருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று தொடர்ந்தது.

எங்கேயோ படித்த ஜோக்

ரஷிய பஸ் ஸ்டாப். பேப்பரை விரித்தபடி நிற்கும் ஒருவரிடம் பவ்வியமாக மற்றவர் கேட்கிறார்.

‘சார் நீங்க கேஜிபியா?’

‘இல்லை’ என்கிறார் திருவாளர் பேப்பர்.

“உங்க வீட்டம்மா கேஜிபியா” இது பவ்வியம்.

“இல்லை” என்கிறார் திருவாளர் பேப்பர் கொஞ்சம் சிடுசிடுவுடன்

“அப்ப உங்க பக்கத்து வீட்டுல யாராச்சும்…”

“இல்லைய்யா”

“உங்க உற்றார் உறவினர் …”

“இல்லைய்யா இல்லை”

இப்போது திருவாளர் பவ்யம் சீறுகிறார், “பிறகு ஏன்யா எருமை மாடாட்டம் என் காலை மிதிச்சுட்டு நிக்கிறே காலை எடுடா தடிமுண்டம்”