சென்னை என்றால் மதராஸ்.
மதராஸ் என்றால் மதர் ஆசி.
அந்த மதர் உங்கள் அம்மா ஆக இருக்கலாம்!
அல்லது அகில இந்திய அண்ணா திமுக கட்சியின் அம்மா ஆக இருக்கலாம்!
பாண்டிச்சேரி மதர் ஆக இருக்கலாம்!
மதர் தெரஸா ஆக இருக்கலாம்!
அன்னை மேரி ஆக இருக்கலாம்!
அதுதாங்க சென்னை.
இங்கே மதம், கட்சி, எல்லாம் இல்லாததால் –> மதராஸ்.
அது ஒரு மொழி.
பிராமணா பாஷை…
கொங்குத் தமிழ்…
நாகை மலையாளம்…
இதெல்லாம் தமிழென்றால் –> மதராஸில் இருப்பது தொல்காப்பியத் தமிழ். ”வளர்தமிழ்” (வளர்ந்தது, வளர்கிறது, வளரும்)
சோ இதை முதலில் திரையில் விக்கிப்பிடியாத்தனமாகப் பதிந்தார்.
அதன் பின் நாகேஷ், கமல் என்று சினிமாக்காரர்கள் தொடர்ச்சியாக இலக்கண சுத்தமாக இந்த நகரத்தின் உரையாடல்களை உதிர்த்திருக்கிறார்கள்.
பேட்ட ராப், கானா என்று இதற்கு இசை சம்பந்தமான உப பிரிவுகளும் உண்டு.
அவற்றைக் கேட்கும் போது மெரீனா கடைகளின் ஓசையும் தட்டுக்கடைகளின் உணவும் இருந்தால் சுவைக்கும்.
சென்னா பட்டூரா கிடையாது. ஆனால், அதுதான் சோளே பட்டூரா ஆக அன்றைய பாலிமர் உணவகத்திலும் தாசா-விலும் பரிமாறப்பட்டது.
திருவொற்றியூரில் சுந்தரர்
திருமயிலையில் ஞானசம்பந்தர்.
நடுவில் செயிண்ட் தாமஸ் மௌண்ட், ஆயிரம் விளக்கு என்பார்கள் சென்னையை.
அந்த சென்னையை வடது, இடது, மத்திமர் என்று செண்ட்ரல் அரசாங்கம் பிரித்து தொகுதியாக்கினார்கள்.
அதன் பிறகு பா. இரஞ்சித் அதைப் படமாகவும் எடுத்தார்.
அந்தத் தலைப்பை வெற்றிமாறனும் கையாண்டார்.
மதராஸி என்றால் வடக்கத்தவருக்கு குறியீடு.
மதாராஸ் என்றால் சென்னை செண்டிரலும் எல்.ஐ.சி. பில்டிங்கும் என்பான் கோடம்பாக்கத் தமிழன்.
மதாராஸ் என்றால் காந்தி சிலையும் வள்ளுவர் சிலையும் என்பான் சென்னைக்காரன். (அம்பேத்கார் இல்லாத இடமெங்கே?!)
சென்னைக்காரன் என்றால் வாழும் வேட்கை உள்ளவன் என்பது தமிழருக்குப் புரிந்த அடையாளம்.
நான் பச்சை சென்னையையிட்.