முதலில் வீடியோக்களைப் பார்த்து விடுங்கள்:
காலை
மாலை
1. காலையில் மூன்று மணி நேரம்; மாலையில் நான்கு மணி நேரம். நான் இரண்டு நேரங்களிலும் ஓரளவு கேட்டேன்; கலந்து கொண்டேன். காலை சந்திப்பின் துவக்க தொண்ணூறு நிமிடங்கள் நேரலையில் யுடியுப் வாயிலாக உன்னிப்பாகக் கேட்டேன். அதே போல் மாலை சந்திப்பின் கடைசி 90 நிமிடங்களில் ஜூம் வாயிலாக இணைந்தேன். இவ்வளவு நேரம் பேசுவது என்பது, ஜஸ்ட் சாதனை. அதுவும் தெளிவாக, கோர்வையாக, மேமிராவைப் பார்த்துக் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து அசையாது – பிரமிக்கிறேன். உங்களால் கூறியது கூறல் இன்றி சொற்கோர்வையுடன் ஏழு மணி நேரம் பல் வேறு (வாசகர் + உலகளாவிய அளவில் காணுவோர்) தரப்போடு அளவளாவ முடியுமா?! இந்த ஆசான் என்பவர் கதைகளில் வருபவர். வியாசர். குரு பகவான். தெய்வம் மனுஷ ரூபேண
2. இந்த மாதிரி ஒருவரால் உரையாட முடியும் என்று எவராவது சொல்லி இருந்தால் நகைத்து புறந்தள்ளி இருப்பேன். அதிலும் காலையில் 400 பேர், மாலையில் 400 பேர் இருப்பார்கள் என்றால், “அலுத்துப் போய், பாதியில் கழன்று கொண்டு விடுவார்கள்” என்றெல்லாம் கருத்து சொல்லியிருப்பேன். என்னுடைய கணக்கின் படி ஐநூறு பேராவது இதில் பங்கெடுத்திருப்பார்கள். பல பேர் என்னைப் போன்று காலையிலும் மாலையிலும் என இரு வேளையிலும் ஆஜர் செய்தாலும், 500+ இலக்கிய வாசகர்களை மூன்று மணி நேரத்திற்கு இணையச் சந்திப்பில் ஒரேயொருத்தர் கட்டுற வைத்திருப்பார் / வைத்திருந்தார் என்பது சற்றே நம்ப இயலவில்லை. ஆனால், நம்புங்கள். சினிமா நடிகரோ, திரைப்படக் கவர்ச்சியோ, பொய்யோ, ஆபாசமோ, கிசுகிசுவோ, வம்போ எதுவும் இல்லாமல், வெறும் மஹாபாரதம்; அவரின் நாவல்; 7 வருடங்கள் ,26 நாவல்கள், 25,000 பக்கங்கள் – அதற்காக நன்றி சொல்லவும் ஆசி வாங்கவும் கருத்துகளைப் பகிரவும் வந்தவர்கள். அசகாய சூரருக்கு வணக்கங்கள்.

3. நாம் நம் ஆதர்சங்களை சம கால சாதனையாளர்களைக் கொண்டாடுவதில்லை. இந்த நிகழ்வு எல்லா தொலைக்காட்சிகளிலும் அனைத்து சமூக ஊடகங்களிலும் சாதாரண திரள் மந்தை வாட்ஸப் வாயிலாக வைரலாக வேண்டியது. பாதி நிகழ்வில் கலந்த பிறகுதான் தோன்றியது. இதை நான் லைவ் ட்வீட் செய்திருக்க வேண்டும். பட்டி தொட்டியெங்கும் பரப்ப வேண்டும். இதற்கு டீசர் ஒன்று வீடியோவாக விட்டிருக்க வேண்டும். அதன் பிறகு டீஸர் ட்ரெயிலர் விட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆசானின் வாசகர் eன்று சொல்லுவதில் அர்த்தம் என்பதேயில்லை.
4. திருவள்ளுவரே எல்லா குறள்களையும் எழுதவில்லை. 1330 குறள்களும் தொகை நூல் போல் பல வள்ளுவர்களால் உருவாக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். இப்போது சத்தியமாக நம்புகிறேன். ஒருவரே எல்லாவற்றையும் செய்திருக்க முடியும்; செய்திருப்பார். அறம், பொருள் மற்றும் இன்பம் – எல்லாமும் ஒருவரே எழுதுவார். தெளிவாக கூறியது கூறல் இருந்தாலும் இலக்கிய நயமும் இலக்கணக் கட்டமைப்பும் புதுமையும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தாலும் பொருந்தும் தன்மையும் கொண்டு இயற்றுவார் என்பதற்கு நவீன வியாசர் ஜெமோ-வே ஆகச் சிறந்த உதாரணம்.

6. ஆங்கிலத்தில் ஜெயமோகனின் புகழ் பாட வேண்டும். இதை ஏன் இன்னும் ஜெர்மனியில் இங்கிலாந்தில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அவரவர் நாட்டின் உள்ளூர் மொழியில் கொண்டு செல்லவில்லை? ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது? அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது? எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம்? அதெல்லாம் அந்தந்த மொழியின் வலையகங்களில் அறிமுகங்களாகவோ குறிப்புகளாகவோ விமர்சனங்களாகவே செய்யப்பட வேண்டும். ஆங்கிலத்திற்கான வலைத்தளங்களிலாவது நான் செய்ய வேண்டும்!
7. ஜெயமோகனின் தனிப் பதிவுகளை, விமர்சனங்களை, இடையிடையே போடும் ஆசுவாசங்களை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். சுந்தர ராமசமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு கிடைத்த கடுமையான எதிர்வினையில் ஒரு சதவிகிதம் கூட ஜெமோ-வின் வெண்முரசு மகாபாரதத்தின் எந்தப் பகுதிக்கும் கிடைக்கவில்லை என்பது சற்றே வருத்தம் கலந்த சோகமான நிகழ்வு. 2000-களில் இலக்கியகர்த்தாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரேயொரு கதையை அது சொல்லாத விஷயங்கள், உணர்த்திய விஷயங்கள்; புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று ஒன்று சேர்ந்து சு.ரா.வுக்கு எதிரே காலச்சுவடு என்னும் பண்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக வெறுமனே கிளர்ந்தார்கள். இன்று அது போல் வெண்முரசு வாசிப்புள்ளாக்க வேண்டும். எல்லோரும் அதன் ஒவ்வொரு கூறுகளையும் விடுபடுதல்களையும் சேர்த்தல்களையும் அர்த்த அனர்த்தங்களையும் அறைகூவி அலசி ஆராய வேண்டும். இப்பொழுது இல்லாவிட்டால்… எப்பொழுது!?
ஜெம் எழுதும் இராஜன் குறை, மாமல்லன் போன்ற ஆசுவாசங்களைத் தவிர்த்து அது போன்ற பா ஜெயபிராகாசர்களும் இன்ன பிறரும் இலக்கிய விமர்சனங்களை முன் வைத்து விவாதிக்க வேண்டும் என்பது தீரவொண்ணா ஆவல் + வேண்டுகோள். எவராவது சுவாரசியமாக அக்கபோர் அற்று விவரங்கள் உடன் வெண்முரசு போன்ற காவியத்தை விமர்சித்து அளவெடுக்க வேண்டும். இப்போதைக்கு அடிமுடி காணமுடியாத அண்ணாமுலையான் போல் வியாபித்து பிரமித்து ஸ்தம்பிக்க வைக்கிறது. காட்டான் ஜெமோ!

8. தமிழில் எழுத்தாளர் எக்கச்சக்கம். ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரையும் மேலும் மேலும் மேலும் (முன்று முறை சொல்லியாகி விட்டது) ஆராதித்துக் கொண்டாடி மகிழ வேண்டும். ஒரு பட்டியல்:
- புதுமைப்பித்தன்,
- கல்கி,
- மௌனி,
- ஜெயகாந்தன்,
- கு.அழகிரிசாமி,
- கு.ப.ரா,
- சி.சு.செல்லப்பா,
- ந.பிச்சமூர்த்தி
- லா.ச.ரா,
- சுஜாதா. — நிறைய பேசிவிட்டோம்
- ராஜம் கிருஷ்ணன்,
- சுந்தரராமசாமி, — நிறைய பேசிவிட்டோம்
- ஆதவன்,
- கரிச்சான்குஞ்சு,
- ஆர்.சூடாமணி,
- ஜெயந்தன்,
- ப.சிங்காரம்,
- நகுலன்,
- ஜி.நாகராஜன்,
- லட்சுமி,
- நா.பார்த்தசாரதி,
- எம்.வி.வெங்கட்ராம்,
- பாலகுமாரன்,
- ஆர்.சண்முகசுந்தரம்,.
- ர.சு.நல்லபெருமாள்,
- கந்தர்வன்,
- மேலாண்மை பொன்னுசாமி
அன்றையத் தேதியில் வாழும் எழுத்தாளர்கள் :
அ.முத்துலிங்கம், – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது
அம்பை, – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது
பாவண்ணன்– பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; இயலாதவை.
நாஞ்சில்நாடன் – பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; மற்ற ஆதர்சங்களைப் பகிர்வோம்.
- இந்திராபார்த்தசாரதி,
- கி.ராஜநாராயணன்,
- வண்ணதாசன்,
- பிரபஞ்சன்,
- வண்ணநிலவன்,
- மாலன்
- ஆ.மாதவன்,
- நீலபத்மநாபன்,
- எஸ்ராமகிருஷ்ணன் — இன்னும் தீவிரமாக இயங்குபவர். இப்போதைக்கு சந்திப்புகள், யுடியுப் கேள்வி நேரங்கள், ஜூம் தொலைக்காணல்கள் என்றே வைத்துக் கோள்வோம். மேதை!
- சிவசங்கரி,
- பொன்னீலன்,
- எஸ்.சங்கரநாராயணன்,
- சா.கந்தசாமி,
- வாசந்தி,
- கோணங்கி,
- சோ .தர்மன்,
- தோப்பில்முகமது மீரான்,
- பூமணி,
- சு.வேணுகோபால்,
- பாமா,
- திலீப்குமார்,
- இந்துமதி,
- அழகிய பெரியவன்,
- சாரு நிவேதிதா, — நிறைய செய்கிறார். ஆதரவு (பணம் அல்ல) நல்குவோம். இன்னொரு அகிலன் போன்று காணாமல் போவாரா அல்லது சோ போன்று குறிப்பிட்ட சராரின் இஷ்ட தெய்வமாவாரா என்று காலம் இவரின் இலக்கிய இடத்தை நிர்ணயம் செய்யும்.
- இரா.முருகன்,
- பட்டுக்கோட்டைபிரபாகர்,
- சுபா,
- யுவன்சந்திரசேகர்,
- தமிழவன்,
- பெருமாள்முருகன்,
- விமலாதித்த மாமல்லன்,
- இமையம்,
- சுப்ரபாரதிமணியன்,
- ச.தமிழ்ச்செல்வன்,
- ஜோதிர்லதாகிரிஜா,
- ஜோ டி குரூஸ்,
- பா.செயப்பிரகாசம்,
- ஜி.முருகன்,
- திலகவதி,
- சு.தமிழ்ச்செல்வி,
- வித்யாசுப்ரமணியம்,
- போகன்சங்கர்,
- உதயசங்கர்,
- விக்ரமாதித்யன்,
- வேல.ராமமூர்த்தி,
- சு.வெங்கடேசன்,
- பா.வெங்கடேசன்
- உமாமகேஸ்வரி,
- விட்டல்ராவ்,
- கலாப்பிரியா,
- கவிஞர் ரவிசுப்ரமணியன்,
- பா.ராகவன்,
- மகரிஷி,
- நரசய்யா,
- பவா செல்லதுரை,
- தமிழ்மகன்,
- ராஜசுந்தரராஜன்,
- கீரனூர் ஜாகிர்ராஜா,
- ஜே.பி.சாணக்கியா,
- கலைச்செல்வி,
- கே.என்.செந்தில்,
- சமயவேல்,
- சுநீல்கிருஷ்ணன்,
- பி.ஏ.கிருஷ்ணன்,
- இரா.முருகவேள்,
- அஜயன்பாலா,
- திருப்பூர் கிருஷ்ணன்,
- ரவிபிரகாஷ்,
- ச.சுப்பாராவ்,
- சிவகாமி,
- கண்மணி குணசேகரன் ,
- ஆதவன் தீட்சண்யா,
- ஆண்டாள் பிரியதர்ஷினி ,
- தமயந்தி ,
- புதியமாதவி ,
- சுதாகர்கஸ்தூரி,
- வா.மு.கோமு,
- அ.வெண்ணிலா,
- கவிஞர் வைத்தீஸ்வரன்,
- கவிஞர் ஜெயதேவன்,
- அழகியசிங்கர்,
- ஜெயந்திசங்கர்,
- கவிஞர் வைரமுத்து,
- கவிஞர் இந்திரன்,
- உஷாசுப்பிரமணியன்,
- கௌதமசித்தார்த்தன்,
- ரமணிசந்திரன்.
- தேவிபாரதி,
- சுகா,
- உஷாதீபன்,
- கார்த்திகா ராஜ்குமார்,
- சுரேஷ்குமார இந்திரஜித்,
- நாகூர்ரூமி,
- தி.குலசேகர்,
- நாகரத்தினம் கிருஷ்ணா,
- ஷோபாசக்தி ,
- தமிழ்நதி,
- பாரதிமணி
- கவிஞர் சிற்பி,
- கவிஞர் மனுஷ்ய புத்திரன்,
- கவிஞர் சுகுமாரன்,
- எம்.கோபால கிருஷ்ணன்,
- அகரமுதல்வன்,
- சி.மோகன்,
- களந்தை பீர்முகம்மது,
- பாரதி பாலன்,
- நேசமிகு ராஜகுமாரன்,
- ஆத்மார்த்தி,
- சுரேஷ் ப்ரதீப்,
- நரன்,
- எம்.எம்.தீன்,
- விஜயமகேந்திரன்,
- கே.ஜே. அசோக்குமார்,
- அமிர்தம்சூர்யா
- ராஜேஷ்குமார்,
- இந்திரா சௌந்தரராஜன்,
- தேவிபாலா,
- ஆர்னிகா நாசர்
- ரா. கிரிதரன்
தொடர்புடைய பதிவுகள்: