சவுதி அரேபியாவின் ஏற்றுமதி


mecca_holy_ruler_king_saudi_arabia_jeddah

வாட்ஸாப் தகவலாக இந்த துணுக்கு வந்திருந்தது:
கீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை.
1. சதுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால்
2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால்
3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால்
4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால்
5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்!

இதே போல்தான் சவுதி அரேபியா குறித்த எந்தத் தகவல் வந்தாலும் எல்லோருமே நகைச்சுவையாக புறந்தள்ளி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆயிரம் செய்திகள் இருந்தாலும் எடுத்துக்காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போம்: இரு டஜன் முஸ்லீம் குடும்பத்திற்காக ஆயிரக்கணக்கான வங்களிகளின் துர்கா பூஜை முடக்கப்பட்டது. (இந்தியா டுடே) ஜார்கண்ட் மாநில எல்லைக்கு அருகில் வங்காளத்தின் பிர்பூம் (Birbhum) மாவட்டத்தில் கங்லாபஹரி (Kanglapahari) கிராமம் இருக்கிறது. இங்கே நான்கு ஆண்டுகளாக நவராத்திரியை முன்னிட்டு கொண்டாடப்படும் துர்கா பூஜா நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே நிரந்தரமாக கட்டப்பட்ட கோவில் கூட கிடையாது. சும்மா நாலு பந்தக்கால் நட்டு ஒரு திருவிழா நடத்த முடியாமல், தங்கள் பண்டிகையை சகஜமாக அனுசரிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். சிலருக்காக பலரின் பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படுகின்றன. அதே சமயம் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் பலருக்காக, சிலரின் எல்லா வாழ்க்கைமுறையும் மாற்றி வைக்கப்படுகின்றன.

durga_puja_half_done_bengal_festival_unfinished-idols

பாதி முடித்த நிலையில் முடங்கி நிற்கும் துர்கா பூஜை சிலைகள்

இதுவோ இந்தியாவில் நடக்கும் செய்தி. இதற்கும் சவுதி அரேபியாவிற்கும் என்ன சம்பந்தம்?

2050ல் உலகத்தில் மிக அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ம் நாடு எதுவென்று கேட்டால், அது ”இந்தியா” என்னும் விடையாக இருக்கும். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 350 மில்லியன் இந்தியர்களாக அப்போது உயர்ந்து இருக்கும். எண்ணிக்கையில் அதிகம் இருப்போரை வஹாபியர்களாக மாற்ற சவூதி எல்லா ஏற்பாடுகளையும் இப்பொழுதில் இருந்தே நிறைவேற்றி வருகிறது. இஸ்லாமிய சட்டப்படி (ஷரியா) முஸ்லீம் அல்லாதவர்கள் திம்மிக்கள் (இரண்டாம் தர குடிமக்கள்). திம்மிகளுக்கென்று ஜிசியா வரி விதித்து அவர்களை அச்சுறுத்தி வைக்க வேண்டும். மாட்டையும் சூரியனையும் சந்திரனையும் பின்பற்றுவர்களைக் காஃபிர் எனக் கருதிக் கொல்ல வேண்டும் என்பது ஐஸிஸ் அறிக்கை. (ஃபர்ஸ்ட்போஸ்ட்)

  • 13ஆம் நூற்றாண்டில் உலகத்தின் உச்சமாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தில் புத்த பிட்சுக்களையும் அங்கிருந்த ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மூன்று மாதமாக சிரமமெடுத்து எரித்தவர்களுக்கு இந்த மாதிரி காரியங்கள் எம்மாத்திரம்?
  • 250 ஆண்டு கால மொகல் ஆட்சியில் தற்போது அமைதிப்ப்புறாக்கள் என சொல்லப்படும் அக்பரும் அவரின் பேரன் காதல் பேரரசர் ஷாஜஹானும் எண்பது மில்லியன் இந்தியர்களைக் கொன்றார்கள். மொகலாயர்கள் இடித்துக் குவித்த கலைப் பொக்கிஷங்களையும், அமைதி என்னும் பெயரில் அவுரங்கசீப் நடத்திய கொன்றொழிப்புகளையும் போல் இன்னொன்றை தடுப்பது எம்மாத்திரம்?
  • இன்றைய பாரதத்தில் 840 மில்லியன் இந்துக்கள் இருக்கிறார்கள். அகண்ட பாரதத்தில் (இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில்) 502 மில்லியன் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டு துவங்கும்வரை ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லாத இந்த தேசத்தில் எப்படி இவ்வளவு பேரை மாற்றினார்கள்? எவ்வளவு இந்துக்களைக் கொன்று குவித்தார்கள்? அதேபோல் மற்றுமொன்றை நடத்த ஐம்பதாண்டுகளாகமுஸ்தீபுகள் தொடங்கிவிட்டன
  • தங்களுடைய சொந்தங்களைக் கொல்வதில் முன்னணியில் நிற்பவர்கள் வெறியூட்டப்பட்ட இஸ்லாமியர்கள். உலகில் நடக்கும் 91% ஆணவக்கொலைகளுக்கு முஸ்லீம் சமூகமே மூலக்காரணியாக இருக்கிறது. மதமாற்றத்திற்காக இந்தச் செய்கை நீளாது என்பது எம்மாத்திரம்?

உங்களிடம் யாராவது சவுதி அரேபியா எதை ஏற்றுமதி செய்கிறது என்று கேட்டால் “எண்ணெய்” என்று விடை சொல்லிவிட்டு பெருமிதமாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வீர்கள். ஆனால், சவுதியின் மிகப் பெரிய ஏற்றுமதி என்பது இஸ்லாமில் வஹாபியிஸத்தை உலகெங்கும் நிலைநாட்டுவது மட்டும்தான். அதற்கு கச்சா எண்ணெய் என்பது சில்லறை வியாபாரம். ஐஸிஸ், அல் க்வெய்தா, தாலிபான் என்பதெல்லாம் கிளை நிறுவனங்கள்.

பாகிஸ்தானில் மட்டும் 24,000 மதராஸாக்களை துவக்கி நடத்த சவுதி அரேபியா முடுக்கி விட்டிருக்கிறது. (எகனாமிக் டைம்ஸ்) இந்தப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கு இரண்டே இலக்கணம்:

அ) வஹாபி அல்லாதவர்கள் மீது வெறுப்பு வரவழைப்பது
ஆ) தீவிரவாதிகளை உருவாக்குவது

இந்த 24,000 மதராஸா பள்ளிகளில் ஆயிரக்கணக்கானோர் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஒரே ஒரு குழந்தையை மட்டும் பார்ப்போம்: பதினைந்து வயதே ஆன சிறுவன் தன் கையை தானே வெட்டிக் கொண்ட சம்பவத்தை பிபிசி பதிவு செய்திருக்கிறது. இறைத்தூதரின் பிறந்தநாளைக் கொண்டாட மசூதிக்கு சென்றிருக்கிறான்.

மதபோதகர் கேள்விகளால், பார்வையாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். “உங்களில் யார் நபியின் வழி செல்கிறீர்கள்?”. எல்லோரும் கை தூக்குகிறார்கள்.

“உங்களில் யார் நபியின் போதனைகளை நம்பவில்லை” என்று கேட்டதற்கு தூக்கக்கலக்கத்தில் கையை உயர்த்திவிடுகிறான். நூற்றுக்கணக்கானோர் அவனைப் பார்வையால் அவமானப்படுத்துகின்றனர். எள்ளி நகையாடுகின்றனர். கூனிக்குறுகி தன்னுடைய கையை அறுத்துவிட்டான்.

1956-ல் வெறும் 244 மதராஸாக்கள் மட்டுமே பாகிஸ்தானில் இயங்கி வந்தன. இன்று இவை கிட்டத்தட்ட நூறு மடங்கு பல்கிப் பெருகியுள்ளன. ஒரு ஒப்புமைக்கு ஜனத்தொகைப் பெருக்கத்தை கணக்கெடுத்துப் பார்ப்போம். 1950களில் 244 மதராஸாக்கள் நாற்பது மில்லியன் மக்களை சென்றடைந்தது. இன்று இது நான்கு மடங்காக 160 மில்லியன் பாகிஸ்தானியர்களாக மக்கள்தொகை உள்ளது. மக்கள்தொகை நான்கு மடங்கேப் பெருகியிருந்தாலும், மதராஸா போதனை மற்றும் மூளைச்சலவை மையங்கள் மட்டும் நூறு மடங்காக உயர்ந்துள்ளது. இப்பொழுதெல்லாம் கணினியிலும் இந்தக் கொலை பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.

இன்னொரு ஒப்புமையைப் பார்ப்போம். 1920 முதல் 1991 முடிய கம்யூனிஸக் கொள்கைகளைப் பரப்ப வெறும் ஏழு பில்லியன் டாலர்களை அன்றைய சோவியத் ரஷியா செலவழித்துள்ளது. ஆனால், 1960களில் மட்டும் நூறு பில்லியன் டாலர்களை வஹாபி மற்றும் சலாஃபியிஸ இஸ்லாமியக் கொள்கைகளை நடைமுறையாக்க சவுதி அரேபியா செலவழிக்கிறது. செலவு என்பதை விட அழிக்கிறது என்னும் வார்த்தை இங்கே பொருள்படுகிறது.

24000_madrassas_saudi_wahabbism_pakistan

இது பாகிஸ்தானில்தானே? அங்கே இருந்து வரும் தீவிரவாதிகளைதான் தடுத்துவிடுகிறோமே? இந்தியாவில் என்ன பிரச்சினை?

காஷ்மீரில் நடப்பவை வெளிச்சம் காண்கின்றன. ஆனால், உத்தர பிரதேசத்திலும் கர்னாடகாவின் ஷிமோகாவிலும் நடப்பதில் ஒன்றிரண்டை என்.டி.டிவி இங்கே விவரிக்கிறது. என்.ஜி.ஓ.க்களில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் அவர்களை சரிவர கண்காணிக்க முடியாத சூழலையும் இந்தக் கட்டுரை வெளிச்சத்தில் கொணர்ந்தது: வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள் – ஆர்.வைத்தியநாதன். அதன் நீட்சியாக எண்டிடிவி செய்திக்கட்டுரையை வாசிக்கலாம்.

சவுதியில் இருந்து சென்ற வருடங்களில் மட்டும் 55 கோடிகள் உத்தர பிரதேச மசூதிகளுக்கு வந்து சேருகின்றன.
1) ஷியா பிரிவினரை ஒடுக்குவது,
2) சலாஃபி பிரிவு இஸ்லாமை முன்னிறுத்துவது,
3) இந்திய முஸ்லீம்களின் சூஃபி பிரிவை நசுக்குவது
என்று பலவழியில் இதை பிரச்சாரகர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இங்கே நன்கொடை அள்ளிவழங்கும் அந்த அல் ஃபரூக் (Al Farooq) குழுமத்தின் மூலகர்த்தா உலக இயக்கங்களினால் தீவிரவாதி என தேடப்படுபவர். ஷேக் ஈத் பின் மொகம்மது அல் தானி அறநல நிறுவனம் (Sheikh Eid Bin Mohammad Al Thani Charitable Association) அல் க்வெய்தாவுடன் பயங்கரவாதத்தை வளர்த்தற்காக தடை செய்யப்பட்டிருக்கிறது.

அமீரகத்தில் (எமிரேட்ஸ் – ஷார்ஜா, அபுதாபி) இருந்தும், கத்தாரில் இருந்தும் குவைத்தில் இருந்தும் இதே போல் பணம் குவிகிறது. இவர்கள் இஸ்லாமிய மரபுவழி மீட்டுயிர்ப்பு சங்கத்தை (Revival of Islamic Heritage Society) சேர்ந்தவர்கள். நிறுவனங்களைத் துவக்கியவரின் முகவரியை ஆராய்ந்தால் அல் குவெய்தாவில் போய் முடிகிறது. அமெரிக்க நிதித்துறையினால் நிரூபணமாகி தலைமறைவாய் இயங்கும் அங்கத்தினர்களைக் கொண்டு தீவிரவாதத்தை எண்ணெய் ஊற்றி வளர்க்கும் இன்னொரு தொண்டு நிறுவனமாக இது இருக்கிறது.

இதே போல் இன்னொரு அமைப்பு உலக முஸ்லீம் லீக் (Muslim World League). இவர்களினால் ரபிதா நம்பிக்கை நிதியம் (Rabita Trust) இயக்கப்படுகிறது. இந்த நிதியம் கொண்டுதான் 9/11 உலக வர்த்தக மையத் தாக்குதல்கள் முடிக்கப்பட்டன. இந்த அமைப்பின் துவக்கத்தில் இருந்து உயிர்நாடியாக செயல்படும் ஜுலய்தான் (Wa’el Hamza Julaidan) என்பவரை 9/11 தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா தேடி வருகிறது. இவர்கள் ஷிமோகா மாவட்டத்திற்கு மட்டும் 38 கோடிகளைக் கொடுத்து மதராஸாக்களை சவுதி பீரங்கியாக செயல்பட வைக்கிறார்கள்.

இவர்கள்:
1. மதீனத் அல் – அலூம் கல்வி அறக்கட்டளை – Madeenath Ul-Uloom Education Trust
2. ரபியா பஸ்ரி ரஹமத் – உல்லா – ஹி – அல்லாயாஹ் நன்கொடை அறக்கட்டளை – Rabiya Basri Rahamat-Ulla-Hi-Allayha Charitable Trust
3. சதியா கல்வி மற்றும் நன்கொடை அறக்கட்டளை – Sadiya Educational and Charitable Trust

அப்படி இந்த சலாஃபியிஸத்தினால் என்னதான் சிக்கல் வரப்போகிறது?

ஒரு நாட்டினரை இன அழித்தொழிப்பில் இரக்கமின்றி செலுத்த ஹிட்லருக்கு நாஜியிஸம் உதவியது. அவ்வாறே, ஒரு மதத்தை தீவிரவாத இயக்கமாக எப்படி மாற்றலாம் என்பதற்கு சலாஃபியஸம் உதவுகிறது.

உதாரணமாக டெல்லியில் இருந்து வெளியாகும் நயி துனியா (புதிய உலகம் – Nai Duniya) என்னும் வாரப்பத்திரிகையைப் பார்ப்போம். இதில் நஸீம் ஹிஜஸி என்பவரின் தொடர் வெளியாகிறது. தொடரின் பெயர் – அவுர் தல்வார் டூட் கயீ (அதன் பிறகு கத்தி உடைந்தது). இந்தத் தொடரைப் படித்தால் எவ்வாறு இந்திய முஸ்லீம்களை வெறியூட்டி, எழுத்தின் மூலம், படித்தவர்களையும் ஜிஹாத் மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம் என்பது புலனாகும். இது சலாஃபியிஸம். இதே பத்திரிகை தன்னுடைய பிரத்தியேக செய்தியாக, புலனாய்வு அறிவிப்பாக இந்தக் கற்பனையை அதிகாரபூர்வமாகச் சொல்கிறது: ‘நம் புனித நகரமான மெக்காவின் மீது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குண்டு வீசி அழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்’. இது சலாஃபியஸப் பிரச்சாரம்.

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு வீரவணக்கம் செய்யச் சொல்வது சலாஃபியஸம். பேச்சினால் வாதத்தை எதிர்கொள்ளாமல், மாற்றத்தினால் மதக் கொள்கைகளை தற்காலத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளாமல், கற்கால வழக்கங்களிக்ல் தேங்கிப் போய் பேராசிரியர் டி. ஜே ஜோசஃபின் கையை வெட்டுவது சலாஃபியிஸம்.

இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் தலையாயவன என்று நான்கைச் சொல்லலாம். அரசியல் மற்றும் தத்துவ இஸ்லாம் ஒரு முக்கிய அங்கம். தனி நபர் முனைப்பெடுத்து முன்னெடுத்த தீவிர சமயப் பிரச்சாரம் இன்னும் இரண்டு உண்டு. நான்காம் பிரிவாக ஜிஹாதி இஸ்லாம். இவற்றையெல்லாம் கலந்தால் தற்கால சலாஃபியஸம் கிடைக்கும். அரசியலிலும் ஈடுபட முடியும். அதே சமயம் சக முஸ்லீம்களிடம் கூட சண்டை போட்டு கொலைகளும் செய்ய முடியும். புனிதப் போர் தொடுத்து அதில் தற்கொலை தீவிரவாதமும் அரங்கேற்ற முடியும். போருக்குப் பின் நடந்த அழிவில் நற்பணி அறக்கட்டளையும் நடத்த முடியும். இது இன்றைய சிரியா போன்ற நாடுகளில் இஸ்லாமை முன்னகர்த்தும் சலாஃபியஸ அணுகுமுறை.

சவூதி அரேபியாவிற்கு எவ்வாறு இப்படி நூறு மில்லியன் டாலர்களை அள்ளிவிட முடிகிறது? எப்படி அதை நிறுத்தலாம்?

saudi_ndtv_india_uttar_pradesh_karnataka_funding_isis_islam_muslim_ngo_madrasas

அடுத்த பகுதியில் பார்ப்போம்.

முந்தைய பதிவு: கச்சா எண்ணெய்யும் கசக்கிப் பிழியும் அரேபியாவும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.