இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சாலை விதிகளை மூன்று விதமாகப் பார்க்கிறேன்.
அமெரிக்காவிலும் aggressive driving போன்ற குணாதிசயத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால், காவல்துறை குறித்த பயம் அது பல்கிப் பெருகாமல் தடுத்திருக்கிறது. ஏதாவது தப்பு செய்தால் விழியத்தில் ஒளிப்பதிவாகி இருக்கும்; அதன் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு, கடுமையான பண இழப்பும் நீங்கா காப்புறுதி களங்கமும் கிடைக்கும் என்னும் அனுபவ பாடத்தில் விளைந்த சட்டத்தை பின்பற்றல். போலீஸ் மட்டும் தூணிலும் இருப்பான்/துரும்பிலும் இருப்பான் நிலை இல்லாவிட்டால் இந்தியர் போன்ற சாலை ஒழுங்கு லண்டனிலும் வந்துவிடும்.
இன்னொரு விதமாகப் பார்த்தால் இந்தியர் ‘தன் கையே தனக்குதவி’ ரகத்தினர். பஞ்சாயத்து ராஜ் என்பார்கள்; ஆனால், காரியம் ஆக வேண்டுமானால் எம்.பி. சிபாரிசை நாடுவார்கள். ‘சமூகத்தில் நீ விரும்பும் மாற்றமாக நீயே இரு’ என்னும் காந்தியைப் போற்றுவார்கள்; அனால், அரசர் ஒரு கப் பால் கேட்டால், ‘நான் மட்டும் ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றினால் வித்தியாசம் தெரியாது’ என்னும் கதை கேட்டு வளர்ந்தவர்கள்.
சுதந்திரத்திற்குப் பின் உருவான தலைமுறையினரின் வளர்ப்புமுறை இன்னொரு முக்கிய காரணம். என்னுடைய சம வயதினரின் பெற்றோரைப் பார்க்கும்போது சிக்கனத்தையும் நேர்மையையும் குழப்பிக் கொண்ட சமூகத்தையே காண்கிறேன். இன்றைக்கு ஐம்பதைத் தாண்டிய வயதினர் தன்னிடம் பிறர் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படிதான் பிறர் பொறுமையாக சட்டத்தை பின்பற்று என வலியுறுத்துகிறார்கள். அதே தருணத்தில், தங்கள் மனசாட்சிக்கு குந்தகம் விளைவித்துக் கொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை எதுவும் இருப்பதில்லை. இவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இன்றைய தலைமுறை தன் வரம்புக்கு மீறிய செயல்களை (சிக்கனமின்மை) செய்ய சகலமும் ஓகே என்கிறார்கள்.
I agree totally with the thoughts about our parents’ generation. Anyway, interesting to compare traffic – the land of confused masses to the land of mAssholes…;) Sorry;-/