இந்தியாவின் எந்த மொழியினரையும் விட தெலுங்கு சம்பாஷணாவாதிகள் கொஞ்சம் தீவிரமானவர்கள். சத்யம் ராமலிங்க ராஜுவின் வாழ்க்கையை பார்த்து இந்த எண்ணம் தோன்றியது.
புகழ் பெற்றவர்களும் பதவியில் இருப்பவர்களும் தந்திரமிக்கவர்களாக இருப்பதில் எதுவும் ஆச்சரியமில்லை. ஆனால், அன்றாட வாழ்வில் பார்க்கும் அனேக தெலுங்கர்களும் தங்கள் சொந்த சகோதரர்களுக்காகவும் சுய முன்னேற்றத்திற்காகவும் பிரும்மாண்டமான இலட்சியங்களை லாலிபாப் சப்புவது போல் முன்னெடுக்கிறார்கள்.
ஹாரி பாட்டர் படித்த ஹாக்வோர்ட்ஸ் பள்ளியில் நாலு குழுக்கள் இருக்கும். இயற்கையாக திறமை வாய்ந்தவர்களும் தன்னொழுக்க எழுச்சியும் மிக்கவர்கள் கிரிஃபிண்டார் (gryffindor) பிரிவில் இணைவார்கள். புத்திசாலியாக இருந்தால் ”ரேவன்கிளா” (ravenclaw). நட்புணர்வும் கடும் உழைப்பும் குணாதிசயமாகக் கொண்டவர்களை ”ஹஃபில்பஃப்” (hufflepuff) குடும்பமாக பிரிக்கிறார்கள்.
கடைசி பிரிவான ஸ்லிதெரின் (slytherin) ஆந்திராவிற்காகவே உருவானது போல் படுகிறது. டைனோசார் அளவு மாபெரும் குறிக்கோள்களை அடைவதற்கு ஆசையும் தீவிரவாதியின் மன உறுதியும் மரபணுவிலேயே ஒருங்கே வாய்க்கும் ஆசைக்காரர்களை ஸ்லிதெரிண் என்கிறது ஹாரி பாட்டர் புத்தகம்.
பிவி நரசிம்ம ராவ் போல் நாற்காலி பிடிப்பதில் ஆகட்டும், தினசரி நடவடிக்கையாக பங்குச்சந்தை வாங்குவது ஆகட்டும், சத்யம் ராஜு போல் அமெரிக்க என்ரான் வகை ஊழல் ஆகட்டும்… தில்லியிலும் பெங்களூருவிலும் பாஸ்டனிலும் உடன் வேலை பார்த்த இந்திய பிரதேசக்காரர்களுள் ‘கொல்ட்டு’ என்று கோபமாக விளிக்கப்படுபவர்கள் எப்பொழுதுமே பேரமைதி கலந்த சாதுரியத்துடம் மௌனமாக முன்னேறி இருப்பதை பார்க்கிறேன்.
இதை ஹார்வார்டு பல்கலை case study செய்ய வேண்டும் என்று சாந்தமாக பதிலளித்தால் நீங்கள் Andhraite.