களப்பணியாளர்களும் பெட்டிசன் கைங்கர்யவாதிகளும்


இணையத்திற்கு வந்த புதிதில் குறிஞ்சி மலர் பூத்தது போல் இல்லாவிட்டாலும், அத்தி பூத்தது போலத்தான் மின்னஞ்சல் வரும். அந்த மாதிரி வரும் மடல்களில் அளவுக்கதிகமாகவே பெட்டிஷன் இருக்கும்.

‘காஷ்மீருக்கு விடுதலை கொடு’
‘சோனியா காந்தியை வெளியேற்று’
‘எலிக்கும் ஆலமரத்திற்கும் திருமண சட்டதிருத்தம் நிறைவேற்று’
‘பொதுவில் கொட்டாவி விட ஒப்புதல் வழங்கு’

இப்படி கலந்துகட்டி இருக்கும். தட்டச்சத் தெரிந்த ஒரே காரணம் மட்டுமல்ல. இருபத்து நான்கு மணி நேர இண்டெர்நெட்டும் இருப்பதால் மட்டுமே தினசரி நாலைந்து பெட்டிசன் விண்ணப்பங்களில் பெயர் போட்டு, முகவரி இட்டு, தொலைபேசி கொடுத்து நிரப்பி இருக்கிறேன்.

வைய விரிவு வலை வயசுக்கு வந்ததும், இந்த முகவரிகளுக்கு கடிதம் போடத் துவங்கினார்கள்….
’பனிக்கரடியைக் காப்பாற்ற பத்து பைசா கொடுத்தால் போதும்!’
‘துப்பாக்கிகளை ஒழிக்க நன்கொடை தாரீர்!’
‘இரத்த தானம் தரமுடியவில்லையா… பணமாக அள்ளித் தரலாமே!’

கொடுக்காதவுடன், செல்பேசியிலும் வீட்டு போனிலும் அழைத்துக் கேட்டார்கள். கூடவே, பெட்டிசனிலும் கையொப்பம் கேட்டார்கள்.

இந்தியா போல் அமெரிக்காவில் தெரு முக்குகளிலோ காபி கடை வாயிலிலோ அறிமுகமில்லாத நாலைந்து பேர் சட்டென்று கூடி கதைக்க முடியாது. இந்த மாதிரி impromptu free speech கூட்டங்களுக்கு 144 தடா.

அதனால், பெட்டிசன் நியாயமான உணர்வுபூர்வமான அணுகுமுறை. சிதறிக் கிடப்பவர்களை ஒன்று சேர்க்கவும், குட்டி குட்டி ஊர் அன்னியர்களை அறிந்து கொண்டு ஒருங்கிணைக்கவும் சாலச் சிறந்த வழி.

அசோக ராஜா காலத்து வழக்கமான இந்தியாவில் எதற்கு இன்னும் பெட்டிசனில் மட்டும் விண்ணப்பத்தைப் போடுகிறார்கள்?

One response to “களப்பணியாளர்களும் பெட்டிசன் கைங்கர்யவாதிகளும்

  1. பிங்குபாக்: Bala’s Paradesi: How he should have taken the movie? | 10 Hot

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.