நாம் ஒவ்வொருவரும் தனித் தனி நாடு. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை பல உயிரினங்கள் ஆக்கிரமித்துள்ளன. நம்முடைய சோத்தாங்கையில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கும் பீச்சாங்கை பாக்டீரியாக்களுக்கும் மாமன், மச்சான் உறவு கூட இல்லை. இரண்டுமே வெவ்வேறு நுண்ணுயிரி இனங்களைச் சேர்ந்தவை.
அப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த அறிவியல் கட்டுரை. The Teeming Metropolis of You | CAA
தூய பிரதேசங்களில் சௌகரியமாக வளர்ந்தவர் துணிச்சலான காரியங்களில் பயப்படாமல் இறங்குவதற்கும், சராசரியான மனிதர்கள் செட்டில்ட் வாழ்க்கைக்கு பிரியப்படுவதற்கும் கூட நமக்குள்ளே குடித்தனம் செய்யும் உயிரிகள் காரணம்.
உடலையும் சிந்தனையையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை இருபதாம் நூற்றாண்டின் மருத்துவ சாதனையாக சொன்னால்… என்னுள்ளே இருக்கும் கோடிக்கணக்கான உயிரினங்களின் தொகுப்புதான் நான் என்றும் என்னுடைய செயல்பாடுகள் என்றும் அறிவது இக்கால கண்டுபிடிப்பு.