ட்விட்டர் நடைக் குறிப்புகள்:
1. மூதுரையில் ஔவையார்:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
நெல்லுக்கோட்டிய ஸ்கூட்டர் நச்சுப் புகையோடிப்
புல்லுக்கும் ஆங்கே பாய்ஸனாம் – கலி உலகில்
சாருநிவேதிதா ஒருவர் உளறேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் அபானமாகும் வாயு.
2. ஆர்கானிக் பயிர் என்பது நேச்சுரல் எத்தனாலில் இயங்கும் ஸ்கூட்டரில் பரப்பியது.
3. வேலை பார்க்கிறவங்க எல்லாம் கால் சென்டருக்குப் போயிட்டா, ரைஸ் மில்லை கவனிக்க யார் இருப்பார் என்று ‘வெற்றி கொடி கட்டு’ சேரன் படம் எடுப்பாரா?
4. மாடு கட்டிப் போரடித் தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்ததும் போதாத பாளையக்காரர்கள் பாரம்பரியம் இது.
5. இலவச தொலைக்காட்சி, சல்லிசான அரிசி என்று தமிழர் மழுங்கிப் போய் கலைஞர் டிவி பார்த்துக் காலம் தள்ளுவதன் கோலம்.
6. #TNFishermen எல்லோரும் டுனீசீயா, எகிப்து, தமிழ்நாடு மீனவர் #TNFisherWoman டிவிட்டர் போராட்டம்னு போய்ட்டாங்க #tnfisherman
7. மக்கள் தொலைக்காட்சியின் “மலரும் பூமி” இந்த இரு சக்கர இயந்திர உந்து ஊர்தி புரட்சி குறித்து நிகழ்ச்சி நடத்தும்.
8. முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில் ‘சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளை உட்டாக காவிரி புரக்கும் நாடு கிழவோனே’ – அதாவது ஒரு ஹெக்டேருக்கு 12,800 கிலோ நெல். ஏக்கருக்கு 4,886 கிலோ. இவ்வளவையும் இயற்கை வேளாண் விஞ்ஞான முறையில் பயிரிட்டால் விலைவாசி ஏன் ஏறாது? (உணவுப் பொருளின் புரட்சிதானே டூனிசியாவில் வெடித்தது?)
9. உழைப்பாளிகளை அமர்த்தாத இவர் மீது மருதையன் தலைமையில் மாக்சிஸ்ட்களும் கம்யூனிஸ்ட்களும் உண்ணாநோன்பு போராட்டம் துவங்குகின்றனர்.
10. நேற்றுவரை நதிநீருக்காக, பருவமழைக்காக, உரத்துக்காக, இலவச மின்சாரத்துக்காக, பயிர்க்கடனுக்காக, பயிர்க்காப்பீட்டின் இழப்பீட்டுக்காக, மரபணு மாற்று விதை நிறுவனங்களால் விதைக்காகவும் காத்துக் கிடந்த நமது விவசாயிகள், இனி பெட்ரோலுக்காகவும் டீசலூக்காகவும் காத்துக் கிடக்கிற நிலை உருவாகிறதே!
அவலநிலை