Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி


எழுத்தாளர் ஞாநி Author & columnist O Pakkangal njaaniஅமெரிக்கா பக்கம் எட்டிப் பார்க்கிறார். தற்போதையப் பயணத்திட்டம்:

ஜூன் 17 – வருகை
ஜூன் 24 வரை சிகாகோ, நயாகரா, கொலம்பஸ்
ஜூன் 25 முதல் 28 வரை – பாஸ்டன் / நியு இங்கிலாந்து வாசம்
ஜூன் 29 – ஜூலை 5 வரை: நியு யார்க், ஃபிலடெல்பியா;
ஜூலை 5 – 7: வாஷிங்டன் டிசி.
ஜூலை 11 – ஊர் திரும்புதல்

ஞானி இணையதளம் :: www.gnani.net

சிறு இன்ட்ரோ

தொலைக்காட்சியில் அவரின் ‘கண்ணாடிக் கதைகள்’ தொடருக்கு வெகுசன வரவேற்பு இருந்தது.

விகடன் குழுமத்திலிருந்து வெளியான ‘ஜூனியர் போஸ்ட்’ இதழை அவர்தான் பொறுப்பேற்றுப் பார்த்துக்கொண்டார்.

அவர் விகடனில் எழுதிய ‘தவிப்பு’ தொடர்கதை – புனைகதையா, நிஜ சம்பவத் தொகுப்பா என மயக்கம் தரும் அளவுக்குக் கற்பனையும் உண்மைச் சம்பவங்களும் பின்னிப் பிணைந்திருக்கும்.

கதாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், குறும்பட இயக்குநர், விமர்சகர், நாடகாசிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் ஞாநி.

கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம், ஸ்டாலினுக்கு பொறுப்புக்களை வழங்கலாம், ஒரு தந்தையாக கலைஞர், என்பது வயதை தொடும் ஒரு மனிதனாக கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்று ஒ பக்கங்களில் எழுதியதால் ஆனந்த விகடன் அரண்டு போய் தொடரை நிறுத்தியது.

சிவாஜி (2007) படத்தில் சரக்கு இல்லை என்பதை ஆணித்தனமாக அடித்து கூறிய அஞ்சாநெஞ்சன். நடிகர் திலகம் சிவாஜியின் இடம் இன்று தமிழ்த்திரையுலகில் காலியாக இருப்பதாகவும் அதை நிரப்புவதற்கு கமலை விட விக்ரமிற்கே அதிக தகுதி இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

தைரியமாக தன் கருத்தை வெளியிடுவதில் ஞானிக்கு நிகர் ஞானிதான். ஒரு முறை ஏதோ ஒரு நடிகையின் சர்ச்சையில் எழுத்தாளர் சுஜாதாவே கருத்து சொல்ல பயந்து கொண்டு, நான் என்ன ஞானியா என்று சொன்னதாக நினைவு.


ஜெயமோகன் எழுதிய அறிமுகம்

தமிழில் நான் எப்போதுமே கவனித்து வாசிக்கும் இதழாளர்களில் ஒருவர் ஞாநி. நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் நாடகங்கள் அழிகிறதா என்ற ஒரு விவாதம் குமுதத்தில் வந்தது. அதில் ‘ருத்ராட்சப்பூனைகளே !’என்று சீறி ஞாநி எழுதிய குறிப்பு வெளியாகியிருந்தது. அதுதான் நான் அவரைப்பற்றி படித்த முதல் தகவல். அதன் பின் இந்த முப்பது வருடத்தில் அவரை நுட்பமாகக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன் பின் அவர் சங்கராச்சாரியாரை பேட்டிகண்டு எடுத்து வெளியிட்டது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக இருந்திருக்கிறது.

ஞானியின் அரசியல் சமூகவியல் கருத்துக்களில் எனக்கு எப்போதுமே முரண்பாடுதான். அவர் தவறாகச் சொல்கிறார் என்று தோன்றுவதில்லை. மாறாக எளிமைப்படுத்திவிடுகிறார் என்று தோன்றும். சமூக இயக்கம் என்பது எப்போதுமே முழுக்கப் புரிந்துகொள்ள முடியாத முரணியக்கத்தின் விளைவு. வன்முறை இல்லாமல் அம்முரணியக்கம் நிகழ்மென்றால் அது வளர்ச்சிப்போக்காகவே இருக்கும் என்பது நான் கொண்டுள்ள இலட்சியவாத நம்பிக்கை. ஞாநி அந்த முரணியக்கத்தை காண்பதில்லை. கறுப்பு வெள்ளைகளில் நிற்கும் தீவிர நோக்கு அவருடையது. அந்த எளிமைநோக்குதான் அவரை ஈவேராவை நோக்கி இழுத்திருக்கிறது.

ஆனால் தன்னளவில் நேர்மை கொண்ட இதழாளர் என நான் அவரை நினைக்கிறேன். தன் கருத்துக்களுக்காக போராடக்கூடியவர். அதன் பொருட்டு எதையும் இழக்க தயாராக இருப்பவர். சலியாத சமூகக் கோபம் கொண்டவர். தமிழில் இன்றைய தலைமுறையில் அப்படி சிலரை மட்டுமே நம்மால் சுட்டிக் காட்ட முடிகிறது. ஞாநி நான் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை எதிர்ப்பார். ஆனால் அவர் தமிழில் ஒரு தார்மீக சக்தி என்றே நான் எப்போதும் எண்ணி,சொல்லி வருகிறேன்.

தமிழில் அவ்வாறு சமூகக் கோபம் கொண்டவர்களாக காட்டிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் தனிநபர்க் காழ்ப்பும் உள்ளடங்கிய சாதிக்காழ்ப்பும் மட்டுமே கொண்டவர்கள் என்பதை நான் பொதுத்தளத்தில் செயல்பட ஆரம்பித்த இந்த முப்பது ஆண்டுகளில் கண்டு சலிபப்டைந்திருக்கிறேன். ஞானி தனிப்பட்ட காழ்ப்புகள் அற்றவர். தனிப்பட்ட கோபங்களுக்கு தாவிச்சென்றாலும் உடனே குளிர்ந்துவிடுபவர்

எனக்கும் ஞாநிக்கும் சில பொது அம்சங்கள் கூட இருக்கின்றன. அவரைப்போலவே நானும் அசோகமித்திரனின் எழுத்துக்களின் தீவிர வாசகன். அவரை போலவே எனக்கும் பழைய போஸ்ட் கார்டு போல உடம்பெல்லாம் முத்திரைகள். ஞாநியை பார்ப்பனர் என்றும் [ இந்துத்துவர் என்றும் கூட !] பிற்போக்குவாதி என்றும் முத்திரை குத்தும் எழுத்துக்களை நான் சென்ற எத்தனையோ வருடங்களாக கண்டுவருகிறேன். அதை முன்வைப்பவர்கள் எவருமே எளிய அடிப்படை நேர்மை கூட இல்லாத அரசியல் ஆத்மாக்கள்

பெரும்பாலான சமயங்களில் ஞாநி முத்திரைகளுக்கு எதிராக அதீதமாக உணர்ச்சிவசப்படுவார். நேரடியாக அவர் எகிறுவதைக்கூட கண்டிருக்கிறேன். என்ன செய்வது, தமிழில் எழுதினால் இது நிகழாமலிருக்காது. நான் சிரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். அவர் இன்னும் கொஞ்சம் புன்னகையாவது செய்யலாம்.

வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் அரசியல் சமூகவியல் விவாதங்களுக்காக அதை சிபாரிசு செய்கிறேன்.
www.gnani.net

மேலும்:

ஞாநி அவரது அடையாளமான நீளமான ஜிப்பா போட்டு கிளம்பினார். அந்தக்காலத்தில் அவர் ஜமுக்காளத்தால் ஆன கல்கத்தா ஜிப்பாதான் போட்டுவந்தார். இப்போது சேலைத்துணியால் ஆன வேறுவகை ஜிப்பா. இது இன்னமும் சிறியது, இரண்டு ஞாநிக்களுக்கு தாராளமாக போதும்.

ஞாநி மாதம் ஒருமுறையாவது வந்து அசோகமித்திரனைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும் வழியை துல்லியமாகக் கேட்டு தெரிந்துகொண்டே இருந்தார். பொதுவாக நான் திருப்பங்களுக்கு ஒருமுறை வழி கேட்பவர்களையே கண்டிருக்கிறேன். நேர்கோட்டில்கூட அடையாளம் தேவைப்பட்டது ஞாநிக்கு. முழுக்க வழி கேட்டு சென்றபின் இறுதிப்பகுதி மறந்துவிட்டதனால் மீண்டும் அசோகமித்திரனிடமே வழி கேட்டோம்

ஞாநியை பலகாலமாக அறிந்தும் நெருங்கிப்பழக வாய்க்கவில்லை. ஆகவே ஒரு சந்தர்ப்பமாக அமையட்டுமே என அவரது வீட்டிலேயே தங்க முடிவெடுத்தேன். கே.கே.நகரில் பெரிய வளாகம் கொண்ட அகலமான வீடு அவரது. அதிக மரச்சாமான்கள் இல்லாத கூடத்தை நாடக பயிற்சியறையாகவே வைத்திருக்கிறார் ஞாநி.

ஞாநியின் முன்னாள் மனைவி பத்மா அவருக்கு உடல்நலமில்லை என்பதனால் வந்து தங்கி கவனித்துக்கொண்டிருந்தார்.

அங்கே கே.ஆர்.அதியமானைப் பார்த்தேன். ஞாநியுடன் இப்போது அவர்தான் நெருக்கமாக இருக்கிறார் என்று பட்டது. ஞாநியும் அவரும் கருத்தடிப்படையில் நேரெதிர் புள்ளிகள். அதியமான் தனியார்மயம்-வலதுசாரிப் பொருளியலின் பிரச்சாரத்துப்பாக்கி –பீரங்கியெல்லாம் ரொம்ப பெரிது. நடுவே சோதிடம் பற்றி என்னிடம் கேட்டார். நான் என் பிள்ளைகளுக்கு ஜாதகமே எழுதவில்லை என்றேன். ஏன் என்றார். எங்கள் குலத்தொழிலே ஜாதகம் எழுதுவது என்பதனால்தான் என்றேன்.

ஞாநியின் இல்லத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி உடல்நிலை தேறியிருக்கிறார். அஞ்சியோபிளாஸ்ட் பண்ணப்பட்ட எந்த ஒரு எழுத்தாளரையும் போல உற்சாகமாக அதைப்பற்றிப் பேசினார். அது தன் உடலை நுட்பமானதோர் இயந்திரமாகப் பார்க்கும் பரபரப்பை அவருக்கு அளித்திருக்கிறது என்று தோன்றியது. நன்றாகவே மெலிந்திருந்தார். பலவகையான நோய்கள் வழியாக கடந்துவந்திருந்தார். குடலில் காசநோய் தாக்கி கடுமையான மருந்துகள் வழியாக நலம் மேம்பட்டபோதுதாந் இதய அடைப்பு கண்டடையப்பட்டது.

ஞாநி நான் பார்த்தபோதெல்லாம் சோடாப்புட்டிக் கண்ணாடிதான் போட்டிருந்தார். அவருக்கு ஒரு கோபக்கார இளைஞர் அல்லது இளம்முதியவரின் தோற்றத்தை அது அளித்திருந்தது. இப்போது அந்தக் கண்ணாடி இல்லை. கண்ணில் காடராக்ட் வந்து அறுவை சிகிழ்ச்சை செய்த போது பழைய இயற்கை விழியாடிகளை தூக்கிக் கடாசிவிட்டு புதிய அளவான ஆடிகளை வைத்தார்களாம். ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் ஞாநி அவருக்கு வழக்கமான அதி உற்சாகத்துடன்தான் இருந்தார். தொட்டுத்தொட்டு அரசியல் இலக்கியம் இலக்கியஅரசியல் என்று பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி தன்னைப்பற்றிய வம்புகளைப் பேசுவதில்லை என்பதை இரண்டுநாட்களில் கூர்ந்து கவனித்தேன்.இறந்தகாலம் குறித்தும் அதிகமாகப் பேசுவதில்லை. பரீக்ஷாவின் கடந்தகாலம் குறித்தும் மிக அபூர்வமாகவே பேச்சு எழுந்தது. அவருக்கு வெவ்வேறு சமகாலப் பிரச்சினைகளிலேயே தீவிர ஆர்வம் இருந்தது.

மதியம் ஒருமணிவாக்கில் பத்மா சமைத்த விஜிடபிள்பிரியாணியையும் தயிர்சாதத்தையும் வட்டமாக தரையில் அமர்ந்து சாப்பிட்டோம். தனக்கு பொதுவாக தரையில் அமர்வதும் படுப்பதுமே பிடிக்கும் என்றார் ஞாநி. கட்டில்கூட உடல்நலம் மோசமானபிறகு வந்ததுதான். அவரிடமிருந்த ஒரு மரபெஞ்சுக்கு அவருடைய வயதே ஆகிவிட்டது என்றார் – ஆரோக்கியமாக இருந்தது.

நான்குமணிவாக்கில் திரும்பிவந்தபோது ஞாநியின் பரீக்ஷா நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். பெரும்பாலும் எல்லாரும் இளைஞர்கள்.ஞாநிக்கு தலைமுறை தலைமுறையாக நாடகநண்பர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கல்பற்றா நாராயணன் கவிதை ஞாபகம் வந்தது, குழந்தைகள் எல்லாரும் ஜெயித்துப்போகிறார்கள், சரசம்மா டீச்சர் இப்போதும் ரெண்டாம்கிளாஸில்தான்.

திரும்பவந்தபோது எல்லாரும் சென்றுவிட்டிருந்தார்கள். ஞாநி உங்களை தேடினார் என்றார் பத்மா. உலகிலேயே மனைவியால் ஞானியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே மனிதர் இவர்தான் என்று நான் சொன்னேன். இல்லல்ல நான் சங்கர்னுதான் சொல்லுவேன். இப்ப அடையாளம் தெரியணும்கிறதுக்காக ஞானீன்னு சொல்றேன் என்றார் பத்மா.

ஞாநி எங்களிடம் சாப்பிட்டாயிற்றா என்றார். தனசேகரும் பிறரும் கிளம்பிச் சென்றார்கள். நான் ஞாநியுடனும் பிறருடனும் ன் இரவு ஒன்றரை மணிவரை பேசிக்கொண்டிருந்தேன். சமகால அரசியல். சமகாலத்தின் பெரும்பண்பாடு என்பது எப்படியோ ஏதோ வழிகளில் சமசரம் செய்துகொள்வதாக ஆகிவிட்டிருப்பதை ஞாநி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். சமரசமின்மையின் தோல்வி மீதான கவற்சி சமகால இளைஞர்களில் குறைந்துவிட்டது என்றார். பின்னர் கண்ணயரும்போது பத்மாவும் இந்திராவும் பேசிக்கொண்டிருந்த ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.


கீற்று :: Dheemtharikida | Gnani

மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது

1982ல் நான் சில நண்பர்கள் உதவியுடன் தொடங்கி, மூன்று இதழ்களுடன் நின்று போய், பிறகு 1985ல் மீண்டும் வெளியிட்டு ஏழு இதழ்களுடன் நின்று போன ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் வெளியிட விரும்புகிறேன்.

சொந்த முயற்சியில் பத்திரிகை நடத்துவது என்ற பரிசோதனையை 1987ல் வெளியிட்ட சென்னை நகரத்துக்கான ‘ஏழு நாட்கள் ‘ என்ற இதழுடன் நான் நிறுத்திக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் பத்திரிகை நன்றாக விற்பனையானது.(1982ல் முப்பதாயிரம் பிரதிகள் வரை விற்றோம்). கடை விரித்தோம் கொள்வாரில்லை என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் விற்ற பணத்தை வசூலிக்க முடியாமலும் போதுமான செயல்முறை மூலதனம் இல்லாமலும் முயற்சிகள் முடங்கிப் போயின.

இனி சொந்த முயற்சியில் பத்திரிகை வெளியிடுவது இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு அந்த முடிவை உறுதியுடன் பதினைந்து ஆண்டுகளாகப் பின்பற்றிவந்திருக்கிறேன். இப்போது ஏன் மறுபடியும் அந்தப் பரிசோதனையில் இறங்க வேண்டியதாகிவிட்டது? சிரங்கு பிடித்தவன் கை போன்ற மன அரிப்புகள் காரணம் அல்ல என்பதை 15 ஆண்டு பிடிவாதமே காட்டும்.

தீம்தரிகிட இருபது ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டபோது அத்தகைய முயற்சிகளுக்கான தேவை இருந்த நிலை இன்றும் மாறிவிடவில்லை என்பது பொதுவான காரணம். அதை விட முக்கியமான காரணம் கடந்த ஓராண்டு காலமாக நான் சந்திக்கும், உணரும் ஒரு மாற்றம். நான் எப்போதும் பெரிய பத்திரிகைகளில் வேலை செய்வதை என் ஜீவிதத்துக்கான வழியாகவும், கருத்து வெளிப்பாட்டுக்கான வழியாகவும் சேர்த்தே செய்துவந்திருக்கிறேன். வருமானத்துக்காக வேறொரு வேலை, கருத்து வெளிப்பாட்டுக்கு இன்னொரு சாதனம் என்ற நிலையில் நான் இருக்கவில்லை.

கடந்த ஓராண்டாக நான் சந்திக்கும் நிலை இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் நான் சந்தித்திராதது. கருத்துச் சமரசங்கள் செய்துகொள்ளாமல் எனக்கு முழு நேர வேலையோ பகுதி நேர வேலையோ தமிழ் மீடியா சூழலில் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. தமிழில்தான் இயங்குவது என்று 22 ஆண்டுகள் முன்பு மேற்கொண்ட முடிவை மாற்றிக் கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. இதற்கு முன்பு எனக்கு முழுக் கருத்துச் சுதந்திரம் கொடுத்து நான் எழுத அனுமதித்த இதழ்கள் கூட இந்த ஓராண்டில் பல முறை என் கட்டுரைகளை, ஏன், கடிதங்களைக் கூட நிராகரித்தன. வெளியிட்ட ஓரிரு முறையும், சில பகுதிகளை நீக்கிவிட்டு வெளியிட நான் ஒப்புக் கொண்ட பிறகே வெளியிடும் நிலை.

இது பற்றிப் பலருடனும் பல முறை விவாதித்தபோது தெரிய வரும் உண்மை ஒன்றுதான். முன்னெப்போதையும் விட, இன்று மீடியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கான இடம் சுருங்கிக் கொண்டே வருகிற்து. இதற்குப் பல சமூக, அரசியல் காரணங்கள் உண்டு. சார்புகளை மீறிப் பல்வேறு கருத்துக்களும் குறிப்பாக, பொதுக் கருத்துக்களுடன் முரண்படும் கருத்துக்களும் வாசகர் முன்பு வைக்கப்பட வேண்டும் என்ற பார்வை மங்கிக் கொண்டே வருகிறது.

இந்தச் சூழலில்தான் ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் கொண்டு வர விரும்புகிறேன். முதல் இதழ் விழிப்பு உணர்வு தினமான ஏப்ரல் 1 அன்று வெளிவரவேண்டும் என்பது என் அவா. தொடக்கத்தில் இரு மாத இதழாக தீம்தரிகிட ஓராண்டில் ஆறு இதழ்கள் வெளிவரும். ஆண்டு சந்தா: ரூ 100/-.

வெகுஜன இதழ்களின் வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத் தேடல்களுக்கான உணவாக, உந்துதலாக ‘தீம்தரிகிட ‘ இருக்க வேண்டும் என்ற ஆதி நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. சிற்றிதழ்களின் நோக்கம், செய்ல்பாடுகளிலிருந்து இது வேறுபட்டது என்பதால் முரண்பட்டது அல்ல.எந்த நல்ல விஷயமும் பலரையும் சென்றடைய வேண்டும்; நல்ல விஷயங்களை நாடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிரந்தரமான நோக்கம்.கதை, கவிதை, அரசியல், சமூகம், திரைப்படம், நாடகம், இசை, கலைகள் என்று சகல துறைகளிலும் எப்போதும் போல ‘தீம்தரிகிட ‘ அக்கறை செலுத்தும்.

இதை சாத்தியப்படுத்த, தொடக்கத்திலேயே குறைந்தபட்சம் ‘தீம்தரிகிட ‘ இதழுக்கு ஐநூறு சந்தாதாரர்களாவது தேவை. நீங்களும் உங்கள் முயற்சியினால் இன்னும் சிலரும் சந்தாதாரர்களானால், இது சாத்தியம்தான். ஐநூறு சந்தாதாரர்கள் மார்ச் 15க்குள் கிடைக்காவிட்டால் தீம்தரிகிட இதழை வெளியிடும் என் திட்டம் தளர்ச்சியடையும். அந்த நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதில் உங்கள் பங்கை நீங்கள் அவசியம் ஆற்றவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடனும் ‘ தீம்தரிகிட ‘ இதழில் வெளிவரும் கருத்துக்கள், படைப்புகளுடனும் நீங்கள் சில சமயம் உடன்படலாம்; சில சமயம் முரண்படலாம். ஆனால் தமிழின் வெகுஜன வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத்தேடல்களை ஊக்குவிக்க, வளர்க்க உதவுகிற ஒரு களம் தேவை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், தயவு செய்து இந்த முயற்சியை ஆதரியுங்கள்.அடுத்த ஓரிரு வாரங்களில் உங்களுடைய, உங்கள் நண்பர்களுடைய மணியார்டர்கள் வந்து குவியட்டும். அவற்றை அஸ்திவாரக்கற்களாகக் கொண்டு நானும் நண்பர்களும் தீம்தரிகிட இதழை, கோபுரமாக இல்லாவிட்டாலும் சிறு குடிலாகவேனும் கட்டுவோம்.

‘தீம்தரிகிட ‘ இரு-மாத இதழ்.
தனி இதழ் விலை: ரூ 15.
ஆண்டுக்கு ஆறு இதழ்கள்.
ஆண்டு சந்தா:ரூ. நூறு.
வெளிநாடுகளுக்கு: USD 20 (அ) ரூ 1000.


திண்ணை

1. ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?

2. இரண்டு கடிதங்களுக்கு ஞாநியின் பதில்கள் :

a. தலித் பிரச்சினையில் உம் கருத்து என்ன ? – ரெங்கதுரை
b. ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை – மாயவரத்தான்

3. நூலகம்

4. ’எண்’ மகன். நாடகம்- பரீக்‌ஷா

5. மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்

6. வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?

7. எம் எஸ் :அஞ்சலி

8. கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ் :: சுஜாதாவும் ஷங்கரும் – (இந்தியா டுடே செப்.17,2003)

9. பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)

10. காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்

11. என்னைப் போல் ஒருவனா நீ? – சினிமா விமர்சனம் : உன்னைப் போல் ஒருவன்

12. ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம் :: காஞ்சி சங்கர மடத்தலைவர் ஜயேந்திரர்

13. இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.

14. கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?

15. கல்பாக்கம்

16. குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?

17. ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்

18. அன்புள்ள மனுஷ்யபுத்திரன்

19. தமிழ் அரசியல்

20. உயிர்ப்பலியும் பெரியாரும்

21. டயரி – வி.பி.சிங்

22. பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?

24. முரசொலி மாறன்

25. பாசமா ? பாசிசமா ? – தி.மு.கவும் பா.ம.கவும்

26. இன்னொரு ரஜினிகாந்த் ? – விஜயகாந்த்

27. மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.


Quotes

1. கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவது இளைஞர்களின் பிறப்புரிமை.

கருத்துகள்

1. ஞாநி Vs. சா.நி. – ரவிபிரகாஷ்

2. நித்தியும் ரஞ்சியும் சாருவும் பின்னே ஞாநியும்…

3. பூச்செண்டு – ஞாநி விளக்கம்

4. ‘ஓ பக்கங்கள்’ – பாகம் 3 :: Pa. Raghavan

6 responses to “Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி

  1. உங்களை மித்ரோகினுடன் ஒப்பிடத் தோன்றுகிறது.

  2. Gani oru suya vilambara priyaragave enakku thonrugirathu.Enentral oru TV nigalchiyil antha thogupalinikku thaan oru well known writter enpathai sutti kattinar.( pavam antha thogupalinikku appavum theriyave illai).
    athu oru karuththu sollum nigalchi, karuththai mattum solli irunthal Ganikku oru ‘O’ potturuppen.

  3. யாருக்காக கிடைத்தது சுதந்திரம்

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சேர்த்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்திய அரசால் முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் ஒரு சம நிலையை உருவாக்கவே பயன்பட்டன. தொழில் தகராறு சட்டம் மற்றும் பல தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாலர்களுக்கு உரிய உரிமையை வழங்கும் அதே சமயம் முதலீடு செய்யும் தொழில் அதிபர்களையும் பாதிக்கா வண்ணம் இருக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அனைத்தும் இருந்தும் அதனை செயல்படுத்தும் அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது ஏன்? என்று பலரும் யோசிப்பதில்லை .

  4. பிங்குபாக்: ஞாநி: சந்திப்பும் பேச்சும் | Snap Judgment

  5. பிங்குபாக்: தமிழ் ஆர்வலரும் நானும் – பாஸ்டனில் மு இளங்கோவன் | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.