ஆறிலிருந்து அறுபது வரையில் பூக்கள்.. பூக்கள்! – வைகைச்செல்வி


ஆறு வயதிற்கு
பிச்சிக் கொடி உயரம்தான்

பதினாறு வயதில்
செம்பருத்தி மட்டுமே
பள்ளிக்குள் ஆடின

இருபத்தாறு வயதில்
உன் தோட்டம் எதிரில்தான்
ஆனால் –
வேலிப்படல் தாண்ட
யாருக்குத் துணிவுண்டு?

பந்தக்கால் போட்ட பின்பு
தினந்தோறும்
கதம்பமும் கனகாம்பரமும்
திரும்பிப் பார்ப்பதற்குள் –
முப்பதும்… நாற்பதும்
அறுபதுமாய் வருடங்கள்
வாசமின்றி உதிர்ந்தன

இன்று –
ஊரெங்கும் திருவிழா.
எங்கிருந்தோ வருகிறாய்
கையில் பூச்சரத்துடன்
கறுப்புத் தேருக்கே
வண்ணப் பூச்சூட்டல்கள்.
என்
வெள்ளிப் பூந்தலையில்
மல்லிகைக்கு ஏது நிறம்?

நன்றி: தினமணி தீபாவளி மலர் 2004

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.