ஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்
– யாஹு
ஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.
வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
அதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.
இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.
கவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.
அதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்
அமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.
முன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.
அழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.
வாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.
கல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.
வாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.
சாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.
சாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா? குவைத்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்
முன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.
ஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.
பஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
அர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
அதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை
“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்!
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.
4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.
அதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.
அயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா!
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
அமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.
அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.
இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்
– தினமலர்
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:
கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே?
பதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.
பின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி
பாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.
எனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.
அதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
//கவர்ச்சிப்புயல் சாரா பாலின் //
இது கொஞ்சம் ஓவர்! 🙂
நாகு,
அது நான் வைத்த தலைப்பு அல்ல 🙂
தமிழ்நாட்டு தினசரிகளின் செய்தி; அப்படியே போட்டாச்சு.
Beauty Benefits Female Candidates, Study Shows : Discovery News: “Women running for top offices need to appear competent and attractive, according to a new study. For male candidates, seeming competent may be enough.
It’s a finding that could help justify heavy spending on makeup and wardrobe for Republican vice presidential nominee Sarah Palin
For male candidates, the only thing that mattered to male voters was competence, while female voters preferred men who seemed both competent and approachable.”